Hey, whom you are mention ing here as a duds??
Sent from my iPhone using Tapatalk
Printable View
Welcome back, Podas.
Hi Podas bro, welcome to Vj thread.
Thanks Vinod & cittu :)
Sent from my iPhone using Tapatalk
SiKa has done his homework well and it shows... a good fun filled entertainer.... He did look good in uniform and I think Dhanush did well in suggesting siva for this movie.. else the director would have tried his luck with Vishal /simbu/jiiva and I cant imagine them doing this !!
I felt the screenplay and editing was handled well and overall enjoyable movie :) You can watch it with family and some of the comedy had me in splits :D
title song = Dookudu :D ( thalaivar kooda photo eduthappove ninachaen....)
Podaskie...... Where were you all these days bro ???
சிவ கார்த்திகேயனின் 40 கோடி வளர்ச்சி- tamil.webdunia
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சிவ கார்த்திகேயனை ஸ்டாராக்கியது. அப்படம் 30 கோடிகள் வசூலித்ததாக படம் வெளியான நேரம் பரபரப்பாக பேசப்பட்டது.
படத்தின் வெற்றி கொண்டாட்டம் தொடங்கும் முன்பே சிவ கார்த்திகேயனுக்கும், படத்தை இக்கிய பொன்ராமுக்கும் அட்வான்ஸ் தந்து அமுக்கிப் போட்டது, திருப்பதி பிரதர்ஸ். படம் ரஜினி முருகன்.
சிவ கார்த்திகேயன் ரஜினி முருகனில் ரஜினியின் தீவிர ரசிகராக வருகிறார். அவர் நடத்தும் டீக்கடையின் பெயர் ரஜினி முருகன். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் ஒட்டு மொத்த விநியோக உரிமையை ஈராஸ் நிறுவனம் வாங்கியது. அவர்களிடமிருந்து தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் 40 கோடிக்கு வாங்கியதாக தகவல் பரவியுள்ளது.
தனுஷ், சிம்பு மட்டுமில்லாது முன்னணி இளம் நாயகர்கள் அனைவருக்கும் மிரட்சி ஏற்படுத்துவதாக உள்ளது சிவ கார்த்திகேயனின் வளர்ச்சி.
சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் காக்கி சட்டை- tamil.webdunia
எதிர்பார்த்தது போல் முதலிடத்தை காக்கி சட்டை பிடித்துள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை வெளியான படம், முதல் மூன்று தினங்களில் 1.5 கோடியை தனதாக்கியுள்ளது.
https://www.youtube.com/watch?v=oPfDVuHct04
credit: thanthi tv
No tension between Sivakarthikeyan&Dhanush: 37.30-41.08.
காக்கி சட்டை - சிவ கார்த்திகேயன் படங்களில் அதிக ஓபனிங் - webulagam
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, பரீட்சை என்று படம் வெளியாவதற்கு சாதகமற்ற சூழலில் காக்கி சட்டையை வெளியிட்டார்கள். ஆனால் வசூல்...?
சென்னையில் மட்டும் முதல் மூன்று தினங்களில் காக்கி சட்டை 1.51 கோடியை வசூலித்தது. தமிழகத்தில் முதல் நான்கு தினங்களில் வசூல் 15.58 கோடிகள்.
சிவ கார்த்திகேயன் நடித்தப் படங்களில் இதுவே அதிகபட்ச ஓபனிங் வசூல். இத்தனைக்கும் படத்துக்கு நேர்மறை விமர்சனங்களைவிட எதிர்மறை விமர்சனங்களே அதிகம்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே இப்போது காக்கி சட்டை. தொடர்ந்து ஐந்தாவது ஹிட்டை பதிவு செய்துள்ளார் சிவ கார்த்திகேயன்.
Gun Gun Rajini Muru Gun ... Mind it I Say !
http://www.bombay-arts.com/quick_gun...qgmposterx.jpg
http://www.media.glamsham.com/downlo...qgm/qgm-01.jpg
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...f0&oe=5624EAC9
SivaKarthikeyan mannerisms in movies reminds me of Mahesh Babu. Anyways he is not the first to copy Mahesh Babu style.
Rajini Murugan Songs
Rajini Murugan motion picture songtracks sounds like the TFI Movie Song Template - An intro mode, a duet design, a solo dream kind, a breakdown type and finally a folk style. As like all other Imman musical, the audio CD also proposes 4 Karaoke tracks taking up its run to a solid 50 minutes. An album rich with strings & percussion, there are loads of amazing sounds included & recorded by Imman. Not to mention ample Rajini-Mottai Combo tracks. Churning itself into Siva Collections, the pattern used in Rajini Murugan tries to stick with the popularity of Siva. The whole album brings out a rustic impression which elaborates musically what to expect from the film.
