Page 197 of 400 FirstFirst ... 97147187195196197198199207247297 ... LastLast
Results 1,961 to 1,970 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1961
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    வாசு சார், கிருஷ்ணா, ராகவேந்திரா சார் மற்றும் கார்த்திக் சார். அலசல், கட்டுரை எல்லாமெ அருமை....

    நேற்று ராகவேந்திரா சார் குறிப்பிட்ட வீட்டுக்கு வந்த வரலெட்சுமி படம் தெலுங்கில் 1957’ல் இறங்கிய “பாக்கியரேகா” என்ற படம்
    பெண்டியாலா இசையில் ஒரு குறிப்பிட்ட பாடல் மிகவும் பிரபலம்... ஏழுமலையான் மகிமையை சொல்லும் சமயத்தில் நாயகனையும் சொல்வதுபோல் அமைந்த பாடல் இசையரசியின் குரலில் ...

    தெலுங்கில் நீவுண்டேதா கொண்டபை நா சுவாமி



    தமிழில் என் உள்ளம் தன் சொந்தமே

    Last edited by rajeshkrv; 18th July 2014 at 02:54 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1962
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கார்த்திக்,

    எங்கள் மனிதத்தை குலுக்கி ,கண்ணீர் விட வைத்து விட்டீர்கள்.இனிமேல் என்னுடைய பிரியமான ஜெயகுமாரியின் கவர்ச்சி நடனம் பார்க்கும் போது ,இந்த சோகம்தானே முந்தி நிற்கும்?

    இது என் சிறு வயது நண்பன் ஒருவனை ஞாபக படுத்துகிறது.பஞ்சாமிர்தம் என்றால் மிக பிடித்தம் எனக்கு. திடீரென்று பஞ்சாமிர்தம் தொட்டியில் பழங்களை போட்டு ஆட்கள் அழுக்கு காலால் மிதிப்பார்கள் , நிறைய யானை கால் ஆசாமிகள்.என்பான். பிறகு பஞ்சமிர்தமாவது,ஒன்றாவது?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1963
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜமுனா ராணி.

    நான் எல்.ஆர்.ஈஸ்வரியின் அக்கா பற்றி பேச போகிறேன். சுசிலாவும்,எல்.ஆர் .ஈஸ்வரியும் பாட்டுலகை ,அதன் பொற்காலத்தில் ஆக்கிரமிக்கு முன் கோலோச்சிய என் ஆதர்சங்கள் லீலாவும்,ஜமுனாராணியும். 1938 இல் பிறந்த ஜமுனா ,உண்மையில் வயதில் ,ராட்ஷசியின் அக்காவா என தெரியாது.ஆனால் பாடும் பாணிக்கு ,அக்காதான். எல்.ஆர்.ஈஸ்வரியின் western பாணி அதகளத்தை தவிர்த்தால் ,அவருடைய குத்து,மெலடி,காமெடி எல்லாமே ஜமுனாவை முன் நிறுத்தும்.ஜமுனாவின் மயக்கும் குரல் (ஈஸ்வரி கொஞ்சம் தடி hoarse ),பாடும் கொஞ்சல்,நெளிவு,இழுப்பு, என்று காதல்,கிராமிய,குத்து,கவர்ச்சி,விழா பாடல்கள்,சோகம்,கெஞ்சல் ,மெலடி அனைத்திலும் கலக்கி குலுக்கியவர்.திரௌபதி என்ற violin வித்வான் தாய். எட்டு வயதில் மகளை பாட்டு துறைக்கு தத்தம் செய்தார்.இவரிடம் மயங்கி உபயோகிக்காத இசையமைப்பாளரே இல்லை.சித்தூர் நகையா,பெண்டியாலா,தக்ஷிணா மூர்த்தி ,விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன்,ஜி..ராமநாதன்,டிஜி..லிங் கப்பா,எஸ்.எம்.சுப்பைய்யா நாய்டு,வேதா,சுதர்சனம்,குமார்,இளையராஜா என்று முடிவற்ற லிஸ்ட். இவரின் தலை ரசிகர்களில் ஒருவனாக முன்னிலை படுத்துவதில் ,பெருமை அடைகிறேன். வாராய் என்று தோழிக்கு நாம் வரவேற்பு கொடுத்து,பாட்டொன்று கேட்கும் பாக்யத்தை குறைத்து கொண்டோம்.ஆனாலும் 1968 வரை ஹிட் பாடல்களை கொடுத்து பேச வைத்து கொண்டே இருந்தார்.இவர் குரலில் மயங்கிய இளையராஜா ,நாயகனில் நான் சிரித்தால் period song பாட பயன் படுத்தி வெற்றி கண்டார்.

