Page 196 of 400 FirstFirst ... 96146186194195196197198206246296 ... LastLast
Results 1,951 to 1,960 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1951
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'தாய் மீது சத்தியம்' படத்தில் சங்கர் கணேஷ் இசையமைப்பில் சுசீலாவின் அருமையான குரலில் ஜெயமாலினியின் நடனத்திலே, மோகன்பாபுவின் விறைப்பிலே மனசை 'ஜில்லெண்டு' வைக்கும் ஒரு பாடல்
    வாசு சார்

    இதே மாதிரி அன்னை ஒரு ஆலயம்
    படத்தில் இளையராஜா இசைஅமைப்பில்
    மோகன்பாபு (குரு சிங்காரிக்கு ஜே),ஜெயமாலினி
    சுசீலாவின் ஹஸ்கி வாய்ஸ்

    நிலவு நேரம் இரவு காயும்
    வானிலே ஆயிரம் வெள்ளி
    வாடுது மல்லிகைப் பள்ளி
    இங்கே அவனை அழைத்தேன் வாரானோ ..ஹா நிலவு நேரம்
    இரவு காயும்
    பாட்டுக்கு நடுவில்
    dr கல்யாண் குழுவினர் என நினைக்கிறன்
    கலக்கல் orchestra



    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1952
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்!

    அது இளைய ராஜாவின் மணிமகுடப் பாடல். ஆனால் 'இளமை என்னும் பூங்காற்று' 'ஓஹோ' வெனக் கொண்டாடப்பட்டது. 'நிலவு நேரம்' அந்த அளவிற்கு கண்டு கொள்ளப் படவே இல்லை நல்ல இசை ரசனை கொண்டவர்களைத் தவிர.

    'இளமை எனும் பூங்காற்று' பாடப்படாத இசை மேடையே இல்லை. ஆனால் 'நிலவு நேரம் இரவு காயும்' பாடல் மேடைகளில் பாடப் பட்டுள்ளதா?

    'இளமை' மிக அருமையான 'காம' மெலடி. ஆனால் 'நிலவு நேரம்' ஆர்ப்பாட்டம். அதற்கு இது எந்த வகையிலும் குறைந்தது இல்லை. என் தனிப்பட்ட ரசனையில் 'நிலவு'க்குத் தான் என் முதல் ஒட்டு.

    இரண்டாவது சுசீலாவின் இன்னொரு பரிணாமம் மீண்டும் தெரிந்தது.

    அதற்கெல்லாம் இப்போது நான் வரவில்லை. பழசே இன்னும் நிறைய கடல் மாதிரி இருக்கிறது. அதையெல்லாம் முடிப்போம். பிறகு இளையராஜா என்ற கடலில் மூழ்கலாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1953
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    அன்புக்கோர் அண்ணன் 1970
    ஜெமினி கணேசன்,ஜெய்சங்கர்,நிர்மலா,நாகேஷ் நடித்தது
    பாடகர் திலகம்,சீர்காழி இசையில் ஒரு நல்ல நாட்டிய பாடல்
    "தென் மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்
    அண்ணன் திருமால் அழைத்து வர கண்மணி மீனாள்
    பொன் மலராம் தாமரையை கிள்ளி எடுத்தாள்'
    சொக்கனுக்கு மைத்துனனோ ஒருவன் இருந்தான் '

    http://www.inbaminge.com/t/a/Anbukku%20oru%20Annan/

    இன்னொரு பாட்டு

    பாலா ராட்சசி குரல்களில்

    ஏய் டூயட் பாடலாமா?
    ஸ்ஸ்ஸ்ஸ் இந்த நேரத்திலயா?
    யாராவது பார்த்துட போறாங்க..ம்ம்ம்ஹாஆஆ

    போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
    ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
    அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க

    கோடி கோடி ஜோடி நம்மை போல உண்டடி
    அதுக்கென்ன இப்போ
    கோடு போட்டு காதல் செய்து வாழும் வாழ்வடி
    அதில் என்ன தப்போ

    எந்த வீட்டில் இந்த வேளை என்ன ராகமோ
    அந்த ராகம் நாமும் பாட இந்த கோலமோ

    போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க.. ம்ஹாஆ
    ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க..ம் ஹாஆ
    அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க.. ம் ஹாஆ

    உலலலாஆஆஆயீ
    ஆரிரரஓஒ .. உலலலாஆஆஆயீ
    ஆரிரரஓஒ ...ஆரிரரஓஒ ..
    உலலலாஆஆஆயீ...உலலலாஆஆஆயீ..

