CK
http://i818.photobucket.com/albums/z...pspv44p8ck.jpg
Printable View
உங்களைப் போலவே சொல்லிக் கொண்டிருக்கும் கலையை உண்மை பேசவைத்து விட்டு உங்களிடம் வருகிறேன் ரவி.
உங்களுக்குத் தெரியோமோ என்னவோ. அவரிடம் யாரோ பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்று சொல்லிவிட்டார்களாம். அதனால் 108 என்ற எண்ணை 18, 18 என்று சொல்வதோடு அதுதான் தன் வயதும் என்று கிளிப் பிள்ளையாய் இருக்கிறார். இல்லை அவ்வளவு வயதில்லை அவர் சொன்னாலும் 81 வயதிற்கும் மேலான முதிர்ச்சி அவர் எழுத்தில் படுகிறது என்பதை படிக்கும் நண்பர்களோடு பேசும்போது சொன்னார்கள். ஏன் என்றால் அவர்களது 95 வயதிற்கும் மேலான தாத்தாக்கள், கொள்ளுத்தாத்தாக்கள் இப்படித்தான் பேசுகிறார்களாம். ஏன் அவர் எழுத்தில் நீங்களே உணரவில்லையா? 81 என்ற எண்ணையும் அவர் மாற்றிக்கொண்டு 18, 18 என்று கிளிப் பிள்ளையாய் இருக்கலாம்.
உடம்பு சுத்துது அதனால..
வள்ளல் வாசு சார்,
மிக்க நன்றி, தங்கள் வீடியோ பதிவுகளுக்கு. என்ன கேட்டாலும் கொண்டு வந்து விடுகிறீர்கள். கல்நாயக் கூறியது போல நீங்கள் எந்திரரோ?
ரவி சார்,
பாராட்டுக்கு நன்றி. கருவின் கரு கலக்குகிறீர்கள்.
சின்னக் கண்ணன்,
வியட்நாம் வீடு பாடலுக்கு இதுவரை கேட்டறியாத விளக்கம். சுவையாக இருந்தது. அந்த விளக்கத்தோடு காட்சியைப் பார்த்தால் மேலும் சுவை.
கல்நாயக்,
எதற்கு வம்பு? உண்மையை பேசிவிடுகிறேன். வயதில் மட்டுமல்ல, அறிவில், அன்பில், அடக்கத்தில் மட்டுமல்ல, தன்னை சிறியவனாக்கி விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையிலும் நீங்களே பெரியவர். (சைக்கிள் கேப்பில் பிளேனை விடும் ரவி சாரை பாத்தீங்களா? பிள்ளையாம்.)
வாசு சார் 4 நாட்களுக்கு முன் , ‘மதுரகானம் திரி இளைப்பாறும் திரி. அங்கு சண்டை போட முடியாது. பாரபட்சம் காட்ட முடியாது’ என்று இன்னொரு திரியில் கூறியிருந்தார். முடியாதுக்கும் கூடாதுக்கும் வேறுபாடு உண்டு. முடியும் ஆனால் கூடாது என்பது கட்டுப்பாடு. ஆனால், முடியாது என்பது வாய்ப்பில்லை என்று அர்த்தம். சண்டையிடவும் பாரபட்சம் காட்டவும் நம்மால் முடியவே முடியாதே, அந்த எண்ணமே இங்கு வராதே. வாசு சாரின் ஒவ்வொரு எழுத்தும் சத்தியம். மகிழ்ச்சியாக உள்ளது. (கல்நாயக், இவ்வளவு தூரம் சொல்கிறேனே, பெரியவர் என்று உங்களை ஒப்புக் கொள்ளக் கூடாதா?)
-----------------------------------------------------
டாஸ்மாக் இணையதளத்தில் மதுவகைகள் என்னென்ன? எப்படி இருக்கும்? எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளதாம். மது குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ விளம்பரப்படுத்துவது சட்டப்படி குற்றம். மதுக்கடைகளிலும் மது பாட்டில்களிலும் கூட குடிக்கு எதிரான வாசகங்கள் உண்டு. அப்படி இருக்க, அரசின் இணையதளத்திலேயே மது பற்றி விளம்பரம் தவறு என்றும் அதை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
விட்டால் இந்தப் பாட்டையும் சேர்த்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. காஞ்சித் தலைவன் படத்தில் ஏ.எல். ராகவன் பாடியுள்ள,
உலகம் சுத்துது எதனால?
நம்ப உடம்பு சுத்துது அதனால..
(பாடல், நீர் மேல் நடக்கலாம் என்ற சரணத்துடன் ஆரம்பிக்கும்)
சூரியனை சுற்றும் பூமி தன்னைத்தானே சுற்றியபடி செல்கிறது என்கிறது அறிவியல். ஆனால், அது சுழல்வது நம் கண்ணுக்குத் தெரியவில்லை. மது உள்ளே போனால் உலகம் சுத்துமாம். ஏன்? நம் உடம்பு சுத்துகிறதே? சுவையான விளக்கம்.
பாடலுக்கு திரு.எம்.ஆர்.ராதா அவர்கள் நடித்திருப்பார். எல்லாரும் குடித்துவிட்டு கோஷ்டியாக ஆடுவார்கள். திரு.ராதா ஏற்கனவே விவகாரமான ஆள். குடித்தது போல நடிப்பது என்றால் கேட்க வேண்டுமா?
கன்னம் சிவக்குது எதனால?