The album is a kind of candid look at the character Murugan, roaming in folk oriented districts. Apart from the slow and moving beats aided with string and wind instruments, the choice of words to the lyrics are catchy. Mostly colloquial words are used by Yugabharathy, and certainly many are my favourites - Kadala Muttai, Color Boondhi, Rathi Devi (another awesome name), bun, Uppu Biscuit, ..., etc.
Kathiri Poo Thaavani Katti Vantha Ponnu Kathaiya Kellunga Thambi.
1/ Yennama Ipadi Panreengalaema
Valavi Vaanga Pogayilae, Valanji Valanji Kuduthava
Kolusu Vaanga Pogayilae, Kulungi Kulungi Kuthichava
The song is loaded with an ethereal tone, which I think comes from a musical saw. If not, its fine, I like it anyway. Talking about the Musical Saw : The player bends their saw into a S shape. At the centre of the S shape is what is known as "the sweet spot" – a resonating, flat section of metal, which when bowed "sings" in an ethereal, almost vocal tone. By bending and manipulating the saw, the player sends the sweet spot up and down the blade, altering pitch – the top of the blade is the high register, the area near the handle is the low, and the average saw can cover up to two octaves. With the handle typically held between the player's legs, the saw player can add the theremin-like vibrato either by shaking their leg or wobbling the tip of the blade in their hand (from 'The Gaurdian Website').
So, talking about Musical Saw, I am remided of the Great Meesai Murugan. Below is a video :
https://www.youtube.com/watch?v=4YnSXzmyhic
Annubavangalai pagundhu kolla Pattam thevai illa Nanba !
2/ Jigiru Jigiru
A typical Folk song with a huge musical bit inbetween (reminded me of Mappilai Na Mappilai song) which gives enough scope for cheerful dancing. This song has some awesome chorus.
3/ Aavi Parakkum Teakadai
Kanni Theevu Pol Thodarum Love-ah Daily Papera Padichanae
The whole setup of this song is wonderful. Including the small objects of a tea shop with the appropriate sounds, Imman musically narrates the ambience of a tea shop.
4/ Un Mele Oru Kannu
After a couple of hearing, the song brings out its charm, maybe as it reminds me a lot couple of songs from Veera.
5/ Rajinimurugan
After 'Royapuram Peter-u', Siva gets another intro song. You got all the instruments yelling heroism & fanboyism.
With an intension to give instant likeable songs, Imman has convincingly makes us settle with RajiniMurugan songs for both solo and gatherings.
Rajini Murugan Songs - Strength(of)Murugan
சிவகார்த்திகேயன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கும் பி.சி.ஸ்ரீராம்?
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ரஜினிமுருகன். இப்படம் விரைவில் வெளியாவதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது.
இயக்குநர் அட்லியிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்தப்படம் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.
இதுவரை வெளியான படங்களை விட இப்படம் அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஹீரோவாகா இருக்கும் சிவகார்த்திகேயனை நம்பி படத்தை வாங்க பல நிறுவனங்கள் போட்டிபோட்டு பேசிவருவதாக சொல்லப்படுகிறது.
ஷங்கரின் ஐ படத்தில் பணிபுரிந்த நியூசிலாந்தை சேர்ந்த மேக்கப் மேன் உள்ளிட்ட பலர் இப்படத்திலும் பணிபுரியவிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தெரிகிறது.
ஒளிக்கு பி.சி.ஸ்ரீராம், ஒலிக்கு ரசூல் பூக்குட்டி, ஒப்பனைக்கு வீட்டா... அசத்தும் சிவ கார்த்திகேயன்
சிவ கார்த்திகேயனின் ஆரம்ப நாள்களில் அவருக்காக சினிமா கம்பெனிகளின் படியேறியவர், ஆர்.டி.ராஜா. சிவ கார்த்திகேயனின் படங்களை விளம்பரங்கள் மூலம் கடைசி ரசிகன்வரை கொண்டு சேர்த்ததில் ராஜாவின் பங்கு அதிகம்.
அவரது தயாரிப்பில் புதிய படம் நடிக்கிறார் சிவ கார்த்திகேயன். தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், 24 ஏஎம் ஸ்டுடியோஸ். ராஜாவின் பெயரில் இருந்தாலும் இது சிவ கார்த்திகேயனின் சொந்த நிறுவனம் என்று கிசுகிசுக்கிறார்கள்.
