Page 96 of 400 FirstFirst ... 46869495969798106146196 ... LastLast
Results 951 to 960 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #951
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    இன்று இரவு தூக்கம் கிடையாது........

    எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பதில்லை

    பெண் ஒன்று கண்டேன் படத்தில் நாயகியை நாயகன் ராகமாலிகையாய் கற்பனை செய்யும் பாடல்

    "நீ ஒரு ராகமாலிகை என் நெஞ்சம் ஒரு காதல் மாளிகை............

    எல்லா வரிகளிலும் ஒரு ராகத்தின் பெயரை சொல்லும் கவிதை

    ராகத்தின் பெயர்களை பிரித்து பொருள் கொண்டு நாயகன் நாயகியை பாடும் வரிகள் செய்யும் வித்தை நயம்.

    எழுதியவர் கண்னதாசனா ? வாலியா ?


    "உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
    உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
    உன் இளநடை மலயமாருதம் ஆகும்
    உன் மலர் முகம் சாரமதியென கூறும்
    நீ ஒரு ராகமாலிகை
    உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
    நீ ஒரு ராகமாலிகை

    நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
    இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
    நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
    இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
    குரல்வழி பிறந்தது அம்சத்வனி
    உன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி
    உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி

    நீ ஒரு ராகமாலிகை
    உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
    நீ ஒரு ராகமாலிகை

    நான் வாவனெ அழைக்கையில்
    விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி
    ஆரபிமானமும் தேவையில்லை
    இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை

    நீ ஒரு ராகமாலிகை
    உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
    நீ ஒரு ராகமாலிகை

    நீ எனக்கே தாரம் என்றிருக்க
    உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
    நீ எனக்கே தாரம் என்றிருக்க
    உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
    என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
    நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
    இந்த நாயகன் தேடிடும் நாயகியே

    நீ ஒரு ராகமாலிகை
    உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
    நீ ஒரு ராகமாலிகை"

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #952
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //http://4varinote.wordpress.com/category/ulunthurppettai-shanmugam/ // பாலா சார்..இந்த இடத்தில் இந்தப் பாட்டு கண்ணதாசன்னு எழுதியிருக்கு.. ஆனா அழகான பாடல் .. ரிமைண்ட் பண்ணினதுக்கு நன்றி..

  4. #953
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி,

    'தணியாத தாகம்' படம் பிரபாத்தில் மேட்னி பார்த்தது. தலைவலி வந்துவிட்டது. இப்படத்துக்கு குமுதம் எழுதிய விமர்சனத்தில் 'ஒருதலைராகம் வெற்றியடைந்தது டி.ராஜேந்தரால்தான்' என்று இப்ராகிம் வாயால் சொன்னால் நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோமா?. அதற்கு இப்படி ஒரு படத்தை எடுத்துத்தான் நிரூபிக்கனுமா?' என்று எழுதி இருந்தனர்.

  5. #954
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் பாலா சார்,

    'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாடல் வீடியோவுக்கு நன்றி.

    சபதம் படத்தில் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் மனதைக்கொள்ளை கொள்ளும் பாடல். 1971-ல் விவித் பாரதியில் கலக்கியெடுத்த பாடல்களில் ஒன்று.

  6. #955
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    மயங்குகிறாள் ஒரு மாது

    எஸ்.பி.முத்துராமன் இயக்கிய உருப்படியான படங்களில் ஒன்று. (என்றைக்கு ஏ.வி.எம்.ம்முக்குள் நுழைந்தாரோ அப்பவே மசாலா இயக்குனராகிவிட்டார்).

    மணிமணியான பாடல்கள்...... (இசை விஜயபாஸ்கர்...??)

    பாலாவின் கொஞ்சும் குரலில்..

    'சம்சாரம் என்பது வீணை
    சந்தோஷம் என்பது ராகம்
    சலனங்கள் அதில் இல்லை
    மனம் குணம் ஒன்றான முல்லை'

    ஜெயச்சந்திரனின் மயக்கும் குரலில்...

    'வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் - அது
    தரவேண்டும் அடையாளச்சின்னம்'

    வாணியம்மாவின் தேன் குரலில்....

    'ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம்
    இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்'

    சுஜாதா, முத்துராமன், விஜயகுமார், தேங்காய், படாபட் ஆகியோருக்கிடையே நடிப்புப்போட்டி. தேங்காயின் வில்லத்தனம், விஜயகுமார் மற்றும் சுஜாதாவின் தவிப்பு, முத்துராமனின் அடக்கம் + கண்ணியம்.

    மொத்தத்தில் ஒரு கருப்பு வெள்ளை ஓவியம்.

  7. #956
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    மயங்குகிறாள் ஒரு மாது

    எஸ்.பி.முத்துராமன் இயக்கிய உருப்படியான படங்களில் ஒன்று. (என்றைக்கு ஏ.வி.எம்.ம்முக்குள் நுழைந்தாரோ அப்பவே மசாலா இயக்குனராகிவிட்டார்).

    மணிமணியான பாடல்கள்...... (இசை விஜயபாஸ்கர்...??)



    ஜெயச்சந்திரனின் மயக்கும் குரலில்...

    'வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் - அது
    தரவேண்டும் அடையாளச்சின்னம்'

    வாணியம்மாவின் தேன் குரலில்....

    'ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம்
    இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்'

    சுஜாதா, முத்துராமன், விஜயகுமார், தேங்காய், படாபட் ஆகியோருக்கிடையே நடிப்புப்போட்டி. தேங்காயின் வில்லத்தனம், விஜயகுமார் மற்றும் சுஜாதாவின் தவிப்பு, முத்துராமனின் அடக்கம் + கண்ணியம்.

    மொத்தத்தில் ஒரு கருப்பு வெள்ளை ஓவியம்.
    வர வேண்டும் வாழ்கையில் வசந்தம்
    பாடல் ஜேசுதாஸ் பாடியதாக நினவு கார்த்திக் சார்

    இந்த பாட்டு அடிகடி சன் மியூசிக் இல் முன்னர் இரவு நேர பாடல்களஆக வைத்து கொண்டு இருந்தனர்
    திடீர் என்று ஜேசுதாஸ் இன் குரல் சுருதி விலகி மாறி படும்
    விடியோ problem ஆ அல்லது படத்திலேயே அப்படியா
    தெரியவில்லை

    இது ஒரு புதுமை புரட்சி படைப்பு
    திருமணத்திற்கு முன் கதாநாயகி சோரம் போவது போல்
    பிறகு அவளுக்கு கதாநாயகன் வாழ்கை கொடுப்பது போலவும்
    அவளின் முன்னாள் காதலன் அவர்கள் வீட்டிலேயே டிரைவர் ஆக வேலைக்கு சேர்வதும் இது தெரிந்து தேங்காய் blackmail செய்வது போலவும்
    மிக நல்ல படைப்பு
    நீங்கள் சொன்னது போல் spm 80 களுக்கு பின் தான் மசாலா இயக்குனர் ஆகி விட்டார்
    gkrishna

  8. #957
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தணியாத தாகம் படம் வெறும் குப்பை சார்

    இந்த பாடல் மட்டும் நல்ல பாடல் என்று சொன்னேன்
    gkrishna

  9. #958
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஒரு ஊதா பூ கண் சிமிட்டுகிறது 1976

    புஷ்பா தங்கதுரை கதை
    கமல் விஜயகுமார் சுஜாதா நடித்து sp முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த நினவு

    சுஜாதா கமலை காதலித்து ஆனால் காதல் கை கூடாமல் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டு கமலை மறக்க முடியாமல் தவிப்பார்
    கமலும் அதே நிலை தான். திருமணதிருக்கு பிறகு ஒரு நாள் கமலும் சுஜாதாவும் ஒரு நாள் சேர்ந்து வாழ விஜயகுமார் அனுமதிப்பது போல் எல்லாம் காட்சி வரும். இதெல்லாம் அந்த 1976 காலகட்டத்தில் பயங்கர புதுமை
    சாமி தக்ஷினமுர்த்தி (இளையராஜா குரு ) இசை

    டி கே கலா குரலில்
    "முறுக்கு கை முறுக்கு ஏழை எளியவர் வாழ வழி செய்யும் முறுக்கு "
    marina பீச் இல் பாடும் பாடல்

    பாடகர் திலகம் வாணி குரல்களில்
    "ஆண்டவன் இல்லா உலகம் எது
    ஆசைகள் இல்லா உலகம் எது
    நதி இருந்தால் நீர் இருக்கும் "

    அருமையான பாடல் .மீனவர்கள் கட்டுமரம் அலுப்பு தெரியாமல்
    இருப்பதற்காக பாடும் காட்சி அமைப்பு

    ஜேசுதாஸ் குரலில்
    "நல்ல மனம் வாழ்க
    நாடு போற்ற வாழ்க
    தேன் கனி போல்
    வான் மழை போல்
    சிறந்து என்றும் வாழ்க "

    மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாயக்க வேண்டும்
    குலமகளாய் பிறப்பதற்கோ கொடுத்து வைக்க வேண்டும்
    அருமைகளும் பெருமைகளும் நிறைந்தது தான் இன்பம்
    நீ அதனையும் பெற்று விட்டாய் ஆனந்தமாய் வாழ்க

    அருமையான வாழ்த்து பாடல்
    gkrishna

  10. #959
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்னக்கிளி மூலம் தமிழ்த்திரையுலகை இளையராஜா ஒரு கலக்குக் கலக்கிய அதே 1976ம் ஆண்டு சங்கர் கணேஷ் தங்கள் பாடல்கள் மூலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு அவர்களின் பல பாடல்களை கொண்டு சேர்த்த பெருமை சிலோன் ரேடியோவைத் தான் சேரும். அந்த ஆண்டு வந்த இன்ஸ்பெக்டர் மனைவி படத்தில் இடம் பெற்ற மீனாட்சி கோவில் கொண்ட மணி ஓசை பாடல் கிட்டத்த்ட்ட அன்றாடம் ஒலிபரப்பப் படும். அதே படத்தில் இடம் பெற்ற இந்த பாடலும் அதே போல ஹிட்டான பாடல்.

    இளமையின் உறவிலே என்ன சுகம்... ஜெயச்சந்திரன் பி.சுசீலா பாடிய இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. கேளுங்கள்

    http://www.inbaminge.com/t/i/Inspector%20Manaivi/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #960
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஏ.எம். ராஜா பாடிய இந்தப் பாடலும் சிலோன் ரேடியோவின் புண்ணியத்தால் சூப்பர் ஹிட்டான பாடல். இது இவர்களின் கதை திரைப்படப் பாடல்கள் குறிப்பாக இந்த ஆனந்த இல்லம் பாடல் நம் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும் பாடல்

    http://www.inbaminge.com/t/i/Ithu%20Ivargalin%20Kathai/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •