http://i42.tinypic.com/142ftld.jpg
Printable View
இன்று ஒரு இனிய நன்னாள் ! ஆதவனுக்கு நன்றி சொல்லும் நாள் - அந்த ஒளி கடவுள் நம் நன்றியை எதிபார்ப்பது இல்லை - அவன் தன் கடமையை சரிவர செய்துகொண்டுருக்கின்றான் - அதனால் தான் இந்த உலகம் இருளில் இன்னும் சிக்கி தவிக்காமல் உள்ளது - இந்த பாடல் அவனுக்கு நன்றி சொல்லும் பாடல் - இது போல எளிய , இனிய பாடல் NT படத்தை விட்டால் வேறு எங்கு கிட்டும் ?
அன்புடன் ரவி
http://youtu.be/xsCtzX-9TiU
[[/I]
உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவி சிங்கம் தளர்ச்சியில் விழல் ஆகுமா? மகனே சந்தனம் சேறாகுமா ? கவியரசு கண்ணதாசனை தவிர யாரால் இப்படி பாடல் எழுத முடியும். கவியரசின் வைர வரி, கே.பி. சுந்தரம்மாள் குரல் வளம், கே.வி. மகாதேவனின் இசை, நடிகர் திலகத்தின் நடிப்பு என காலத்திலும் அழியாத காவியம் தான் மகாகவி காளிதாஸ் திரைக்காவியம்.
வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு அது வரை பொறுப்பாயடா மகனே என் அருகினில் இருப்பாயடா --- கவித்துவம் நிறைந்த பாடல் - இதோ உங்களுக்காக அந்த இனிய பாடல், இந்த இனிய நல்நாளில்!!
http://youtu.be/l1kYJFo-uBU
ஜீ தமிழ் பகல் 2.30 மணி
16.01.2014 – மகாகவி காளிதாஸ்
பார்க்க தவறாதீர்கள்
அன்புடன்
ரவி :smokesmile:
19.01.2014 தேதியிட்டு வெளிவந்துள்ள இவ்வார ராணி இதழிலிருந்து..
Attachment 2932
காலத்தை வென்ற காவியம் என்று பல படங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு சில படங்களே அந்த வெகுமதிக்கு உரித்தானவை. அவற்றில் நிச்சயம் இடம் பிடிக்கும் படங்களில் ஒன்றுதான் நடிகர் த்லகதின் மகோனத்த படைப்பான கர்ணன். தமிழ் சினிமாவின் சரித்திரத்திலேயே என்றுமே அழியாத இடத்தை கைப்பற்றிய காவியம் கர்ணன்.
இன்றைக்கு சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இதே பொங்கல் திருநாளில் தமிழ் நாட்டின் திரையரங்குகளில் ஒளி கடவுளின் அவதாரம் தன பொன் கிரகனங்களை பரப்பியவாறு வளம் வர தொடங்கினான். அன்றைக்கு துவங்கிய திக்விஜயம் இன்று வரை நிற்காமல் தொடர்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி எழுதி போது கர்ணன் பற்றி எழுதியதை மீண்டும் நினைவு கூர்கிறேன்.
மதுரையில் ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கத்தில் 100 நாட்களை கடந்த படம் - கர்ணன்.
முதன் முதலாக தங்கத்தில் ஒரு நாயக நடிகரின் 3 படங்கள் 100 நாட்களை கடக்கும் சாதனையை நிகழ்த்தியதும் நடிகர்திலகம் தான். அவை
பராசக்தி - 112 நாட்கள்
படிக்காத மேதை - 116 நாட்கள்
கர்ணன் - 108 நாட்கள்
இன்று வரை இது யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாகும்.
மதுரை - தங்கத்தில் கர்ணன் 108 நாட்களில் பெற்ற வசூல் - Rs 1,98,102.99 p.
ஒரு இடைவெளிக்கு பின் மதுரையில் மீண்டும் வெளியிடப்பட்ட போது கர்ணன் செய்த சாதனைகள்.
வெளியான நாள் - 23.11.1978
அரங்கம் - ஸ்ரீ மீனாக்ஷி
தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 50 (இது ஒரு சாதனையாகும்)
ஓடிய நாட்கள் - 22
மொத்த வசூல் - Rs 93,280.55 p
ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 50
சென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100
முதன் முதலாக மதுரையில் ஒரு புதிய படம் போல ரசிகர் மன்ற டோக்கன் மூலமாக டிக்கெட் விற்கப்பட்டது இந்த படத்திற்கு தான்
மீண்டும் மதுரையில் 03.03.2005 அன்று சென்ட்ரல் திரையரங்கில் வெளியிட்ட போது ஓடின நாட்கள் - 14.
2012-ல் திரையிட்ட போது கர்ணன் செய்த சாதனைகளை ஏற்கனவே பலரும் இங்கே குறிப்பிட்டார்கள். கர்ணன் செய்த சாதனைகளில் தலையாய சாதனை சென்னை சத்யம் அரங்கில் 152 நாட்களும் எஸ்கேப் அரங்கில் 115 நாட்களும் ஓடியது மட்டுமல்ல சத்யம் வளாக வசூல் ரூபாய் ஒரு கோடியை தாண்டியது என்பதுதான் பிரமிக்கத்தக்க வெற்றி.
தினம் தினம் வந்தாலும் சூரியனை உலகம் வரவேற்பதே வழக்கம். அது போன்றே திரையரங்குகளுக்கு சூரிய புத்திரன் எப்போது விஜயம் செய்தாலும் தமிழக மக்கள் வரவேற்பு தருவது நிச்சயம்.
பொற்கால ஆண்டான 1964-ன் முதல் முத்து வெளியாகி பொன் விழா ஆண்டை நிறைவு செய்து அகவை 51-ல் அடியெடுத்து வைக்கும் இந்த நல்ல நாளில் கர்ண நினைவுகளை நினைவு கூர்வோம். உளம் மகிழ்வோம்.