சுந்தர் சி., அட்லி போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். மிகப்பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.
ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம், ஒலியமைப்புக்கு ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி, கலைக்கு டி.முத்துராஜ், இசைக்கு அனிருத் என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படா படா ஆள்கள். ஒப்பனைக்கு ஐ யில் பணியாற்றிய வீட்டா ஷான் ஃபுட்டை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதேபோல் சண்டைக் காட்சிகளை அமைக்க வெளிநாட்டு கலைஞர்களை வரவைக்கிறார்கள்.
நேற்று இந்தப் படத்தின் தொடக்க விழா நடந்தது. அப்போது பேசிய ராஜா, ஒரு படத்தின் உன்னதமான தொழில்நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய பிரசித்திப் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிவது எனக்கு பெருமை.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு. இந்த படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை என்றார்.
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் அனிருத்! - VIKATAN
ரஜினிமுருகன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் பற்றி பலவிதமான தகவல்கள் உலவிவந்தன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்தை அவருடைய நண்பரான ஆர்.டி.ராஜா, 24ஏஎம்ஸ்டுடியோஸ் என்கிற புதியபடத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன்மூலம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறார். அட்லியிடம் பணியாற்றிய பாக்யராஜ்கண்ணன் எழுதி இயக்குகிறார்.
இயக்குநர் புதியவர் என்றாலும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் மிகவலிமையானவர்களாக இருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசையமைக்கிறார், சண்டைப்பயிற்சி அனல்அரசு, படத்தொகுப்பு ரூபன், கலைஇயக்கம் டி.முத்துராஜ், ஒலிவடிவமைப்பு ரசூல்பூக்குட்டி இவர்களோடு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஷான்புட் என்கிற ஆஸ்கர்விருது பெற்ற மேக்கப்கலைஞரும் இந்தப்படத்தில் பணியாற்றவிருக்கிறாராம்.
இந்தப்படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றிருக்கிறது. அதில் படத்தில் பணியாற்றுகிறவர்கள் மட்டும் கலந்துகொண்டிருக்கிறார்கள். படத்தின் பெயர் மற்றும் கதாநாயகி பற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருக்கின்றனர். இந்தப்படம் காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் உள்ள படமாக இருக்குமென்றும், இதுவரை பார்த்த சிவகார்த்திகேயனை இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில் பார்க்கலாம் என்றும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறியிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகத் தெரிகிறது.
மூன்று கெட்டப்களில் சிவகார்த்திகேயன்
பாக்யராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் மூன்று கெட்டப்களில் தோன்ற இருக்கிறார் சிவகார்த்திகேயன். இயக்குநர் அட்லீயிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பரான ராஜா, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், ஒலி வடிவமைப்புக்கு ஆஸ்கர் வென்ற ரெஸுல் பூக்குட்டி, சிறப்பு மேக்கப்புக்கு 'ஐ' திரைப்படத்தில் பணியாற்றிய 'வீடா' (Weta) நிறுவனத்தைச் சேர்ந்த ஷான் ஃபுட் என ஒரு பெரிய அணியே இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், Weta நிறுவனம் ஏன் சிவகார்த்திகேயன் படத்துக்கு என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது. இப்படத்தில் வயதானவர், வாலிபர் மற்றும் பெண் வேடம் என மூன்று கெட்டப்களில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களை விட, மிக அதிகமான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
ரவுடியுடன் மோதும் ரஜினி
குறுகிய காலத்தில் எதிர்பாராத வளர்ச்சியை எட்டியவர்கள் விஜய் சேதுபதியும், சிவ கார்த்திகேயனும்.
சின்ன பட்ஜெட் படங்கள், பரிசோதனை முயற்சிகள் என்று தன்னை வளர்த்துக் கொண்டார் விஜய் சேதுபதி. வழக்கமான கமர்ஷியல் பாதையில் சிகரம் தொட்டிருக்கிறார் சிவ கார்த்திகேயன். இவர்கள் இருவரின் படங்களும் அக்டோபர் 2 ஆம் தேதி மோதவிருக்கின்றன.
சிவ கார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல் படத்தை தயாரித்து, அவருக்கு பிரேக் தந்த தனுஷ், விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம்தான் சிவ கார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்துடன் மோதவிருக்கிறது.
