செந்திவேல்,
நன்றி!
'சவாலே சமாளி' முழுப் பதிவையும் ஒரு தடவை முழு மூச்சுடன் ரசித்துப் படித்து விட்டேன். அருமை! அருமை! உங்கள் உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அப்படியே ஆதவன் சாருக்கும்.
Printable View
செந்திவேல்,
நன்றி!
'சவாலே சமாளி' முழுப் பதிவையும் ஒரு தடவை முழு மூச்சுடன் ரசித்துப் படித்து விட்டேன். அருமை! அருமை! உங்கள் உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அப்படியே ஆதவன் சாருக்கும்.
https://external.fmaa1-2.fna.fbcdn.n...7_2623277f.jpg
courtesy: The Hindu at : http://www.thehindu.com/news/cities/...cle7885663.eceQuote:
"Chief Minister Jayalalithaa on Monday met the newly-elected office bearers of Nadigar Sangam – actors Nasser, Vishal, Karthi, Ponvannan and Karunas.
“The meeting lasted for around 10 minutes. She wished us well and said that she had confidence that the Nadigar Sangam will once again function like how it used to be when Sivaji Ganesan was at the helm of affairs. It was a great day for us,” said Nasser, actor and president of the Nadigar Sangam.
He said that Ms. Jayalalithaa told them not to hesitate to ask for any help, if needed. “We just wanted to take her wishes and decided not to request for any help. But we were pleasantly surprised when she told us this,” he said.
When actor Vishal requested her to lay the foundation stone for the new building that is being planned in the 19-ground Nadigar Sangam property, the Chief Minister had reportedly told them to keep her informed in advance.
Actor Nasser said that the Nadigar Sangam was now working on a project to update and digitise the database."
THANK YOU SO MUCH MADAM for not forgetting the yeoman service rendered by Nadigar Thilagam and his team to the South Indian Cine Artists Association and mentioning it at the appropriate time.
தினமலர், தினத்தந்தி ஆன்லைன் பதிப்புகளில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் அவர்கள் நடிகர் திலகத்தின் பொற்கால நிர்வாகத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று சொன்னதை இருட்டடிப்பு செய்துள்ளன. தினத்தந்தி அச்சுப் பதிப்பிலும் ஹிந்து நாளிதழின் பதிப்புகளிலும் நடிகர் திலகத்தைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.
எந்த அளவிற்கு ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில் தங்கள் நிலைப்பாடுகளை அமைத்துக்கொள்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.
வாசு சார்
டாக்டரம்மா நிழற்படத்தில் கட்டபொம்மன் போஸ்டரைக் கண்டு பிடித்து அதை இங்கே பதிவு செய்ததன் மூலம் நடிகர் திலகத்தைப் பற்றி எந்த விஷயமானாலும் தங்களிடமிருந்து தப்பாது என நிரூபித்து விட்டீர்கள்.
அதில் உள்ள வாசகங்கள் கூட ஏதோ குறிப்பிடுவது போல உள்ளது. முடிந்தால் அதைப் படிக்க முடியுமா பாருங்கள்.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
சிவா.Quote:
சிவாஜி ரசிகர்கள் எல்லோரும் விடயத்தை வாசித்துவிட்டு அடுத்தவேலையை கவனிக்க போய்விடுகின்றோம்.
அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நியாயத்தை கேட்பதில்லை.
எனவே தொடர்ந்து அவர்கள் அதனையே செய்கின்றார்கள்.
தங்கள் ஆதங்கம் நியாயமானதே. ஆனால் நடைமுறை என்பது வேறு. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். Predetermined notion என்பது போல, முன்கூட்டியே அவர்கள் நடிகர் திலகம் பற்றிய செய்தி என்றால் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற நிலைப்பாடு கொண்டிருந்தால், அந்த அடிப்படையிலேயே செய்திகளை வெளியிடுவது என தீர்மானம் செய்து வைத்திருந்தால், அதை மாற்றுவது கடினம்.