    இவர் பாடிய என் ஆதர்ச பாடல்கள்.

    யாரடி நீ மோகினி.

    நீயோ நானோ யார் நிலவே.

    தாரா தாரா வந்தாரா

    காளை வயசு கட்டான சைஸு .

    பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு

    மாமா மாமா மாமா சிட்டு போல பெண்ணிருந்தா

    பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்

    சிங்கார சோலையே

    பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா

    குங்கும பூவே கொஞ்சு புறாவே

    படிக்க வேணும் புதிய பாடம் வாத்தியாரைய்யா

    ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதான்

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

    தாங்காதம்மா தாங்காது சம்சாரம் தாங்காது

    கண்ணுக்குள்ள ஒண்ணிருக்கு ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு

    கொஞ்சம் தள்ளிக்கணும் அங்கே நின்னுக்கணும்

    மயக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி

    அன்ன நடை சின்ன இடை எப்படி அழகு தெய்வம் பெண்களென்று சொல்லடி

    நெஞ்சினிலே நினைவு முகம் நினைவிலும் கனவிலும் அழகு முகம்

    எனக்காகவா நான் உனக்காகவா என்னை காணவா

    ஒருநாள் உனை பாராதிருந்தால் உடம்பே நல்லால்லே
    ஐயோ! மனசே நல்லால்லே'


    ஆட்டுக்கு வாலை அளந்து வச்சவன் புத்திசாலி

    அலேக் ...வாழை தண்டு போல உடம்பு அலேக்

    புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்

    நான் சிரித்தால் தீபாவளி .

    என் நெஞ்சில் நிறைந்த அபூர்வ பாடகி ஜமுனா ராணிக்கு என் வணக்கங்கள் .
    Last edited by Gopal.s; 18th July 2014 at 08:03 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1964
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜமுனா ராணி





    Last edited by Gopal.s; 18th July 2014 at 05:02 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #1965
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கானடா/தர்பாரி கானடா.

    இரவின் மடியில் சொக்கி போய் ,இன்ப உணர்ச்சிகளின் எல்லைக்கே சென்று ,தூங்கவே மனசின்றி,மொட்டை மாடியில் ஆகாயத்தை வெறித்து,விகசித்து, வானவெளியில் நட்சத்திரங்களோடு உலவ வேண்டுமா? அடடா..... இதன் சுகமே அலாதி.

    கானடா ராகம் பெரிய குடும்பங்களை தன்னுள் அடக்கியது ஆசாவரி மற்றும் காபி குடும்ப ராகங்களின் நெருங்கிய உறவினர். கர்நாடக
    ராகமென்றாலும் ,ஹிந்துஸ்தானியில் கொண்டாட படுவது. கானடா கரஹரப்ரியாவின் ஜன்யம்.தர்பாரி கானடா ,நட பைரவியின் ஜன்யம்.ஆனாலும் நெருக்கமான ஒரே குடும்பம்.

    தர்பாரி என்று பெயர் வர காரணமே,இதன் அழகில் சொக்கிய தான்சேன் ,இதில் பயிற்சி பெற்று ,அக்பர் தர்பாரில் பாடி,அனைவரையும் சொக்க வைத்தாராம்.நிறைய பயிற்சி எடுத்து பாட வேண்டிய கடினமான ராகங்கள் .