வெற்றி பெறப் போவது விஜய் சேதுபதியா, சிவ கார்த்திகேயனா என்பதைவிட, தனுஷா, சிவ கார்த்திகேயனா என்றுதான் உற்று கவனிக்கிறது கோடம்பாக்கம்.
ரஜினிமுருகன் படம் கைமாறியது?
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறதாம். இந்தப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. முதலில் இந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் வெளியிடுவதாகச் சொல்லப்பட்டது. அதன்பின் இப்படவெளியீட்டிலிருந்து அந்நிறுவனம் விலகிக்கொண்டது. திருப்பதிபிரதர்ஸ் நிறுவனமே படத்தை வெளியிடும் என்று சொன்னார்கள். இப்போது படம் கைமாறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படம் வெளியிடும் உரிமையைப் பெற வேந்தர்மூவிஸ் முன்வந்திருக்கிறது. எனவே அவர்களுக்குப் படத்தைக் கொடுப்பதென லிங்குசாமி தரப்பு முடிவு செய்துவிட்டதாம். ஒப்பந்தம் கையெழுத்தானதும் வெளியில் சொல்வார்களாம். விரைவில் அது நடக்கும் என்றும் அதன்பின் சரியான வெளியீட்டுத்தேதி பார்த்து படத்தை வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ரஜினி முருகனுக்கு வந்த நிலைமையை பாருங்கள்
சிவ கார்த்திகேயன் படம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு நாற்பது கோடிக்கு வியாபாரம் பேசலாம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராமின் இயக்கத்தில் மீண்டும் சிவ கார்த்திகேயன், சூரி காம்பினேஷன் எனும் போது கோடிகளின் எண்ணிக்கை கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை. ஆனால்,
http://media.webdunia.com/_media/ta/...46062-0236.jpg
ரஜினி முருகன் வெளியாவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
உத்தம வில்லனை வெளியிட திருப்பதி பிரதர்ஸ் ரஜினி முருகனை அடகு வைக்க வேண்டிய நிலை உருவானது. ரஜினி முருகனின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் வரும் பணத்தை தருவதாகக் கூறி வருண் மணியனிடமிருந்தும் அவர்கள் பல கோடிகள் வாங்கியதாக தகவல். இந்த கடன்களெல்லாம் பூதாகரமாக முன்னால் இருப்பதால் ரஜினி முருகனை வெளியிட திணறுகிறார்கள்.
ரஜினி முருகனை வெளியிடுவதாக கூறிய பல கம்பெனிகள் பின்வாங்கிய நிலையில், மதுரை அன்பு செழியன் படத்தை தனது கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பாக வெளியிடுவதாக கூறப்பட்டது.
What's wrong with him ?
https://www.youtube.com/watch?v=RYEwuwVp5kA
எனக்கு எதிரிகள் என்று யாருமில்லை! - சிவகார்த்திகேயன் நேர்காணல்
வசூல், வியாபாரம் என்று விறுவிறுப்பான ஏற்றம் தந்திருக்கும் சினிமாவில் எதையும் தன் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் யதார்த்தமாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது 'ரஜினி முருகன்' என்ற திரைப்படம். அதுபற்றியே அதிகம் பேசித் தீர்த்தார் நம்மிடம்..
இந்தப் படத்தில் மதுரை இளைஞரா நடிக்கிறீங்க போல இருக்கே?
கூட்டுக்குடும்பம், திருவிழா என்று மதுரையை நீங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத ஒரு கலரில் இப்படம் இருக்கும். ராஜ்கிரண், சமுத்திரக்கனி என்று ஒரு பெரிய ஜாம்பவான்களோடு நடித்த நாட்கள் மறக்க முடியாதவை.
வில்லனாக பல படங்களில் சமுத்திரக்கனி நடித்து வந்தாலும், இப்படத்தில் ஏழரை மூக்கன் என்ற பாத்திரம் புதுசா இருக்கும். கொடூரமான வில்லனாக அல்லாமல் சூழ்ச்சி செய்யுற வில்லனாக நடித்திருக்கிறார். ராஜ்கிரண் சாருடைய பேரன் ரஜினி முருகனாக நான் நடித்திருக்கிறேன். ராஜ்கிரண் சார் படம் என்றாலே குடும்பப் பாங்கான காட்சிகள் இருக்கும். அதை நீங்கள் இப்படத்திலும் காணலாம். படத்தின் இயக்குநர் பொன்.ராம் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்லணும். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜ் சார் நட்பு கிடைத்தது, இப்படத்தில் ராஜ்கிரண் சார் நட்பு கிடைத்திருக்கிறது.