அன்புடன்
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மனதில் என்றுமே மாறாமல் மறையாமல் மறந்து விடாமல் நிலைத்து நிற்கும் சில விஷயங்களில் பொற்கால ஆண்டான 1964-க்கு தனியிடம் உண்டு. வெளியான படங்களை வைத்து பார்க்கும் போது பொற்கால ஆண்டாக விளங்கும் 1964 இந்த 2014-ல் பொன் விழா ஆண்டாகவும் மலர்ந்திருக்கிறது. அதை பற்றிய தகவலகளையும் புகைப்படங்களையும் நமது நண்பர்கள் ஆதிராம் மற்றும் கோல்ட் ஸ்டார் சதீஷ் அழகாய் பதிவிட்டிருந்தார்கள். அந்த பொற்கால ஆண்டைப் பற்றிய என்னுடைய பழைய பதிவு இங்கே மீள் பதிவாக.
வருடம் - 1964
நடிகர் திலகத்தின் வெளி வந்த படங்கள் - 7
அவற்றில் 70 நாட்களை கடந்த படங்கள் - 7
100 நாட்களை கடந்த படங்கள் - 5
முதன் முதலாக சென்னையில் ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.
அது மட்டுமல்ல 5 படங்களும் சென்னையில் 15 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய முதன் முதல் சாதனை இன்று வரை முறியடிக்கப்படாத ஒன்றாகும்
கர்ணன் - 14.01.1964 - சென்னை - சாந்தி, பிரபாத், சயானி - 3
பச்சை விளக்கு - 03.04.1964 - சென்னை - வெலிங்டன், ராக்ஸி,மஹாராணி - 3
கை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்னை - மிட்லாண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம் - 4
புதிய பறவை- 12.09.1964 - சென்னை - பாரகன் - 1
நவராத்திரி - 03.11.1964- சென்னை - மிட்லாண்ட், மஹாராணி, உமா, ராம் - 4
1963-ல் 15.11.1963 அன்று வெளியாகி 1964- ம் ஆண்டு 22.02.1964 அன்று சென்னை காசினோவில் 100 நாட்களை கடந்த அன்னை இல்லத்தையும் சேர்த்தால் 6 படங்கள் 16 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது.
12.06.1964 அன்று வெளியான ஆண்டவன் கட்டளை சென்னையில் திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் 8 வாரங்களை வெற்றிகரமாக கடந்து ஓடியும் பாரகன் அரங்கில் 100 நாட்களை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நேரம். நடிகர் திலகத்தின் புதிய பறவை திரைக்கு வர தயாராகிக் கொண்டிருந்த நேரம். சாந்தியில் வெளியிட ஏற்பாடுகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் ராஜ்கபூரின் சங்கம் ஹிந்தி திரைப்படம் சாந்தியில் திரையிடப்படுகிறது. இந்த நேரத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். அந்த வருடம் (1964) கர்ணன் தவிர வேறு எந்த நடிகர் திலகத்தின் திரைப்படமும் சாந்தியில் திரையிடப்படவில்லை. சங்கம் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு. நான்கு வார இடைவெளிக்காக திரையிடப்பட்ட சங்கம் படத்தின் வெற்றியை பார்த்த நடிகர் திலகமும் சண்முகமும் புதிய பறவை படத்தை சாந்தியில் வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்து வேறு அரங்கு தேடிய போது மவுண்ட் ரோட்டில் வேறு அரங்குகளே கிடைக்காத சூழலில் பாரகன் அவர்கள் கண்ணில் பட்டது. 100 நாட்களை எளிதாக கடந்திருக்க கூடிய ஆண்டவன் கட்டளை பலிகடா ஆனது. புதிய பறவை திரையிடபடுவதனால் பாரகன் அரங்கில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி வந்ததால் ஆண்டவன் கட்டளை முன் கூட்டியே 70 நாட்களோடு நிறுத்தப்பட்டது. பாரகன் அரங்கு புதுப்பிக்கப்பட்டு 12.09.1964 அன்று புதிய பறவை வெளியானது. புதிய பறவைக்காக 100 நாட்களை விட்டுக் கொடுத்த படம் ஆண்டவன் கட்டளை.
அது போன்றே முரடன் முத்து திரைப்படமும். தயாரிப்பாளர் முகாம் மாறியதால் படத்தை விளம்பரப்படுத்தவோ படத்தின் ஓட்டத்திற்கு எந்த வித முயற்சியும் எடுக்காமல் போயும் கூட முக்கிய நகரங்களிலெல்லாம் 8 வாரங்களை கடந்த முரடன் முத்து அதிகபட்சமாக கோவையில் 79 நாட்கள் ஓடியது. சொல்லப் போனால் பந்துலு பிற்காலத்தில் எடுத்த கருப்பு வெள்ளை மற்றும் சில கலர் படங்களை விட அதிக நாட்கள் ஓடிய படம் முரடன் முத்து.
சென்னை நகரை பொறுத்தவரை அந்த 1964-ம் ஆண்டில் நடிகர்திலகத்தின் 7 படங்கள் மொத்தம் 26 அரங்குகளில் வெளியானது. அவற்றில் 25 அரங்குகளிலும் அந்தப் படங்கள் குறைந்த பட்சமாக 8 வாரங்கள் ஓடி வெற்றிக் கொடி நாட்டியது. 50 வருடங்களாக இது சாதனை சரித்திரமாகவே இருக்கிறது.
முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த தமிழ் படம் - புதிய பறவை.
முதன் முதலாக ஒரு பாடலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இசை கருவிகள் பயன்படுத்தப்பட்டது நடிகர் திலகத்தின் படத்திற்கு தான்.
பாடல் -எங்கே நிம்மதி
படம் - புதிய பறவை.
முதன் முதலாக பன்னிரண்டு வருட இடைவெளியில் 100 படங்களில் அதுவும் நாயகனாகவே நடித்த ஒரே நடிகர் நடிகர் திலகம் தான்.
1952 தீபாவளி - பராசக்தி
1964 தீபாவளி - நவராத்திரி
முதன் முதலாக இந்திய திரையுலகில் ஒரு நாயகன் ஒரு திரைப்படத்தில் 9 வேடங்கள் ஏற்று நடித்த சாதனையை செய்தது நடிகர் திலகம் தான்.
படம் - நவராத்திரி.
ஒன்பது வேடங்களில் சிறந்த மூன்றை தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டு, ஆர்வத்துடன் மக்கள் பங்கு பெற, அவர்களில் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் முதன் முதலாக நடிகர் திலகத்தின் நவராத்திரி படத்தின் மூலமாகத்தான்.
