https://s31.postimg.cc/6ge606v4r/IMG_8895.jpg
ஏழிசை வேந்தர்
டி எம் எஸ் அய்யா
அவர்களின்
5-ம் ஆண்டு
நினைவு தினம் இன்று
Printable View
https://s31.postimg.cc/6ge606v4r/IMG_8895.jpg
ஏழிசை வேந்தர்
டி எம் எஸ் அய்யா
அவர்களின்
5-ம் ஆண்டு
நினைவு தினம் இன்று
நம்முடைய மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் எம்ஜிஆர் அவர்கள் பற்றிய ஒரு உண்மை சம்பவம்:-
உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'
'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.
உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!
அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.
அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!
இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா... அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!
அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!
'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்! 👌 👍💐 Thanks... WhatsApp Friends...
1968 -2018
பொன்விழா* நினைவலைகள் .
1968 ல் வெளிவந்த படங்களின்* ஒரு கண்ணோட்டம் .....
எம்ஜிஆர் -8
சிவாஜி - 8
ஜெய்சங்கர் -9
ரவிச்சந்திரன் -4
ஜெமினி - 3
ஏ வி எம்* ராஜன் - 2*
நாகேஷ் -2
வண்ணப்படங்கள்*
ரகசியப்போலீஸ்* 115
குடியிருந்த கோயில்*
ஒளிவிளக்கு*
தில்லானா* மோகனாம்பாள்*
திருமால் பெருமை
மூன்றெழுத்து*
வெள்ளிவிழா* ஓடிய படம்*
பணமா பாசமா*
10 திரை அரங்கில்* 100 நாட்கள்* ஓடிய படம்*
குடியிருந்த கோயில்*
100 நாட்கள்* ஓடிய படங்கள்*
எம்ஜிஆர் - 3* **
ரகசியப்போலீஸ்* 115* திருச்சி* மற்றும் சேலம்*
குடியிருந்த கோயில்* - 10*
ஒளிவிளக்கு* *மதுரை , திருச்சி* குடந்தை* 3
சிவாஜி -3
தில்லானா* மோகனாம்பாள்** சென்னை -3* மதுரை* திருச்சி* கோவை* = 6
கலாட்டா கல்யாணம்* - சென்னை* சாந்தி - கிரவுன்* *மட்டும்*
உயர்ந்த* மனிதன் - சென்னை* *வெலிங்டன்* மட்டும்*
ஜெமினி - 1
வசூலில் சாதனை - குடியிருந்த கோயில்*
சிறந்த படம் - குடியிருந்த கோயில்*
சிறந்த* நடிகர் - எம்ஜிஆர்* *- குடியிருந்த கோயில்*
எம்ஜிஆர்* 100* வது* படம்* *ஒளிவிளக்கு*
சிவாஜி* 125* வது* படம்* - உயர்ந்த* மனிதன்*
டி .எம் சவுந்தரராஜன்* நடித்து தயாரித்த படம் - கல்லும் கனியாகும்*
நாகேஷின்* சிறந்த படம் - எதிர் நீச்சல்*
100 காட்சிகள்* தொடர்ந்து* அரங்கு* நிறைந்த* படங்கள்*
குடியிருந்த கோயில்*
ஒளிவிளக்கு*...
1968
நடிகர்* சிவாஜி கணேசன்* நடித்து* வெளிவந்த படங்கள்*
திருமால் பெருமை* *-* 50 நாட்கள்* * * **
ஹரிச்சந்திரா -* படுதோல்வி*
கலாட்டா கல்யாணம்* * 100 நாட்கள்*
என்தம்பி - 50 நாட்கள்*
தில்லானா* மோகனாம்பாள்** * 100 நாட்கள்*
எங்க ஊர்* ராஜா - 70 நாட்கள்*
உயர்ந்த* மனிதன்* * *100 நாட்கள்*
லட்சுமி கல்யாணம் - படு தோல்வி*
மறு* வெளியீட்டில்* * தில்லானா* மோகனாம்பாள்* மட்டுமே* சில முறை* *வந்துள்ளது .*
எம்ஜிஆரின் சாதனை*
1968ல்* வசூலில்* சாதனை - குடியிருந்த கோயில்*
இலங்கையில்* ஒளிவிளக்கு* முதல் வெளியீட்டிலும் 161 நாட்கள் ஓடியது*
1979ல்* மறுவெளியீட்டில்* ஒளிவிளக்கு* இலங்கையில்; 100 நாடகள* ஓடியது*
ரகசிய போலீஸ்* 116* * - 100 நாட்கள்* ஓடியது*
கண்ணன் என் காதலன்* - 13 வாரங்கள்* மதுரையில்* ஓடியது*
புதிய பூமி* மற்றும்* கணவன்* 8 வாரங்கள்* ஓடியது*
தேர்த்திருவிழா* 7 வரங்களும்* *காதல்* வாகனம் 6 வாரங்களும்* ஓடியது .
