திரு.வாசுதேவன் சார்,
திருச்சி மாவட்ட நிகழ்சிக்கு தாங்கள் அளித்த வாழ்த்துக்களுக்கு நன்றி.
சொர்க்கம் சண்டைக் காட்சி, ஓணம் பண்டிகைக்கு- தச்சோளி அம்பு தலைவர்மூலம் வாழ்த்து - அருமை.
திரு.வாசுதேவன் சார்,
திருச்சி மாவட்ட நிகழ்சிக்கு தாங்கள் அளித்த வாழ்த்துக்களுக்கு நன்றி.
சொர்க்கம் சண்டைக் காட்சி, ஓணம் பண்டிகைக்கு- தச்சோளி அம்பு தலைவர்மூலம் வாழ்த்து - அருமை.
அற்புதமான விவரங்கள், நிகழ்ச்சிகள் என்று எல்லோரும் தந்து கொண்டே இருக்கிறீர்கள். என்னால் அலுவலகப்பணியில், இடையிடையே எப்போதாவது வந்து படித்து செல்ல முடிகிறதேயன்றி பங்களிக்க முடியவில்லை. மன்னிக்கவும். KCSekhar சார் என்னுடைய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் தங்களுக்கு. பல நாட்கள் கழித்து நீண்ட நேரம் செலவழித்து ....
ஞாயிறு (26/08/12) இரவுக்காட்சியாக 'சன் லைப்' - ல் 'பலே பாண்டியா' பார்க்க நேர்ந்தது. இந்த படத்தைப் பற்றி பலர் அங்குலம் அங்குலமாக பல விதத்தில் அலசிவிட்டார்கள் இங்கே. எண்ணற்ற முறை நான் பார்த்து இருந்தாலும் இம்முறை பார்த்தபின் என் எண்ணத்தில் எழுந்தவைகள் இதோ...
திரு B. R. பந்துலு இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். குறிப்பாக கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனது அழுத்தமான முத்திரைப் படங்களை கொடுத்தவர். நடிகர் திலகத்துடன் இணைந்து பிரமாண்டமான, வித்தியாசமான, அற்புதமான பல படங்களை கொடுத்தவர். நடிகர் திலத்தின் முத்திரைப் படங்களாகவும் அவை அமைந்திருந்தன. இருவரும் பிரிந்து சென்றது தமிழ் திரையுலகிற்கே பேரிழப்பு.
பதினோரு நாட்களில் இப்படியொரு உயர்தரமான படத்தை கொடுக்க இப்படியொரு குழுவால் மட்டுமே சாத்தியம். (நடிகர் திலகம், நடிக வேள், தேவிகா, மெல்லிசை மன்னர்கள், கவியரசர், B. R. பந்துலு). நடிகர் திலகத்தின் நடிப்பை இந்த படத்தில் என்று இல்லை, எந்தப் படத்திலும் அற்புதம், அட்டகாசம், பிரமாதம், ஆஹா, ஓஹோ என்று நான் காட்சிவாரியாக சிலாகித்து சொல்வதில்லை. ஏனென்றால் 'சூரியன் கிழக்கில் தோன்றுகிறது. மேற்கில் மறைகிறது' என்ற கூற்றுகளில் எந்த தகவலும் (Information) இல்லையோ அது போல அந்த கூற்றுகளிலும் எந்த தகவலும் இருக்காது. இருந்தாலும் பலரைப்போல் என் மனதை மிகவும் கவர்ந்த சில காட்சிகள்... குறும்பு கொப்பளிக்கும் காதல் காட்சிகள் (தேவிகா அண்ணி ரசிகர் மன்றம் சாட்சி), 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சிகள், அதுமுடிந்து மாமனாரை கண்டு அஞ்சுவது, அவரும் கபாலியும் வேறு வேறு ஆட்கள் என காணுவது, மற்றும் படத்தின் இறுதி காட்சிகளில் ரவுடி மருதுவும், விஞ்ஞானி சங்கரும் பாண்டியன் போல வேடம் போடுவதும் நகைச்சுவைக்கு உச்சக்கட்டங்கள். ரவுடி மருது, கபாலியிடம் 'பாஸ்', 'பாஸ்' என்றே அழைப்பதுவும், மதராஸ் தமிழிலேயே உரையாட வந்து தவிப்பதுவும், விஞ்ஞானி சங்கர் ஆங்கிலம் கலந்த கீச்சுத்தமிழில் உரையாட வருவதை தவிர்த்து பாண்டியன் போல இயல்பான தமிழ் பேச முயற்சி எடுப்பதையும் பின்னி எடுத்திருப்பார். படம் பார்ப்பவர்களுக்கு எந்த கதாபாத்திரம் எப்படி மாற முயற்சிக்கிறது என்பது தெளிவாக இருக்கும் என்பதால் நகைச்சுவை உற்சாகம் கரைபுரண்டோடும். இதற்கு பின்னர் வந்த பல படங்களில் கூட பலர் செந்தமிழில் உரையாடி இருப்பார்கள். ஆனால் 1962-ல் வந்த இந்தப்படத்தில் எல்லோரும் (ரவுடி மருது - மதராஸ் தமிழிலும், சங்கர் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழிலும்) இயல்பான தமிழில் பேசி இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்கள். உடன் வந்து கலக்கிய நடிகவேளை நான் குறிப்பிடாவிட்டால் எனது எண்ணவோட்டங்கள் முடிவு பெறாது. ஆனால் இவரை சிலாகித்து பேசுவதிலும் தகவல் இராது. ஆமாம் நடிகர் திலகமும், நடிக வேளும் மற்ற சிலரும் தங்கள் திரைப்படங்களில் சரியாக நடிக்கவில்லை என்று சொன்னால்தான் பிரமாண்டமான தகவல் இருக்கும். நகைச்சுவைக்கேற்ற நல்ல கதைதான். Logic-உம் சரியாகவே இருந்தது ஆனால்... பாலாஜி, தேவிகாவிற்கு முறை மாமன்/மாப்பிள்ளை. எனவே பாண்டியனுக்கு அண்ணன்/தம்பி முறை. அவரே பாண்டியனின் தங்கை வசந்தாவை மணப்பது சற்று சிரமமாய் இருந்தது. யாரோ அங்கே என்னை முறைப்பது தெரிகிறது. நிறுத்திகொள்கிறேன்.
