Dear Harish,
You can good quality CD/DVD in Planet M showrooms. One I preferred is near Malleswaram circle (below RR Gold palace).
Printable View
Dear Harish,
You can good quality CD/DVD in Planet M showrooms. One I preferred is near Malleswaram circle (below RR Gold palace).
அன்புள்ள பம்மலார் சார் மற்றும் ராகவேந்தர் சார்,
வழக்கம்போல, 'நான் வாழ வைப்பேன்' வண்ணப்பட வெளியீட்டு நினைவுகளும், விளம்பர, மற்றும் புகைப்பட வரிசையும் அருமை.
சென்ற ஆண்டு 'பாடல்கள் பலவிதம்' என்ற திரியில், 'எந்தன் பொன்வண்ணமே' பாடலை அலசிய நமது முரளி சீனிவாஸ் அவர்கள், பாடலை மட்டுமல்லாது 'நான் வாழ வைப்பேன்' படம் உருவான முழு வரலாற்றையும் அலசோ அலசென்று அலசியிருந்தார். மிக மிக நுண்ணிய விஷயங்களைக்கூட அருமையாக விவரித்திருந்தார். (ஏதோ காரணத்தால் அந்த திரியிலிருந்த அத்தனை பொக்கிஷப்பதிவுகளும் மறைந்து விட்டன. காரணம் கடவுளுக்கே வெளிச்சம்).
அந்த பாடல் அலசலுக்கு நான் அளித்திருந்த பதில் (என் கணிணியின் ட்ராஃப்ட் பகுதியில் இருந்தது). இங்கே தருவது பொருத்தம் என நினைக்கிறேன். இதோ அந்த பதில்....
Comment by Karthik…
Dear Muarli sir,
Wonderful cover-up about ‘Endhan pon vaNNamE’ from Naan Vaazha VaipEn’.
Your detailed writing has took me to the past, and I am still there, even after finished reading of your article / analysis / history.
Because, for the previous songs you have covered earlier, all the incidents which you have described are heard (from various sources) and read (from various books and magazines).
But for these incidents what you have described in this song analysis, I am the living witness for all those happenings. Yes from Thangai film to 100th Day function of Naan Vaazha VaippEn, I am the witness, and was watching all those happenings in those period, especially initial period of NT – IR relationship. Wow, what a golden memory they are. I already told here and there in out NT thread about the happenings at Chennai during Thiyaagam, Kavariman, Andhaman Kaadhali releases.
I have attended the 100th day function of ‘Naan Vaazha VaippEn’ which was held on 102nd day at Chennai Chitra Theatre, during the interval of its evening show. It was not arranged in any star hotel, but celebrated in the theatre itself. (I strongly hope, Mr. Raghavendhar might be there. He already told he was in 100th days function of Viswaroopam at Shanthi).
NT, K.R.Vijaya, Rajinikanth, D.Yoganand, Jaiganesh, Thengai Srinivasan, and other artists and technical crews were participated and awarded 100th day shields. When the show was started, all of us waiting for the interval (we already saw the movie in several number of times, but this time mainly for the function). After interval, the function started and nearly one and half hour the speeches and award function took place. They were the happiest moments in life, watching our idols in real.
Let me live for some more moments there. Even though there were many films for Deepavali 1978, the main competition was between Pilot Premnath (Alankar) and Sigappu RojaakkaL (Devi Paradise). Other movies are Thaai Meedhu Sathiyam (Wellington) , Vandikaran Magan (Gaiety), Thanga Rangan (Plaza), Kannamoochi (Midland) and Thappu ThaalangaL (Pilot)… wow what a golden period it was.
Thanks a lot Murali sir.
Your service always Priceless.
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)
5. "மன்னவன் வந்தானடி" படம்: திருவருட்செல்வர்; பாடல்: கவியரசு கண்ணதாசன்; பாடியவர்: பி.சுசீலா; இசையமைப்பு:- திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்; இயக்கம் - ஏ.பி.நாகராஜன்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நாட்டியப்பேரொளி பத்மினி.
திரைப்படங்களில், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த பாடல்களில், இன்றளவும், கே.வி.மகாதேவன் தான் முதலிடத்தில் இருக்கிறார். "அமுதும் தேனும் எதற்கு" முதல் சங்கராபரணம் படப்பாடல்கள் வரை இந்த அடிப்படையில் அவர் இசையமைத்த பாடல்கள் அத்தனையும் அற்புதம் என்றால் அதற்கு மாற்றுக் கருத்து கூற எவருமே முன் வர மாட்டார்கள். நாட்டுப்புற இசையமைப்பிலும் (folk based songs ) அவர் தனித்துவத்தைக் கையாண்டார்.
இந்தக் கட்டுரையில் இதற்கு முன்னர் இடம் பெற்ற நான்கு பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒரு ரகம். இந்தப் பாடல் "பிரம்மாண்டம்" என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்த பாடல். இந்தப் பாடலின் சிறப்புக்கு பல காரணங்கள் உண்டு. எதை எழுதுவது, எதை விடுவது என்று திக்குமுக்காட வேண்டியிருக்கிறது.
முதலில், வரிகள். இந்தப் பாடல் முதலில், சம்பிரதாயமாக, தொகையறா,சரணம், பல்லவி, அனுபல்லவி என்று போனாலும், கடைசியில், ஸ்வரப் பிரஸ்தாரத்துக்குள் நுழையும் போது, கவியரசரின் ஆளுமை, அதியற்புதம் என்று சொன்னால், குறைத்துச் சொல்லுவதாக ஆகும். ச ரி க ம ப த நி என்று சொல்லி, விரைவினில் நீ நீ, மனமலர் தா, தா, திருமார்பா பா, தாமதமா மா, மயிலெனை தா, தா, என்று கூறி, ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவும் "நி த ம ப கா" என்று எழுதிய கற்பனைக்கு, ஒவ்வொரு தமிழனும், தன் உயிரையே அந்த இறவாக் கவிக்கு கொடுக்கலாம். ஒரு கவிஞன், கொடுக்கப் பட்ட சூழலுக்குப் பாட்டு எழுதுவதே கடினம் எனும் போது, இவ்வளவு கற்பனையா!
இப்பொழுது பாடியவர். எனக்குத் தெரிந்து, பி. சுசீலா அவர்களின் எத்தனையோ அற்புதப் பாடல்களில், இந்தப் பாடல் தான், முதல் இடம் பெறுகிறது என்பேன். இந்தப் பாடலுக்குத் தேவைப்படுகிற ஆளுமையுடன் கூடிய கம்பீரக் குரல், ஆனாலும், பிசிறில்லாத தன்மை; இலேசான தாபம் கலந்த ஒரு பாவம் ஆனாலும், ஒரு இடத்திலும் தரம் வழுவாத தன்மை; மடை திறந்த வெள்ளமென வரும் ஸ்வரப் பிரவாகம்; சாஸ்திரீய சங்கீதத்தின் அற்புதத்தை ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்காத தன்மை - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எழுதும் போதே, மயிர்க்கூச்செரிகிறதே, பார்த்தால்? இந்தப் பாடல் நெடுகிலும் வரும், ஸ்வரப் பிரஸ்தாரம் செய்பவரையும், மறக்க முடியாது.
இசை. மேலே கூறியபடி, இந்தப் பாடலை, சாஸ்திரீய சங்கீதத்தின் அடிப்படையில், அதே சமயம், சினிமா என்கிற ஊடகத்திர்க்கேற்றார் போல் அமைத்து, படித்தவன் முதல் பாமரன் வரை அதை இன்றளவும் ரசித்து இன்புற வைத்த, திரை இசைத்திலகத்தை எப்படிப் பாராட்டுவது? வாழ்த்த வயதில்லை ஆதலால், வணங்குகிறேன்.
இயக்கம். ஏ.பி. நாகராஜன் அவர்கள் பிரம்மாண்டத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்ட படங்களில், என்றுமே மிகச் சிறந்த இடத்தைப் பிடிப்பவர். ஆங்கிலத்தில், "Perfectionist" என்று சொல்வார்கள். எதை செய்தாலும், ஒரு முழுமை இருக்க வேண்டும் என்று விரும்புபவர். நடிகர் திலகமும் அப்படித்தான். அதனால் தான், இவர்கள் கூட்டணியில் வெளி வந்த படங்கள் சாகா வரம் பெற்றவையாக இருக்கிறது. இந்தப் பாடலை இயக்கிய இவரை எப்படிப் போற்றுவது? இந்தப் பாடலை பிரம்மாண்டமாக அமைத்த விதத்தையா? அதை, எல்லோரும் விரும்பி ரசிக்கும்படி எடுத்த விதத்தையா? பத்மினியின் நாட்டியத்திறமையை முழுமையாக வெளிக்கொணர்ந்த முயற்சியையா? (நடிகர் திலகத்தைப் பற்றி? - இனி மேல் தான்)இந்தப் பாடலை அமைத்த, நடன இயக்குனரையும், வடிவமைத்த கலை இயக்குனரையும் விட்டு விடக் கூடாது. இந்தக் காலத்தில், இது சாத்தியமா?