மறு* வெளியீடுகளில்* எம்ஜிஆரின்* 8 படங்களும்* பல* முறை வெளிவந்து* வெற்றி பெற்றுள்ளது*
முதல்* வெளியீட்டில்* *வெள்ளிவிழா* ஓடிய படமான* பணமா பாசமா* *பின்னர்* மறு* வெளியீட்டை* காணவே* இல்லை ...👌 ☺
Thanks... Whatsapp friends...
சுகாராம் அய்யா, நண்பா
மாற்று திிரியிலே சிவா என்பவர் நம்ப திரிக்கு வந்து அவர்கள் நடிகரைப் பற்றி நம் திரியில் எழுதுவதைப் பற்றி கேட்டார்.
அதுக்கு, நீங்கள் (சிவா) புரட்சித் தலைவரைப் பற்றி உங்கள் திரியில் இழிவுபடுத்தி போட்டதற்குத்தான் நாங்கள் பதில் சொல்கின்றோம். நாங்களாக வம்பு வலிக்கவில்லை என்று நான் அவருக்கு பதில் சொன்னேன். அதற்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை. அவர்கள் திரியில் தப்பையும் திரு்த்தவில்லை.
அதோடு நிற்காமல் அதுக்கு அப்புறமும் தொடர்ந்து மக்கள்திலகத்தையும் அவரது படங்களையும் குறை சொல்லி கிண்டல் செய்யும் பொய்யான பேஸ்புக் பதிவு களை போட்டுக் கொண்டு வருகிறார்.
நான் பொய் சொல்லவில்லை சந்தேகம் இருந்தால் பாருங்கள். (மாற்றுத் திரி பாகம் 19 பதிவ 2380)
சரி அவர் திருந்திக் கொள்ள மாட்டார் என்று விட்டு விட்டேன்.
நாம்பளும் பதிலுக்கு அவர்கள் நடிகரின் தோல்விப் படங்கள் பற்றி போட வேண்டாம் என்று உங்களக் கேட்டுக் கொள்கிறேன் சுகாராம் அய்யா.
ஹரிச்சந்திரா தோல்வி படம் என்று நம்பளுக்குத் தெரியும். அதப்பற்றி சொல்லி அந்தப் படத்தைப் பத்தி தெரியாதவர்களுக்கும் தெரிய வைக்க வேண்டாம்.
என்னதான் கமலஹாசன் உருண்டு புரண்டு அழுது மூன்றாம்பிறை படத்திலே குரங்கு மாதிரி பல்டி அடிச்சு நாயகன் படத்தில் ஹாா...ஹஹாா.... ஹஹாாாா.... என்று கதறி அழுது நடிச்சாலும்
உண்மை எல்லாருக்கும் தெரியும். ரஜினிதான் சூப்பர் ஸ்டார் நடிகர். அதிக மார்க்கெட். கமலஹாசனனைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.
இதேதான் அவர்கள் நடிகருக்கும் மக்கள் திலகத்துக்கும் வித்தியாசம்.
அவர்கள் நடிகர் என்னதான் குட்டிக் கரணம் போட்டாலும் மக்கள் திலகம்தான் அவர் சினிமாவில் இருந்த வரை சூப்பர் ஸ்டார். அதிக சம்பளம் வாங்கிய நடிகர்.
இதை இப்பத்திய சூப்பர் ஸ்டார் ரஜினியே ஏ.சி. சண்முகம் கல்லூரியில் புரட்சித் தலைவர் சிலை திறப்பு விழாவில் சொன்னார். சினிமாவில் சிவாஜி கணேசனையும் அரசியலில் கருணாநிதியையும் விஞ்சி நின்று புரட்சித் தலைவர் சாதனை படைத்தார் என்று ரஜினி சொன்னார். அதயும் நம்ப திரியில் ரஜினி பேசி பேப்பரில் வந்ததை போன பாகத்தில் போட்டிருக்கின்றோம்.
