Originally Posted by
mr_karthik
அன்புள்ள செல்வகுமார் சார்,
ஞான ஒளியில் அருண் ரோல் தங்களுக்குப் பிடித்திருப்பதற்கான காரணங்களை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பேத்தி ஜெயகௌசல்யாவின் பெயர், தன் மனைவியான 'ராணி'யின் பெயரே என்றறியும்போது அவர் முகத்தில் சட்டென்று எரியும் ஆயிரம் வாட்ஸ் பல்பு அமர்க்களம். அதுபோலவேதான், ஆப்பிள் பழங்கள் வேண்டாமென்று சொல்லி, தந்தை குடிக்கும் கூழையே தனக்கும் கேட்கும் மகள் சாரதாவுக்கு கூழ் ஊற்றிக்கொடுத்து விட்டு, அதை மகள் குடிக்கும் அழகைக் கண்டு பாசம் பொங்க ரசிப்பது...... நிஜ அப்பன் கெட்டான் போங்க.