Thanks murali. Indeed a Good Prelude and a brief.
Printable View
திரு முரளி சார்,
நீயா நானா நடிகர்திலகம் சிறப்பு நிகழ்ச்சி பற்றிய எண்ணங்களை நமது திரியில் பதிவு செய்ததற்கு நன்றி . முதன்முதலில் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் நடிகர் என்ற சாதனையை செய்திருப்பவர் நமது நடிகர்திலகம்தான் என்பதில் நமக்கு பெருமை.
இவரின் படங்கள் ஓடும் லட்சணத்தைத்தான் கண்கூடாக பார்க்கிறோமே.சுமார் 100 தியேட்டர்களில் மறுவெளியீடு செய்யப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது நாளே பெரும்பாலான அரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது (ஆதாரம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்) வெளியான நான்காவது நாளில் பாதிக்கும் மேற்பட்ட அரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது .இரண்டாவது வாரத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அரங்குகளில் பெயரளவில் படம் ஓடிக்கொண்டிருந்தது .மூன்றாவது வாரம் அதுவும் வெறும் இரண்டு,மூன்று அரங்குகள் என்றானது .இனி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என தெரிந்துகொண்ட சொக்கலிங்கம் அவர்கள் அந்த வாரத்தில் வந்த விளம்பரத்தில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் .அதாவது தேர்தல் காலம் மற்றும் பள்ளி தேர்வு காலம் என்பதால் படம் போதிய வரவேற்பு பெறவில்லை என்றும் அதனால் சிறிது காலத்திற்குப்பின் படத்தை மீண்டும் புதுபொலிவோடு வெளியிடுவதாக சொன்னார் (ரவிகிரன்சூர்யா சார்,அந்த விளம்பரம் இருந்தால் இங்கு பதிவிடும்படி கேட்டுகொள்கிறேன்).இந்த இடத்தில்தான் அவரின் படங்கள் வழக்கமாக ஒட்டப்படும் யுத்தியை சிலர் கையாண்டார்கள் .படம் வெள்ளிவிழாவை தாண்டியும் ஒட்டப்படவேண்டும் என்றும் அதனால் உண்டாகும் நஷ்டத்தை ஒரு சிலர் பங்கு போட்டுகொள்வது என்றும்
முடிவு செய்யப்பட்டு வெளியான இரண்டாவது நாளே முகத்தில் கரியை பூசிக்கொண்ட ஒரு படத்தை 150 நாட்களையும் தாண்டி ஓடவைத்து மாபெரும் வெற்றி என்று கொண்டாடும் கேலிக்கூத்தை நாடு பார்த்துகொண்டிருக்கிறது
Dear Mr Murali Sir,
Fantastic, Faboulous & Forceful. I have not seen such a reply with authentic information.
Kudos to Mr Murali. Atleast,hereafter those who progate false information will shut their
mouth with tied hands. In the initial itself it is clearly mentioned as Vasool Chakravarthy Ganesan.
Kadvulai Kandavarum Illai Ganesanai Vendravarum Eppothum Illai.
Once again thanks for the forceful reply.
Regards
It is for those who write false information about NT and will receive the treatment from Mr Murali.
For Mr Murali Sir
http://youtu.be/jLbw6WA8iVU
INDEPENDENCE DAY SPECIAL - ONLY NT SONGS FOR SUCH AN OCCASION
http://youtu.be/lfSZQns0zgE
Nadigar Thilagam as VOC
http://youtu.be/skpI1Gl5cus
dear Murali Sir. Unbelievable! Neengathaanaa ippadiyellaam ezhudhuvathu!! I had a feel that I was enjoying the movie 'the Mask'!! Moderator Murali has become the Mask Murali! In a light vein Murali sir. Thanks to thiru. Kalaivendhan and co.,
https://www.youtube.com/watch?v=eEQomU6iFtw
https://www.youtube.com/watch?v=ttoC1n8z9h4
NT as Bagat Singh
http://youtu.be/GkxRC8ikSc4
NT as great poet Bharathiyar
http://youtu.be/AKLzxSGhVyw
NT song for National Integration. Only in NT movies we can see not from any actor.
http://youtu.be/zKUpbXldBA4
Article by Vairamuthu about our Acting God in the recent issue of Kumudham
Attachment 3489
Attachment 3490
Attachment 3491
Attachment 3492
Respect Vairamuththu ..Respect .:thumbsup:
Dear Sir,
I have a small opinion to make here.
Any film for that matter, it has to be treated only as a film.
If we go behind the logic of sequences and film then all films will have some flaw or other.
It is not good on our part to mock on the sequences of the film because IT IS NOT A HERO's MISTAKE. It is the mistake of the Story writer and his imagination. HERO IS NEVER RESPONSIBLE FOR SUCH THINGS !
Infact, in advanced yoga stages, sages and saint of those era have practiced it.
You can check YOGA - a Science or Trick ? - written by Herbert Warner .
In Idhihasam and Puranas, we have heard / read Rishi's doing this as it is believed that they had special powers.