கன்னிப் பொண்ணு அதனால
கன்னத்தில் ஒண்ணு.... என்று இழுத்தபடியே
கன்னத்தை அவர் காட்டும்போது ‘சப்’ என்று ஒரு அறை விழும். விரசமும் கலக்காமல் அப்படி விரசமாக கேட்க நினைத்தால் என்ன கிடைக்கும் என்பதை விளக்கும் வகையில் நகைச்சுவையான முறையில் காட்சி அமைப்பும் பாடல் வரிகளும்.
1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் கழகம் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு 57ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் முதல் முறையாக 15 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. தேர்தல் வியூகம் வகுப்பதிலே காங்கிரஸ்காரர்கள் (அப்போதைய) வல்லவர்கள். அடுத்த தேர்தலில் இந்த 15 தொகுதிகளும் குறிவைக்கப்பட்டன. சரியாக அந்த 15 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது.
அந்த பத்ம வியூகத்தில் பேரறிஞர் அண்ணாவும் தப்ப முடியவில்லை. காஞ்சிபுரம் தொகுதியிலே பஸ் முதலாளியும் காங்கிரஸ் வேட்பாளருமான நடேச முதலியாரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்த தேர்தலில் குறிவைக்கப்பட்ட 15 தொகுதிகளில் போட்டியிட்டவர்களில் 14 பேர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.
ஒருவர் மட்டும் தப்பினார். நிலவரம் அறிந்ததாலோ என்னவோ, குளித்தலை தொகுதியில் இருந்து தஞ்சை தொகுதிக்கு மாறி போட்டியிட்டார். அங்கும் போட்டி எளிதாக இல்லை. (திராவிட இயக்க கொள்கைகளை ஏற்றுக் கொண்ட எனக்கு சாதி பெயரை குறிப்பிடுவதில் விருப்பமில்லை. என்றாலும் நான் குறிப்பிடப்போகும் பின்வரும் பிரமுகர்கள் பெயரோடு சாதி பிரிக்க முடியாதபடி ஆகிவிட்டதால் நானும் குறிப்பிடுகிறேன், மன்னிக்கவும்)
கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், உக்கடை தேவர், வலிவலம் தேசிகர், குன்னியூர் சாம்பசிவ அய்யர், வடபாதிமங்கலத்தார் என்று அழைக்கப்பட்ட பெருநிலக்கிழார் வி.எஸ்.தியாகராஜ முதலியார் (இவர் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தக்காராக இருந்தவர். அப்போது நடந்த சுவையான சம்பவத்தை நேரம் கிடைக்கும்போது பார்ப்போம்) போன்றோர் ஆண்ட ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவிலே போட்டி.
தஞ்சையிலே யாகப்ப நாடார் என்றால் எல்லாருக்கும் தெரியும். பெரும் தனவந்தர். அவரது பெயரில்தான் யாகப்பா டாக்கீஸ் அமைந்திருந்தது. (இப்போது இருக்கிறதா என தெரியவில்லை) அவரது திருக்குமாரர் பரிசுத்த நாடார்தான் காங்கிரஸ் வேட்பாளர். தொகுதி மாறி, கடும் போட்டியில் காங்கிரசாரின் பத்ம வியூகத்தை உடைத்து வெற்றி பெற்ற அந்த கெட்டிக்காரர்தான் மேற்கண்ட பாடலை எழுதியவர்.
தெரிந்திருக்குமே. இன்று 92வது பிறந்த நாள் விழா காணும் திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்கள். அவரது அரசியலில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், சும்மா சொல்லக் கூடாது. சில விஷயங்களில் மனுஷர் sharp மட்டுமல்ல, shark.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
https://www.youtube.com/watch?v=bUFQoLEIiqM
மக்கள் கலைஞர் ஜெய்யின் நினைவு தினம் இன்று. இப்பாடலை விட சிறந்த நினைவூட்டல் இருக்குமோ...
கலை நன்னா எழுதியிருக்கேள்..ஆனா பாடடு தான் கிடைக்கலை..//sharp மட்டுமல்ல, shark.// :) நீரும் தான்,,கரெக்டா விஷயத்தைப் புகுத்துவதில்.. :) .
கலை,
அப்படியே விவகாரத்தை மாத்திட்டீங்களே. இங்கே பிரச்சினை, நான் பெரியவனா, சின்னவனா என்பதில்லை. நானும் உங்கள் வலையில் விழுந்துட்டேன். இங்கு உள்ள அனைவருக்கும் வயதில் மிக பெரியவர் நீங்கள்தான் என்பது. எப்படியோ அதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இந்த பிரச்சினையை இவ்வளவு சீக்கிரம் முடித்து வைப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மற்ற எல்லோரும் நம்மை அடிக்க வருவதற்கு முன்பு ஒப்புக்கொண்டு என்னை மட்டுமில்லாமல் உங்களையும் காப்பாற்றிக்கொண்டதில்தான் உங்கள் வயதின் முதிர்ச்சி, அனுபவ அறிவு பளிச்சிடுகிறது. திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்கள் பிறந்த நாளை அலசி ஆராய்ந்த முறையும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக உள்ளது.
கலை , கல்நாயக் - உங்கள் கன்னித்தீவு தொடர்ந்து கொண்டே இருக்கின்றதே:) - உங்கள் இருவரிடம் இருந்து, சிறியவர்கள் நாங்கள் பல கற்றுக்கொள்ள வேண்டும் . உங்கள் இருவரிடம் இருந்தும் நான் தனிப்பட்ட முறையில் இதுவரை கற்றுக்கொண்டது :
1. பெரியவர்களாக இருந்தும் இருவரும் அதை ஒப்புக்கொள்ளாததது .
2. தன்னடக்கம்
3. முதிர்ச்சி நிறைந்த எழுத்தோட்டங்கள் .