அன்புடன்
just a curiosity, which were the three roles that won? it will definitely be a very hard choice......................... my pick would be 1.drama artiste 2. hero's uncle 3. the rough and tough guy who gets killed after taking revenge
சிவாஜி கணேசன்..
திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’
செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!
எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.
குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல்.
’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.
’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.
’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.
சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா?
ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’
’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’
ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை....
கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்..
இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.
இன்னும் எத்தனை எத்தனை.....
நாம் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் நம்முடைய சிவாஜி கணேசன்.
நன்றி ராஜநாயகம் ..
சிவாஜி கணேசன்.. திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை. ’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை. நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!! எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’ என்ற வீரபாண்டிய கட்டபொம்மன். குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல். ’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன். ’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன். ’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி. சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா? ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’ ’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’ ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி. ’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர். நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.... கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய “அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்.. இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை எத்தனை..... நாம் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் நம்முடைய சிவாஜி கணேசன். நன்றி ராஜநாயகம் ..
.
Like · · Share · 40 minutes ago ·
Aanandh Padmanaban and 14 others like this.
.
1 share
.
Raghavan Nemil Vijayaraghavachari அது மட்டுமா ? ரோஜாவின் ராஜா படத்தில் பலவிதமான நடைகள், தெய்வமகன் படத்தில் இளைய மகனின் அசத்தல் ஸ்டலிஷ் நடை, பார்த்தால் பசி தீரும் படத்தில் " உள்ளம் என்பது ஆமை" பாடலில் இம்மியளவும் பிசகாத ஊனமுற்றவனாக நடக்கும் நடை, பாகப்பிரிவினையில் அந்த ஊனமுற்ற இடது கையை ஒரே பொஸிஸனில் வைத்துக்கொண்டு படம் முழுவதும் வரும் காட்சிகள், பாலும் பழமும் படத்தில் " போனால் போகட்டும் போடா" பாடலில் நடக்கும் நடை மற்றும் முக பாவங்கள். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட ஒரு மகத்தான ந்டிகன் தமிழ் நாட்டில் மட்டும் பிறக்காமல் வேறு எந்த மாநிலத்தில் பிறந்திருந்தாலும் உலகமே கொண்டாடும் அளவுக்கு அந்த மாநில அரசுகளும், மக்களும் உயர்த்தியிருப்பார்கள். நடிப்பில் மட்டுமல்ல அவருடைய படங்கள் அவரின் படத்திற்கே போட்டியாக பல தடவைகள் வெளியான போதும் அவைகள் பெற்ற வெற்றிகள் அவர்மட்டும் தான் உண்மையான வசுல் சக்கரவர்த்தி என்பதை உறுதி செய்துள்ளன. ஆனால் அவரின் சாதனைகள் எல்லாம் மறைக்கப்பட்டு அவரை உயர்ந்த இடத்தில் வைக்காதது தமிழ் நாட்டுக்குத்தான் இழப்பு.
about a minute ago · Edited · Like · 1
..
Raghavan Nemil Vijayaraghavachari
Write a comment...
The above message was posted by " Urayuril Thaamarai " in Facebook. I am pasting this in this block with my comments on his posting.
..
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். செலுலாய்ட் சோழன் தொடருக்கு நன்றி திரு சந்திரசேகர். தொடர்ந்து இடவும் என்னை போல் வெளி நாட்டில் இருப்பவருக்கு பெரும் உதவியாக இருக்கும்.
முரளி சார் , அருமை - உங்கள் பதிவுகளில் இருக்கும் உண்மை , எழுதும் விதம் , யாராலுமே சவால் செய்ய முடியாத விபரங்கள் - மெய் சிலிர்க்க வைக்கின்றன - நீங்கள் எங்கள் முகாமில் இருப்பதால் நாங்கள் பிழைத்தோம் - அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் - தொடருங்கள் - பொய்யை மெதுவாக சொன்னாலும் போதும் உண்மையாகி விடும் இந்த காலத்தில் , உண்மையை சத்தமாகவும் , ஆணித்தரமாகவும் சொல்லவேண்டியுள்ளது - அப்படி சொல்வது உங்களுக்கே உரித்தான கலை !!
அன்புடன் ரவி
:):smokesmile:
பிரம்மாண்டத்தின் மகுடத்தில் வைரமாக ஜொலிக்க போகும் தங்க சுரங்கத்தை வெளியிடும் சுப்புவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் - நல்ல திரை அரங்கமாக வெளியிடுங்கள் முரளி சொன்னது போல - வெற்றி உங்களுக்கு நிச்சயம் !!!
அன்புடன் ரவி
:):smokesmile:
RAGHAVENDRA SIR'S POST
அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் நமக்கு ஒவ்வொரு முறையும் புத்தம் புதிய பரிமாணத்தில் ரசனையை உருவாக்குபவை நடிகர் திலகத்தின் நடிப்பில் அமைந்த காட்சிகள். இவற்றை விவாதிக்க லட்சக்கணக்கில் புதினங்களும் காணொளிகளும் இணைய தளங்களும் போதாது. இதை நிரூபிக்கும் வகையில் புதியதாய் மலர்ந்துள்ளன, நடிகர் திலகத்திற்கென உள்ள இணைய தளங்கள். ஏற்கெனவே உள்ள www.nadigarthilagam.com, www.nadigarthilagamsivaji.com, www.nadigarthilagam.proboards.com, என உள்ள இணையதளங்களுடன் புதியதாய் மலர்ந்துள்ள மற்றொரு இணைய தளம்,
www.thalaivansivaji.com
தமிழ் இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர், கதாசிரியர், கவிஞர், பேச்சாளர், திரு நாஞ்சில் இன்பா அவர்களின் இந்த இணைய தளம், இதுவரை அணுகாத புதிய கோணத்தில் நடிகர் திலகத்தின் பொது வாழ்வு. சமுதாய அர்ப்பணிப்பு, சேவை போன்ற அம்சங்களை முன்னிலைப் படுத்தும் வகையில் இவ்விணைய தளத்தின் தலைப்பு அமைந்துள்ளது. இது நிச்சயமாக நடிகர் திலகத்தின் புகழையும் பெருமையையும் மக்களிடம் பெரும் அளவில் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
திரு நாஞ்சி்ல் இன்பா அவர்களுக்கு நமது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் கலக்கிய எவர் கிரீன் entertainer என்னை போல் ஒருவன் சென்னை ஓட்டேரி சரவணா திரையரங்கில் இன்று [17.01.2014] முதல் தினசரி மூன்று காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.
