-
7th October 2012, 12:47 PM
#1601
Senior Member
Veteran Hubber
மறுபடியும் என்னத்தே புதுசா சொல்லிடப்போகிறேன்....?.
திருப்பித்திருப்பி அதேதான்.
26.01.1982 இட்லர் உமாநாத்
05.02.1982 ஊருக்கு ஒரு பிள்ளை
06.02.1982 வா கண்ணா வா
25.02.1982 கருடா சௌக்கியமா
முப்பதே நாள் இடைவெளியில் நான்கு படங்கள்.
(மக்கள் கலைஞர் ஜெய்க்கு யாரோ 'வெள்ளிக்கிழமை Hero' பட்டத்தை தவறாகக் கொடுத்து விட்டனர்)
-
7th October 2012 12:47 PM
# ADS
Circuit advertisement
-
7th October 2012, 12:58 PM
#1602
Senior Member
Diamond Hubber
அன்பு ராகவேந்திரன் சார்,
'கருடா சௌக்கியமா?' மறு பதிவுக்கு மிக்க நன்றி சார்! .. தாங்கள் கூறியள்ளது போல ஒரு பாடாவதி பழைய போஸ்டரைக் கொண்டே இவர் படத்தை வெற்றிகரமாக ஓட்டும் துணிச்சல் சில பேருக்குத்தான் வரும். இன்றைய இளம் தலைமுறையினர் மனதிலும் நடிகர் திலகம் எப்படி ஊடுருவியிருக்கிறார் என்பதற்கு தாங்கள் பதிவிட்டுள்ள வீடியோவே சான்று. Strangers in the Night மூலம் நடிகர் திலகம், பத்மினி காம்பினஷனில் மி(ஒ)ளிரும் அருமையான வீடியோக் காட்சிக்கும் நன்றி!
-
7th October 2012, 01:00 PM
#1603
Senior Member
Diamond Hubber
அன்பு கார்த்திக் சார்,
எது ஒன்று என்றாலும் உடனே ஓடோடி வந்து சம்பந்தப்பட்டோருக்கு நிலைமைகளைப் புரிய வைக்கும் தங்களின் நட்புணர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றி! 'வெள்ளிக்கிழமை Hero' வேண்டாம் சார்... சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.
-
7th October 2012, 01:28 PM
#1604
Senior Member
Veteran Hubber
அன்புள்ள செல்வகுமார் சார்,
ஞான ஒளியில் அருண் ரோல் தங்களுக்குப் பிடித்திருப்பதற்கான காரணங்களை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பேத்தி ஜெயகௌசல்யாவின் பெயர், தன் மனைவியான 'ராணி'யின் பெயரே என்றறியும்போது அவர் முகத்தில் சட்டென்று எரியும் ஆயிரம் வாட்ஸ் பல்பு அமர்க்களம். அதுபோலவேதான், ஆப்பிள் பழங்கள் வேண்டாமென்று சொல்லி, தந்தை குடிக்கும் கூழையே தனக்கும் கேட்கும் மகள் சாரதாவுக்கு கூழ் ஊற்றிக்கொடுத்து விட்டு, அதை மகள் குடிக்கும் அழகைக் கண்டு பாசம் பொங்க ரசிப்பது...... நிஜ அப்பன் கெட்டான் போங்க.
ஆனால் தாங்கள் பிற்பகுதியில் வரும் அருணை மட்டுமே பார்க்க விரும்புவதாகக்கூறுவது உங்கள் விருப்பம். இருந்தாலும் 'மெஜஸ்டிக் அருணுக்கு' கொஞ்சமும் குறையாத 'முரட்டுப்பய அந்தோனி'யையும் சேர்த்துப்பார்த்தால்தான் எங்களுக்கு திருப்தி. (பாதிரியாராக வரும் கோகுல்நாத் 'மொரட்டுப்பயலே' என்று செல்லமாக அழைக்கும் அழகே தனி, கருடாவில் நடிகர்திலகம் 'முத்துகிருஷ்ணா' என்றழைப்பது போல).