If we are ready to accept it then why not this?
Am not supporting anybody here BUT am explaining the essence of it.
Let us look film only as a film - if we research on logic's am sure, all films fail !
For example: What is the logic of song sequences...? Hero and Heroine is singing...from where does those musical instruments play in background? How come the hero and heroine able to change the dress for every line or paragraphs...? These are all logics..which we do not bother and just listen to the song...The same way, the sequence should also be treated.
When Superman (or) Spiderman (or) Batman (or) Jet-Li does that in Hollywood film, we clap and say, what a way they have done this..Chanceailla...especially the sequence where Superman flies across the Eiffel Tower...from France, side by side of the Rocket, the camera was excellent....only Superman can do it..!
But when it come to Tamizh films we do not accept our own hero's doing it! Forget about the superman matter..But in YOGA, the aasana you are mentioning is VERY MUCH POSSIBLE & was practiced by RISHIS / GANDHARVAS etc.,
So, let us not get into such unhealthy discussions. Please do not mistake me. I felt, it is not appreciable and that's why am being open. Had i mentioned anything wrong, please excuse me !
Regards
RKS
Dear Friends,
I have a request to all of you !
Mr.Kalaivendan had written his response to Gopal Sir and Ravi Sir that contained many generic stuffs which are nothing but his opinion.
This was also duly replied by Gopal Sir and in detail by Murali sir , with point to point clarification and justification along with Solid Credentials and Evidences.
We have thanked Murali sir with few lines of our thoughts. I think we should stop here and proceed further with our contribution rather than taking film sequences and pointing out faults as an extension of this. It is not required.
Any statistical controversy raised, we can jointly address and prove with evidences like Gopal Sir and Murali Sir. Infact, had Gopal sir wanted, he could have hidden the facts of Pammalar mail and retained only his. But he did not do that ! He published it straight forward. This one example shows our straightforwardness to the general public who read our threads.
Infact, we appreciate your honesty Gopal Sir in this regard !!
Thanks and Regards
RKS
To people who ask who are we out of innocence (or) ignorance (or) arrogance, we can reply
https://www.youtube.com/watch?v=VF7VPpAQfSA
Superb Murali.Some people do not know how to count real 100 and 175 but they can count reel 100 and 175.
M/s. Murali / Gopal,
Amazing and fitting responses with authentic data.
Hats off to you both!
Regards,
R. Parthasarathy
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்!
என் பதிவுகளை பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. எல்லா புகழும் நடிகர் திலகதிற்கே!
நமது திரிக்கு புதிய வரவாக வருகை தந்திருக்கும் எங்கள் மதுரையின் இளஞ்சிங்கம் சுந்தர் அவர்களை
நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி வரவேற்கிறேன்.
அன்புடன்
திரி நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். மாற்று முகாம் நண்பர்கள் சிலர் நமது படங்களின் ஓட்டத்தைப் பற்றியும் வசூலைப் பற்றியும் அவதூறு சொன்னதால் அதற்கு பதில் கொடுத்தோம். ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் அவர்களைப் பற்றியோ அவர்தம் படங்களைப் பற்றியோ நடிப்பைப் பற்றியோ எந்த வித விமர்சனங்களும் நமது இந்த திரியில் முன் வைக்க வேண்டாம் என்பதை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். நமக்கு என்று ஒரு தரம் இருக்கிறது. அதிலிருந்து நாம் எந்த காலத்திலும் தாழ வேண்டாம். யார் மனதையும் நாம் புண்படுத்த வேண்டாம்.
நண்பர் rks சொன்னது போல் நடிகர் திலகம் புகழ் மட்டும் பாடுவோம்.
அன்புடன்
கோவை ராயலை கலக்கிய அழகாபுரி சின்ன ஜாமீன் ஆனந்த் ஒரு வாரத்தில் nett மட்டும் Rs 80 ஆயிரத்தை தாண்டியும் மொத்த nett வசூலையும் விட gross வசூல் அதற்கும் சில ஆயிரங்கள் தாண்டி ஒரு சாதனை புரிந்துள்ளார்.
அதே போன்று நாம் முன்னரே இங்கே பகிர்ந்து கொண்ட செய்தியான நெல்லை சென்ட்ரலில் தியாகம் ஒரு வாரம் ஓடிய போது வெளியீட்டாளர் பங்கு மட்டும் ரூபாய் 12 ஆயிரத்திற்கும் அதிகமாக (Above Rs 12,000/-) பெற்று தந்திருக்கிறது.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
Wishing you All Happy Independence Day. Nadigarthilagam left his marks or footprints on every goodthings to remember him on all occasions.
கப்பலோட்டிய தமிழன்-1961
சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் நடிப்பு தெய்வத்தின் சாதனைகளில் ஒன்றான, நாங்கள் கொண்டாடும் கப்பலோட்டிய தமிழன் மீள் பதிவு.
இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.
இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.
நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.
கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .
இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.
இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).
அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.
இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.
மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase.
படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.
ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.
சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.
ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .
முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.
இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?
Wish You All A Very Happy Independence Day!!!
இலங்கையில் கர்ணன்
http://i61.tinypic.com/4rx8pi.jpg
happy independence day to all thread friends
Thanks for the information Mr Jeev. Karnan rocks all over the world.
Regards
இந்திய விடுதலை நாளை முன்னிட்டு சிறப்புப் பாடல்...
கண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என அன்று கப்பலோட்டிய தமிழனில் பாடிய வரிகள் இன்றும் பாடும் படியான சூழ்நிலை, மறைய வேண்டும்.
எண்ணற்ற தியாகியரின் வேர்வையாலும் ரத்தத்தாலும் பெற்ற விடுதலையை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளோமா...சரியான முறையில் அதை காப்பாற்றியிருக்கிறோமா..
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனசாட்சிக்கு விரோதமில்லாத பதில் கிடைக்கும் போது,, அந்த விடையினால் உள்ளம் மகிழ்ச்சியடையும் போது நாம் பெறக் கூடிய ஆனந்தமே இந்த விடுதலைக் கொண்டாட்டங்களுக்கு சரியான பொருள் தரும்.
1977ல் நடிகர் திலகம் நாம் பிறந்த மண் திரைக்காவியத்தில் கேட்ட கேள்வி இன்றும் உயிருடன் உலவுகிறது.
இந்த சூழ்நிலையெல்லாம் மாறி பெருந்தலைவர் காமராஜரின் கனவு நிறைவேறும் நாளை ஆவலுடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்து இன்று விடுதலை நாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.
http://www.youtube.com/watch?v=VF7VPpAQfSA
முரளி சார்
சாது மிரண்டால் காடு கொள்ளாது..
தங்களுடைய பாய்ச்சல் .. இந்தப் பழமொழியைத் தான் நினைவூட்டுகிறது
உண்மையும் நேர்மையும் என்னாளும் உறங்காது.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
மறைந்த பிறகும் ,சராசரி மக்கள் மனதில் மட்டுமல்ல,பிரபலமான கலைஞர்கள்,அரசியல் தலைவர்கள் ,பத்திரிகையாளர்கள், அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையே போற்றி வணங்க காரணம், சிவாஜி தன்னை உலகத்திலேயே தலை சிறந்த நடிகராக மட்டுமல்ல. சிறந்த மனிதர்களில் ஒருவராகவும் எல்லோர் மனதிலும் குடி கொண்டுள்ளதை ,வைர முத்துவின் ,வைர வரிகள் எடுத்து காட்டுகின்றன.இத்தனைக்கும், எந்த காலத்திலும் பயமுறுத்தியோ,மிரட்டியோ, அரசியல் பலத்தாலோ,நிறுவன பலத்தாலோ,பணத்தால் விலைக்கு வாங்கியோ,பத்திரிகையாளர்களுக்கு இனாம் வழங்கியோ அவர் இதனை சாதிக்கவில்லை.இத்தனைக்கும் பட்டவர்தனமான வெட்டு ஒன்று துண்டு ஒன்று என்ற வெளிப்படை பேச்சு.
அதனால்தான் எழுத்தாளர் சுஜாதா சொன்னார். "அவர் இறந்த போது மட்டுமே அழுதவர் கண்ணீரில் உண்மை இருந்தது."
ரவிகிரண் ,
இந்த சுதந்திர நன்னாளில் நான் உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்வது ,தாங்கள் அவ்விடம் சென்று வீண் சர்ச்சை வளர்க்காமல் இருப்பது,உங்களுக்கு மட்டுமல்ல ,ஊருக்கே நல்லது.
சிவாஜி என்ற மாமனிதர்.
ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.(இந்த விஷயத்தில் Joe கட்சிதான்).
அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.
நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ?நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று. நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை ,அம்சங்களை வைத்து உண்மை பதிவுகள் .
--செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.
--அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .
--வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.
--எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .
--கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.
--சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.
--பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.
--சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.
--நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.
--மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.
--கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.
--தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.
--பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.
--ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.
--இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.
--தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.
--அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.
--நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.
--படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.
--பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.
--யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.
--தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.
--உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.
--பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.
--நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.
--தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.
--தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலிமர் டீவீயில் சுதந்திர போராட்ட வீரன் பாரத்தின் பராக்கிரமம். கண்டு களியுங்கள்.
சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்
ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.
சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)
எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.
எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.
சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.
ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)
ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் ...சிம்ம குரலை கேட்க்க தயாராகுங்கள்...
AUGUST 15TH today - இரவு 10.00 மணி...1974 அன்று ஒளிபரப்பான நடிகர் திலகத்தின் வெள்ளித்திரையில் விடுதலை
http://i501.photobucket.com/albums/e...ps522a661f.jpg
Enjoy the NT song for the Independence Day Celebration.
http://youtu.be/LiK_4pdcvv4