http://i1087.photobucket.com/albums/...%20-2/2-22.jpg
டியர் வாசு சார்,
தங்களுடைய மங்கையர் திலகம் தெள்ளத் தெளிவான நிழற்படங்கள் போட்டோ தாளில் அச்சடித்து வைத்துக் கொள்ளலாம். அருமையாக உள்ளன. பாராட்டுக்கள்.
டியர் ராகுல்
தங்கள் பாராட்டுக்கு நன்றி. எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் அந்தந்தப் படங்களின் நெடுந்தகட்டின் முகப்புகள் நிழற்படங்களாக வழங்கப் பட்டு வருகின்றன.
தொலைக்காட்சி சீரியல்களைப் பற்றி நாம் பாகம் 10ல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
அன்பு வாசு அவர்களே
திரு ராகவேந்திரா வாக்கை வழிமொழிகிறேன்.
கண்ணில் ஒத்திக்கொள்ளத் தக்க தெள்ளிய படங்கள்.. நன்றி******!
http://www.padangal.com/free-live-ta...0e47ac2e7.html
மங்கையர்திலகம் தேடிக்கிடைத்த சுட்டி இது..
மங்கையர் திலகம் நெடுந்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...ps6b10fcc8.jpg
வாசு சார்,
அசத்தி விட்டீர்கள், இதுவரை காணாத 'பரத நாட்டியப்' பாடலை இங்கு பதிவிட்டதின் மூலம்!!!!
என்ன ஒரு அபிநயம், கைதேர்ந்த நாட்டியம் ஆடுபவர்கள் கூட இத்தனை அபிநயம் காட்ட முடியுமா, சந்தேகந்தான்.
ஒவ்வொரு புதிய தகவல் கிடக்கும் போதும் நம்மிடையே நடிகர் திலகம் விஸ்வரூபமாய் வளர்ந்து கொண்டே போகிறார்.
ஆனந்த்
Original Rare photo from 'Mangayar Thilagam'
http://i1087.photobucket.com/albums/...8c05696957.jpg
வாருங்கள் ஆனந்த் சார்! தங்கள் அன்பான பாராட்டிற்கு என் மனமுவந்த நன்றி!
கண்ணன் சார்,
தங்கள் இடைவிடாத் தேடலில் கிடைத்த திலகத்தின் 'மங்கையர் திலகம்' முழுக் காவிய சுட்டிக்கு என் அசத்தலான நன்றி!
உண்மைதான் ஆனந்த் அவர்களே..
குறட்பாக்கள் 1330 தாம்..
பரிமேலழகரிலிருந்து கவிக்கோ அப்துல்ரகுமான் வரை ஒவ்வொருவரும் எடுத்துச் சொல்ல.. விரித்து ரசித்து பரிமாறப் பரிமாற..
வள்ளுவன் மேல் உள்ள காதல் வளர்ந்துகொண்டே போவதுபோல்...
நடிகர்திலகம் நடாத்திக் காட்டிய @300 காவியங்கள் பற்றி ஒவ்வொரு உன்னத ரசிகராய்ச் சொல்லச் சொல்ல
அந்த மேதையைப் பற்றிய நம் வியப்பும் உயர்ந்துகொண்டே போகும்..
இனி எவர் குறள் எழுதினாலும் வள்ளுவர் ஆகமாட்டார்..
இனி எவர் எதை நடித்துக்காட்டினாலும் எம் சிவாஜி ஆகமாட்டார்!
Sivaji Ganesan Filmography Series
24. KODEESWARAN (MILLIONAIRE) கோடீஸ்வரன்
13.11.1955
http://i1146.photobucket.com/albums/...ps538d791a.jpg
பங்களித்தோர்
தயாரிப்பு – ஸ்ரீ கணேஷ் மூவிடோன்
B.V. அவர்களின் “ஹாச் முலாச்சா பாப்” என்னும் மராத்தி நாடகத்தைத் தழுவியது.
