லேட்டஸ்ட் உட்டலங்காடி
Printable View
லேட்டஸ்ட் உட்டலங்காடி
//பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தால் என்ன// இங்க வெளியில் 42 டிகிரி.. பனி பெய்யுதாக்கும்..ஆமா அந்தப் பாட்டுல நடிச்சது யாரு ?
டியர் வாசு சார்,
மதுர கானங்கள் திரியில் அதிகமாக நடிகர்திலகத்தின் ரசிகர்களே பங்கு கொண்டாலும், இது இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரியே தவிர, யாருடைய சார்பும் இல்லாதது என்பதை விளக்கும் வண்ணம், மக்கள்திலகத்தின் வண்ணக்காவியமான 'பறக்கும் பாவை' படத்தின் அருமையான பாடலை அலசியதன் மூலம் உரக்க சொல்லியிருக்கிறீர்கள்.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பங்கேற்றாலும், இதுவரை கிட்டத்தட்ட 1.000 பதிவுகளை நெருங்கியபோதும், இன்னும் நடிகர்திலகத்தின் பாடல் ஒன்று கூட அலசப்படவில்லைஎன்று நினைக்கிறேன். அனைத்தும் சாமான்யர்களின் பாடல்களே அலசப்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம், நிழலுக்குள் தள்ளப்பட்ட பல அருமையான பாடல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதே இத்திரியின் நோக்கம் என்பதால், இரு ஜாம்பவான்களின் பாடல்கள் முடிந்தவரை தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இல்லாவிட்டால் இதுவும் இன்னொரு நடிகர்திலகம் திரியாக, அல்லது இன்னொரு மக்கள்திலகம் திரியாக மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால்.
இப்போதுதான் மக்கள்திலகத்தின் பாடலொன்று, அதுவும் இதுவரை எந்தப்பாடலுக்கும் இல்லாத அளவுக்கு உங்களால் சிரத்தை எடுத்துக்கொண்டு சிறப்பாக அலசப்பட்டிருப்பது நிச்சயம். பெருமையாகவே இருக்கிறது.
நீங்கள் எடுத்துக்கொண்ட பாடல் எனக்கும் பிடித்ததுதான் என்ற போதிலும், அப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது 'கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா' பாடல்தான். அது எழுத்தாளர் பாலகுமாரன் வாழ்க்கையில் மட்டுமல்ல, என் சொந்த வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய பாடல். அதுபற்றி பின்னர் சொல்கிறேன்.
அருமையான அலசலுக்கு பாராட்டுக்கள் வாசு சார்.
சி க சார்
நடிகர் நம்ம நடிப்பு சுடர் ஏவிஎம் ராஜன்
நடிகை -
சாயலை பார்த்தால்
சந்திர காந்தா மாதிரி தெரியுது
கலாட்டா கல்யாணம் படத்தில்
"உறவினில் பிப்டி உதட்டினில் பிப்டி தருவது சுகம் தங்க கட்டி "
அவங்களா இவங்க
வாசு சார் /கார்த்திக் சார் /வேந்தர் சார் யாரவது
என்னுள் கலந்த கான்ங்கள் -6
*
பாக்குறான் கொட்டக் கொட்ட
..பூவிழி சிமிட்டா மல்தான்
காக்கவும் நீதான் அம்மா
..கொஞ்சவும் நீதான் என்றே
நோக்கிடும் அவனைத் தரையில்
.. நீஞ்சுடா என்றே விட்டால்
பேக்குபோல் கோணி கண்ணில்
..பேய்மழை கொண்டு விட்டான்..
எந்தக் காலத்திலும் எந்த வயதிலும் மனதை விகசிக்க வைக்கும் விஷயம் எது.. சின்னக் குழந்தையின் விஷம்ம், புன்னகை, மழலை..
கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்ற்றியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள எனப் பெண்ணைப் பற்றிப் பாடிய வள்ளுஸ் குழந்தையைப் பற்றி என்ன சொல்கிறார்..
குழலினிது யாழினிது என்பார் அவர்தம்
மழலைச் சொல் கேளாதவர்..
எந்தக் குழந்தையானாலும் மழலைச் சொல் அழ்குதான்..
//எதிர் ஃப்ளாட்ல ஒரு யுவதி ஒரு கைக்குழந்தையை வச்சுக்கிட்டு நின்னுருந்தாங்க.. ரொம்ப ச் சின்னப் பொண்ணா இருக்க், என்னம்மா இது யாரோட்து.. எனக் கேட்டேன்.. என்னுடைய அக்காவோட்து அங்க்கிள் என அவள் மழலையில் சொல்ல குழந்தையும் மழலை மொழியில்ங்கா எனச் சொல்லி என்னிடம் தாவியது.. //இரண்டு குரலுமே நன்னாயிட்டு இருந்த்தாக்கும்..
இந்தப் பாடலில் டிஎம் எஸ் சுசீலா..(வாயசைப்பு கன்னக்குழி எஸ் எஸ் ஆர்.. அந்தக்கால அழுகை இளவரசி விஜயகுமாரி) பாட நம் மனமும் கொள்ளை போகும் தானே
**
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
மலர் போல சிரிக்கின்ற பிள்ளை
கண்டு மகிழாத உயிரொன்றும் இல்லை
மடி மீது தவழ்கின்ற முல்லை
மழலை சொல் இன்பத்தின் எல்லை
உள்ளாடும் உயிரொன்று கண்டேன்
அவன் உருவத்தை நானென்று காண்பேன்
தள்ளாடி தள்ளாடி வருவான்
தனியாக இன்பத்தை தருவான்.
-
வளர்ந்த்துக்கப்புறம் தான் இருக்கு..டாட் சாம்ஸங்க் எஸ் 5 வாங்கிக் கொடுக்கறயா , இல்லையான்னு இமெய்ல் வர்றச்சே..ம்ம் பாவம் அப்பாக்கள்.. :)
பின்ன வாரேன் :)
உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன
தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே உண்மை அறிந்தாலென்ன
உறவுக்கு மேலே சுகம் கிடையாது அணைக்கவே தயாக்கமென்ன
இது ஓட்டைவீடு ஒன்பது வாசல் இதற்குள்ளே ஆசை என்ன
முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல்தானே (சென்சார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்)
மனம் மூடி மூடி பார்க்கும் போதும் தேடும் பாதைதானே
பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால் காதல் கானல் நீரே
இது மேடுபள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே
இல்லறம் கேட்டால் துறவறம் பேசும் இதயமே மாறிவிடு
நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றிவிடு
விரகதாபம் கொண்ட பெண்ணுக்கும், வாழ்வில் விரக்தி கொண்ட ஒருவனுக்கும் நடக்கும் உணர்ச்சி உரையாடல்கள் கருத்தாழம் மிக்க பாடலாக.
இது மாலை நேரத்து மயக்கம் பாட்டு தனியாகக் கேட்டால் வெகு நன்னாயிட்டு இருக்கும்.. வீடியோவில் பார்த்தால் கொஞ்சம் ஆன்மீகத்தில் நாட்டம் வரும் ( வாழ்க்கை வெறுத்து விடும்..) அந்தப் பெண் தனக்குத் தெரிந்த நடிப்பை எல்லாம் கொட்டி ஏவிஎம் ராஜனை செட்யூஸ் பண்ணப் பார்க்க.. இவர் துறவி நிலையில் பாடுவதாக நினைத்து கொஞ்சம் வெறித்த பார்வை வெறித்த நடை என செய்வதாக நினைத்துக் கஷ்டப் பட..பார்க்கும் நமக்கு வரும் உணர்ச்சியை என்னென்று சொல்ல!
முன்பே யாராவது பதிவு செய்தார்களா என்று தெரியவில்லை அப்படி பதிவு வந்திருந்தால் மன்னிகவும்.
மீண்டும் ஒரு முறை
வானம்பாடி படத்தில் பல பாடல்கள் இருந்தாலும், இவையெல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல...
'கங்கைக்கரை தோட்டம்.. கன்னிப்பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே'
அறுபதுகளில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல், 'மாமா'வின் அற்புதமான கைவண்ணம்; கவியரசரின் காலத்தை வென்ற வரிகள்; சுஷீலம்மாவின் இனிய குரல்; தேவிகாவின் முகக்குறிப்பு...........
ஒரு பெண்ணின் காதலை, ஒரு ஆண் பரிபூர்ணமாக, முழு மனதுடன் புரிந்து கொள்ள முடியுமா?
கவியரசர் கண்ணதாசனின் சொற்களைக் கொஞ்சம் கடன் வாங்கினால், முடியும்!
"கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ" என்ற ஏக்கம், அப்போது நன்றாகவே புரியும்
"கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் நாட்டம் கொண்டேன்......
ஆகாகா...இசையரசியின் இனிய குரல் கண்ணனை உருக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
நிஜமாவே சில சமயம் கண்ணிலே நீர் வரும் இந்தப் பாட்டைக் கேட்கும்போது
அதிலும் "கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ.......என்ற கட்டம் மிகவும் உணர்ச்சிகரமானது
இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் அமுதம். இந்தப் பாடலைக் கேட்கும் போது உள்ளம் ஒரு முனைப்பாகி கண்கள் தானே மூடி கண்ணில் நீர் நிறைந்து உருக வைக்கிறது.
"கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை" தொடங்கி எத்தனை எத்தனை அமுத வரிகள். அப்பப்பா.....
கவியரசே கண்ணதாசா நீ வாழ்க, வாழ்க உங்கள் புகழ்.
அருமையான பாடலோடு இசையும் அருமையாகச் சேர்ந்து வந்ததால் காலத்தை வென்ற பாடல்னு சொல்லலாம்
http://www.youtube.com/watch?v=UlocUamrLqQ
இந்தப் பதிவை எழுதும் போது கண்கள் தானே மூடி கண்ணில் நீர் நிறைந்து உருக வைக்கிறது. இது நிஜம்
'இதயக்கமலம்' பாடல்களுக்கொரு படம் என்று சொல்லலாம். கே.வி.மகாதேவன் மாமா அட்டகாசமாகப் பின்னியிருப்பார் (அதனால் இந்த பதிவு கோபால் அவர்களுக்கு சமர்ப்பணம்). இப்படத்தில் இசைக்குயில் பி.சுசீலாவுக்கு மூன்று தனிப்பாடல்கள். இந்தப்பாடல் மற்றும் 'உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல', 'மலர்கள் நனைந்தன பனியாலே' முரசு சேனலின் ஒருபடப்பாடல் தயவால் இப்படத்தின் பாடல்கள் அடிக்கடி காணக்கிடைக்கின்றன. அதில் சுசீலாவின் தேன்சொட்டும் குரலில் ஒரு பாடல். பாடல் காட்சியில் அழகான ஷீலாவும், சுமாரான கே.ஆர்.விஜயாவும் மாறி மாறி தோன்றுவார்கள்.