4. ஆரோக்கியமான , என்றுமே முடிவடையாத விவாதங்கள் .
இன்னும் எவ்வளவோ - சொல்லிக்கொண்டே போகலாம் - திருடன் போலீஸ் விளையாட வேண்டும் - கொஞ்ச நேரம் தான் வீட்டில் அனுமதி - விடிந்தால் quaterly exam வேறு . நண்பர்கள் வேறு அழைத்துக்கொண்டே இருக்கிண்டார்கள் - இவ்வளவு தான் எழுத நேரம் கிடைத்தது .
கல்நாயக் சார் ! எழுத்தின் முதிர்ச்சியை வைத்து ஒருவரின் வயதை கண்டுபிடிக்க முடியுமா ? அப்படி முடியும் என்றால் என் வயது 6 க்கு மேல் தாண்டியிருக்க சாத்தியமே இல்லையே . இன்னுமொரு உதாரணம் - திரு ஞானசம்பந்தருக்கு 4 வயது கூட நிரம்பாமல் பல முதிர்ச்சி நிறைந்த பாடல்களை பாடியுள்ளாரே ! கலையின் பக்கமா என்று கேட்காதீர்கள் - ஒரு சின்ன சந்தேகம் அவ்வளவே !!:)
ரவி
சுமக்கும் பாடல்கள் மூலம் நல்ல தெலுங்குப் பாடல்கள் கிடைகின்றன. கங்கை கதை அருமை. முக்கயமாக நளதமயந்தி. அந்துலேனி கதா. (அவள் ஒரு தொடர்கதை...'ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்'. ) கலக்குங்கள்.
கல்நாயக்,
வயதுச் சண்டை வம்பு ஓயாதோ? கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குற மாதிரியும் தெரியுதே. நல்லா ஓய்வெடுத்து விட்டு வாங்க. பாகம் 3 ஐ ஓய்வெடுக்காமல் கொண்டு போனீங்க. அதனால இப்ப கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். தப்பில்லை. ஆனாலும் வீ ஆர் வெயிட்டிங்.
"பூப்பூப்பூ பூப்பூத்த சோலை பூப்பூப்பூ பூமாதுளை" பாடலுக்கு ஸ்பெஷல் நன்றிகள். வாவ்...என்ன பாட்டு அது! டேப் ரெகார்டரில் பதிவு செய்த சாமியாரின் 'விசிறி' கேசட்டை போட்டு தலையணை அருகில் இரவில் இந்த பாடலை எத்தனை முறை என்னுடைய இருபத்தொன்பதாவது வயதில் கேட்டிருப்பேன். இப்போது என்னுடைய வயது 53. இன்னும் கூட சில சமயம் அப்படிக் கேட்டு மகிழ ஆசை. ஆனால் டேப் ரெகார்டர் அவுட்.
என் உண்மையான வயதை சொல்லிபுட்டேன். ஆனா கல்லும், கலையும் கொல்லுதுங்க.:) இப்பவாவது உண்மை வருதா இல்லை கன்னித் தீவா தொடருதான்னு பார்க்கலாம்.:)
ராஜேஷ்ஜி!
குருஜி என்று இனி அழைக்கலாம்.:) பக்தி மணம் கமழ்கிறதே!
'திரையில் பக்தி' புதிய தொடருக்கு வாழ்த்துக்கள். நிறைய பாடல்கள் வருமே! இதிலும் அரிதானவற்றை எதிர்பார்க்கலாமா?
சி.க,
'நஸர் உத்தார்னேகேலியே' பழைய கவிதை என்றாலும் புதுக் கவிதை வகையை சார்ந்தது. நன்னாயிட்டு. உம்முடைய 'வியட்நாம் வீடு' பதிவு மனதை பிசைகிறது. ஒன்று இப்படி இம்சிக்கிறீர். இல்லை 'ஜம்'சிக்கிறீர்.:)
ரெண்டுமே டாப்தான்.
ராகவேந்திரன் சார்,
பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள். 'துள்ளி ஓடும் புள்ளி மான்' படமெல்லாம் திருமப்ப் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இப்போது அது தகர்ந்தது. வாழ்க ராஜ் வீடியோ விஷன். இது போல நடிகர் திலகத்தின் வெளிவராத படங்களைத் தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டால் கோடி புண்ணியம். முக்கியமாக அவள் யார், வளர் பிறை, நல்ல வீடு, செந்தாமரை, கண்கள், மனிதனும் மிருகமும் இன்னும் சில. நம்பிக்கையும் துளிர்விடுகிறது.
உண்மைதான் ராகவேந்திரன் சார். யானை வளர்த்த வானம்பாடி மகன் பண்ணின இந்த ஒரு கொடுமையால் புள்ளிமான் துள்ளியே மிரண்டு ஓடி விட்டது. ஆனால் லஷ்மியுடன் நடிக்கக் கிடைத்த அந்த ஒரு வாய்ப்பை அவர் தனக்காக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பது மட்டும் பாடலின் இறுதிக் காட்சியில் தெரிகிறது. :)
ஆனால் ஜேசுதாஸ் குரல் இனிமை. ஆனால் அவர் குரலில் ஒன்பது பாவம் இல்லை ஒரு பாவமும் வராது.:) (ஸ்டீரியோ டைப்) பாவம். நல்ல பாடகர். ஆனால் பாவம் வராத பாடகர். அது அவரது சுபாவம் போல.:) இருந்தாலும் அவரது பல பாடல்கள் சுகானுபவம்.