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.பாலச்சந்தர், ஸ்ரீராம், ராகினி, கே.ஏ.தங்கவேலு, சிறுகளத்தூர் சாமா, ருஷ்யேந்திர மணி, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், பேபி சரஸ்வதி, பேபி டி.ஏ.ராஜகுமாரி, மற்றும் பலர்
திரைக்கதை – சுந்தர்ராவ் நட்கர்னி, “காங்கேயன்”
வசனம் – தஞ்சை ராமையா தாஸ் & “காங்கேயன்”
பாடல்கள் – பாபநாசம் சிவன், தஞ்சை ராமையா தாஸ், ஜெமினி சீதாராமன், டி.கே.சுந்தர வாத்தியார்
சங்கீத டைரக்ஷன் – எஸ்.வி.வெங்கட்ராமன்
பாடியவர்கள் – எம்.எல்.வசந்த குமாரி, பி.லீலா, பி.சுசீலா, ஜிக்கி, ஏ.எம்.ராஜா, எஸ்.வி.வெங்கட்ராமன்
நடன அமைப்பு – எஸ்.நடராஜ், பி.ஸோஹன்லால், எம்.சம்பத்குமார்
ஒளிப்பதிவு – ஜி.கே. ராமு
ஒலிப்பதிவு டைரக்ஷன் – ஏ.கிருஷ்ணன் – வாஹினி, ஏ.கோவிந்தசாமி – நெப்ட்யூன்
எடிட்டிங் – சுந்தர்ராவ் நட்கர்னி, பி.வெங்கடாச்சலம், சொ. முத்தையா
ஆர்ட் டைரக்ஷன் – டி.எஸ்.கோட்காவ்ங்கர்
அரங்க நிர்மாணம் – எஸ்.குப்புசாமி – வாஹினி, கே.ஸ்ரீநிவாசன் – வாஹினி, எஸ்.ரங்கசாமி – நெப்ட்யூன்,
மேக்கப் – துரைசாமி, தனக்கோடி, ராமச்சந்திரன்
சிகை அமைப்பு – ஜோஸபைன்
மோல்டிங் – எம்.கோபால்
ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜராவ்,
புரொடக்ஷன் நிர்வாகம் – பி.வேணுகோபால்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன்
லேபரட்டரி – விஜயா லேபரட்டரி
பிராஸ்ஸிங் – எஸ்.வி.வெங்கட்ராமன்
உதவி டைரக்ஷன் – என்.கே.கோபாலகிருஷ்ணன், சொ.முத்தையா
ஸ்டூடியோ – வாஹினி, நெப்ட்யூன்
வெஸ்டெர்ன் எலெக்ட்ரிக் சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
1952ல் திரைத் துறைக்கு வந்து 1955 நவம்பருக்குள், அதாவது மூன்று ஆண்டுகள் + ஒரு மாத காலத்திற்குள் - அதாவது 37 மாத காலங்கள் - 25 படங்களை நிறைவு செய்தவர் நடிகர் திலகம். அது மட்டுமல்ல இந்த குறுகிய காலத்தில் ஒரே நாளில் தன்னுடைய இரண்டு படங்களைத் தந்தவரும் நடிகர் திலகமே, இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அதாவது 25 படங்களில் 6 படங்கள் மூன்று வெவ்வேறு நாட்களில் வெளியானது இதுவும் இன்று வரை முறியடிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இதில் இன்னொரு சாதனை ஒரே ஆண்டில் ஒரே கதாநாயக நடிகரின் படங்கள் இரு முறை இரண்டிரண்டாக வெளிவந்த்தும் இது வரை முறியடிக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
விவரங்கள்
13.04.1954 – அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
26.08.1954 – கூண்டுக்கிளி, தூக்குத் தூக்கி
13.11.1955 – கோடீஸ்வரன், கள்வனின் காதலி [25வது படம்]
கீழ்க்காணும் நிழற்படங்கள் உபயம் – நெய்வேலி வாசுதேவன்
Quote:
http://i1087.photobucket.com/albums/...g?t=1321162637
http://i1087.photobucket.com/albums/...g?t=1321162752
[img]http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1avi_000759793.jpg[img]
http://i1087.photobucket.com/albums/...g?t=1321162853
மிகவும் விறுவிறுப்பாக செல்லக் கூடிய திரைப்படம் கோடீஸ்வரன். நடிகர் திலகத்தின் இயல்பான நகைச்சுவை அங்கங்கே படம் முழுதும் நிரவியிருக்கும். குறிப்பாக கீழ்காணும் ஒரு காட்சியில் அவர் ஸ்ரீராமை கலாய்க்கும் காட்சி சிறப்பானது. அதே போல் டாக்டர் மாப்பிள்ளையாக வந்து தங்கவேலுவிடம் ஒவ்வொரு நிபந்தனையாக போட்டு பத்மினியும் அவரும் அவற்றை settle செய்யும் காட்சி எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சியையும் சிரிக்க வைத்து விடும்.
காணொளிகள்
Super scene 1
http://youtu.be/cXtgQe5SGwM
Super scene 2
http://youtu.be/KPN_XlUinVI
யாழும் குழலும் பாடல் காட்சி
http://youtu.be/QBs-5fPsTTY
இப்படத்தில் அனைத்துப் பாடல்களுமே இனிமையானவை. நடிகர் திலகத்திற்கு ஒரு டூயட், உலாவும் தென்றல் என்று துவங்கும். ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய பாடல், எஸ்.பாலச்சந்தரை கலாய்க்க ராகினி பாடும் பாடல், மற்றும் தங்கவேலுவை அறிவுறுத்தும் சூழ்நிலையில் பத்மினி பாடுவதாக வரும் பகவானே கேளடா என அனைத்துப் பாடல்களும் சிறப்பானவை. எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் இன்றும் பசுமையாக நினைவில் நிழலாடும் பாடல்கள் இப்படத்தின் சிறப்பு.
இது வரை கோடீஸ்வரன் திரைப்படத்தைப் பார்க்காதவர்களுக்காக இப்படத்தின் நெடுந்தகட்டின் முகப்பு நிழற்படமாக இங்கே
http://i1146.photobucket.com/albums/...OTEESVARAN.jpg
கோடீஸ்வரன் திரைப்படத்தைப் பற்றிய தகவல் பரிமாற்றங்கள் 18.02.2013 வரை தொடரலாம்.
19.03.2013 அன்று அடுத்த திரைப்படத்தின் தகவல்கள் பதியப் படும்.
'கோட்டீஸ்வரன்' பற்றி நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/ko.jpg
கோடீஸ்வரன் பதிவுகளுக்கு நன்றி - அன்பு ராகவேந்திரா + வாசு அவர்களுக்கு..
பூங்கா காட்சியிலும் தங்கவேலு காட்சியிலும் நடிகர்திலகத்தின் இயல்பான அழகான நகைச்சுவை நடிப்பு மனதை அள்ளுகிறது!
அன்பு வாசு அவர்களுக்கு
மங்கையர் திலகம் படத்தில் முதலில் நடிகர்திலகம் பாதங்களைக் காட்டித்தான் அவர் பிரவேசம்..
அந்த ஸ்டில் ஆகட்டும்..
ராஜா நீல blazer அலப்பரை ஸ்டில் , தங்க சுரங்கம் கண்ணீர் தேக்க ஸ்டில்....
நடிகர்திலகத்துக்கு உங்களைவிட சிறந்த ஸ்டில் ஃபோட்டோகிராஃபர் இருந்திருக்க முடியுமா என வியக்கிறேன்.
பாராட்டுகள்..
தங்கள் பாராட்டிற்கு நன்றி திரு காவிரிக் கண்ணன் அவர்களே.