முற்பாதியில்தானே முரட்டுப்பயலின் கள்ளமில்லாத அட்டகாச நடிப்பு, சட்டென மின்னல்போல தோன்றி நம் நெஞ்சங்களைக்கவரும் அந்த விஜயநிர்மலாவுடன் காதல் காட்சி, 'அம்மா கண்ணு சும்மா சொல்லு' என்ற அருமையான டூயட் (நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த கருப்புவெள்ளை டூயட்களில் ஒன்று), சுசீலாவின் கொஞ்சும் குரலில் 'மணமேடை மலர்களுடன் தீபம்' பாடல். ராணியின் மறைவைக்கேட்டு கன்னத்து தசை மட்டும் தனியே துடிக்கும் அற்புதம்..... இன்னும் பிற சிறப்பம்சங்களும் முற்பாதியில் உள்ளனவே.
மொத்தத்தில் சென்ஸார் சர்டிபிகேட்டில் துவங்கி 'நன்றி, மீண்டும் வருக' போர்டுவரை எந்தக்காட்சியும் சோடையல்ல, எம்.ஆர்.ஆர்.வாசு ஐ.எஸ்.ஆர் ஆகியோரின் தத்துபித்து காமெடி உள்பட.
ஞான ஒளியை வண்ணத்தில் காண வேண்டும் என்று நீங்கள் சொன்னதைப் படித்ததும் ஒரு பழைய நினைவு. இப்படம் வரும் முன்னர், பொம்மை மாத இதழில், வாழைத்தோப்பில் ஒரு கையில் அரிவாளூடன் மறுகையால் ஸ்ரீகாந்தின் கழுத்தை நடிகர்திலகம் ஆக்ரோஷத்துடன் வளைத்துப் பிடித்திருக்க, அரிவாள் பிடித்த கையை மேஜர் பிடித்து தடுத்திருக்க, பின்னால் அதிர்ச்சியுடன் சாரதா பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியை வண்ணப்பட ஸ்டில்லாக வெளியிட்டு விட்டனர். அதைப்பார்த்தது முதல் ஞான ஒளி வண்ணப்படம் என்றே நினைத்திருந்தேன். படம் வருவதற்கு சில நாட்கள் முன்புதான் மதி ஒளியில் இது கருப்பு வெள்ளைப்படம் என்று செய்தி வெளியிட்டு என் கலர்க்கனவைக் கலைத்தனர்.
-
7th October 2012, 02:54 PM
#1605
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
(தொடர்-8)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (8) P.K.சரஸ்வதி
'உலகம்' திரைப்படத்தில் P.K.சரஸ்வதி

'இன்ஸ்பெக்டர்' திரைப்படத்தில் P.K.சரஸ்வதி

'துளிவிஷம்' காவியத்தில் P.K.சரஸ்வதி

'துளிவிஷம்' காவியத்தில் நடிகர் திலகத்துடன் P.K.சரஸ்வதி

நடிகர் திலகத்தின் 'துளிவிஷம்' படத்தின் செகண்ட் ஹீரோயின். படத்தின் நாயகர் கே.ஆர். ராமசாமியைக் காதலிப்பார். கே. ஆர். ராமசாமிக்கு கிருஷ்ணகுமாரி ஜோடியாகி விட்டதால் ராமசாமியைப் பழிவாங்க கற்பக மன்னனாக, வில்லனாக வீறுநடை போடும் நடிகர் திலகத்தைக் காதலிப்பது போன்று பல காட்சிகளில் வருவதால் நடிகர் திலகத்தின் அபூர்வ ஜோடியாகிறார். நிஜமாகவே அழகான நடிகை. பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நடிகர் திலகத்திற்கும் சீனியர். "அறியாமல்...என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்" என்ற மிக மிக அற்புதமான டூயட் சாங் ஒன்று இருவருக்கும் உண்டு. சும்மா நம் தலைவர் இந்தப் பாடலில் 'கலக்கோ கலக்கு' என்று கலக்குவார். 'உத்தம புத்திரன்' விக்கிரமனுக்கு முன்னோடி இந்த கற்பக மன்னர். என்ன... சற்று மெலிந்த விக்கிரமன் என்று கூறலாம். விக்கிரமனின் வில்லத்தனங்களுக்கு உதாரண புருஷர் என்றும் கூறலாம். சரி! சப்ஜெக்ட் நடிகர் திலகத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டால் நிறுத்துவது அவ்வளவு ஈஸி அல்ல. நடிகர் திலகத்தின் நாயகியருக்கு வந்து விடுவோம்.
