அதுல என்ன சந்தேகம் ? :)
Printable View
Prabhu adaiyaalamE theriyala
I happened to watch Hey Ram more intently yesterday. What a purposeful art piece!(Page a minute -perfect execution.)Imagery sur-realisic scenes have been picturised to perfection.Raja has given a perfect feel in songs and RR. People somehow preferred the shallowest ,shoddy movies like Bombay and let Hey Ram down. Well done Kamal.Hats off to the sishyan (elder son?)of NT.
He was bit unlucky .
வியட்நாம் வீடு- பகுதி- 6
இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).
மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.
கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர். (விஸ்வநாதன் சார் ஆள் பார்த்து இசையமைக்கும் அரசியல்வாதி) .சில சமயம் தோன்றும்.நம் படங்களில் கே.வீ.எம், டி.கே.ராமமூர்த்தி போன்றவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ?ஏனென்றால் 65 இல் இருந்து 72 வரை, வசூலில் முதலிடம் பிடித்த அத்தனை தமிழ் படங்களின் இசையமைப்பாளர் கே.வீ.எம் தான்.(68 , 71 நீங்கலாக)
இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.
வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)
(முற்றும்)
திரு. கோபால்,
தாங்கள் ஆய்வு செய்த நடிகர் திலகத்தின் "வியட்நாம் வீடு" மிக நேர்த்தியாகவும், சுவையாகவும் இருந்தது.
இந்தப் படமும், அதில், நடிகர் திலகம் ஏற்று, செதுக்கிய ப்ரெஸ்டிஜ் பத்மநாபய்யர் பாத்திரமும், அவர் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருந்த பல சோதனை முயற்சிகளில் மிக முக்கியமானது எனலாம். சோதனை முயற்சி என்பது அவர் துவக்க காலத்திலிருந்தே செய்து கொண்டே வந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
பொதுவாக, இந்தியாவில் வெளி வந்து கொண்டிருந்த அனைத்து முக்கியமான மொழிப் படங்களும் (மலையாளம், வங்காளம் நீங்கலாக), வியாபார நோக்கத்தை நோக்கி அறுபதுகளின் இறுதியில் சாய ஆரம்பித்தது. அது வரை, பொழுது போக்கு மட்டுமே சினிமா என்றில்லாமல், தரமான படங்களையும் கொடுத்துக் கொண்டே வந்த நிறுவனங்களும், கலைஞர்களும், வியாபார சமரசம் செய்து கொள்வது தவிர்க்க முடியாமல் போன சூழ்நிலையில், நடிகர் திலகமும் அந்த பாட்டையில், "தங்கை" (1967) படத்திலிருந்து பயணம் செய்யத் துவங்கிய நேரம். இருப்பினும், நடிகர் திலகம் மட்டுமே, தொடர்ந்து, இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்து கொண்டே இருந்தார். இந்த வகையில், என்னைப் பொறுத்த வரை, அறுபதுகளின் பிற்பாதியில், அவர் நிகழ்த்திய சாதனைகளே (சோதனை முயற்சிகளும் தான்!) அளப்பரியது! பெரிய ரசிகர் கூட்டத்தையும் பெருக்கிக் கொண்டே போய், அதே நேரத்தில், இளம் வயதினரையும் தரமான படைப்புகளை வரவேற்கக் கூடிய மன நிலைக்கு பக்குவப் படுத்திக் கொண்டே வந்தார்.
இந்த வகையில், தில்லானா மோகனாம்பாள் சிக்கல் சண்முக சுந்தரம் பாத்திரமும், வியட்நாம் வீடு ப்ரெஸ்டிஜ் பத்மநாபய்யர் பாத்திரமும், தலையாய இடம் பெறுகின்றன. தில்லானாவைப் பற்றி ஏற்கனவே திரு. முரளி அவர்களின் நீண்ட ஆய்விற்கு பதில் அளிக்கும் வண்ணம் எழுதி இருக்கிறேன் - அந்த முக ஒப்பனை, ஒரு பாடல் கூடக் கிடையாது. வியட்நாம் வீட்டிலோ, முற்றிலும் வயதான தோற்றம் (எல்லோரும் விரும்பிய படி ரொம்பவே ஸ்லிம்மாக மாறி, இன்னும் அழகாக மாறியிருந்த நேரம்) மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே கவரக்கூடிய அபாயம்!
பிற்காலத்தில் வந்த நடுத்தரக் குடும்பத்தைப் பற்றிய அனைத்துப் படங்களுக்கும் இதுவே முன்னோடியானது. இந்தப் படத்தில் தான், எனக்குத் தெரிந்து, ஒரு நடுத்தரக் குடும்பத்தில், வயதான தந்தை மற்றும் தாய் பிள்ளைகளால் உதாசீனம் செய்யப்படுவது, படம் நெடுகிலும், விஸ்தாரமாகக் கையாளப் பட்டது. அந்த வகையில், இன்னுமொரு முன்னோடி முயற்சியை, நடிக்க வந்து பதினெட்டு வருடங்கள் கழித்து, மறுபடியும், நடிகர் திலகம் செய்தார். புதிதாக எதையேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற அந்த தாகம் கடைசி வரை இருந்து கொண்டே இருந்ததில், அவருக்கு இணை அவர்தான்!
நடிக்க வந்து பதினைந்து வருடங்கள் கழிந்து, திரையில் தோன்றினாலே, அது சிவாஜி தான் என்று தீர்மானித்து, பாத்திரத்தை விட நடிகனை மட்டுமே திரையில் மக்கள் பார்க்கின்ற ஒரு சூழ்நிலையில், சிவாஜி என்னும் அந்த நட்சத்திரத்தை மீறி, அந்தப் பாத்திரங்களை மட்டும் ஒரு இடம் கூட விடாமல் பிரதிபலிக்க முடிந்ததால், இந்த இரண்டு கதாபாத்திரங்கள் சிரஞ்சீவித் தன்மை பெற்று விட்டன. இந்த வகையில், இன்னும் எத்தனை வருடங்கள் ஓடினாலும், நடிகர் திலகத்தை விஞ்சுவதற்கு அவரே இன்னொரு பிறவி எடுத்து வந்தாலும் முடியாது!