கோடீஸ்வரன் திரைப்படத்தின் சில பாடல்களின் பட்டியல்
1. உலாவும் தென்றல் நிலாவின் மீதே - ஏ.எம்.ராஜா, ஜிக்கி
2. யாழும் குழலும் உன் மொழி தானோ - ஏ.எம்.ராஜா, ஜிக்கி
3. பகவானே கேளடா - பி.லீலா
மேலும் சில பாடல்கள் உள்ளன. பாட்டுப் புத்தகம் கிடைத்தால் தகவல்கள் தரப் படும். அல்லது மற்ற அன்பர்கள் யாரிடமாவது தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
கோடீஸ்வரன் திரைப்படத்தைப் பற்றிய தகவல் பரிமாற்றங்கள் மேற்கொண்டு தேவைப் பட்டால் பாகம் 10ல் தொடர்ந்து கொள்ளலாம். நாம் அடுத்து நடிகர் திலகத்தின் 25வது landmark திரைப்படமான கள்வனின் காதலி திரைப்படத்தைப் பற்றிய தகவல் பரிமாற்றங்களைத் தொடரும் பதிவுகளில் பார்ப்போம்.
Sivaji Ganesan Filmography Series
25. கள்வனின் காதலி KALVANIN KADHALI
http://i1146.photobucket.com/albums/...psd9525262.jpg
http://i1146.photobucket.com/albums/...ps1730342c.jpg
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், பானுமதி, கே.சாரங்கபாணி, டி.ஆர்.ராமச்சந்திரன், டி.எஸ்.துரைராஜ், டி.பாலசுப்ரமணியம், எம்.ஆர்.சாமிநாதன், டி.என்.சிவதாணு, பி.டி.சம்பந்தம், எம்.ஆர்.சந்தானம், பி.எஸ்.வெங்கடேசன், குசலகுமாரி, கே.ஆர்.செல்லம், எஸ்.ஆர்.ஜானகி, ஸ்வர்ணம் ஜெயா மற்றும் பலர்.
பாடல்கள் – மகாகவி பாரதியார், கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, எஸ்.டி.சுந்தரம்
சங்கீத டைரக்ஷன் – ஜி.கோவிந்த ராஜுலு நாயுடு, கண்டசாலா
பின்னணி பாடியவர்கள்
எம்.எல்.வசந்தகுமாரி, கான சரஸ்வதி, சுசீலா, கண்டசாலா, திருச்சி லோகநாதன், சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஷண்முகசுந்தரம்
கோரம், திருடன் நாடக ஆடல் பாடல் அமைப்பு – எம்.எஸ். முத்துகிருஷ்ணன்
ஒளிப்பதிவு – என்.சி.பாலகிருஷ்ணன்
ஒலிப்பதிவு – வி.ரங்காச்சாரி
பாடல் ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி
எடிட்டிங் – வி.எஸ்.ராஜன்
லேபரட்டரீஸ் – தமிழ் நாடு சினி லேப்ஸ்
பிராஸ்ஸிங் – கே.பரதன்
செட்டிங்ஸ் – டி.நீலகண்டன்
மேக்கப் – கே.வி.ஸ்வர்ணப்பா
ஆடை அலங்காரம் – கே.பி.நாயர், கஜேந்திரன்
ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்
விளம்பரங்கள் – எலிகண்ட் பப்ளிசிட்டீஸ்
புரொடக்ஷன் மேனேஜர் – வி.ராமச்சந்திரன்
உதவி டைரக்ஷன் – டி.ஜி.ரத்னம்
வெஸ்ட்ரெக்ஸ் சவுண்டு ரிக்கார்டிங் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
ஸ்டூடியோ – ரேவதி
தயாரிப்பு – பி.ராஜமாணிக்கம் செட்டியார்
திரைக்கதை வசனம் அசோஸியேட் டைரக்ஷன் – எஸ்.டி.சுந்தரம்
டைரக்ஷன் – வி.எஸ்.ராகவன்
கள்வனின் காதலி நெடுந்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...psfe99d1f6.jpg
கள்வனின் காதலி திரைப்படத்தைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரை
Quote:
http://www.hindu.com/thehindu/cp/hindux.gif
Friday, Nov 21, 2008
BLAST FROM THE PAST
Kalvanin Kadhali 1954
Sivaji Ganesan, P. Bhanumathi, T. R. Ramachandran, K. Sarangapani, T. S. Dorairaj, Kusalakumari, S. R. Janaki, D. Balasubramaniam and K. R. Chellam
http://www.hindu.com/cp/2008/11/21/i...2150451601.jpg
Overdose of alliteration A scene from Kalvanin Kadhali
The story of how this film came about is interesting. Iconic Tamil writer Kalki (Ra. Krishnamurthi) in his early days was fascinated by the new medium of talking pictures and wished to try his hand at screen writing. Inspired by the real life tale of a Thanjavur bandit, he wrote a screenplay which he named ‘Kalvanin Kadhali’. He found no takers. When he joined Ananda Vikatan, he serialised it in the magazine on the advice of S. S. Vasan and it proved to be a huge success. It came out as a novel which also sold well.
