http://i1170.photobucket.com/albums/...psd04bbf95.jpg
Printable View
http://i1170.photobucket.com/albums/...pscf50f59b.jpg
இங்கே உறங்குவது ஒரு உடலோ,ஒரு ஆத்மாவோ இல்லை,கோடானுகோடி தமிழர்களின் எண்ணங்களையும்,வாழ்க்கையையும் மாற்றிய ஒரு புனிதரின் உடல் உறங்கும் இடம்.
ஒரு உடலை துறந்து காற்றில் கலந்து இன்றும் எங்களின் சுவாசமாகவும்,உயிராகவும் வாழும் வள்ளல்,எங்கள் இதய தெய்வம்,புரட்சி தலைவர்,தமிழன் என்ற இனம் உள்ளவரை எங்களுக்குள் என்றென்றும் வாழம் எங்கள் மூச்சு காற்று அது இங்கு உறங்கும் சுவாசக்காற்று.
வாழ்க எம்.ஜி.ஆர் அவர்கள் நாமம்,
வாழ்க எம். ஜி.ஆர் அவர்கள் புகழ்.
நடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது, முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.
எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதுகுறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. "மலைக் கள்ளன்" "சிவகவி" போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.
இந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, "அம்மா! இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்" என்றேன்.
இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.
திருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். "ஏன் சார்! சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே" என்றார்.
நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்!
மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் "எப்படி?" என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.
அவர் "எப்படி?" என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த "எப்படி" வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன "எப்படி"க்கு அர்த்தம்,
"நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா!" என்கிற அர்த்தம். நேராக சர்க்யூட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.
எம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்! இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை 'சட்'டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், "டேய்! இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப்போ" என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.
திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், "உங்கம்மா எங்கே?" என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து "வணக்கம்மா" என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.
திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.
சிவாஜி சாருடன் நான் நடித்த "ஜல்லிக்கட்டு" பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், "உனக்கு ஏதாவது வேண்டுமா?" என்று கேட்டார்.
நான், "வேணாங்க! எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே! இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?" என்றேன்.
"நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா?" என்று மறுபடியும் கேட்டார்.
இதற்கும் "வேண்டாம்" என்றேன். "எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு" என்றார், உறுதியான குரலில்.
அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.
எனவே, "நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்" என்றேன்.
நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.
1987 டிசம்பர் 5-ந் தேதி "ஜல்லிக்கட்டு" படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று 'வரவில்லை' என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.
இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.
ஆனால் அவர் எப்படிப்பட்டவர்? எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். "முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்" என்பதுதான் அந்த தகவல்.
ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, "அவர் அப்பவே உங்களை பார்க்கவர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே" என்று சொல்லி விட்டார்கள்.
நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், "இன்னிக்கு மழைவர்ற மாதிரி இருக்குல்ல!" என்றார்.
நான் என்ன பதில் சொல்வது? விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. "ஆமாண்ணே" என்றேன்.
இதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, "நான் வரலைன்னா வருத்தப்படுவியா?" என்று கேட்டார்.
"வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே!" என்றேன்.
ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், "உனக்காகவர்றேன்" என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.
சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் "எப்படி?" என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த 'எப்படி' என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.
இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். "முத்தமா? தர முடியாது. குத்துவேன்" என்றார், ஜாலியாக.
நம்பியாரோ, "அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்" என்றார்.
இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.
நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.
டிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு 'உப்பு' போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த 'உப்பு' வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.
ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்".
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
THANKS LOGANATHAN SIR FOR POSTING MAKKAL THILAGAM MGR 'S STILLS FROM NAKKEERAN MAGAZINE
http://i57.tinypic.com/2j5bevn.jpg
இனிய நண்பர் திரு கலை வேந்தன் சார்
நீங்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 12 இன்று 10 நாட்களில் 11,000 பார்வையாளர்கள் - 100 பக்கங்கள் - 1000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடுகிறது . இந்த இனிய நேரத்தில் திரியை பார்வையிட்ட பார்வையாளர்கள் , பதிவாளர்கள் அனைவருக்கும் திரியின்
சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
மலேசியா, பினாங்கில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் விழா நிகழ்சிகளைப் பதிவு செய்த திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு மிக்க நன்றி. பினாங்கு வாழ் எம்ஜிஆர் ரசிகர்கள் தலைவர்பால் கொண்ட பக்தியும் அன்பும் எவருக்குமே கிடைக்காத பேறு. கடந்த ஆண்டு நடந்த விழாவில் நானும், சைதை திரு. ராஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டதும் மிகவும் மகிழ்ச்சியான தருணம். அம்மாநில மக்கள் தலைவர் மீது கொண்ட பாசத்தை அப்போது நாங்கள் கண்கூடாக காண நேர்ந்தது. சுமார் 2000 பேர் அமரக்கூடிய அந்த கூடத்தில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி ஓரத்தில் நின்றவர்கள் 500க்கும் மேல் இருக்கும். நிகழ்ச்சி 7.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 11.30க்கு முடிவடைந்தது. அது வரையிலும் ஆண்களும் பெண்களும் நிகழ்ச்சி முழுவதும் கண்டு களித்த பின்னரே கலைந்து சென்றனர். பெண்கள் நிறைய பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமல்லாது ஒவ்வொரு பாடலையும் தாங்களும் சேர்ந்து பாடினர்.
மேலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எம்ஜிஆர் குமார் அவர்கள் விழாவினை ஒருங்கிணைத்த விதம், நிகழ்ச்சியாளர்கள் சீருடை, லக்கி டிரா, விழா நிகழ்வுகள் என அனைத்தையும் திறம்பட செய்திருந்தார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சென்ற வருடம் நடந்த அந்த விழாவிலிருந்து சில காட்சிகள்:
ஆயிரத்தில் ஒருவனின் விழா மேடை
http://i59.tinypic.com/2yvkt4o.jpg
நிறைந்த அரங்கமும், உள்ளங்களும்
http://i58.tinypic.com/wtt4jn.jpg
http://i57.tinypic.com/o70z6d.jpg
http://i57.tinypic.com/21o6nb5.jpg
http://i61.tinypic.com/919a1l.jpg
விழாவிற்கு வந்திருந்த சைதை திரு.ராஜ்குமார்
http://i60.tinypic.com/25unn7r.jpg
மாணவ மாணவியரின் 'சங்கே முழங்கு' நடனம்
http://i59.tinypic.com/2pzh6x4.jpg
சீருடை அணிந்திருந்த விழா நிகழ்ச்சியாளர்கள்
http://i58.tinypic.com/mwpced.jpg
http://i60.tinypic.com/2v8odwz.jpg
எம்ஜிஆர் விருது
http://i60.tinypic.com/2m3p6dz.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
விழா அரங்கை அலங்கரித்த அங்காடிகள்
http://i59.tinypic.com/1z5nmyr.jpg
http://i62.tinypic.com/ctdoz.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Thanks for the images sir. It is possible for where they got the dress. I really want minimum two, same like wat MGR Kumar is wearing. Just now I saw the cleaner [ who comes for carpet cleaning @ home] wearing 3 three coloured checked cotton Shirt! I asked him from where he got it, from India?. He said he purchase from the shop next to my apartment.
http://i62.tinypic.com/2m3ofpl.jpg
pics courtesy - nakkeran
murasoli sornam- in makkal thilagam mgr movies.
1 உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் மஞ்சுளா
2 அடிமைப்பெண் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
3 அரசகட்டளை எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
4 ஒளி விளக்கு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
5 நம்நாடு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
6 குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
7 குமரிக்கோட்டம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
8 என் அண்ணன் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
9 கணவன் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
10 மாட்டுக்கார வேலன் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
11 ராமன் தேடிய சீதை எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
12 ஒரு தாய் மக்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
13 பட்டிக்காட்டு பொன்னையா எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
14 கலங்கரை விளக்கம் எம்.ஜி.ஆர் சரோஜா தேவி
15 தாயின் மடியில் எம்.ஜி.ஆர் சரோஜா தேவி
16 கொடுத்து வைத்தவள் எம்.ஜி.ஆர் இ.வி.சரோஜா
17 நேற்று இன்று நாளை எம்.ஜி.ஆர் மஞ்சுளா
18 இதய வீணை எம்.ஜி.ஆர் லக்ஷ்மி
MURASOLI SORNAM WITH MAKKAL THILAGAM MGR
http://i62.tinypic.com/ostssl.jpg
தலைவரின் கதாநாயகிகள்...படங்கள் அகரவரிசைப்படி,,,http://i57.tinypic.com/2j60cvb.jpghttp://i61.tinypic.com/2m61pq1.jpg
I publish my article regarding puratchi thalaivar DR.MGR in agnimalargal monthly magazine
http://i60.tinypic.com/34phvef.jpg
My articles are also available in the website. Click on
www.mgrandkpr.blogspot.com (for article written about puratchi thalaivar MGR)
www.kprgovindraj.blogspot.com (article about Spiritual thoughts only}
K.P.Ramakrishnan's scenes and total portion in Aayrathil Oruvan Movie.
https://www.youtube.com/watch?v=dR5XrV7yHq4