சிவா
என்னைப் பொறுத்த மட்டில் என் மனதில் பட்டதை நான் சொல்லி விட்டேன். அவ்வளவு தான்.
இதற்கு மேல் இதை வளர்க்க நான் விரும்பவில்லை.
கோவை மாநகரில் சிவாஜியின் சாதனைகள்.
1. நூறு நாட்களுக்கு மேல் ஒடிய படங்கள் 33க்கும் மேல்.
கோவையில் அதிக நூறுநாள் படங்கள் கொடுத்த ஒரே நடிகர் நடிகர்திலகம் மட்டுமே.
..வேறு எவரும் செய்திராத சாதனை இது.
..தேவர்மகன் படையப்பா
படிக்காதவன் படங்கள் சேர்க்கப்படவில்லை .
..ஒரே காலண்டர் வருடத்தில் மூன்று
நூறு நாட்கள.
.அதுவும் இரண்டு முறை.
.அதுவும் தொடர்ந்த வருடங்களில்.
வருடங்கள் 1960-1961
1960
1. இரும்புத்திரை
2.தெய்வப்பிறவி
3.படிக்காதமேதை
மேற்கண்ட மூன்று படங்களும்14.01.1960லிருந்து
25.06.1960 க்குள் ரீலீசான படங்கள்.ஆறு மாதங்கள் கூட பூர்த்தியாகாத காலகட்டங்களில் வெளியான படங்கள்.
1961
1.பாவமன்னிப்பு
2.பாசமலர்.
3.பாலும்பழமும்.
இந்த சாதனைகளும் எவராலும் நிகழ்த்தப்படவில்லை
ஒரே காலண்டர் வருடத்தில் ஒரு மாத இடைவெளியில் வெளியான இரு படங்களும் நூறு நாட்கள் ஓடிய படங்கள்.இந்தச் சாதனை 1958 ஆம் வருடமே நிகழ்த்தப்பட்டுவிட்டது.
படங்கள்:
1.பதிபக்தி(14.0358)
2.சம்பூர்ண ராமாயணம்.(14.04.58)
83ஆம் வருடம் இரண்டு நூறுநாள் படங்களைஅளித்துள்ளார்.அப்போது நடிகர்திலகத்தின் வயது 55.இரண்டிலும் அவர் இளவயது கதாபாத்திரமாக நடிக்கவில்லை.
படங்கள்:
1.நீதிபதி
2.வெள்ளைரோஜா.
வெள்ளை ரோஜாவில் அவருக்கு ஜோடி கிடையாது.
வயதான காலத்தில் வயதான வேடங்களில் நடித்து வெற்றியடையச்செய்த படங்கள்.
2. 150 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்ஏழு.(7)
அவை:
1.வீரபாண்டிய கட்டபொம்மன்(151)
2.இரும்புத்திர(161)
3.பாசமலர்(151)
4.வசந்தமாளிகை(161)
5.தங்கப்பதக்கம்(158)
6.திரிசூலம்(176)
7.முதல் மரியாதை(175)
தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் ஏழு படங்கள் 150 நாட்கள் இவரைத்தவிர வேறு யாரும் கொடுத்ததாக தெரியவில்லை
http://i1065.photobucket.com/albums/...psimcyj8rj.jpg
3.விமானத்தில் வந்து விளம்பர நோட்டீஸ்களும் பூக்களும் வீசப்பட்ட ஒரே படம் "ரோஜாவின் ராஜா".
நகரெங்கும் விமானம் பறந்து நோட்டீஸ்கள் வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
இது ஒரு சரித்திர சாதனை.
4.கோவையைப் பொறுத்தவரை மிக உயரமான கட்அவுட் '60'அடிக்குமேல் வைக்கப்பட்டபடம்
ஜெனரல் சக்கரவர்த்தி.இந்த அளவு உயர கட்அவுட் அந்த படத்திற்குப் பின் வேறு எந்தப்படத்திற்கும் அதற்குப்பின் வைக்கப்படவில்லை.
...
