அடுத்து 1973 சிறப்பு ஆய்வுகள்.
ராஜபார்ட் ரங்கதுரை.
எங்கள் தங்க ராஜா.
கெளரவம்.
Printable View
அடுத்து 1973 சிறப்பு ஆய்வுகள்.
ராஜபார்ட் ரங்கதுரை.
எங்கள் தங்க ராஜா.
கெளரவம்.
வாசு நம் நடிகர்திலகம் எழுத்து பணியை தொடருகிறார்.
ஈகரை நெட்
http://www.eegarai.net/
சிவாஜி என்ற மாநடிகர் (தொடர்-1) 'பராசக்தி'
http://www.eegarai.net/t105738-topic
'பராசக்தி' தொடருகிறாள்...(தொடர்-1)
http://www.eegarai.net/t105820-topic
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2)
http://www.eegarai.net/t105912-2
'பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) (தொடர் 3 மற்றும் 4)
http://www.eegarai.net/t106161-3-4
பொதுமக்கள்,நடிகர்கள்,அரசியல் கட்சிகள் அனைவரும் பொங்கி எழுவதாக கேள்வி.
தமிழகமே அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக
வசந்த் டி.வீ யில் 10.00 am முதல் ஒரு நல்ல
நிகழ்ச்சி(இன்று ஞாயிறு 1/12/2013 ).
திரு kcs
சிவாஜி சமூக நல பேரவையின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்
ராகவேந்தர் சார் முற்றும் கற்று விட்டதால் ,பள்ளிக்கு போக வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்தது ஞாயமே. ஆனால் மற்றோருக்கு பள்ளிக்கு செல்ல வழிகாட்டியாக செயல் பட்டதையும் நிறுத்தியாயிற்று போல.எனினும்
இவ்வளவு நாள் பள்ளிக்கு வழிகாட்டியதற்கு என் நன்றி ராகவேந்தர் சார்.
சந்திரசேகரன் சார் சிலை விவகாரத்தில் உங்கள் கடுமையான முயற்ச்சிக்கு என் பாராட்டுக்களும் நன்றியும்.
கள உறவுகளே இந்தத்திரி ஏன் இந்தளவு தொய்வு
உங்கள் சண்டைகளை தனிமடலில் வைத்துக்கொள்ளுங்கள் இத்திரியில் வேண்டாமே.
இங்கே வந்து அண்ணனின் புகழை ஒற்றுமையாக பரப்புங்கள் என்று அண்ணனின் பெயரால்
மிகவும் தாழ்மையுடன் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
நான் சுவாசிக்கு சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (9)
தமிழ் திரைப்படத்துறையில், 'மேக் - அப்' கலைக்கு முன்னோடியாக கருதப்படுபவர் ஹரிபாபு. பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்கள் எல்லாம், அவர் வீட்டிற்கு சென்று, அவரிடம், 'மேக்-அப்' போட்டு, பின், படப்பிடிப்பிற்கு செல்வர். இவர், சிவாஜியின் குடும்ப நண்பர். லட்சுமியும், சிவாஜியும் நடித்த மற்றொரு படம், ஆனந்த கண்ணீர் இப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஹரிபாபுவின் மகன், நன்னு இறந்து விட்டதாக, செய்தி வந்தது. நன்னு, சிவாஜிக்கு ரொம்ப நெருக்கம். பல வெற்றிப்படங்களுக்கு மூலக்கதை அளித்தவர். 'என்னம்மா, எனக்கு நெருக்கமானவங்க ஒவ்வொருத்தரா போயிகிட்டு இருக்காங்க...' என்று லட்சுமியிடம் வருத்தப்பட்டவர், 'சிவாஜி கணேசனுக்கு தான் நண்பன் போயிட்டான்னு துக்கம். இந்தப்படத்தில் இருக்கிற பிராமணனுக்கு இல்லை. (இப்படத்தில் அவருக்கு அந்தணர் வேடம்) டயலாக் கொணடு வாப்பா. அடுத்த ஷாட் எடுக்கலாம்...' என்று கூறி, ஷாட்டுக்கு தயாராகி விட்டார். சொந்த துக்கத்தினால் கூட, படப்பிடிப்பு பாதித்து விடக்கூடாது என்பதில், தெளிவாக இருந்தார் சிவாஜி.
பெண் வேஷம் பற்றிய விஷயத்தில், மற்றொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. போஸ்ட் மார்ட்டம் என்ற சூப்பர் ஹிட் மலையாளப் படத்தை, தமிழில் ரீ-மேக் செய்ய முடிவு செய்திருந்த. தயாரிப்பாளர் பிலிம்கோ காதர் சாதிக், சிவாஜியுடன் மேனா தியேட்டரில் படம் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். டைரக்டர் ஏ.ஜெகன்னாதனும் உடன் இருந்தார்.
அப்போது, சிவாஜி, எனக்கு போன் செய்து, 'மேனோ தியேட்டருக்கு வா. ஒரு படம் பார்க்கணும். என் உதவியாளராக உனக்கு கான்ஸ்டபிள் ரோல்...' என்றார். அவருடன் உட்கார்ந்து, மலையாளப் படத்தை பார்த்தேன். சிவாஜி, பாதிரியராகவும், போலீஸ் அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து, பெரிய ஹிட்டான, வெள்ளை ரோஜா படம் தான் அது. படத்தை பார்த்துக் கொண்டடிருந்த போது, 'அந்த கான்ஸ்டபிள் ரோலை நல்லா கவனி. எங்கே எல்லாம், 'இம்ப்ரூவ்' செய்யலாம் என்று பார்த்துக்கோ. குறிப்பாக பெண் வேடம் போடும் சீனை உன்னிப்பாக கவனி...' என்றார் சிவாஜி.