இந்த படத்தின் பாடல்கள் தொலைக்காட்சி மற்றும் FM ரேடியோ நிகழ்ச்சிகளில் எங்கேயாவது ஒளிபரப்பாகிகொண்டேதான் இருக்கின்றன. பார்த்தால் அல்லது கேட்டால் சற்றே நிறுத்தி கண்டு அல்லது கேட்டு விட்டுத்தான் செல்ல முடியும் 'வாழ நினைத்தால்', 'அத்திக்காய் காய்', 'ஆதிமனிதன் காதலுக்குப்பின்', 'நான் என்ன சொல்லிவிட்டேன்', 'நியே உனக்கு என்றும்', 'யாரை எங்கே வைப்பது' போன்ற சாகா வரம் பெற்ற பாடல்களைப் பற்றி சொல்ல நான் இன்னும் பல கற்றுக்கொள்ளவேண்டும்.
'பலே பாண்டியா' என்ற சொற்றொடர் மஹாகவி பாரதி பிரயோகித்ததாக புதிய 'பலே பாண்டியா' (2010) திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த் சந்திரசேகர் சொல்லி இருந்தார். இந்த புதிய படத்திலும் பாண்டியன் என்ற கதாநாயகன் படத்தின் துவக்கத்தில் தற்கொலை செய்ய முயற்சி செய்வது போன்ற காட்சி இருக்கும். அது மட்டுமே இரு படங்களுக்கும் தொடர்பு. மற்றபடி இது மறுவாக்கம் (ரீமேக்) அல்ல. பழைய புகழ் பெற்ற படங்களின் பெயர்களை வைக்காதீர்கள் என்று என்ன சொன்னாலும் தற்போதைய திரைப்படத்துறையினர் கேட்பதாகவே இல்லை. படத்தின் பெயரிலுருந்தே copy துவங்குகிறது. 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சியை 'உள்ளதை தா' என்று அள்ளி கபளீகரம் செய்திருந்தார்கள். தனது திரைப்படங்களை (தங்கமலை ரகசியம், ஸ்கூல் மாஸ்டர் (கன்னட) ) மாற்று மொழிகளில் அந்த மொழிகளின் பிரதான நடிகர்களை வைத்து இயக்கிய திரு. B. R. பந்துலு இந்த படத்தை மற்ற மொழிகளில் எடுத்தாரா என தெரிந்தவர்கள் யாரேனும் கூறினால் நல்லது.
சமீபத்தில் கூட யாரோ ஒருவர் நடிகர் திலகத்தின் படங்களை அறிமுகம் செய்யுங்கள். அவருடைய 'கனத்த' கதையம்சம் நிரம்பிய படங்களை பின்பு பார்க்கிறேன். அதற்கு முன் 'light-hearted' படங்களை அறிமுகம் செய்யுங்கள் என்றபோது மற்றொருவர் இந்த படத்தைப் பாருங்கள் என்று கூறியது மிகவும் பொருத்தமானது. நடிப்பின் பாடங்களைக் கற்றுகொள்ள நல்லதோர் நகைச்சுவைப் படம்.
அன்புடன்.
Dear Kalnayak sir,
A very wonderful nerration about the great movie 'Bale Pandiya'.
For many people it will be kook like a very light movie, but it is very very tough one to differenciate each and every three rolls by NT, and in fact the two different rolls of M.R.Radha too. In between Balaji also done a very nice roll of comedy mixed. I think Balaji didnt do any such rolls in any other movies.
And no need to say about the freshness of "Anni" in all scenes, and the hard work of MSV-TKR.
innum eththanai pEr ezuthinaalum indha padaththaip patri ezuthi mudikka mudiyAdhu.
Thanks a lot Kalnayakji...
HAPPY ONAM TO ALL !!!
http://i1110.photobucket.com/albums/...laar/4-2-1.jpg
கல்நாயக் சார்,
'பலே பாண்டியா' பற்றிய தங்களின் குறுஆய்வு 'பலே' கல்நாயக் என்று சபாஷ் போட வைக்கிறது. முன்பொருமுறை நான் தங்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தாங்கள் முடிந்தவரை பதிவுகள் அளிப்பதாகக் கூறியிருந்தீர்கள். அதேபோல் இப்போது சொன்னபடி நல்ல பதிவளித்துள்ளீர்கள். தொடரட்டும் தங்கள் பணி.
