-
1st September 2012, 05:19 PM
#1071
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
எது ஒன்றைச்செய்தாலும் அதில் நடிகர்திலகத்தை முன்னிறுத்தியே செய்வதை வழக்கமாக, கடமையாகக்கொண்டிருக்கும் தாங்கள், 'கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் நினைவுநாளை' சிறப்பிக்கவும் கூட அவர் நடிகர்திலகத்தைப்பற்றி முதல் பட வெற்றிவிழா மலரிலேயே எழுதியுள்ள கட்டுரை மற்றும் சிறப்புக்கவிதையைப் பதிப்பித்து நினைவுகூர்ந்துள்ள விதம் அருமையிலும் அருமை.
இந்தக்க்ட்டுரை வெளிவந்த காலத்தில் (1952) என் தந்தைக்கு அதிகம்போனால் 17 வயது இருந்திருக்கலாம். என் தாய் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்திருப்பார். இன்றைய இளைஞர்களின் தாய் தந்தையர் அப்போது பிறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது வெளிவந்த கட்டுரையை இப்போது நாங்கள் படிக்க முடிகிறதென்றால், பம்மலாரின் அர்ப்பணிப்பை அளவிட தமிழில் வார்த்தைகளே இல்லையென்பதுதான் உண்மை.
ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடி சேகரித்து தொகுத்தளித்த தமிழ்த்தாத்தா உ.வெ.சா. அவர்களின் வரிசையில் வைத்துப் போற்றப்படவேண்டியவர் தாங்கள்.
திரு சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடத்தினால் என்ன?. தலைப்பு "த்மிழ்த்திரைப்பட ஆவணங்கள் அதிகம் இருப்பது பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களிடமா? பம்மலார் அவர்களிடமா?".
(தங்கள் அடியொற்றி நண்பர் வினோத் வேகமாக முன்னேறி வருகிறார். அவரது சேவையால் மக்கள்திலகம் திரி தறிகெட்டு பறந்துகொண்டிருக்கிறது).
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.
-
1st September 2012 05:19 PM
# ADS
Circuit advertisement
-
1st September 2012, 08:55 PM
#1072
Junior Member
Platinum Hubber
Dear karthik sir
my sincere thanks to your valuable comments regarding my postings in makkal thilagam part 2.
Moovendhargal [ragavendran sir - pammalar sir - vasudevan sir ] and above all your detailed description and narration about your olden days memories postings , analysis of movies and actors is really a great inspiriation to me to write in this thread.
-
2nd September 2012, 06:27 AM
#1073
Senior Member
Diamond Hubber
அன்பு கார்த்திக் சார்,
தங்கள் அன்பு பாராட்டுதல்களுக்கு நன்றி!
இயக்குனர் விஜயனுக்கும் நடிகர் திலகத்திற்கும் சிறிது மனக்கசப்பு ஏற்பட்டிருந்த போது விஜயனால் நடிகர் திலகத்தின் காவியங்களை இயக்க முடியாமல் போனது. ஆனால் நம்மவர் குழந்தை போல. எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாது. பாலாஜி அவர்கள் 'பந்தம்' படத்திற்கு இயக்குனராக விஜயனைப் போடலாம் என்றதும் பழையனவற்றை எதையும் மனதில் கொள்ளாமல் சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் நடிகர் திலகம். இத்தனைக்கும் சொந்தப் பட வேலைகளின் (தூரத்து இடி முழக்கம்) காரணமாக நடிகர் திலகத்தின் சொந்தக் காவியமான 'ரத்த பாசம்' திரைப்படத்தின் இயக்குனர் பணிகளை தாமதப் படுத்தியவர் விஜயன். பொறுத்துப் பார்த்த நடிகர் திலகம் விஜயன் இல்லாமலேயே 'ரத்தபாசம்' காவியத்தை தன் சொந்த பேனரான 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்' யூனிட்டோடு வெற்றிகரமாக முடித்து படத்தை பெரிய 'ஹிட் ஆக்கினார். 'ரத்த பாசம்' (1980) டைட்டிலில் திரைப்பட வரலாற்றில் அதுவரை நடக்காத ஒரு கதையாக டைரக்ஷன் யார் என்று போடமால் அந்த இடத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான ஒரு ஸ்டில்லை மூன்றுமுறை கார்டாகப் போடுவார்கள். இதன் காரணமாகவே விஜயன் நடிகர் திலகத்தின் படங்களை இயக்குவதற்கான வாய்ப்பின்றி போனது. சொந்தப் படமான தூரத்து இடிமுழக்கமும் (1981) விஜயன் கையை ஆழமாகக் கடித்துப் பதம் பார்த்து விட்டது. ('தூரத்து இடிமுழக்கம்' படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் எங்கள் ஊரான கடலூர் துறைமுகத்தில் எடுக்கப் பட்டது என்பது ஒரு கொசுறு நியூஸ்.) கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக சரியான வாய்ப்புகளின்றி நொந்து போய் இருந்த விஜயனுக்கு 'பந்தம்' (1985) பட இயக்குனர் வாய்ப்பு அல்வா மாதிரி கிடைத்தவுடன் அவரும் மிகச் சரியாக பயன்படுத்தி அதைத் தக்க வைத்துக் கொண்டார். 'பந்தம்' காவியத்தை பெரும் வெற்றிக்காவியமாகவும் ஆக்கிக் காண்பித்தார். நடிகர் திலகமும் வழக்கம் போல பெருந்தன்மையுடன் விஜயனை ஏற்றுக் கொண்டார். தெரியாமல் தவறு செய்து விட்டு தண்டனை அனுபவித்த விஜயன் மறுபடி நடிகர் திலகத்தால் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட நிகழ்வைத்தான் நன்றி மறக்காமல் விஜயன் 'பந்தம்' காவியத்தில் உருவாக்கின அந்த டிரைவர் 'டேவிட்' கேரக்டர். நடிகர் திலகம் கூட விஜயனிடம் "என்ன! உன் கேரக்டரையே படத்தில் டிரைவர் கேரக்டரா வச்சுட்ட போல இருக்கு" என்று சொல்லி சிரித்தாராம். (தங்களுக்குத் தெரியாததா!)
'ரத்த பாசம்' காவியத்தில் டைரக்ஷன் யார் என்று போடுவதிற்குப் பதிலாக அந்த இடத்தில் சிம்பாலிக்காக போடப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டில் கார்டுகள் மூன்றும் இப்போது நம் பார்வைக்கு.



(ஒரு சிறு ஜோக். அந்தக் கார்டுகளில் என் வாட்டர் மார்க் இருக்காது. ஹா..ஹா.ஹா.)
Last edited by vasudevan31355; 2nd September 2012 at 07:33 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
2nd September 2012, 08:46 AM
#1074
Junior Member
Senior Hubber
Thanks for NT FILM APP SOCIETY for screening Kappalototia tamizan A CLASS MOVIE INDEED as appreciated by our legend many times many occassions wHAT A LIVELY PERFORMANCE BY NT throughout the movie without any slightest overaction Really i regret very much for having missed the picture earlier and later years I want to see it in big screens and not dvds
IVARUKKU BHARAT AND BHARATA RATNA miss ANADHU eppadi enbathu answer illa QUESION
-
2nd September 2012, 09:45 AM
#1075
Junior Member
Seasoned Hubber
Can NT fil appreciation societ be held in COimbatore just like chennai Many eople would like to watch with audience pl reply
-
2nd September 2012, 12:31 PM
#1076
Junior Member
Regular Hubber
Dear Murali Sir, Raghavendran Sir, Vaasudevan Sir, Karthik Sir, Pammalar Sir and all Pillaigal of Nadigar Thilagam and fellow hubbers,
It was indeed a great evening yesterday @ Russian Cultural Center which saw screening of our Kappalotiya Thilagam...sorry Thamizhan !!
Kappal oduvadharkku Vellam Thaevai....Naetru Nijamaagavae Russian Cultural Centeril Kappal engal anaivarudaya Aanandha Kaneeraal Odiyadhu endru Koorinaal adhu Migayaagaadhu....
Nadigar Thilagam ..Chidambaramaaga Vaazhndhaar enbadhu Ullangai Nellikani..! Adaeyappa...Nadikka Therindhavar Eppadi Chidambaramaaga Vaazhndhuvittar !!! Bale Pandiya !!!
