மது ஜி
தகவலுக்கு நன்றி .
பாடகி அம்புலி பாடிய வேறு சில பாடல்கள் ஏதாவது நினைவு படுத்த முடியுமா
Printable View
மது ஜி
தகவலுக்கு நன்றி .
பாடகி அம்புலி பாடிய வேறு சில பாடல்கள் ஏதாவது நினைவு படுத்த முடியுமா
https://encrypted-tbn3.gstatic.com/i...uZdaE8J7_ehrVg
ஆகாயம் காணாத சூர்யோதயம் (ஆலய தீபம்): இந்த அற்புதமான பாடலைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். ஸ்ரீதருடன் இணைந்து எம் எஸ் வி செயல் பட்ட கடைசிப் படம் இது என்று நினைவு.படம் 1984 கால கட்டத்தில் வெளி வந்தது
இதில் முதல் சரணத்தில்,
'தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா'
என்ற வரிகளைத்தொடர்ந்து ஒரு சிறிய ஹம்மிங்கில் ஒரு தாலாட்டை அமைத்திருப்பார் அது ஒரு அற்புதம்.
இரண்டாவது சரணத்தில்,
'இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி'
என்று வரும்.
இந்த வரிகளைத்தொடர்ந்து வெறும் சலங்கை ஓசையையும் தாளக் கருவிகளையும் வைத்து, சில வினாடிகளில் ஒரு மினி நாட்டியக் கச்சேரியையே நிகழ்த்தியிருக்கிறார் நம்மவர். மாதவி நடனத்துக்குப் பேர் போனவள். கவிஞர் வேறு 'எழில் பொங்கும் ஆட்டம்' என்று எழுதி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவாரா எம் எஸ் வி? அற்புதம்.
http://www.youtube.com/embed/Vyn1gTkei2k
பாடலை கேட்டால் விளக்க முடியாத நுணுக்கங்களையும் நன்றாக புரிந்து கொள்ளலாம்
thanks to Mr.Parthasarathy - MSV
பாடலின் லிங்க் கொடுத்ததற்கு நன்றி வாசு சார்
இன்று காலையில் இந்த பாட்டை கேட்டேன். மெல்லிசை மன்னரின்
இசை கோர்வை கொள்ளை கொள்ள வைத்தது
அனுராகசீமா' படத்தில் காந்தாராவும், கிருஷ்ண குமாரியும்.
http://s1.dmcdn.net/CEdXI/1280x720-8J_.jpg
http://i.ytimg.com/vi/IHMXXgEP77s/maxresdefault.jpg
வாசு சார் //எப்படி ராஜா உனக்குத் தோணுது// :) தாங்க்ஸ்..
கங்கா கெளரி ஸ்பெஷல்வெரி நைஸ் வாசு சார்.. வெகு சின்ன வயதில் மதுரை சென் ட்ரலில் பார்த்த நினைவு.. அதன் பிறகு முழுக்கப்பார்க்க சந்தர்ப்பம் வரவில்லை..ஆரம்பத்தில் ஒவ்வொரு கிரகங்களையும் சோ தனக்கே யுரிய நகைச்சுவைத் தனமையில் சிரித்தபடி பாடிவரும் பாட்டு ஒன்று மட்டும் நினைவில் + இரண்டு ஜெ (வேறு யார் ஹீரோயின் தான்)+ ஒரு ஹீரோ ஜெ.. இந்தப் பாட்டை ஹோம் ஒர்க்கா வெச்சுக்கறேன் :)
வெங்கிராம்..வாங்க.. இந்த இருபறவைகள் பாட்டு கேட்க மட்டும் செய்திருக்கிறேன்.. முதன் முதலாக காதல் டூயட் பாட்டும் சரி.. படம் பார்த்ததில்லை காரணம் பல அவற்றுள் சில .. இந்த ஸ்டெப் கட்டிங்க் ஸ்டைலில் ஃபுல் சூட்டில் விஜயன் அப்புறம் குட்டி ஃபோட்டோவாய் ரத்தி போட்ட போஸ்டர் அப்புறம் ராதிகா..(கிபோர பார்த்த பயம் போகாத தருணம் அது..) எனில் பயம் கூட காரணமாய் இருக்கலாம் பார்க்காததற்கு..இருபறவைகள் பாட்டு கண்ணதாசன் என்று இன்று வரை தெரியாது..தாங்க்ஸ்..
ஜென்ஸி குரல் தான் கேட்கும் போது அந்தக் கால ரேடியோ ட்ராமா தான் நினைவுக்கு வரும்..
க்றீச்.. கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட எலியின் சப்தம் டடக் டக்.. (கதவைத் திறக்கறாங்களாம்..)
உணர்ச்சியே இல்லாத ஆண்குரல் : வாம்மா கல்பனா..அவனை ஹாஸ்பிடல்ல பார்த்தியாமா
உணர்ச்சியே இல்லாத பெண்குரல்: பார்த்தேன் மாமா..(கொக் கொக்..எனசத்தம் அழறாங்களாம்) அவர் ட்யூப்லாம் ஃபிக்ஸ்பண்ணி.. பாக்கவே கஷ்டமா இருக்குமாமா..
உ.இ.ஆ.கு.: வாம்மா நாம போய்ப் பார்க்கலாம்
மறுபடியும் கதவிடுக்கில் மாட்டிய எலியின் ஓலக் க்றீச் (கதவு திறந்து மூடுகிறது:)
இந்த க் கீச் வாய்ஸ் தான் ஜென்ஸி (ஒரு சின்னப் பதிவுக்கு இவ்ளோ உவமை அவசியமா கண்ணா) என்பதுஎனது அபிப்ராயம்..என் வானிலே ஒரே வெண்ணிலா கூட வேறு எவருக்காவது கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்..பாவம் நடுவில் குரல் போய்விட்டதாக ஒரு கட்டுரையில் படித்த நினைவு..இளையராஜா சான்ஸ் தரவில்லை எனக் கூறியிருந்ததுமாக நினைவு..
ஆனால் அந்தக் காலத்தில் இந்தப் பாட்டை ரேடியோவில் கேட்டிருக்கிறேன்..அடிக்கடி.. நன்றி..
தாலாட்டு உனக்காக நான் பாடினேன் கேட்டதில்லை கிருஷ்ணா ஜி.. கேட்கிறேன்..
லட்சுமியம்மா கண் திறந்து பார்த்தவுடன் எல்லாம் சரியாயிடும்.
http://youtu.be/hJ9hPhdB8V8