கோபால் சார்
மிகவும் எளிமையாக அதே சமயம் இனிமையாக இரும்புத்திரை, பாபு , சவாலே சமாளி என்று triple action படங்களை காட்டி என்னை கவர்ந்து விட்டது உங்கள் படைப்பு
Printable View
கோபால் சார்
மிகவும் எளிமையாக அதே சமயம் இனிமையாக இரும்புத்திரை, பாபு , சவாலே சமாளி என்று triple action படங்களை காட்டி என்னை கவர்ந்து விட்டது உங்கள் படைப்பு
ரவி சார்
நீங்கள் தான் உண்மையான சுனாமியாக பந்த பாசம் படத்தை அலசி பிச்சு உதறி விட்டிர்கள் . இந்த மாதிரி என்னால் எழுத , அலச முடியாது . உங்கள் பதிவின் standard யை பார்க்கும் பொது தான் தெரிகிறது நான் இன்னும் உழைக்க வேண்டும் என்று .
இனி அந்த படத்தை பற்றி எழுத சில மாதங்கள் என் வருடங்கள் கூட தேவை படும் காரணம் உங்கள் எழுத்தின் வீச்சு . நீங்கள் எழுதி உள்ளதை பார்த்து நான் இடும் பதிவை பாரட்ட வார்த்தை இல்லை .படத்தின் photos ஸ்பெஷல் தேங்க்ஸ்
SUPERB, FABULOUS
ரவி சார்
நீங்கள் தான் உண்மையான சுனாமியாக பந்த பாசம் படத்தை அலசி பிச்சு உதறி விட்டிர்கள் . இந்த மாதிரி என்னால் எழுத , அலச முடியாது . உங்கள் பதிவின் standard யை பார்க்கும் பொது தான் தெரிகிறது நான் இன்னும் உழைக்க வேண்டும் என்று .
இனி அந்த படத்தை பற்றி எழுத சில மாதங்கள் என் வருடங்கள் கூட தேவை படும் காரணம் உங்கள் எழுத்தின் வீச்சு . நீங்கள் எழுதி உள்ளதை பார்த்து நான் இடும் பதிவை பாரட்ட வார்த்தை இல்லை .படத்தின் photos ஸ்பெஷல் தேங்க்ஸ்
SUPERB, FABULOUS
ரவி,
பந்தபாசம் அலசல் மிக நன்று. கட்டுரை சார்ந்த நிழலோவியங்களும் கண்களை ஈர்க்கின்றன. ஒரு சிறு திருத்தம். இன்று உழவர் திருநாள் இல்லை. இன்று தொழிலாளர் தினம். அது சரி உழவர்களும் தொழிலாளர்கள்தானே என்கிறீர்களா.
கோபால்,
பாபு படத்தைப் பற்றிய தங்களது கண்ணோட்டம் களிப்பை உண்டாக்குகிறது.
ரவிகிரண்சூர்யா,
எனக்காக ஒரு அருமையான பாடல் தந்துளீர்கள். நன்றி நவில்கிறேன்.
முரளி அவர்களே!
தாங்கள் என்னை தவிர்த்து வரவேற்காவிடினும் தங்கள் எழுத்துக்களை என் நெஞ்சம் என்றுமே வரவேற்கும். தங்களின் அந்த நாள் ஞாபகங்களுக்கு என் அனந்தகோடி வந்தனங்கள்.
நல்ல பங்களிப்பாளர்கள். அனைவர்க்கும் அன்பு பாராட்டுக்கள்.
கோபால்,
என்னுடன் பேசிய நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் எந்த காரணத்தினால் அவர்களால் ஒரு திரிக்கு மேல் போக முடியவில்லை என்பதையும் விளக்கினார்கள். அதை அப்படியே திரியில் பதிவு செய்வது அவர்களையும் அவர்கள் போன்ற பலரையும் தர்மசங்கடப்படுத்தும் என்ற காரணத்தினால் நான் அதை எழுதுவது உசிதமாக படவில்லை. நான் முதலில் சொன்ன கருத்தில் அதாவது சில விஷயங்களுக்கு தனிப்பட்ட திரி தேவைப்படுகிறது என்பதில் இப்போதும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. பாடல்கள் பலவிதம் தலைப்பில் எழுதப்படும் பாடல்களின் பின்னணி தகவல்கள் அனைத்தும் எல்லாக் காலத்திலும் பலருக்கும் பயன்படும். அதை மெயின் திரியில் தேடாமல் உடனே எடுத்துக் கொள்ளும் வசதிக்குத்தான் தனி திரி.