Later, TKS Brothers staged it as a play with similar success. Even though the novel was doing its rounds in the movie world, it did not find any takers for a long time. In 1949, N. S. Krishnan under pressure from financial problems arising from his cult film Nallathambi announced that Kalvanin Kadhali was his next production and that the dialogue would be by C. N. Annadurai, all this without getting the latter’s consent. Anna, understandably upset, had nothing to do with the project which never took off. Then came the brilliant audiographer, filmmaker and later studio owner, V. S. Raghavan, who launched it under his Revathi Productions banner in 1955, with Sivaji Ganesan playing the ‘kalvan’ (thief) and Bhanumathi, his ‘kadhali’ (lover).
D. Balasubramaniam as the heorine’s father was his usual talented self, underplaying the role with much impact. Sarangapani and Chellam as the Brahmin police inspector and his wife sustained audience interest.
The movie narrated the story of Muthaian, a good natured man who turns thief under social pressure, and his love for a young woman who is forced to marry a man old enough to be her father. The fatherly husband releases her from the bonds of matrimony on his deathbed, leaving all his wealth to her. The lovers meet under strange circumstances and their love is rekindled. However, they reunite only in death like Laila Majnu, with the cops on his heels shooting him down and his heartthrob shooting herself. His sister (Kusalakumari) goes through difficult times before getting happily married, thanks to her brother’s love for her.
Even though the film had an impressive cast and good performances, Sivaji Ganesan’s portrayal as a thief suffered from the hangover of his role in Parasakthi. The illiterate thief is made to speak long-winding dialogue in high flown Tamil, filled with alliterative phrases. Not surprisingly, those sequences did not jell with the character.
Based on Kalki’s story, the dialogue was written by S. D. Sundaram, a Tamil writer who also dabbled in film production and direction without much success.
Kalvanin Kadhali had tuneful music (composers Gantasala-Govindarajulu Naidu, lyrics S. D. Sundaram, Mahakavi Bharathiar, Desiga Vinayagam Pillai) with one song ‘Veyilukketha nizhal wundu…’(Ghantasala-Bhanumathi) becoming popular.
V. S. Raghavan produced and directed the film in his own studio in Kodambakkam called Revathi. Later it was acquired by B. Nagi Reddi who made it part of his vast building complex housing Vijaya-Vauhini Studios, Chandamama Publications and all. Regretfully, Kalki did not live to see his dream come true.
Remembered for the famous Kalki magazine serial and novel and also for the impressive performances, though stylised, of Sivaji Ganesan and Bhanumathi.
