Krishnaji, How come you are thorough with lousy,mediocre 1970s and so ignorant on Great 1960s?
Printable View
Krishnaji, How come you are thorough with lousy,mediocre 1970s and so ignorant on Great 1960s?
ஜம்புகேசன் என்ற ஜம்பு (சுமதி என் சுந்தரி தேங்காயின் உதவியாளர் ஆக வருவார்,கலாட்ட கல்யாணம் சென்சஸ் அதிகாரி ) . இவர் நடிகை இலவரிசியின் தந்தை என்று நினைவு. இவர் போட்டோ கூட குமுதம் பத்திரிகையில் பார்த்த நினைவு
ராஜா படத்தில் முருகேச ஓதுவார் (சந்திரபாபு)இடம் குமரேச ஓதுவார் பற்றி விசாரிக்க ஒருவர வருவார்
தலை ஒரு மாதிரி மஞ்சள் மற்றும் சிகப்பு கலரில் இருக்கும் .இவர் தியாகம் படத்தில் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ' பாடலில்
பாலாஜி படத்தில் எல்லாம் பார்க்கலாம் .
அதே போல் மன்மத லீலை படத்தில் கமலுக்கு கவுன்சிலிங் செல்லும் டாக்டர் ஒருவர் அவரும் தியாகம் படத்தில் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ' பாடலில் வருவார் இருவரும் போட் சிப்பந்திகள் ஆக வருவார் [/quote]
எல்லாம் பின்னால் வருது சார்.
மன்னிக்கணும் கோபால் சார்
1960 கூட எழுதலாம் .
ஜாம்பவான்கள் எல்லாம் 1960 எழுதும் போது நான் அடியார் (பாருங்க போர்ட்டர் பொன்னுசாமி டைரக்டர் ) கொஞ்சும் 1970 எழுதலாம்னு எழுதறேன் . 1960 இலும் என்னுடைய contribution நிச்சயம் உண்டு
சார் . நீங்கள் இவ்வளுவு தூரம் சொல்லும் போது
கொஞ்சும் ஹோம் வொர்க் செய்து எழுதறேன் ப்ளீஸ்
thanks vasu sirQuote:
எல்லாம் பின்னால் வருது சார்.
இன்றைய ஸ்பெஷல் (28)
http://www.inbaminge.com/t/u/Unarchigal/folder.jpg
'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் இதுவரை நான் எழுதிய பாடல்களில் என்னை மிக மிக disturb செய்த பாடல் இதுதான். இந்தப் பாடலின் வரிகளை டைப் செய்ய என்னால் இயலவில்லை. என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் துளித்தது. இந்தப் பாடலின் வரிகளை பிழையில்லாமல் தர வேண்டும் என்று பலமுறை இந்தப் பாடலைப் பார்த்து, கேட்டு படத்தின் தலைப்பைப் போலவே மிகுந்த 'உணர்ச்சி' வசப்பட்டு விட்டேன் இப்பாடலின் இனிமையால்.
யாருமே கண்டு கொள்ளாத பொக்கிஷப் பாடல். இதயத்தையே கூறாக, துண்டு துண்டாகப் பிளந்து போட்டாலும் ஒவ்வொரு துண்டிலும் எதிரொலிக்கும் இந்தப் பாடலின் தாக்கத்தை அழிக்கவே முடியாது.
இப்படியெல்லாம் டியூன் போட முடியுமா என்று நான் இன்று வரை வியந்து வியந்து வாய் பிளக்கும் பாடல். அதே போல் இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் அப்படியே பாறாங்கல்லைத் தூக்கி இதயத்தின் மீது வைத்தாற் போன்று ஒரு கன உணர்வு ஏன் என்னுள் ஏற்படுகிறது என்றே எனக்குப் புரியாது. கண்களில் அருவியாய் நீர் கொட்டும்.
இந்தப் பாடலுக்குதான் என்ன மகத்துவம்! என்ன சக்தி! என்ன ஒரு ஈர்ப்பு சக்தி!
இரு இள மனங்களின் சங்கமம். இரு இணைந்த உள்ளங்களின் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. இதில் என்ன ஆச்சர்யம்! சகஜம் தானே! ஆம்! சகஜம்தான். ஆனால் இங்கு கதையே வேறு.
அவளோ ஒரு விதவை. அவனோ அவள் வீட்டில் வேலை செய்யும் ஒரு சாதாரண வேலைக்காரன். அழகான அப்பாவி இளைஞன். விதவையின் அண்ணனோ பழைய பஞ்சாங்க பணக்காரன். யார் சொல்லியும் தன் தங்கைக்கு மறுமணம் செய்து வைக்க அவன் தயாரில்லை.
இளம் விதவையான அவள் தனிமைத் தீயில் வேகிறாள். விரகத் தீ வாட்ட வாடுகிறாள். வதங்குகிறாள். வேலைக்கார இளைஞனுடன் யதார்த்தமாகப் பழகுகிறாள். அவனுக்கு படிப்பு சொல்லித் தருகிறாள். அவனிடம் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்கிறாள்.