கார் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. மேடான பகுதியில் இருந்து சற்று சரிவான பாதையில். எதிர்பாராதவிதமாக காரின் டயர் பஞ்சராகி கார் மெதுவாக நிற்கிறது. உள்ளே அமர்ந்திருக்கும் ஜெனரல் ஆப்ரஹாமிடம் கார் டிரைவர் வண்டியை விட்டு கீழே இறங்கி வந்து நிலைமையைச் சொல்கிறார். உடனே ஸ்டெப்னி மாற்றி விடுவதாகவும் கூறுகிறார். நிலைமை தெளிவாகப் புரிகிறது. 'சரி' என்று தலையசைவில் ஒரு சம்மதம். அந்த இடைப்பட்ட ஒரு சில வினாடியில் அழகாக இடது கைவிரல்களை மடக்கி வாயருகே கொண்டு சென்று சற்றே வாயைப் பிளந்து (கோட்டுவாய் விடுதல் என்பார்களே!.. அது போல) சிறு ரிலாக்ஸ். வலது கை விரல்கள் தன்னையுமறியாமல் சிறு அசைவுகளில் கணநேர களிநடம் புரிகின்றன. நேரான நேர்கொண்ட பார்வை. டிரைவரின் போதாத காலம் ஸ்டெப்னியிலும் காற்றில்லை. பயந்து போய் மிரட்சியுடன் மெதுவாக ஆப்ரஹாமிடம், "அய்யா... ஸ்டெப்னியிலும் காற்று இல்லீங்க...என்று நடுக்கத்துடன் டிரைவர் கூற, அதுவரை நேர்க்கொண்டிருந்த பார்வை வன்மத்துடன் டிரைவரின் மேல் திரும்புகிறது. டிரைவரை மேலும் கீழுமாக நோக்கும் சுட்டெரிக்கும் சூர்யப் பார்வை. ("ஏதோ டயர் பஞ்சராவது சகஜம்... இயற்கை... பொறுத்துக் கொண்டேன். 'ஸ்டெப்னி மாற்றுகிறேன்' பேர்வழி என்றாய்... சரி... செய்ய வேண்டியதுதான்...ஆனால் ஸ்டெப்னியிலும் காற்று இல்லை என்று வந்து என்னிடம் தைரிமாகச் சொல்கிறாய்...உன் பொறுப்பற்ற தன்மைக்காக நான் காரில் அனாவசியமாக தேவையிலாமல் உட்கார்ந்திருக்கவா?... நான் யார்! என் ஸ்டேட்டஸ் என்ன! ஸ்டெப்னியைக் கூட கவனியாமல் இந்த ஆர்மி ஜெனரலிடம் கார் டிரைவராக வேலை பார்க்க உனக்கு இனியும் யோக்கியதை இருக்கிறதா?") இவ்வளவு விஷயங்களும் அந்த ஒரு பார்வையில், அந்த ஒரு வினாடியில் டிரைவருக்கு உணர்த்தப்பட்டு விடும். இதுவரை பின்னணி இசை இல்லாமல் சென்று கொண்டிருக்கும் காட்சி, இப்போது டிரைவருக்கு ஏற்படப் போகும் ஆபத்துப் பின்னணியை இசைப் பின்னணி மூலம் அற்புதமாக எடுத்துக் காட்ட ஆரம்பிக்கிறது. (நன்றி சங்கர் கணேஷ்) கார் கதவைத் தானே திறந்து அந்த ரோட்டின் சரிவில், உச்சி வெயிலில், கோபத்தின் உச்சத்தில் பேன்ட் பாக்கெட்டுக்களில் தன் இரு கைகளையும் நுழைத்த வண்ணம் அமைதியான கொந்தளிப்புடன் ஆர்ப்பாட்டமாக, கனகம்பீரமாக ஜெனரல் ஆப்ரஹாம் நடந்து வரும் அந்த ஒரு நடையிலேயே நமக்குப் புரிந்து விடுகிறது அந்த டிரைவரின் கதி அதோகதிதான் என்று.
ஜெனரல் ஆப்ரஹாம்- நடிப்புலகச் சக்கரவர்த்தி.
ராஜாங்கம் நடத்திய காவியம்- 'பந்தம்'
அண்மையில் தொலைக்காட்சியில் பார்த்து செயல் இழந்து போய் நான் உறைந்து நின்ற காவியக் காட்சி.
மேற்கண்ட குறிப்பிட்ட அந்த அருமையான காட்சியை நீங்களே பாருங்களேன். நம் அனைவருக்காகவும் தரவேற்றி இதோ அந்த ஒரு சில வினாடி காவிய சீன்.
http://www.youtube.com/watch?v=SmRBJ...yer_detailpage
still from net.
http://i45.tinypic.com/spkp6e.jpg
நடிகர் திலகத்தின் பிறந்த நாளை யொட்டி சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கௌரவிக்கப் படும் சாதனையாளர்கள் பட்டியலில் இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். விவரம் விரைவில்.
Dear Kalnayak sir,
Thanks for your wishes.
Dear Vasudevan sir,
Thanks for your post with very good scene in PANDHAM.