'நாகூர் பக்கத்தில நம்பளோட பேட்டை...' என்ற பாடல் காட்சி. சிவாஜியும், நானும், மாறு வேடத்தில் துப்பறியும் கட்டம். ஹார்மோனியம் வாசிக்கும், கவாலி பாடகராக சிவாஜியும், நடனமாடும் பெண் வேடத்தில் நான். ராஜேந்திரன் எனக்கு, 'மேக்- அப்' போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம், சிவாஜி, 'நீ கொஞ்சம் தள்ளிக்கோ. நானே இவனுக்கு, 'மேக் - அப்' போடுறேன்...' என்றார். 'இல்லை சார், பரவாயில்லை....' என்று, நான் சொன்னதை சட்டை செய்யாமல், 'மாறுவேடம் போடும் போது, பக்காவாக, 'மேக்-அப்' போட்டுக்கணும். நீ சோம்பல்பட்டு, அரை குறை, 'மேக்-அப்' போடு போதும்ன்னு வந்துவிடுவே. அதனால, நானே, 'மேக்-அப்' போட்டு விடுறேன்...' என்றார்.
நிறைய பசை ஒட்டி, தலைக்கு, 'விக்' வைப்பதிலிருந்து நகைகள், காஸ்ட்யூம்கள், அணிவதையெல்லாம் சரி பார்த்தார். அவருக்கு திருப்தியாகும் வரை, 'மேக்-அப்' போட்ட பின்தான், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தோம்.
கிட்டத்தட்ட, 300 படங்களுக்கு மேலே நடித்திருக்கிறேன். வெள்ளை ரோஜா படத்தில், கான்ஸ்டபிள் பெருமாள் நாயுடுவாக, பெண் வேடம் போட்டு, நடனம் ஆடும் காட்சி தான், அதிகம் பேசப்பட்டது.
இன்றும் பல, 'டிவி' சேனல்களிலே, அந்த பாடல் காட்சி ஒளிபரப்பாகும் போது, பலர் என்னை அழைத்து பாராட்டுவர். அந்த பாராட்டுகள் சிவாஜியையே சேரும்.
லட்சுமியிடம் இது பற்றி நான் பேசிய போது, 'கம்ப்யூட்டரிலே நமக்கு ஏதாவது தகவல் வேண்டும் என்றால், 'கூகுளை' தட்டுகிறோம். நடிப்புக் கலையை பொறுத்தவரை, நமக்கு உள்ள ஒரே, 'கூகுள்' தளம், சிவாஜி தான்...' என்றார்.
பாசமலர் மற்றும் புதியபறவை படங்களில், ஏதோ, 'ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசி'க்கில் படித்து, டிப்ளமோ வாங்கியவர் போல, நேர்த்தியாக பியானோ வாசித்திருப்பார் சிவாஜி.
தில்லானா மோகனம்மாள் படத்தில், சிக்கல் சண்முகசுந்தரம் பாத்திரத்தில், சிவாஜி நாதஸ்வரம் வாசித்த அழகை மறக்க முடியாது. ஆனால், அதற்கு பின், எத்தகைய உழைப்பு இருந்துள்ளது என்பதை, அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
எங்கள் குழுவின் கதாசிரியரும், குடும்ப நண்பருமான, பி.வி.ஒய். ராமன் அன்று பிரபலமாக இருந்த, 'தி மெயில்' பத்திரிகைக்காக, சிவாஜியை பேட்டி காணச் சென்றிருந்தார்.
'ராமா, பேட்டி எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். முதலில், ஒரு கச்சேரி கேட்போம், வா...' என்று, தன் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே, சிறுமேடையில், மதுரை என்.பி.என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள், நாதஸ்வரம் இசைக்க தயாராக இருந்தனர். அவர்களிடம், 'என் வீட்டில் வாசிக்கிறதாலே அடக்கம், ஒடுக்கமாக வாசிக்கணும்கிற அவசியம் இல்லை, நீங்க தான், இப்போ சிக்கல் சண்முக சுந்தரம் குழுவினர். அதனால், நாதஸ்வரத்தை உறையிலேயிருந்து எடுக்கிறதிலேயிருந்து, சிவாலியை ஊதிப் பார்க்கிறது, ஒருத் தருக்கு ஒருத்தர், 'ரியாக்ட்' செய்யறது எல்லாம், ஒரு பெரிய கச்சேரியில எப்படி செய்வீங்களோ, அதை, நான் பார்க்கணும்...' என்றார் சிவாஜி.
இரண்டு மணி நேரம், அவர்கள் வாசித்ததை, கண் கொட்டாமல் கவனித்திருக்கிறார் சிவாஜி. கச்சேரி முடிந்ததும், அவர்களை சாப்பிடச் சொல்லி, சன்மானம் கொடுத்து, அனுப்பி வைத்தார். பின், இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம், 'நாதஸ்வர கச்சேரி காட்சிக்கு நான் தயார்...' என்று சொன்னாராம். இதை, நேரில் பார்த்த ராமன், இன்றும், இது குறித்து பேசும் போது, ஒரு வியப்பு கலந்த மரியாதையோடு தான் பேசுவார்.