சதீஷ், சூரி இந்த இரண்டு பேரைத் தவிர வேறு காமெடியன்கள் கூட நடிக்க தயங்குவது ஏன்?
என்னுடைய படத்தில் நான் எப்போதுமே நாயகி, காமெடி போன்ற பாத்திரங்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. அனைத்துமே இயக்குநரோடு பணி தான். 'காக்கி சட்டை' படத்தில் இமான் அண்ணாச்சிக் கூட நடித்தேன். இயக்குநர்கள் எனக்காக கதை யோசிக்கும் போதே சூரி, சதீஷ் என்று எழுதிவிடுகிறார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் நடித்த படங்களில் இவர்கள் இருவருடன் தான் நடித்திருக்கிறேன். எனது அடுத்த படத்தில் சதீஷ் உடன் காமெடி பண்ணவிருக்கிறேன்.
உங்களுடைய அடுத்த படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி அப்படினு பெரிய பட்ஜெட்டுக்கு போய் இருக்கிறீர்கள். அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என திட்டமா?
அடுத்த கட்டம் என்றெல்லாம் நான் எப்போதுமே திட்டமிடுவது கிடையாது. படமாக வேறு ஒரு கலரில் இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணி செய்தது. காதல், காமெடி கலந்த படம் தான், ஜாலியாக இருக்கும். பெரிய பட்ஜெட், பிரம்மாண்டமாக பண்ணவிருக்கிறார்கள் என்பது எல்லாம் பி.சி. ஸ்ரீராம் சார், ரசூல் பூக்குட்டி சார், ஷான் ஃபூட் வந்ததற்கு பிறகு அப்படி தெரிகிறது. இயக்குநர் பாக்யராஜ், அனிருத், நான் மூவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று திட்டமிட்டது மட்டுமே நான். மற்ற அனைவருமே தயாரிப்பாளர் ராஜாவோட முயற்சி தான்.
அதே போல இப்படத்தைப் பற்றி பல்வேறு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது, நானும் படித்துக் கொண்டே இருக்கிறேன். நான் எதுவும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. இனிமேல் தான் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம். ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்றேன், இதுவரை என் படங்களில் நான் பண்ணாத விஷயங்கள் இப்படத்தில் இருக்கிறது.
பல நடிகர்கள் இப்போது நினைப்பது உங்களுடைய வளர்ச்சியைப் பற்றி தான். உடனே இவ்வளவு பெரிய வளர்ச்சி கிடைக்கும் என நினைத்தீர்களா?
நாம் இவ்வளவு பெரிய உயரத்துக்கு போக வேண்டும் என நினைத்து வரவில்லை. நான் பண்ணிய படங்கள் இவ்வளவு பெரிய ரீச் கிடைக்கும் என நினைக்கவில்லை. அப்படி பெரியளவில் ரீச் கிடைக்கும் போது சரியான அணி கூடத் தான் பயணம் பண்றோம் என தோன்றுகிறது. என் மீது பெரிய பொறுப்பு விழுந்துவிட்டதாக உணர்கிறேன். 8 படங்கள் பண்ணியிருக்கிறேன், பாண்டிராஜ் சார் தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள் தான். என் படங்கள் பெரிய தவறு எதுவும் பண்ணவில்லை. மெதுவாக எனது பாணியிலே பயணித்து சவாலான படங்கள் பண்ணுகிற திட்டம் இருக்கிறது. திரையுலகில் நுழைந்த உடன், ஆசைகளை மட்டும் நிறைய வைத்துக் கொண்டு வந்தேன். அவ்வளவு தான்.
மெரினா படம் பண்ணும் போது இருந்த உங்கள் லட்சியம் என்ன? இப்போது உங்களுடைய லட்சியம் என்ன?
அந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்தேன். முழுக்க பசங்களை முன்னுறுத்தி தான் கதை நகரும். அப்படத்தில் நடிக்கும் போது சினிமாவில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்துவிட வேண்டும், நல்ல பாத்திரங்கள் பண்ண வேண்டும் என நினைத்தேன். நாயகனாக வேண்டும் என நான் அப்போது நினைக்கவில்லை, எப்படியாவது பெரிய படங்களில் நாம் இருக்கிற அளவுக்கு வளர வேண்டும் என நினைத்தேன். அதுவே அப்போது எனது லட்சியமாக இருந்தது. இப்போது எனது லட்சியமாக மக்கள் அனைவருமே "இந்த சிவகார்த்திகேயன் எந்த வேடம் கிடைத்தாலும் பின்றேன் இல்ல" என்று பேசுற அளவுக்கு வளரணும். அது தான் என் லட்சியம்.
தொடர்ச்சியாக காமெடி சார்ந்த படங்களே பண்ணும் திட்டமா.. இல்லையென்றால் நாலு சண்டை, குத்துப்பாட்டு போன்ற கமர்ஷியல் படம் பண்ணும் எண்ணமும் இருக்கிறதா?
எனக்கு வரும் கதைகளில் பிடித்ததைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். அந்த மாதிரி படங்கள் எல்லாம் இப்போது நான் பண்ணுவது ரொம்ப சீக்கிரம் என நினைக்கிறேன். பொழுதுப்போக்கான படங்கள் பண்றது எனது திட்டம். அவ்வளவு தான். வேறு மாதிரியான கதைகள் எல்லாம் வருகிறது. 5 சண்டைக்காட்சிகள், 1 குத்துப்பாட்டு அந்தக் கதைக்கு தேவைப்பட்டால், அக்கதைக்கு எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பண்ணுவேன்.
முன்பை விட நிறைய சர்ச்சையில் சிக்கும் போது என்ன நினைக்கிறீர்கள்..
தொலைக்காட்சியில் இருந்த போது உள்ள சிவகார்த்திகேயன் இப்போதும் மாறாமல் இருக்கிறேன். நான் ஒரு வார்த்தை பேசினால் அப்போது ஒரு மாதிரி புரிந்து கொண்டார்கள், இப்போது வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள். நடுவில் இந்த மாதிரி விஷயங்களை நினைத்து ரொம்ப குழம்பினேன். நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. இவரை வீழ்த்தி அடுத்த இடத்துக்கு செல்ல வேண்டும் என நினைத்ததும் இல்லை. நான் சூழ்நிலைகளுக்காக மாற்றி மாற்றி பேசினால் என்னை நான் இழந்துவிடுவேன்.
'மெரினா' வெளியாகும் முன்பே திருமணமாகி விட்டது. இப்போது உங்களுடைய வளர்ச்சியை மனைவி ஆர்த்தி எப்படி பார்க்கிறார்?
முன்பு அவங்களோடு நிறைய விவாதிப்பேன், நிறைய பேசுவேன். இப்போது நிறைய பணிகள் சம்பந்தமாக மும்முரமாக இருப்பேன். இப்போது ரொம்ப மாறியிருக்கிறேன் என அவங்களுக்கு தெரியுது. நமது கணவர் ரொம்ப கஷ்டப்பட்டு படம் பண்ணி முன்னுக்கு வந்திருக்கிறார் என அவங்க நினைக்கிறாங்க. எனக்கு எனது குடும்பத்துடன் ரொம்ப நேரம் செலவு பண்றது ரொம்ப பிடிக்கும். எனக்கு குழந்தை பிறந்த போது போய் 1 மணி நேரம் இருந்துட்டு படப்பிடிப்பு போய்விட்டேன். அந்த சமயத்தில் நான் அவங்க கூட இருந்திருக்கணும். அது தான் முறை. ஆனால், அதைக் கூட அவங்க குறையாக என்னிடமும், வெளியேயும் சொன்னதில்லை. என்னுடைய வளர்ச்சியில் மிகவும் சந்தோஷப்படுறாங்க என்பது மட்டும் எனக்கு தெரியும். ஏனென்றால் அவங்க வெளியே சொல்லும் போது என்னைப் பற்றி அவங்ககிட்ட எல்லாரும் கேட்கிறாங்க, நலம் விசாரிக்கிற போது அவங்களுக்கும் என் மீது நம்பிக்கை வந்திருக்கிறது.
உங்க குழந்தை ஆராதனாவுக்கு உங்களுடைய படம் எல்லாம் போட்டு காட்டினீர்களா..
அவங்களுக்கு என்னுடைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும். தினமும் படப்பிடிப்பில் இருந்து ஏதாவது வீடியோ எடுத்துக் கொண்டுவந்து காட்ட வேண்டும். இல்லையென்றால் youtubeல் எனது வீடியோ பார்க்க வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பு வரை "டார்லிங் டம்பக்கு" பாட்டை அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தாள், இப்போது "காதல் கண் கட்டுதே" பாடல் அடிக்கடி பார்க்கிறாள். "என்னமா இப்படி பண்றீங்களேமா" பாட்டை எடிட்டிங் ஸ்டூடியோவுக்கு கூட்டிச் சென்று காண்பித்தேன். அவளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. மறுபடியும் மறுபடியும் பார்க்க 'ரஜினி முருகன்' படத்துக்கு அவங்க வெயிட்டிங்.
