Quote : " இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் பாடலின் தரத்தை மேலும் பல மடங்கு உயர்த்தி விடுகிறது. பாடல் வரிகள் இதயத்தை கனமாக்கி, இசை அதை இன்னும் நெஞ்சில் ஆழமாகப் புதைக்கும் வண்ணம் ரணமாக்கி, காட்சியமைப்புகள் இன்னும் ஆழமாய் நம் மனத்தைக் குத்திக் கிழிக்கின்றன வன்முறைக் காட்சிகள் இல்லாமல் வெறுமைக் காட்சிகளைக் கொண்டு மட்டுமே. இத்தனைக்கும் சாதாரண பெண்ணின் வரம்புக்குட்படாத, இலக்கணங்களை உடைத்தெறிந்த, துணிச்சல் இருந்தும் கோழையாகி நிற்கும் வெறுமையான கதாநாயகியை மட்டுமே காட்டி. பெண்ணிய சமூக அவலங்கள் இந்தக் கதையின் நாயகி மூலம் இப்பாடலில் மிகச் சிறப்பான ஒளிப்பதிவில் நமக்கு அற்புதமாக உணர்த்தப்படுகின்றன. "
Unquote : Vasu உங்கள் எழுத்துக்களில் இருக்கும் power , இந்த சமுதாயத்திற்கு மட்டும் இருந்திருந்தால் " அவள் அப்படிதான் " என்று யாரையுமே சொல்லி இருக்க மாட்டோம் - மிகவும் "bold " ஆக எடுத்த படம் - தினமும் இப்படி பட்ட சம்பவங்கள் எவ்வளவோ நடந்து கொண்டுதான் இருக்கின்றது - பெண்களை தெய்வமாக மதிக்கும் நாடு இது - ஒரு புறம் துர்கையை வணங்கி விஜயதசமி யை கொண்டாடுகிறோம் - மறு பக்கம் "அவள் அப்படித்தான் " என்று பலரை ஒதுக்குகின்றோம் - பாலச்சந்தரின் இன்னமொரு படத்தில் ( பெயர் மறந்துவிட்டது ) சரிதா மிகவும் casual ஆக சொல்வார் - "இங்கே மேடையில் பெண்களை புகழ்ந்து பேசிகொண்டுருக்கின்றானே , பேசி தீர்த்தவுடன் இங்குதான் நேராக வருவான் " - அந்த வார்த்தைகளில் வெறுமை,கோபம் , விரக்தி , வெறுப்பு எல்லாமும் ஒரு வினாடியில் தோன்றி மறையும் - இந்த படம் ஸ்ரீப்ரியாவின் நடிப்பில் ஒரு திருப்புமுனை - ஒரு இடத்தில் தன் காதலன் தன்னை வெறும் சகோதரியாக நினைப்பதாக சொல்லும் போது - பொறுக்கி - வேறு எந்த உறவை சொல்லி தன்னை அழைத்திருந்தாலும் பொருத்துகொண்டிருப்பேன் - ஆனால் - பேடி !! என்னை சகோதரி என்று சொல்லி விட்டாயே !" என்று சொல்லும் போது , கண்களை கசக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது
இந்த படத்தை உங்கள் நடையில் அலசி தமிழுக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை - பெண் இனத்திற்கு ஒரு பெரிய மரியாதை செலுத்தி விட்டீர்கள் - இரு பெரும் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தும் ஸ்ரீப்ரியாவின் நடிப்பும் , அவரது கதா பாத்திரமும் தான் இந்த படத்தை தூக்கி நிறுத்தியது