கடைசியாக நடிப்பு. நாட்டியப் பேரொளியின் நடனத்தை சொல்வதா?, அவரது ரசமான அபிநயங்களை சொல்வதா? கடைசியில், அங்கிருக்கும், ஒவ்வொரு சிலையின் பாவத்திற்கு ஏற்றாற்போல் இவரும் அபிநயித்து, நிற்கும் அழகைச் சொல்வதா! கம்பீரத்தைச் சொல்வதா?
இப்போது நடிகர் திலகம். இந்தப் படத்தை சமீபத்தில், நம் ஹப் நண்பர்கள் புடை சூழப் பார்க்கச் சென்ற போது, அங்கிருந்த மற்றவர்களும், தவறாமல், படம் துவங்குவதற்கு முன் சென்று விடத் துடித்துக் கொண்டிருந்தனர். எல்லோருக்கும் தெரிந்தது தான். படம் துவங்கியவுடன், இந்தப் பாடல் துவங்கி விடும். பாடலின் துவக்கத்தில் தொகையறா முடிந்தவுடன்,அவர் வந்து கம்பீரமாக நின்றவுடன், வரும் ஒரு துள்ளலான இசைக்கு அவர் போடும் நடை. அதை தவற விடக்கூடாது என்பதற்காக, அங்கிருந்த அனைவருமே மும்முரமாக ஓடோடிச் சென்று இருக்கைகளில் அமர்ந்து ஆர்ப்பரித்தோம்! அந்த நடைக்குப் பின்னர் சென்று, அவர் அமர்ந்திருக்கும் விதம்!! அதற்குப் பின்னர், அவர் வெறுமனே, கம்பீரமாக அமர்ந்து, பத்மினியை, ஒரு மாதிரி (ஆனால் கண்ணியம் கொஞ்சமும் குறையாமல்) பார்த்தபடி மட்டுமே அமர்ந்திருப்பார். அவருக்கு வாயசைத்துப் பாட சந்தர்ப்பமில்லை. இருப்பினும், இந்தப் பாடல் முழுவதிலும், பத்மினி கடுமையாகப் பயிற்சி செய்து, பாடல் நெடுகிலும், ஆடி, வாயசைத்து, செய்து சாதித்ததை, நடிகர் திலகம் வெறுமனே ஒரு நடை நடந்து, பின் வெறுமனே அமர்ந்து, சமன் செய்து, ஏன் பத்மினியை விடுத்து, வழக்கம் போல், இவரை மட்டுமே மக்கள் கவனிக்கும்படி செய்திருப்பார்.
இந்தப் பாடலிலும், யாருடைய பணி உச்சம் என்று இனம் பிரிக்க முடியாத படி, அனைவருமே நூறு சதவிகிதம் சிறப்பாகச் செய்து, இன்றளவும் இந்தப் பாடலை சிரஞ்சீவித்துவம் உள்ளதாக ஆக்கியிருப்பார்கள்.
தொடரும்,
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)
6. "பார்த்த ஞாபகம் இல்லையோ" படம்: புதிய பறவை; பாடல்: கவியரசு கண்ணதாசன்; பாடியவர்: பி.சுசீலா; இசையமைப்பு:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்/ராமமூர்த்தி; இயக்கம் - தாதா மிராசி; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் குழுவினர்.
தமிழ்த் திரைப்படங்களில், பாடல்கள் என்ற தலைப்பை எடுத்துக் கொண்டு யார் எப்போது பேசினாலும், எழுதினாலும், மேற்கோள் காட்டினாலும், உலகம் உள்ளளவும், "புதிய பறவை" பாடல்களைத் தொடாமல் இருக்க முடியாது. இதுவே இந்தப் படத்தின் பல சிறப்புகளில் தனிச்சிறப்பு. இந்தப் படத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களும், வழக்கம் போல், மெல்லிசை மன்னர்கள் இசையில், மெகா ஹிட்டான பாடல்கள். அதிலும், அத்தனை பாடல்களும், மேற்கத்திய இசை பாணியில் அமைந்திருந்தாலும், சாமானியனையும், சென்று சேர்ந்த பாடல்கள்.
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் அற்புதம் என்றாலும், பார்க்கும் அனைவரையும் கவர்ந்த பாடல் இதுவும், "உன்னை ஒன்று கேட்பேன்" என்றும் சொல்லலாம். இருப்பினும், உன்னை ஒன்று கேட்பேன் பாடலை, இந்தப் பாடல் முந்துகிறது என்றால் அதற்குப் பல காரணங்கள். இந்தப் பாடல் படத்தில் இரு முறை இடம் பெற்றாலும், இங்கு முதல் முறை பாடப்படும் பாடலை எடுத்துக்கொள்கிறேன்.
முதலில், பாடல் வரிகள். இது ஒரு பொதுவான, எந்த அடிப்படை உள்நோக்கமும் இல்லாத பாடலாகத்தான், முதல் முறையாகப் பாடப்படும்போது வரும். இருப்பினும், ஒவ்வொருவரையும், அவர்களது கடந்த கால வாழ்க்கையைப் பின்னோக்கிச் சென்று அசை போட வைக்கும். ஏதோ, பாடுபவர், பார்ப்பவரைப் பார்த்து, பல காலம் பழகி, இப்போது என்னை மறந்து விட்டாயே என்று முறையீடு செய்து, இலேசாகப் புலம்புவது போல் இருக்கும். (இதே பாடல், இடைவேளைக்குப் பிறகு, இறந்து போனதாக எல்லோரும் (நடிகர் திலகம் உள்பட) நம்பிக்கொண்டிருக்கும் சௌகார், நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் மறுபடியும் குறுக்கிட்டு, பாடும்போது, இந்தப் பாடலின் மொத்த வரிகளும், அப்போதைய சூழலுக்கு அபாரமாகப் பொருந்தும்.) முதல் முறை பாடப்படும்போது, பொதுவாக ஒரு பாடகரோ பாடகியோ பாடுவது போல் இந்தப் பாடல் அமைந்திருக்கும். முக்கியமாக இரண்டாவது சரணம். "இந்த இரவைக் கேள் அது சொல்லும்; அந்த நிலவைக் கேள் அது சொல்லும், உந்தன் மனதைக் கேள் அது சொல்லும்; நான் மறுபடி பிறந்ததை சொல்லும்" எப்பேர்பட்ட கவிஞன்!
இப்போது பாடியவர். இந்தப் பாடலில் அமைந்த வரிகள் - அதாவது, ஒரு காதலியின் முறையீடு. அதை இதை விடச் சரியாக யாராலும் செய்ய முடியாது. அந்தக் குரலில் தெரியும் ஏக்கம், அதே சமயத்தில், சுய கௌரவத்தை கொஞ்சமும் இழக்காத தன்மை. ஏனென்றால், அது பொதுவாகத் தான், ஒரு பாடலாகப் பாடப்படுகிறது. முழுவதும் மேற்கத்திய பாணிப் பாடலாகி விட்டதால், ஒரு இடத்தில் கூட, சாஸ்திரீய சங்கீதத்தை நினைவு படுத்தாமல், ஒரு சுத்தமான சினிமா பாணிப்பாடலாகப் பாடலாகப் பாடியிருப்பார். இதற்கு முன் எழுதிய மன்னவன் வந்தானடி பாடலில் முழுவதுமாக, சாஸ்திரீய சங்கீதத்தில் பாடியவர், இந்தப் பாடலில் அந்த சாயல் கொஞ்சமும் வராமல் பார்த்துக் கொண்டிருப்பார். ஏனென்றால், பாடலின் ஆரம்பத்தில் வரும், அந்த ஹம்மிங்கில் கொஞ்சம் அசந்தாலும், சாஸ்திரீய சங்கீதம் வந்து விடும். இந்த வித்தியாசத்தை மிகச் சரியாக உணர்ந்து பாடுவது மிகக் கடினம். ஆனால், அதை அனாயாசமாக செய்திருப்பார் திருமதி. சுசீலா அவர்கள்.