முன்பு மாதிரி உங்களால் சென்னையில் சுதந்திரமாக நடமாட முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா..
நான் வெளியே போவது என்றால் சினிமா மற்றும் ஹோட்டல் இரண்டுக்கும் தான். மற்றபடி வீட்டில் தான் இருப்பேன். இப்போதும் போகிறேன். புகைப்படம் எடுக்கிறார்கள், நலம் விசாரிக்கிறார்கள். வேறு எங்கு செல்வதில்லை என்பதால் எனக்கு வருத்தம் எல்லாம் கண்டிப்பாக இல்லை.
முதலில் கவுண்டமணி அடுத்து அஜித் - ரவுண்டு கட்டும் சிவகார்த்திகேயன்
ஓய்வில் இருக்கிறார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். கவுண்டமணியை சந்தித்து உரையாடியவர் அடுத்து அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக அஜித் மாறிக் கொண்டிருக்கிறார். அதிகம் அலட்டிக் கொள்ளாத அவரது இயல்புதான் அஜித்தின் பிளஸ்.
வாயில் வெற்றிலை போட்டிருப்பவர்கள் புத்திசாலியாக தெரிவார்கள் என்று கமல் ஒருமுறை சொன்னார். அதற்கான காரணத்தையும் அவரே விளக்கினார். வெற்றிலை வாயில் இருந்தால் அதிகம் பேச முடியாது. எது கேட்டாலும் பதில் பேசாமல் தலையை மட்டும் ஆட்டுவார்கள். இந்த மௌனம் அவர்களை அழுத்தக்காரர்களாகவும், அதிகம் தெரிந்த புத்திசாலிகளாகவும் காட்டும் என்றார்.
அஜித்தும் அதிகம் பேச மாட்டாரா... அவர் எது சொன்னாலும் பொன்மொழிதான் மற்றவர்களுக்கு. அண்ணன், அப்பா சொல்லித்தர வேண்டிய விஷயங்களை அஜித் என்னிடம் பேசினார். அவர் சொன்னவற்றை கடைபிடித்தால் பெரிய நடிகனாவேனோ இல்லையோ நல்ல மனிதனாவேன் என்று சிவகார்த்திகேயன் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
வள்ளுவர் முதல் வள்ளலார்வரை பெரியவர்கள் சொன்னதைவிட அதிகம் அப்படி என்னதான் தல சொல்லியிருப்பார்?
மதுரை சம்பவம்: ரசிகர்களின் ஆதரவால் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
http://tamil.thehindu.com/multimedia...2_2555318f.jpg
"ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி, உங்கள் அன்பு எனக்கு வலு சேர்க்கிறது" என்று மதுரை சம்பவத்தையொட்டி, நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் அவரது சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நேற்று காலை ஒரே விமானத்தில் மதுரை வந்தனர்.
கமல்ஹாசனை வரவேற்க விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் அவர் விமான நிலையத்தில் பயணிகள் வெளியே செல்லும் வழியாக வராமல், பயணிகள் நுழையும் வழியாக வெளியே வந்து காரில் சென்றார்.
அவரை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த கமல் ரசிகர்கள், சிவ கார்த்திகேயனை முற்றுகையிட்டு, ரஜினி முருகன் படத்தில் நடிப்பதற்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு, அவரை பின் தொடர்ந்தனர்.
பாதுகாவலர்கள் சிவகார்த்திகேயனை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பினர். அப்போது, அவரது காரை சில ரசிகர்கள் தட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்து, ட்விட்டரில் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலர் #WeSupportSivaKarthikeyan என்ற ஹாஷ் டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர். இது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் இந்த செயலுக்கு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், "உங்களது ஆசியினால் நான் நலமாக இருக்கிறேன். இந்த தருணத்தில் எனக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் அன்பு எனக்கு வலு சேர்க்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேற்றே தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில், தான் நலமாக இருப்பதாகவும், எந்த பிரச்சினையும் நடக்கவில்லை என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்திலும் ஜோடி சேர்ந்த நடிகை
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் இம்மாதம் வெளியாகவிருக்கிறது, அடுத்து புதுஇயக்குநர் பாக்யராஜ்கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
அந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், இசை அனிருத் மற்றும் ரசூல்பூக்குட்டி உள்ளிட்ட புகழ்பெற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா இந்தப்படத்தைத் தயாரிக்கிறார்.
