மதுண்ணா பொறுத்துக்காதீங்க..இந்தோ.. பட் இது ஆடியோவாம்..கேக்குமான்னும் எனக்குத் தெரியாது :)
http://www.inbaminge.com/t/t/Thabalkaran%20Thangai/
குமார் சார் தாங்க்ஸ் :) அந்த க் குட்டி ப்ளாக் அண்ட் ஒய்ட் படம் நல்லா இருந்துச்சே! :)
Printable View
மதுண்ணா பொறுத்துக்காதீங்க..இந்தோ.. பட் இது ஆடியோவாம்..கேக்குமான்னும் எனக்குத் தெரியாது :)
http://www.inbaminge.com/t/t/Thabalkaran%20Thangai/
குமார் சார் தாங்க்ஸ் :) அந்த க் குட்டி ப்ளாக் அண்ட் ஒய்ட் படம் நல்லா இருந்துச்சே! :)
இனிய நண்பர் குமார் சார்
திருச்சி நகரத்தில் வெளிவந்த சிவாஜி இதழில் இடம் பெற்ற படங்களின் விளம்பர பதிவுகள் அனைத்தும் அருமை ..
இனிய நண்பர் வாசு சார்
நேரமின்மையால் திரியில் பதிவுகள் வழங்க இயலவில்லை . ஆனாலும் இத்திரியில் இடம் பெற்ற அத்தனை பதிவுகளையும் ரசித்து படித்து கொண்டு வருகிறேன் . நீங்கள் கூறியது போல் திரியின் ஜாம்பவானாகிய திரு கார்த்திக் அவர்களின் பதிவு இடம் பெற்று நீண்ட நாட்களாகி விட்டது .தேவிகா அண்ணியாரின் படமோ பாடலோ இடம் பெற்றால் ஒரு வேளை வருவார் என எண்ணுகிறேன் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அவர் பதிவிட்ட பொன்னந்தி மாலை பொழுது பாடல் பதிவை தினமும் படித்து ரசித்து வருகிறேன் .
சிக்கா... ஆடியோ கேட்டிருக்கேன். இருந்தாலும் தாங்க்ஸ்.... வீடியோவைக் கண்டு புடிச்சாத்தான் ஜிகிர்தண்டா..
( அது சரி.. நீங்க லிங்க் கொடுத்த பக்கத்தில் இந்தப் படத்தில் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் பாட்டையும் சேர்த்துட்டாங்க கவனிச்சீங்களா ? )
வாசு,
மிக்க நன்றி. இந்த பாடல் நீங்கள் சொன்னது போல் சுசீலா எஸ்பிபி குரல்களில் தேவாமிர்தமாய் ஒலிக்கும். அந்த ஹம்மிங்கும். நான் முன்பே சொன்னது போல் சரணத்தின் இறுதியில் வரும் அந்த வார்த்தைகளை நீட்டியபடி பாடும் (மணநாள் தேடினாள்) அந்த பாவமும் பிடிக்கும். என்ன ஒன்று இந்த சரணத்தின் இதே ட்யுனை புகுந்த வீடு படத்தில் செந்தாமரையே பாடலுக்கும் சரணத்தில் பயன்படுத்தியிருப்பார்கள் சங்கர் கணேஷ்.
நீங்கள் குறிப்பிட்ட சின்ன சின்ன பாப்பா பாடலை ஒரு இங்கிலீஷ் படத்திலிருந்து சுட்டிருப்பார்கள் சங்கர் கணேஷ். City City Bang Bang என்ற படம். மதுரை பரமேஸ்வரியில் வந்தது. அதிசயமாக அந்த படத்தில் பாடல் வரும். City City Bang Bang Bang Bang என்று வரும் அந்த பாடலின் ட்யுனை அப்படியே பயன்படுத்தியிருப்பார்கள். விசிலடிச்சான் குஞ்சுகளா பாடலில் கமலைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.
இந்த மாணவன் படம் ஒருவகையில் நம்மை பாதித்த படம். பாதித்த என்றால் நமது பிரிஸ்டிஜ் பத்மநாபனை பாதித்த படம் எங்கள் மதுரையில். இதை பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். வியட்நாம் வீடு மதுரை ஸ்ரீதேவியில் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்த நேரம்.