அடுத்து, இசை. மெல்லிசை மன்னர்கள் எத்தனையோ படங்களுக்கு சேர்ந்து இசை அமைத்திருக்கிறார்கள். பின்னர், மெல்லிசை மன்னர் தனியாகப் பல படங்கள் செய்திருக்கிறார். இருப்பினும், புதிய பறவை மட்டும், அவர்களது (அவரது) இசைப் பயணத்தின் சிகரம் எனலாம். ஏனென்றால், இந்தப் படத்தின் களம் ஒரு வித்தியாசமான களம். நாற்பத்தியேழு வருடங்களுக்கு முன்னரே, அனைத்து அம்சங்களிலும் அத்தனை ரிச்னெஸ் ததும்பி வழிந்த படம். பாடல், ஆரம்பிக்கும்போதே, பாங்கோஸ் தாளம் ஒவ்வொருவரையும் கவரும் என்றால், படம் நெடுகிலும் வரும் வயலினும், கிடாரும், பியானோவும் பார்க்கும் / கேட்கும் ஒவ்வொருவரையும், மயங்கிக் கிறங்க வைக்கும்.
இப்போது, இயக்கம். இதில், கூடுதல் பங்கு, நடனம் அமைத்தவருக்கு. மேலும், அந்த மேடை, நடனமாடும் நங்கைகள், கேமிரா ஆங்கிள், பார்வையாளர்கள் இருக்கும் இடம், என்று ஒவ்வொரு அம்சத்தையும், பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கும் விதம். அந்த மெனக்கெடல், சிரத்தை பார்ப்பவரை மலைக்க வைக்கும். (ஆங்கிலத்தில், eye for detail என்பார்கள். Perfectionist என்றும் சொல்லலாம்.)
இப்போது, நடிப்பு. ஒரு தேர்ந்த பாடகியின் உடல் மொழி சௌகாரிடம் மிளிரும். அந்த கௌரவமான உடல் மொழி, கையசைப்பு, மைக்கைப் பிடித்துக்கொண்டிருக்கும் விதம், பாடும் விதம், நளினமான வாயசைப்பு என்று, சௌகார் அபாரமாக செய்திருப்பார். இந்தப் பாடலும், இதற்கு முன்னர் எழுதிய மன்னவன் வந்தானடி பாடல் போலவே, பெண் பாடுவதாக வருகின்ற பாடல். பாடலில், வரும் நாயகன் நடிகர் திலகம், வெறுமனே உட்கார்ந்து கொண்டுதான் இருப்பார். அந்தப் பாடலில், ஒரு துள்ளல் நடை போட்டு, அதற்கப்புறம், வைத்த கண் வாங்காமல் கம்பீரமாக அவருக்கேயுரிய தோரணையுடன் பார்த்துக் கொண்டிருப்பார் என்றால், இந்தப் பாடல் வேறு விதம். பாடல் ஆரம்பிக்கும் போதே, வாயில் சிகரெட்டை வைத்து லைட் செய்ய ஆரம்பிப்பார். அப்போது, துவங்கும் ஸ்டைல் சாம்ராஜ்ஜியம், பாடல் முழுவதும் தொடரும். பார்க்கும் ஒவ்வொருவரையும், வழக்கம் போல், ஆக்கிரமிக்க ஆரம்பிப்பார். அவர் ஒவ்வொரு முறை சிகரெட்டை புகைக்கும் போதும், ஒவ்வொரு விதமாக, அந்தப் புகையை இழுத்து விடுவார். முகத்தில், ஒரு விதமான அமைதியான, ஆனால், பாடுபவரையும் அந்தப் பாடலையும் ரசிக்கும் உணர்வு (ஸ்டைலாக வேறு) இருக்கும். குறிப்பாக, ஒரு முறை சிகரெட்டை வாயில் வைத்து, புகையை இழுக்காமல் பார்ப்பதும், இன்னொரு முறை சிகரெட் புகையை இழுத்து, அவருடைய உதடை இலேசாக ஸ்டைலாக துடைக்கும்போதும், இன்னமும் தியேட்டர்கள் அலறிக்கொண்டிருக்கின்றன. கடைசியில், பாடல் முடிந்தவுடன், தன்னை மறந்து ஒரு விதமான போதையுடன், கை தட்டும் இடம் இன்னும் கண் முன்னே நிற்கிறது. இந்தப் பாடல், ஒரு லாஜிக் சறுக்கல் - அன்னையை இழந்த மகன் - சோகத்துடன் ஒவ்வொரு நைட் கிளப்பிலும் தன்னுடைய நேரத்தை வீணே செலவழிப்பவன், எவ்வாறு அவ்வளவு அழகான மேக்கப் செய்யப்பட்ட (நன்றாக ஷேவ் செய்யப்பட்ட) முகத்துடன் காட்சியளிப்பான்? சமூகத்தில், உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்கள், வெளியில் செல்லும் போது, அவர்களுடைய அந்தஸ்த்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று சொல்லிக்கொள்ளலாம். இருந்தாலும், இந்தக் குறையை, அவருடைய வசீகரம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுகிறது. நடிகர் திலகம் நடித்த படங்களில் வரும் நடிகைகள் மட்டுமே பாடும் பல பாடல் காட்சிகளில், நடிகர் திலகம் அந்தக் குறிப்பிட்ட நடிகைகளை ஓவர் டேக் ஒவ்வொரு முறையும் செய்திருப்பார். அந்தப் பாடல்களின் வரிசை ஏற்கனவே இந்தத் திரியில் குறிப்பிடப்பட்டு விட்டது. அந்த வரிசையில், முதல் இடம் பெறும் பாடல் இது என்றால் அது மிகையாகாது.
இந்தப் பாடலுக்கு இணையாக, இதன் சோக வடிவம் - இடைவேளைக்குப் பின்னர் வரும் - அமைந்திருக்கும். அந்தப் பாடலில், நடிகர் திலகம் காட்டும் உணர்வுகள் - ஆச்சரியம், நம்ப முடியாத மன நிலை, கோபம், ஆத்திரம், இயலாமை - அத்தனை உணர்வுகளையும், பியானோ வாசித்துக் கொண்டே, அந்த உணர்வுகளை, அந்த இசைக்கருவியிலும் காட்டிய விதம் - வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எப்படித் தான் இந்தப் பாடல்களை எல்லாம் எடுத்தார்களோ? ஏனென்றால், அவரது நடிப்பை ரசிக்க ஆரம்பித்தால், வேறெந்த வேலையும் ஓடாது. பின், எப்படி அத்தனை கலைஞர்களும், கடமையே கண்ணாக இருந்து, இந்தப் பாடல்களையும், காட்சிகளையும் எடுத்தார்கள்?
இந்தப் பாடலும் இந்தக் கட்டுரையில் இடம் பெறும் மற்ற பாடல்களைப் போல் படம் வெளி வந்த 1964-ம் வருடத்திலிருந்து இன்று வரை, அனைத்து தரப்பினராலும், ரசிக்கப் படுகிறது. அதனால் தான், சிரஞ்சீவித்துவம் பெற்று விட்ட பாடல் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பெறுகிறது.
தொடரும்,
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Had a chance to watch thavaputhalvan yesterday. Typical NT . Again a performance that carries the film through completely. Cho's comedy track served as a minor irritant in some places though. Nevertheless a good movie that you could spend time just for NT. Special mention for the " kingini kingini' song.
Dear Mr. Arvind,
Our senior hubber Mr. Murali had written a lot about Thavappudhalvan, especially, about it's 100-day run despite his other 2 big movies concurrently running (Pattikkadaa Pattanama & Vasantha Maaligai) and other movie Dharmam Engaey (had a great opening but; failed to sustain). The success is due to the sincere efforts of NT, in a totally different character. (Efforts never fail!) Kingini kingini song is special due to NT's great acting for a typical context.
Thanks,
R. Parthasarathy
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
நன்றி. எந்த வேடம் ஏற்றாலும், அந்த வேடத்திற்கு முழு அர்ப்பணிப்பையும் தருவதில் , நடிகர் திலகத்திற்கு ஈடு இணை ஒருவர் உண்டோ? சில நாட்களுக்கு முன்னர், டிவியில், படையப்பா படம் பார்க்க நேர்ந்தபோது, நடிகர் திலகம் அந்தப் படத்தில் இறக்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது, இந்த எண்ணம் மறுபடியும் எழுந்தது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு, மறுபடியும் ஒரு குழந்தை போல் ஓடோடிச் சென்று, அந்த தூணைப் பிடித்து ஆசையாய் தடவியபடியே உயிர் விடும் கட்டம்! சொல்லிக் கொண்டே போகலாம்!!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Rajapart Rangadurai la varum Sirikkiraen sirikkiraen sirippu varalai had a lots of similarities to the kingini kingini song...... esp the situation, the beautiful portrayal of the dilemma and of course the performance.......i think in both the songs shivaji middle of the song la thadukki vizhunthuduvar, evoking laughter from the audience while he carries the grief.....