RANDOR GUY
ஹிந்து பத்திரிகையின் இணைய தளப் பக்கத்திற்கான இணைப்பு
கள்வனின் காதலி திரைப்படத்தைப் பற்றிய தகவல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் ஓரிரு தினங்கள் தொடரும். 20 அல்லது 21 அன்று நாம் அடுத்த திரைப்படத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
கள்வனின் காதலி (1955)
http://i.ytimg.com/vi/3Byo07_wlj0/0.jpg
http://4.bp.blogspot.com/_2I2hYF2DQt...2.34.21%5D.jpg
கள்வனின் காதலி (1955)
"மனதில் உறுதி வேண்டும்"
http://www.youtube.com/watch?v=3Byo07_wlj0&feature=player_detailpage
டியர் சங்கரா
தாங்கள் குறிப்பிடும் வி.எஸ்.ராகவன் தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். கள்வனின் காதலி திரைப்படத்தின் இயக்குநர் வி.எஸ்.ராகவன் அவர்கள் வேறு, இவர் வேறு.
'கள்வனின் காதலி' படத்தில் நடிகர் திலகம் சீனியரான பானுமதி அவர்களுடன் முதன் முதலாக நடிக்க வேண்டும். பானுமதியோ மிகப் பெரிய நடிகை. தலைவரோ அப்போதுதான் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார். பானுமதி இயக்குனரைத் தனியாக அழைத்து "பையனைப் பார்த்து நடிக்க சொல்லுங்கள்...என் நடிப்புக்கு ஈடாக நடிப்பானா?" என்று கேட்டாராம். இயக்குனரும் "இல்லையம்மா! நன்றாக நடிக்கக் கூடிய பையன்" என்றாராம்.
பானுமதி, தலைவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடித்த பின்னர் பானுமதி மறுபடியும் இயக்குனரைத் தனியே அழைத்து மெதுவாக," டைரக்டர் சார், பையனை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்...போகிற போக்கில் என்னையே காணாமல் செய்து விடுவான் போல் இருக்கிறது.... அவ்வளவு பிரமாதமாக நடிக்கிறான்" என்று வாயாரப் பயந்தபடியே புகழ்ந்தாராம்.
அதுதான் நடிகர் திலகம்.
அன்புள்ள திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்களே,
தங்களது "தங்கச் சுரங்கம்" படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியைப் பற்றிய அலசலை இப்போது தான் பார்த்தேன். தங்களுக்கேயுரிய எளிமையான, ஆனால் சுவாரஸ்யமான நடையில் எழுதி இருந்தீர்கள்.
தொடருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
இன்று விடியல்...கள்வனின் காதலி பதிவுகளால் மிகவும் இனிமை ஆனது..
நன்றி நம் அன்பு ராகவேந்திரா + வாசு அவர்களுக்கு.
(காலத்தை வென்ற காவியங்களின் பெயர்களைப் பின்னாளில் கண்டவர்களும் பயன்படுத்துவது எவ்வளவு இடைஞ்சல்..
கள்வனின் காதலி என இணையத்தில் தேடினால் வரும் இடையூறுகளே சான்று!
நல்லவேளை தெய்வமகன் பெயர் காப்பாற்றப்பட்டது..)
1952ல் திரைத் துறைக்கு வந்து 1955 நவம்பருக்குள், அதாவது மூன்று ஆண்டுகள் + ஒரு மாத காலத்திற்குள் - அதாவது 37 மாத காலங்கள் - 25 படங்களை நிறைவு செய்தவர் நடிகர் திலகம். அது மட்டுமல்ல இந்த குறுகிய காலத்தில் ஒரே நாளில் தன்னுடைய இரண்டு படங்களைத் தந்தவரும் நடிகர் திலகமே, இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அதாவது 25 படங்களில் 6 படங்கள் மூன்று வெவ்வேறு நாட்களில் வெளியானது இதுவும் இன்று வரை முறியடிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இதில் இன்னொரு சாதனை ஒரே ஆண்டில் ஒரே கதாநாயக நடிகரின் படங்கள் இரு முறை இரண்டிரண்டாக வெளிவந்த்தும் இது வரை முறியடிக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
விவரங்கள்
13.04.1954 – அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
26.08.1954 – கூண்டுக்கிளி, தூக்குத் தூக்கி
13.11.1955 – கோடீஸ்வரன், கள்வனின் காதலி [25வது படம்]
[/QUOTE]
Thank you Ragavendran sir. This is called ORIGINAL Records.