    நல்ல நேரம் பார்த்து அந்த பிள்ளை சாடுது
    நமக்கு வேளை எப்போ
    என்னை மட்டும் கேள்வி கேட்டு என்ன ஆவது
    நடக்கட்டும் இப்போ ம்ம்மாஆஆ

    மாலை போட்டு மண்டி?? வீட்டில் கட்டில் போடுவோம்
    மாதம் பத்து போன பின்பு தொட்டில் போடுவோம்

    போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க..
    ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க..
    அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க..

    இருட்டில் கூட உனது மேனி மினுமினுக்குது
    மினுக்கட்டும் இப்போ
    இதழ் இரண்டும் பார்த்து பார்த்து துடிதுடிக்குது
    துடிக்கட்டும் இப்போ

    காத்திருந்து வாங்கும் இன்பம் இனிமையானது
    காதல் போட போட காதல் புனிதமானது

    போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
    ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
    அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க

    இதுக்கு ஆடியோ வீடியோ எதாவது உண்டா நிச்சயம் ராட்சசி பின்னி இருக்கணும் ஏன்னா வரியை கவனிங்க
    gkrishna

  5. #1954
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    ஒன்று கவனித்தீர்களா?

    பிற்கால தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ் படங்களில் ஈஸ்வரி பாடவே இல்லை. கிளப் டான்ஸ், மற்றும் கவர்ச்சி நடிகைகளுக்கான பாடல்களை இசையமைப்பாளர்கள் சுசீலாவையே பாட வைத்தனர். இரட்டையர்கள், இளையராஜா என்று. இது ஏன் என்று தெரியவில்லை. பின்னால் சுசீலாவையும் கழற்றிவிட்டு ஜெயமாலினிக்கு 'ராம் லஷ்மணில் 'வாலிபமே வா வா' என்று ஷைலஜாவைப் பாட வைத்தார் ராஜா.

    பாருங்கள்

    ஆட்டுக்கார அலமேலு - தேன்கூடு நல்ல தேன்கூடு

    தாய் மீது சத்தியம் - நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை ஒரு கூட்டல் கணக்குத்தான்

    அஞ்சாத நெஞ்சங்கள் - தன்ன தானா தாளந்தானா தத்தி தத்தி ஆடத்தானா

    அன்னை ஒரு ஆலயம் - நிலவு நேரம் இரவு காயும்

    இது எல்லாம் சுசீலா.

    இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நண்பர்கள் பகிரலாம்.
    Last edited by vasudevan31355; 17th July 2014 at 06:16 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1955
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    'அன்புக்கோர் அண்ணன்' அலசல் நன்றாக இருந்தது. பலரும் மறந்து விட்ட ஒரு படம்.

    இதில் இன்னொரு பாடல் உண்டு

    அடி காதலி என்னைக் காதலி
    என் காதலா இது காதலா

    பாடகர் திலகமும், ராட்சஸியும் பாடியது.

    ஆமாம். படத்தில் ஜெயா மேடம் இருக்கிறாரா என்ன?
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1956
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அன்புக்கோர் அண்ணன்' படத்தில் 'அடியே ஒரு பேச்சுக்கு சொன்னேன்' என்ற அற்புதமான பாடலும் உண்டு.

    நம் இரு பாடகிகளும் பாடும் பாடல் ஒன்று. மிக அருமையான கருத்தை உணர்த்தும் பாடல்.