    இந்த படம் இரட்டை வேடங்களை போட்டால் எப்படி நடிக்க வேண்டும் என்று உலக பள்ளிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டிய பாடம்.இதில் நடித்தவரே,என்னால் இப்போது அப்படி நடிக்க முடியுமா என்று வியந்த எனது அபிமான படம்.நடிகர்திலகத்தின் ஆக்ரமிப்பில் மற்றவை மறந்து போன இந்த படத்திலும் தனித்து தெரிந்த அழகிய பாடல் ,ஜி.ராமனாதனின் அபூர்வ சங்கதிகளில் மெருகேறிய "முல்லை மலர் மேலே".

    அது பெரிய வெற்றி படமல்ல என்றாலும் ,அந்த தனித்த இயக்குன முன்னோடியின் குறிப்பிட வேண்டிய படம்.இரட்டையர்களின் பொற்காலத்தில் ,ஸ்ரீதரின் படமென்றால் கேட்கவும் வேண்டுமா?காந்தர்வ மணத்தில் கலக்கும் காதல் ஜோடிகளுக்கு ,காந்தர்வ கானத்தையே தந்தனர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி .பீ.பீ.எஸ்-ஜானகி இணைவில் அந்த உன்னத மெலடி "பொன்னென்பேன் சிறு பூவென்பேன்".

    அந்த இசையமைப்பாளருக்கு ,ரோஜா கொடுத்து தமிழ் ரசிகர்கள் அடிமையான ரோஜா.அதில் பட்டியில் இருந்து வந்த கிராமிய நாயகியின் ,கண் பொத்தி, ஒரு அதிசய பனி உலகத்தை காட்டும் நனவான கனவுலக பாடல் "புது வெள்ளை மழை ".

    கானடா/தபாரி கானடாவின் மற்றவை .

    நாணி சிவந்தன மாதரார் கண்கள் -கர்ணன்.

    அழகு தெய்வம் மெல்ல மெல்ல - பேசும் தெய்வம்.

    மல்லிகை என் மன்னன் மயங்கும்- தீர்க்க சுமங்கலி.

    பூமாலை வாங்கி வந்தார் -சிந்து பைரவி .

    அலை பாயுதே கண்ணா- அலை பாயுதே.

    சிவ சங்கரி சிவானந்த லஹரி -ஜகதல பிரதாபன்.

    சின்னஞ்சிறிய வண்ண பறவை -குங்குமம்.

    இசை மேடையில் இந்த வேளையில் -இளமை காலங்கள்.

    மலரே மௌனமா - கர்ணா .

    காற்றே என் வாசல் வந்தாய் -ரிதம்.

    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் -கன்னத்தில் முத்தமிட்டால்
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1966
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    Raghavendra: I am not sure what you mean. Because I do not visit this thread. I took a peak because I saw "madhu" in the last column. If you meant 'Rubaiyat' of Omar Khayyam, two of his poems - veyyilketra nizhal uNdu and ezhudhi chellum vidhiyin kai- were used KaLvanin Kaadhali(1955), the movie version with Sivaji Ganesan in the lead. Those two are translations of ' Beneath the bow with a jug of wine' and 'Moving finger writes and having writ moves on'. Desikavinayakam PiLLai was the translator. I wrote about 'veyyiketra nizhal uNdu' in Thiraiyil Ilakkiyam series in TFMpage Magazine under the title 'vaname sorgam'. You might want to read it. Doon't know whether 'KaLvanin Kaadhali' was discussed.
    Dear rajraj
    Happy to read your posting with a wealth of info. Ezudhi chellum vidhiyin kaigal featured in the film Porter Kandham as a thogaiyara for the song "Varundadhe Maname" sung by Tiruchy Loganathan and composed by the duo MSV-TKR. I have read it.

    Kalvanin Kadhali has not yet been discussed here. We would like to discuss at length on the literary aspects too which however, our friends have already started in one or two songs in this thread.

    Please take part and share your valuable knowledge on songs and literature here too.