வியட்நாம் வீடு படத்தை ஒரு சாதாரண லெவல் விநியோகஸ்தர் என்று சொல்லக்கூடியவர்.வெளியிட்டிருக்க மாணவன் படத்தை வெளியிட்டது கிழக்கரை யாசின் குழுமத்தை சேர்ந்த சேது பிலிம்ஸ். மாணவன் வெளியான நாள் 1970 ஜூலை 10. ஸ்ரீதேவி அரங்க உரிமையாளரிடம் மாணவன் படத்தை அங்கேதான் வெளியிட வேண்டும் என்று சேது பிலிம்ஸ் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்
வியட்நாம் வீடு holdover விடாமல் ஓடிக் கொண்டிருந்தது. அந்த 13வது வாரம் ஞாயிற்றுக்கிழமை (86-வது நாள்) மாலைக்காட்சி கூட ஹவுஸ்ஃபுல். சிந்தாமணியில் கூட ரிலீஸ் செய்திருக்கலாம். அங்கே ஓடிக் கொண்டிருந்த படமும் அதே நாள்தான் (ஜூலை 9 )கடைசி நாள். ஆனாலும் ஸ்ரீதேவியில்தான் வெளியிட வேண்டும் என்று சேது பிலிம்ஸ் நிர்பந்தம் செய்து மாணவன் படத்தை ரிலீஸ் செய்தனர். அதனால் 90 நாட்களில் வியட்நாம் வீடு எடுக்கப்பட்டு விட்டது. 100 நாள் லிஸ்டில் சென்னை கோவை, திருச்சி சேலம் ஆகிய நகரங்களோடு சேர்த்து இடம் பெற்றிருக்க வேண்டிய மதுரை இந்த சதியினால் அந்த வாய்ப்பை இழந்தது. அந்த காரணத்தினாலும் மாணவன் எப்போதும் என் நினைவில் நிற்கும்.
முந்தைய எஸ்பிபி பாடல்களில் பௌர்ணமி நிலவில் அருமையான பாடல். கொஞ்சம் மூக்கால் பாடியிருந்தாலும் கூட (கம்பன் தமிழோ பாட்டினிலே) நல்ல இனிமை. அதுவும் படத்தின் திருப்புமுனை காட்சி வேறு. 2010 நவம்பரில் வாலியின் 80 வது பிறந்தநாள் விழாவும் அவர் பாடல்களின் தொகுப்பான வாலி 1000 புத்தக வெளியீட்டு விழாவின்போது பின்னணி இசை இல்லாமல் எஸ்பிபி மேடையில் இந்த பாடலை பாடியபோது அதுவரை அசிரத்தையாக அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த கமல் முகம் நிமிர்ந்து ரசித்த காட்சி இப்போதும் மனதில் நிற்கிறது. .
காவியத் தலைவி பற்றி அது நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்கக் கூடாதா என்றும் சொல்லியிருந்தீர்கள். எனக்கு தெரிந்து சௌகார் முதலில் நடிகர் திலகத்தைத்தான் அணுகினார். ஆனால் கால்ஷீட் இடித்தது ஒரு காரணம் என்றால் அப்போது கேபி இயக்கத்தில் எதிரொலி படத்தில் நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் repetion வேண்டாம் என்று நடிகர் திலகம் (அல்லது விசிஷண்முகம்?) நினைத்தார் என்றும் சொல்வார்கள்.
தொடருங்கள்!
அன்புடன்
இந்தப் பூஞ்சிட்டு மான்குட்டி போகின்ற போகிலே போகட்டும்
பொறுத்துக்கோ ஐயா பொறுத்துக்கோ... ம்ம் இப்பத் தான் கேக்கறேன்..
இப்படியா சிக்காவை டீல்ல வுடறது.. மதுண்ணா ராகவேந்தர்..மோசம்..:) ம்ம் தேடறேன்
இந்த மாட்டிக்கிச்சு மைனாவையும் தான்.. .ஜாக்பாட் ம்ம்..
அஞ்சுகுதிரை ஒண்ணா வந்தா ரூபா பதினஞ்சு லட்சம்
அதுல ஒண்ணு வரலேன்னா அவமானம் தான் மிச்சம்..யாராக்கும் லிரிக்ஸ் :)
சின்னா!
காலையிலே என்னைப் பாவம்னீங்க.:) இப்போ நீங்களே பாவமாயிட்டீங்க.:) போட்டு வாட்றாங்க சின்னப் புள்ளையை.:)
ஜெயலிதா ஜாக்பாட்
ஜெயசங்கர் ஜாக்பாட்.
அபூர்வ கானங்கள்
காலம் என்னோடு வரும் போது கடவுள் வருகின்றார்..
காதல் என் நெஞ்சைத் தொடும் போது என் தலைவன் வருகின்றார்..
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.ஜானகி குரலில் நீண்ட நாட்களுக்குப் பின்
புதிய வாழ்க்கை திரைப்படப் பாடல்..
நன்றி வடவை பாஸ்கி
https://www.youtube.com/watch?v=zi8bAUy3v4w
வாசு சார்
கோவிச்சுக்காதீீங்க.. இது அபூர்வ கானங்கள் என்பதால் இங்கு அறிமுகம் மட்டும் செய்கிறேன்.
உங்களுடைய வரிசையில் வரும் போது நீங்கள் எங்களுக்கு இதைப் பற்றிய விரிவான பதிவினைத் தரவேண்டுகிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பின்
புதிய வாழ்க்கையிலிருந்து பேசு மனமே பேசு.. காணொளி...
https://www.youtube.com/watch?v=omfaWZjatBk
ஒரு வேளை புதிய வாழ்க்கைப் பாடல்களைப் பகிர்ந்து கொண்டு விட்டோமோ...
மதுர கானம் திரிகளின் வேகத்தில் இதெல்லாம் மறந்து விடுகிறது..