    'திருமணம் வேண்டாம்.... அண்ணனே போதும்' என்று சொல்லும் தோழியிடம் (சுசீலா) 'திருமணம் கொள்ளாமல் பெண் வாழ்வு சிறக்காது' என்று பதிலுக்கு வாதம் செய்யும் தோழி (ஈஸ்வரி)

    (ஈஸ்வரி)

    அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
    இது பெண்புத்திதானே!'
    ஒரு நாயகன் முன்னே
    நாம் நாயகிதானே

    ஒரு பேச்சுக்கு சொன்னேன்
    இது பெண்புத்திதானே!'
    ஒரு நாயகன் முன்னே
    நாம் நாயகிதானே

    (சுசீலா)

    தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
    தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
    இதில் தலைவி என்னும் பெயரில்
    என்ன பெருமை உண்டடி
    இதில் தலைவி என்னும் பெயரில்
    என்ன பெருமை உண்டடி

    அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
    இது பெண்புத்திதானே!'
    ஒரு ஆடவன் வந்தால் நாம்
    அடிமைகள்தானே

    (ஈஸ்வரி)

    தாயாரும் உன்னைப் போல்
    தனியாக வாழ்ந்தால்
    நீ ஏது உன் அண்ணன் உறவேதடி

    (சுசீலா)

    மாறாது உறவென்று அண்ணாவைப் பாடி
    வாழ்ந்தாலே கல்யாண நினைவேதடி

    (ஈஸ்வரி)

    பெண்டாட்டி ஆனால்தான் கொண்டாட்டமே

    (சுசீலா)

    பல பெண்வாழ்வில் கல்யாணம் திண்டாட்டமே

    அடியேய்... ஒரு பேச்சுக்கு சொன்னேன்
    இது பெண்புத்திதானே!'
    ஒரு ஆடவன் வந்தால் நாம்
    அடிமைகள்தானே

    (ஈஸ்வரி)

    இன்பங்கள் சரிபாதி
    துன்பங்கள் பாதி
    கொண்டாடும் இல்வாழ்வு
    குலவாழ்வடி

    (சுசீலா)

    இன்பங்கள் துன்பங்கள்
    எங்கென்று தேடி
    அங்கெல்லாம் நான்
    போக முடியாதடி

    (ஈஸ்வரி)

    தள்ளாடும் காலத்தில் அறிவாயடி

    (சுசீலா)

    அதில் தாய் வீட்டு துணை போல துணை ஏதடி

    (ஈஸ்வரி)

    அடியே ஒரு பேச்சுக்கு சொன்னேன்
    இது பெண்புத்திதானே!'
    ஒரு நாயகன் முன்னே
    நாம் நாயகிதானே

    (ஈஸ்வரி)

    ஆதாரம் நீயென்று அத்தானின் மார்பில்
    நீராடும் நிலை போல நிலை ஏதடி

    சுசீலா)

    நீராடு நாம் சென்று போராட நேர்ந்தால்
    வேரோடும் கண்ணீரில் முடிவேதடி

    (ஈஸ்வரி)

    கண்ணீரும் பெண் சொல்லும் கதைதானடி

    (சுசீலா)

    அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி
    அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி
    Last edited by vasudevan31355; 17th July 2014 at 06:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1957
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் வாசு சார்

    1970- பொங்கல் வெளியீடான ''ஏன் '' படத்தின் பாடல் பற்றிய உங்கள் அலசல்கள் பிரமாதம் .

    ஆனந்த விகடன் - எழுதிய விமர்சனம் - உங்கள் பார்வைக்கு .

    பாடல்களுக்காக இந்த படத்தை பார்த்தேன் .
    நன்றி வினோத் சார்.

    ரொம்ப நாளாக இப்படத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் விகடன் விமர்சனம் போட்டு விட்டீர்கள். படம் செம அறுவை மாதிரி விமர்சனம் பண்ணியிருக்கிறார்கள். இருந்தாலும் நீங்கள் சொன்னபடி பாடல்கள் லட்டு.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1958
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1959
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    'ஜஸ்ட் ரிலாக்ஸ் இயக்குனர்கள்' வரிசையில் இளமை இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் அவர்களின் மற்றும் ஒரு அருமையான பாடலான 'எல்லோருக்கும் காலம் வரும்' பாடலை மிகச்சிறப்பாக ஆய்வு செய்து பதித்திருக்கிறீர்கள். எனது வேண்டுகோளை ஏற்று இப்பாடலை ஆய்வு செய்தமைக்கு மிக்க நன்றி.

    பாடலில் இடம்பெறும் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்று விடாமல் நினைவுக்குக் கொண்டுவந்து பதிவை சிறப்பாக்கியிருக்கிறீர்கள்.