உண்மை எல்லாருக்கும் தெரியும்.
எனவே, சிவா அவர்களுக்குப் போட்டியாக அவர்கள் நடிகரின் தோல்விப் படங்கள் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் ெகாள்கிறேன்.
புரட்சித் தலவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் பதில் சொல்லலாம். விட்டு விடுங்கள்.
திரு மஸ்தான் சாஹிப் நன்றி, நமக்கும் பதில் லாவணி பாட விருப்பமில்லை தான், அதற்கு அவசியமும் தேவையுமில்லை தான், 1968 ம் ஆண்டில் யாருடைய படங்களுக்கு யாருடைய படங்கள் போட்டி என்பதை ஊரும், உலகமும் அறியும்... ஆனால் மாற்று இட ரசிக கண்மணிகள் தெரிந்தும் அவை அறியாதது போல் சமுக வலை தளங்கள், நாளிதழ் இவற்றில் கீழ் நிலை மன பாங்கு கொண்டு தவறான பதிவுகளுக்கு விளக்கமளிக்கவே நண்பர்கள் பகிர்ந்த பதிவை தந்தோம்...
பாரம்பரிய வரலாற்றை கொண்ட தமிழ் நாளிதழ் வெள்ளிக்கிழமை சினிமா பகுதியில் யார் வேண்டுமானாலும், என்ன எழுதி கொடுத்தாலும் அதனை ஆய்ந்து சீர் தூக்கி பார்த்து ஆசிரியர் குழு, நிருபர் குழு கலந்து பேசி ஆராயாமல் அப்படியே செய்தி போடுவது வழக்கமாகி வருகிறது. தவறான செய்திக்கு மறுப்பு தந்தாலும் அதை போடுவதில்லை என நடந்து கொள்வது ஆரோக்கியமானது அல்லவே...
இன்று முதல் (25/5/18) குழித்துறை லட்சுமியில் (கன்னியாகுமரி மாவட்டம் )
நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஆர்ப்பரித்த டிஜிட்டல்
"எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/6pqclw.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
புதிய தலைமுறை வார இதழ் -31/5/18
http://i65.tinypic.com/2hcnebp.jpg
http://i66.tinypic.com/kbeszq.jpg
http://i63.tinypic.com/23gzprs.jpg
புதிய தலைமுறை வார இதழ் -31/5/18- வாசகர் கருத்து
http://i65.tinypic.com/qpm907.jpg
தினத்தந்தி -26/5/18
http://i67.tinypic.com/20rmfcn.jpg
http://i64.tinypic.com/epeikh.jpg
http://i65.tinypic.com/2yv6n7t.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.,ஆர், அவர்களின் "சந்திரோதயம் " வெளியான நாளில் உதயமாகி பிறந்த நாள் கொண்டாடும் திரு.சி.எஸ். குமார்., பெங்களூரு அவர்கள்
எல்லா வளமும், நலமும் பெற்று , இன்றுபோல் என்றும் பல்லாண்டு வாழ்க
என என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும் நல்வாழ்த்துக்கள் .
ஆர். லோகநாதன் .
https://s22.postimg.cc/yzys30h3l/IMG_8958.jpg
நன்றி - திரு வி பி சத்யா
ஞாயிறு (27/5/18) முதல் தூத்துக்குடி சத்யாவில் புரட்சி நடிகர் எம்.ஜி./ஆரின் "வேட்டைக்காரன் " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i67.tinypic.com/f3uu4z.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி. ராஜா .
மறைந்த பிரபல வசனகர்த்தா திரு.ஆர்.கே. சண்முகம் அவர்களின் இல்ல திருமண விழா சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தருகே உள்ள சங்கீதா ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிறு (27/5/18) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது . உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, மற்றும்
எம்.ஜி.ஆர். அபிமானிகள் சிலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .
அதன் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/nysi0y.jpg
உலகம் சுற்றும் வாலிபன் ஓர் உதாரணம்
காதலும் வீரமும் சரிவிகிதத்தில் கலந்து எடுக்கப்பட்ட ஒரு மாபெரும் வெற்றிப் படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்களில் ஓரிரு காதல் பாடல்களே இடம் பெற்றன. இடைக்காலத்தில் மூன்று பாடல்கள் வரை இருந்தன. நிறைவுக் காலத்தில் குறிப்பாக உலகம் சுற்றும் வாலிபனில் ஆறு காதல் பாடல்கள் இடம்பெற்றன.