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
ஜோ,
திரு.ஜாக்கி அவர்களின் தெய்வமகன் பற்றிய பதிவை இங்கே பதிந்ததற்கு மனமார்ந்த நன்றி. அதுவும் அந்த அற்பதமான காட்சியை அப்படியே கண் முன் கொண்டு நிறுத்தியதற்கு அவருக்கு நன்றி கூறவும்.
அன்புடன்
NTs bodily appearances were varying from time to time. In Palum Pazhamum for instance his salt and pepper hairstyle with a chubby body made the terrific impact in the minds of the viewers on the characterization of a devoted doctor. In no way that appearance was taken as a negative point and the movie's mega success with the ever green song sequences are still enjoyable. Whenever I use to hear the song Naan Pesa Ninaippadellam.... i keep off all my works and run to the TV or radio to enjoy reminiscence! NT is an all time great unlike the short span of the hollywood super actors like Brando or Heston or Ronald Coleman.
வாசு சார்,
பிடியுங்கள் பாராட்டை தங்கள் 2000 ஆவது பதிவுக்கு. ஆனால் ஓரிரு வார்த்தைகளில் அரை மனதோடுதான். ஏனென்றால் தங்கள் 5000 எட்டும் போதுதான் நிறைய வார்த்தைகளில் முழு மனதோடு பாராட்ட முடியும்.
அன்புடன்
கோபால்.
தவப்புதல்வன்
நேற்று எதேச்சையாக, சன் லைப் தொலைக்காட்சியில், இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
1972-இல், முதன் முதலாக, இந்தப் படம் வெளியான போது, சென்னை கமலாவில், முதல் நாளே பார்த்து விட்டேன். அந்த வயதில், முதலில் என்னை ஈர்த்தது, வழக்கம் போல், "Love is fine darling" - ஆங்கிலப் பாடலில், நடிகர் திலகத்தின் ஸ்டைலிஷ் நடிப்பும், இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலும் தான்! அதன் பின்னர், எனக்குத் தெரிந்து இந்தப் பாடல் அடிக்கடி, மறு வெளியீடு செய்யப்படாததாலும், என்னுடைய கவனம், அவருடைய பழைய படங்களைப் பார்ப்பதில் கழிந்ததாலும் (நினைவு தெரிந்து பார்க்க ஆரம்பித்தது, ராஜா-விலிருந்துதான்), இந்தப் படத்தை மறுபடியும், முழு படத்தையும், பார்க்க வில்லை. சில வருடங்களுக்கு முன்னர், ஏதோ ஒரு தொலைக் காட்சியில் பார்த்த போது, நடிகர் திலகம் ஏ. சகுந்தலா வீட்டில் விழுந்து கிடக்கும் காட்சியையும், எம்.ஆர்.ஆர்.வாசு மற்றும் ஏ.சகுந்தலா டாமினேட் செய்யும் காட்சிகளும், தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், கோபம் வந்து, படத்தை மேற்கொண்டு பார்க்காமல் எழுந்து சென்று விட்டேன். (என்னதான் நடிப்பை இருந்தாலும், பாழாய்ப் போன மனசு கேட்க மாட்டேன் என்கிறதே!).
எல்லோரும் எழுதி எழுதி, ஒப்புக் கொண்டு விட்ட ஒரு விஷயம் தான்! அதாவது, நடிகர் திலகத்தின் இமேஜைப் பற்றிக் கவலைப்படாத குணம். இருப்பினும், இந்தப் படத்தை நேற்று கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கப் பார்க்க, மனதில் எழுந்த, பிரமிப்பு அடங்க வெகு நேரம் பிடித்தது.
1972 - எல்லோருக்கும் தெரியும், நடிகர் திலகத்தின் உச்சக்கட்ட வசூல் சாதனை ஆண்டு. வெளி வந்த 7 படங்களில், 6 படங்கள் பெரிய வெற்றி அடைந்தன. (பட்டிக்காடா பட்டணமாவும், வசந்த மாளிகையும் வெள்ளி விழா தான் ஓடியது; ராஜா, ஞான ஒளி, தவப்புதல்வன் மற்றும் நீதி 100 நாட்களும், அதற்கு மேலும், ஓடின.). இது தான் முக்கியம். நடிகர் திலகம் மெல்ல மெல்ல அதிரடி நாயகனாகவும், மசாலா நாயகனாகவும் கூடப் பெரிய நிலைக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், எதிர் மறையான கதாபாத்திரமாயிருந்தால் கூடப் பரவாயில்லை. இது, முற்றிலும், ஒரு விதமான, கோழைத்தனம் கலந்த, இயலாமை கலந்த பாத்திரம். இதை ஏற்று நடிக்க - அதுவும், அந்தக் கால கட்டத்தில் - எவ்வளவு துணிவு வேண்டும்? இருப்பினும், தைரியமாகத் துணிந்து ஏற்று நடித்திருக்கிறார்.
ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி! இந்நாளில், யார் யாரோ இதைப் பேசுகிறார்கள். ஆனால், இந்த வாசகம் நடிகர் திலகம் ஒருவருக்குத்தான் என்றும் பொருந்தும்.
படத்தைப் பொறுத்தவரை - தொய்வில்லாமல் சீராக, சுவாரஸ்யம் குன்றாமல் சொல்லப் பட்டிருந்தது. நடிகர் திலகம், வழக்கம் போல், கதாபாத்திரமாகவே மாறியிருந்தாலும், அளவாகவும், இயல்பாகவும், அழகாகவும் நடித்திருந்தார். அருமையான பாடல்கள். இந்தப் படம் நூறு நாட்கள் ஓடியதில் வியப்பில்லை தான். (திரு. முரளி அவர்கள், "சிவாஜியின் சாதனைச் சிகரங்கள்" கட்டுரையில், 1972 - வருடத்திய படங்களைப் பற்றி அலசியிருந்த போது, இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருந்தது, பசுமையாக நினைவில் இருந்தது. அப்படியே எழுத முடியவில்லை. அதாவது, "ஒரு பக்கம் பட்டிக்காடா பட்டணமா மிகப் பெரிதாக ஓடிக் கொண்டிருக்கிறது, மறு பக்கம் வசந்த மாளிகை பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில், வெளியான தவப்புதல்வன், நூறு நாட்களை தொட்டது என்றால், நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் பவர் என்ன என்பது புரியும்".)