//தங்கைக்காக படத்தைப் பார்த்த போது, இந்த வரிகளுக்கு அரங்கமே அதிர்ந்தது. இந்த டூயட் பாடலைப் பாடியவர் டி.எம்.எஸ். மற்றும் எஸ்.ஜானகி. இதில் ஒரு சிறப்பம்சம் நடிகர் திலகத்துடன் வெண்ணிற ஆடை நிர்மலா டூயட் பாடிய ஒரே படம், ஒரே பாடல் இதுதான்.//
ராகவேந்தர் சார்,
'எங்க மாமா' படத்தில் வரும் 'சொர்க்கம் பக்கத்தில்' பாடலும் டூயட் பாடல்தானே. (இருவரும் ஜோடியாக இல்லாதபோதும்).
குறிப்பாக, 'இன்றுமுதல் ஆணும் பெண்ணும் நம்மைப்பார்த்து காதல் செய்யட்டும், ஒன்றுநான் ஒன்று நீ ஒன்றிலே ஒன்று நாம்' போன்ற வரிகள்.
டியர் பார்த்த சாரதி சார்,
தாங்கள் கூறிய படையப்பா காட்சியே போதும் இன்றைய கலைஞர்களுக்கு... வேறெதுவும் நாம் சொல்லத் தேவையில்லை.. அருமையான சான்று...
டியர் கார்த்திக,
தாங்கள் கூறியது சரி என்றாலும், அது படத்தில் காட்சிக்காக கற்பனையில் புனையப் பட்டது. இதே போல் தங்க சுரங்கம் திரைப்படத்திலும் நிர்மலா ஜோடியாக வருவது போல் நடித்து உளவாளியாக வருவார். ஆனால் தங்கைக்காக படத்தில் மட்டுமே அவர் வாழ்வில் பங்கு பெறும் உண்மையான காதலியாக நடித்திருக்கிறார். எனவே இப்படத்தில் தான் இருவரும் நிஜமான காதல் டூயட் பாடும் நாயக நாயகியராக நடித்துள்ளனர் என்பதைக் குறிக்கும் விதமாக எழுதினேன்.
டியர் வாசுதேவன்,
நிச்சயம் தங்கைக்காக திரைக்காவியம் மற்றொரு பாசமலர் என்று சொல்லலாம். அண்ணன் தங்கை உறவு முறை இந்த அளவிற்கு யதார்த்தமாக அதற்கு முன் வந்ததில்லை எனலாம். அதற்குக் காரணம் லக்ஷ்மியின் குடும்பத் தனமான தோற்றமும் நடிப்பும். ஆனால் இதே காட்சிகளை மீண்டும் அருணோதயம் படத்தில் பார்த்த போது சற்று சலிப்பும் அலுப்பும் ஏற்பட்டதும் உண்மை. தங்கைக்காக படத்தை 71ல் பார்த்ததிலிருந்து மிகவும் ஆழமாக நம் நெஞ்சில் அப்படம் ஊறி விட்டது. அந்த அளவிற்கு பதிந்து விட்டது. பிறிதொரு சமயத்தில் இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதலாம்.
தாங்கள் குறிப்பிட்ட படங்கள் இங்கே மீண்டும்
ஜெய்ப்பூரில் கட்டபொமமன் படப்பிடிப்பின் போது
http://chennai365.com/tamil/zp-core/...0&cw=&ch=&q=85
ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் பங்கேற்க கெய்ரோ சென்றிருந்த போது, பிரமிடுகள் நடுவில்
http://chennai365.com/tamil/zp-core/...0&cw=&ch=&q=85
அங்கே, ஸ்பிங்க்ஸ் நடுவில்
http://chennai365.com/tamil/zp-core/...0&cw=&ch=&q=85
அன்புடன்
பெண்ணின் பெருமை திரைப்பட ஆய்வை பாராட்டிய சுவாமி, ராகவேந்தர் சார், ராமஜெயம் சார், குமரேசன், சந்திரசேகர், வாசுதேவன் சார், சாரதி, சதீஷ், செந்தில் ஆகிய அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி.
படத்தின் ஸ்டில் மற்றும் விளம்பரங்களை வெளியிட்ட சுவாமிக்கு சிறப்பு நன்றி.
சாரதி,
மன்னவன் வந்தானடி மற்றும் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற இரண்டு extreme ஆனால் extraordinary பாடல்களை எடுத்துக் கொண்டு நீங்கள் அலசிய விதம் பிரமாதம். பாடல் வரிகள், இசை, அரங்க அமைப்பு, பாடியவர், இயக்கியவர் மற்றும் நடித்தவர்கள் என்று பிரித்து பிரித்து நீங்கள் அலசியது சூப்பர்!
Sathish,
Yes, I had gone to the opening show of Naan Vaazha Vaippen on 10th August,1979. It was released in Sridevi. The opening show was a matinée because they didn't conduct any special morning show. There was not much of a problem except for a slight skirmish during Aagayam Mele song and it was immediately brought under control. It is quite natural to have such face offs given the history of Tamil Cinema backdrop. Better sense prevailed and now looking back, it was all childish.
மற்றபடி ஓபனிங் ஷோவில் அலப்பறைக்கு குறைவொன்றுமில்லை. அது வழக்கம் போல் அரங்கு அதிர அதிர நடந்தது.
அன்புடன்
டியர் ஜேயார் சார்,
நமது நடிகர் திலகம் முதன்முதலில் நடிக்க ஒப்பந்தமானது, நடிகை அஞ்சலிதேவியின் அஞ்சலி பிக்சர்ஸ் தயாரிப்புக்களான "பூங்கோதை(தமிழ்) / பரதேசி(தெலுங்கு)" திரைப்படங்களில்தான். எனினும் இதற்கு அடுத்து ஒப்பந்தமான "பராசக்தி" முதலில் வெளிவந்தது. எல்லாம் நன்மைக்கே !
இதற்கு ஆதாரமான பத்திரிகைத் தகவல் பத்திரமாக உள்ளது. விரைவில் வெளியிடுகிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
Dear goldstar satish,
Thanks for your whole-hearted appreciation.
I will furnish NAAN VAAZHAVAIPPAEN BO data shortly.
டியர் செந்தில் சார்,
உயர்ந்த பாராட்டை அளித்த உங்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றி !
டியர் mr_karthik,
பாராட்டுக்கும், மேலதிக விவரங்களுக்கும் மேலான நன்றி !
டியர் ராகவேந்திரன் சார் & நெய்வேலி வாசுதேவன் சார்,
அரிய பொக்கிஷங்களை அளித்துள்ள தங்களுக்கு அற்புத நன்றிகள் !
டியர் முரளி சார்,
மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
அழைப்பின் பேரில் முதன் முதலாக அஞ்சலி பிக்சர்ஸ் அலுவலகத்தில் நுழைகிறார் அந்த இளைஞர். அங்கே அமர்ந்திருக்கிறார் ஒரு சீனியர் இயக்குநர். இயக்குநர் அந்த இளைஞரைக் காண்கிறார். அஞ்சலி தேவியிடம் சொல்கிறார்.
அந்த இயக்குநர் மறைந்த மாமேதை எல்.வி.பிரசாத். தீர்க்க தரிசியாக நல்லெண்ணத்துடன் வாழ்த்தி வரவேற்ற அந்த இளைஞன் யாரென்று கூறவும் வேண்டுமோQuote:
இந்த இளைஞனின் கண்களைப் பார். அந்த ஒளி மிக சக்தி வாய்ந்தது. இவனை மிஸ் பண்ணிடாதே. அவன் மிகப்பெரிய அளவில் வருவான்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
இது தான் முதன் முதல் நடிகர் திலகம் திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப் பட்ட அனுபவம். அந்தப் படம் ஓர் தெலுங்குப் படம். நாகேஸ்வர ராவ் அஞ்சலிதேவி நடித்த பரதேசி. சற்று நாளிலேலேய அதனை தமிழிலும் தயாரிக்கத் துவங்கினர்.
இதன் படி பார்த்தால் நடிகர் திலகம் முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஓர் தெலுங்குப் படத்தில் தான் என்பது குறிப்பிடத் தக்கது.