என்னதான் ரகசியமோ இதயத்திலே - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும்
என் கன்னத்தின் மேல் கோலம் போட்டு துடிக்க வைத்ததும்
துடிக்க வைத்ததும் நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
விழி பார்க்கச்சொன்னாலும் மனம் பார்க்க விடாது
மனம் பேசச்சொன்னாலும் வாய்வார்த்தை வராது
அச்சம் பாதி ஆசை பாதி பெண்படும் பாடு நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
குளிர் பஞ்சணை மேலே உடல் பள்ளிகொள்ளாது
அது பள்ளிகொண்டாலும் துயில் கொள்ளவிடாது
ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
பேரழகிருந்தென்ன ஒரு ரசிகன் இல்லாமல்
தேன் நிறைந்திருந்தென்ன பொன் வண்டு வராமல்
என்ன பெண்மை என்ன மென்மை இன்பமில்லாமல் - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
எப்போது கேட்டாலும் மனதை அள்ளிக்கொண்டு செல்லும் பாடல். கவியரசர் - திரை இசைத்திலகம் - கானக்குயில் கூட்டணியில் எஸ்.ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அருமையான, அழகான, மென்மையான, மனதை வருடும் இசைத்தென்றல்.
நடிகர் மற்றும் மக்கள் திலகலுக்கு தனி திரியே இருக்கிறது. எனவே அவர்களுடைய படங்களின் பாடல்களை அவர்களுடைய திரியிலே பதிவு செய்வதால், அங்கே பதிவு செய்யாத / விமர்சிகதா பாடல்களை இங்கே பதிவு செய்யலாமே
கங்கைக் கரைத் தோட்டம் பாலாசார், என்னதான் ரகசியமோ இதயத்திலே - கார்த்திக் சார்.. ரெண்டுமே என் மனதைக் கொள்ளை அடித்த பாட்டுக்கள்.. (லிரிக்ஸ், மியூசிக் அண்ட் பிக்சரைசேஷன்) நன்றி..
இப்ப என்ன மனசுல ஓடிக்கிட்டிருக்குதெரியுமா
அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா..!'
பாமாலை அவர் படிக்கப் பூமாலை நான் தொடுக்க
வாழ் நாள் முடிந்ததையா நடராஜா..
அதுக்கப்புறம் வரிகள் கிடைக்கலை.. நான் அந்தப் படமும் பார்த்ததில்லை..நண்பர்கள் அலசலாமே (இந்தாங்க சூப்ப்ர் ரின் பாக்கெட் :) )
பின்வரும் கடிதம் இன்று காலையில் நண்பர் திரு s b காந்தன் (ஜெர்ரி பட டைரக்டர் மற்றும் நடிகர் மௌலியின் சகோதரர் )
அவர்களிடம் இருந்து ஜிமெயில் மூலமாக வந்த ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்
கண்ணதாசன் ஒரு சகாப்தம்
திரைப்பாடல்களில் ஒருவரியிலேயே திரைக்கதையைச் சுருக்கித் தரும் திறமையும், வளமான சொல்லாட்சியும், வற்றாத கற்பனை ஊற்றும்.. கண்ணதாசன் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார்.
“ரஸமான தத்துவம், ரஸமானதத்துவம்
ராட்சஸச் சிந்தனைகள்…..”
“சுட்டெரித்தாலிந்த மேனியும் சாம்பலாய்ச்
சுடுகாட்டு மண்ணிலுருளும்
சுவையான பாவலன் போயினான் எனச் சொல்லி
சொந்தமும் வீடுசெல்லும்…”
என்ற மரபு வரிகளிலும்,
“நாயகனைச் சிலை வடிவில் நாட்டி வைத்த சைவர்திருக்
கோயிலுக்குள் நான் போனேன் தோழீ-நிலை
கொள்ளவிலை வநதுவிட்டேன் தோழீ!”
“………………………………………………- இந்தக்
கொக்குக்குத் தேவைதன் கூரிய மூக்கினில்
சிக்கிடும் மீன் மட்டுமே-அதன்
தேவைகள் வாழட்டுமே”
“தோட்டத்திலே தென்னை இரண்டு
முற்றித் திரண்டு
பக்கம் உருண்டு”
போன்ற சிந்து நடையிலும்
“மெத்தைச் சுகத்துக்கும் மேலெழுமோர் வேட்கைக்கும்
தத்தைச் சுகத்துக்கும் தத்தளிக்கும் ஆசைக்கும்..