இத்தனைக்கும், தவப்புதல்வன், ஒரு கருப்பு வெள்ளைப் படம் தான்.
திரு. முரளியின் அந்த வர்ணனையும், நடிகர் திலகத்தின், சரளமான நடிப்பும் தான், மீண்டும் தவப்புதல்வனைப் பார்க்க வைத்தது.
பார்த்து முடித்ததும், திரு. முரளியைத் தொடர்பு கொண்டு பேசியும் ஆகி விட்டது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
பார்த்தசாரதி சார்,
முக்தாவின் நிறைகுடம்,அருணோதயம்,தவப்புதல்வன் எல்லாமே சுவாரஸ்யமானவை.ஜாலியாக போகும். emotional content இருக்கும்.தவப்புதல்வன் கதாநாயகியை பார்த்தால்தான் வயிறு எரியும்.
தங்களின் பாடல் series காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஹா ஹா கோபால் சார்.. நல்லா சொன்னீங்கா.. ஆனாலும்...
நிறைகுடத்தின் வாணிஸ்ரீயும், அருணோதயத்தின் சரோஜாதேவியும் டுயட் பாட்டிலும் கூட ஆட வேண்டி இருந்தது. ஆனால் தவப்புதல்வனில் கே.ஆர்.விஜயாவுக்கு ஒரு பாட்டில் மயக்கம் போட்டுக் கிடக்க வேண்டியது மட்டுமே தேவைப்பட்டது. போதாக்குறைக்கு ஜிலுஜிலு டான்சுக்கு ஏ.சகுந்தலா இருந்ததால் இதுவே போதும் என்று விட்டிருக்கலாம். டாக்டர் வேஷத்துக்கும் நாலைந்து கலர் கலர் கண்ணாடி பீப்பாய்களை போட்டு உடைப்பதற்கும் இது போதாதா ? :rotfl:
டியர் பார்த்தசாரதி சார்,
தவப்புதல்வன் நினைவலைகள் அற்புதம், நம் தலைவர் என்றுமே சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர் தானே?
.....Quote:
We hear that actor Y Gee Mahendra is planning to remake the 1982 film Paritchaiku Neramaachu. The original movie had Sivaji Ganesan playing an orthodox father, while Y Gee played his son. But here's the big news. He has zeroed in on comedian Santhanam to be part of the remake!
Sivaji Ganesan was simple and courageous
http://www.behindwoods.com/tamil-mov...stills-144.jpg
The 84th anniversary of ‘Nadigar Thilagam’ Chevalier Sivaji Ganesan was celebrated on October 1st. The elder son of the legendary actor, Ram Kumar Ganesan welcomed the gathering and the guest of honour, the Governor of Tamil Nadu, Shri. Rosaiah. Directors Santhana Bharathi and TP Gajendran were also spotted at the event.
The governor, while addressing the gathering, was all praise for Sivaji Ganesan. He recollected the days he spent with the actor while campaigning in Andhra Pradesh. “We were good friends, even though we mostly met for political reasons,” he added. About Sivaji’s acting, the Governor said, “There wasn't a single character he couldn't do and none can do a character as perfect as he could. His simplicity and courage were his USPs. I would say, he along with other legends like MGR, NTR and NS Krishnan were the greatest contributors of Indian Cinema.”
The Sivaji family took the opportunity to honour veterans like K Balachander, actress Kanchana, and Thavil exponent ‘Valayapatti’ AR Subramaniyam. A sum of Rs 50,000 was also donated towards the Sivaji Prabhu Charitable Trust.
http://www.behindwoods.com/tamil-mov...-03-10-12.html
100th page. A humble mile stone.
My request to all our friends. Keep contributing your valuable articles to enrich this thread. Special thanks to Murali,P_R,Joe,Nov,Parthasarathy,Vankv,Subras,Plum ,sivajisenthil,Madhu,Satheesh,J.Radhakrishnan,Grou ch,Barrister,M.Kumar,Ramajayam,Harish,Kalnayak,Mah esh,anm,Rajesh,Rangan,KCS who are contributing presently,
Vasu who opened this thread,Pammalar ,Karthik,Raghavendar ,Raghulram who made their valuable initial contributions.
The friend who were left due to trick of my memory, Pl.accept my thanks with grace.
திரு. கோபால் / திரு. மது,
தவப்புதல்வன் படத்தைப் பற்றிய ஆய்வை நான் இங்கு தரவில்லை. நடிகர் திலகத்தின் துணிச்சலையும், அவரது திறமை மேல் அவருக்கிருந்த தன்னம்பிக்கையைப் பற்றியும், தொழில் என்று மட்டுமே தான் அவர் பார்த்தார், பாத்திரத்தின் தன்மையைப் பற்றி அல்ல. (இந்தத் துணிச்சலில், நீங்கள் சொன்ன கதாநாயகித் தேர்வு கூட அடங்கும்!)
