அரிய ஒரிஜினல் புகைப்படங்கள் : 2
உத்தமபுத்திரன்(1958)
எம்.என்.நம்பியார், நடிகர் திலகம்(விக்ரமன்), பி.கண்ணாம்பா, நடிகர் திலகம்(பார்த்திபன்)
http://i1110.photobucket.com/albums/...psb1172104.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
அரிய ஒரிஜினல் புகைப்படங்கள் : 2
உத்தமபுத்திரன்(1958)
எம்.என்.நம்பியார், நடிகர் திலகம்(விக்ரமன்), பி.கண்ணாம்பா, நடிகர் திலகம்(பார்த்திபன்)
http://i1110.photobucket.com/albums/...psb1172104.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
125வது பக்கம் : 125வது காவிய புகைப்படம்
இந்த அரிய புகைப்படப் பதிவை கோபாலகிருஷ்ண அடிகளாருக்கு Dedicate செய்கிறேன் !
அரிய ஒரிஜினல் புகைப்படங்கள் : 3
உயர்ந்த மனிதன்(1968)
எஸ்.ஏ.அசோகன், நடிகர் திலகம்
http://i1110.photobucket.com/albums/...psb4f11b70.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
அன்புள்ள வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் திரை நாயகியர் வரிசையில் திருவாங்கூர் சகோதரிகளில் மூத்தவரான லலிதாவைப்பற்றிய பதிவு நன்றாக உள்ளது. ஸ்டில்கள், வீடியோக்கள் அனைத்தும் அருமை. சகோதரிகளின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் உறையையும் தவறாமல் இணைத்துள்ளீர்கள்.
சகோதரிகள் மூவரும் ஒரே மாதிரி உடையணிந்து ஒன்றாக இணைந்து நிற்கும் முழுமையான நிழற்படம் அனைத்திலும் டாப்.
தொகுத்தளிமைக்கு நன்றிகள்
அன்புள்ள பம்மலார் சார்,
தங்கள் பாராட்டுக்கு நன்றி. நமது ராகவேந்தர் சார் அவர்கள் பதிவிட்ட , நீலவானத்தில் இடம்பெற்ற சாந்தி திரையரங்க நிழற்படங்களைப் பார்த்ததும், சாந்தி பற்றிய மலரும் நினைவுகளில் சிலவற்றை எழுத வேண்டுமென்று தோன்றியது. அதனால் எழுதினேன். அது தங்களுக்கும் வாசுதேவன் சாருக்கும் பிடித்திருந்ததில் மிகவும் மகிழ்ச்சி.
தாங்கள் அதிரடியாகத் துவங்கியுள்ள 'ஒரிஜினல் நிழற்படங்கள்' வரிசை துவக்கமே அமர்க்களம். திருவிளையாடல், உத்தமபுத்திரன், உயர்ந்த மனிதன் நிழற்படங்கள் அனைத்தும் கிரிஸ்டல் கிளியராக உள்ளன.
ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி தலைப்புக் கொடுத்து, அவற்றுக்கு வரிசை எண்ணும் அளித்து வருவது ரெடி ரெஃபரென்ஸுக்கு உதவும் வகையில் உள்ளது. 125-ம் பக்கம் வரும்போதே அதற்கான சிறப்பு பதிவொன்றை அளிப்பீர்கள் என்று நினைத்தேன், அளித்து விட்டீர்கள்.
பாராட்டுக்களும், நன்றிகளும்.
125வது பக்கம் : 125வது காவிய விளம்பரங்கள்
இந்த அரிய ஆவணப் பொக்கிஷங்களை அன்புச்சகோதரர் mr_karthik அவர்களுக்கு Dedicate செய்கிறேன் !
http://i1110.photobucket.com/albums/...ps7a25803e.jpg
http://i1110.photobucket.com/albums/...psdd0b44fd.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது இதயங்கனிந்த பாராட்டுதல்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!
'தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் வாரத்தில் பழைய திரைப்படங்கள்' என்கின்ற தலைப்பில் தாங்கள் அளித்துள்ள பதிவு ஒரு அம்சமான Ready Reckoner. இதனை சிரத்தையோடு தொகுத்துத் தந்துள்ள தங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்..!