*ஒரு பாட்டு ஒரு சண்டை என்ற சரிசம விகிதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டன. இடையிடையே சில வசனங்களும் நகைச்சுவை இடம் பிடித்தன. நிலவு ஒரு பெண்ணாகி, அவள் ஒரு நவரச நாடகம், பன்சாயி, தங்கத் தோணியிலே, உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் ஆகியவை ஜோடிப் பாடல்களாகவே அமைந்தன. “உலகம் சுற்றும் வாலிபனோடு*பயணம் வந்தவள் நான் ” என்ற பாட்டு படத்தில் இடம்பெறவில்லை. இடம் பெற்றிருந்தால் காதல் பாடல்களின் எண்ணிக்கை ஏழாகியிருக்கும்.
சண்டைக் காட்சிகளைக் கணக்கிட்டால் மனோகரோடு பெருவிரல் சண்டை, ஜஸ்டினோடு நடன அரங்கில் சண்டை, அசோகனோடு மின்சாரத் தாக்குதல் சண்டை, நம்பியாரோடு புத்தர் கோயிலில் சண்டை, நிறைவாக ஸ்கேட்டிங்கில் சுற்றி வந்து கத்திச் சண்டை, பின்பு விஷ ஊசித் தாக்குதல் என்று ஆறு சண்டைக் காட்சிகள் உண்டு.
தேடல் என்ற அடிநாதம்
காதல் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் தேடல் என்ற இழையில் அடுத்தடுத்த வண்ண மணிகளாகக் கோக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். அண்ணன் எம்.ஜி.ஆர் கொடுத்து வைத்த ஆராய்ச்சிக் குறிப்பை தம்பி எம்.ஜி.ஆர் தேடி வருவதே படத்தில் மையக்கதை. இந்தத் தேடலின்போது எதிரிகளால் ஏற்படும் தடைகளும் அவற்றை மீறி வெற்றி பெறுவதும் படத்தில் வெற்றியாக அமைந்தது. இப்படம் அம்மா, அப்பா, சொந்தம், பந்தம், சுற்றம், நட்பு என்று எதுவும் இல்லாமல் தனியொரு மனிதன் இந்த மனிதச் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் ஆராய்ச்சிக
மனிதச் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் ஆராய்ச்சிக் குறிப்புகளைத் தேடிப்பெறுவது சர்வதேசத் தளத்திலும் காலம் கடந்தும் நின்று நிலைபெற்று வெற்றிபெறும் சிறப்பியல்பைக் கொண்டதாகும். இந்தியத் தன்மையோடு தமிழ்ப் பின்புலத்துக்கு ஏற்ப எம்.ஜி.ஆர் தன் படங்களை உருவாக்குகிறார்.
உலகில் ஓர்*ஆண் ஒரு பெண்ணை வெற்றி கொள்ளத் துடிப்பது காதலாகவும் ஓர்*ஆணை வெற்றி கொள்ளத் துடிப்பது சண்டையாகவும் வாழ்க்கையில் வெளிப்படுகிறது. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கும் படைப்புக்கலைகளும் (இலக்கியம், இசை, நாட்டியம், சினிமா) காதலையும் வீரத்தையும் தமது கருப்பொருள்களாகக் கொண்டன. இக்கருத்தை ஆழமாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் காதல் காட்சிகளுக்கும் சண்டைக்காட்சிகளுக்கும் தம் படங்களில் முக்கியத்துவம் அளித்தார். அவை இன்றைய காலகட்டத்துக்கும் சலிப்பூட்டாத விஷயங்களாக இருப்பதால் இன்றும் மக்கள் எம்.ஜி.ஆர் படங்களை வெற்றி பெற வைக்கின்றனர்.
எம்.ஜி.ஆர் படங்கள் காலம் கடந்தும் நிற்பதற்கு முக்கியக் காரணம் அவற்றின் கருப்பொருள் உலகளாவியதாக இருப்பதேயாகும். என்னுடைய அமெரிக்க மாணவர்கள் எம்.ஜி.ஆர் படங்களை ஞாயிறுதோறும்*திரையரங்குக்குப் போய் பார்த்து ரசிப்பர். கதை எளிமையானதாகவும் கருப்பொருள் அனைத்துலக மனிதனுக்கும் ஏற்றதாகவும்*சுவாரஸ்யமாகவும் இருப்பதனால் தங்களால் இயல்பாக ரசிக்க முடிகிறது என்றனர். இந்தியத் தன்மையும் தமிழ் இயல்பும் பாதுகாக்கப்படுவதாலும் இந்தப் படங்களை அனைவரும் ரசிக்கின்றனர்.
அகம்-புறம்*
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத்தமிழ் இலக்கியங்கள் தம் பாடுபொருளை அகம்-புறம் என்று இரண்டாகப் பகுத்துள்ளன. தமிழின் செம்மொழித் தகுதிக்குரிய இந்தப் பண்டைய இலக்கண நூல்கள் உலகில் வேறு எந்தச் செவ்வியல் மொழியிலும் இல்லாத தனிப்பெரும் பண்பாக, மனித வாழ்க்கையின் செயற்பாடுகளுக்கு வகுத்துள்ளன. அந்த இலக்கண வகைப்படி இலக்கியங்கள் அகம், புறம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் universal எனப்படும் love and war-ஐ குறிப்பவையாகும்.
அகத்தினை
மனிதனின் அந்தரங்க வாழ்வு அல்லது காதல் வாழ்க்கை அகத்திணை எனப்படும். இதற்குச் சில இலக்கண வரைமுறைகள் உண்டு. காதல் தோன்றும் விதம் அல்லது சூழ்நிலைகள் குறித்து தொல்காப்பியர் சில வகைப்பாடுகளைத் தருகிறார். அவை, பூத் தரு புணர்ச்சி, புனல் தரு புணர்ச்சி, களிறு தரு புணர்ச்சி என்பவையாகும். புணர்ச்சி என்றால் இருவரது மனமும் ஒன்றின்பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைதல் ஆகும். இதைத்தான் தமிழ்ச்சமூகம் காதல் என்கிறது.
: பூத் தரு புணர்ச்சி
அந்தக் காலத்தில் ஒரு பெண் ஒரு பூவைக்கண்டு ஆசைப்பட்டு அதைப் பறிக்க முயன்று கிடைக்காமல் தவிக்கும்போது அவ்வழியே வந்த ஓர் இளைஞன் அவளுக்கு உதவினால் அவள் மனம் அவனிடம் காதல் கொள்ளும் என்று ஒரு சூழ்நிலையை வரையறுத்தனர்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ படத்தில் பூத் தரு புணர்ச்சி காட்சி அழகாகச் சித்திரிக்கப்பட்டு நகைச்சுவையோடு எடுத்துச் செல்லப்படும். சரோஜாதேவி நயமாகப் பேசி எம்.ஜி.ஆரை*ஐஸ் தண்ணீரில் தள்ளிவிட்டு விடுவார் அவரும் இருமி, தும்மி, “டபுள் நிமோனியா” வந்ததாக நடித்து சரோஜாதேவியைக் காதல் கனவில் மூழ்கடித்துவிடுவார். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டு இப்படத்தின் கனவுப்பாட்டு ஆகும்.
புனல் தரு புணர்ச்சி
சங்க இலக்கியத்தில் மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலப்பகுதியே காதல் எனப்படும் கூடலுக்குரியதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இன்று வரை பலரும் தேனிலவுக்கு ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, காஷ்மீர், சுவிட்சர்லாந்து போன்ற மலைப்பகுதிகளை நாடுவது அதன் சூழல் காதலுணர்வு பெருக வழி செய்வதுதான்.
மலையருவி, காட்டாறு போன்றவற்றில் குளித்து விளையாடும் பெண் திடீரென ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அப்போது அவளைக் காப்பாற்றும் இளைஞரின் மீது அவளுக்குக் காதல் தோன்றுகிறது. தமிழ்ப்பட வரலாற்றில் முதன் முதலில் அதிக பிரின்ட்டுகள் போட்ட வெற்றிப்படமான ‘மதுரை வீரன்’ படத்தில் இளவரசி பானுமதி ஆற்று வெள்ளத்தில் சிக்கியபோது காவலரான*எம்.ஜி.ஆர் அவரைக் காப்பாற்றி கரை சேர்ப்பார்.