நான்மாடக் கூடலாம் மதுரை மாநகரில் all time mega hit வசந்த மாளிகை அண்மையில் திரையிடப்பட்டு ஓடிய விவரம் சற்று தாமதமாக கிடைத்திருக்கிறது. சென்ற மாதம் டிசம்பர் இறுதி வாரத்தில் மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் திரையரங்கில் மீனாட்சி மணாளன் காட்சியளித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அழகாபுரி இளைய ஜமீன் ஆனந்த் தன் பங்கிற்கு வைகை வடகரை மக்களை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார். மதுரையின் வடகரையில் அமைந்துள்ள விஜய் பாரடைஸ் திரையரங்கில் வசந்த மாளிகை திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. ஒரே நேரத்தில் நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் ஓடுவது நமக்கு புதுமையா என்ன? எப்போதும் நடைபெறுவதுதானே!
மேற்கண்ட தகவல்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்ட நண்பர் திரு ராமஜெயம் அவர்களுக்கு நன்றி!.
அன்புடன்
மையம் திரியின் வெற்றி விழாவில் நடிகர் திலகம் ஆற்றிய உரை .
http://i40.tinypic.com/111ifmg.jpg
என் இனிய ரசிகர்களே
என்னுடைய படங்கள் பற்றி பல்வேறு பதிவுகள் -இனிய கட்டுரைகள் - ஆய்வுகள்
விளம்பரங்கள் - பாடல்கள் -கருத்து பதிவுகள் என்று களை கட்டிய நடிகர் திலகம் திரி
இன்று அமைதியாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது .
சென்னை - மதுரை - கோவை - திருச்சி - வியட்னாம் -ஹைதராபாத் - பெங்களுர்- நெய்வேலி
நெல்லை - துபாய் - போன்ற நகரங்களில் வாழும் என் இனிய உள்ளங்களே
ஏன் இந்த மௌனம் ?
என் சிலைக்கு ஒன்றும் ஆகாது . கோபதாபங்களை மறந்து என்றும் போல் உங்களின்
பதிவுகளை வழங்கி திரியினை ஒளி ஏற்றுங்கள் .
26.1.1966- மோட்டார் சுந்தரம் பிள்ளை - எண்ணி பாருங்கள் .
26-1-1972
இந்த ராஜாவை நினைத்து கொள்ளுங்கள் .
இன்னும் நான் என்ன சொல்ல .....
[கற்பனை உரை ]
புகழ் பெற்ற பாடலான பார்த்த நியாபகம் இல்லையோ பாடலின் ஹம்மிங், போன வருடம் வெளி வந்த இந்தி படம்
தலாஷ் இல் உபயோஹபடுத்த படிருகிறது.
புதிய பறவை கு மூல படம் மராட்டி மொழியோ.
படத்தின் டைரக்டர் தாதா மிரசி, மும்பையை சேர்ந்தவர்.
NADIGAR THILAGAM SIVAJI GANESAN's HINT TO BALACHANDER ABOUT THE FATE OF EDHIROLI -
MY GOD WHAT A JUDGEMENT FROM THE GOD OF CINEMA !
பாலசந்தருக்கு சிவாஜிகணேசனுடன் ஏற்பட்ட அனுபவங்கள்
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 30, 10:49 PM IST
சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.
இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-
"சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.
சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.
"நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க'' என்றார், சிவாஜி.
இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.
கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளியூருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.
அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.
சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். "சாப்பிட்டீங்களா?'' என்று கேட்பார்.
நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.
சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.
அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. "கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டார்.
ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.
இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த "எதிரொலி'' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை-கால் நடுங்கின. "பராசக்தி'', "மனோகரா'' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.
அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.
நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.
"நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்'' என்று சிவாஜியிடம் சொன்னேன்.
அவர் உடனே, "அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்'' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.
நான் படித்துக்காட்டினேன். "நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!'' என்றார், சிவாஜி.
"என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!'' என்றேன்.
"இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.
இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.
இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.
தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-
"ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?''
- இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.
நான் திடுக்கிட்டேன். "என்ன சார்... என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன்.
"இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே'' என்று மீண்டும் சொன்னார்.
எனக்குப் பெரும் அதிர்ச்சி. "அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?'' என்று நான் கேட்க, "இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?'' என்று சிவாஜி கேட்டார்.
"இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே'' என்று நான் சொல்ல, "அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.
அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
NT.s opinion about Etiroli proved very correct KB's one of the movies where CONTINUIY was lacking is no doubt Ethioli, in additon to improper character build ups. my opinion.
ALL jan 26 was great days for NT and all of us year 1966 day opened with big bang of announcement in all papers with daily thanthi captioned PADMASRI AWARDED TO SIVAJI GENESAN, the day had more festive look at crown mint with lot of crackers burstigs and sweet distributions etc.
most memorable day.
MARCH 17th - BRAMMAANDATHTHIN ADAYAALAM - A RECAP
When one of the leading distributor decided to enthrall genuine film lovers with a wonderful mythological epic KARNAN enacted by the God of Cinema, Nadigar Thilagam Sivaji Ganesan, many film fraternities had sarcastically, drastically passed crude comments on the fate of this distributor, Mr.Chokalingam.
Certain section who always envied Nadigar Thilagam since his dominance from 1952 until 1992 poo-pooed the distributor stating "He is gone forever"..."He is a fool to do this"...."Is he mad?" etc., etc.,
However, this mentally strong man never bothered about those comments and he already knew the power of Nadigar Thilagam in the Box Office continued in his efforts to bring this Old Wine in a New Bottle.
More than 4 years of his hard work and his younger day's dream came true on March 17. Yes, Karnan was released in about 72 theaters, almost double of its original release in 1964.
While, Karnan of Mahabaratha was a scape goat throughout his life, Our Nadigar Thilagam's Karnan too suffered FALSE PROPAGANDA since 1964 mentioning that it was a failure and the producer switched side post his Karnan venture. The FALSE PROPAGANDA from the Dravidian Party Members were aimed at One Goal. To bring disgrace to the son of soil, to convert majority of the producers who produced films with Nadigar Thilagam to their side and make them to do film with someone whom they supported ever since Nadigar Thilagam was made to quit their camp.
It is quite ridiculous and hilarious to note the comments by the other section quite often that Karnan produced by this producer which had completed 50 days in all centers of its release and completed 11 weeks in over 26 theaters and ran over 100 days in 4 theaters including the Asia's largest theater with mammoth 2538 seats Madurai Thangam as Failure, while the first film of the same producer after switching the camp could complete 100 days in 3 theaters in chennai only as "Super Hit" ! Strange and Weird is all we could say !
This false propaganda once again started floating, this time in the form of posters in road.
But, this time, the people of Tamilnadu who had become more intelligent over 40 years, decided to ignore the false, biased and enviable statements of the gentlemen who always involve in mud-slinging Nadigar Thilagam and give Karnan an overwhelming response across Tamilnadu once again.
People of Tamilnadu welcomed KARNAN in a RED CARPET. Amidst, so many new releases that happened week on week in multiplex theaters, KARNAN was the lone SUPER DUPER HIT of the year 2012.
Sathyam Witnessed a 152 Days run and Karnan was the only film for the whole year to complete 150 days. Similarly, another multiplex owned by Sathyam Group, ESCAPE RX witnessed 115 days run.
A classic film that was 48 years old and is much available for view in online, VCD, DVD and telecasted in private channels, had a the Distinction in the history of world cinema of running over 100 days in the re-release in couple of centers and completing 152 days.
Nadigar Thilagam once again proved his mettle in the BOX OFFICE even in Multiplex environment. His films is now the first choice for the distributors to think of re-releasing in Digital Format Restoration.
Every 25 Days of Karnan's completion in re-release, Chennai City Walls had Posters from certain section of his opponents. People of Tamilnadu, atleast Chennai could only Pity those foul players and those grief and Inferiority Complex struck envies.
Lest, the forgot that a day would come and their favorite hero's film too would be screened in Digital Format Restoration and what if it had the same boomerang effect?
Rather than abusing one out of agony, frustration, inferiority complex and envy why not they appreciate the efforts of a distributor who is trying his best to give a chance to the younger generation to understand our tradition, values etc., which are fading out faster in today's technology driven environment...!
http://www.youtube.com/watch?v=5cxt28JOQVk
உண்மை உணரும் நேரம் - 4
சென்னை ராம் திரையரங்கில் 1964-ம் வருடம் வெளியான நவராத்திரி 100 நாட்கள் ஓடியதன் விளம்பர ஆதாரம். 10.02.1965 ம் ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி தினத்தந்தியில் மற்றும் The Hindu தினசரிகளில் வந்த விளம்பரங்கள். பழைய கொம்பு உள்ள னை வைத்த சென்னையை தினத்தந்தி விளம்பரத்தில் காணலாம்.
http://i1110.photobucket.com/albums/...GEDC4962-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4963-1.jpg
அதே 1964-ல் தியேட்டரில்வெளியான திரைப்படமும் 100 நாட்களை கடந்து ஓடியது. சென்னை நகரில் 50-வது நாள் விளம்பரம இதோ.[100 வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் பதிவிடப்படும்]
http://i1094.photobucket.com/albums/.../GEDC3907a.jpg
இப்போது திடீரென்று ஏன் இந்த விளம்பரங்கள் என்று கேள்வி எழலாம். காரணம் உண்மையை உரக்க கூற.
அந்த உண்மை என்னவென்றால் வரலாற்றில் 1964-ம் ஆண்டு என்பது 1972-ம் ஆண்டிற்கு முன்பே வருவது என்பதை சுட்டிக்காட்டவே.
அன்புடன்
Thanks murali sir for proof of successful 100 days run of NT.s two movies in four theatres in city in the year of 1964, which was a unique and unbeatable record, incidently i had the pleasure of watching the two on the very first day first show at prabhath and maharani ,theatres. prior to this Alayamani ran 100 days in four theatres, Being the very first record created,
Ravi kiran's karnan mela records a timely reminder to cinema lovers,
great days of NT'S DAYS
welll said ravikiran sir. However, marketing strategy and meticulous planning for a rerelease besides the ever enduring value of Karnan as an epic with NT's immortal characterisation made the film a huge success and a trend setter for digital conversions of the succeeding movies of NT and remains the inspiration for the other actors' movies too for a possible rerelease! Compared to Karnan Vasantha Maaligai or Thiruvilayadal or Paasamalar could not reach the scales of success and collection in their rerelease for obvious reasons of marketing lacunae making Karnan the one and only one movie of such a rerelease value in the market and overwhelming response from the public due to its immortal storyline and the indelible characterization by NT. Now Chokkalingam sir tries his hands with the other camp. We are thankful to Chokkalingam sir for proving the box office potential of NT even now as an unbeatable one!
Another Box Office in 1964
One more super hit in 1964 (Dhinathandhi - Madurai edition)
Actual 100 days in
Chennai - Midland, Prabhat, Saraswathi, Ram
Madurai - Central
Coimbatore - Karnatic
1963 Deepavali release - completed 100 days in 1964 at Madras Casino.
For some people, Whatever Nadigar Thilagam Film that celebrates a Jubiliant and Festive Run, they term it as only "Vetri"
For their favourite actors, even if the film had a very average or below average run, they term it as "Maaperum Vetri" ....