Indha Kaaviyaththai Paarthu mudindhavudan, unmayilaeyae India edharkku sudhandhiram adaindhadhu endru varuththapattaen Yaen endraal...Ivalavu Kazhtapattu Vaangiya Sudhandhiraththai....Dravida Iyakangal Seerkulaiththu Sinnapinnapaduthi Tamizhnaatai Alangoalam Aaki vittadhae endru Ninaikkum boadhu...British Evalavo mael endru ninaikka Thoandrugiradhu...Avargal Irundhirundhaal Nadigar Thilagaththin Nadippai Paarthu, Adhan Pin Manam Thirundhi Avargal Naatirkku Sendriruppargal, Nadigar Thilagaththai Uriya Murayil Gowraviththapinbu enbadhu mattum Sathiyam !!
Thamizhnaatil Thamizhanai Indru Naetralla....Sudhandhirathirkku munnum Vaazhaviduvadhillai, Vaazhavaikkavillai, Gowravapaduththuvadhillai enbadhu Mattum Thinnam !!!!!
Viduthalai Petra Seidhi sollum adhigaariyidam....unarchiillamal..oho enbadhu pola jaadai seivadhumattum allaamal...Ungalukku Sandhosham illaya endru ketkum adhigariyidam..."Enn Naatirkka Viduthalai Kidaithuvittadhu ..." endru koorumboadhu ...andha performance....1000 Afro-Asia Awardugal matrum 1000 Chevalier Awardugal Avarudaya Paadhathil Saranaagadhi adaindhadharkku Samam..!!! National Matrum Oscar Awardai Naan kuripidavillai yaen endraal..avai indru, oru filmfare award pola tharam thaazhndhu vittadhu...Adhu Namadhu NadigarThilagathin Tharathirkku arigil, nerunga mudiyaadhu !!
Nadigar Thilagam Uraikkum Bodhu adhu "VandeMaadaram" matra nadigargal matrum arasiyal vyadhigal uraikkum bodhu adhu "Vandhu Yaemaatharoam"
Vande Maadaram !!!

-
2nd September 2012, 03:27 PM
#1077
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
எது ஒன்றைச்செய்தாலும் அதில் நடிகர்திலகத்தை முன்னிறுத்தியே செய்வதை வழக்கமாக, கடமையாகக்கொண்டிருக்கும் தாங்கள், 'கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் நினைவுநாளை' சிறப்பிக்கவும் கூட அவர் நடிகர்திலகத்தைப்பற்றி முதல் பட வெற்றிவிழா மலரிலேயே எழுதியுள்ள கட்டுரை மற்றும் சிறப்புக்கவிதையைப் பதிப்பித்து நினைவுகூர்ந்துள்ள விதம் அருமையிலும் அருமை.
இந்தக்க்ட்டுரை வெளிவந்த காலத்தில் (1952) என் தந்தைக்கு அதிகம்போனால் 17 வயது இருந்திருக்கலாம். என் தாய் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்திருப்பார். இன்றைய இளைஞர்களின் தாய் தந்தையர் அப்போது பிறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது வெளிவந்த கட்டுரையை இப்போது நாங்கள் படிக்க முடிகிறதென்றால், பம்மலாரின் அர்ப்பணிப்பை அளவிட தமிழில் வார்த்தைகளே இல்லையென்பதுதான் உண்மை.
ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடி சேகரித்து தொகுத்தளித்த தமிழ்த்தாத்தா உ.வெ.சா. அவர்களின் வரிசையில் வைத்துப் போற்றப்படவேண்டியவர் தாங்கள்.
திரு சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடத்தினால் என்ன?. தலைப்பு "த்மிழ்த்திரைப்பட ஆவணங்கள் அதிகம் இருப்பது பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களிடமா? பம்மலார் அவர்களிடமா?".
(தங்கள் அடியொற்றி நண்பர் வினோத் வேகமாக முன்னேறி வருகிறார். அவரது சேவையால் மக்கள்திலகம் திரி தறிகெட்டு பறந்துகொண்டிருக்கிறது).
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.
டியர் mr_karthik,
இதயத்தின் அடித்தளத்திலிருந்து துளியும் மிச்சம் வைக்காமல் தாங்கள் வழங்கிய ஆத்மார்த்தமான, உச்சமான, உயர்வான பாராட்டுக்கு எனது ஆனந்தக்கண்ணீருடன் கூடிய நன்றிகளைத் தங்களுக்கு காணிக்கையாக்குகின்றேன்..!
போற்றுதலுக்குரிய பெருந்தகை தமிழ்த் தாத்தா உ.வே.சா. எங்கே..! இந்த எளியவன் எங்கே..! கடந்த பல வருடங்களாக பற்பல ஆவணங்களைத் தேடித்தேடி சேகரித்தபோதும் சரி, தற்போதைய தொடர் தேடலிலும் சரி, தாங்கள் குறிப்பிட்ட திரு. சாமிநாத ஐய்யர்தான் இந்த சுவாமிநாதனுக்கு ரோல்மாடல் என்பதனை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 'அவரெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு, அல்லல்பட்டு, பசி நோக்காது, கண் துஞ்சாது, சதா சர்வகாலமும் தேடித்தேடி பண்டைத் தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை சேகரித்திருப்பார். நமக்கென்ன அதற்குள் அலுப்பு வந்து விடுகிறது. அவரைப் போல் விடாது முயற்சித்து மென்மேலும் திரட்ட வேண்டும்' என எனது தொடர் தேடுதல் வேட்டையில் அன்றும், இன்றும் உயர்திரு. உ.வே.சா. அவர்களே உந்துசக்தியாய் விளங்கி வருகிறார்.
மதிப்பிற்குரிய ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள், தமிழ்த் திரையுலக ஆவணங்களின் சிகரம். அடியேன், கடற்கரையில் குழுந்தைகள் கட்டி விளையாடும் ஒரு சிறு மணல் குன்று போன்றவன். எனினும், தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் இந்த உன்னதமான பாராட்டுதல்களை மிகுந்த பணிவோடு சிரமேற்கிறேன்..! தங்களின் அபரிமிதமான அன்பிற்கும், எல்லையில்லா பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன்..!
தங்களைப் போன்ற அன்புள்ளங்கள் வழங்கும் உச்சமான பாராட்டுதல்களே, என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்றுவதற்கு, மிகப் பெரிய ஊக்கசக்தியாக விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..!
தாங்கள் குறிப்பிட்டதுபோல் திரு. esvee அவர்கள் மக்கள் திலகம் திரியில் ஈடுஇணை சொல்லமுடியாத மகத்தான சேவையை ஆற்றி பாராட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக உயர்ந்து வருகிறார். தற்போது அவருக்கு பக்கபலமாக திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களும் அரிய திருத்தொண்டினை அங்கே புரிந்து வருகிறார். அந்த இரு சகோதரர்களுக்கும் நமது இதயபூர்வமான வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்..!
பாசத்துடன்,
பம்மலார்.
-
2nd September 2012, 04:19 PM
#1078
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
கலைவாணர் நினைவுநாள் நிகழ்ச்சிப் பதிவு சிறப்பு. திரு.கார்த்திக் அவர்கள் கூறியதுபோல தங்களின் (ஒவ்வொரு பதிவிலும்) அர்ப்பணிப்பை அளவிட வார்த்தைகள் இல்லை.
பாராட்டுக்கள்
-
2nd September 2012, 04:27 PM
#1079
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
'பந்தம்', 'கலாட்டா கல்யாணம்' மற்றும் கப்பலோட்டிய தமிழன் பதிவுகள் அருமை.
'ரத்த பாசம்' காவியத்தில் Direction யார் என்று போடுவதிற்குப் பதிலாக அந்த இடத்தில் சிம்பாலிக்காக போடப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டில் கார்டுகளுடன்கூடிய டைரக்டர் விஜயனுக்கும் நடிகர்திலகதிற்கும் ஏற்பட்ட மனக்கசப்பு Flash Back மிகவும் சிறப்பு.
-
3rd September 2012, 01:38 PM
#1080
Senior Member
Diamond Hubber
'குமுதம்' 29-8-2012 இதழில் பிரபல தெலுங்கு நடிகர் திரு. நாகேஸ்வரராவ் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி புகழ்ந்தளித்துள்ள பேட்டி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. நடிகர் திலகத்திற்கு ஈடு இணை எவரும் இல்லை, அவரைப் போல தன்னால் நடிக்க முடியவில்லை போன்ற விஷயங்களையும், 'சாணக்ய சந்திரகுப்தா' தெலுங்குக் காவியத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான பங்களிப்பைப் பற்றியும் திரு நாகேஸ்வரராவ் அவர்கள் மிக அற்புதமாகக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அற்புதப் பதிவு உங்கள் பார்வைக்கு. படித்து மகிழுங்கள். (அட்டகாசமான 'சாணக்ய சந்திரகுப்தா' காவியத்தில் மூவேந்தர்களின் ஸ்டில்லோடு)


Last edited by vasudevan31355; 4th September 2012 at 09:21 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks