டியர் கார்த்திக் சார்
ஜெயகுமாரி பற்றிய உங்கள் கட்டுரை பல நினைவலைகளை மீட்டு விட்டது . ஒரு 10 அல்லது 12 ஆண்டுகள் இருக்கும் என்று நினைவு அப்போது ஓல்ட் மகாபலிபுரம் ரோடு போடப்பட்டதாக நினைவு இல்லை பெருங்குடி செல்ல வேண்டும் என்றால் velacherry இல் இருந்து தான் கந்தன் சாவடி சென்று பெருங்குடி செல்வோம் . என்னுடைய அத்தை பையன் ஒருவர் அங்கே வீடு கட்டி க்ரஹபிரவேசம் செய்த போது அங்கே வீட்டு வேலைக்கு ஒரு பெண்மணி வந்து இருந்தார்.எனக்கு அந்த பெண்மணியை பார்த்துஉடன் எங்கையோ பார்த்து இருக்கிறோம் கொஞ்சம் சற்று குண்டாக இருந்தார். பிறகு தான் அவர்கள் திருமதி ஜெயகுமாரி என்று அறிந்தேன் . ஒரு 20 நிமிட நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவருடைய மூத்த பெண் MCA படித்து கொண்டு இருப்பதாக சொன்னார் . பழைய வாழ்கை எதையும் பற்றி பேசவில்லை .
நிழல் நிஜமாகியது