Why this bias?
raghavendra sir's post:
RARE PHOTOS OF NT From thalaivansivaji.com
நான் சுவாசிக்கும் சிவாஜி (16) - ஒய்.ஜி. மகேந்திரன்
இமயம் படத்திற்காக, நேபாளம் காட்மண்டு நகரில், படப்பிடிப்பு நடத்தினார் முக்தா ஸ்ரீனிவாசன். அங்கு, 'மாயாலு' என்ற ஓட்டலில், நாங்கள் அனைவரும் தங்கினோம். சிவாஜியும், கமலாம்மாவும் மட்டும், சற்று தள்ளி இருந்த, 'சோல்டி ஓபராய்' என்ற நட்சத்திர ஓட்டலில், தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு தங்கிய, இரண்டாவது நாளே, சிவாஜி, 'நீங்கள் எல்லாம் ஜாலியாக ஒன்றாக தங்கியிருக்கீங்க. நான் மட்டும் அங்கு தனியாக கஷ்டப்படணுமா...' என்று கேட்டார். முக்தா தவித்தார். 'சிவாஜி தங்குகிற மாதிரி பெரிய அறை எங்கள் ஓட்டலில் இல்லை...' என்று கூறிய ஓட்டல் முதலாளியே, அதற்கு ஒரு தீர்வும் கண்டுபிடித்தார். இரு அறைகளுக்கு நடுவே இருந்த சுவரை உடைத்து, அறையை பெரிதாக்கினார்.
இரண்டாவது நாளே சிவாஜியும், கமலாம்மாவும் எங்கள் ஓட்டலிலேயே தங்கினர். ஓட்டல் அறையிலேயே கமலாம்மா, சிவாஜிக்கு உணவு சமைத்தார். சில நாட்கள் எங்களுக்கும் அவரின் தயவால், சுவையான வீட்டு சாப்பாடு கிடைத்தது.
காட்மண்டு நகரம், சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் பெற்றது. சிவாஜிக்கு தெரியாமல், நாங்கள் பயந்து பயந்து, அங்கு செல்வோம்.
ஒரு நாள், சூதாட்ட விடுதியொன்றில் ஷூட்டிங் நடந்தது. தேங்காய் சீனிவாசன் பெண் வேடத்திலும், மனோரமா ஆண் வேடத்திலும், நானும் நடித்த காமெடி சீனை பார்க்க வந்திருந்த சிவாஜி, அங்கு இருந்த இயந்திரத்தில், ஒரு நாணயத்தை போட்டு, கைப்பிடியை இழுத்தார். நாணயங்கள் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. பக்கத்திலிருந்த நடிகர் ஒருவரிடம், அதை அப்படியே கொடுத்துவிட்டு, வெளியே சென்று விட்டார்.
இதைப் பார்த்த தேங்காய் சீனிவாசன், 'நாமும் தான் இழுத்தோம்... வேர்வை தான் கொட்டிச்சு. அவர் இழுத்தால், உடனே, 'சடக்கு சடக்கு'ன்னு பணம் கொட்டுதேப்பா. அந்த சமயம் பார்த்து, அவர் பக்கத்தில் நான் இல்லாமல் போயிட்டேனே...' என்று, அவரது பாணியில் அங்கலாய்த்ததை நினைத்தால், இன்றும் சிரிப்பு வரும்.
தமிழ் நடிகைகளில், நடிப்பு திறமைக்கும், சுத்தமான தமிழ் உச்சரிப்புக்கும், புகழ் பெற்றவர் நடிகை எம்.என்.ராஜம். தினமலர் - வாரமலர் இதழில், நான் எழுதும், 'நான் சுவாசிக்கும் சிவாஜி' தொடர் கட்டுரையை படித்து, சிவாஜியுடனான அவரது அனுபவத்தை, என்னோடு பகிர்ந்து கொண்டார். சிவாஜி குறித்து எம்.என்.ராஜம் கூறியதாவது.
சிவாஜியின் முதல் படமான பராசக்தி, திரைப்படமாக எடுப்பதற்கு முன், நாடகமாக பலமுறை மேடையில் நடிக்கப்பட்டது. பராசக்தி திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின், 1953ல், சேலத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், மீண்டும் நாடகமாக நடித்தோம். திரைப்படத்தில் ஸ்ரீரஞ்சனி நடித்த, சகோதரி பாத்திரத்தில் நானும், பண்டரிபாய் நடித்த பாத்திரத்தில், பிரபல பாடகி ரத்னமாலாவும் நடித்தோம்.
அன்று ஏகப்பட்ட கூட்டம். சுமார் ஆறாயிரம் பேர், அந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். அதில் நீதிமன்றம் காட்சி தான், மிக முக்கியமானதும், சுவாரசியமானதுமான காட்சி. மேடையில், சிவாஜி, வசனம் பேச ஆரம்பித்தவுடன், நாடகம் பார்க்க வந்தவர்களில் பலர், ஏற்ற இறக்கத்தோடு, அவர் கூடவே வசனத்தை பேச ஆரம்பித்தனர். எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆச்சரியம். இது வரை, தமிழ் மேடை நாடக வரலாற்றிலேயே நடந்திராத நிகழ்ச்சி இது. சிறிது நேரம் பொறுமை காத்த சிவாஜி, பின், இரு கை கூப்பியபடி, ரசிகர்களிடம், 'இந்த நாடகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பற்று, எங்களுக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் அமைதியாக இருந்தால் தான், தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியும். தயவு செய்து, என்னுடன் சேர்ந்து வசனம் பேசாமல், அமைதியாக இருங்கள்...' என்று கேட்டுக் கொண்டார். அதன்பின், சிறிது நேரம் அமைதியாக இருந்த ரசிகர்கள், மீண்டும் சிவாஜி பேச ஆரம்பித்ததும், பழையபடி கூடவே பேச ஆரம்பித்தனர். இப்படியே, பல முறை நடந்தது. அதனால், அன்று அந்த ஒரு சீனை முடிக்கவே, 45 நிமிடங்கள் ஆனது.
அடுத்த நாளும், இக்கண்காட்சியில் இந்நாடகத்தை நடத்தினர். முன்னெச்சரிக்கையாக சேலம் நகரின் பல பகுதிகளில், மாட்டு வண்டியில், ஆட்கள் தண்டோரா போட்டு, மக்களை கூட்டி, 'இன்றைக்கு மாலை, நாடகத்தில் சிவாஜியோடு, சேர்ந்து வசனம் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்...' என்று அறிவிப்பு செய்தனர்.
அன்றும், ரசிகர்களால் அரங்கு நிறைந்து காணப்பட்டது. பராசக்தி அவருக்கு முதல் படம். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய விசிறி படை, அவருக்கு உருவாகியிருப்பது மாபெரும் சாதனை என்று தான் கூற வேண்டும்.
அந்த நாடகத்தில், நடந்த மற்றொரு சுவையான நிகழ்ச்சி... சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் காதல் காட்சி, 'புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே...' என்ற பாடலில், 'அன்பு கயிரிடுவாய் அறுக்க யாராலும் ஆகாதயா...' என்ற வரிகளின் போது, எதிர்பாராத வகையில், ரத்னமாலா அணிந்திருந்த பூ மாலை அறுந்து விட்டது. ஒரு வினாடி கூட தாமதிக்காமல், தன் கைகளை மாலை மாதிரி, ரத்னமாலா கழுத்தில் போட்டு, தொடர்ந்து அந்த வரிகளை, தன் சொந்த குரலில் பாடி, சமாளித்தார் சிவாஜி.
நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், சிவாஜியின் சமயோஜித புத்தியை பாராட்டி, கைதட்டினர்.
சிறந்த நகைச்சுவை நடிகையும், தற்போது தமிழக இயல், இசை, நாடக மன்றத்தின் காரியதரிசியாக பணியாற்றி வரும் குமாரி சச்சு, என் நீண்ட கால சிநேகிதி. சிறுமியாக இருக்கும் போதே சிவாஜியுடன் நடிக்கும் பாக்கியம் பெற்றவர். எதிர்பாராதது படத்தில், ஒரு ஜிப்ஸி பெண்ணாக, நடித்திருந்தார் சச்சு. சிவாஜியுடன் சேர்ந்து நடித்த போது நடந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி என்னிடம் கூறினார் சச்சு. அது: சிவாஜியுடன் நீண்ட வசனத்தை பேசி, நடிக்க வேண்டிய ஒரு காட்சியில், ஒன்றரை பக்க வசனத்தை, நான் பேசி நடித்ததும், சிவாஜி பாராட்டி, 'ரொம்ப நல்லா வசனம் பேசறே... ஆனால், அதிலே குழந்தைத்தனம் அதிகமாக தெரியணும். ஆனால், நீ ரொம்ப மெச்சூர்டாக பேசியிருக்கே. குழந்தை போல எப்படி பேசணும்ன்னு, நான் பேசி காட்டுகிறேன் பாரு...' என்று கூறி, முழு வசனத்தையும் பேசி காண்பித்தார். நடிப்பில் நான் பெற்ற முதல் பாடம் இது!
இதற்கு நேர்மாறாக, இன்னொரு அனுபவம் எனக்கு நடந்திருக்கிறது. சிவந்த மண் ஷூட்டிங்கில், அன்று, ஒரு முக்கிய சீன். எனக்கு ஏதோ டென்ஷன். மீண்டும் மீண்டும் டயலாக்கை உளறினேன். நாலு ஐந்து, 'டேக்' ஆகி விட்டது. எப்போதுமே கோபப்படாத சிவாஜி, அன்று, என்னை திட்டி விட்டார். உடனே, சுதாரித்து, சரியாக பேசினேன். ஆரம்பத்தில், சிவாஜியின் மோதிரக் கையால் குட்டு வாங்கிய நான், இன்று திட்டு வாங்கி விட்டேனே என்று, எனக்கு வருத்தம். 'நமக்கு சொந்த பிரச்னைகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால், நடிக்க வரும் போது, அவற்றையெல்லாம் வீட்டிலேயே விட்டு விட்டு வர வேண்டும்...' என்று அறிவுறுத்தினார் சிவாஜி, என்றார் சச்சு.
என்னைப் பொறுத்த வரை, இது, நடிகை சச்சுவிற்கு மட்டும் கூறிய அறிவுரை இல்லை. எல்லா நடிகர்களுக்குமே, இதை ஒரு பாடமாகத்தான், பார்க்கிறேன்.
சிவாஜியின் இரண்டாவது படம், பூங்கோதை. சிவாஜிக்கு அப்பாவாக நாகேஸ்வர ராவ் நடித்தார். நடிகை அஞ்சலி தேவி தான் தயாரிப்பாளர்.
சிவாஜியும், நாகேஸ்வர ராவும் நெருங்கிய நண்பர் கள். துக்காராம் - நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்கு படத்தில், சிவாஜி, சத்ரபதி சிவாஜியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கும் தயாரிப்பாளர் நடிகை அஞ்சலி தேவி தான்! நாகேஸ்வர ராவ் நடித்து, சூப்பர் ஹிட்டான, பிரேம் நகர் படம் தான், தமிழில், ரீ-மேக் ஆகி, சூப்பர் ஹிட்டான வசந்த மாளிகை.
— தொடரும்.
எஸ்.ரஜத்
More photos
Photos
Nt photos
Dear Senthil,
While I agree to a larger extent on what you had mentioned, I would like to inform you that the films, VasanthaMaaligai / Thiruvilayadal / Paasamalar may not have run the way Karnan did due to various reasons But, we should not forget the fact that VasanthaMaaligai 1st week collection at Albert Theater was Rs.3,47,850. Sunday witnessed HOUSEFULL 1538 seats. The Distributor share for week 1 in Albert was 40% of this collection. Albert witnessed 7 Weeks run for Vasantha Maaligai despite the Digital Restoration was horrible.
With reference to Thiruvilayadal, due to the greed of APN's son, the film was desperately screened at Woodlands for just ONE SHOW and Baby Albert for just ONE SHOW. Yet, Thiruvilayadal completed 7 Weeks in both the theaters. For your information, in Woodlands, it is a record that in both the New and Old Films, that was released in the past few years, only Thiruvilayadal managed to run for 7 weeks.
Interms of collection, Woodlands management was very very happy with the results interms of collection.
Paasamalar, was a badly publicised film even though the print and Digital restoration was Top Class. Yet, Shanthi First Week collection was Rs. 3,26,000 and Mr.KVP had the share of Rs.1,28,000/ and am the witness of seeing the Cheque in the name of Vetri Cine Arts. The Second week Paasamalar was screened 2 Shows and it collected 1,36,000. 40% of this amount would have been the share of Mr.KVP.
All these points, if you notice, you will find it no surprise that the amount collected by Nadigar Thilagam Films was too too high when compared to his competition
Rgds
RSK
Celebration for Vasantha Maaligai in Bangalore
In a state where Tamil is not encouraged these days, Bangalore has always witnessed mammoth reception for Nadigar Thilagam Films.
