கவிதையும் கானமும் – 8
கனிகொண்டு வந்திருக்கும் கண்ணா உந்தன்
….கருத்தினையே நானறிவேன் மயக்கி டாதே
களிகொண்டு சிரிக்கின்ற கன்றின் கண்கள்
…காட்டுகிற சேதியது அறிவேன் நானே
பனிபோலப் பூஞ்சிரிப்பு பேதை நெஞ்சை
..பாகாக உருகிவிடச் செய்யும் போதும்
கனிவெல்லாம் கொளமாட்டேன் போபோ கள்ளா..
…கன்னமிடும் உளம்தெரியும் போபோ கண்ணா..
http://www.youtube.com/watch?feature...&v=GQ_3boKlnjI
//கையில் சில கனிகளுடன் கிருஷ்ணன் குறும்பாய் நிற்க அதைகோபிகைகொஞ்சம் கோபமாய்ப் பார்க்க அவள் பின்னால் ஒரு கன்று - இந்தப் புகைப்படத்துக்கு எழுதிய பாட்டு இது//
கலைவேந்தன் சார் வாசு சார். ஹோம் வொர்க்லாம் நாளைக்குத்தான் இடுகைகளுக்கு நன்றி+ஓ
கல் நாயக்..சார் ம்ம் இன்னும் எழுதுங்கள்..பாட்டுக்கள் ஜோர்.. ஐ கேம் டு மீட்யூஇன் த மூன் லைட் . பட் நீங்க இல்லையே..!