இவ்வளவும் அறிவித்தவர்கள் படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் சொல்லவில்லை. ஆனால் படத்துக்கு நாயகியை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.
சிவகார்த்திகேயனின் முந்தையபடமான ரஜினிமுருகனில் அவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்திசுரேஷ்தான் இந்தப்புதிய படத்திலும் அவருக்கு ஜோடி என்று சொல்கிறார்கள். விரைவில் புதியபடத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
ஈராஸ் பிரச்சினை முடிந்தது: விரைவில் 'ரஜினி முருகன்' ரிலீஸ்ஈராஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பெரும் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கொடுத்துவிட்டதால், 'ரஜினி முருகன்' விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
http://tamil.thehindu.com/multimedia...n_2595597f.jpg
'ரஜினி முருகன்' படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ்
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம் ’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடும் முயற்சியில் பலமுறை இறங்கியது. ஆனால், அந்நிறுவனம் வாங்கிய கடனால் படத்தை வெளியிட முடியாமல் திணறியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் திருப்பதி பிரதர்ஸ் இறங்கியது.
ஈராஸ் நிறுவனம் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கொடுத்தால் மட்டுமே 'ரஜினி முருகன்' படத்தை வெளியிட முடியும் என தெரிவித்து வந்தது. தற்போது, கொடுக்க வேண்டிய தொகையில் ஒரு பெரும் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் செலுத்திவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஈராஸ் நிறுவனமும் இப்படம் வெளியீட்டுக்கான தடையைத் தளர்த்திக் கொள்ள முன்வந்திருக்கிறது என்கிறார்கள். மற்ற பைனான்சியர்களிடம் திருப்பதி பிரதர்ஸ் தனது பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. இப்பேச்சுவார்த்தை சுமுகமாக விரைவில் முடிய வாய்ப்பிருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
அனைத்து பிரச்சினைகளையும் முடித்து, தீபாவளி கழித்து நவம்பர் 27ம் தேதி இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட வாய்ப்பிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.
Rajini Murugan from 04-dec-2015
https://pbs.twimg.com/media/CU1fOBUVAAQxL6j.jpg:large
https://pbs.twimg.com/media/CU0YKwUUwAEv3Mv.jpg
Ironically Rajinimurugan wallpaper looks like wallpapers from 1980s movies, the story might be 1980yish too. This is the circle of cinema, recycle same stories, just with different faces.
Nikkil Murugan @onlynikil 3h3 hours ago #RajiniMurugan Movie release postponed Due to heavy rain @dirlingusamy @Siva_Kartikeyan @immancomposer
ரஜினிமுருகன் ரிலீஸூக்கு ஐந்துகோடி கொடுத்த சிவகார்த்திகேயன்? - VIKATAN
இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பில் பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் படம் தயாராகிச் சில மாதங்கள் ஆகிவிட்டன. படத்தைத் தயாரித்த திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக அந்தப்பட வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டிருந்தது.
இப்போது ஜனவரி14 பொங்கல்நாளில் படம் வெளியாகிவிடும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே இரண்டுக்கும் மேற்பட்ட வெளியீட்டுத்தேதிகள் சொல்லப்பட்டு அப்போதெல்லாம் படம் வெளியாகாததால் இந்தத் தேதியிலாவது வந்துவிடுமா? என்கிற சந்தேகம் இருந்ததாம். ஆனால், இம்முறை படம் உறுதியாக வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் தயாரிப்புநிறுவனத்துக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் சரிசெய்யப்பட்டுவிட்டன என்று சொல்லப்படுகிறது.
ஒன்றைச் சரிசெய்தால் இன்னொன்று வரும் என்பதற்கேற்ப பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுவந்த தயாரிப்பாளர்களின் சிக்கலைத் தீர்க்க உதவி செய்ய சிவகார்த்திகேயன் முன்வந்தார் என்று சொல்லப்பட்டது.
இதற்காக அவர் ஐந்துகோடி கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மிச்சம்மீதி இருந்த சிக்கல்களும் தீர்க்கப்பட்டு கண்டிப்பாக படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.
#Rajini 'Vasool' Murugan continues to mint money not just in Tamil Nadu but also in the neighbouring states
https://pbs.twimg.com/media/CZP95byUsAArDfJ.jpg
Tuntari Teaser Launch On Jan 29th !!!