திரு.சிவா,
தாங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான். எந்த செய்தியாக இருந்தாலும், ஒரு ரசிகனாக மறுப்பு மற்றும் கண்டனக் கடிதம் அல்லது இப்போது இருக்கும் வசதி வாய்ப்புகளில் e -mail மூலமாக தெரிவிக்கவேண்டும். நம்மில் பலரும் திரியில் கண்டனம் மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்துவது அவர்களிடத்தில் (ஊடகம் அல்லது செய்தித்தாள்) எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
என்னைப் பொறுத்தவரையில், என் கவனத்திற்கு வரும், இந்த மாதிரி தகவல்களுக்கு, சிவாஜி பேரவை ஆரம்பிப்பதற்கு முன்பு தனிப்பட்ட முறையிலும், பிறகு, சிவாஜி சமூகநலப்பேரவை அமைப்பின் சார்பிலும் கடிதங்கள் எழுதுவது, தொலைபேசியில் தெரிவிப்பது சிலமுறை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவற்றில் சில், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சிலநேரம் மறுப்பாக வெளியிடப்பட்டும் இருக்கிறது.
நடிகர்திலகம் சிலையை அகற்ற ஓராண்டு கால அவகாசம் கேட்ட தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் மூலம், இப்போதைக்கு நமது ரசிகர்களுக்கு ஒரு இடைக்கால நிம்மதி கிடைத்திருக்கிறது. அதற்குள் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துவிடும். அதன்பிறகான சூழ்நிலையின் அடிப்படையிலேயே சிலை பிரச்சினையில் மேல் நடவடிக்கை அமையும். நடிகர்திலகத்தின் சிலைக்கு எந்த இடையூறும் நேராமல், சிலை அமைக்கப்பட்ட இடத்திலேயே தொடரும் என்றே நாம் நம்புகிறோம்.
என்றாலும் இப்போதுள்ள சூழ்நிலையில், சில கருத்துக்கள்: நடிகர்திலகத்திற்கு மணிமண்டபம் அமைவதை வரவேற்கும் அதே நேரத்தில் அதற்காக சிலை அகற்றப்படுவதை நாம் கண்டிப்பாக ஏற்கமுடியாது. காமராஜர், அண்ணா, அம்பேத்கார், எம்.ஜி.ஆர் உட்பட பல தலைவர்களுக்கும் சென்னையில் நினைவிடம் அல்லது மணிமண்டபம் தனியாகவும், வேறு பல இடங்களில் சிலைகள் தனியாகவும் இருக்கும்போது, சென்னையில் ஒரே இடத்தில் மட்டும் இருக்கும் நடிகர்திலகம் சிலை மட்டும் மணிமண்டபத்தில் மாற்றப்படும் எனும் முடிவு சரியானதல்ல. மணிமண்டப முகப்பில் வேறொரு சிலை அமைப்பதே சரியானதாகும்.
ஏற்கனவே தமிழக அரசு, சிலையினால் போக்குவரத்திற்கு இடையூறு என்று மனு தாக்கல் செய்துள்ளதையே உயர்நீதி மன்றமும், உச்சநீதிமன்றமும் தங்கள் கருத்தில் கொண்டு சிலையை அகற்றவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன என்றே வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், சிலையை தற்போதிருக்கும் இடத்திலிருந்து அகற்றியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை வந்தால், சென்னை கடற்கரை சாலையிலேயே காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் நடுவே மற்றி அமைத்துவிட்டு, மணிமண்டபம் அமைக்கப்படும்போது அங்கு வேறு சிலை அமைக்கப்படவேண்டும் என்பதே நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் வேண்டுகோள். இதனை தமிழக அரசிடமும் வலியுறுத்தியுள்ளோம்.
http://i1234.photobucket.com/albums/...psjxpocrbp.jpg
Dear senthilvel sir,happy to see your wish.I am just a LKG boy infront of the stalwarts already in the thread.But I will write something true from my heart regularly which i am sure all will encourage me.Thanks/regards
Ravi.naan migavum rasiththa kaatchi.Thangal ezhuththil meendum rasikkiraen.