அரிய பாடல்களை நான் அளிக்கிறேன் என்கிறீர்கள். நீங்கள் மட்டும் என்னவாம்? மிக அரிய படத்தையும், பாடலையும் அளித்து தூள்பரத்தி விட்டீர்களே!
'நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி'..ரொம்ப ரசித்துப் பார்த்தேன். இனிமை அதிகம். அதுவும் பல்லவியில்.
நன்றி சார்.
//உம்முடைய 'வியட்நாம் வீடு' பதிவு மனதை பிசைகிறது. ஒன்று இப்படி இம்சிக்கிறீர். // ஓய் ஒம்ம அளவுக்கு ந.தி பத்தி எழுத வராதுங்காணும்.. நன்னா இருக்கா இல்லியா.. :)
கலை,
நன்றி! ஷார்ப் அண்ட் ஷார்க் இரண்டுக்கும் சொந்தக்காரரை, எதிரணி தலைவராய் இருந்தாலும் அவருடைய பிறந்த நாளில் அவரை மறக்காமல் நினைவு வைத்து அவர் இயற்றிய பாடல் அதுவும் மிக அரிதான, கூடவே எனக்கும் பிடித்த பாடலை அளித்தததின் மூலம் நிஜமாகவே அறிவில் பெரிய மனிதர் (தப்பிச்சுட்டேன்):) என்று நிரூபித்து விட்டீர்கள்.
அருமையான பாடலைத் தந்திருக்கிறீர்கள் கலை. நன்றிகள். ராதா அட்டகாசம். ஆனால் இந்தப் பாடலில் ஏனோ குள்ளமாய்த் தெரிவார்.
இன்னும் சிரிக்க வைத்தபடி யோசிக்க வைக்கும் சில வரிகள்.
கலக்கம் வருது எதனாலே
கலயம் பொங்குது அதனாலே
சொர்க்கம் தெரியுது எதனாலே
மயக்கம் வருது அதனாலே
கண்ணைக் கவருது எதனாலே
இவ கன்னிப் பெண்ணு அதனாலே
'கன்னிப் பொண்ணு ம்ம்ம்' (என்று இழுப்பார் 'ரகளை'ராகவன்)
கேலியான கேள்விகள் வினயமான பதில்கள் என்று வித்தியாசப் பாடல் அவருடைய தனி முத்திரையோடு.
இந்தப் படத்தில் இன்னொரு அருமையான பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. புகழ் பெற்ற பாடல் இல்லை. ஆனால் என் நெஞ்சில் நிலைத்து நின்று விட்ட பாடல்.
ராட்சஸி குழுவினருடன் பாடிய
அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு
நீ விளையாட பல்லவத்தில் மடி இருக்கு
தலை காக்க நரசிம்மன் துணையிருக்கு
கண்ணே கனியமுதே உன்னால் எந்தன் உயிர் இருக்கு.
ஐலேசா ஐலசா ஐலேசா
என்ன அழகான மீனவ சமூகப் பாடல்!
இதோ நீங்கள் கேட்ட பாடல்.
பாடல் 1.07இல் ஆரம்பிக்கும் கலை சார்.
https://youtu.be/1oBCKXlEio8
ரவி கோவிச்சுக்காதீங்க கோவிச்சுக்காதீங்க. கலையோடு டூ விட்டுட்டேன் அவரோட வயச பேசற விஷயத்தில. நிறுத்திட்டேன். அப்புறம் உங்க வயசைப் பத்தி பேசுனா கோபால் அண்ணாத்தை மட்டுமில்லை, சாதுவா இங்க இருக்கிற பலரும் சேதுவா மாறிடுவாங்க. அதனால இப்ப விட்டுடறேன். இந்தாங்க பிடிங்க இன்னொரு பூவின் பாடல்
பூவின் பாடல் 22: "பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி. பூவ பறிக்கவும் நேரமிருக்கா."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~
சரத்குமாரும், அழகான மீனாவும் ஆட சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைத்து பாடும் நிலாவும் பாட்டை நிறுத்தி மறைந்த நிலா சொர்ண லதாவும் பாடியிருக்கிறார்கள். நல்ல பாடல்தான். அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் டெம்போ ஏற்றிக் கொண்டு போயிருக்க வேண்டுமோ. என்னவோ தெரியவில்லை. பாடல் முடிந்தபின் சற்று ஏமாற்றமாக இருப்பது போல் ஒரு உணர்வு. மத்தபடி நீங்க கேட்காத பாட்டையா இங்க நான் போட்டுட்டேன், எனக்கு எதுவும் கூலி தர.
https://www.youtube.com/watch?v=sjyyloTpBes
//வாசு சார் 4 நாட்களுக்கு முன் , ‘மதுரகானம் திரி இளைப்பாறும் திரி. அங்கு சண்டை போட முடியாது. பாரபட்சம் காட்ட முடியாது’ என்று இன்னொரு திரியில் கூறியிருந்தார்//
கலை சார்,
நடிகர் திலகம் திரியை மற்ற சாதாரண திரிகள் போல 'இன்னொரு திரி' என்று தாங்கள் சாதரணமாக குறிப்பிட்டிருக்க வேண்டாம் என்பது தாழ்மையான கருத்து. 'நடிகர் திலகம் திரி' என்றே தாங்கள் குறிப்பிட்டிருக்கலாம். ஹப்பில் எப்போதும் கொடி கட்டிப் பறக்கும் முதன்மையான திரியை 'இன்னொரு திரி' என்று பொத்தம் பொதுவாக நீங்கள் அறியாமல் சொல்லியிருந்தால் கூட என் மனது என்னவோ அதை ஏற்க மறுக்கிறது அது தவறு இல்லை என்று தெரிந்த போதும் கூட.
