Quote:
சின்னத்திரையை விடமாட்டேன்! - ;திண்டுக்கல்' சரவணன் .
சின்னத்திரையில் டாடி எனக்கொரு டவுட் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திண்டுக்கல் சரவணன். இப்போது நய்யாண்டி நேரம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதையடுத்து, புதுப்பட காமெடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார். தினமும் இரவு 9-10 மணிக்கு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் அந்த காலத்து காமெடி, இந்த காலத்து காமெடி இரண்டையும் இன்னொரு தொகுப்பாளருடன் இணைந்து விமர்சனம் செய்கிறாராம் திண்டுக்கல் சரவணன்.
மேலும், ராதாமோகன் இயக்கிய ;உப்புக்கருவாடு; படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அவர், நேற்று திரைக்கு வந்துள்ள ;அரண்மனை-2, படத்திலும் சூரியுடன் இணைந்து காமெடியனாக நடித்திருக்கிறார். அதற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறதாம்.
இதுபற்றி திண்டுக்கல் சரவணன் கூறுகையில், சின்னத்திரையில் பிரபலமானதை அடுத்து சினிமா வாய்ப்புகள் நிறைய வரத் தொடங்கியிருக்கிறது. அதனால் அதில் எனக்கு பிடித்த நல்ல வேடங்களாக பார்த்து நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். அந்த வகையில், உப்புக்கருவாடு படத்தில் ஒரு ஜோதிடராக நடித்தேன்.
இப்போது அரண்மனை-2ல் சூரியுடன் இணைந்து காமெடி செய்திருக்கிறேன். நான் நடித்த இந்த இரண்டு வேடங்களுமே படம் முழுக்க இருந்தது. அதனால் சினிமாவிலும் கவனிக்கப்படும் நடிகராகி விட்டேன்.
மேலும், நிறைய படங்களில் நடிக்கக் கேட்கிறார்கள். ஆனால் முக்கியத்துவமுள்ள கேரக்டர்களாக இருந்தால் மட்டுமே நான் ஓகே செய்கிறேன். அதோடு, என்னால் காமெடி மட்டுமின்றி குணசித்ர வேடங்களிலும் நடிக்க முடியும். அதை நிரூபிக்கத்தான் சரியான வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக, கரண், ஸ்ரீமன் போன்ற நடிகர்கள் நடித்தது போன்ற வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். காரணம், இப்போது அவர்கள் நடித்தது மாதிரி வேடங்களில் நடிக்கத்தான் சரியான நடிகர்கள் இல்லை என்று கூறும் திண்டுக்கல் சரவணன், வில்லன் வேடம் கிடைத்தால்கூட மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்த நான் தயாராகவே இருக்கிறாராம்.
அதேசமயம், என்னதான் சினிமாவில் பிசியாகிவிட்டபோதும், சின்னத்திரையை விடமாட்டாராம். என்னை மக்களுக்கு அடையாளம் காட்டியது சின்னத்திரைதான். அதனால் ஏதாவது ஒரு ஷோ மூலம் தொடர்ந்து சின்னத்திரையிலும் இடம் பிடித்திருப்பேன் என்கிறார் திண்டுக்கல் சரவணன்.