மறுவெளியீட்டின் மறுவெளியீட்டில் கர்ணன் அரங்கு நிறைவு கண்டு மதுரை சென்னையைத் தொடர்ந்து நடிகர் திலகத்தின் ரசிகர்களின் கோட்டை என்று கூறியுள்ளது மகிழ்வூட்டும் செய்தியாகும். இச்செய்தியை வழங்கிய பம்மலாருக்கும் ராமஜெயம் அவர்களுக்கும், எங்க மாமா அரங்கு நிறைவு செய்திக்காகவும் முரளி சார் உள்பட அனைவருக்கும் உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
மற்றொரு தேனான செய்தி.
நடிகர் திலகத்தின் சொந்தக் குரலில் விஸ்வநாத நாயக்கடு தெலுங்கு திரைக்காவியம் விரைவில் தமிழகத்தில் பவனி வர உள்ளது. இப்படம் வண்ணங்கள் மெருகேற்றப் பட்டு புத்தம் புதிய பிரதியாய் வலம் வர உள்ளது. அநேகமாக விஸ்வநாத நாயக்கடு திரைப்படத்தை திரையில் பார்க்கும் வாய்ப்பு நம் ரசிகர்களிலேயே மிகப் பெரும்பான்மையோருக்கு இதுவே முதல் முறையாய் இருக்கும்.
அமோக வரவேற்பிற்கு ஆவலாய்க் காத்திருப்போம்.
அன்புடன்