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 4
"பராசக்தி" கணேசன் பற்றி கலைவாணர்
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : போர்வாள் : 30.12.1952
[திராவிட முன்னேற்றக் கழக சார்புடைய பருவ இதழான 'போர்வாள்' இதழின் "பராசக்தி" வெற்றிவிழா மலரிலிருந்து...]
http://i1110.photobucket.com/albums/...GEDC6544-1.jpg
30.8.2012 : கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 55வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் வாசுதேவன் சார்,
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசும் வாய்களுக்கு பூட்டு போடுவது போல் பந்தம் திரைப்படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்றை பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். 80களுக்கு பிறகு நடிகர் திலகம் ஒன்றுமில்லை என்று மேம்போக்காக பேசுபவர்களுக்கும், அத்தகைய பேச்சை ஆதரிக்கும் நம்மிடையே உள்ள நாரதர்களுக்கும் சரியான சாட்டையடி இந்தக் காட்சி. இது போல் 80களுக்குப் பிறகு வெளி வந்த நடிகர் திலகத்தின் இன்னும் பல படங்களிலிருந்து காட்சிகளைப் பதிவேற்றத் தங்களால் தான் முடியும். தொடருங்கள் உங்கள் பணியை. சுழற்றுங்கள் உங்கள் சாட்டையை வேகமாக. இனிமேலும் இவர்களெல்லாம் வாயைத் திறக்கத் துணிவார்களா என்ன.
அன்புடன்
ராகவேந்திரன்
டியர் பம்மலார்.
சரியான தருணத்தில் சரியான நேரத்தில் சரியான ஆவணங்களைத் தருவதில் தங்களை மிஞ்ச ஒருவர் உளரேல். கலைவாணர் நினைவு நாளையொட்டி நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடை கருத்துக்கள் கொண்ட ஆவணத்தைப் பதிவிட்டு மேலும் மேலும் தங்கள் சிறப்பினை கூட்டிக் கொண்டே போகிறீர்கள். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
kalaivaanarkuL irukkum kavignarukku thaan muthal idam. sivaji ayyavin thiramaiyai andre kande theerka tharisi
நகைச்சுவை அரசர் 'கலைவாணர்' திரு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 55-ஆவது ஆண்டு நினைவு தினம். (30.8.2012)
நடிகர் திலகம் கலைவாணருக்கு அளிக்கும் நிஜமான நினைவாஞ்சலிப் புகழாரம்.(முதன் முறையாக)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rJltHpUv89A
'ராஜா ராணி' காவியத்தில் 'ராஜா'வும், கலைவாணரும்.(30.8.2012)
http://i1087.photobucket.com/albums/..._063493221.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
கலைவாணரின் நினைவாக
'அம்பிகாபதி' திரைக்காவியத்தின் புகழ் பெற்ற, கலைவாணர் மற்றும் மதுரம் அவர்களின் எவர்க்ரீன் காமெடி பாடல்.
"கண்ணே! உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா?"
http://www.youtube.com/watch?v=et6AIbTxS7c&feature=player_detailpage
'சித்ராலயா' கோபு
http://i1087.photobucket.com/albums/...1355/1-128.jpg
'சித்ராலயா' கோபு கலாட்டா கல்யாணம் காவியம் உருவானதைக் கூறுகிறார்.
http://i1087.photobucket.com/albums/...1355/2-101.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/5-47.jpg
NTFANS - சார்பில் இன்று 01.09.2012 மாலை 5.0 மணிக்கு பத்மினி பிக்சர்ஸ் திரைக்காவியம், கப்பலோட்டிய தமிழன் திரையிடப் படுகிறது. இடம் ருஷ்யக் கலாச்சார மய்யம். உறுப்பினர்களுக்கு அனுமதி.
உறுப்பினரல்லாதோர் இன்றே உறுப்பினராகலாம்.
http://www.hindu.com/thehindu/gallery/sg/sg025.jpg
டியர் வாசுதேவன் சார்
சித்ராலயா கோபு சாரின் சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரையினை வெளியிட்டு அசத்துகிறீர்கள். அரிய தகவல்கள் அடங்கிய இது போன்ற பதிவுகளை அளிக்கும் வல்லமை படைத்தவர்கள் பம்மலாரும் தாங்களும். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் ஆளுமை
இன்று ஒரே நாளில் கிட்டத் தட்ட 7 அலைவரிசைகளில் நடிகர் திலகத்தின் படங்கள்
பாலிமர் டி வி - ஆனந்தக் கண்ணீர் - பிற்பகல் 1 மணி
மெகா டி வி - தீபம் - பிற்பகல் 1.30 மணி
ராஜ் டிவி - சாதனை - பகல் 1.30 மணி
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் - ஊரும் உறவும் - பிற்பகல் 1 மணி
கே டிவி - என் ஆச ராசாவே - மாலை 4.30 மணி
வசந்த் டிவி - கந்தன் கருணை - காலை 10 மணி
முரசு டி வி - தெனாலி ராமன் - மாலை 7 மணி
nt rocks
டியர் ராகவேந்திரன் சார்,
தகவலுக்கு நன்றி! "பார்த்தால் பசிதீரும்" பட வெளியீட்டின்போதே விண்ணப்பத்தினை அளித்துள்ளேன். பரிசீலனை செய்து தகவல் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2, 3 திரைப்படஙள் திரையிடப்பட்டபோதும் தகவல் இல்லை. கட்டணம் யாரிடம் செலுத்தவேண்டும் என்ற விபரம் தெரிவிக்கவும்.
நன்றி.