P.K.சரஸ்வதி 1947-இல் வெளிவந்த 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', 1953-இல் வெளிவந்த 'ஜூபீடரின் 'இன்ஸ்பெக்டர்' மற்றும் 'உலகம்', எம்ஜியார் அவர்களுடன் 'நாம்', 'அந்தமான் கைதி' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகத்துடன் ஒரே ஒரு காவியத்தில் இணைந்த (கதைப்படி இல்லாவிட்டாலும் காட்சிப்படி அமைந்த) மிக அபூர்வ ஜோடியாய் நடிகர் திலகத்தின் நாயகியர் வரிசையில் சேரும் அதிர்ஷ்டம் பெற்று, மந்தகாசப் புன்னகை புரிந்து வெற்றி பெருமிதம் கொள்கிறார்.
இனி மேற்குறிப்பிட்ட, நடிகர் திலகத்திற்கும், P.K.சரஸ்வதிக்கும் அமைந்த, 'துளிவிஷம்' காவியத்தின் மிக மிக அரிய, அற்புத டூயட் பாடலான "அறியாமல்...என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்" முதன் முதலாக இணையத்தில் தரவேற்றப்பட்டு நம் எல்லோருக்காகவும்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 7th October 2012 at 03:11 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
7th October 2012, 06:14 PM
#1606
Junior Member
Seasoned Hubber
Dear Vasu Sir
Really sorry sir I read it some months ago , You don't need any introduction sir
Urself, Ragavendran, Pammalar sirs are Thrisoolam , I said it before.
Already I mis mentioned the names once , thats why sir,
Really sorry Vasu Sir .
Hereafter I will search & acknowlege the efforts of fellow hubbers
-
7th October 2012, 06:16 PM
#1607
Junior Member
Seasoned Hubber
Dear Ragavendran sir and Karthik sir
Iam sorry sir really sir. Thanks for your concern , . Seniors have right to correct me sir. Often I get confused with names sorry sir really
-
7th October 2012, 07:06 PM
#1608
Senior Member
Diamond Hubber
அன்பு கார்த்திக் சார்,
'ஞானஒளி' பற்றி ஒரு குறு ஆய்வு நடத்தி என்னை பரபரப்பாக்கி விட்டீர்கள். கொஞ்சமே என்றாலும் சுழன்று சுழன்று சூறாவளியாய் சுற்றி நினைவுகளை விட்டு தங்கள் நடை நீங்க மறுக்கிறது. அற்புதமான நினைவூட்டலுக்கு இதயபூர்வமான நன்றிகள்.