இந்தப் படத்தில், 'நலம் தானா...' பாடல் காட்சியைப் பற்றி, சிவாஜி என்னிடம் பேசிய போது, 'நடிப்புக்கு கண் ரொம்ப முக்கியம்டா... இக்காட்சியில், பத்மினி, தன்னுடைய அபிநயம், அங்க அசைவுகள் மூலம் வெளிப்படுத்திவிட முடியும். ஆனால், என் நிலைமையை பார்... கையில், நாதஸ்வரம். அதை வாசிக்கும் போது, பாதி முகம் மறைந்து விடும். அதனால தான், ரியாக்ஷன் பூராவும், கண்களிலே கொடுத்தேன்...' என்றார். 'நலம் தானா...' என்று பத்மினி கேட்கும் போது, இவர் கண்ணை சிமிட்டுவதும், 'புண்பட்டதால் உன் மேனியில்...' என்ற வரிகளுக்கு, சிவாஜியின் கண்கள் சிவந்து, நீர் கொட்டும் காட்சியை மறக்க முடியுமா?
ஏ.ஆர்.எஸ்., நாடக ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான பெயர். எங்கள், யு.ஏ.ஏ.,குழுவில் நடிகராக அறிமுகமாகி, பல வெற்றி நாடகங்களில், முக்கிய பாத்திரங்களில் நடித்து, தன் திறமையை நிரூபித்தவர். 1967 முதல் 1975 வரை, எங்கள் யு.ஏ.ஏ., நாடகங்களை திறம்பட டைரக்ட் செய்தவர். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எப்போதும், ஸ்டைலாக ஆடை அணிவார்.
என்னைப் போல், அவரும் சிவாஜி ரசிகர்; வெறியர். சிவாஜியின் நடிப்பின் நுணுக்கங்களைப் பற்றி நிறைய பேசுவார். சிவாஜியின், முதல் படமான 'பராசக்தி படத்தை, ஏ.ஆர்.எஸ்., முதல் நாள், முதல் காட்சிக்கு சென்று, பார்த்து ரசித்திருக்கிறார். நானும், அவரும் பேசும் போது, 'பராசக்தி படம் பார்த்த அனுபவத்தை மீண்டும் ஒரு முறை சொல்லுங்க, ப்ளீஸ்...' என்று, கேட்பேன். அவர் சொன்னதை, அவர் வார்த்தையில், இங்கே அப்படியே தருகிறேன்.
ஏ.ஆர்.எஸ்., 'பராசக்தி படம் பார்த்த அனுபவம் குறித்து கூறியது: கடந்த, 1952ல், தீபாவளியை என்னால் மறக்க முடியாத நாள். காரணம், அன்று தான், 'பராசக்தி படம் ரிலீஸ் ஆனது. பாரகன் டாக்கீசில் முதல் நாள், முதல் ஷோ பார்த்த ரசிகர் கூட்டத்தில், நானும் ஒருவன். அந்த நடிகனுக்கு முதல் படமா அது; நம்பவே முடியவில்லை. ரசித்தோம், மகிழ்ந்தோம், பிரமித்தோம்! தமிழ் சினிமாவில், இப்படியெல்லாம் கூட நடிக்க முடியும் என்று, ஒரு பாடமே நடத்தியுள்ளார் பராசக்தி கணேசன்.
தூங்கிக் கொண்டிருக்கும் சிவாஜியை, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுப்புவது தான், அவருக்கு படத்தில் முதல் ஷாட். அப்போது, புரியவில்லை, எழுந்தவர் ஒரு சாதாரண மனிதனல்ல; தன்னுடைய மாபெரும் நடிப்புத் திறமையால், தமிழ்ப்பட சாம்ராஜ்யத்தையே தன் வசமாக்கிக் கொள்ளப் போகிற சக்கரவர்த்தி என்று.
எனக்கு, முன் வரிசையில், பிரபல வீணை விற்பன்னர், நடிகர் மற்றும் டைரக்டர் எஸ்.பாலசந்தர் உட்கார்ந்திருந்திருந்தார். புதுமுகம் கணேசனின் நடிப்பை மிகவும் ரசித்த அவர், 'இந்தப் பையனிடம் (அப்போது, சிவாஜிக்கு 23 வயது இருக்கும்) பிரமாதமான காமெடி சென்ஸ், டைமிங் இருக்கு...' என்றார். சிவாஜியின் வசனத்திலும், குணசித்திர நடிப்பிலும், மனதை பறி கொடுத்திருந்த எனக்கு, அப்போது, அவர் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், பிற்காலத்தில், சிவாஜியின் அனாயசமான ஹாஸ்ய நடிப்பை, கலாட்டா கல்யாணம், சபாஷ் மீனா மற்றும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற படங்களில் பார்த்து, பிரமித்த போது, எஸ். பாலசந்தரின் கண்ணோட்டம் புரிந்தது.
முதல் காதல், முதல் சம்பளம், முதல் பாராட்டு போன்றவைகளுக்கு நிகரானது, நான், முதன் முதலில் அனுபவித்து பார்த்த சிவாஜியின் நடிப்பு.