நிற்க. திரு. கோபால் அவர்களே, நிறைகுடம் மற்றும் அருணோதயம் படங்கள் - படங்கள் என்று மட்டும் பார்த்தால் - தவப்புதல்வன் அளவுக்கு சுவாரஸ்யமாக விஷுவலாகச் செல்லாது. அந்தப் படங்களுக்கு, தவப்புதல்வன் அளவிற்கு பாடல்களும் துணை நிற்கவில்லை. நிறைகுடம் கிட்டத்தட்ட மேடை நாடகம் போல் தான் செல்லும். அருணோதயம் கொஞ்சம் விஷுவலாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ஜோடிப்பொருத்தம் எடுபடவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம் - கொஞ்சம் சர்ச்சைக்குரிய விஷயம் தான் - நல்ல வேளை, முத்துராமன் அவர்கள் இந்தப் படத்திலும் படம் நெடுக வந்து போகவில்லை.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
5. "நல்லவன் எனக்கு நானே நல்லவன்"; படம்:- படித்தால் மட்டும் போதுமா? (1962); இயக்கம்:- ஏ. பீம்சிங்
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பின், இந்தக் கட்டுரையை மறுபடியும் எழுதுவதில் பேருவகை அடைகிறேன்.
1952-க்குப் பிறகு, தமிழ்க் கலையுலகில், எடுக்கப்பட்ட பல புதிய முயற்சிகளில், நடிகர் திலகத்தின் பங்கு நான்கில் மூன்று பங்கு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இருக்காது. சினிமா என்கிற விஷுவல் மீடியத்தை எப்படி நடிகர் திலகம் புதிய கோணத்தில், விஷுவலாகக் கையாளத் துவங்கினார் என்பதைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி இருக்கிறேன். நிற்கும் விதம் (posture), உடல் மொழி (கை கால்களை மனம் போன போக்கில் அசைக்காமல், அளவோடும், அழகாகவும்) மற்றும் மூவ்மென்ட். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இன்னமும் நிறைய பேர் பத்தாம் பசலித் தனமாக, சில படங்களில் வந்த வசனங்களைப் பற்றியும், ஓரங்க நாடகங்களைப் பற்றியும் மட்டுமே, (வேறு எதுவும் கிடைக்காததால்) பேசிக் கொண்டிருக்கின்றனர்!)
அந்த வகையில், இதோ நடிகர் திலகத்தின் இன்னுமொரு புதிய முயற்சி -
எப்போதும் டூயட்டுகளில், ஆணும் பெண்ணும் பாடியது போக, இரண்டு ஆண்கள் பாடும் புதுமை இந்தப் பாடலில் இதே படத்தில் மறுபடியும் இடம் பெற்றது. ("பொன்னொன்று கண்டேன்" பாடலை வேறொரு கட்டுரையில் எழுதி விட்டேன்!). இந்தப் பாடலை நடிகர் திலகம் அணுகிய விதம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
இது ஒரு நிறைய பேரின் பங்களிப்பு கொண்ட ஒரு குழுவின் பாடல் (குரூப் டான்ஸ்). இந்தப் பாடலில், பாடும் இரு கதாநாயகர்களும், அவர்களைப் பற்றியும், சில வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றியும், அந்தக் குழுவினரோடு சேர்ந்து சந்தோஷமாகப் பாட வேண்டும்.
இந்தப் பாடலின் துவக்கத்திலேயே, ஒரு வித அசுர வேகம் தெரியும்.
இந்தப் பாடல் துவங்குவதற்கு முன்னர், படித்த அண்ணன் (பாலாஜி), படிக்காத எப்போதும் வேட்டையாடிக் கொண்டு பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் கள்ளமில்லா மனம் கொண்ட தம்பி (நடிகர் திலகம்) இருவருக்கும் திருமணம் நிகழ்ந்து, அதில் அண்ணன் மட்டும் நினைத்த மாதிரியே மனைவியை அடைந்து விடுவார். ஆனால், தம்பி, துரதிர்ஷ்டவசமாக, பொருத்தமில்லாத படித்த ஒருவரை மணம் புரிந்து, மனைவி, அவரைத் தன்னைப் படித்தவன் போல் நடித்து ஏமாற்றித் திருமணம் புரிந்து விட்டார் என்று வெறுப்புடன், பிறந்த வீட்டுக்குச் சென்று விடுவார். இந்த விஷயம், தம்பி தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. இருப்பினும், எல்லோரும் சொந்த கிராமத்துக்கு (எஸ்டேட்) செல்ல, அங்குள்ளவர்கள், இவர்களை வாழ்த்தும் விதமாக கூட்டமாக நடனமாடி மகிழ்விக்கத் துவங்குகையில், அண்ணன் பாடத் துவங்குவார்.
அண்ணன் (பாலாஜி) பல்லவியைத் துவக்கி முடித்தவுடன், சற்றும் எதிர்பாராதவிதமாக, தம்பி (நடிகர் திலகம்) அனு பல்லவியைத் துவங்குவார். தன்னுடைய குணாதிசயத்தை அழகாகக் கூறுவார் -"உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை - ஊருக்குத் தீமை செய்தவனில்லை - வல்லவன் ஆயினும் நல்லவன்" என்று பாலாஜியின் பின்னாலிருந்து முகத்தை மட்டும் காட்டும் போது அந்த முகத்திலும், அந்தக் கண்களிலும் தெரியும் அந்தக் குழந்தைத்தனம், மறுபடியும், அந்த வரிகளைப் பாடி அசாத்திய வேகத்துடன், பாலாஜியை நோக்கித் திரும்பி நிறுத்தும் ஸ்டைல்!
இப்போது, சரணம் -
"பள்ளம் மேடு கண்டால் பார்த்துச் செல்லும் பிள்ளை .... சேர்த்துக் கட்டிய முல்லை" எனும்போது ஒரு வித ஸ்டைல்.
"இல்லை இல்லை என்று என்றும் சொன்னவர் இல்லை" என்று பாலாஜி பாடும் போது, இவரது ரியேக்க்ஷன்!
அடுத்து, இரண்டாவது சரணம் -
"சிட்டு போல வானில் துள்ளிச் செல்ல வேண்டும்" - அந்த ஆர்ப்பரிப்பைக் கவனியுங்கள் - கைகளை வானத்தை நோக்கி அசாத்திய வேகத்துடன் உயர்த்தும் விதம்! "கீரிப்பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும்" எனும் போது காட்டும் பாவனை! பாலாஜி பதிலுக்கு, "தொல்லை என்ற பாம்பைக் கவ்விக் கொல்ல வேண்டும்; தூய உள்ளம் வேண்டும், என்றும் சேவை செய்ய வேண்டும்" எனும்போது, நடிகர் திலகம், இரண்டு கைகளையும் ரொம்பவே லூசாக வைத்துக் கொண்டு இலேசாக ஆடுவது -அவருடைய ஸ்டைலையும் சேர்த்து! குறும்பு கொப்பளிக்கும்!!
