+1 I yam youth time ambi chechi fan only.
Printable View
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் : 7
"ஒண்ணா இருக்க கத்துக்கணும்"
http://www.youtube.com/watch?v=mwWvFMzpimU
நடிப்பு : நடிகர் திலகம், தேவிகா, பாலாஜி, மணிமாலா, நாகேஷ், மனோரமா மற்றும் பலர்
பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்.
இசை : இசை மன்னர் ஆர்.சுதர்சனம்
படைப்பு : காவியக்கவிஞர் வரகவி வாலி
திரைக்காவியம் : அன்புக்கரங்கள்(1965)
பாடல் வரிகள்:
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தைப் பாருங்க
அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க (ஒண்ணா)
வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா (ஒண்ணா)
தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதைப் புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை (ஒண்ணா)
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம்
வானில் கூடிவரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர்வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம் (ஒண்ணா)
அன்புடன்,
ராகவேந்திரன்
மற்றும்
பம்மலார்.
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் : 7
"ஒண்ணா இருக்க கத்துக்கணும்"
Good - timely posted, Thanks to Pammalar
எனக்கு நன்றி சொன்ன அனைவருக்கும்,
உண்மையில் நன்றிக்கு உரியவர்கள் என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ராகவேந்தர் சாரும் நேரில் பேசாவிட்டாலும் இந்த திரியின் மூலமாக நான் வைத்த வேண்டுகோளை ஏற்ற ஜோவும் கார்த்திக்கும்தான்.
ஜோ,
இந்த வார விகடனில் பாசமலரின் பொன் விழாவைப் பற்றிய செய்தியும் படமும் வெளியாகி இருக்கிறது. அது போல மதன் பதில்களில் நடிகர் திலகத்தின் ராஜா பட ஸ்டில்லும் வந்திருக்கிறது. அதையும் இங்கே பதிவேற்றுங்கள்.
அன்புடன்
ஸ்டைல் சக்கரவர்த்தி
http://i52.tinypic.com/2vxribt.jpg
நன்றி :விகடன்
முரளிசார்,
பாசமலர் பற்றிய செய்தி எந்த பகுதியில் வந்திருக்கிறது ?
Attachment 289
'பாசமலர்’ படத்துக்கு இது பொன் விழா ஆண்டு. 1961-ன் மே மாத இறுதியில் வெளியான இப்படம் ஆறு மாதங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலில் சாதனை புரிந்தது. படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் மலரும் நினைவுகளை நண்பர்களுடன் பரிமாறி ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டு இருக்கிறார். வாடாத மலர்!
நன்றி :விகடன்