தவறாக ஏதும் பட்டால் மன்னித்து விடுங்கள்.
என்ன சார் செய்வது? நாங்கள் தொழும் தெய்வம் ஆயிற்றே! அப்படியே பழகி விட்டேன்... இல்லை 'விட்டோம்'.
வாசு சார்,
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். உள்நோக்கத்தோடு சொல்லவில்லை. வேகமாக எழுத்து வேகத்தில் வந்து விட்டது. உங்கள் மனம் புண்படும்படி கூறியதற்கு மன்னிக்கவும். நடிகர் திலகம் திரி என்றே குறிப்பிட்டிருக்கலாம். இனி அப்படியே குறிப்பிடுகிறேன். மன்னிப்பு கோர வேண்டியது நான்தான். நீங்கள் அல்ல. மீண்டும் மன்னிக்கவும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ரவி,
கருவின் கருவில் உங்கள் புண்ணியத்தில் நல்ல ஆன்மீக கதைகளும், அருமையான தெலுங்கு, மலையாளப் பாடல்களும் கேட்டு தாயைப் பற்றி நிறையவே சிந்தித்து அதிகமாக புண்ணியம் செய்து கொள்கிறோம். நன்றி.
ராஜேஷ் ஜி,
மன்னிக்கவும் உங்கள் பக்திப் பாடல் தொடருக்கு என்னுடைய கருத்துக்களை உடனடியாக பதியாததற்கு. நிஜமாக பக்திப் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். நிச்சயமாக இவ்வளவு விவரங்களோடு என்னால் எழுதி இருக்க முடியாது. உங்களுக்கே தெரியும் தப்பும் தவறுமாய் நான் எழுதி, நீங்கள் திருத்தவோ வாசு கூடுதல் விவரம் தரவோ கேட்டுக் கொண்டிருந்திருப்பேன். இதெல்லாம் இல்லாமல் அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது நீங்கள் எழுதும் பக்தி தொடர். வாழ்த்துகள் மற்றும் நன்றியுடன்.
நிறைய எழுத வேண்டும் என ஆசை. ஆனால் நேரமின்மை, இந்த சிறிய பாராட்டு மற்றும் நன்றி அறிவித்தலோடு முடிக்க வைக்கிறது.
அவசரத்தில் நன்றி சொல்ல மறுந்து விட்டேன் வாசு சார். பாடலை தரவேற்றியதற் நன்றி. நானும் திரு.ராதா குள்ளமாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். சற்று முன்னோக்கி வளைந்ததால் இருக்குமோ?
கல்நாயக், டூ விட்டாலும விடுவீர்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். அப்படித்தானே?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலை சார்!
தங்கள் கண்ணியத்திற்கும், பெருந்தன்மைக்கும், உயர் குணத்திற்கும் மிக மிக நன்றிக் கடன் பட்டவனாகிறேன். பதிவுக்கான தங்கள் நன்றிக்கும் என் அன்பு பதில் நன்றிகள்.
ராகவேந்திரா அவர்களே,
நீங்கள் கொடுக்கும் அரிதான ஒவ்வொரு பாடலுக்கும் பெரிய நன்றி பதிவுகள் இடலாம். என்ன செய்வது கிடைக்கும் குறைந்த நேரத்தில் செய்ய முடியவில்லையே.
துள்ளி ஓடும் புள்ளிமான் திரைப்படம். நான் இப்படி ஒரு படத்தை கேட்டதாக கூட நினைவு இல்லை. எப்போது நேரம் கிடைக்கிறதோ கட்டாயம் பார்கிறேன். பாடல்களின் பதிவிற்கும் நன்றி.
அடுத்து மக்கள் கலைஞர் அவர்களின் பிறந்தநாளுக்கு கொடுத்த பாடல் என் மனதை மிகவும் கவர்ந்த பாடல் இதற்காக ஒரு தனித்துவமான நன்றி.
வாசு,
இப்படி நாங்கள் கேட்கும் விவரத்திற்கு பக்கெட் எடுத்து கொடுத்தும், எங்கள் சந்தேகங்களை தீர்த்தும், சில பிரச்சினைகளால் மன உளைச்சல் பட்டு எழுதியும், ... உமது நேரம் சரியாகப் போய் விடுகிறது. இவைகளுக்கெல்லாம் நேரம் ஒதுக்காமல் நீங்களாக பாடலின் விவரத்தை உங்கள் பாணியில் எடுத்துக் கொடுத்தால்... அம்மாடி. நினைத்துப் பார்க்கவே பிரமாதமாக உள்ளது. என்ன செய்வது சிலவற்றை இழந்தால்தான் சிலவற்றை பெறமுடிகிறது. சில தடங்கல்களும் நடந்து விடுகின்றன. என்ன செய்வது? விட்டுத் தள்ளுங்கள். தொடருங்கள் உங்கள் மதுர கானப் பணியை. ரசிப்பதற்கு காத்திருக்கிறோம்.
நமது நடிகர் திலகம் திரியிலும் நீங்கள் தொடர வேண்டும். இது எனது வேண்டுகோள்.
சி.க.
நேரமின்மை, உங்கள் பதிவுகளை படித்தாலும் விவாதிக்க முடியவில்லை. கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் நன்றி.
ராகவேந்திரன் சார்,
சரியாக ஜெய் அவர்களின் நினைவு தினத்தை ஞாபகம் வைத்து அவர் பாடலைத் திரியில் தந்தமைக்காக தங்களுக்கு மதுர கானங்கள் திரியின் சார்பாக
https://youtu.be/VXHH1TH3vwA
நன்றி கல்நாயக்.