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் பின்பு இளவரசியை கடத்திச் சென்று திருமணம் முடிப்பார். இது புனல் தரு புணர்ச்சிக்குச் சரியான எடுத்துக்காட்டு.மதுரை வீரன் கதை நாட்டுப்புறப்பாடலாகப் பாடப்பட்டு வந்து பின்பு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பு எம்.ஜி.ஆரின் அலிபாவும் 40 திருடர்களும் மற்றும் குலேபகாவலியும் இவற்றை அடுத்து தாய்க்குப் பின் தாரமும் வெளிவந்தன. அனைத்துமே எம்.ஜி.ஆருக்கு வெள்ளிவிழா படங்களாக அமைந்தன. இதைத்தொடர்ந்து அவருக்கு நாடோடி மன்னன் மாபெரும் வெற்றியை அளித்தது களிறு தரு புணர்ச்சி
களிறு என்றால் யானை ஓர் இளம் பெண்ணுக்கு மலையிலோ, காட்டிலோ கொடிய விலங்குகளால் ஆபத்து நேரும்போது அவளைக் காப்பாற்றுகிற இளைஞன்மீது அவளுக்குக் காதல் உண்டாக வாய்ப்புண்டு. இதை களிறு என்று மட்டும் கொள்ளாமல் தற்காலத்திற்கேற்றவாறு ரவுடிகளால் தொல்லை ஏற்படும்போது காப்பாற்றுகின்றவன் என்று பொருள் கொண்டு பல படங்களில் எம்.ஜி.ஆர் கதாநாயகியை ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார். காதல் மலர்ந்திருக்கிறது.
நல்ல நேரம்’ படத்தில் யானையைக் கண்டு மிரண்டு ஓடிவரும் கே.ஆர் விஜயாவை எம்.ஜி.ஆர் காப்பாற்றுவார். அவர் கார் நின்று போனதும் யானைகளைக் கொண்டு காரைக்கட்டி இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க்’ வரை கொண்டு விடுவார். இப்படம் ஹாத்தி மேரே சாத்தி படத்தின் தமிழாக்கம் ஆகும்.
‘வள்ளி திருமணம்’ என்ற கதைப்பாடல் தமிழகம் முழுவதும் மேடை நாடகமாகப் பிரபலம் அடைந்தது. இதில் முருகன் வள்ளியை மணக்க தன் அண்ணன் கணேசனை யானையாகச் சென்று பயமுறுத்தச் சொல்வார். யானையைக் கண்டு மிரண்டு வள்ளி அங்கிருந்த முருகனிடம் உதவியை நாடுவார். பின்பு அவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணமும் நடைபெறும். இந்தக் கதையும் களிறு தரு புணர்ச்சிக்கு இங்கு காலங்காலமாக இருந்துவரும் எடுத்துக்காட்டாகும்.
தமிழ்த்திரைப்படத்தில் ஆரம்பத்தில் கதாநாயகிக்கு ஒரு ஆபத்து என்றால் எம்.ஜி.ஆர் உடனே அங்கு பிரத்யட்சனமாகி அவரைக் காப்பாற்றுவது களிறு தரு புணர்ச்சி ‘கான்செப்ட்டின்’ மிச்ச சொச்சமே ஆகும்.
ஆக காதல் என்பது எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் ரசிக்கப்படுவது போல எல்லாக் காலத்திலும் ரசிக்கப்படுகிறது. எனவே, எம்.ஜி.ஆர் தன் படத்தில் சொந்தம், பந்தம் பாசம் போன்றவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் - காதல் பாடல்களும் ரசிக்கும்படி அமைந்துள்ளன.
புறத்திணை*
புறத்திணை*என்பது மனிதனின் வீரம், கொடை என்று அவளது புற (வெளி) வாழ்க்கையைப் பற்றியது. மன்னனின் வீரம் போற்றிய பாடல்கள், அவனது வீரத்தைப் புகழ்ந்து பாடும் புலவருக்கு அவன் பரிசில் அளித்த பாடல்கள் புறத்திணை என்ற பிரிவில் அடங்கின.
உலகளாவிய கருப்பொருளில் war என்பது மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. நாடு, இனம் எனப்பெரிய அளவில் நடந்தால் அது போர் . தனிப்பட்ட இரு மனிதருக்கு இடையில் நடந்தால் அது சண்டை . எம்.ஜி.ஆர் தன் படங்களில் நல்லவரைக் காப்பாற்றவும் தீயவரை ஒடுக்கவும் சண்டைக் காட்சிகளை அமைத்தார். அவற்றை ரசிக்க இன, மொழி, காலத் தடைகள் கிடையாது.