- இப்படி சிலாகித்து கூறினார் ஏ.ஆர்.எஸ்.,
- தொடரும்.
எஸ்.ரஜத்
dinamalar
dear kc sir
ungal muyartchi vetri adaya ellam valla andha "ganesa" perumanai vendukiren
regards
gk
நடிகர் திலகத்தின் சிலை அமைந்திருக்கும் இடம் பற்றிய நீதிமன்ற வழக்கும் அதையொட்டி எழுந்துள்ள விவாதங்களும் அனைவரின் மனதையும் மிகவும் புண்படுத்தியிருக்கிறது என்பதோடு இந்த திரியின் வேகத்தையும் மட்டுப்படுத்தி கிட்டத்தட்ட சலனமற்று நிற்கும் ஒரு சூழலையும் உருவாக்கியிருக்கிறது. இப்போதுள்ள மன நிலையில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியோ அல்லது அவை சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியோ எழுதுவதற்கு எவருக்கும் விருப்பம் இல்லாமல் இருப்பது புரிந்துக் கொள்ள கூடியதே. இருப்பினும் டிசம்பர் 13-ந் தேதி வரை இப்படி தொடர்வதை தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது. பெரும் கொண்டாட்டங்களாக இல்லாமல் நடிகர் திலகத்தைப் பற்றிய சேதிகளை பகிர்ந்து கொள்ளலாம். இது ஒரு யோசனையே.
அன்புடன்
மாடரேட்டர் அவர்களே,
ரங்கராஜன் நம்பி போன்றவர்களின் பிதற்றல்களை அகற்றியதற்கு மிக்க நன்றி.
அன்பு நண்பர்களே,
இன்று மாலை திரு சுப்பு அவர்களுடன் தொலைபேசியில் உரையாடும் போது இரு மகிழ்ச்சியான செய்திகளை கூறினார்.
1)1977ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வசூலுடன் வெற்றி கண்ட "அண்ணன் ஒரு கோயில்" திரைப்படம் மகாலக்ஷ்மியில் 3 காட்சிகளாக வரும் டிசம்பர் 27 முதல் வெளியாகிறது.
நம் நண்பர்கள் இது தொடர்பான நினைவலைகளை பகிர்த்து கொள்ளலாம். .
2) ஜனவரி தைத்திங்கள் முதல் "தை திரை விழா" என்று நடிகர்திலகத்தின் 7 படங்கள் வெளியாக உள்ளது.
ஜூனியர் விகடன் - 08 Dec, 2013
அகலும் சிவாஜி சிலை...?
திரளும் திரையுலகம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை வைத்தது சிலருக்குப் பொறுக்கவில்லை. வழக்குப் போட்டார்கள். ''சிவாஜி சிலையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, இருபதுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்திருக்கிறது'' என்று அரசாங்கமும் சொல்ல ஆரம்பித்திருப்பது அனைவரையும் கவனிக்க வைக்கிறது. ஊர் உலகப் பிரச்னைக்கு எல்லாம் கருத்துச் சொல்லும் திரையுலகத்தினர் இதில் மௌனம் காத்து வருகிறார்கள். எனவே, நாமே அவர்களிடம் இதுபற்றிக் கேட்டோம்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார்: நடிகர் திலகம் சிவாஜி ஒரு மாபெரும் நடிகர். அவரது சிலை தற்போது இருக்கிற இடத்திலேயே நிலைக்க வேண்டும் என்பது கலைத் துறையில் இருக்கும் பெரும்பாலானவர் கருத்து. அதுவே எனது கருத்து.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன்: முதலில் அந்த இடத்தில் இருந்து சிவாஜி சார் சிலையை அகற்ற வேண்டாம் என்று சொன்னோம். இப்போது அரசாங்கமே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று சொல்வதால் நான் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி: சிவாஜி நடிப்பின் இலக்கணம். அவருடைய சிலையை அந்த இடத்தில் இருந்து எடுத்துதான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் இன்னொரு மரியாதைக்குரிய இடத்தில் சிலையை நிறுவிச் சிறப்பிக்க வேண்டும்.
ஃபெப்சி அமைப்பின் செயலாளர் 'ஃபெப்சி’ சிவா: நடிகர் திலகம் சிவாஜி தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏற்கெனவே சிலை நிறுவிய இடத்திலேயே வைத்து அவரது கௌரவத்தை காப்பாற்ற வேண்டும்.
இயக்குநர் ராம நாராயணன்: சிவாஜி சிலை இருக்கும் இடத்தில் விபத்து நடக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. தமிழ்நாட்டுச் சாலைகளில் விபத்து நடக்கும் இடங்களில் எல்லாம் ஏதாவது சிலை இருக்கிறதா என்ன? அப்படிச் சிலையை எடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தால் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிவாஜி சிலையை வைக்கக் கூடாது. மக்கள் திரளாகக் கூடும் இடத்தில் சிவாஜி சிலையை நிறுவி சிறப்பிக்க வேண்டும்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்: தமிழ் திரைப்படத் துறையில் வருங்காலத்தில் வருகின்ற சந்ததிகளுக்கு சிவாஜி சிலை அவரது பெருமையை பறைசாற்றும். அப்படிப்பட்ட மகா கலைஞன் சிவாஜி. அவரது சிலையை அந்த இடத்தில் இருந்து நிச்சயம் மாற்றக்கூடாது.