அந்த கேரக்டரே தனி சார். எதுவும் நெருங்க முடியாது. பல பரிமாணங்களை ஒரே கேரக்டரில் அவர் வெளுத்துக் கட்டியது ஒளியில்தான். முதலில் மாதா கோவிலில் மணி அடிக்கும் ஒரு சாதாரண வேலையாள், பாதிரியார் மேல் பயங்கரப் (!) பற்று வைத்திருக்கும் ஒரு முரட்டு வெகுளி விசுவாசி , அடுத்து காதல் என்றாலே என்னவென்று தெரியாமல் காதலிக்கும் முரட்டுக் காதலன், பின் நேசமான கணவனாக பிரமோஷன், ஒன்டிகட்டையாக இருந்து குடும்பப் பொறுப்பேற்கும் குடும்பத்தலைவன், பிரசவத்தில் மனைவியை இழந்து மறுபடி அனாதையாகும் அவலக்காரன், அடுத்து மகளுக்குத் தந்தையாக மட்டுமல்லாது தாயாகவும் இருந்து பாதுகாக்கும் தாயுமானவன், பிள்ளை படித்து பெரிய ஆளாக வரவேண்டும், பாதிரியாரின் ஆசைகளை மகள் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்ற தீராத லட்சியம் கொண்ட ஒரு லட்சியவாதி, சின்ன வயது சிநேகிதனின் ஆத்மார்த்த நண்பன், மகள் சோரம் போனாள் என்று துடித்துத் துவளும் துர்பாக்கியத் தந்தை, பின் சாந்தமடைந்து மகளின் வாழ்வே பெரிது என மகளை பாழ்படுத்தியவனை கண்டுபிடித்து வாழ்வு வேண்டும் வைராக்கியன், அது நடக்காமல் போனதால் ஒரே ஒரு அடியில் கொலைகாரன் பட்டம் சுமக்கும் கொலையாளி, தண்டனை அனுபவிக்கும் ஜெயில் தண்டனைக் கைதி, சிறையிலேயே அச்சுக் கோர்க்கும் தொழிலாளி, பரோலில் பாதிரியாரின் சாவிற்கு வெளியே வந்து அவர் எண்ணங்களை நிறைவேற்ற தப்பியோடும் குற்றவாளி, பின் ஆர்ப்பாட்டமாய் தன் சொந்த கிராமத்துக்கே யாருக்கும் அடையாளம் தெரியாமால் (ஒருவரைத் தவிர) திரும்பும் கோடீஸ்வர படாடோப அருண், தனக்கு தன் மனைவி பெயரிலேயே ஒரு பேத்தி இருக்கிறாள் என்று உள்ளுக்குள் பூரித்துப் போகும் தாத்தா, பாதிரியாரின் கனவுகளை நிறைவேற்றும் கடமை வீரன், கழுகின் பார்வையில் சிக்கித் தவித்து கழுவும் மீனில் நழுவும் மீனாக இன்ஸ்பெக்டர் நண்பனிடம் மாட்டாத அதிபுத்திசாலி விலாங்கு மீன், தான் யாரென்று காட்டிக கொள்ள முடியாமல் மகளின் துன்பங்களை நினைத்து நினைத்து துயர் கொள்ளும் துரதிர்ஷ்டசாலி, தன் மகள் எல்லோரது முன்னாலும் இன்ஸ்பெக்டர் நண்பனால் அவமானப்படும் போது கொதித்தெழும் கோப சிங்கம், பின் தெளிவடைந்து மீண்டும் தவறுகள் செய்யக் கூடாது என உணரும் உத்தமசீலன் என்று...
ஒரே கேரக்டரில் பல்வேறு முகங்களையும், உணர்வுகளையும் பிரதிபலித்தனால் அருண் என்ற ஆண்டனிதான் 306-லும் எனக்கு நெம்பர் ஒன்.
Last edited by vasudevan31355; 7th October 2012 at 09:03 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
8th October 2012, 01:17 AM
#1609
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள செல்வகுமார் சார்,
ஞான ஒளியில் அருண் ரோல் தங்களுக்குப் பிடித்திருப்பதற்கான காரணங்களை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பேத்தி ஜெயகௌசல்யாவின் பெயர், தன் மனைவியான 'ராணி'யின் பெயரே என்றறியும்போது அவர் முகத்தில் சட்டென்று எரியும் ஆயிரம் வாட்ஸ் பல்பு அமர்க்களம். அதுபோலவேதான், ஆப்பிள் பழங்கள் வேண்டாமென்று சொல்லி, தந்தை குடிக்கும் கூழையே தனக்கும் கேட்கும் மகள் சாரதாவுக்கு கூழ் ஊற்றிக்கொடுத்து விட்டு, அதை மகள் குடிக்கும் அழகைக் கண்டு பாசம் பொங்க ரசிப்பது...... நிஜ அப்பன் கெட்டான் போங்க.
loved many scenes. He had immense care while playing this character. I know it sounds clichéd but we can't describe this performance in words. His reactions whenever he sees her daughter as Arun. Antha "Perumitham" + Paasam..