ஒரு செய்தியை ஒரு ஊடகம் வெளியிடும் போது அதைத் தொகுத்து தேவையானவை அல்லது தேவையற்றவை என அவ்வூடகம் கருதும் விஷயத்தை எடிட் செய்து வெளியிடுவது அதற்குரிய உரிமை. அதில் அவர்களுடைய நிலைப்பாடு நிலைநிறுத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் பாதிப்பு என்பதற்கு வழியில்லை. ஏன் இந்த விஷயத்தை சேர்க்கவில்லை என்று நாம் கேட்க முடியாது. ஓரு விஷயத்தை சில ஊடகங்கள் அப்படியே வெளியிடும். சில தமக்குத் தேவையானவற்றை அல்லது தாங்கள் வெளியிட வேண்டியது இந்தப் பகுதி தான் என்று தீர்மானிப்பவற்றை மட்டுமே வெளியிடும்.
அவ்வாறு வெளியிடப்படும் செய்தி உண்மைக்கு மாறாக இருந்தாலோ அல்லது திரிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே நாம் அவற்றை அணுக முடியும். இந்த விஷயத்தை நாங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம் என்பவர்களிடம் போய் நாம் என்ன முறையிட முடியும். இதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பாதிக்கப்பட்டாலோ அல்லது நம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெளியிடப்பட்டு அவற்றால் நம் மனம் புண்பட்டாலோ நாம் கேட்கலாம்.
ஊடகங்களில் நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட செய்திகளை தவிர்க்காமல் சேர்த்து வெளியிடுவது அந்த ஊடகங்கள் மனதார செய்ய வேண்டியதாகும். உணர்வோடு செய்ய வேண்டியதாகும். இதைக் கேட்டுப் பெறுவதென்பது செயற்கையாகத் தான் இருக்கும்.
Dear all,generally we human-beings are either theist or atheist.When I was going through dictionary I could see words AGNOSTIC and MYSTIC.The word agnostic means a person who believes, it is difficult to find whether GOD exists or not.The word mystic means ,a person who is spiritual and believes that by constant prayers he can reach GOD. Except few, many of us would have been in all the four ,in some stage of our life.So I became mystic at one point.
I would like to write my experiences under the title THE UNCOMMON GOD & a common man
THE UNCOMMON GOD - NADIGAR THILAGAM
a common man - Pon.Ravichandran
(to be continued)
சென்னை: நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா மனதார வாழ்த்தியதாக நடிகர் நாசர் தெரிவித்தார்.தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடந்தது. புதிய தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷால் பொதுச்செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும், 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவும், நடிகர் சங்க தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற உதவிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவும் அனுமதி கேட்டிருந்தார்கள். அவர்களை சந்தித்துப்பேச முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கினார்.அதன்படி, நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் நேற்று காலை 11 மணிக்கு முதல்வரை நடிகர் சங்கத்தினர் சந்தித்தனர். அவருக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார். புதிய நிர்வாகிகள் அனைவரும் முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார்கள்.இதுகுறித்து நாசர் கூறுகையில், "முதல்வர் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். எங்களுக்கு மனதார வாழ்த்து சொன்னார். 'தென்னிந்திய நடிகர் சங்கத்தில், ‘நடிகர் திலகம்' சிவாஜிகணேசன், மேஜர் சுந்தரராஜன் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை இந்த புதிய நிர்வாகம் மீண்டும் கொண்டு வர வேண்டும். அதை இந்த புதிய நிர்வாகம் செய்யும் என்று நம்பிக்கை இருக்கிறது. நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக எந்த உதவியை கேட்டாலும் அரசு செய்யும்,' என்றார்.அப்போது, நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் அம்மா கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை முதல்வர் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு, நிச்சயம் வருவதாகக் கூறினார்," என்றார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...er-240010.html