தென்னிந்திய நடிகர் சங்கப் பொருளாளர் நடிகர் வாகை சந்திரசேகர்: தலைவர் கலைஞரைப் பழிவாங்குவதாக நினைத்து அவரது ஆட்சியில் நிறுவிய சிவாஜி சிலையை அகற்ற நினைக்கிறது ஜெயலலிதா அரசு. சிவாஜி சிலை நிறுவுவதற்கு முன்பே அந்த இடத்தின் பக்கத்தில் மணிக்கூண்டு இருந்து வருகிறது. அதனால் இதுவரை ஏதாவது விபத்து நடந்ததா? மணிக்கூண்டால் நடக்காத விபத்து சிவாஜி சிலையால் நடக்கிறது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
நடிகர் பார்த்திபன்: உண்மையிலேயே அலசி ஆராய்ந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால் சிவாஜி சிலையை இன்னொரு முக்கியமான இடத்தில் வைப்பது நல்லதுதான். ஆனால், அரசியல் பின்னணி காரணமாக சிலையை அகற்றுவதாக இருந்தால் அது வருத்தத்துக்குரிய விஷயம்
நடிகர் சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன்: சிவாஜி சிலை விஷயத்தில் நடிகர் சங்கம் அக்கறை இல்லாமல் நடந்துகொள்கிறது. அரசாங்கம் இப்படி முடிவெடுக்கிறது என்றால் முதலில் இவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். பல ஆண்டுகளாகியும் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டாமல் புறக்கணித்து வருபவர்கள் இதைப்பற்றி மட்டும் கவலைப்படுவார்களா?
நடிகர் குமரிமுத்து: நாட்டில் பிரச்னைக்குரிய எத்தனையோ சிலைகள் இருக்கின்றன. கடற்கரையில் இருக்கும் எந்தச் சிலையாலும் யாருக்கும் பாதிப்பு இல்லை. தேவை இல்லாமல் சிவாஜி சிலைக்குப் பிரச்னை ஏற்படுத்துகிறார்கள்.
நடிகர் எஸ்.வி.சேகர்: சென்னையில் போக்குவரத்துப் பிரச்னை, பாலம் கட்டும் விஷயம் ஏற்பட்டபோது அண்ணா வளைவை அகற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டது. அப்போது எல்லோரும் அதை எதிர்த்துப் போராடினார்கள். அண்ணாவும், சிவாஜியும் ஒன்றுதான். அதனால் அண்ணா வளைவு விஷயத்தில் அரசு எப்படி முடிவு எடுத்ததோ அதுபோல சிவாஜி சிலை விஷயத்திலும் பரிசீலனை செய்வது நல்லது.
இதே ஆட்சியில்தான் எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோ எதிரில் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு இடத்தை ஜெயலலிதா கொடுத்தார். அப்போது, 'இடத்தை நீங்கள் கொடுத்து விட்டீர்கள். மணி மண்டபத்தை நாங்கள் கட்டுகிறோம்’ என்று நடிகர் சங்கத்தில் சொன்னார்கள். ஆனால், இன்றுவரை அதற்கான முயற்சி எடுக்கவில்லை. மணிமண்டபம் கட்டி, அதன் முகப்பில் இதே சிவாஜி சிலையை வைத்தால் கம்பீரமாக இருக்கும்.
- எம்.குணா
Happy news: Back to back releases of NT Films
In Kovai NT release in a span of few years started with Raja , pasamalar, gained momentum with Ennai pol Oruvan
Now daily two shows 2.30 & 6.30 PM @ Delite Theatre
Thirumal perumai
To be followed by
Needhi(Apt movie @ this time)
நடிகர்திலகம் சிலை - ஆர்ப்பாட்டம்.
நடிகர்திலகம் சிலையை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமுகநலப்பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. காவல்துறை அனுமதி 3-ஆம் தேதி இரவுதான் கிடைத்தது. அனுமதி கிடைக்காவிட்டாலும் போராடத் தயாராக இருந்தாலும், காவல்துறை அனுமதி கிடைத்ததன் மூலம் கலந்துகொள்பவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்தது.
சென்னை தவிர தஞ்சாவூர், திருநெல்வேலி, துத்துக்குடி, விருதுநகர், கடலூர், கோவை என பல மாவட்டங்களிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. அங்கிருந்து பத்திரிக்கை செய்திகள் வந்தவுடன், எல்லாவற்றையும் பதிவிடாமல், ஏதாவது ஒன்றிரண்டை மட்டும் பதிவிடுகிறேன்.
வரும் 7 ஆம் தேதி திருச்சியிலும், 10 ஆம் தேதி மதுரையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.
IMPLEAD PETITION தயாராகிக் கொண்டிருக்கிறது. 9 அல்லது 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் SUBMIT செய்துவிடலாம் என்று வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
நீதி வெல்லும், நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
நன்றி.
Please visit for Chennai Demonstration Video:
http://ulagathamizhmurasu.in/home/
திரு. ஆதிராம் சார்,
திரு.முரளி அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல, திரைப்பட விவாதங்களையும் தொடர்ந்தால் நல்லது என்று கருதுகிறேன். சிலை விவகாரத்தைப் பொறுத்தவரையில் டிசம்பர் 13 என்பது தீர்ப்பு நாள் அல்ல. எனவே அவ்வப்போது சிலை விவகாரம் குறித்தும் செய்திகள் வரும்போது விவாதிக்கலாம் என்பது எனது கருத்து.