கிரேக்க இலக்கியத்தில் the trojan war பேசப்படுவதைப் போல இந்தியாவில் இதிகாசங்களில் தேவாசுரப் போர், இராம இராவண யுத்தம், மகாபாரதப் போர் ஆகியவை நல்லவருக்கும் தீயவருக்கும் இடையே நடக்கும் சண்டைகளை விளக்குகின்றன. இந்தப் போர்களின் சாராம்சம் முடிவில் நல்லவன் வாழ்வான், தீயவன் அழிவான் என்பதாகும். இதே கருத்தைத்தான் எம்.ஜி.ஆர் படங்களிலும் அவற்றில் உள்ள சண்டைக்காட்சிகளும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.ஒருவன் பத்துப்பேரை அடிப்பதா?
எம்.ஜி.ஆர் படத்தில் அவர் ஒருவரே பத்துப்பேரை அடித்து உதைத்து ஓடவைப்பது சாத்தியமா? என்று அவரிடம் கேட்டதற்கு புராணத்தில் அர்ஜூனன் இதே செயலைச் செய்யும்போது ஏற்றுக்கொள்கிறீர்களே என்றார். அந்த இதிகாச புராண நாட்டுப் புறக் கதைத் தாக்கமே எம்.ஜி.ஆர் படங்களை ஏற்றுக்கொள்ளச் செய்தது.
மேனாட்டறிஞர் ஒருவர் ஹீரோ*என்பதற்கு இலக்கணம் வகுக்கும்போது, “ஒரு மனிதனால் செய்யக்கூடியதை, ஆனால் எல்லா மனிதராலும் செய்ய இயலாததைச் செய்பவனே ஹீரோ” என்கிறார். இந்த இலக்கணம் எம்.ஜி.ஆருக்குப் பொருந்தும். அவர் செய்யும் சண்டைக்காட்சி ஒரு வீரமும் விவேகமும் உடைய மனிதனால் செய்யக்கூடிய வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கும்.
சுவரை உடைத்து உள்ளே செல்வதா?
எம்.ஜி.ஆர் படங்களில் கதவை உடைத்து உள்ளே போகும் காட்சிகள் உண்டு. இதன் உண்மைத்தன்மை குறித்து பலருக்கும் ஐயம் தோன்றுவதுண்டு. கராத்தே மணி என்பவர் சண்டைப் பயிற்சிகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். அவர் ஒரு படத்தில் சுவரை உடைக்கும் காட்சியில் நிஜமான சுவரை உடைத்துக் காட்டினார். ஆனால், இவர் சும்மா சொல்கிறார். இதெல்லாம் நடக்குற காரியமா? என்று கருதிய கேமராமேன் கேமராவை இயக்காமல் இவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இதை கராத்தே மணி ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஆக சுவரை உடைப்பதும், கதவை உடைப்பதும் ஒரு மனிதனால் செய்யக்கூடியதுதான் என்பது நிரூபணமாகிவிட்டது. கராத்தே மணி மாதிரி ஒருவர் செய்யக் கூடியதைத்தான் எம்.ஜி.ஆர் தனது படங்களில் செய்திருக்கிறார். அந்த வகையில் அவர் ஹீரோதான்... நன்றி, தமிழ் இலக்கியம் இணைய குழு...
தமிழ் இலக்கிய உலகில் மக்கள் திலகம், புரட்சி நடிகரை புகழ்ந்து வரைந்துள்ளது போல் வேறு எந்த நடிகரையாவது செம்மை படுத்தி எழுதியுள்ளார்களா?! நண்பர்களே சொல்லுங்கள்👍 👌
நண்பர்கள் வழியே வந்துக் கொண்டிருக்கும் தகவல்கள், சென்னை அரங்கில் நடிகரின் பழைய படத்துக்கு வழக்கம் போல ஆள் பிடிக்கும் வேலை, டிக்கெட் 'வாங்கி' கிழிக்கும் கையாலாகாத ஈன செயல்களை செய்வதாக செய்தி... இது போன்ற கீழ் தரமான காரியங்களை இந்த ஜென்மங்கள் விட வழியே இல்லை போலும்😊