இந்தப் பாடல், இந்தப் படத்தின் அந்தச் சூழலுக்குத் தேவையில்லை என்றே தோன்றினாலும், அதற்கு முன்னர் ஏற்படும் ஒரு விதமான இறுக்கமான சூழலை மக்களை மறக்க வைத்து, வேறு ஒரு சூழலை, மக்களுக்கும், ஏன் அந்தப் பாத்திரங்களில் நடிப்பவர்களுக்குமே கூடத் தரும்.
பாடல் நெடுகிலும், நடிகர் திலகத்திடம் காணும் அசுர வேகமும், ஸ்டைலும், அதன் மூலம், அவருடைய பாத்திரத்தின் குண நலன் என்ன, பாங்கு என்ன என்பதையும் அவர் காட்டியிருக்கும் விதமும், அற்புதமாக இருக்கும். அவரது குடும்பத்தில் இவர் ஒருவர் தான் காட்டிற்கு அடிக்கடி வேட்டையாடச் செல்வதாலும், அவர் எல்லோருடனும் கள்ளம் கபடமின்றி பழகுவதாலும், அவர் மட்டும் பந்தா இல்லாமல் எல்லோரையும் போல் தன்னை மறந்து ஆடி இருப்பார்!
உத்தம புத்திரன் படத்தில் "யாரடி நீ மோகினி" பாடலில், எப்படி பார்வையாளர்களாக நின்ற கொடிய வில்லன்கள் நம்பியார் மற்றும் ஓஎகே தேவர் ஆகியோரையும் சேர்த்து கைத் தட்ட வைத்தாரோ, அதே போல், இந்தப் பாடல் முடிவில், பார்வையாளர்களான, எம்.ஆர்.ராதா மற்றும் ஏ.கருணாநிதி அவர்களையும் சேர்த்து ரசிக்க வைத்து விடுவார். அந்த அளவிற்கு, பாடலும், நடிகர் திலகத்தின் பிரத்யேக வேகமும், நடிப்பும், துடிப்பும், ஸ்டைலும், அந்த இடத்தையும், பார்ப்பவர்களையும் சேர்த்து மயிர்க் கூச்செறிய வைத்து விடும். பாடல் முடிந்து, சில கணங்கள், அந்த பாதிப்பு நீங்காமலேயே இருக்கும்!
குழுவினர் ஆடிக் கொண்டிருக்கும்போது, நடிகர் திலகமும், பாலாஜியும் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட, நடிகர் திலகம் மட்டும் ஒரு வித தயார் நிலையில் நின்று கொண்டிருப்பதை கவனிக்கலாம்.
என்னடா புதிதாக ஏதேதோ செய்யப் போகிறோமே, மக்கள் ரசிப்பதற்குப் பதில், சிரித்து விடுவார்களோ என்று நினைக்காமல், துணிந்து வித்தியாசமாக நடித்த விதம் தான், அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வேறு படுத்திக் காண்பிக்கிறது. எவ்வளவு தான், புதிதாகச் செய்தாலும், பாத்திரத்தை விட்டு விலகாமல், மாறாக, அந்தப் பாத்திரத்தையும், அந்த கணத்தையும், அந்தப் படத்தையும், மேலும் மெருகேற்ற இவர் ஒருவரால் தான் முடியும் போலும்!
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
we had a whole discussion on this... Padmini won comfortably!
http://www.mayyam.com/talk/showthrea...na-Jodi/page10
Sarathy sir,
Great write up. If you observe,NT uses his hand movements more when he comes in less sophisticated and innocent characters(Padikkatha medhai,Bale pandiya). More of a body swings and Facial Expressions in Educated ,Sphisticated characters.(Pudhiya paravai). In Padithaal pattum podhuma, he is un-educated but sophisticated. He used both the styles liberally in this movie.(naan kavignanum illai,Nallavan enakku naane songs.) I leave 1000 places vacant after the great Nadigar Thilagam.
I believe, more than the lack of effort, it is to do with the genes that makes this slimming business very difficult... for such ppl, when age is on your side you can do certain things, sweat it out to get to shape but beyond a certain age it is a very tough thing......... that too considering the work load of Sivaji sir at that time.......it would have been next to impossible to even plan anything such as this........
Dear Gopal Sir,
Thank you for your appreciation. When it comes to hands movement, restraint and grace in terms of body language, NT is the best right from his debut movie "Parasakthi". That too, from a man from Theatre background!
The very purpose of my series on his performance in Song sequences is only to reach the LEARNED CRITICS and today's YOUTH that he is the only Artiste, who had always been ahead of his time, in understanding the visual media and not like some of these critics' remark that he is a loud actor!
This I will continue, as long as I can!!
Regards,
R. Parthasarathy
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
6. "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு"; படம்:- நெஞ்சிருக்கும் வரை (1967); இயக்கம்:- சி.வி.ஸ்ரீதர்
இன்னமும் கூட, பல கலைஞர்கள், சினிமாவில், பாடல் காட்சிகளில், எப்போதெல்லாம் வேகமும் ஒரு சில மூவ்மெண்டுகளும் தேவையோ, அப்போதெல்லாம் நடனமாட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக, சினிமாவில், பாடல்களில் பெரும்பாலும் தேவைப் படுவது, நடனம் அல்ல, மூவ்மெண்டுகளுடன் கூடிய சில பல அபிநயங்கள் தான் என்று தெரிவதில்லை. அவர்கள் எல்லோரும் இந்தப் பாடலை ஒரு முறை பார்த்தால் போதும்.
மூன்று படித்த இளைஞர்கள், வேலை தேடித் தேடி அலுத்துப் போனாலும், தன்னம்பிக்கையை வரவழைக்க, தங்கள் கண் முன் அப்போது இருக்கும் சூழலை ரசித்து, அனுபவித்து, தன்னம்பிக்கையோடு பாடுவதாக வரும் பாடல்.
பாடலின் துவக்கத்தில் வரும் இசையே ஒரு வித உற்சாகத்தை அளிக்க, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் வி.கோபாலகிருஷ்ணன் மூவரும், பாடலைத் துவக்குகின்றனர்.
இந்தப்பாடலைக் கேட்டாலே, பாடல் துவங்கி முடியும் வரையிலும், ஒரு வித சரளமும், வேகமும், உற்சாகமும் இருப்பதை உணரலாம். பார்த்தால், இவை பல மடங்கு
விருத்தியாவதைக் கண்டு பிரமிக்கலாம். இதற்கு முழு காரணம் நடிகர் திலகம் மட்டுமே.
பாடல் முழுவதிலும், அவர் காட்டியிருந்த சரளமும், நளினமும், கௌரவத்துடன் கூடிய அழகும்/மெருகும், வேகமும், வெவ்வேறு நடைகளும், ஒவ்வொரு முறையும், வேறு வேறு பாவனைகளையும், இலேசான மூவ்மெண்டுகளையும் மாற்றி மாற்றிக் காண்பித்தும் நடித்த விதம், படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும், நெஞ்சில் பசு மரத்தாணி போல் நிரந்தரமாகத் தங்கி விட்டது (அதன் பின்னர் பல முறை பார்த்தாகி விட்டது என்பது வேறு விஷயம்!).
இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் இசையிலிருந்தே, நடிகர் திலகத்தின் இராஜாங்கம் துவங்கி விடும். நடிகர் திலகத்தின் ஒரு பக்கத்தில் முத்துராமனும், மறு பக்கத்தில் வி. கோபாலகிருஷ்ணனும் கூடவே வர, துவக்கத்திலிருந்தே, மிக மிக நளினமாக மெதுவாகத் துவங்குவார். முதலில், துவக்க இசைக்கேற்ற நளினமான நடை - இப்போது, விசிலடித்துக் கொண்டே, கைகளையும் கால்களையும் ஆங்கில பாணியில் அபிநயித்துக் கொண்டே செல்வார்... மெல்ல மெல்ல மூவ்மெண்ட் வேகமெடுக்கும் - ஆனால் ஒரு அளவோடு. இப்போது, நேர் போஸில் மற்ற இருவரோடும் அவர் வர, பல்லவி துவங்கும். "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் ஒரு மாதிரி லூசாக வைத்துக் கொண்டே, வலது கையால் சொடக்குப் போட்டுக்கொண்டே, இடது கையை லூசாக வைத்துக் கொண்டே, நடை. "வாழ்ந்தே தீருவோம்" எனும்போது, ஒரு வித இலேசான திமிருடனும் நம்பிக்கையுடனும், வலது கையை உயர்த்தி இந்த வார்த்தைகளுக்கேற்ற பாவம். இப்போது, பல்லவியை மறுபடியும், முத்துராமனையும் கோபியையும் நோக்கித் திரும்பி பாடும் போது வேறு விதமான நடை, மற்றும் பாவம், இப்போது "நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் கீழே வைத்து "எப்படி வாழாமல் போவோம்" எனும் விதத்தில் வெளிப்படுத்தி, "வாழ்ந்தே தீருவோம்" எனும் போது, வலது கையை, பெரிய நம்பிக்கையுடன் உயர்த்தி இரண்டு பேரையும் நோக்கிச் சொல்வார். "எங்கே கால் போகும் போக விடு" என்று மற்ற இருவரும் சொன்னவுடன், இடது கையை உயற்றி “முடிவைப் பார்த்து விடு” என்று பாடி, திரும்பவும், "எங்கே கால் போகும் போக விடு" எனும் போது, இப்போது சைட் போஸில், வலது கையை உயர்த்தி சொல்லும் ஸ்டைல்; “காலம் ஒரு நாள் கை கொடுக்கும்”, என்று கூறி, "அது வரை பொருத்து விடு" என்று இப்போது, இரண்டு கைகளால், லூசாக, பொருத்தமாக, அந்த "பொறுத்து விடு"வைச் சொல்வார். இது எல்லாமும், ஒரு இடத்தில் கூட டெம்போ தொய்ந்து விடாமல், ஒன்று நடந்து கொண்டோ, அல்லது இலேசாக அபிநயித்துக் கொண்டோ, இல்லை, ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டோ தான் செய்து கொண்டே இருப்பார். அத்தனை சரளமாக! அனு பல்லவி முடியும் போது, "லா லா ... யா ய யா யா" என்று மூன்று பேரும் ஹம் செய்யும் போது, இவருடைய பாவனையைக் கவனியுங்கள்!
இப்போது வரும் ஒரு துள்ளல் இசைக்கு, அப்படியே, பின்னோக்கி ஆங்கில ட்விஸ்ட் நடன பாணியில் நடனமாடிக் கொண்டே செல்லும் போது, ஆரவாரத்தில் தியேட்டர் கிழிந்தது.
முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசைக்கேற்றபடி (filler music) , இந்தப் பாடல் துவங்கிய டெம்போ குறையாமல், நடிகர் திலகம் நடந்து கொண்டோ, இலேசான அபிநயத்துடன் கூடிய நடனத்துடனோ, மற்ற இருவருடனும் கைகளைக் கோர்த்துக் கொண்டோ, வலது கையால் சொடக்குப் போட்டபடியேவோ, அல்லது இடது கையோடு சேர்ந்து, கால்களின் துணையோடு, அற்புதமான நளினத்துடன் நடந்து கொண்டோ, நடனமாடிக் கொண்டோ வருவார்.
முதல் சரணம் - "இருந்தால் தானே செலவு செய்ய" இப்போது "கைல என்ன இருக்கு செலவு செய்ய" என்பதை நளினத்துடன் செய்து காண்பிப்பார். "எடுத்தால் தானே மறைத்து வைக்க" எனும் போது கைகளில் அதற்கேற்ற அபிநயம் இருக்கும். திரும்பவும் அதே வரிகள் - பாருங்கள் - வேறு மாதிரியான அபிநயம் மற்றும் பாவனை - ஆனாலும், அந்தக் கருத்துகேற்பத்தானிருக்கும்! "கொடுத்தால் தானே வாங்கிச் செல்ல தடுத்தால் தானே விழித்துக் கொள்ள" என்று இரண்டு முறை சொல்லும் போதும், வலது கையை உயர்த்தி இரண்டு முறையும் இரண்டு விதமாகச் சொல்லும் விதம்! இப்போது, கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும்!!
"எங்கே கால் போகும் போக விடு முடிவைப் பார்த்து விடு; காலம் ஒரு நாள் கை கொடுக்கும் அது வரை பொறுத்து விடு" எனும் போது, நடனமாடாமல், இப்போது வேகமாக நடக்கத் துவங்கி விடுவார் - அதுவும் படு ஸ்டைலாக. இப்போது முதலில் வந்த ஹம்மிங் மறுபடியும் "லா லா ... யா ய யா யா" - முதல் சரணத்துக்கு முன், இதே ஹம்மிங்கிற்கு ஆங்கில பாணியில் அபிநயித்து இலேசாக நடனமாடியவர், இப்போது அதே ஹம்மிங்குக்கு, ஒரு மாதிரி ஸ்டைலாக நடந்து கொண்டே வருவார் - மற்ற இருவர் மட்டும் ஹம் பண்ணுவார்கள். ஏனென்றால், இந்த ஹம்மிங்குக்கு முன் தான் வேகமாகப் பாடிக் கொண்டே நடந்து வருவார். இந்த ஹம்மிங் உடனே வருவதால், அந்த நடையின் வேகத்தைச் சிறிதே குறைத்து, மற்ற இருவரையும் ஹம் செய்ய விட்டு, நடு நாயகமாக, அனாயாசமாக நடந்து வருவார். மீண்டும், பல்லவி "நெஞ்சிருக்கும் எங்களுக்கு..." என்று துவங்கும் போது, அந்த வேகமான நடையுடன் கூடிய அபிநயத்துக்கு வந்து விடுவார். ஆங்கிலத்தில், 'follow through' என்று சொல்வார்கள். இதை நடிகர் திலகத்தைப் போல், பூரணமாகச் செய்து காட்டியவர் இன்று வரை ஒருவரும் இல்லை; இனி ஒருவர் பிறக்கப் போவதும் இல்லை!
திரும்பவும், இப்போது, இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் துள்ளல் இசைக்கு ஏற்ற படி, கைகளையும் கால்களையும் ஒரு வித தாள கதியுடன் மற்ற இரண்டு பேர்களின் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டே வருவார்.
இப்போது இரண்டாவது சரணம் - "துணிந்தால் தானே எதுவும் முடிய தொடர்ந்தால் தானே பாதை தெரிய" எனும் போது, மறுபடியும் இரண்டு கைகளையும் லூசாக, ஆனால், இப்போது வேறு மாதிரி அபிநயித்துக் கொண்டே வருவார். "சிரித்தால் தானே கவலை மறைய" என்று முதல் முறை சொல்லும் போது, வலது கையை உயர்த்தி சொல்லும் போது, அவர் முகத்தில் தோன்றும் அந்த பாவம் - சிலிர்க்க வைக்கும்! (மனுஷன் எல்லா போஸ்களிலும் அழகாக இருந்தாலும், அந்த சைட் போஸ் மட்டும் - அடிச்சுக்க முடியாது!). மீண்டும் மறு முறை இதேயே சொல்லும் போது "இரண்டு கைகளையும் மேலே தூக்கி "எங்க சிரிக்கறோம்" எனும் போர்வையில் (ஆங்கிலத்தில் wry ஸ்மைல் என்பார்கள் அது போல் - ஒரு வித வறண்ட புன்னகை) அபிநயிப்பார்.
கடைசியில், "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" என்று மீண்டும் பல்லவி துவங்கும் போது மூவரும், அங்கிருக்கும் வட்ட வடிவ நீரூற்றின் மேலே ஏறி பாடிக் கொண்டே போய் (இதற்குப் பக்கத்தில் தானே நீ இன்று சிலையாய் இருக்கிறாய் கலைக் கடவுளே!), கீழே இறங்கி அந்த வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து, "லா ல லா லா" என்று ஹம் செய்த படியே முடிக்கும் போது, அடடா, இவ்வளவு சீக்கிரத்தில் பாடல் முடிந்து விட்டதே என்று தோன்றும்!
பாடல் எழுதிய கவிஞர் வாலியின் நோக்கத்தைப் புரிந்து, இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரின் இதயத்திற்குள் நுழைந்து, அருமையாக இசையமைத்த மெல்லிசை மன்னர் மற்றும் அற்புதமாகப் பாடிய டி.எம்.எஸ்ஸின் வித்தைக்குத் தலை வணங்கி, இந்தப் பாடலை மறக்க முடியாத பாடலாக்கிய பெருமை, நடிகர் திலகம் ஒருவருக்கு மட்டுமே சேரும்.
இத்தனைக்கும் இந்தப் பாடல், சுட்டெரிக்கும் வெய்யிலில் மெரீனா கடற்கரைச் சாலையில் படமாக்கப் பட்டது. எனக்குத் தெரிந்து, இந்தப் பாடலை ஒரே நாளில் எடுத்து விட்டார்கள். என்ன, கூட நடித்தவர்கள் இவர் அளவிற்கு இயைந்து நடிப்பதற்கு நேரம் பிடித்திருக்கும் என்பதால், நிறைய டேக்குகள் போயிருக்கும். இருப்பினும், காலில் செருப்பில்லாமல் நடித்திருப்பார்கள், நடிகர் திலகம் உட்பட!