விதி இவர்களை ஒரு நாள் தனிமையில் இருக்க வைத்து விளையாடுகிறது. தெருக்கூத்து பார்க்க அவள் அண்ணனும், அண்ணியும் சென்று விட, அந்த இரவு நேரத்தில் பஞ்சாக அந்த இளம் கைம்பெண்ணும், நெருப்பாக அந்த வேலைக்கார இளைஞனும். பரண் மீது ஏறி பழைய பேப்பர்களை அடுக்குகிறாள். அந்த வாலிபனும் அவளுக்கு உதவி செய்கிறான். அவளை பரணிலிருந்து கைகொடுத்து இறக்குகிறான். பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்கிறது. இன்ப சுகங்களை கண்டே அறியாத அந்த இளம் கைம்பெண்ணும், வாலிப உணர்ச்சிகளின் உந்துதலில் இருக்கும் அந்த இளைஞனும் ஸ்பரிச உணர்ச்சிகளில் நிலை மறக்க, ஒரு வினாடியில் எல்லாம் பாழ் பட்டுப் போகிறது.
இது இந்தப் பாடலுக்கு முன்னால் வரும் சிச்சுவேஷன். அடுத்த நாள் அந்த மங்கை முன்தினம் நடந்த அந்த உணர்ச்சி பொங்கிய இரவை மறக்க முடியாமல் அவனுடன் கற்பனையில் உணர்ச்சிப் பெருக்கெடுத்து பாடுகிறாள். அந்தப் பாடல்தான் இன்றைய ஸ்பெஷலாக அமைந்து இந்த தொடருக்கே மணிமகுடப் பாடலாக அமைகிறது.
அந்த வேலைக்கார வாலிபன் காதல் இளவரசன் கமல். கைம்பெண் கவர்ச்சிப் பாவை எல்.காஞ்சனா, அண்ணன் எஸ்.வி.ராமதாஸ். அண்ணி சந்திரகாந்தா
http://i1.ytimg.com/vi/0yaOJzkCEUo/hqdefault.jpg
அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம். புதுமை இயக்குனர் ஆர்.சி.சக்தியும், கமலும் இணைந்து தந்த (கமல் இந்தப் படத்தின் உதவி இயக்குனர்) உணர்ச்சிமிகு காவியம். பத்திரிகைகள் பாராட்டிய படமும் கூட. மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம். ஸ்ரீவித்யா விலைமாதாக நடித்திருந்தார். ஒரு விபச்சார ரெய்டில் ஓட்டலில் வேலை செய்யும் கமல் ஸ்ரீவித்யாவை போலீசிடம் சிக்க விடாமல் காப்பாற்றுவார் கமல். நன்றிக் கடனாக அனாதையான கமலை தம்பி போல் பாவித்து நடத்துவார் ஸ்ரீவித்யா. ஆனால் இளமை உணர்ச்சிகளின் வேகத்தில் ஸ்ரீவித்யா மேலேயே கைவைப்பார் கமல். அப்போது கமலிடம் வித்யா கோபமாக 'எட்றா கையை... கையை எடுடா" என்பார். அப்போது இந்த வசனம் மிகப் புகழ் பெற்றது.
பின் கமல் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு தகாத உறவுகளால் வி.டி (venereal diseases) என்னும் பால்வினை நோய்க்கு ஆளாகி இறுதியில் இறந்து விடுவார்.
நல்ல படம். ஆனால் ஆபாச முத்திரை குத்தப்பட்டது. 'அடல்ட்ஸ் ஒன்லி' சர்டிபிகேட் பெற்ற படம் இது.
இசையமைப்பாளர் ஷியாமுக்கு இந்த பாட்டு ஒன்று போதும். மனிதர் நம் இதயங்களை உணர்ச்சிபூர்வமாக்கி விளையாடுவார். (ஷியாமின் பெரும்பான்மையான பாடல்கள் நெஞ்சத்தின் அடித்தளத்தில் ஊடுருவி நம்மை இனம் புரியா கலவரத்தில் மூழ்க வைத்து விடும். 'மழை தருமோ என் மேகம்' போல.) ஜானகி ஒழுங்காகப் பாடிய சில பாடல்களில் தலையாய பாடல் இது. எஸ்.பி.பி இந்தப் பாடலில் சிகரங்களின் உச்சிகளைத் தொடுவார்.
பட்டுக் கோட்டை தண்டபாணியின் வரிகளில் தமிழ் கொஞ்சி விளையாடும். இரு மனங்களின் உணர்வுகளை அவர் வார்த்தைகளில் வடித்திருக்கும் அழகே அழகு. மிக மிக அற்புதமான, பாடலின் காட்சியமைப்பிற்கு ஏற்ற வைர வரிகள். இவரும் மிகவும் போற்றப்பட வேண்டிய கவிஞரே!
படம்: உணர்ச்சிகள்
நடிகர்கள்: கமலஹாசன், ஸ்ரீவித்யா, எல்.காஞ்சனா, மேஜர், ராமதாஸ்.