அன்பு பம்மலார் சார்,
ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக தாங்கள் அளித்துள்ள தலைவரின் புகைப்படம் சூப்பர்.
நடிகர் திலகம் பற்றி கலைவாணர் அவர்கள் 'போர்வாள்' ("பராசக்தி" வெற்றிவிழா மலர்) இதழில் குறிப்பிட்டிருந்த கட்டுரையும், அவரே நடிகர் திலகத்தைப் பாராட்டி தயாரித்து எழுதியிருந்த அந்த ஜனரஞ்சகக் கவிதையும் கலக்கலோ கலக்கல். இப்பேர்ப்பட்ட அரிய பொக்கிஷங்களை அள்ளித் தர தங்களைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. சுயலாபமற்ற தங்களின் அர்ப்பணிப்பு சேவைக்கு எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது. இந்த அரிய பதிவு ஒன்று மட்டுமே போதும் காலம் முழுவதும் தங்கள் பெருமையைப் பறைசாற்ற.
ஆனந்தம் கலந்த நன்றிகளுடன்
டியர் ராகவேந்திரன் சார்,
'பந்தம்' மற்றும் 'கலாட்டா கல்யாணம்' பதிவுகளுக்கான தங்களின் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு உள்ளம் குளிர்ந்த நன்றிகள். இன்று ஏழோடு முடிந்து விடாமல் எட்டாகத் தொடர்கிறது நடிகர் திலகத்தின் ஆதிக்கம். மெகா 24 தொலைக்காட்சியில் இன்று மதியம் இரண்டு மணிக்கு சூப்பர் காமெடிச் சித்திரம் "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி". என்றும், எப்போதும், எங்கும், எதிலும், நெம்பர் ஒன் ராஜா நம் எங்கள் தங்க ராஜா.
டியர் சந்திரசேகரன் சார்,
பதிவுகளுக்கான தங்கள் உயரிய பாராட்டிற்கு என் மனமுவந்த நன்றி! சமூக நலப்பேரவை சார்பாக தஞ்சை ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பஞ்சலோக சுவாமி -அம்பாள் சிலை செய்யப்பட்டு வழங்கப்பட்டது பேரவை அமைப்பு நலப் பணிகளில் மட்டுமல்லாது இறைப்பணியிலும் சளைத்ததல்ல என்பதைக் காட்டுகிறது. பாராட்டுக்கள்.
அன்பு மாடரேட்டர்களுக்கு,
இந்திய நேரப்படி மதியம் மூன்று மணியிலிருந்து கிட்டத்தட்ட ஐந்து மணிவரை திரியில் போஸ்டிங் போடுவது மிக்க சிரமமாய் உள்ளது. நொடிக்கொரு தடவை Log in செய்யச் சொல்லி கேட்கிறது. எத்தனை முறை Log in செய்தாலும் திரும்பத் திரும்ப Log in செய்யச் சொல்கிறது. நீண்ட நாட்களாக இந்தப் பிரச்னை உள்ளது. ஆவன செய்யுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள வாசுதேவன் சார்,
'பந்தம்' திரைக்காவியத்தின் அருமையான காட்சியொன்றினைப் பதிவிட்டு சிறப்புச்சேர்த்துவிட்டீர்கள். ஒரு பார்வை ஓராயிரம் கதைபேசும் என்பதற்கு இக்காட்சி எடுத்துக்காட்டு. அந்தப்படத்தில் தலைவருக்கு வசனங்கள் மிகக்குறைவு. எல்லாமே காட்சிவழி மொழிகள்தான். அதுபோலத்தான், அதே டிரைவரை 'சர்ச்'சில் சந்திக்கும்போது, 'டேவிட்,என்ன வேலை செய்றே?' என்று கேட்க, அவர் மௌனமாகத் தலையசைக்க, சட்டென்று கார் சாவியை எடுத்துக்கொடுத்து 'வண்டியை எடு' என்று சொல்லும் இடமும்.
ராகவேந்தர் சார் சொன்னதுபோல, அவர் தனது கடைசிப்படம் வரை நடிப்பு ராஜாங்கம் நடத்திவிட்டுத்தான் மறைந்தார். குறிப்பிட்ட காலத்தோடு முடிந்துபோனார் என்பதெல்லாம் சிலரின் பேத்தல். உண்மையென்னவென்பது மக்களுக்குத்தெரியும்.
கலைவாணருக்கு தலைவர் அளித்த அஞ்சலி பற்றிய காணொளியும், கலாட்டா கல்யாணம் உருவான கதைபற்றி சித்ராலயா கோபுவின் பேட்டியைத்தாங்கிய கட்டுரையும் மிக அருமையான பதிப்புக்கள்.
தொடர்க தங்களின் சீரிய சேவை.
NTFANS - சார்பில் இன்று திரையிடப்படும் 'கப்பலோட்டிய தமிழன்' திரையீட்டு விழா செவ்வனே சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
http://i1087.photobucket.com/albums/...0423607725.jpg
அன்புள்ள ராகவேந்தர் சார் மற்றும் வாசுதேவன் சார்,
இன்று ஒரே நாளில் மட்டும் எட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நடிகர்திலகத்தின் எட்டு படங்கள். வாவ்.... என்ன ஒரு சாதனை.
அவர் பிஸியாக இருந்த காலத்தில் ஒரு ஏரியாவில் ஏழு தியேட்டர்கள் இருந்தால் அவற்றில் அவரது ஐந்து புதிய படங்கள் ஓடிக்கொண்டிருந்த நிகழ்வு சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வந்தது. உதாரணமாக 1971 ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையான காலகட்டத்தில் மவுண்ட்ரோடு ஏரியாவில் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலையிருந்தது அனைவரும் அறிந்தது. அதுபோல மதுரையில் பலமுறை ஒரே சமயத்தில் அவரது பல புதிய படங்கள் ஓட்டத்தில் இருந்ததைப்பற்றி முரளியார் அவர்கள் பல்வேறு சமயங்களில் சொல்லியிருக்கிறார் .
இப்போது, தொலைக்காட்சியிலும் அவரது ஆதிக்கம் தொடர்கிறது. ஒரே நாளில் எட்டு படங்கள் இதுவரை வேறு யாருக்கும் நிகழ்ந்ததுமில்லை இனி நிகழப்போவதுமில்லை.
இசைஞானி பாடியது இவரை நினைத்துத்தானோ..... "நேற்று இல்லை இன்று இல்லை, எப்பவும் நான் ராஜா".
அன்புள்ள பம்மலார் சார்,
எது ஒன்றைச்செய்தாலும் அதில் நடிகர்திலகத்தை முன்னிறுத்தியே செய்வதை வழக்கமாக, கடமையாகக்கொண்டிருக்கும் தாங்கள், 'கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் நினைவுநாளை' சிறப்பிக்கவும் கூட அவர் நடிகர்திலகத்தைப்பற்றி முதல் பட வெற்றிவிழா மலரிலேயே எழுதியுள்ள கட்டுரை மற்றும் சிறப்புக்கவிதையைப் பதிப்பித்து நினைவுகூர்ந்துள்ள விதம் அருமையிலும் அருமை.
இந்தக்க்ட்டுரை வெளிவந்த காலத்தில் (1952) என் தந்தைக்கு அதிகம்போனால் 17 வயது இருந்திருக்கலாம். என் தாய் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்திருப்பார். இன்றைய இளைஞர்களின் தாய் தந்தையர் அப்போது பிறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது வெளிவந்த கட்டுரையை இப்போது நாங்கள் படிக்க முடிகிறதென்றால், பம்மலாரின் அர்ப்பணிப்பை அளவிட தமிழில் வார்த்தைகளே இல்லையென்பதுதான் உண்மை.
ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடி சேகரித்து தொகுத்தளித்த தமிழ்த்தாத்தா உ.வெ.சா. அவர்களின் வரிசையில் வைத்துப் போற்றப்படவேண்டியவர் தாங்கள்.
திரு சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடத்தினால் என்ன?. தலைப்பு "த்மிழ்த்திரைப்பட ஆவணங்கள் அதிகம் இருப்பது பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களிடமா? பம்மலார் அவர்களிடமா?".
(தங்கள் அடியொற்றி நண்பர் வினோத் வேகமாக முன்னேறி வருகிறார். அவரது சேவையால் மக்கள்திலகம் திரி தறிகெட்டு பறந்துகொண்டிருக்கிறது).
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.
Dear karthik sir
my sincere thanks to your valuable comments regarding my postings in makkal thilagam part 2.
Moovendhargal [ragavendran sir - pammalar sir - vasudevan sir ] and above all your detailed description and narration about your olden days memories postings , analysis of movies and actors is really a great inspiriation to me to write in this thread.
அன்பு கார்த்திக் சார்,
தங்கள் அன்பு பாராட்டுதல்களுக்கு நன்றி!
இயக்குனர் விஜயனுக்கும் நடிகர் திலகத்திற்கும் சிறிது மனக்கசப்பு ஏற்பட்டிருந்த போது விஜயனால் நடிகர் திலகத்தின் காவியங்களை இயக்க முடியாமல் போனது. ஆனால் நம்மவர் குழந்தை போல. எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாது. பாலாஜி அவர்கள் 'பந்தம்' படத்திற்கு இயக்குனராக விஜயனைப் போடலாம் என்றதும் பழையனவற்றை எதையும் மனதில் கொள்ளாமல் சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் நடிகர் திலகம். இத்தனைக்கும் சொந்தப் பட வேலைகளின் (தூரத்து இடி முழக்கம்) காரணமாக நடிகர் திலகத்தின் சொந்தக் காவியமான 'ரத்த பாசம்' திரைப்படத்தின் இயக்குனர் பணிகளை தாமதப் படுத்தியவர் விஜயன். பொறுத்துப் பார்த்த நடிகர் திலகம் விஜயன் இல்லாமலேயே 'ரத்தபாசம்' காவியத்தை தன் சொந்த பேனரான 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்' யூனிட்டோடு வெற்றிகரமாக முடித்து படத்தை பெரிய 'ஹிட் ஆக்கினார். 'ரத்த பாசம்' (1980) டைட்டிலில் திரைப்பட வரலாற்றில் அதுவரை நடக்காத ஒரு கதையாக டைரக்ஷன் யார் என்று போடமால் அந்த இடத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான ஒரு ஸ்டில்லை மூன்றுமுறை கார்டாகப் போடுவார்கள். இதன் காரணமாகவே விஜயன் நடிகர் திலகத்தின் படங்களை இயக்குவதற்கான வாய்ப்பின்றி போனது. சொந்தப் படமான தூரத்து இடிமுழக்கமும் (1981) விஜயன் கையை ஆழமாகக் கடித்துப் பதம் பார்த்து விட்டது. ('தூரத்து இடிமுழக்கம்' படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் எங்கள் ஊரான கடலூர் துறைமுகத்தில் எடுக்கப் பட்டது என்பது ஒரு கொசுறு நியூஸ்.) கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக சரியான வாய்ப்புகளின்றி நொந்து போய் இருந்த விஜயனுக்கு 'பந்தம்' (1985) பட இயக்குனர் வாய்ப்பு அல்வா மாதிரி கிடைத்தவுடன் அவரும் மிகச் சரியாக பயன்படுத்தி அதைத் தக்க வைத்துக் கொண்டார். 'பந்தம்' காவியத்தை பெரும் வெற்றிக்காவியமாகவும் ஆக்கிக் காண்பித்தார். நடிகர் திலகமும் வழக்கம் போல பெருந்தன்மையுடன் விஜயனை ஏற்றுக் கொண்டார். தெரியாமல் தவறு செய்து விட்டு தண்டனை அனுபவித்த விஜயன் மறுபடி நடிகர் திலகத்தால் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட நிகழ்வைத்தான் நன்றி மறக்காமல் விஜயன் 'பந்தம்' காவியத்தில் உருவாக்கின அந்த டிரைவர் 'டேவிட்' கேரக்டர். நடிகர் திலகம் கூட விஜயனிடம் "என்ன! உன் கேரக்டரையே படத்தில் டிரைவர் கேரக்டரா வச்சுட்ட போல இருக்கு" என்று சொல்லி சிரித்தாராம். (தங்களுக்குத் தெரியாததா!)
'ரத்த பாசம்' காவியத்தில் டைரக்ஷன் யார் என்று போடுவதிற்குப் பதிலாக அந்த இடத்தில் சிம்பாலிக்காக போடப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டில் கார்டுகள் மூன்றும் இப்போது நம் பார்வைக்கு.
http://i1087.photobucket.com/albums/...31355/3-79.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/2-102.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/1-130.jpg
(ஒரு சிறு ஜோக். அந்தக் கார்டுகளில் என் வாட்டர் மார்க் இருக்காது. ஹா..ஹா.ஹா.)
Thanks for NT FILM APP SOCIETY for screening Kappalototia tamizan A CLASS MOVIE INDEED as appreciated by our legend many times many occassions wHAT A LIVELY PERFORMANCE BY NT throughout the movie without any slightest overaction Really i regret very much for having missed the picture earlier and later years I want to see it in big screens and not dvds
IVARUKKU BHARAT AND BHARATA RATNA miss ANADHU eppadi enbathu answer illa QUESION
Can NT fil appreciation societ be held in COimbatore just like chennai Many eople would like to watch with audience pl reply
Dear Murali Sir, Raghavendran Sir, Vaasudevan Sir, Karthik Sir, Pammalar Sir and all Pillaigal of Nadigar Thilagam and fellow hubbers,
It was indeed a great evening yesterday @ Russian Cultural Center which saw screening of our Kappalotiya Thilagam...sorry Thamizhan !!
Kappal oduvadharkku Vellam Thaevai....Naetru Nijamaagavae Russian Cultural Centeril Kappal engal anaivarudaya Aanandha Kaneeraal Odiyadhu endru Koorinaal adhu Migayaagaadhu....
Nadigar Thilagam ..Chidambaramaaga Vaazhndhaar enbadhu Ullangai Nellikani..! Adaeyappa...Nadikka Therindhavar Eppadi Chidambaramaaga Vaazhndhuvittar !!! Bale Pandiya !!!
Indha Kaaviyaththai Paarthu mudindhavudan, unmayilaeyae India edharkku sudhandhiram adaindhadhu endru varuththapattaen Yaen endraal...Ivalavu Kazhtapattu Vaangiya Sudhandhiraththai....Dravida Iyakangal Seerkulaiththu Sinnapinnapaduthi Tamizhnaatai Alangoalam Aaki vittadhae endru Ninaikkum boadhu...British Evalavo mael endru ninaikka Thoandrugiradhu...Avargal Irundhirundhaal Nadigar Thilagaththin Nadippai Paarthu, Adhan Pin Manam Thirundhi Avargal Naatirkku Sendriruppargal, Nadigar Thilagaththai Uriya Murayil Gowraviththapinbu enbadhu mattum Sathiyam !!
Thamizhnaatil Thamizhanai Indru Naetralla....Sudhandhirathirkku munnum Vaazhaviduvadhillai, Vaazhavaikkavillai, Gowravapaduththuvadhillai enbadhu Mattum Thinnam !!!!!
Viduthalai Petra Seidhi sollum adhigaariyidam....unarchiillamal..oho enbadhu pola jaadai seivadhumattum allaamal...Ungalukku Sandhosham illaya endru ketkum adhigariyidam..."Enn Naatirkka Viduthalai Kidaithuvittadhu ..." endru koorumboadhu ...andha performance....1000 Afro-Asia Awardugal matrum 1000 Chevalier Awardugal Avarudaya Paadhathil Saranaagadhi adaindhadharkku Samam..!!! National Matrum Oscar Awardai Naan kuripidavillai yaen endraal..avai indru, oru filmfare award pola tharam thaazhndhu vittadhu...Adhu Namadhu NadigarThilagathin Tharathirkku arigil, nerunga mudiyaadhu !!
