-
10th August 2011, 07:05 PM
#931
Senior Member
Seasoned Hubber
டியர் பார்த்த சாரதி சார்,
தாங்கள் கூறிய படையப்பா காட்சியே போதும் இன்றைய கலைஞர்களுக்கு... வேறெதுவும் நாம் சொல்லத் தேவையில்லை.. அருமையான சான்று...
டியர் கார்த்திக,
தாங்கள் கூறியது சரி என்றாலும், அது படத்தில் காட்சிக்காக கற்பனையில் புனையப் பட்டது. இதே போல் தங்க சுரங்கம் திரைப்படத்திலும் நிர்மலா ஜோடியாக வருவது போல் நடித்து உளவாளியாக வருவார். ஆனால் தங்கைக்காக படத்தில் மட்டுமே அவர் வாழ்வில் பங்கு பெறும் உண்மையான காதலியாக நடித்திருக்கிறார். எனவே இப்படத்தில் தான் இருவரும் நிஜமான காதல் டூயட் பாடும் நாயக நாயகியராக நடித்துள்ளனர் என்பதைக் குறிக்கும் விதமாக எழுதினேன்.
டியர் வாசுதேவன்,
நிச்சயம் தங்கைக்காக திரைக்காவியம் மற்றொரு பாசமலர் என்று சொல்லலாம். அண்ணன் தங்கை உறவு முறை இந்த அளவிற்கு யதார்த்தமாக அதற்கு முன் வந்ததில்லை எனலாம். அதற்குக் காரணம் லக்ஷ்மியின் குடும்பத் தனமான தோற்றமும் நடிப்பும். ஆனால் இதே காட்சிகளை மீண்டும் அருணோதயம் படத்தில் பார்த்த போது சற்று சலிப்பும் அலுப்பும் ஏற்பட்டதும் உண்மை. தங்கைக்காக படத்தை 71ல் பார்த்ததிலிருந்து மிகவும் ஆழமாக நம் நெஞ்சில் அப்படம் ஊறி விட்டது. அந்த அளவிற்கு பதிந்து விட்டது. பிறிதொரு சமயத்தில் இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதலாம்.
தாங்கள் குறிப்பிட்ட படங்கள் இங்கே மீண்டும்
ஜெய்ப்பூரில் கட்டபொமமன் படப்பிடிப்பின் போது

ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் பங்கேற்க கெய்ரோ சென்றிருந்த போது, பிரமிடுகள் நடுவில்

அங்கே, ஸ்பிங்க்ஸ் நடுவில்

அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th August 2011 07:05 PM
# ADS
Circuit advertisement
-
10th August 2011, 11:44 PM
#932
பெண்ணின் பெருமை திரைப்பட ஆய்வை பாராட்டிய சுவாமி, ராகவேந்தர் சார், ராமஜெயம் சார், குமரேசன், சந்திரசேகர், வாசுதேவன் சார், சாரதி, சதீஷ், செந்தில் ஆகிய அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி.
படத்தின் ஸ்டில் மற்றும் விளம்பரங்களை வெளியிட்ட சுவாமிக்கு சிறப்பு நன்றி.
சாரதி,
மன்னவன் வந்தானடி மற்றும் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற இரண்டு extreme ஆனால் extraordinary பாடல்களை எடுத்துக் கொண்டு நீங்கள் அலசிய விதம் பிரமாதம். பாடல் வரிகள், இசை, அரங்க அமைப்பு, பாடியவர், இயக்கியவர் மற்றும் நடித்தவர்கள் என்று பிரித்து பிரித்து நீங்கள் அலசியது சூப்பர்!
Sathish,
Yes, I had gone to the opening show of Naan Vaazha Vaippen on 10th August,1979. It was released in Sridevi. The opening show was a matinée because they didn't conduct any special morning show. There was not much of a problem except for a slight skirmish during Aagayam Mele song and it was immediately brought under control. It is quite natural to have such face offs given the history of Tamil Cinema backdrop. Better sense prevailed and now looking back, it was all childish.
மற்றபடி ஓபனிங் ஷோவில் அலப்பறைக்கு குறைவொன்றுமில்லை. அது வழக்கம் போல் அரங்கு அதிர அதிர நடந்தது.
அன்புடன்
-
11th August 2011, 01:24 AM
#933
Senior Member
Veteran Hubber