இரும்பு திரை, சவாலே சமாளி, பாபு என்ற முக்கனிகளும் சுவை. அதிலும் சவாலே சமாளி மற்றும் பாபு அனைவருக்கும் பிடிக்கும். காரணம் இங்கே பங்களிப்பாளர்கள் அனைவரும் அந்தப் படங்கள் வெளியான கால கட்டத்தில் சிறு வயது ரசிகர்களாக இருந்து படத்தை ரசித்தவர்கள்.
அன்புடன்
ரவி, ஒரு புதிய format ல் பந்தா பாசத்தை அலசியிருக்கிறீர்கள். முழுமையாக படித்து விட்டு சொல்கிறேன்.
சிவா சார்,
இலங்கை விநியோகஸ்தர் யார், அவர் எந்தெந்த திரையரங்குகளை சொந்தமாக வைத்திருந்தார், என்னென்ன படங்களை விநியோகித்தார் என்பதையெல்லாம் தெள்ள தெளிவாக விளக்கியதன் மூலம் பல நாள் மனதில் நெருடிக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. அதே போல் நான் முன்னரே குறிப்பிட்டேன். நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளைப் படங்கள் கூட மற்றவர்களின் கலர் படங்களை சர்வ சாதாரணமாக முறியடித்து முன்னேறியிருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக படிக்கும் போது மிக மிக சந்தோசம். தொடருங்கள்!
ராமதாஸ் அவர்களே,
நீங்கள் புதிய வரவாக உள்ளே நுழைந்ததையும் தமிழால் நடிகர் திலகத்திற்கு புகழ் மாலை சூட்டியதையும் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன். தனிப்பட்ட முறையில் உங்களை பெயர் சொல்லி வரவேற்கவில்லை என்பதற்கு காரணம் கடந்த மூன்று நாட்களாக தனிப்பட்ட பதிவுகள் எதையும் போடவில்லை. முதல் நாள் பாடல்கள் பலவிதம் பகுதியில் தாழையாம் பூ முடிச்சு பாடலை மீண்டும் தேடி எடுத்து align செய்து இரண்டு திரிகளிலும் பதிவு செய்யும் வேலையே பெரிய வேலையாக இருந்தது. நேற்று அந்த நாள் ஞாபகம் பகுதியில் பதிவிட்டிருந்ததை மீண்டும் மெயின் திரியில் பதிவு செய்யும் வேலை மற்றும் புதிய பதிவு ஒன்றை இடும் வேலையும் நேரத்தை எடுத்துக் கொண்டது. நீங்கள் பார்த்தீர்களென்றால் மேலே குறிப்பிட்ட பதிவுகள் அனைத்தும் இரவு 1 மணி சமயத்தில்தான் பதிவு செய்திருப்பேன். இதை எழுதும் இந்த நேரம் கூட நடு நிசியை தாண்டிய சமயம்தான். ஆகவே காரணம் வேறொன்றுமில்லை. உங்களை தவிர்க்கும் எண்ணமும் எனக்கில்லை. இன்னும் சொல்லப் போனால் புதிய ஆட்கள் வருவதை பெரிதும் விரும்புபவன் நான். ஆகவே உங்கள் வருகையும் உங்கள் சிவாஜி சேவையும் தொடரட்டும்.
அன்புடன்
Director K S Ravikumar with Nadigar Thilagam and Rajnikanth
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...36320801_n.jpg
Ravikumar directing NT
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...24941761_n.jpg
At the Avvai Shanmugi Shoot spot
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...29025517_n.jpgQuote:
UNFORGETTABLE MOMENTS !!
With Superstar Chevelier Sivaji Ganesan & Padma Bhusan Kamal Haasan
A picture during the shooting of Avvai Shanmugi (Bhamane Satyabhamane)
Not many know that the character of 'Vishwanathan Iyer' was initially scripted for Sivaji Ganeshan keeping in mind his style. But unfortunately due to heath issues Sivaji Sir couldn't essay this role. Hence Gemini Ganeshan Sir was roped in.
Gemini Ganeshan Sir did great justice to the role.
After his treatment Sivaji Sir came to visit us on this sets. What encouragement for the great icon! — with Sivaji Ganesan and Kamal Haasan.
Courtesy: KS Ravikumar's facebook page: https://www.facebook.com/iamksravikumar?fref=photo