திரு. கோபால் சார், 1973 திரை வரிசையைத் தொடங்கி வைத்தால் நலம்.
நன்றி.
[QUOTE=KCSHEKAR;1094290]நடிகர்திலகம் சிலை - ஆர்ப்பாட்டம்.
நடிகர்திலகம் சிலையை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகணலப் பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. காவல்துறை அனுமதி 3-ஆம் தேதி இரவுதான் கிடைத்தது. அனுமதி கிடைக்காவிட்டாலும் போராடத் தயாராக இருந்தாலும், காவல்துறை அனுமதி கிடைத்ததன் மூலம் கலந்துகோல்பவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்தது.
திரு.சந்திரசேகரன் அவர்களே
தங்களுடைய தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறப்பாக அமைந்தது குறித்து பேப்பரிலும் T.V யிலும் கண்டேன்.
தங்கள் முயற்சி வெற்றி பெற்று நல்ல நீதி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
C. Ramachandran.
சனி கிழமை ஓய்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொடங்கி விடுகிறேன்.
Glad to note Sivaji peravai Demonstration at chennai went off very well and good number of turn outs inspite of short notices. vidieo coverages very good. kindly update more coverages from all centres when done,
all the praises for sivaji peravai and participants.
VASUDEVANS photo coverages and raghavendran;s expert comments follwed by murali-gopal teams expected very much
திரு.ராமச்சந்திரன் அவர்கள் நடிகர்திலகத்தின் தீவிரப் பற்றாளர் - திருச்சியில் நடிகர்திலகத்தின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இவரைக் காணலாம்.
thirumbi paar
'thirumbi paar' movie review in eegarai.net.
http://www.eegarai.net/t106442-5#1035817
காந்தியின் ,ஆப்பிரிக்க இணை நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு,நடிகர்திலகம் திரியின் சார்பாக இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
நடிகர்திலகத்தின் சிலை சம்பந்தமாக திரு.Y .Gee .மகேந்திரா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி.
இப்போது நம் முன் இருக்கும் கேள்வியே இந்த சிலையை ஏன் அகற்ற வேண்டும் என்பதுதானே தவிர, அகற்றி எங்கு வைக்கலாம் என்பதல்ல.
----------------------------------------------------------------------------------------------------------------------
சிவாஜி சிலை ஒரு யோசனை!
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், சென்னையிலிருந்து, எழுதுகிறார்
சென்னையில் வாழும், ஒரு சிவாஜி பித்தனின் பணிவான மடல். நடிகர் திலகம் சிவாஜி சிலையை, இடமாற்றம் செய்ய சொல்லும் காரணங்கள், ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து, வலப்புறம், கடற்கரை சாலையில் திரும்புவோருக்கு, சிலை ஒரு தடங்கல் இல்லை. கடற்கரை சாலையிலிருந்து, ராதாகிருஷ்ணன் சாலையில், வலப்புறம் திரும்புவோருக்கும், சிலை ஒரு தடங்கல் இல்லை. சிலையை தாண்டி தான், 'டிராபிக் ஐலேண்ட்' உள்ளது. சாந்தோம் சாலையில் இருந்து, இடப்புறம், ராதாகிருஷ்ணன் சாலையில் திரும்புவோருக்கும், சிலை ஒரு தடங்கல் இல்லை. அங்கு, எல்லா திசைகளுக்கும், சிக்னல் உள்ளது. சிக்னலை மீறுவோருக்கும், குடித்து விட்டு ஓட்டுபவர்க்கும் (இவர்கள் சட்டத்தை மதியாதவர்கள்) இடையூறாக இருக்கலாம். சட்டத்தை மதிக்காதவர்களுக்காக, சிலையை இடமாற்றம் செய்ய கூறுவது, விரும்பத்தக்க நிகழ்வு அல்ல. மேலும், சிவாஜி சிலையின் இடமாற்ற செய்திகள், ஏதோ, சட்டத்திற்கு புறம்பான கட்டடத்தை அகற்றுவது போல் வெளிவருவது, மனதை உறுத்துகிறது. சிவாஜி வாழ்ந்த சமயம், முன்னாள் ஐ.ஜி., பரமகுருவின் தயாரிப்பில், போலீசின் பெருமைகளை எடுத்துக் காட்டும் வண்ணம், 'உங்கள் நண்பன்' என்ற ஒரு குறும்படத்தில், நடித்துக் கொடுத்தார். 'போலீஸ் என்பவர், சட்டத்திற்கு புறம்பாக நடக்கும், தன் சொந்த மகனையே தண்டிக்கும் நேர்மை உடையவர்கள்' என்று, போலீசாரின் மதிப்பை, இமயத்துக்கு உயர்த்தும் வண்ணம், தங்கப்பதக்கம் படத்தில் சித்தரித்துக் காட்டியவர். எல்லாவற்றையும் மீறி, சிலையை அகற்றி தான் தீர வேண்டும் என்ற நிலை ஏற்படின், இதோ என் பணிவான வேண்டுகோள்... சிவாஜியின் பெயர், எக்காலத்திற்கும் நிலைக்கும் வண்ணம், அவர் வீடு உள்ள வீதிக்கு, அவர் பெயரை சூட்டினார், முதல்வர் ஜெ., அங்கே இருக்கும் ம.பொ.சி., திருவுருவச் சிலையை, அவர் வாழ்த்திய தமிழறிஞர்களின் சிலைகள் அமைந்த, மெரீனா கடற்கரையில் நிறுவி, அந்த இடத்தில், சிவாஜியின் சிலையை நிறுவலாமே. கம்பனும், பாரதியும், வீரமாமுனிவரும் கம்பீரமாக நிற்கும், அந்த கடற்கரை ஓரம் நிற்பது தான், சிலம்புச் செல்வர் மா.பொசி.,க்கு பெருமை. தன் வாழ்நாளை கம்பீரமாக கழித்த, அந்த சிவாஜி, சாலையின் நுழைவில் நிற்பது தான், நடிகர் திலகத்திற்கு பெருமை. இந்த சிவாஜி பித்தனின் எண்ண ஓட்டங்கள், போக்குவரத்துத் துறை ஆணையரின் ஒப்புதலைப் பெறும் என்று நம்புகிறேன்.