Cheers,
Sathish
Thank you Vasu sir. Just recalling my childhoold day listening audio of this movie every day evening in outside of Madurai Alankar theatre as could not able to watch inside the theatre every day. I can remember each and every scene and dialogs of NT. One of my favorite movie.
Cheers,
Sathish
நன்றி சதீஷ் சார்! உங்கள் ஊரில் தங்கப் பதக்கம் பின்னி எடுத்து விட்டது போல. முரளி சார் தங்கப்பதக்கம் செய்த சாதனையை எழுதியிருந்தார். மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அடிக்கடி வாருங்கள் சார்.
நன்றி கண்ணன் சார்! ஐயோ! அதை ஏன் கேட்கிறீர்கள்! நம் தலைவரின் படங்களின் பெயர்களை மற்ற படங்களுக்கு வைப்பதால் இணையத்தில் நம் பட சம்பந்தமான விஷயங்களைத் தேடுவதில் போதும் போதும் என்றாகி விடுகிறது. கள்வனின் காதலி என்று தட்டினால் சூர்யாவின் படம் பற்றிய தகவல்கள் அதிகம் வரும். இணையத்தில் தேடும் போது நம் படங்களின் பெயருடன் படம் வெளியான வருடத்தையும் சேர்த்து டைப் செய்து தேடினால் ஓரளவிற்கு சக்செஸ் ஆகும்.
ராகவேந்திரன் சார்,
கள்வனின் காதலி பட விவரங்கள் கலக்கல். ஸ்டில்களின் தொகுப்பு சூப்பர். நன்றி சார்.
'சதாரம்' திருடன் நாடகம்(சிறப்புப் பதிவு)
படம்: 'கள்வனின் காதலி'
'கள்வனின் காதலி' காவியத்தில் வரும் 'சதாரம்' என்ற அற்புதமான தெற்கத்திக் கள்ளன் கூத்து நாடகம். கள்வனாக நம் உள்ளம் கவர்ந்த கள்வர் நடிகர் திலகமும், ஆண் வேடம் தரித்து வரும் இளவரசியாக டி ஆர். ராமச்சந்திரனும் செய்யும் அட்டகாசம். அதுவும் நம்மவர் போடும் குத்தாட்டம் இருக்கிறதே! கைகளும், கால்களும் சும்மா பிச்சு உதறுகின்றன. ஒரு மனிதர் இப்படியெல்லாம் ஆட முடியுமா! இப்படியெல்லாம் நடிக்க முடியுமா! மூக்கின் மேல் விரலை வைத்துத்தான் ஆக வேண்டும். பார்ப்பவர்கள் வாயடைத்துத்தான் போக வேண்டும். அசல் கூ(கு)த்தாட்டக்காரன் கெட்டான் போங்கள்... ஆட்டமென்றால் ஆட்டம்... அப்படி ஒரு ஆட்டம். ஆர்மோனியம் வாசிக்கும் ஆள் அருகில் சென்று நின்று செய்யும் அட்டகாசம் அதகளம். ஒரு நிமிடம் கூட சும்மா நிற்காமல் கடினமான, வேகமான ஸ்டெப்களோடு கூடிய பிரமிக்க வைக்கும் பாவங்களுடன் நடிகர் திலகம் சக்கை போடு போடும் நாடகம். நாடகப் பயிற்சி அப்படி ஒரு திறமையை அவருக்குள் வளர்த்து வைத்திருக்கிறது. M.S.முத்துகிருஷ்ணன் அவர்களின் ஆடல் பாடல் பயிற்சி அருமையிலும் அருமை.
அனைவரும் கண்டு மகிழ
முதன் முறையாக 'சதாரம்' திருடன் நாடகம் இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=STeAHQyK1Kw