உண்மைதான். நேரம் சரியாக இருக்கிறது. பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் வேறு முக்கியம். எல்லாவற்றுக்கும் பதிலும், நன்றியும் அளிக்க ஆசை இருந்தாலும் முடிவதில்லை. ஆனால் முடிந்த மட்டும் முக்கியமானவைகளுக்காகவாவது பின்னூட்டங்கள் தர வேண்டும். பதிவர்களுக்கும் உற்சாகம் பிறக்கும். நானும் என்னால் ஆனவரை கொடுக்க முயற்சிக்கிறேன்.
அடுத்த பாலா பதிவை ரெடி செய்ய மூன்று நாட்களாக முயல்கிறேன். முடியவில்லை. தாங்களும் நேரம் இல்லாமல் தவிப்பது நன்றாகப் புரிகிறது.
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வாசு சார், கல்நாயக் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.
ராஜேஷ் சார்,
பக்தி மணம் கமழும் பாடல்கள் மட்டுமின்றி, இதர மொழிகளிலும் அருமையான பாடல்களை அதுவும் அபூர்வமான பாடல்களைப் பகிர்ந்து கொண்டு இத்திரியின் மதுரத்தை இன்னமும் கமழ வைக்கிறீர்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அபூர்வ கானங்கள்
காஞ்சனா, மோகினி, முனி என டிவி. வழியாக நம் வீட்டுக் கதவுகளைப் பேய்கள் தட்டுகின்றன. டிரைலர் வழியாகவோ முழுப்படம் மூலமாகவோ நடக்கிறது.
ஆனால் இதெல்லாம் ஜூஜூபி.. நாங்களெல்லாம் அந்தக் காலத்திலேயே கதவைத் தட்டிப்புட்டோமே என இங்கே ஒரு குரல் வருகிறது பாருங்கள்..
ஆனால் இது இனிமையான குரல்.. இன்றைய வாழ்க்கையின் தத்துவத்தை அன்றே சொல்லிவிட்ட பாடல்.
சி.என். பாண்டுரங்கன் இசையில், வேம்பார் மணிவண்ணன் புண்ணியத்தில் ஏ.எம். ராஜாவின் குரலைக் கேட்போமா..
படம் - கதவைத் தட்டிய மோகினிப்ப பேய்.. வாழ்க்கை என்பது சீட்டாட்டம்.
https://www.youtube.com/watch?v=jrd2AUMKklM
அபூர்வ கானங்கள்
வாசு சார் கோபித்துக் கொள்ளாதீர்கள், முன் கூட்டியே போட்டு விட்டேனே என்று. தாங்கள் எழுதும் போது அதனுடைய சிறப்பே தனியாய்த் தெரியும். இன்று ஜெய் நினைவாக இடம் பெறுகிறது.
படம் - ராஜாவுக்கேத்த ராணி
இசை விஜய பாஸ்கரி
குரல்கள் - எஸ்.பி.பாலா, வாணி
அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு
https://www.youtube.com/watch?v=HB11Arzw6oI
அபூர்வ கானங்கள்
உண்மையிலேயே இதுவும் அபூர்வமான கானம் தான். இளைய திலகம் பிரபு அவர்களின் ஆரம்ப காலப் படம், நலந்தானா விலிருந்து மெய்மறந்து நம்மை சொக்க வைக்கும் இனிய பாடல்.. கல்யாண மாலை சூடி...
இந்தப் பாட்டெல்லாம் மீண்டும் காணவும் கேட்கவும் வாய்ப்பளிக்கும் நண்பர்களுக்கும் யூட்யூப் இணைய தளத்திற்கும் நன்றி.
https://www.youtube.com/watch?v=SVKQ8rBnOBs
நன்றி பல கல்நாயக் சார் . இப்படி மற்றவர்களுடைய பதிவுகளை தேடிக்கண்டுபிடித்து , இருக்கும் உங்கள் குறுகிய நேரத்திலும் பாராட்டுவதால் தான் உங்களை மிகவும் பெரியவர் என்று சொல்கிறோம் . இப்படிப்பட்ட நற்குணம் எங்களைப்போன்ற சிறியவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது - பாருங்களேன் - அழகான "பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி. பூவ பறிக்கவும் நேரமிருக்கா." என்ற பாடலை எனக்காக பதிவு செய்து உள்ளீர்கள் - பாராட்ட உடனே தோன்றுகிறதா எனக்கு - இல்லையே பெரியவர்கள் பெரியவர்கள் தான் - நாங்கள் நாங்கள் தான்
https://www.youtube.com/watch?v=4l4W6hFzWLs
இன்னும் பல நாட்களுக்கு உங்களுக்குள் ஒரு ஹேங்ஓவரை ஏற்படுத்தப் போகிற பாடல்...
வரிகள்.. ஜீவனுள்ள வரிகள்.
எப்போதாவது அத்தி பூத்தாற்போல காவியமாய் அமையக் கூடிய பாடல் வரிகள் இப்பாடலுக்குள் இடம் பெற்று, இப்பாடலின் இலக்கியத்தரத்தை எங்கோ இட்டுச் செல்லுகின்றன.
முதல் வரியே மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் பாடியுள்ளார் பாலா.
ஒரு பார்வை பார்க்கும் போது மனம் பாடும் நூறு பாட்டு..
மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு...
வாசு சார். இந்தப் பாடல் உங்களுக்காகவே... எஸ்.பி.பாலாவின் பழைய பாடல்களைப் பற்றித் தாங்கள் எழுதும் தொடரில் இப்பாடல் இடம் பெறும் போது..