06.12.2013 தேதியிட்ட தினமலர் நாளிதழிலிருந்து...
இணைப்பு
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=67
Facebook Link
https://www.facebook.com/vee.yaar/po...4¬if_t=like
----------------------------------------------------------------------------------------------------------------------
தற்போது சிலை இருக்குமிடத்திலிருந்து மாற்றக்கூடாது. முதலில் உண்மையிலேயே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மற்ற சிலைகளையெல்லாம் அகற்றிவிட்டு அப்புறம் நடிகர்திலகம் சிலையை அகற்றுவது குறித்து பேசினால் நன்றாக இருக்கும்.
தற்போது ம.பொ.சி. சிலை இருக்குமிடம் ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடி உள்ள இடம் என்பது குறிப்படத்தக்கது.
Dear mr adiram,
each and every nt fan has a right to have his own opinion.please mind your words
This is from raghavendra sir website
I am an ardent fan of Nadigar Thilagam and have been reading the postings of various NT Fans and am liked to read the postings of M/s.Raghavendra, Neiveli Vasudevan, Murali Srinivas,Gopal and others.
All these I am reading only the postings of others I have tried to use this forum to ink my thoughts in this forum. Just this is only a test message.
இந்த திரிக்கு புதியதாய் வந்திருக்கும் அன்பு நண்பர் திரு.n.v. Raagavan அவர்களே வருக வருக
தாங்கள் இருக்கும் ப்குதியில் நமது நடிகர் திலகத்தின் செய்திகளை இனிதே தருக
எனக்கு ஒன்று புரிவதேயில்லை.புரியவும் இல்லை.
நமக்குள் வரும் கருத்து மோதல்களை விடுங்கள்.தெளிவான ரசிகர்களை கொண்டதால் விளையும் முரண்,அது சார்ந்த கர்வங்கள்,மான பிரச்சினைகள்.இது குடும்பத்துள் அண்ணன் தம்பி பிரச்சினை.இது ஒரு ஆரோக்கியமான சுவாரஸ்யம் நிறைந்த செல்ல மோதல்கள்.
ஆனால் இங்கு நம் திரிக்கு மட்டும் சந்தேகமான நபர்கள் வந்து அதை செய்,இதை செய்யாதே என்று குழப்பம் விளைவிப்பது.பல நகைப்புக்கிடமான விஷயங்கள்,மூட தனங்கள் நிறைந்த இடங்களில் யாரும் சென்று எதையும் சொல்லாத போது நமக்கு மட்டும் என் இந்த கட்டுப்பாடுகள்,சட்ட திட்டங்கள்?பதிவர்களை அவமான படுத்தி திட்டமிட்டு விரட்டுவது போன்ற திரிசம வேலைகள்?
என்னை,ராகவேந்தரை,வாசுவை,முரளியை ,கார்த்திக்கை விடுங்கள்.நாங்கள் போட்டு கொள்ளாத சண்டைகள் இல்லை,விவாதங்கள் உண்டு.ஆனாலும் தெளிவாக சில விஷயங்கள் உண்டு.
1)நாங்கள் அனைவருமே பங்களிப்பாளர்கள்.
2)திரிக்கு சுவை கூட்டி,மெருகேற்றி,பார்வையாளர்களை ஈர்த்து,நடிகர்திலகத்தை பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவும் குழு.
3)எங்கள் நோக்கம் ஒன்றே ஒன்று.-நடிகர்திலகம் மட்டுமே பிரதானம்.
4)எங்கள் அனைவரிடமே,சொல்ல விஷயங்கள் இன்னும் உண்டு.மெருகேற்றி ,சுவையாக,creative ஆக செய்யும் திறம் உண்டு.
இதில் எங்கே வந்தது ஆக்ரமிப்பு? எங்களுக்கு மட்டும் என் ஆயிரம் கட்டளைகள்,நிர்பந்தங்கள்?
அதுவும் ,பங்களிப்பாளர் அல்லாத மற்றவர்களிடம் இருந்து?
வாசு மற்றும் என் போன்றவர்கள் நொந்து வெளியேறுவதால் திரிக்கு நன்மை உண்டா?வேறு யாரேனும் எங்கள் இடத்தை எடுத்து கொண்டு பணியாற்றினால் மகிழ்ச்சியே.ஆனாலும் அதுவும் நேர்வதாக தெரியவில்லை.