எத்தைத் தான் நம்புவதோ எதனைத் தான் நாடுவதோ
அங்கொருகால் இங்கொருகால் ஆடும் சிறுமனமே”
போன்ற சுயதரிசனக் கவிதைகளிலும்,
பழுத்த ஆன்மிகவாதியாகத் தன் அர்த்தமுள்ள இந்துமதம் கட்டுரைகளிலும் பலபரிமாணங்களில் மின்னிய கவியரசரை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.
” படகோடு கங்கை குகனாக வேண்டும்
பணிவான ஆசை ரகுராமா”
என்கிற அவர்தம் வைரவரிகளுக்குக் காணிக்கை யாக இந்த ஓவியத்தை சமர்ப்பிக்கிறேன்!
நன்றி
காந்தன்
www.sbkanthan.com
www.sbkanthanblogspot.com
நன்றி கார்த்திக் சார்,
நாம் நியாயமாகவே நடக்கிறோம். நடப்போம்.
அருமையான, எனக்கு மிகவும் பிடித்த, என்னுடனேயே (cellil) இருக்கும் 'என்னதான் ரகசியமோ' இதயத்திலே பாடலைப் பற்றி பதித்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளீர்கள்.
இப்பாடலில் வீடியோ மிக்ஸிங் அவ்வளவு அழகு.
நினைத்தால்
எனக்கே (ஆனந்த) மயக்கம் வரும் சமயத்திலே
சூப்பர் பாடலை அளித்ததற்கு நன்றி!
தரிசனம் (1969) (குறு ஆய்வு)
http://www.inbaminge.com/t/d/Dharisanam/folder.jpg
கதையின் நாயகன் ஓவராக செலவு செய்து மனைவி, மக்கள், உற்றார், உறவினர், தாய், சுற்றம் என்று வெறுத்து காசில்லாமல் கடனாளியாகி, வீட்டை விட்டே ஓடி விடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் பெண் அவனிடத்தில் ஆசை கொண்டு விரகதாபத்தில் பாடுகிறாள். அவன் தான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை என்று அவள் உறவுக்கு மறுத்து சாமியார் ரேஞ்சில் பதில் அளிக்கிறான். இறுதியில் கதாநாயகனைப் போல் தோற்றம் கொண்ட இன்னொருவன் கதாநாயகன் இடத்திற்கு வந்து அவன் கடனையெல்லாம் அடைத்து வாழ்க்கை வாழ்வதற்கே என்று கதாநாயகனுக்குப் புரிய வைக்கிறான் கண்ணியமாக.
இரு வேடங்களிலும் ராஜன். ராஜனின் நாடகக் குழுவால் நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமானது.
'கல்யாணமாம் கல்யாணம்' என்ற சென்சாரின் வயற்றில் புளி கரைத்த பாடல் ஒன்று உண்டு
இந்தப் பாடலில்
'காலம் பார்த்து கர்ப்பத்துக்கு தடை விதிச்சாங்க' (சிவப்பு முக்கோணம் சுவர்களில் வரைந்த சமயம்) வரிகள் 'உற்பத்திக்கு தடை விதிச்சாங்க' என்று மாற்றப்பட்டது.
மனோரமா துக்ளக் ஜோடி. மனோரமா சினிமா பாட்டு பிரியை. தொட்டதற்கெல்லாம் சினிமாப் பாடல்கள் பாடி சோவை சித்ரவதை செய்வார். நம்மை அல்ல.
புஷ்பலதா எ.வி.எம்.ராஜனுக்கு ஜோடி. ஸ்ரீகாந்த், சேஷாத்திரி இருப்பார்கள். வி.டி.அரசு இயக்கம்.
சைலஸ்ரீ என்ற அழகான கன்னட நடிகை ஒருவர் இருந்தார். அவர்தான் 'மாலை நேரத்து மயக்கம்' தந்தவர். அழகாக இருப்பார். அப்போது அவருக்கு ஆஷா என்று பெயர். 'பேசும்படம்' புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்.('வெண்ணிற ஆடை' படத்தில் மூர்த்தியுடன் 'அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து ஆட்டம் ஆடிட வா' என்று ராட்சஸி குரலில் அட்டகாசமாக ஆடுவாரே அவரேதான்)
ராஜன் வழக்கம் போல. ஆனால் இரு வேடங்கள்.
'அவனவன்' தலையெழுத்து என்ற பாடல் ஒன்றும் உண்டு. ராஜனுக்கு பாடகர் திலகம் பாடுவார். (பைத்தியக்கார தொனிப் பாடல்)
'மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்'
'மக்கு மாப்பிள்ளே!
என்று.
அப்புறம் மனோரமா பாடும் 'போகாதே அய்யா போகாதே' சங்கீதப் பாடல் கேட்டு சோ அழுவார். பதிலுக்கு வேறு பாடுவார். புதுக் கோட்டை ரங்கராஜன் என்பவர் சோவுக்கு பின்னணி கொடுத்ததாகப் படித்திருக்கிறேன்.
'உன்னை என்னால் திருத்த முடியாதம்மா'
கண்ணதாசனைப் பற்றி சொல்லவா வேணும்!
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை. 'இது மாலை நேரத்து மயக்கம்' தந்து அந்த ஒரு பாடலில் எங்கேயோ போய் விட்டார்.