    Of course, what I wrote in that line is connected to my earlier posting sharing a song from the Tamil film "Ganga Yamuna Kaviri" which has a song in qawwali type starting with the lines "Omar Khayyam Ezudhi Vaitha Kavidhai".
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1967
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்
    தெனாலிராமன் திரைப்படத்திற்காக பதிவு செய்யப் பட்ட தென்னவன் தாய் நாட்டு சிங்காரமே பாடலுக்கான இணைப்பு

    http://www.pradosham.com/msv/1956%20...Kannadasan.mp3
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1968
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார் என்றைக்கும் தாங்கள் தரும் பாடல்களும் அவற்றிற்கான இணைப்புரையும் ஸ்பெஷல் தான். கிருஷ்ணா ஒவ்வொரு பாட்டையும் நினைவு கூரும் போது ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. கார்த்திக் சார் தரும் மேலதிக விவரங்கள், ராஜேஷின் அபூர்வமான தகவல்கள், மது, ராஜ்ராஜ் உள்பட பல சீனியர்கள் இத்திரியில் பங்கு பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீல் அவர்களின் அபூர்வ பாடல்கள் திரியினைப் போன்று இதுவும் வேகமாக மக்களை சென்றடைவது பாராட்டுக்குரியதாகும். ஒவ்வொருவரும் அளிக்கும் உழைப்பு மெச்சத் தக்கது.

    தொடருங்கள் ...அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1969
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்



    அலைபோலத் தென்றல் மலர் மீதிலே விளையாடும் இன்பத்தைப் பாரும்...

    மிகவும் இனிமையான பாடல். பி.பி.ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுசீலாவின் குரல்களில் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் கூட ரசிக்கக் கூடிய பாடல்.

    தோழன் திரைப்படத்தில் இடம் பெற்றது இப்பாடல் . 25.11.1960 அன்று வெளியான தோழன் திரைப்படத்திற்கு இசை ஜி.ராமநாதன் அவர்கள். தயாரிப்பு ஏ.திருவேங்கட முதலியார். இயக்கம் கே. வேம்பு. கதை சக்தி கிருஷ்ணசாமி. வசனம் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.வரதராஜன், கவி ஏ.எஸ்.ராஜகோபால். பாடல்கள் மருதகாசி, கண்ணதாசன்.
    ஒளிப்பதிவு எம்.ஏ.ரகுமான். எடிட்டிங் சி.ஹெச்.வேங்கடேஷ்வர ராவ், டி.சுந்தரராஜன். கலை அங்கமுத்து நடனம் வேம்பட்டி சத்யம். ஸ்டில்ஸ் ஆர்.என்.நாகராஜ ராவ். விஜயா லேபரட்டரி.

    நடிக நடிகையர் - மனோகர், அஞ்சலி தேவி, நரசிம்ம பாரதி, மாதுரி தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் மற்றும் பலர்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1970
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    ஜமுனா ராணி.

    இயேசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்

    என் நெஞ்சில் நிறைந்த அபூர்வ பாடகி ஜமுனா ராணிக்கு என் வணக்கங்கள் .
    அண்ணா!

    இந்தப் பாட்டை பாடியது பி.வசந்தா அண்ணா! ராஜேஸ்வரி அல்ல.

    'ஜினுக்கு ஜினுக்கு மேலே ஜினுக்குத்தான்
    இங்கு ஒனக்கும் எனக்கும் மெல்ல கணக்குத்தான்
    ஒருநாள் உனை பாராதிருந்தால் உடம்பே நல்லால்லே
    ஐயோ! மனசே நல்லால்லே'

    'தாயே உனக்காக' படத்தில், ஆர்மி கேம்ப்பில் எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட இராணுவ வீரர்கள் மத்தியில் சச்சு ஆடிப்பாடும் இந்தப் பாடலைத்தான் ஜமுனா ராணி பாடியிருந்தார். (எஸ்.எஸ்.ஆர் இந்தப் பாட்டில் பார்க்க இளமையாக, நன்றாக இருப்பார். நன்றாகவும் 'மஸ்த் கலந்தர்' (mast kalandar) ஆடியிருப்பார்.
    Last edited by vasudevan31355; 18th July 2014 at 08:29 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •