கிருஷ்ணா சார்,
சின்ன மீனைப் போட்டு எப்படி பெரிய மீனைப் பிடித்தோம் பார்த்தீர்களா.
நெல்லை மேடைக் களேபரங்கள் நெஞ்சு புடைக்க சிரிக்க வைத்தன. குறும்பு.. அநியாத்துக்கு குறும்பு. நகைச்சுவை கொடி கட்டுகிறது. வாழ்த்துக்கள்.
Printable View
கிருஷ்ணா சார்,
சின்ன மீனைப் போட்டு எப்படி பெரிய மீனைப் பிடித்தோம் பார்த்தீர்களா.
நெல்லை மேடைக் களேபரங்கள் நெஞ்சு புடைக்க சிரிக்க வைத்தன. குறும்பு.. அநியாத்துக்கு குறும்பு. நகைச்சுவை கொடி கட்டுகிறது. வாழ்த்துக்கள்.
சிங்கமாச்சேப்பா அது சிங்கமாச்சே.Quote:
அந்த நட்சத்ர இரவு highlight என்னவென்றால் தலைவரின் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் .வெளுத்து கட்டி விட்டார் . குரல்வளை நொறுங்கி முகம் எல்லாம் உணர்ச்சி குவியல் ஆகி இறுதியில் பௌத்த பிட்சுவின் காலடியில் தன தலை சாய்த்து அப்படியே விழுந்து விட்டார். தலைவரின் உணர்ச்சி மயமான நடிப்பை பாராட்டி அடுத்த நாள் தினத்தந்தி மாலை முரசு தினமலர் எல்லாம் ஒரே நடிகர் திலகம் மக்கள் திலகம் புகை படங்களாக நிரம்பி வழிந்தன
உண்மை வாசு சார்
எழுதும் போது நானே கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டேன்
அந்த நாடகம் இன்னும் என் கண்ணுக்குள்ளே அப்படியே இருக்கு சார்
ரோஜாவின் ராஜா திரை படத்தில் சாம்ராட் அசோகன் நாடகத்தை திரையில் தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் நேரில் பார்க்கும் வாய்ப்பு அன்றைய இரவு எங்களுக்கு கிடைத்தது . அடுத்த நாள் செய்தித்தாள் கட்டிங் எல்லாம் இருந்தால்
பம்மலர் சார் எஸ்வி சார் நீங்கள் யாரவது பதிவு போட்டால் தான் உண்டு
இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
எங்கும் சகோதரத்துவம் விளங்கட்டும்
http://www.hindu.com/thehindu/gallery/sg/sg005.jpghttp://www.123telugu.com/content/wp-...h-Sivaji-G.jpghttp://www.oocities.org/vijayalakshm...koondukili.jpghttp://tamil.oneindia.in/img/2013/08...kamal2-600.jpg
உத்தமன் திரை படத்தில் இருந்து நடிகர் திலகம் அவர்கள்
அனார் சலீம்
'அனார் என்றால் மாதுளம் ஆசை கொண்ட மாதிடம்
சலீம் என்ற மன்னவன் சலாம் வைத்தான் உன்னிடம்
உண்மை காதல் காதல் காதல்
அந்த காதல் போயின் சாதல்'
http://www.youtube.com/watch?v=_4qQLyrynfs
இசையரசியின் குரலில் எழுபதுகளில் பல இனிமையான மிகவும் பிரமாதமான பாடல்கள் வந்தன. அப்படி ஒன்றுதான் இது.
மது அண்ணா முகனூலில் மீண்டும் ஞாபகப்படுத்திய பாடல்
சங்கர் கணேஷ் இரட்டையரின் இசை.. அவர்கள் திரையில் தோன்றி வாத்தியங்களை வாசித்த பாடல்
சுஜாதா .. அற்புதமான நடிகை .. திரையில் பத்துபேரோடு நடித்தாலும் அவர்களை தன் நடிப்பால் சிறியவர்களாக்கி விடுவார்.
இதோ பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் ( நீ ஒரு மகராணி படப்பாடல்)
http://www.youtube.com/watch?v=4PbQHySUpx4
அனைவருக்கும் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்
http://i1087.photobucket.com/albums/...1406560410.jpg
ராஜேஷ் சார்,
'சாக்ஷாத்காரா' கன்னடப் படத்தில் நாம் இசையரசி பாடிய 'ஒலவே ஜீவன சாக் ஷாத்காரா' பாடலை நீங்கள் பதித்து இப்போதுதான் முதன் முறையாக கேட்டு இன்புறுகிறேன். அற்புதம் சார். என்ன குரல் சார் அது!
ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் ஒன்று நம் சுசீலாம்மாவின் குரல்.
கன்னடம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் தெளிவாக உச்சரிக்கும் விதத்தை உணர முடிகிறது. அழகான இயற்கை சூழ் இடங்களில் அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. ராஜ்குமாரும் நன்றாகவே இருக்கிறார். ஜமுனா சற்று முற்றிய வெண்டைக் காயாய் தெரிகிறார், நமது 'அன்புச் சகோதரர்களி'ல் வரும் மாலினி தேவி(?!) போல.
பாடலின் நடுவில் அக்பரும், மார்த்தாண்டனும் வயது முதிர்ந்தாலும் கம்பீரமாகத் தெரிகிறார்கள்.(பிருத்வியின் கம்பீரம் என்னைக் கவர்ந்த ஒன்று 'மொகலே ஆசம்' படத்தின் 'pyar kiya to darna kya ' பாடலின் உச்சத்தில் மதுபாலாவைப் பார்த்து கன்னக் கதுப்புகள் துடிக்க, பார்வையை எரிமலையாக்கி கொதிப்பாரே..வாவ்! இவரும், நடிகர் திலகமும் இணைந்து ஒரு படம் செய்திருக்கலாமே என்ற ஏக்கம் என்னுள் எப்போதுமே உண்டு.)
இயற்கை காட்சிகள் கண்களுக்கு ரம்மியம்.
எனக்கு இந்தப் பாடலைப் பார்த்துவிட்டு அப்படியே நடிகர் திலகம், வாணிஸ்ரீ தூள் பரத்தும் இதே சுசீலாம்மாவின் குரலில் ஒலிக்கும் 'பால் போலவே...நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா' ஞாபகம் வந்து 'உயர்ந்த மனிதனை'ப் பார்க்க தலைவர் போல்டருக்கு வேறு ஓடி விட்டேன். சிறந்த பின்னணிப் பாடகிக்கான (1969) தேசிய விருதைப் பெற்றுத் தந்த பாடலாயிற்றே
அற்புதமான பாடலை சுகமாக அனுபவிக்கத் தந்தற்கு நன்ற ராஜேஷ் சார்.
இது போல இன்னும் வேண்டும் நிறைய.