சரி.கொஞ்சம் சுவை கூட்டலாம் என்று பார்த்தால் ஒரு முக்கிய நண்பர் வந்து நாங்கள் ரசிக்கும் மனநிலையில் இல்லை என்கிறார். சிவாஜியை பற்றி சொல்வதற்கும் ,சுவைப்பதற்கும் என்னைய்யா மனநிலை?கோவிலுக்கு செல்லும் மனநிலைதானே?சுகம்,துக்கம் இரண்டிலும் ஆசுவாசம் தர கூடியதுதானே?
மன வருத்தத்துடனே பதிவு செய்கிறேன்.
வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,சாரதி போன்றவர்கள் உடனே வருவது,நாம் கட்டி காத்த கோயில் பாழடையாமல்,திருப்பணி செய்வதற்கு ஒப்பானது.வாருங்கள்.என் அன்பு வேண்டுகோள்.
Dear Mr.N.V.Ragavan,
You are most welcome to participate and pen your views.
பம்மலார் ,விரைவில் நமது நூலை கொண்டு வர ,நூறு நிச்சய முன் பதிவுகளாவது எதிர்பார்க்கிறார். நம் திரி பார்வையாளர்களில் பத்தில் ஒருவர் ,committed Fan என்று கணக்கிட்டாலும்,அந்த நூறு முற்று பெற்றிருக்க வேண்டுமே?செய்வீர்களா?அந்த தெய்வ தேவர் திருமகனுக்கு,தமிழகமே கடன் பட்டுள்ளதே?நம் ரசிகர்களாவது,அந்த கடனில் சிறு பகுதியை நேர்த்தியாக செலுத்தாலாமே?
திரு.n .v .ராகவன் அவர்களே வருக!
தங்கள் அனுபவப் பதிவுகளைத் தருக.
நான் உட்பட எங்கள் நண்பர்கள் குழாம் எல்லோரும் சேர்ந்து 1972/73 ஆம் ஆண்டு வாக்கில் சென்னை சைனாபஜார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை ஒட்டியுள்ள தேரடி வீதியில் நடிகர்திலகம் அவர்களின் பெருமையைக் கொண்டாட " ப்ரஸ்டிஜ் சிவாஜி ரசிகர் மன்றம் " என்ற பெயர் கொண்டு பல ஆண்டுகள் சிறப்பாக நடத்திவந்தோம்.
அவ்வமயம் சென்னை ஆர்மினியன் தெருவிலுள்ள கோகலே ஹாலில் நடிகர்கள் மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த் மற்றும் நவசக்தி பத்திரிகையின் செய்தியாளர் நவசக்தி ராகவன் அவர்கள் மூலம் ந்டிப்பின் இமயத்தைப் போற்றி ஒரு சிறப்பு மலர் வெளியிட்டோம். மேலும் அப்பொழுது ப்ரபலமாகாத இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் அவர்களை அழைத்து ஒரு இசைக் கச்சேரியும் நடத்தினோம். மிகச் சிறப்பாக நடைபெற்ற அந்த விழாவினை இப்பொழுது நினைத்தாலும் மிகவும் இன்பமாக இருக்கும். கோகலே ஹால் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதி நிரம்பி வழிந்தது.
நிகழ்ச்சி நடந்த மறுநாள் நடிகர்திலகத்திடம் நிகழ்ச்சிபற்றி விவரித்த பொழுது எங்களைப் பாராட்டி ஊக்குவித்தார். அப்பொழுது உடனிருந்த மேஜர் அவர்களும் அந்த நிகழ்ச்சி பற்றி அவரிடம் சொல்லி எங்களையும் பாராட்டினார்.
பிறகு நண்பர்கள் அலுவல் காரணமாக பிரிய நேரிட்டதால் எங்களால் மன்றத்தைத் தொடர முடியாமல் போனது. இருந்தாலும் நாங்கள் எங்கிருந்தாலும் நடிகர் திலகத்தின் படத்தினை வெளியாகும் நாளில் அதுவும் முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவோம்.
நான் பணிபுரிந்த டிவிஎஸ் நிறுவனத்தில் என்னுடைய மேனேஜர் நான் ஒருநாள் விடுப்பு எடுத்திருந்தால் மறுநாள் என்னிடம் நேற்று ஏன் நீ வேலைக்கு வரவில்லை ? என்ன சிவாஜி படம் ரிலீஸ் ஆகி இருந்தது என்று கேட்பார். அது மட்டுமில்லாது இனிமேல் படம் பார்ப்பதற்கு என்று நீ விடுப்பு எடுத்தால் உனக்கு லீவு கிடையாது. அன்றுடன் நீ வேலையை விட்டு போக வேண்டியதுதான் என்று கூறுவார். இருந்தாலும் அடுத்த படம் ரிலீஸ் ஆகும்போதும் விடுப்பு எடுத்து படம் பார்க்க சென்று விடுவேன். அநத இளவயது நாட்களும் நடிகர் திலகத்தின் ந்டிப்பை அணு அணுவாக ரசித்ததையும் இன்று அவர் இருந்து வருடத்திற்கு ஒருபடமாவது அளித்து மகிச்சிக்கடலில் ஆழ்த்தமாட்டாரா என்று ஏங்குவதையும் வார்த்தையில் விவரிக்க இயலவில்ல்லை.