எப்படியோ 'தரிசனம்' பற்றி தெரிந்ததை சொல்லியாயிற்று.
கார்த்திக் சார் இன் இதய கமலம் பல நினைவுகளை தூண்டி விட்டது
சுசீலாம்மாவின் ஒரு "மோகனமான" பாட்டு
இது ஒரு வசீகரமான காதல் பாட்டா அல்லது தெய்வீக பாட்டா
எதில் சேர்ப்பது
நடுநடு-ல கண்ணன், முருகன்-ன்னு வருவதால், இது ஏதோ சாமிப் பாட்டு மாதிரி இருக்கும் . ஆனால் இனிய மோகன மெலடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி-
பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசை
பாடலின் நடுவில் வரும் மிருதங்க பீட்
மாமா கண்ணதாசன் சுசீலா கூட்டணி
மலர்கள் நனைந்தன பனியாலே!
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே!
பொழுதும் விடிந்தது கதிராலே!
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே!
(மலர்கள் நனைந்தன)
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்!
சேர்ந்து மகிழ்ந்து போராடி!
தலை சீவி முடித்தே நீராடி!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!
(மலர்கள் நனைந்தன)
இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)
ரவியின் இளமை துள்ளல் வளைந்த நடையை இரண்டாவது சரணத்தில் அருமையாக படம் பிடித்து இருப்பார்கள்
வாசு சார்
தரிசனம் குறு ஆய்வு அருமை
தோள் கண்டேன் தோளே கண்டேன்..விட்டுட்டீங்களே..
தேடிவந்த திங்கள் திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி சேர்த்தணைப்பேன் கையில் அள்ளி
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..
ம்ம்
ஏதோ வங்க/ஒரிய மொழிப் படத்திலிருந்து தழுவி எடுத்த படம் என நாகிரெட்டியாரோ யாரோ எழுதியதைப் படித்த நினைவு..
ஒரு கோர்ட்
ஒரு ஃப்ளாஷ்பேக்
ஒரு அழுகை
ஒரு கோர்ட் சீன்
என ஏதோ ஒரு விமர்சனத்திலும் படித்த நினைவு.. கே.ஆர்.வி யின் இரண்டாவது படம்..ஏதோ ஒரு சிலை போல வைத்து அது தான் கே.ஆர்.வி என்று பூஜையெல்லாம் செய்வார்கள்..
சமீபத்தில் கலைஞர் டிவியில் - மேபி ஆறுமாதத்திற்குள் பார்த்த படம்..என்ன தான் ரகசியமோ இதயத்திலே..ஷீலுவோன்னோ..
தரிசனம் பற்றிய தகவல்களுக்கு நன்றி வாசு சார்..பாட்ட மட்டும் பார்த்துட்டு ஒதுங்கிக்கறது பெஸ்ட் நு நினைக்கறேன்..
சின்னக் கண்ணன் சார்!
ரின் பாக்கெட்டா தர்றீங்க! ரின் பாக்கெட்!:)
மீதி இந்தாங்க 'கண்மலர்' படத்திலிருந்து.
http://www.inbaminge.com/t/k/Kanmalar/folder.jpg
அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா
பாமாலை அவர் படிக்கப் பூமாலை நான் தொடுக்க
வாழ் நாள் நடந்ததையா நடராஜா..
இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா
பாலோடு சங்கெடுத்து தாயூட்ட வரும் போது
பாலும் முறிந்ததென்ன நடராஜா
பார்வை தெரிந்ததென்று பாவை வரும் போது
தீபம் அணைந்ததென்ன நடராஜா
உன் சேவை செய்ததற்கு தன் சேவை தான் மறந்த
உயிரைப் பறிப்பதென்ன நடராஜா
தந்தை பன்னீர் கொடுத்ததற்கு பதிலாக
நீ எனக்கு கண்ணீர் கொடுத்ததென்ன நடராஜா
பாமாலை அவர் படிக்கப் பூமாலை நான் தொடுக்க
வாழ் நாள் நடந்ததையா நடராஜா
ரகளை பாட்டு. பாலமுரளியும், ஜானகியும் மனசப் பிழிஞ்சுடுவாங்க.
நடித்தது உங்க சரோஜாதேவியும்:),சாமியாருக்குன்னே பிறந்த நாகைய்யாவும்:).
ஓகேயா!
சரி! நான் ஆபிசுக்கு கிளம்புற நேரம் வந்தாச்சு!:) பார்த்துக்கோங்க.:)
எப்படியோ நல்லா இருங்க :):)
Chinna Kannan sir,
http://moganaraagam.blogspot.com/201...g-post_06.html
கார்த்திக் சார்
நம்ம NT பாட்டு ஒண்னு சார் இளையராஜாவின் மோகன மெலடி
நான் வாழ வைப்பேன்
அசோகா brothers
யோகானந்த் direction
இந்த படத்தை பற்றி விகடன் விமர்சனம் நல்ல நினைவு
சிவாஜி படம் ஆரம்பித்து அரை மணி நேரம் ஆகியும் .. ரஜினி வந்தாரோ பொழைததோ
(எனுடைய வோர்டிங்க்ஸ் மாறி இருக்கலாம் விகடன் சொல்ல வந்த கருத்து இதுனு நினைவு )
சமீபத்தில் தந்தியில் ஆரூர் தாஸ் அவர்களும் சற்று கோடிட்டு இருந்தார்கள் இந்த படத்தை பற்றி
ஆனால் பாட்டு ஒவ்வொன்னும் மணி மணியாக இருக்கும்
அதிலும் இந்த டூயட் கண்ணை மூடிட்டு கேட்டிங்கனா
பாலா சிவாஜி சாருக்கும் சுசீலா விஜயா அம்மாவுக்கும் அப்படியே பொருந்தும் .