பாடல் இயற்றியவர்.: பட்டுக்கோட்டை தண்டாயுத பாணி
இசை: ஷியாம்.
இயக்கம்: ஆர்.சி.சக்தி
http://s2.dmcdn.net/akek.jpg
ஹே ஹே லலல்லா ஹே ஹே லலல்லா
லலல்லலல்லா ஹா ஹா லலல்லலல்லா ஹே ஹே
லலல்லலல்லா ஹா ஹா லலல்லலல்லா ஹே ஹே
லலல்லலல்லா ஹா ஹா லலல்லலல்லா ஹே ஹே
லல்லல் லல்லல் லல்லலல்லல்
லல்லல் லல்லல் லல்லலல்லல்
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீசி
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்.
வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
தாபத்தை நானே சொல்லவோ
நெஞ்சத்தில் ம் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்.
வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
தாபத்தை நானே சொல்லவோ
கைமையின் தீயில் விழுந்திட்ட பூவும்
காளை என் மார்பில் குடியேறலாமோ
கனிவோடு காதல் கைதொட்ட வேளை
கல்யாண மேடை அலங்கரிக்காதோ
இதயத்தின் பாரம் இறங்கிடும் நேரம்
இருமனம் கூடும் உணர்ச்சியில் ஆடும்
வரும் வெள்ளமும் இளம் உள்ளமும்
ஒரே வேகமாய் ஓடாதோ
அதன் சங்கமம் பெரும் மங்கலம்
உயிர் கீதமாய் பாடாதோ
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசி பெண்மை ஒளி வீசி
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்.
வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
http://www.youtube.com/watch?feature...&v=j_apwVK2TDk
வாசு,
அது என்ன ஒவ்வொரு முறையும் தற்பெருமை?யாராலும் கண்டு கொள்ள படாத என்று?நானே மூன்று முறை குறித்துள்ளேன் இதே திரியில். கோபாலால் மட்டுமே கண்டு கொள்ள பட்டது என்றாவது எழுது.
[QUOTE=vasudevan31355;1147511]இன்றைய ஸ்பெஷல் (28)
அன்பு வாசு சார்
உணர்ச்சிகள் 1976 கால கட்டத்தில் வெளி வந்த நியூ wave movie
அப்ப puc சேர்ந்து இருந்தோம். இந்த படமும் (நெல்லை ரத்னாவில்) பார்த்து விட்டு இந்த பாடலை கேட்டு விட்டு எல்லோரும் hostel (st சேவியர் காலேஜ்) க்கு வந்து சேர்ந்து நான் dayscholar தான் ஆனாலும் நண்பர்கள் கூட சேர்ந்து சுற்றுவதால் இரவு படுக்கை மற்றும் காலை குளியல் (தாமிரபரணி) இரண்டும் தான் வீட்டில் மற்ற நேரம் எல்லாம் hostel தான். எப்படியாவது இந்த பாடலை மீண்டும் அடிகடி கேட்க வேண்டுமே என்ன செய்வது என்று எங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் இந்த பாடலின் மீது விருப்பம் ஏற்பட்டு tape ரெகார்டர் வந்த பொழுது கேசட் ரெகார்ட் செய்ய என்ன செய்வது என்று விவாதித்து இறுதியில் கரமனை (திருவனந்த புறம் அருகில்) மாணவர் ஒருவர் எப்படியாவது அவர் நண்பர் ஒருவர் மூலமாக ரெகார்ட் செய்து இதன் மலையாள version கிடைத்து அதை கேட்டு மகிழ்ந்தது
இந்த கால கட்டத்தில் ராசலீலை (மலையாள dubbing ) என்று ஒரு படம் கமல் ஜெயசுத நடித்து வெளிவந்த நினவு .அதுவும் இதுவும் ஒரே கதை
அதுவும் நெல்லை ஸ்ரீரத்னவில் வெளியானது .அது போன்று "தாகம் " என்று ஒரு படம் முத்துராமன் நந்திதா போஸ் நடித்து பாபு நந்தன்கோடு இயக்கியது அதுவும் இது போன்ற ஒரு படம்
நினைவலைகள்
16 வயதிலே கலைமணியின் வசனம்
'எதிர்காலம் கேள்விகுரியானாலும் கடந்த காலம் இனிமையான ராகமாலிகை அதற்கு மெருகு கூட்டிய
நெல்லை திரை அரங்குகள் அவ்வபோது சென்ற சுற்று வட்டார டுரிங் திரை அரங்குகள் ஆண்டு இறுதி விடுமுறையில் சென்ற மதுரை திருச்சி பண்டிசரி சென்னை திரை அரங்குகள் '
உணர்ச்சிகள் தொகுப்பு அருமை..
உணர்ச்சிகளில் நடித்த லலிதா ஸ்ரீ’யின் பேட்டி இதோ
https://www.youtube.com/watch?v=f2zBPAlRsNw