இப்போதே சொல்லி வைக்கிறேன்.
தங்கள் பதிவே ஓர் காவியமாகி விடும்.
நங்கூரம் படத்திலிருந்து காமினி ஃபொன்சேகா, லக்ஷ்மி இணையில் காலத்தால் அழியாத காவியப் பாடல்..
மெல்லிசை மாமணி மற்றும் இலங்கை இசையமைப்பாளர் இணை இசையில்
ராஜேஷ் - இந்த பதிவு உங்களுக்கு ஒரு சிறு காணிக்கை -
மன்னிக்கவும் , சுருக்கமாக எழுத தெரியவில்லை . பொறுமையாக படிக்கவும் . கிருஷ்ணனை பலரும் பல விதமாக நிந்திப்பதை கேட்ருக்கிறேன் - அவன் நினைத்திருந்தால் , பாரத போரை நிறுத்தி இருக்கலாம் - பல அப்பாவிகளின் உயிர் தப்பி இருக்கும் . அவன் நினைத்திருந்தால் , தர்மரின் சூதாட்டத்தை நிறுத்தி இருக்க முடியும் - அவன் செய்ததெல்லாம் திருட்டுத்தனம் , பொய் , பித்தலாட்டம் என்று சொல்பவர்கள் அதிகம் - நம் தாயையே நம்மால் சிறப்பாக புரிந்துக்கொள்ள முடியவில்லை - கிருஷ்ணனையா புரிந்துகொள்ள போகிறோம் ? இருந்தாலும் இந்த பதிவை படிக்கும் போது இதுவரை புரியாத , தெரியாத பல உண்மைகள் கிருஷ்ணன் வாயில் இருந்தே நாம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் . இந்த பதிவு எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று கண்டிப்பாக நம்புகிறேன்.
கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை?
(கண்ணனின் அற்புத விளக்கம்)
***************************
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.
இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.
''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''
''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்..
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.
விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.
அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.
மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.
மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:
''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.
அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.
தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்த விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.
'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;
என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.
யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..
. துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.
''அருமையான விளக்கம்
கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.
''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''
புன்னகைத்தான் கண்ணன்
. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.
''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.
அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?.
அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது
மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று நீ
விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ..
.
என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ
காண்டீபம் நழுவவிட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
துணிந்து நில் தர்மம் வாழ
.
புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப்
புண்ணியம் கணணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக
இக்களமெலாம் சிவக்க வாழ்க...
.
பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே.
https://youtu.be/PaH4SszP2bY
ராகவேந்தர் சார்
உங்கள் அபூர்வ கானங்கள் ஒவ்வொன்றாய் கேட்டு வருகின்றேன்..
ஒரு பார்வை பார்க்கும் போது மனம் பாடும் நூறு பாட்டு..
மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு// கோடி வார்த்தைகளை சேர்த்து வைத்துக் கொண்ட வெள்ளம்..// நைஸ் இதுவரை கேட்டதில்லை லஷ்மி தெரிகிறது மற்றவர் (லோ பட்ஜெட் படமா..பாவம் லஷ்மி ப்ளவ்ஸ் கிழிஞ்சிருக்கு!)
கல்யாண மாலை சூடிபாட்டும் நன்றாக இருந்தது.. பாஸ்கர், கீர்த்திசுரேஷின் அம்மா(எனக்கு அப்படித்தான் தெரியும்) மேனகா..ம்ம்
கதவைத் தட்டிய மோகினிப் பேய் – போஸ்டர் பார்த்த நினைவு.. வாழ்க்கை ஒரு சீட்டாட்டம், அப்புறம் ஜெய் ஸ்ரீதேவி அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு கேட்டிருக்கிறேன்..
ஜெய்க்காக க் கொடுத்த உள்ளத்தின் கதவுகள் கண்களடா எனக்கு மிகவும் பிடிக்கும்..
ம்ம்
நானும் அடுத்த போஸ்ட்ல ஒரு ஜெய் பாட் போடறேன்.. ஆண்டவா “போட்டாச்’ சா இல்லாம இருக்கணுமே :) a.g kku nandri ragavendra sir :) (innum niraiya paat ketkanum)
ரவி அருமை அருமை. இது எனக்கு எதுக்கு காணிக்கை. எல்லாம் கண்ணனுக்கே....
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ... முத்துராமனின் பதட்டமும் என்.டி.ஆரின் அந்த கம்பீர தோற்றமும் விளக்கமும் அடேயப்பா
இன்றும் கர்ணன் போல் ஒரு திரைப்படம் எடுக்க யாருமிலலை நடிக்கவும் யாருமில்லை
நன்றி நன்றி நன்றி ...
//பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?.//
ரவி, உத்தவ கீதை – உத்தவரின் கேள்வி பதில்களை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றி ( நான் காதல்பற்றி போஸ்ட் எழுதிக்கிட்டிருக்கேன்..ம்ம் என் வயசு அப்படி)
பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரெளபதியின் அறச்சீற்றம் தான் நினைவுக்கு வருகிறது..
'நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் – என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை.புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின், -- என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்; -- புவி
தாங்குந் துருபதன் கன்னிநான். – நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், -- பின்பு
தார முடைமை அவர்க்குண்டோ!
ம்ம்
என் செய்கேன்?’ என்றே இரைந்தழுதாள். பாண்டவரை
மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்
பின் பின் பின் இறுதியில்..
பலவிதமாய்க் கண்ணனை அழைக்கிறாள்
‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!
காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செய்யுமூடா” -- என்று
மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,
செம்பவிர் குழலுடையான், -- அந்தத்
தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை
நாணழியா திங்குக் காத்தருள்வாய்.
‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.
பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்,
சரண் – கண்ணா நீயே கதி என்ற பிறகு தான் கண்ணன் வருகிறான்..
பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், -- தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே; -- அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ!
*
நீங்கள் சொன்ன பிறகு தான் –முன்பேபடித்திருந்தாலும்- இப்போது பாஞ்சாலி சபதத்தைப் படிக்கையில் – கண்ணன் மீது நம்பிக்கை என்பது கடைசியில் கொள்வதால் கடைசியில் வருகிறான் கண்ணன் என்பது
என்னைக் கொஞ்சம் இலக்கியம் படிக்க வைத்துவிட்டீரய்யா..!
*
உத்தவ கீதை சொன்னீர் – இங்கு
நித்தமும் ஒளியினைப் பெருக்க வந்தீர்..
நன்றி ரவி அகெய்ன்
என்னமோ போங்க - 19
*
என்னமோ வேற என்னவெல்லாமோ எழுதணும்னு நினச்சுருந்தேனா.. ரவியோட உத்தவகீதையைப் படிச்சுட்டு பாஞ்சாலி சபதமும் கொஞ்சம் படிச்சேனா.. என்னாச்சுன்னாக்க…
சிந்துப் பாட்டு எழுதணும்னு ஆசை வந்துடுச்சா.. புத்தகம் எடுத்துப் படிச்சு ரெஃபர் பண்ணி எழுதிப் பார்த்தேன்..
கலைநிலவாய்ப் பொலிந்தவளும் கனிந்து வந்திட – நிலை
கண்டவனும் நிலைகுலைய அழகும் நின்றதே
மலையனைய நெஞ்சகத்தில் காதல் பொங்கிட – அந்த
மன்னவனைப் பாவையெழில் மெல்லத் தின்றதே
சிலையதுவா சொர்ணத்தில் வார்த்த மேனியா – உளம்
சீர்படுத்தும் எனநினைத்தால் கொள்ளை கொள்ளுதே
உலையெனவே உணர்வினையே கொதிக்க வைத்தவள் – இவள்
உடையழகும் இடையழகும் மெல்லக் கிள்ளுதே..
*
சரியா ஓகேயா வந்துருக்கா
இதுக்குப் பொருத்தமா பாட்டுல்லாம் தேடலையே..ஏற்கெனவே எடுத்து லிரிக்ஸும் ஏற்கெனவே அடிச்சு வச்சுருந்தேனா..ஸோ போட்டுடலாமா..
என்னபண்றது சொல்லுங்க எந்தக்காலத்துலயும் இந்தக் காதல் இருக்கே, தொடரும் தொடரும் இது தொடர்கதை போலத் தொடரும்.. என்னமோ போங்க..
முதலில் பாடல் வரிகள்
*
அழகிய தென்னஞ்சோலை
அமைதி உலாவும் மாலை
இளையவன் ஒருவன் வந்தான் அங்கு
இயற்கையில் எதையோ கண்டான்
தொடரும் தொடரும் இது
தொடர்கதை போலத் தொடரும்
குளிர்ந்தது தென்றல் காற்று – இசை
கொடுத்தது தென்னங்கீற்று
எழுந்தது சலங்கையின் ஓசை
நெஞ்சை இழுத்தது ஏதோஆசை
ஆசையில் மலர்ந்தது நெஞ்சம்
அதில் அவசரம் இருந்தது கொஞ்சம்
ஓசை வரும் திசை பார்த்தான்
அங்கு ஒருத்தியின் கனிமொழி கேட்டான்
மரகதம் போல் அவள் மேனி – திரு
மஞ்சள் முகம் கொண்ட தேனி
அருகினிலே மெல்ல நடந்தாள் அவன்
அழகிய மார்பினில் விழுந்தாள்
தானே விழுந்ததனாலே அவன்
தழுவிக்கொண்டான் கைகளாலே
மானே கனி இதழாலே முத்தம்
வழங்கெனக் கேட்டான் மேலே
இப்படியும் ஒரு பெண்ணா அதில்
இத்தனை மொழி சொல்லும் கண்ணா
கைப்பிடியில் அவள் கிடந்தாள் இரு
கன்னங்களில் மழை பொழிந்தாள்
இரவினில் ரகசியம் கேட்டு ஓர்
இதயத்தில் இதயத்தைப் போட்டு
விடியும் வரை விளையாட்டு அன்று
முடியவில்லை அந்தப் பாட்டு
தொடரும் தொடரும் இது
தொடர்கதை போலத் தொடரும்
லலலாலலலா
*
https://youtu.be/UPYW9QwGE8E
இளமை தேவிகா, இளமை ஜெய்.. தெய்வீக உறவாம் படம் பேரு..
பின்ன வாரேன் :) (ஹோப் போட்டாச் இல்லை தானே :) )
There were some posts about filial bond.
Here is a song about motherly love, except that it is not by a son.
From Mangaiyar Thilakam (1955)
Nee varavilai enil aadharavedhu......
http://www.youtube.com/watch?v=r4H5gzfuBlo
From Bhabi ki chudiyan(1961), Hindi remake of Mangaiyar Thilakam
Tum se hi ghar ghar......
http://www.youtube.com/watch?v=v323AKmk5E0
I still remember Mangaiyar Thilakam after nearly 60 years. Sivaji Ganesan and Padmini act in the movie, but in different roles. Watch the movie if you like. I posted the Tamil song in a different thread a few months back.
Both songs are set to Darbari Kanada, one of my favorite ragas ! :)