ராஜாவின் ஸ்டார்டிங் பீட் prelude கிடார் violin தபேல
பௌர்ணமி இரவில் சாரை பாம்பு பின்னியது போல் பிணைந்து
//தாலாட்டு கேட்கின்ற மழலை இது..
தண்டோடு தாமரை ஆடுது..
சம்பங்கி பூக்களின் வாசம் இது..
சங்கீத பொன் மழை தூவுது..
ராகங்களின் மோஹனம்..
மேஹங்களின் நாடகம்..
உன் கண்கள் எழுதிய காவியம்..
என் இதய மேடைதனில் அறங்கேற்றம்.//
என்ன இந்த பாட்டு எல்லாம் நம் தலைவர் கொஞ்சம் ஸ்லிம் ஆக இருந்த போது வந்து இருந்தா செம ரகளை தான்
தலைவராவது பரவாயில்லை விஜயாம்மா தான் பெல்லஸ் மிடி maxi னு தன்னுடைய ஆசை எல்லாம் நிறைவேற்றி (கொல்லுவார்கள்)
மற்ற பாடல்களையும் அலசுவோம்
கிருஷ்ணா சார்.. அதுசரி திருத்தேரில் வரும் சிலையோன்னு ஆரம்ப வரி எழுதலைன்னா கண்டுபிடிக்க மாட்டோமா என்ன நல்ல பாட்டு தான்..ஆனா கே.ஆர்.வி தான் ஏதோ ஊர்பேர் தெரியாத காய்ச்சல்ல விழுந்து எழுந்த மாதிரி ஒல்லியா இளைச்சமாதிரி இருப்பாங்க..சொன்னாற்போல காஸ்ட்யூம் தான் கண்ணுக்கு க் கஷ்டம்..
வாசுசார்.. நன்றி ஃபர்த லிரிக்ஸ்..ரொம்ப்ப்ப பிடிச்ச ப்பாட்டு இது.. அது என்ன உங்க சரோஜாதேவி..ம்ம்(நி நி மெளலி மாதிரி.. ஏதோ ஆசைப்படறீங்க :) )
பாலா சார்.. நன்றி இணைப்பிற்கு..வீட்டிற்குப்போய்த்தான் பார்க்கணும் :)
ஒரு அழகான பாடல்.
பாடலின் விசேஷமே பாடல் என்று எந்த வரிகளுமில்லாததுதான்!. ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு "நிவேதா" என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஒரு பாடல் என்று சொன்னால் நம்புவதற்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். கேட்பதற்கு - சான்ஸே இல்லை :
இம்மாதிரிப் பாடல்களைக் கேட்கவைக்க வேண்டுமென்றால் குரலில் தேனொழுக வேண்டும். இருக்கவே இருக்கிறார் பாலு. வெளுத்து வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். மரகதமணியும் (மணிஷர்மா-தெலுகிங்கில்) பாலுவும் சேர்ந்து கொண்டு நமக்கு விளையாட்டு காட்டியிருக்கிறார்கள். ஆ... இன்னொரு முக்கிய ஆளும் விளையாட்டுக் காட்டியிருக்கிறார் - அவர் ஒளிப்பதிவாளர். ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு அதிகமான காட்சிகள் அமைக்கப்பட்ட பாடல் இதுவாகத்தானிருக்கும். சில நொடிகளே நீடிக்கும் ஏகப்பட்ட "கட் ஷாட்"கள். அழகான விளம்பரப் படம் போல வர்ணமயமாக பலவித உடைகளில் ரகுமானும் கெளதமியும் வருவார்கள் - இயல்பான செய்கைகளுடன்.
ஸ்வரங்களை அழகாகப் பாடியது போதாதென்று "நிவேதா"வைக் குழைத்துக் குழைத்து பாலு பாடியிருக்கிறார் பாருங்கள்.
இந்த பாடலின் வீடியோ இணைப்பு
http://www.youtube.com/watch?v=4cyZq1uvm7Y
bala sir
மிக நல்ல பாடல்களை நினவு கொண்டு வந்து உள்ளீர்கள்
கேளடி கண்மணி வெற்றிக்கு பிறகு வசந்த் கொடுத்த படம்
நீ பாதி நான் பாதி
படம் பாதி தான்
1982 இல் வெளிவந்த தணியாத தாகம்
ஒரு தலை ராகம் எ ம் இப்ராகிம் direction
மன்சூர் creations
மியூசிக் டைரக்டர் எ எ ராஜ்
ஒரு தலை ராகம் படம் வந்த போது ராஜேந்தருக்கும் இப்ராஹிம்கும்
ஒரு தலை ராகம் வெற்றிக்கு யார் காரணம்னு சண்டை வந்து
ராஜேந்தர் அவர் வழியில் வசந்த அழைப்புகள்,ரயில் பயணங்களில் ,
ராகம் தேடும் பல்லவி,நெஞ்சில் ஒரு ராகம் னு படமா எடுத்துட்டு இருந்தார்.