Loved his style and the way "he looks at others" (esp Major) through the goggles. Amazing 
ஆனால் தாங்கள் பிற்பகுதியில் வரும் அருணை மட்டுமே பார்க்க விரும்புவதாகக்கூறுவது உங்கள் விருப்பம். இருந்தாலும் 'மெஜஸ்டிக் அருணுக்கு' கொஞ்சமும் குறையாத 'முரட்டுப்பய அந்தோனி'யையும் சேர்த்துப்பார்த்தால்தான் எங்களுக்கு திருப்தி. (பாதிரியாராக வரும் கோகுல்நாத் 'மொரட்டுப்பயலே' என்று செல்லமாக அழைக்கும் அழகே தனி, கருடாவில் நடிகர்திலகம் 'முத்துகிருஷ்ணா' என்றழைப்பது போல).
முற்பாதியில்தானே முரட்டுப்பயலின் கள்ளமில்லாத அட்டகாச நடிப்பு, சட்டென மின்னல்போல தோன்றி நம் நெஞ்சங்களைக்கவரும் அந்த விஜயநிர்மலாவுடன் காதல் காட்சி, 'அம்மா கண்ணு சும்மா சொல்லு' என்ற அருமையான டூயட் (நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த கருப்புவெள்ளை டூயட்களில் ஒன்று), சுசீலாவின் கொஞ்சும் குரலில் 'மணமேடை மலர்களுடன் தீபம்' பாடல். ராணியின் மறைவைக்கேட்டு கன்னத்து தசை மட்டும் தனியே துடிக்கும் அற்புதம்..... இன்னும் பிற சிறப்பம்சங்களும் முற்பாதியில் உள்ளனவே.
I loved his performance as Antony too and his left hand mannerisms. But in this age of stylish performances with suites and goggles, I could relate more and love his performance as "Arun" more anything else. Just a personal favorite
that I selected to watch it repeatedly. Also due to fact that the role is multi-dimensional for the story.
மொத்தத்தில் சென்ஸார் சர்டிபிகேட்டில் துவங்கி 'நன்றி, மீண்டும் வருக' போர்டுவரை எந்தக்காட்சியும் சோடையல்ல, எம்.ஆர்.ஆர்.வாசு ஐ.எஸ்.ஆர் ஆகியோரின் தத்துபித்து காமெடி உள்பட.
Agree and I didn't find any scene as boring or lacking the speed. It is just that "heroism" starts from "Arun". Just that we all feel happy when we see the uneducated Antony returning as Rich Arun.
ஞான ஒளியை வண்ணத்தில் காண வேண்டும் என்று நீங்கள் சொன்னதைப் படித்ததும் ஒரு பழைய நினைவு. இப்படம் வரும் முன்னர், பொம்மை மாத இதழில், வாழைத்தோப்பில் ஒரு கையில் அரிவாளூடன் மறுகையால் ஸ்ரீகாந்தின் கழுத்தை நடிகர்திலகம் ஆக்ரோஷத்துடன் வளைத்துப் பிடித்திருக்க, அரிவாள் பிடித்த கையை மேஜர் பிடித்து தடுத்திருக்க, பின்னால் அதிர்ச்சியுடன் சாரதா பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியை வண்ணப்பட ஸ்டில்லாக வெளியிட்டு விட்டனர். அதைப்பார்த்தது முதல் ஞான ஒளி வண்ணப்படம் என்றே நினைத்திருந்தேன். படம் வருவதற்கு சில நாட்கள் முன்புதான் மதி ஒளியில் இது கருப்பு வெள்ளைப்படம் என்று செய்தி வெளியிட்டு என் கலர்க்கனவைக் கலைத்தனர்.
oh! It would have been awesome. Sema rich ah vanthirukkum with church, Arun's bungalow etc. It would be great if they can release this in colour.
Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
RE: Aennn.. Puli tholu..
Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy
-
8th October 2012, 07:55 AM
#1610
Junior Member
Junior Hubber
Sathyam
Here is the link to watch Sathyam (1976) on line.
http://www.tamilflix.net/2012/10/sat...ch-online.html
Jeev
Bookmarks