Nadigar Thilagam Uraikkum Bodhu adhu "VandeMaadaram" matra nadigargal matrum arasiyal vyadhigal uraikkum bodhu adhu "Vandhu Yaemaatharoam"
Vande Maadaram !!!
:smokesmile:
டியர் mr_karthik,
இதயத்தின் அடித்தளத்திலிருந்து துளியும் மிச்சம் வைக்காமல் தாங்கள் வழங்கிய ஆத்மார்த்தமான, உச்சமான, உயர்வான பாராட்டுக்கு எனது ஆனந்தக்கண்ணீருடன் கூடிய நன்றிகளைத் தங்களுக்கு காணிக்கையாக்குகின்றேன்..!
போற்றுதலுக்குரிய பெருந்தகை தமிழ்த் தாத்தா உ.வே.சா. எங்கே..! இந்த எளியவன் எங்கே..! கடந்த பல வருடங்களாக பற்பல ஆவணங்களைத் தேடித்தேடி சேகரித்தபோதும் சரி, தற்போதைய தொடர் தேடலிலும் சரி, தாங்கள் குறிப்பிட்ட திரு. சாமிநாத ஐய்யர்தான் இந்த சுவாமிநாதனுக்கு ரோல்மாடல் என்பதனை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 'அவரெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு, அல்லல்பட்டு, பசி நோக்காது, கண் துஞ்சாது, சதா சர்வகாலமும் தேடித்தேடி பண்டைத் தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை சேகரித்திருப்பார். நமக்கென்ன அதற்குள் அலுப்பு வந்து விடுகிறது. அவரைப் போல் விடாது முயற்சித்து மென்மேலும் திரட்ட வேண்டும்' என எனது தொடர் தேடுதல் வேட்டையில் அன்றும், இன்றும் உயர்திரு. உ.வே.சா. அவர்களே உந்துசக்தியாய் விளங்கி வருகிறார்.
மதிப்பிற்குரிய ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள், தமிழ்த் திரையுலக ஆவணங்களின் சிகரம். அடியேன், கடற்கரையில் குழுந்தைகள் கட்டி விளையாடும் ஒரு சிறு மணல் குன்று போன்றவன். எனினும், தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் இந்த உன்னதமான பாராட்டுதல்களை மிகுந்த பணிவோடு சிரமேற்கிறேன்..! தங்களின் அபரிமிதமான அன்பிற்கும், எல்லையில்லா பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன்..!
தங்களைப் போன்ற அன்புள்ளங்கள் வழங்கும் உச்சமான பாராட்டுதல்களே, என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்றுவதற்கு, மிகப் பெரிய ஊக்கசக்தியாக விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..!
தாங்கள் குறிப்பிட்டதுபோல் திரு. esvee அவர்கள் மக்கள் திலகம் திரியில் ஈடுஇணை சொல்லமுடியாத மகத்தான சேவையை ஆற்றி பாராட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக உயர்ந்து வருகிறார். தற்போது அவருக்கு பக்கபலமாக திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களும் அரிய திருத்தொண்டினை அங்கே புரிந்து வருகிறார். அந்த இரு சகோதரர்களுக்கும் நமது இதயபூர்வமான வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்..!
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
கலைவாணர் நினைவுநாள் நிகழ்ச்சிப் பதிவு சிறப்பு. திரு.கார்த்திக் அவர்கள் கூறியதுபோல தங்களின் (ஒவ்வொரு பதிவிலும்) அர்ப்பணிப்பை அளவிட வார்த்தைகள் இல்லை.
பாராட்டுக்கள்
டியர் வாசுதேவன் சார்,
'பந்தம்', 'கலாட்டா கல்யாணம்' மற்றும் கப்பலோட்டிய தமிழன் பதிவுகள் அருமை.
'ரத்த பாசம்' காவியத்தில் Direction யார் என்று போடுவதிற்குப் பதிலாக அந்த இடத்தில் சிம்பாலிக்காக போடப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டில் கார்டுகளுடன்கூடிய டைரக்டர் விஜயனுக்கும் நடிகர்திலகதிற்கும் ஏற்பட்ட மனக்கசப்பு Flash Back மிகவும் சிறப்பு.
'குமுதம்' 29-8-2012 இதழில் பிரபல தெலுங்கு நடிகர் திரு. நாகேஸ்வரராவ் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி புகழ்ந்தளித்துள்ள பேட்டி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. நடிகர் திலகத்திற்கு ஈடு இணை எவரும் இல்லை, அவரைப் போல தன்னால் நடிக்க முடியவில்லை போன்ற விஷயங்களையும், 'சாணக்ய சந்திரகுப்தா' தெலுங்குக் காவியத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான பங்களிப்பைப் பற்றியும் திரு நாகேஸ்வரராவ் அவர்கள் மிக அற்புதமாகக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அற்புதப் பதிவு உங்கள் பார்வைக்கு. படித்து மகிழுங்கள். (அட்டகாசமான 'சாணக்ய சந்திரகுப்தா' காவியத்தில் மூவேந்தர்களின் ஸ்டில்லோடு)
http://i1087.photobucket.com/albums/...0ganesan/1.jpg
http://i1087.photobucket.com/albums/...0ganesan/2.jpg
http://i1087.photobucket.com/albums/...0ganesan/3.jpg