அன்புடன்
அந்தக் காலத்தில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நடிகர் திலகத்தின் கையொப்பமிட்ட புகைப்படங்கள் அஞ்சலில் அனுப்பப் படுவதுண்டு. இன்றும் பழைய ரசிகர்களிடம் அது நிச்சயம் பொக்கிஷமாக இருக்கும். பிந்தைய தலைமுறையினர் அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி எனக்குக் கிடைத்த அந்தப் படத்தை நம் அனைவருடனும் பகிரந்து கொள்வதில் பெரு மகிழ்வுறுகிறேன். இதனைத் தங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மிகவும் பழைய படமாதலால் முடிந்த வரையில் சரி செய்ய முயன்றுள்ளேன். ஏதேனும் சரியில்லையென்றால் பொறுத்தருள்வும்.
http://i872.photobucket.com/albums/a...ograph01fw.jpg
அன்புடன்
Harish
please let me know what all DVDS you want , u can contact me at 9845491583
Dear Joe Sir
any chance of Video clippings of the progarmme
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
தங்களின் பாராட்டுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள். இருப்பினும், மேற்கூறிய ஜாம்பவான்களுடன் என்னை ஒப்பிட முடியாது. என்னால் முடிந்தவரை என்னுடைய நினைவுகளையும், ஆய்வுகளையும் என்னுடைய பார்வையிலிருந்து தருகிறேன்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Dear Mr. Subramanian,
This is the unique characteristic of this great thespian. Situations in both the songs are similar to a great extent where in he had to perform the role of an entertainer (bafoon / christmas thatha) and make the children enjoy the same, yet hide/control his emotions. He still was able to strike it differently and still able to draw applause/appreciation/tears from the audience. We can quote innumerable examples like this - only for NT the Greatest!
Regards,
R. Parthasarathy
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
நன்றி. படிக்காதவன் படத்திலும், அவருடைய பங்கு அற்புதமாக இருக்கும். (இதே போல் கதாநாயகனாக இல்லாமல் வேறொரு முக்கிய பாத்திரத்தில் நடித்ததன் அடிப்படையில்.). குறிப்பாக, விஜய் பாபு திருமணத்திற்கு வந்து வெறுமனே உட்கார்ந்திருப்பார். அந்த தோரணை, படத்தில் நடித்த ரஜினியிலிருந்து, படம் பார்க்கும் அனைவரையும் மதிப்பும், மலைப்பும், மரியாதையும் கலந்த ஆச்சரியத்தில் கண்ணுற வைக்கும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
25-02-1982 அன்று வெளியான நடிக மாமன்னனின் 222-ஆவது படைப்பான ரேவதி கம்பைன்ஸ் 'கருடா சௌக்கியமா' என்ற வண்ண ஓவியமான இக் காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து ஹப் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
' பத்தோடு பதினொன்று' என்று ஒதுக்கி விடக் கூடிய படமில்லை இது. இப்படம் ஓர் அற்புதக் காவியம். இயக்குனர் திரு டி. எஸ்.பிரகாஷ்ராவ் அவர்களின் பழுத்த அனுபவமிக்க இயக்கத்தாலும்,'வியட்நாம் வீடு' சுந்தரம் என்ற வளமான வசனகர்த்தாவின் உயிரோட்டமான வசனங்களினாலும், திரு.என்.கே.விஸ்வாதன் அவர்களின் அற்புத ஒளிப்பதிவினாலும், மெல்லிசை மாமன்னரின் தேனூறும் இசை அமைப்பினாலும், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று' நடிப்புலகச் சக்கரவர்த்தி',' நடிக மாமேதை',நடிகர்திலகம்' அவர்களின் அற்புதமான, வித்தியாசமான நடிப்பசைவுகளாலும் உருவான உயிரோவியமே' கருடா சௌக்கியமா' என்னும் காவியமாகும்.
சரி! கதைக்கு வருவோம்.
அனாதைக்குழந்தை' தீனா' 'மேரி' என்னும் கன்னிகாஸ்திரீயால்
வளர்க்கப்படுகிறான். சிறுவயதிலேயே அவள் கணவனால் தீனா விரட்டியடிக்கப்படுகிறான். யாருமில்லாத அனாதையாக தனியாக வளர்ந்து பெரியவனாகிறான். தீனாவைப் பயன்படுத்தி, அவனை வைத்து குற்றங்கள் புரிந்து பணம் சம்பாதிக்கின்றனர் சில கயவர்கள். தீனா அதைப் புரிந்து கொண்டு உஷாராகிறான். அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை அவர்களுக்கே கற்றுக் கொடுக்கிறான்.
முத்துக்கிருஷ்ணன் எனும் அனாதைச் சிறுவன் தீனாவின் திறமைகளைக் கண்டு வலிய வந்து தீனாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான். தீனாவுக்கு வலது கையாகிறான்.
தன் தாய்மாமனால் துன்புறுத்தப்படும் 'லஷ்மி' என்ற பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் தீனா. அவளுடைய தாய்மாமனையும் தன்னுடைய அடியாளாக்கிக் கொள்கிறான்.
தீனாவுக்கு வயதாகிறது. தீனா இப்போது' தீனதயாளு' என்று மக்களால் போற்றப்படும் ஆபத்பாந்தவர். அநாதை ரட்சகர். ஏழை எளிய மக்களுக்கு தீனதயாளு ஒரு காட்பாதர். தீனதயாளு ஏழை எளியவர்களுக்கு இன்னல்கள் கொடுக்கும் பணக்கார முதலைகளின் கொட்டங்களை தன் செல்வாக்கால் ஒடுக்கி அவர்களை நிலை குலைய வைக்கிறார். ஆனால் தீனதயாளு எப்போதுமே கெட்டவழியில் செல்வது இல்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல' தாதா'.
ஆனால் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் ஒரு அப்பாவி. அவர் மனைவி லஷ்மிக்கு தன் கணவர் ஒரு பெரிய 'தாதா' என்பது தெரியாது. அப்படி அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீனதயாளு உறுதியாக இருக்கிறார். அவ்வளவு பெரிய தாதாவாக இருந்தும் தான் நேர்மையாக நடத்தி வரும் அச்சக ஆபீஸ் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தீனதயாளு தன் குடும்பத்தை நடத்துவார்.
தீனதயாளுவுடன் சிறுவயது முதற்கொண்டே வளர்ந்து வரும் முத்துக்கிருஷ்ணன் இப்போது இளைஞன். தீனதயாளு என்ற சிவனின் கழுத்தில் சுற்றிய பாம்பாய் யாரை வேண்டுமானாலும் கருடா சௌக்கியமா என்று கேட்பவன்.தீனதயாளுவுக்கு எல்லாமே அவன்தான். இதற்கிடையில் தீனதயாளு தன் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை அடிக்கடி சந்தித்து ஆறுதலடைகிறார். தீனதயாளுவுக்கு ராதா என்ற செல்ல மகள், ராதா மோகனை விரும்புகிறாள். திருமணம் செய்ய ஆசைப் படுகிறாள். ஆனால் தீனதயாளுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் மனைவி லஷ்மியின் விருப்பத்துக்காக அரைமனதுடன் சம்மதித்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
ராதாவின் கணவன் மோகன் குடிகாரனாகி ராதாவை தீனதயாளுவின் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறான். சந்தோஷம் குடியிருந்த வீட்டில் சோகம் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.
தீனதயாளுவை சில பணக்காரத் தீயவர்கள் சந்தித்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடவைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தீனதயாளு அதை அடியோடு மறுத்துவிட்டு, அவர்களும் அதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகிறார். இது முத்துகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் தீனதயாளுவை எப்படியாவது கடத்தலில் தான் ஈடுபட சம்மதிக்க வைப்பதாக அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான்.
சத்தியநாதன் என்ற தொழிலதிபர் தீனதயாளுவின் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை குடிபோதையில் காரை ஏற்றிக் குற்றுயிரும்
கொலையுயிருமாக விட்டு விட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறான். இது தீனதயாளுவுக்குத் தெரியவர துடிதுடித்து மேரியாம்மாவை பார்க்க ஓடிவர, அவர் கண் முன்னமே மேரியம்மாவின் உயிர் பிரிகிறது. தன் வளர்ப்புத்தாயைக் கொன்றவனை பழிவாங்கத் தயாராகிறார் தீனதயாளு.