    நீங்கள் சொன்னதுபோல இந்தப்பாடலில் எல்லோருடைய ஆட்டத்தையும் கவனித்தாலும், முக்கால்வாசி கவனம் ஜெய்குமாரி மீதுதான். அவருடைய அலுங்காத நடனமும் அந்த உடையும் கொள்ளை அழகு. இத்தனைக்கும் உடலை முழுவதுமாக மூடிய உடை. அதிலேயே அவ்வளவு அழகு. குறிப்பாக அந்த கூரான மூக்கு, அழகிய சிரிக்கும் கண்கள், வெகுளித்தனமான முக அமைப்பு அனைத்தும் சேர்ந்து நம்மை கிறங்க வைக்கும்.

    ஆனால் அவருடைய இன்றைய நிலையை நினைக்கையில் அவர்மீது கொண்ட அபிமானம் அனைத்தும் அனுதாபமாக மாறும். 'எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்' என்ற ஆதங்கம் ஏற்படும். இத்தனைக்கும் ஓராண்டுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அவ்வளவாக முதிர்ச்சியோ, முகமாற்றமோ இல்லாமல் அதே பழைய கள்ளமில்லா முகமும், வெகுளித்தனமான பேச்சுமாகவே இருந்தார்.

    அவருடைய வாழ்க்கை இப்படி தலைகீழாக மாறியதற்குக் காரணம் கதாசிரியரும் இயக்குனருமான ஒருவர். திரைப்படங்களில் சிறிய வேடங்களிலும், நடனக்காட்சிகளிலும் நடித்துக்கொண்டு, தன் கணவருடனும், குழந்தைகளுடனும் தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்றிருந்தவரை துர்ப்போதனை செய்து வம்பில் இழுத்துவிட்டவர் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம். தன்னிடம் அருமையான கதையிருப்பதாகவும், தன்னுடைய இயக்கத்தில் அதை படமாக தயாரித்து வெளியிட்டால் நன்றாக வெற்றியடையும் எனவும் ஜெய்குமாரியிடமும் அவரது கணவரிடமும் தூபம் போட்டு தயாரிப்பு துறையில் இறக்கிவிட்டார். இவர்களும் அதைநம்பி தயாரிப்பில் இறங்கி இருந்த மொத்தப்பணத்தையும் அதில் முதலீடு செய்தனர்.

    (நமது நடிகர் நடிகையரிடம் ஒரு ஏமாற்றமான கணிப்பு இதுதான். சொந்தப்படம் எடுப்பவர்கள் எல்லாம் நடிகர்திலகமாகவும், மக்கள்திலகமாகவும், பாலாஜியாகவும் ஆகிவிட முடியாது. சொந்தப்படம் எடுத்து வெற்றியடைந்த நட்சத்திரங்கள் 10 சதவீதம் என்றால் தோற்றவர்கள் 90 சதவீதத்தினர். இதை அவர்கள் உணர்வதே இல்லை.)

    பேராசிரியரின் கதை, வசனம், இயக்கத்தில் "முன்னொரு காலத்திலே" என்ற பெயரில் அந்தப்படம் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஜெய்குமாரியின் கணவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் தொழிலதிபர். சொந்தப்படம் காரணமாக சென்னையிலேயே தங்கியதால், சிங்கப்பூர் போக்குவரவு நின்றுபோனது. ஜெய்குமாரியும் தன் பணம் மொத்தத்தையும் அப்படத்தில் முடக்கியதுடன், வெளியிலும் கடன்பெற்று முதலீடு செய்தார். வெளிப்புறப் படப்பிடிப்புகளெல்லாம் நடந்தன.

    இந்நிலையில் பாதிப்படம் முடிவடைந்த நிலையில் இயக்குனர் பிரகாசம் தன் சுயரூபத்தைக் காட்டினார். ஒழுங்காக ஷூட்டிங் நடத்துவதில்லை. வேறு படங்களை ஒப்புக்கொண்டுவிட்டு மாதக்கணக்கில் ஜெய்குமாரியின் படத்தைக் கிடப்பில் போட்டார். பின்னர் ஒரேயடியாக படப்பிடிப்பு நின்று போனது. கடன் கொடுத்தவர்களின் நெருக்குதல் காரணமாக வீடு, கார் என்று ஒவ்வொன்றாக இழந்தார் ஜெய்குமாரி. தயாரிப்பில் கவனம் சிதறியதால் மற்ற படங்களில் நடிக்கும் வாய்ப்புக்களும் கைநழுவிப் போயின. அப்படியும் கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளில் நடித்து குடும்பத்தை ஓட்டினார். ஆனாலும் சொந்தப்படத்தின் கடன்சுமை அழுத்த, வேறு வழியின்றி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், இயக்குனர்கள் சங்கத்திலும் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் மீது ஜெய்குமாரி புகார் செய்தார்.

    சங்கத்தினர் புகாரை விசாரித்து, இயக்குனர் பிரகாசத்தைக் கண்டித்து, உடனடியாக படத்தை முடித்துக் கொடுக்க உத்தரவிட்டனர். ஜெய்குமாரியும் அவர் கணவரும் கடன் வாங்கி மீண்டும் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் இரண்டு மூன்று முறை படப்பிடிப்புக்கு வந்ததோடு மீண்டும் முரண்டு பிடித்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வராமல் வேறு படங்களின் ஷூட்டிங்குக்கு சென்றுவிட்டார் பிரகாசம்.

    மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்த பணத்துக்காக விநியோகஸ்தர்களை அணுக, ஏற்கெனவே இப்படத்தைப் பற்றிக்கேள்விப்பட்டிருந்த அவர்கள், படம் எடுக்கப்பட்டவரை போட்டுப்பார்த்தால்தான் பணம் தரமுடியுமென்று கூற, ஜெய்குமாரியும் தெரிந்தவர்களை வைத்து, லேபை அணுகி நெகட்டிவிலிருந்து ஒரு பாசிட்டிவ் பிரிண்ட் எடுத்து விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக்காட்ட, பிரகாசம் படம் எடுத்திருக்கும் லட்சணத்தைப் பார்த்த அவர்கள், படம் திருப்தியில்லையென்றும் அதனால் பணம் தரமுடியாதென்றும் கைவிரிக்க கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போனது. போட்ட பணம் அத்தனையும் படத்தில் முடங்கிப்போக வறுமையின் பிடியில் சிக்கினார்கள்.

    தனியார் பள்ளிகளில் படித்த குழந்தைகள் கார்ப்பரேஷன் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே பேரிடியாக ஜெய்குமாரியின் கணவர் மறைந்தார். செய்வதறியாது தவித்து நின்ற ஜெய்குமாரிக்கு மேஜர் உள்ளிட்ட திரையுலகத்தினர் சிலர் சிறிது காலம் உதவினர். இத்தனைக்கும் காரணமான பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் எதையுமே கண்டுகொள்ளவில்லை.

    ஜெய்குமாரியின் சொந்தப்படமான "முன்னொரு காலத்திலே" கடைசி வரை வெளிவரவே இல்லை. அதில் போட்ட அத்தனை முதலீடும் நாசமானது. திரையுலக வாய்ப்புகளும் நின்று போனதால், சிறு வாடகை வீட்டில் நான்கு பெண்குழந்தைகளுடன் வசித்து வரும் ஜெய்குமாரி, ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தில் அலுவலகங்களை கூட்டிப்பெருக்கி, தண்ணீர் எடுத்து வைக்கும் பணியாள் வேலை செய்து வருகிறார். முதல் பெண்ணுக்கு திருமணம் முடித்து விட்டார்.

    சில மாதங்களுக்கு முன் நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெய்குமாரி, தற்போது யாராவது திரைப்படங்களில் / சீரியல்களில் அம்மா ரோல் அல்லது ஏதாவது சிறு வேடம் கொடுத்தாலும் நடிக்கத்தயாராக இருப்பதாகவும், வாய்ப்பு தரும்படியும் வேண்டினார்.

    அவரது வாழ்க்கைப்போராட்டத்தை படித்தபோது என் கண்களில் நீர் துளிர்த்தது..

  11. #1960
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கார்த்திக் சார்,

    ஜெய்குமாரியின் வாழ்க்கை உண்மையிலேயே நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன பண்ண முடியும் நம்மால்?
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •