சிக்கா... ராமண்ணா மனைவி.... அது ஈ.வி.சரோஜா... இவங்கதான்
http://thumbnails102.imagebam.com/23...4239304825.jpg
இன்னும் எம்.சரோஜா, பி.எஸ்.சரோஜா... சரோஜா(தேவி) அப்படின்னு எக்கசக்க சர்ர்ர் ரோஜாக்கள் இருந்திருக்காங்களே !
Printable View
சிக்கா... ராமண்ணா மனைவி.... அது ஈ.வி.சரோஜா... இவங்கதான்
http://thumbnails102.imagebam.com/23...4239304825.jpg
இன்னும் எம்.சரோஜா, பி.எஸ்.சரோஜா... சரோஜா(தேவி) அப்படின்னு எக்கசக்க சர்ர்ர் ரோஜாக்கள் இருந்திருக்காங்களே !
ஓ... தாங்க்ஸ் மதுண்ணா. . டணால் தங்கவேல் ஒஃய்ப் தான் ஈ.வி.சரோஜான்னு நினைச்சுருந்தேன்..அது யார் பி எஸ்.ஸரோஜா..எம்.சரோஜா..
இன்றைய ஸ்பெஷல் என்ன என்று வாசு சார் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு எழுதியும் முடித்திருப்பார் என நினைக்கிறேன்..இன்னிக்கு என்னவாக்கும் விசேஷம்..
யெஸ்..சின்ன வயதில் நாங்கள் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு (எய்ட்டீந்த் மல்டிப்ளிகேஷன்) பெருமைப் பட்ட ஆடிப் பெருக்கு..ம்ம்..அந்தப் படத்தில் உள்ள பாடல்கள்..எல்லாமே அருமை தான்..இருப்பினும் பெங்களூர் பேரட் கன்னடத்துக் கிள்ளை மொழி இன்னொரு கிள்ளை முழி ஆட(வேறுயார் தேவிகா தான்) சேர்ந்து பாடும் சோகப் பாடல்..
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா
அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்
கதை கொஞ்சம் புகையாகத் தான் நினைவில்..ஆனால் பாடல் முடிவில் சர்ரோஜாவின் அண்ணன் மரிப்பது போல் வரும் என நினைக்கிறேன்.இசையரசியின் அற்புதமான பாடல்களில் ஒன்று இது..
இன்னொரு அழகுப்ப் பாட்டு..
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே
பாடல் இசைத்தார்
பாடல் இசைத்தார்
கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாதியிலே
பாட்டை முடித்தார்
பாட்டை முடித்தார்
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே
கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின்
சிறகை ஒடித்தார்
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்
முன்னுமில்லை பின்னுமில்லை
முடிவுமில்லையே
மூடன் செய்த விதிகளுக்கு
தெளிவுமில்லையே
ரொ ம்ப பிடித்த பாட்ல்களில் ஒன்று..சிச்சுவேஷன் தான் நினைவுக்கு வரமாட்டேங்குது..ம்ம்
ஊருக்கே நல்லது செய்யும் பெண் அவள்.. அவள் வாழ்வில் நல்லது நடக்கிறது..எஸ் கல்யாணம்.. ஆனால் வேகமாய் முடிந்த கல்யாண வாழ்க்கையும் அவளுக்கு விரைவில் முடிந்து விடுகிறது..ஆனால் அவளுக்குத் தெரியாது..எஸ்.. அவளது கணவன் விபத்திலோ எதிலோ இறந்து விடுகிறான்..இது ஊருக்குத் தெரிகிறது..ஆனால் அவர்களுக்கு அவளிடம் சொல்லத் துணிவில்லை..அந்தப் பொன் சிரிப்புக் கொண்டப் பூ முகம் வாடுவதை அவர்கள் விரும்பவில்லை..
எனில் ஆடி மாதம் வருகிறது..பதினெட்டாம் பெருக்கும் வருகிறது..ஊர் கூடி விளக்கு விடுகிறார்கள் சீறிப் பாயாமல் சிரித்தபடி செல்லும் காவிரியாற்றில்..அவர்கள் சுமங்கலியாக் இருக்க வேண்டும் என..அவளும் விடுகிறாள்..பார்க்கும் பெண்களுக்குச் சற்றே தயக்கம்..பின் மனதைத் தேற்றி அவர்களும் தொடர்ந்து பாட...
(படம்.. ராதா.. அந்தப் பெண் பிரமீளா..முத்து ராமன் ஹீரோ - இரு வேடங்கள் என நினைவு)
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக
எமை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக..
மொய்குழலில் மலர்சூட்டி
மான்விழியில் மை தீட்டி
பொன் முகத்தில் பொட்டு வைத்து
பூவையர்கள் நலம் காக்க
நெய்வழியும் கை விளக்கை
நீரோடு மிதக்க விட்டோம்
நாயகனின் உயிர் காக்க
தாயிடத்தில் போக விட்டோம்..
வள்ளுவரும் வாசுகி போல்
வசிட்டனுக்கு அருந்ததி போல்
தொல்லுலகில் புகழ் விளங்க
தோகையர்க்குத் துணை புரிக
பின்னுறங்கி முன்விழித்து
பிள்ளை நலம் தனைக் காத்து
கொண்டவனின் மனமறிந்து
தொண்டு செய்ய மனம் தருக..
ம்ம் கண்ணதாசன்..என நினைக்கிறேன்..இப்போ காவிரிக்கிட்ட கேட்டா என்ன சொல்லும்.
படம் சுமார் என நினைவு..அந்த இரண்டாவது முத்துராமனின் ஜோடி ஜெயாவா.. அதுவும் நினைவில்லை
http://tamil.way2movies.com/wp-conte...asses-away.jpghttp://www.hindu.com/fr/2005/07/08/i...0800730301.jpg
சின்னக் கண்ணன் சார்,
இவர் தான் எம்.சரோஜா
'டணால்'தங்கவேலு அவர்களின் மனைவி. அடுத்த வீட்டுப் பெண், கல்யாணப் பரிசு போன்ற முக்கியமான படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து சக்கை போடு போட்டனர்.
கணவருடன் சேர்ந்து இவர் கலக்கிய காமெடி சீன் கல்யாணப் பரிசு திரைப்படத்தில்.
http://www.youtube.com/watch?feature...&v=i5uh6yQ7gzw
http://w1.nst.com.my/polopoly_fs/1.6..._454/image.jpg
இவர் பி.எஸ்.சரோஜா. இவர் தான் ஜெனோவா, வண்ணக்கிளி, கூண்டுக்கிளி, புதுமைப் பித்தன், போன்ற படங்களில் நடித்தார். மலையாளத்தில் நிறைய நடித்தவர்.
இவர் எம்ஜிஆருடன் நடித்த 'ஜெனோவா' படத்திலிருந்து ஒரு பாடல்.
http://www.youtube.com/watch?v=y4b8H7YZkdA&feature=player_detailpage
இது தவிர பின்னாளில் இன்னொரு சரோஜா. 'வடைமாலை' போன்ற படங்களில் நடித்தவர்.
உடம்பு தேவலையா?
வாசு சார்.. இப்போது நலம்..கொஞ்சம் ஒரு டாப்லெட் போட்டுண்டாச்சு..வேலைக்கும் வந்தாச்சு... நன்றி ஃபார் சரோஜா படஙக்ள்+ விளக்கங்கள்..ஈ.வி.சரோஜா மகாதேவியிலும் நடித்திருப்பார் என நினைக்கிறேன்..ஆர்.. மதுரை வீரன்?
'கூண்டுக்கிளி' படத்தில் எம்ஜிஆரின் மனைவியாக நடிகர் திலகம் ஆசைப்படும் பெண்ணாக பி.எஸ்.சரோஜா
http://raretfm.mayyam.com/pow07/images/koondukili01.jpg
http://i.ytimg.com/vi/U4JCYBL171Y/hqdefault.jpg
எம்ஜிஆர் அவர்கள் நடித்த 'என் தங்கை' என்ற படத்தில் எம்ஜிஆரின் குருட்டுத் தங்கையாக நடித்து புகழ் பெற்றவர் ஈ.வி.சரோஜா. ரொம்ப அழுவாச்சியான படம் இது. இதில் ஈ.வி.சரோஜா மிகவும் சின்னப் பெண்.
இதே ஈ.வி.சரோஜா அதே எம்.ஜி.ஆருடன் 'கொடுத்து வைத்தவள்' படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
http://i.ytimg.com/vi/1GndjzLTnWs/hqdefault.jpg
நடிகர் திலகம், மக்கள் திலகம் என்று பெரிய ஹீரோக்களை டீஸ் செய்து பாடும் கதாநாயகியின் தோழியாகவே பல படங்களில் வருவார்.
காத்தவராயனில் 'முனா... அட முக்காலணா ங்கப்பா' பாடி ஆடி அசத்துவார்.
'மதுரை வீரனி'ல் எம்ஜிஆரை வெறுப்பேற்றி 'வாங்க மச்சான் வாங்க' பாடலுக்கு ஆடுவார்.
ஈ.வி.சரோஜா பி.எஸ்.சரோஜா பற்றிய தகவல்கள் புகைப்படங்கள் நன்றி வாசு சார்..
//டணால்'தங்கவேலு அவர்களின் மனைவி. அடுத்த வீட்டுப் பெண், கல்யாணப் பரிசு போன்ற முக்கியமான படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து சக்கை போடு போட்டனர்.// இந்த ஜோடியின் இன்னொரு காமடி மறக்க முடியாது..கைதி கண்ணாயிரம் - என்ன எங்கே எப்போ..
ஆமா தொடர்பா இன்னொரு பாட்டும் நினைவுக்கு வருதே..கொஞ்சி க் கொஞ்சி பேசி மதிமயக்கும் வஞ்சகரின் உலகம் வலைவிரிக்கும்..எம்.எஸ். ராஜேஷ்வரியா..
வாசு சார்,
சரோஜாக்கள் பற்றிய உங்களது பதிவுகள் அருமையாக
உள்ளது.தமிழ்த் திரை உலகம் பற்றிய விபரங்கள் உங்களது
விரல் நுனியில் உள்ளது.நடிகர் திலகம் படிக்காத மேதை
திரைப்படத்தில் -சீவி முடிச்சி சிங்காரித்து-பாடலில் ஈ.வி.சரோஜாவை கிண்டல் செய்து பாடியிருப்பார்.
கோபு