நினைவு தெரிந்து இந்தப் படத்தை முதலில் ஒரு டூரிங் டாக்கீஸில் ஒரு வார நாளில் - அதுவும் - மதியக் காட்சியில் - பார்த்த போது (அரங்கம் நிரம்பி வழிந்து, ப்ளாக்கில் டிக்கெட் வாங்க வேண்டியதாகி விட்டது!), இந்தப் பாடலில், நடிகர் திலகம் ஒட்டு மொத்த மக்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது பசுமையாக நினைவில் உள்ளது - நிறைய பேர் ஆபரேட்டரிடம் சென்று, "ஒன்ஸ் மோர்" கேட்டு, மறுபடியும், இந்தப் பாடல் போடப் பட்டது - இதெல்லாம், வேறு எந்த நடிகருக்கும் சாத்தியமா?
நடிகர் திலகத்திடம் இந்தப் பாடல் நெடுகக் கொப்பளிக்கும் குதூகலம், நளினம், நம்பிக்கை, இவை அத்தனைக்கும் மூல காரணங்களான அவரது அசாத்திய, அபாரமான கற்பனை வளம் மற்றும் அர்பணிப்புக்கு முன் கலை வாணியே மயங்கித் தான் தீர வேண்டும் எனும் போது, பார்க்கும் கேவலம் மனித ஜென்மங்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அவரைப் பார்த்து வாய் பிளந்து பிரமிப்பதைத் தவிர!
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
சாரதி,
அற்புதம் என்ற வார்த்தையை தவிர வேறு ஒன்றும் என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. கொஞ்சம் நேரம் கொடுங்கள். பிறகு வந்து எழுதுகிறேன். நல்லவன் எனக்கு நானே நல்லவன் பாடலும் சரி நெஞ்சிருக்கும் எங்களுக்கு பாடலின் ஆய்வும் சரி, அதைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமானால் An in depth analysis of Body Language என்பதே பொருத்தமான தலைப்பு.
தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரே ஒரு திருத்தம். நெஞ்சிருக்கும் எங்களுக்கு என்ற இந்த பாடலை (மட்டும்) புனைந்தவர் வாலி அவர்கள். நமது ராஜேஷ் அவர்கள் வந்து நம்மோடு உரிமையோடு சண்டை போடும் முன் மாற்றி விடுங்கள்.
அன்புடன்
Sarathy Sir,
Outstanding analysis on Nenjirukkum engalukku. One of my all time favourite boogey Boogey rhythm song. you are enhancing our adrenalin charge. You cant say you will continue as long as you can. You have to continue forever.
I recently watched "baley bandiya".....the whole movie was entertaining.....three different roles for sivaji. His voice modulations for rowdy and scientist character are nice... especially the excessive usage of "I mean"...and Chennai Tamil. I do not remember sivaji speaking Chennai Tamil any other movies. M R radha has dual role.... As usual, his timings are excellent particularly when M R radha brings sivaji to his home first time. over all, it's a nice movie to watch....
திரு. முரளி:- தங்களின் ஆத்மார்த்தப் பாராட்டுக்கு நன்றி. இந்தப் பாடல் கவிஞர் வாலி இயற்றினாரா அல்லது கவியரசுவா என்று முதலில் இருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. என்சைக்ளோபீடியவான உங்களிடம் வேறொரு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணுவதற்கு தொடர்பு கொண்ட நான், இந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ணாமல் விட்டு விட்டேன். உடனே, அந்தத் தவறை சரி செய்து விட்டேன். சரியான நேரத்தில் தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள். என்ன செய்வது, எனக்கும் பல விவரங்கள் (மற்ற மொழிகள் உட்பட) தெரிந்திருந்தும், சில விவரங்களில் இன்னமும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டபடி, "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" பாடலும் "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" பாடலும் பெரும்பாலும் உடல் மொழியை சுற்றியே பின்னப் பட்டிருக்கும். இந்த ஒரு விஷயம் தான் நாடக நடிப்புக்கும் சினிமா நடிப்புக்கும் வித்தியாசத்தை - நடிகர்களிடமிருந்து - வர வேண்டியிருக்கும் மிக முக்கியமான வித்தியாசம். இந்த வித்தியாசத்தை முதலில் அதுவும் பரிபூரணமாகக் காட்டிய நடிகர், நடிகர் திலகம் என்பது துவக்கத்திலிருந்தே தெரியும். இருப்பினும், இந்தப் பாடல்களும் அந்தக் கட்டுரையும், நடிகர் திலகத்தின் வித்தியாசமான முயற்சியையே பெரிதும் எடுத்துக் கொள்கிறது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Dear Mr. Sasi,
Thanks. When I indicated as so called Learned Critics, I refer people who did in the past right from his debut and people who have been doing this even today. These critics and some of today's youth who have been mudslinging him for certained loud acting would not have seen such performances of NT. If they start seeing it, they they will be able to appreciate his greatness and genius. There has already been a shift in the so many people's minds including today's youth in realising his greatness and it will only grow in future, for sure!
In fact, as Mr. Murali Srinivas has time and agained pointed out, the very purpose of this thread itself is only reach the Thespian's performances and service today's youth, which all of us should continue to do, never minding either mudslinging or non-acknowledgement.
Regards,
R. Parthasarathy
A2A, trouble with this thread is, it's too gargantuan in emotion that small ernest post that get's no notice.
As mentioned many times before, this has easily be Kamal's challenge for creating MMKR, just as Navarathiri is a challenge for Dasa. In terms of comedy quotient, it is usually seen as lesser compared to films that came decades later, but I laugh my ass off still. Especially Marudthu and his walk towards camera schene. For the copycat watchers out there, MRR's scene with his double is picked up from Marx Bros Duck Soup movie (the mirror scene). Still, this is a classic, because I ton't want t be a half-assed-cynic-who looks at half empy bottle, because I was told told that my territory might suffer from water problem.
One of the weirdest posts I have made while in conversation with a persistent **ckhead. Sorry.