இது புரியாமல் சத்தியநாதன் மேரியம்மாவின் மரணத்துக்காக தரும் சொற்ப பணத்தை வாங்கிவந்து முத்துகிருஷ்ணன் தீனதயாளுவிடம் தர, தீனதயாளு மிகுந்த கோபமடைந்து அந்தப் பணத்தை வாங்கி வந்ததற்கு முத்துக்கிருஷ்ணனைக் கடிந்து கொள்கிறார். இருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகிறது.
தன் தாயைக் கொன்ற சத்தியநாதனைப் பழிவாங்க நேரிடையாக தலையிட ஆரம்பிக்கிறார் தீனதயாளு. சத்தியநாதனுக்கு பலவகையிலும் தொல்லைகள் கொடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறார்.
இப்போது சத்தியநாதன், மருமகன் மோகன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் தீனதயாளுவின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீனதயாளுவைப் பழிவாங்க பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். கள்ளநோட்டுகளை அச்சடித்து அவற்றை தீனதயாளுவின் அச்சாபீஸில் போட்டு தீனாவை போலீசில் சிக்க வைத்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது தீனதயாளுவின் மற்றொரு முகமான' தாதா' முகத்தை அவர் மனைவி லஷ்மிக்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். லஷ்மி தன் கணவர் தீனதயாளு ஒரு கெட்டவர் என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உயிரை விட முயற்சிக்கிறாள். தீனதயாளு அவளைக் காப்பாற்றி தான் நியாயமானவன் என்று அவளை சமாதானப் படுத்துகிறார்.
எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம்.
குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கும் சட்டம் ஒருபுறம்.
மருமகனும், வளர்த்த முத்துக்கிருஷ்ணனும் எதிர்ப்புறம்.
தன்னைக் கெட்டவன் என்று நினைத்து துயருறும் மனைவி மறுபுறம்.
இவ்வளவு பிரச்னைகளையும் சர்வசாதரணமாக எதிர்கொண்டு, கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் தீனதயாளு.
வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே தனக்கு வக்கீலாகி, தன் வாதத் திறமையாலும், சமயோசித புத்தியாலும், மனதைரியத்தாலும் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடி, தீயவர்களின் சூழ்ச்சிகளை வீடியோப்படக் காட்சிகள் மூலம் நிருபித்து நிரபராதியாய் வெளியில் வருகிறார் தீனதயாளு.
பிரிந்த குடும்பம் ஒன்று சேர முடிவில் சுபம்.
இத்திரைப்படத்தில் 'தீனதயாளு' என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடிகர்திலகமும், அவர் மனைவி லஷ்மியாக மறைந்த குணச்சித்திர நடிகை சுஜாதாவும், முத்துக்கிருஷ்ணனாக தியாகராஜன் அவர்களும்,மகள் ராதாவாக அம்பிகாவும், மருமகனாக மோகனும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் நிச்சயமாக ஒரு 'ஒன் மேன் ஷோ' மூவி என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ஆதிக்கம் தான் படம் நெடுகிலும்.
மேக்-அப், கெட்-அப், நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக மிக வித்தியாசமாக காட்சியளிப்பார் நடிகர்திலகம் அவர்கள்.
தாதாவாக உலா வரும்போது.....
வெளியே அணிந்திருக்கும் மிக மெல்லிய ஜிப்பா என்ன!
உள்ளே பளிச்' சென்று தெரியும் கட்-பனியன் என்ன!
வேட்டியின் மேல் அணிந்திருக்கும் பச்சை நிற பெல்ட் என்ன!
வலது கையில் மின்னும் மோதிரம் என்ன!
கையில் ஜிப்பாவுக்கு மேல் கட்டப் பட்ட வாட்ச் என்ன!
கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் என்ன!
அப்பப்பா.... தீனதயாளுவாக அல்லோல கல்லோலப் படுத்துகிறார் நடிக மன்னன்.
அதே சமயம் குடும்பத்தலைவனாகக் காட்சியளிக்கும் போது...
நீண்ட அங்கவஸ்திரம் அணிந்து கையில் சிகரெட் இல்லாமல் முகத்தை அப்பாவியாக வைத்திருப்பார்.
'காட்பாதர்' தீனதயாளுவாக வரும்போது உதடுகளைக் குவித்து சிகரெட்டை கை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒரு சொடுக்கு போடுவார் பாருங்கள். தியேட்டர் கூரை ரசிகர்களின் கைத்தட்டலில் பிய்த்துக் கொண்டு போகும்.
மீண்டும் 2-ஆம் பாகத்தில் சந்திப்போம்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே - எங்கள்
நடிகர் திலகம் பெருமை சொல்ல (வாசுதேவன் என்னும்)
கண்ணன் வந்தான் forumhub-லே
வாசுதேவன் சார், கருடா சௌக்கியமா திரைக்காவியத்தினைப் பற்றி சூப்பராக துவக்கியுள்ளீர்கள். 80க்குப் பிறகு நடிகர் திலகத்தின் நடிப்பை குறை சொல்லும் அறிவிலிகளுக்கு சாட்டையடி தரும் விதமாக தாங்கள் தேர்ந்தெடுத்த படம் உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசமாக பிய்த்து உதறியிருப்பார். குறிப்பாக பண்டரிபாய் இறக்கும் காட்சியில் தன் இரு கைகளையும் மேலே தூக்கி முதுகிற்குப் பின்னால் கொண்டு வந்து மடக்கும் உடல்மொழியாத்தான் பல பிரபல நடிகர்கள் பின்னாளில் தங்கள் நடிப்பில் புகுத்தினர் என்பது மறுக்க முடியாத உண்மை. தங்களுடைய மற்ற பதிவுகளையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறோம். அது வரை நம் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/a...a/garuda01.jpg
அன்புடன்
நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா
பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி
மன்னவன் வந்தானடி தோழி
பார்த்த ஞாபகம் இல்லையோ
................................................. இன்னும் எத்தனையோ அடுத்தடுத்து வருவதற்கு தயார் நிலையில் உள்ளன,
கீதோபதேசம் செய்தார் அந்த பார்த்தசாரதி !
சிவாஜியின் கீதங்களை உபதேசங்களாகத் தருகிறார் இந்த பார்த்தசாரதி !
Great Going Sir ! Keep it up !
அன்புடன்,
பம்மலார்.
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,
கலைச் சக்கரவர்த்தியின் "கருடா சௌக்கியமா" குறித்த தங்களின் ஆய்வுக்கட்டுரையினுடைய ஆரம்ப பாகத்தை யாரேனும் பிரபலமான திரைப்பட விநியோகஸ்தர் வாசித்தார் என்றால், இக்காவியத்தின் வெள்ளித்திரைப்பிரதி தற்பொழுது எங்கிருக்கிறது என்று கண்டறிந்து தேடிப்பிடித்து 'சாந்தி'யில் திரையிட்டு விடுவார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தங்களின் ஆய்வில் அத்தகைய ஈர்ப்பு காணப்படுகிறது.
தொடருங்கள்...காத்திருக்கிறோம் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
தாங்கள் ராகவேந்தர் மட்டுமா,
ரசிகவேந்தர்
வீடியோவேந்தர்
ஃபோட்டோவேந்தர்,
வாசு சாரின் வர்ணனைக்கேற்ப தாங்கள் வழங்கிய "கருடா சௌக்கியமா" புகைப்படங்களுக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
சுமங்கலி
[12.8.1983 - 12.8.2011] : 29வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
[உதவி : நல்லிதயம் எஸ்.கே.விஜயன்]
http://i1094.photobucket.com/albums/...EDC4291a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
சுமங்கலி விளம்பரத்தை வரலட்சுமி விரதம் அன்று மறு வெளியீடு செய்து லட்சுமிகரமான நாளைக் கொண்டாடி விட்டீர்கள். பாராட்டுக்கள். இந்த வைபவத்தை ரசிகர்கள் கொண்டாட வேண்டாமா, அந்தப் பாடலை நாமும் கேட்க வேண்டாமா, கூட கை தட்ட வேண்டாமா, பாராட்ட வேண்டாமா, இதோ நடிகர் திலகம் கூறுகிறார், நாம் கடைப் பிடிப்போம்.
http://www.youtube.com/watch?v=pgU8WnbcQEI
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார் ,
தங்கள் ஊக்கப்படுத்தலுக்கு மிக மிக நன்றி. அருமையான நடிப்புலக மாமேதையின் 'கருடா சௌக்கியமா' ஸ்டில்ஸ் சூப்பர். தங்களின் அயராத உழைப்பும் ,புதியவர்களை வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்தும் பாங்கும், நடிகர்த்திலகத்தைப் பற்றிய எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அதற்கேற்றவாறு புகைப்படங்களை வெளியிடும் சுறுசுறுப்பும் எங்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல உடல் நலத்தையும் அளிக்க உளமார வேண்டுகிறேன். நடிகர் திலகத்தின் ஆசியுடன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களுக்கெல்லாம் 'தீனதயாளு'வாக துணை நின்று வழி காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்பு பம்மல் சார் ,
தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி. நடிகர்திலகத்தின் காவியங்களுள் மிகச் சிறந்த பத்து படங்களை மட்டும் என்னை பட்டியலிடச் சொன்னால் அதில் கண்டிப்பாக' கருடா சௌக்கியமா ' இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு என்னை ஆட்டிப் படைத்த காவியம் அது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
நன்றியுடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Vasu sir,
Thanks a lot for Garuda Soukiyama? I have not seen this movie yet. I will definitely buy this movie DVD and watch it soon.
Your narration and each scene explanation is excellent and could judge you have enjoyed each and every scene of NT. That is the speciality of our NT movies. When ever I watch our NT movies I used to enjoy every second he is on the screen. I don't think any ohter actor got this attractions.
Even after watching 100 times when you watch 101 time, you could find new facial expression and new dimension to charactor he lived on. Only our NT can do this.
Pammalar sir, thanks a lot for Sumangali release paper cut. This movie is very much closer to my heart, because this is the first NT movie I have watched first show at Madurai Shah theatre when I was in class 7 that too alone. After this I have watched so many NT movies on Friday and Sunday evening show by alone and used to watch without slippers (even though I had so many slippers at home) some what I liked walking without Slippers. I used to walk nearly 45 mins. to 1 hour to reach theatre like Sri Devi, Kalpana in Madurai just to watch and enjoy seeing our NT.
Cheers,
Sathish
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
உங்களுடைய அங்கீகாரமும் கனிவான பாராட்டுதல்களும் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கின்றன.
உங்களைப்போல் திரை கடலோடியும் நடிகர் திலக திரவியங்களை தேடி வந்து அனைவரின் முன் சமர்ப்பிப்பது மிகக் கடினம் என்பதால், நேரம் கிடைக்கும் போதெல்லாம், கட்டுரைகள் மூலமாக, நடிகர் திலகத்தை நினைவு கூர முயல்கிறேன். இது போன்ற தேடல்களில், தாங்களும், திரு. ராகவேந்தர் போன்ற பலரும் ராமர் என்றால், நான் அணிலாக சிலவற்றை செய்ய முயல்கிறேன்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்களே,
தங்களுடைய "கருடா சௌக்கியமா" படத்தின் ஆய்வுக் கட்டுரை அற்புதமாக இருந்தது. திரு. பம்மலார் அவர்களின் கூற்றை நான் வழி மொழிகிறேன். உங்களுடைய கட்டுரையைப் படித்தவுடன், உடனே, இந்தப் படத்தை, வெள்ளித்திரையில் மீண்டும் கொண்டு வர பலரும் முயல்வர். ஆளாளுக்கு casual ஆக்டிங் பற்றி எழுதிகிறார்களே, இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். அவ்வளவு அருமையாக, அனாயாசமாக, இயல்பாக நடித்திருப்பார். அதிலும், முத்துக்கிருஷ்ணா! என்று அவர் தியாகராஜனைக் கூப்பிடும் விதம் அலாதியாக இருக்கும்!
என் நினைவுக்கெட்டியவரையில், 82-இல், நடிகர் திலகத்திற்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி கிடைத்த பிறகு, வந்த முதல் படம் இது என்று நினைக்கிறேன். போஸ்டர்களில், சிவாஜி எம்.பி. என்று குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது என்று நினைக்கிறேன்.
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
கருடா சௌக்கியமா திறனாய்வின் முதல் பகுதி முடிந்த மறு கணமே, தாங்கள் படத்தின் நிழற்படங்களைப் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்.
நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
One request / suggestion: many fans here have enormous knowledge, writing skills, analytical skills and descriptive skills about NT, the artist and his movies. But, when I look in popular online portals like wikipedia, the information about his movies are very limited. I used to frequently visit this thread to gather knowledge.
To take the reach of NT's greatness to next level or world stage, it would be of great help if people from here can contribute and maintain such pages which many outsiders frequently visit for information or knowledge update.
நிழலில் வைக்கப்பட்ட இயக்குனர்
நான் வாழவைப்பேன், சுமங்கலி ஆகிய படங்களின் விளம்பரங்களைப் பார்த்தபோது என் மனதில் ஒரு எண்ணம் / சந்தேகம் / ஐயம் தோன்றியது. அதாவது இயக்குனர் திரு டி.யோகானந்த் நடிகர்திலகத்தின் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். அவை
காவேரி
வளர்பிறை
தங்கைக்காக
தாய்
கிரகப்பிரவேசம்
ஜெனரல் சக்கரவர்த்தி
ஜஸ்டிஸ் கோபிநாத்
நான் வாழ வைப்பேன்
எமனுக்கு எமன்
ஊருக்கு ஒரு பிள்ளை
வா கண்ணா வா
சுமங்கலி
சரித்திர நாயகன்.... உள்பட பல படங்கள்
இவற்றில் ஜெனரல் சக்ரவர்த்தி, நான் வாழவைப்பேன், வா கண்ணா வா உள்பட பல படங்கள் 100 நாட்களைக்க்டந்து ஓடியுள்ளன.
இதுபோக ஆரம்ப காலங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளார்.
இருந்தாலும் இவர் ஒரு கே.எஸ்.ஜி., ஒரு ஸ்ரீதர், ஒரு ஏ.பி.என். ஒரு கே.விஜயன், ஒரு ஏ.சி.டி., ஒரு சி.வி.ஆர். போன்று பிரபலமாகப் பேசப்படவில்லையே என்ன காரணம்?.
இவரது பெயரைக்குறிப்பிட்டு எந்த ஒரு செய்தியையும் எந்தப்பத்திரிகையும் எழுதியதில்லை. எந்த ஒரு விழாவிலும், எந்த ஒரு விருதும் கொடுத்து கௌரவிக்கப்படவில்லையே அது ஏன்". கடைசி வரையில் நிழலுக்குள்ளேயே வைக்கப்பட்டு விட்டாரே என்ன காரணம்?.
அனுபவசாலிகளான ராகவேந்தர் சார், முரளி சார் போன்றோர் விளக்க முடியுமா?.
வாசுதேவன் சார்,
'கருடா சௌக்கியமா' படத்தின் திறனாய்வு முதற்பகுதி அருமை. போதிய இடைவெளி அளிக்கப்பட்டிருந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படம். என்ன செய்வது நம்ம ஆட்களுக்குத்தான் பொறுக்காதே.
முந்தைய ஆண்டு தீபாவளிக்கு வந்த 'கீழ்வானம் சிவக்கும்' ஓடிக்கொண்டிருக்கும்போதே, அந்த ஆண்டில் (1982)-ல் மட்டும் ஒரே ஆண்டில் 12 படங்கள்.....!!!!. (உலக அளவில்கூட எந்த கதாநாயகனும் செய்திராத சாதனை). அவை
இட்லர் உமாநாத்
ஊருக்கு ஒரு பிள்ளை
வா கண்ணா வா
கருடா சௌக்கியமா
சங்கிலி
வசந்தத்தில் ஓர் நாள்
தீர்ப்பு
தியாகி
துணை
பரீட்சைக்கு நேரமாச்சு
ஊரும் உறவும்
நெஞ்சங்கள்
ஜனவரி 26-ல் துவங்கி டிசம்பர் 10 வரையில் பதினொன்னறை மாதங்களில் 12 படங்கள். இது அல்லாமல் ஒரு தெலுங்குப்படம் வேறு)
உருப்படவா?.
டியர் கார்த்திக,
தங்களுடைய நியாயமான கேள்விக்கு விடை .. அந்த மீடியாக்கள் தான் தர வேண்டும்.
ஆனால் அவர் நிழலுக்குள் இருந்து விட்டார் என்று கூற முடியாது. மக்களும் சில குறிப்பிட்ட இயக்குன்ர்கள், இதர கலைஞர்களைத் தவிர மற்றவர்களைப் பற்றி அறிய ஆர்வம் காட்டாமல் இருப்பதும் ஒரு காரணம்.
தாங்கள் மேலே கூறியுள்ள பட்டியலைப் பார்த்தாலே தெரியும். சரித்திர நாயகன் திரைப்படத்தைத் தவிர மற்றவை அனைத்தும் சராசரி அல்லது அதற்கு மேல் வெற்றியைப் பெற்றுள்ளன. இதுவே அவரது திறமைக்கு சான்றாகும். சரித்திர நாயகன் மற்றும் ஜஸ்டிஸ் கோபிநாத் திரைப்படங்களைப் பொருத்த வரையில் ஓவர்-ஆக்டிங் என்கிற ஒரு வார்த்தை இருக்குமானால் அதற்கு நிஜமான உதாரணமாக அந்தந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர்களைக் கூறலாம். இன்று வரை தன்னிகரில்லாத புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் சிறந்த திறமையினை சரியாக பயன் படுத்தாமல் ஜஸ்டிஸ் கோபிநாத் திரைப்படத்தில் அவரது நடிப்பை கேலிக் கூத்தாக்கியதும், அதே ஊர்வசி பட்டத்தை மூன்று முறை வென்று இந்தியத் திரையுலகில் முடிசூடா ராணியாக நடிகையருள் விளங்கிய சாரதா அவர்களின் நடிப்பை கேலிக் கூத்தாக்கியதுமே இந்த இரு படங்களின் தோல்விக்கு முக்கியமான காரணங்களாகும்.
மற்ற படி யோகாநந்த் இயக்கிய படங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் இன்று பெரும்பாலும் கூறப்படுகிற Method Acting, Subdued Acting, போன்ற வகை நடிப்பையெல்லாம் அவர் படத்தில் காணலாம். மிகச் சிறந்த உதாரணம், வளர் பிறை. வாய் பேச முடியாமல் சரோஜா தேவியுடன் அவர் உணர்வு பூர்வமாக உரையாடும் காட்சிகள், நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் பாடல் காட்சியில் அவருடைய அப்பாவித் தனமான தோற்றம், தன் ஊனம் தனக்கு பல சமயங்களில் கஷ்டங்களைத் தருகிறதே என்கிற மனப்பான்மையும் அதற்கு பாடலில் கிடைக்கும் ஆறுதலைக் கொண்டு உளமாறுவதும், மிகச் சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள். அதே போல் அதே படத்தில் மௌனம் மௌனம் மௌனத்தினாலே வணங்குகிறேனய்யா, பாடலில் சரோஜா தேவியின் நடிப்பு மிகச் சிறந்திருக்கும். நடிகர் திலகத்தின் முதல் 10 இடங்களில் இடம் பெற வேண்டிய படம் வளர் பிறை.
தங்கைக்காக - ஒவ்வொரு காட்சியிலும் மிகச் சிறப்பான அடக்கமான அதே சமயம் ஆழமாகவும் தன் நடிப்பினைத் தந்திருப்பார் நடிகர் திலகம். குறிப்பாக தங்கையின் கணவரிடம் அடி வாங்கிக் கொண்டு பதிலுக்கு தன் கோபத்தைக் காட்டாமல் அடக்கிக் கொண்டு நடிக்கும் காட்சியில் பிய்த்து உதறியிருப்பார்.
காவேரி திரைப்படம் நடிகர் திலகத்திற்குள் இருக்கும் சிறந்த நாட்டியக் கலைஞரை உலகிற்கு எடுத்துக் கூறிய படம். காலைத் தூக்கி நின்றாடும் பாடலில் அமர்ந்த வாறே தன் கழுத்தைப் பலவாறாக அசைத்தும் முக பாவங்களைக் காட்டியும் பின் எழுந்து நின்று பரத நாட்டியம் ஆடும் போதும் மிகச் சிறந்த கலைஞர் என்று தன்னை நிலைநிறுத்திக் கொண்ட படம்.
கிரகப் பிரவேசம் படம் - கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு காட்சியிலும் தன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
ஊருக்கு ஒரு பிள்ளை திரைப்படத்திலும் சரி, சுமங்கலி படத்திலும் சரி, இதே போல் அவர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த ஒவ்வொரு படமும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்கள். எமனுக்கு எமன் படமும் பெரும் வெற்றியைப் பெற்ற படம்.
வா கண்ணா வா தன் வயதான காலத்தில் பேரக் குழந்தையை இழந்து வாடும் பாடும் பாடல் காட்சியில் சிம்ப்ளி சூப்பர்ப்.. ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட ஒரு ராஜ்ஜியம் இருந்தது என்கிற வரிகள் அந்தப் பாத்திரத்தை அப்படியே பிரதிபலித்தன.
ஜெனரல் சக்கரவர்த்தி - ஆஹா... பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. டான்சேனியா மாநாட்டில் ராணுவ மிடுக்கோடு அதிகாரியாக பங்கேற்கும் காட்சியில் இவரல்லவோ ராணுவ அதிகாரி என்று மற்றவர்களை நினைக்கத் தூண்டும் கம்பீரம்.... மகளுடைய நிலைமையை மனைவி மறைத்து விட்டதைக் கண்டு பிடித்து மிகவும் சாமர்த்தியமாக அவர்களிடம் உண்மையை வரவழைப்பது... இந்தக் காட்சிகளெல்லாம் சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள்...
தாய்.... அப்பாவி கிராமத்து இளைஞனாகத் தோன்றி நாட்டுக்கு நல்லது செய்ய எண்ணும் இளைஞனைப் பற்றிய கதை.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இயக்குநரை நடிகர் திலகம் எந்த அளவிற்கு மதித்திருந்தால் இப்படிப் பட்ட உன்னத படைப்புகள் நமக்கு கிடைத்திருக்கும் என்பது இதிலேயே தெரியும்.
யோகாநந்த் - நடிகர் திலகம் நட்பு மிகவும் ஆழமானது.
சமீபத்தில் வசந்த் தொலைக்காட்சியில் மகேந்திராவின் பார்வையில் நிகழ்ச்சியில் வியட்நாம் வீடு சுந்தரம் பகிர்ந்து கொண்ட ஒரு தகவல்
ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது. இயக்குநருக்கு தகவல் வருகிறது. அவருடைய முகம் இருள்கிறது. சாலை விபத்தில் அவருடைய மகன் உயிர் துறக்கிறார். உடனே நடிகர் திலகம் அவரைப் போகச் சொல்கிறார். அவர் பாசத்தோடும் துக்கத்தோடும் பாய்ந்தோடும் காட்சி அனைவர் உள்ளத்தையும் பிழிகிறது. அந்த சம்பவம் நடிகர் திலகத்தின் உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது.
பரீட்சைக்கு நேரமாச்சு திரைப்படத்தின் கிளைமாக்ஸ், கடற்கரை சாலையில் ஓடும் பேருந்தில் ஆனந்த் ஏறுகிறான். ஆனால் தவறி விழுந்து விடுகிறான். உடனே பதைபதைத்து ஓடி வரும் பெற்றோர் அவனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லக் கூட முடியாத அளவிற்கு பலத்த அடிபட்டு உயிர் துறக்கிறான்.
இந்தக் காட்சியில் நிஜ வாழ்க்கையில் யோகானந்த் அவர்கள் பட்ட துன்பத்தை, தன் தந்தை பாத்திரத்தில் கொண்டு வந்து உயிர் துறக்கும் காட்சிக்கு உயிரூட்டினார் நடிகர் திலகம்.
யோகாநந்த் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
இயக்குனர் திரு டி.யோகானந்த பற்றிய எனது ஐயங்களுக்கு விளக்கமாக விடையளித்ததற்கு மிக்க நன்றி. டி.யோகானந்த், சிறந்த இயக்குனர்கள் வரிசையில் வைத்துப்போற்றப்பட வேண்டியவர் என்பதில் ஐயமில்லை.
நானும் 'வளர்பிறை' படத்தைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல மிகவும் நல்ல படம். 'சலசலக்குத்து காத்து... சிலுசிலுக்குது கீத்து', 'பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டுகொண்டு' போன்ற பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம். அப்படத்தைத் திரையரங்குகளில் பார்க்க முயன்று கிடைக்காமல் போய், இறுதியில் 70களில், பொருட்காட்சியில் திரையிட்டபோதுதான் பார்த்தேன்.
அதேபோல அவரது இயக்கத்தில் 'தாய்' படமும் மிகவும் பிடித்த படம்.
அன்புள்ள சத்யா,
நடிகர்திலகத்தின் புகழ் இன்னும் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவேண்டும் என்ற உங்கள் ஆர்வம் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. விரைவில் செயல்வடிவம் பெறுமென நம்புவோம்.
Thanks Karthik Sir! ulagin sirandha kalaignanin pugazh ulagam muzhuvadhum senRadaya vENdum enbadhu en aasai!