வைரவிழாக் காணும் UAA குழுவினரின் நாடகத் திருவிழா இனிதே நடைபெற இதயபூர்வமான வாழ்த்துக்கள்..!
தாங்கள் சுடச்சுடப் பரிமாறிய "திருவிளையாடல்" திரைக்காவிய திரையரங்க நிழற்படங்கள், ஞாயிறு [16.9.2012] மாலை சென்னை 'உட்லாண்ட்ஸ்'ஸில் இருந்த உணர்வை உண்டாக்கியது.
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் வழங்கிய நீண்ட-நெடிய பாராட்டுதல்களுக்கு எனது சிரந்தாழ்த்திய சிகர நன்றிகள்..!
மெட்ராஸ் பாஷை காமெடிக்கு ஒரு குளோபல் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்த நகைச்சுவை நடிகர் 'லூஸ்' மோகன் அவர்களின் மறைவுக்கு தாங்கள் செலுத்திய அஞ்சலி ஒரு 'சாதனை' அஞ்சலி.
அடிகளாரைப் பாராட்டும்முகமாக தாங்கள் அளித்துள்ள "உயர்ந்த மனிதன்(1968)" பதிவு உள்ளத்தைத் தொட்டது.
விநாயக சதுர்த்தி ஸ்பெஷலாக தாங்கள் அளித்துள்ள விண்ணுலக கணேசர் நிழற்படம், கலையுலக கணேசர் காட்சிதரும் "திருவிளையாடல்(1965)" நிழற்படம், 'புள்ளையாரு' பாடல், இம்மூன்றும் நமது திரிக்கு தாங்கள் வழங்கிய பிள்ளையார் சதுர்த்திக்கான "அப்பம், அவல், பொரி" பிரசாதங்கள்..!
17.6.2010 தேதியிட்ட 'மாலை மலர்' மற்றும் 18.6.2010 தேதியிட்ட 'தினத்தந்தி' நாளிதழ்களில் வெளிவந்த நமது நடிகர் திலகத்தின் 'அன்னை இல்லம்' வரசித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம் பற்றிய செய்திகளை விநாயக சதுர்த்தியான இன்று தாங்கள் பதித்தது சரியான டைம்லி ஆக்ஷன்..! இதுதான் தாங்கள் எங்களுக்களித்த 'மோதக'ப் பிரசாதம்..!
அன்புடன்,
பம்மலார்.
ராகவேந்தர் சார்,
நம் அனைவருக்குமே திருவிளையாடல் திரைப்படம் வெளியான விதம் மிகுந்த வருத்தத்தை கொடுத்திருக்கிறது எனபதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை. இந்த படம் இப்படி வெளியாகி இருக்கும் செய்தியை சென்ற சனிக்கிழமை மாலை உங்களை அழைத்து சொன்னபோது நாம் இருவரும் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள் உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். உங்களிடம் பேசி விட்டு சுவாமியிடம் இந்த தகவலை சொல்லும்போதும் அதே போன்ற உணர்வுகளையே பரிமாறிக் கொண்டோம். அருமை இளைய சகோதரர் சுப்பு அவர்களின் உணர்வுகளோடு நானும் ஒத்துப் போகிறேன். ஆனால் அவர் சில அமங்கலமான பதங்களை தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் குறிப்பிட்டேன். காரணம் நடிகர் திலகம் அவர்களே தனக்கு துரோகம் செய்தவர்களை சுடு சொற்கள் கொண்டு தாக்கியதில்லை. மாறாக அவர்களை கண்டு கொள்ளாமல்தான் போயிருக்கிறார். அதனால்தான் என்னைப் போல் ஒருவன் பாடல் வரிகளையும் குறிப்பிட்டேன். மற்றபடி நானே அந்தப் பதிவில் சொன்னபடி படம் தமிழகமெங்கும் திரையிடப்பட்டு பெறும் வெற்றியடைய வேண்டும் என்ற பொதுவான கருத்தில் மாற்றமேயில்லை.
அன்புடன்