அப்ப இந்த எ ம் இப்ராகிம் தயாரித்து இயக்கி வெளிவந்த படம்
டெல்லி கணேஷ் சுபத்ரானு ஒரு புது முகம்
ஒரு தலை ராகம் படத்தில் ரூபாவின் பெயர் சுபத்ரா
மலேசியா ஜானகி
ஜானகியின் சிரிப்பு சிலிர்ப்பு
பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
(பூவே)
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் ...
என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
(நீ கோவில் )
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்
(பூவே )
கோவில் கலசம் போல் என் தேவி
ஆஹ (ஜானகி யின் சிலிர்ப்பு )
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
(கோவில்)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
(ஜானகியின் சிரிப்பு)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
(பூவே)
மாங்கனி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
(மலேசியவின் சிரிப்பு)
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
(ஜானகியின் சிரிப்பு)
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும்
என் கரம் பட்டு
அஹ (மீண்டும் ஜானகியின் சிலிர்ப்பு )
(பூவே)
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் ..
புது மலர் புது மலர் ..
“””
indha paatukku link
http://www.inbaminge.com/t/hits/Peng...Solli.eng.html
பாலுவின் ஆரம்ப கால பாடல்
http://www.youtube.com/watch?v=BaIoBpgkb4Q
//பாடலின் விசேஷமே பாடல் என்று எந்த வரிகளுமில்லாததுதான்!. ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு "நிவேதா" என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஒரு பாடல் என்று சொன்னால் நம்புவதற்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். கேட்பதற்கு - சான்ஸே இல்லை :// என் நண்பர் ஒருவர் பல வருடங்களுக்குமுன் கல்யாணமான புதிதில் பார்த்தபடம் இந்தப் படமாம்..பின் பிறந்த குழந்தைக்கு வைத்த பெயர் நிவேதா
நல்ல பாட்டு..வீட்டிற்குப் போய் பார்க்கிறேன்..
இன்று இரவு தூக்கம் கிடையாது........
எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பதில்லை
பெண் ஒன்று கண்டேன் படத்தில் நாயகியை நாயகன் ராகமாலிகையாய் கற்பனை செய்யும் பாடல்
"நீ ஒரு ராகமாலிகை என் நெஞ்சம் ஒரு காதல் மாளிகை............
எல்லா வரிகளிலும் ஒரு ராகத்தின் பெயரை சொல்லும் கவிதை
ராகத்தின் பெயர்களை பிரித்து பொருள் கொண்டு நாயகன் நாயகியை பாடும் வரிகள் செய்யும் வித்தை நயம்.
எழுதியவர் கண்னதாசனா ? வாலியா ?
"உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை
நான் வாவனெ அழைக்கையில்
விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி
ஆரபிமானமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை"
//http://4varinote.wordpress.com/category/ulunthurppettai-shanmugam/ // பாலா சார்..இந்த இடத்தில் இந்தப் பாட்டு கண்ணதாசன்னு எழுதியிருக்கு.. ஆனா அழகான பாடல் .. ரிமைண்ட் பண்ணினதுக்கு நன்றி..
டியர் கிருஷ்ணாஜி,
'தணியாத தாகம்' படம் பிரபாத்தில் மேட்னி பார்த்தது. தலைவலி வந்துவிட்டது. இப்படத்துக்கு குமுதம் எழுதிய விமர்சனத்தில் 'ஒருதலைராகம் வெற்றியடைந்தது டி.ராஜேந்தரால்தான்' என்று இப்ராகிம் வாயால் சொன்னால் நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோமா?. அதற்கு இப்படி ஒரு படத்தை எடுத்துத்தான் நிரூபிக்கனுமா?' என்று எழுதி இருந்தனர்.
டியர் பாலா சார்,
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாடல் வீடியோவுக்கு நன்றி.
சபதம் படத்தில் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் மனதைக்கொள்ளை கொள்ளும் பாடல். 1971-ல் விவித் பாரதியில் கலக்கியெடுத்த பாடல்களில் ஒன்று.
மயங்குகிறாள் ஒரு மாது
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய உருப்படியான படங்களில் ஒன்று. (என்றைக்கு ஏ.வி.எம்.ம்முக்குள் நுழைந்தாரோ அப்பவே மசாலா இயக்குனராகிவிட்டார்).
மணிமணியான பாடல்கள்...... (இசை விஜயபாஸ்கர்...??)
பாலாவின் கொஞ்சும் குரலில்..
'சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை'
ஜெயச்சந்திரனின் மயக்கும் குரலில்...
'வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் - அது
தரவேண்டும் அடையாளச்சின்னம்'
வாணியம்மாவின் தேன் குரலில்....
'ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்'
சுஜாதா, முத்துராமன், விஜயகுமார், தேங்காய், படாபட் ஆகியோருக்கிடையே நடிப்புப்போட்டி. தேங்காயின் வில்லத்தனம், விஜயகுமார் மற்றும் சுஜாதாவின் தவிப்பு, முத்துராமனின் அடக்கம் + கண்ணியம்.
மொத்தத்தில் ஒரு கருப்பு வெள்ளை ஓவியம்.
வர வேண்டும் வாழ்கையில் வசந்தம்
பாடல் ஜேசுதாஸ் பாடியதாக நினவு கார்த்திக் சார்
இந்த பாட்டு அடிகடி சன் மியூசிக் இல் முன்னர் இரவு நேர பாடல்களஆக வைத்து கொண்டு இருந்தனர்
திடீர் என்று ஜேசுதாஸ் இன் குரல் சுருதி விலகி மாறி படும்
விடியோ problem ஆ அல்லது படத்திலேயே அப்படியா
தெரியவில்லை
இது ஒரு புதுமை புரட்சி படைப்பு
திருமணத்திற்கு முன் கதாநாயகி சோரம் போவது போல்
பிறகு அவளுக்கு கதாநாயகன் வாழ்கை கொடுப்பது போலவும்
அவளின் முன்னாள் காதலன் அவர்கள் வீட்டிலேயே டிரைவர் ஆக வேலைக்கு சேர்வதும் இது தெரிந்து தேங்காய் blackmail செய்வது போலவும்
மிக நல்ல படைப்பு
நீங்கள் சொன்னது போல் spm 80 களுக்கு பின் தான் மசாலா இயக்குனர் ஆகி விட்டார்
தணியாத தாகம் படம் வெறும் குப்பை சார்
இந்த பாடல் மட்டும் நல்ல பாடல் என்று சொன்னேன்
ஒரு ஊதா பூ கண் சிமிட்டுகிறது 1976
புஷ்பா தங்கதுரை கதை
கமல் விஜயகுமார் சுஜாதா நடித்து sp முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த நினவு
சுஜாதா கமலை காதலித்து ஆனால் காதல் கை கூடாமல் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டு கமலை மறக்க முடியாமல் தவிப்பார்
கமலும் அதே நிலை தான். திருமணதிருக்கு பிறகு ஒரு நாள் கமலும் சுஜாதாவும் ஒரு நாள் சேர்ந்து வாழ விஜயகுமார் அனுமதிப்பது போல் எல்லாம் காட்சி வரும். இதெல்லாம் அந்த 1976 காலகட்டத்தில் பயங்கர புதுமை
சாமி தக்ஷினமுர்த்தி (இளையராஜா குரு ) இசை
டி கே கலா குரலில்
"முறுக்கு கை முறுக்கு ஏழை எளியவர் வாழ வழி செய்யும் முறுக்கு "
marina பீச் இல் பாடும் பாடல்
பாடகர் திலகம் வாணி குரல்களில்
"ஆண்டவன் இல்லா உலகம் எது
ஆசைகள் இல்லா உலகம் எது
நதி இருந்தால் நீர் இருக்கும் "
அருமையான பாடல் .மீனவர்கள் கட்டுமரம் அலுப்பு தெரியாமல்
இருப்பதற்காக பாடும் காட்சி அமைப்பு
ஜேசுதாஸ் குரலில்
"நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் கனி போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க "
மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாயக்க வேண்டும்
குலமகளாய் பிறப்பதற்கோ கொடுத்து வைக்க வேண்டும்
அருமைகளும் பெருமைகளும் நிறைந்தது தான் இன்பம்
நீ அதனையும் பெற்று விட்டாய் ஆனந்தமாய் வாழ்க
அருமையான வாழ்த்து பாடல்
அன்னக்கிளி மூலம் தமிழ்த்திரையுலகை இளையராஜா ஒரு கலக்குக் கலக்கிய அதே 1976ம் ஆண்டு சங்கர் கணேஷ் தங்கள் பாடல்கள் மூலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு அவர்களின் பல பாடல்களை கொண்டு சேர்த்த பெருமை சிலோன் ரேடியோவைத் தான் சேரும். அந்த ஆண்டு வந்த இன்ஸ்பெக்டர் மனைவி படத்தில் இடம் பெற்ற மீனாட்சி கோவில் கொண்ட மணி ஓசை பாடல் கிட்டத்த்ட்ட அன்றாடம் ஒலிபரப்பப் படும். அதே படத்தில் இடம் பெற்ற இந்த பாடலும் அதே போல ஹிட்டான பாடல்.
இளமையின் உறவிலே என்ன சுகம்... ஜெயச்சந்திரன் பி.சுசீலா பாடிய இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. கேளுங்கள்
http://www.inbaminge.com/t/i/Inspector%20Manaivi/
ஏ.எம். ராஜா பாடிய இந்தப் பாடலும் சிலோன் ரேடியோவின் புண்ணியத்தால் சூப்பர் ஹிட்டான பாடல். இது இவர்களின் கதை திரைப்படப் பாடல்கள் குறிப்பாக இந்த ஆனந்த இல்லம் பாடல் நம் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும் பாடல்
http://www.inbaminge.com/t/i/Ithu%20Ivargalin%20Kathai/