Originally Posted by
Gopal,S.
Joe ,
தாங்கள் சொல்வதில் உடன்பாடும் உண்டு.எதிர்கருத்துக்களும் உண்டு.
1)face book போல ஒற்றை வரிகளில் நன்றி/பிடித்தம் என்று போட்டால் ,சில பதிவுகள் சரியாக சென்று சேர்ந்ததா என்றே இனம் காண முடியாது.
2)நிறைய உழைப்பை கோரும் பதிவுகளுக்கு சிறிதே வாசிப்பிற்கு இடம் விட்டு, எதிர்வினை தர வேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.
3)நிறைய பிரபல எழுத்தாளர்களும்,ஒரு வார்த்தையில் ,உங்க எழுத்து பிடிக்கும் என்று சொல்வதை விட ,சில கதைகளை,எழுத்தின் பகுதிகளை சிலாகிப்பதையோ ,எதிர்ப்பதையோ விரும்புவதை கண்டிருக்கிறேன் ,கேட்டிருக்கிறேன்.
4)ஆனால் மொக்கையாக சூப்பர்,பின்னி விட்டீர்கள் ,நன்றி போன்ற பதிவுகளை பிடித்தம்/நன்றி கிளிக் பண்ணி காண்பித்து விடலாம்.
5)பிறந்த நாள்,landmark achievement appreciation எல்லாம் உழைப்பவர்களுக்கு ஒரு மரியாதை,நட்பின் பரிமாறல் என விட்டு விட்டு கடக்கலாமே?
6)criticism அவசியம். சூப்பர் பதிவை ரசிக்கும் போது ,திட்டையும் தாங்க வேண்டியது எழுதுபவரின் பொறுப்பு.
7)நிச்சயம் இது ஒரு interactive திரி .தாங்கள் சொல்வது போல நடிகர்திலகத்தை பற்றி செய்தி போட்டு விட்டு போய் கொண்டே இருக்க முடியாது.
8)இந்த விதத்தில் கார்த்திக் பாணி எனக்கு உவப்புடையது.எதிர்வினை/உடன்வினை/ புரிந்து கூடுதல் தகவல்களை பகிர்வார்.