Ofcourse, Nadigar Thilagam nodoubt was always an exception across the world. Only he and his films can make a Traffic Jam Happen in whichever state his film was showcased.
Here are some of the Video Clippings taken during one of the many re-releases at Bangalore for the Nadigar Thilagam Film Vasantha Maaligai.
There would have been many Kaadhal Mannan's and Kaadhal Ilavarasans...But when it comes to "Kadhal" it is only "Vasantha Maaligai" Ever !
Part 1
http://www.youtube.com/watch?v=yac3fJ9_iRI
Part 2
http://www.youtube.com/watch?v=pRb0k0qVsbA
Part 3
http://www.youtube.com/watch?v=eBFhIrsUQfQ
Part 4
http://www.youtube.com/watch?v=4C4TzmknEqw
Part 5
http://www.youtube.com/watch?v=73WWGkgMZQ4
[QUOTE=RavikiranSurya;1107448]Celebration for Vasantha Maaligai in Bangalore
In a state where Tamil is not encouraged these days, Bangalore has always witnessed mammoth reception for Nadigar Thilagam Films.
Ofcourse, Nadigar Thilagam nodoubt was always an exception across the world. Only he and his films can make a Traffic Jam Happen in whichever state his film was showcased.
Here are some of the Video Clippings taken during one of the many re-releases at Bangalore for the Nadigar Thilagam Film Vasantha Maaligai.
There would have been many Kaadhal Mannan's and Kaadhal Ilavarasans...But when it comes to "Kadhal" it is only "Vasantha Maaligai" Ever !
Part 1
Dear Ravikiran Surya
My Heartiest Thanks for the Video display. What a great mass at Bangalore city ? Really Amazing.
I think Nadigar thilagam has more no of Deep fans in other state and other countries. This video proves that.
Again my great thanks to you
C.Ramachandran
உண்மை உணரும் நேரம் - 4
நேற்று நான் இந்த தலைப்பின் கீழ் செய்த பதிவு நமது நண்பர்களால் வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என நினைக்கிறன், 1964-ல் நமது படங்களின் தொடர் வெற்றியை பற்றி நான் ஏற்கனவே எழுதி விட்டேன். நான் நேற்று இட்ட பதிவு சென்னை கோடம்பாக்கம் ராம் திரையரங்கைப் பற்றிய பதிவு.
1972-ல் வெளியான ஒரு படம்தான் முதன் முதலில் ராம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது என்று ஒரு பதிவு வந்திருந்தது. [எந்த திரியில் என்று நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்]. 1964-ம் ஆண்டிலேயே நடிகர்திலகத்தின் 2 படங்கள் [கை கொடுத்த தெய்வம் மற்றும் நவராத்திரி] அதே ராம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியிருக்கிறது. அதை குறிப்பிடத்தான் அந்த வரலாற்று சுவடுகளை சுட்டிக் காட்டி உண்மை உணரும் நேரம் என்று விளம்பர ஆதாரங்களோடு பதிவிட்டேன். அதற்காகத்தான் வரலாற்றில் 1964-ம் ஆண்டு என்பது 1972-ம் ஆண்டிற்கு முன்பே வருவது என்ற வரியையும் பதிவு செய்தேன்.
நமது திரி நண்பர்கள் மத்தியில் ஏற்பட்ட disconnect போன்றே அருமை நண்பர் வினோத் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அதனால்தான் உடனே 1964 பற்றி மூன்று நான்கு பதிவுகள். அது ஓடியது இது ஓடியது என்று எதையோ establish செய்ய முயன்றிருக்கிறார். அவற்றில் நமக்கு பல disconnects இருந்த போதும் அவற்றில் ஒன்றே ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதை உண்மை உணரும் நேரம் -5 என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
1964-ல் அதிகமான திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம் என்று பணக்கார குடும்பம் படத்தின் விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறார் நண்பர் வினோத், விளம்பரத்தில் 5 ஊர்களில் 7 திரையரங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வினோத் சார், அதில் கோவை சுவாமி என்பதும் சேலம் சென்ட்ரல் விக்டோரியா என்பதும் ஷிப்டிங் தியேட்டர்கள் அல்லவா? இவ்விரு ஊர்களிலும் பணக்கார குடும்பம் வெளியானது வேறு தியேட்டர்களில் அல்லவா? அப்படியிருக்க 1964-ம் ஆண்டு காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிறகு அதிக அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம் பணக்கார குடும்பம் என்று சொல்லுவது சரியா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.
உண்மை என்னவென்றால் காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிறகு அதிக அரங்குகளில் 100 நாட்கள் ஓடியவை நடிகர் திலகத்தின் கை கொடுத்த தெய்வம் மற்றும் நவராத்திரி. இரண்டும் முறையே 6 அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.
எது எப்படியோ, எனது பதிவு வேறு ஒரு கோணத்தில் புரிந்துக் கொள்ளப்பட்டாலும் அதன் மூலம் மற்றொரு உண்மை வெளி வர உதவியாக இருந்தது என்ற வகையில் மகிழ்ச்சியே!.
அன்புடன்
ஒரு சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி நகருக்கு சற்று வெளியே திருசெந்தூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள முல்லை நகர் சத்யா அரங்கைப் பற்றியும் அதில் வெளியான எங்கள் தங்க ராஜா பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை பற்றியும் நமது திரியில் பதிவு செய்திருந்தோம். இப்போது அதே திரையரங்கில் நடிகர் திலகம் நாடக கலைஞனாகவே வாழ்ந்து காட்டிய ராஜபார்ட் ரங்கதுரை கடந்த ஞாயிறு முதல் திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகிறது. ஒரு முழு நீள பொழுது போக்கு படமான எங்கள் தங்க ராஜா ஞாயிறு மாலை காட்சிக்கு பெற்ற வசூலை சென்டிமென்ட் சித்திரமான ராஜபார்ட் ரங்கதுரை எட்டிப் பிடித்திருக்கிறது என்று சொன்னால் என்னே நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் வீச்சு!
தூத்துக்குடி நகரில் வெகு விரைவில் நடிகர் திலகம் அழகு ததும்பும் திராவிட மன்மதனாக! [நன்றி கோபால்] வாழ்ந்து காட்டிய எங்க மாமா விரைவில் திரையிடப்படயிருக்கிறது.
அன்புடன்