Originally Posted by
J.Radhakrishnan
In 1952 Sivaji was very much interested to appear on the screen. At that time Telugu producer Adhinarayana Rao and Anjali Devi produced a film “Paradesi” and given first time acting chance for Sivaji. But Paraskati released first. For giving this opportunity he never forget was grateful to them. They produced a film “Bhaktha Thukaram” and told Sivaji to act a small role - when Sivaji was in stardom in Tamil and told him they will pay whatever he wants. But Sivaji refused to take any remuneration and said “since you have given me chance for first time acting in film I will act without taking any money”. Without taking even a glass of water he acted in that movie for them.
டியர் பாலா சார்,
தாங்கள் அளித்துள்ள தகவல் சற்று புதிதாக உள்ளது, இதுவரை நாம் அறிந்தவரை பராசக்தி படத்தில் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் பிறகு தான் மற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்று கேள்விபட்டிருக்கிறோம்.
இதற்க்கு சான்றாக நடிகர் திலகம் அவர்களே பராசக்தி படம் பற்றி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
டியர் பம்மலார் சார்,
இதற்க்கு (பரதேசி படம் )ஆதாரமாக அந்த காலகட்டத்தில் வந்த பத்திரிக்கை செய்தி ஏதேனும் இருந்தால் இங்கு பதிவேற்றம் செய்யும் படி வேண்டுகிறேன்.
டியர் ஜேயார் சார்,
நமது நடிகர் திலகம் முதன்முதலில் நடிக்க ஒப்பந்தமானது, நடிகை அஞ்சலிதேவியின் அஞ்சலி பிக்சர்ஸ் தயாரிப்புக்களான "பூங்கோதை(தமிழ்) / பரதேசி(தெலுங்கு)" திரைப்படங்களில்தான். எனினும் இதற்கு அடுத்து ஒப்பந்தமான "பராசக்தி" முதலில் வெளிவந்தது. எல்லாம் நன்மைக்கே !
இதற்கு ஆதாரமான பத்திரிகைத் தகவல் பத்திரமாக உள்ளது. விரைவில் வெளியிடுகிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
-
11th August 2011, 02:13 AM
#934
Senior Member
Veteran Hubber
Dear goldstar satish,
Thanks for your whole-hearted appreciation.
I will furnish NAAN VAAZHAVAIPPAEN BO data shortly.
டியர் செந்தில் சார்,
உயர்ந்த பாராட்டை அளித்த உங்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றி !
டியர் mr_karthik,
பாராட்டுக்கும், மேலதிக விவரங்களுக்கும் மேலான நன்றி !
டியர் ராகவேந்திரன் சார் & நெய்வேலி வாசுதேவன் சார்,
அரிய பொக்கிஷங்களை அளித்துள்ள தங்களுக்கு அற்புத நன்றிகள் !
டியர் முரளி சார்,
மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
11th August 2011, 06:02 AM
#935
Senior Member
Seasoned Hubber
அழைப்பின் பேரில் முதன் முதலாக அஞ்சலி பிக்சர்ஸ் அலுவலகத்தில் நுழைகிறார் அந்த இளைஞர். அங்கே அமர்ந்திருக்கிறார் ஒரு சீனியர் இயக்குநர். இயக்குநர் அந்த இளைஞரைக் காண்கிறார். அஞ்சலி தேவியிடம் சொல்கிறார்.
இந்த இளைஞனின் கண்களைப் பார். அந்த ஒளி மிக சக்தி வாய்ந்தது. இவனை மிஸ் பண்ணிடாதே. அவன் மிகப்பெரிய அளவில் வருவான்
அந்த இயக்குநர் மறைந்த மாமேதை எல்.வி.பிரசாத். தீர்க்க தரிசியாக நல்லெண்ணத்துடன் வாழ்த்தி வரவேற்ற அந்த இளைஞன் யாரென்று கூறவும் வேண்டுமோ
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
இது தான் முதன் முதல் நடிகர் திலகம் திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப் பட்ட அனுபவம். அந்தப் படம் ஓர் தெலுங்குப் படம். நாகேஸ்வர ராவ் அஞ்சலிதேவி நடித்த பரதேசி. சற்று நாளிலேலேய அதனை தமிழிலும் தயாரிக்கத் துவங்கினர்.
இதன் படி பார்த்தால் நடிகர் திலகம் முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஓர் தெலுங்குப் படத்தில் தான் என்பது குறிப்பிடத் தக்கது.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th August 2011, 09:00 AM
#936
Senior Member
Seasoned Hubber
அந்தக் காலத்தில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நடிகர் திலகத்தின் கையொப்பமிட்ட புகைப்படங்கள் அஞ்சலில் அனுப்பப் படுவதுண்டு. இன்றும் பழைய ரசிகர்களிடம் அது நிச்சயம் பொக்கிஷமாக இருக்கும். பிந்தைய தலைமுறையினர் அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி எனக்குக் கிடைத்த அந்தப் படத்தை நம் அனைவருடனும் பகிரந்து கொள்வதில் பெரு மகிழ்வுறுகிறேன். இதனைத் தங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மிகவும் பழைய படமாதலால் முடிந்த வரையில் சரி செய்ய முயன்றுள்ளேன். ஏதேனும் சரியில்லையென்றால் பொறுத்தருள்வும்.

அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th August 2011, 09:38 AM
#937
Senior Member
Diamond Hubber
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
11th August 2011, 10:12 AM
#938
Senior Member
Regular Hubber
Harish
please let me know what all DVDS you want , u can contact me at 9845491583
Dear Joe Sir
any chance of Video clippings of the progarmme
-
11th August 2011, 12:15 PM
#939
Senior Member
Senior Hubber

Originally Posted by
mr_karthik
பார்த்தசாரதி சார்,
உண்மையைத்தான் சொன்னீர்கள். இருந்தாலும் இவர்களோடு சேர்த்து, உங்களின் பங்களிப்புகளூம் ஒன்றும் குறைந்தவையல்ல. மிக அபாரமான பல பதிவுகளைத் தந்துள்ளீர்கள்.
இந்த நூற்றுக்கால் மண்டபத்தில் நீங்களும் ஒரு முக்கியமான தூண் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
தங்களின் பாராட்டுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள். இருப்பினும், மேற்கூறிய ஜாம்பவான்களுடன் என்னை ஒப்பிட முடியாது. என்னால் முடிந்தவரை என்னுடைய நினைவுகளையும், ஆய்வுகளையும் என்னுடைய பார்வையிலிருந்து தருகிறேன்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
11th August 2011, 12:37 PM
#940
Senior Member
Senior Hubber

Originally Posted by
rsubras
Rajapart Rangadurai la varum Sirikkiraen sirikkiraen sirippu varalai had a lots of similarities to the kingini kingini song...... esp the situation, the beautiful portrayal of the dilemma and of course the performance.......i think in both the songs shivaji middle of the song la thadukki vizhunthuduvar, evoking laughter from the audience while he carries the grief.....
Dear Mr. Subramanian,
This is the unique characteristic of this great thespian. Situations in both the songs are similar to a great extent where in he had to perform the role of an entertainer (bafoon / christmas thatha) and make the children enjoy the same, yet hide/control his emotions. He still was able to strike it differently and still able to draw applause/appreciation/tears from the audience. We can quote innumerable examples like this - only for NT the Greatest!
Regards,
R. Parthasarathy
Bookmarks