Page 282 of 400 FirstFirst ... 182232272280281282283284292332382 ... LastLast
Results 2,811 to 2,820 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2811
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    காதல் நிலவு பாதி இரவு மயக்கத்தில் ஆடும் உலகம் .70 களின் மெல்லிசை மன்னரின் சாதனை படங்களில் ஒன்று பொன்னூஞ்சல்.படத்தின் திரைக்கதை இன்னும் இறுக்கமாக அமைக்க பட்டிருந்தால் B ,C சென்டர் களிலும் உயரம் தொட்டு சாதனை படங்களில் ஒன்றாகி இருக்கும் கிராமிய காவியமாய் அமரத்துவம் பெற்றிருக்கும்.

    இந்த படத்தில் ஜானகியின் பிரமாதமான பாடலொன்று ,பிற ஹிட் பாடல்களின் நடுவே கண்டு கொள்ள படவில்லை.கொஞ்சம் interludes மெனக்கெட்டிருந்தால் ,இன்னும் உயரம் தொட்டிருக்கும். சரணத்தில் ,தர வேண்டிய transition space மிஸ்ஸிங். அவசரத்தில் பதிவு செய்தது போல அமைந்த ,இந்த அபூர்வ பாடலை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.(மெல்லிசை மன்னர் இதானாலேயே இழந்தது நிறைய.வைரங்களை தினத்தந்தி பேப்பர் கிழித்து pack பண்ணி கொடுப்பார் 70களில் .)

    படத்தில் நான் பார்க்கும் போது ,இரவு பாடலாக வரும்.இப்போது DVD க்களில் மிஸ்ஸிங். U Tube இலும் பட காட்சி இல்லை.என்னுடைய favourite pair களில் ஒன்று சிவாஜி-உஷாநந்தினி இணை.குறிப்பாக இப்படத்தில்.

    வருவான் மோகன ரூபன்

    Last edited by Gopal.s; 3rd August 2014 at 07:01 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2812
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஜஸ்ட் ரிலாக்ஸ்.



    இயக்குனர் வரிசை சி.வி.ராஜேந்திரன்.





    படம்: கலாட்டா கல்யாணம்

    இசை: மன்னர்

    நடனம்: தங்கப்பன் மாஸ்டர்

    ஒளிப்பதிவு டைரெக்டர்: பி.என்.சுந்தரம்
    சி.வீ.ராஜேந்திரன் ,சாதனைகள் போற்ற படுவதே இல்லை.

    கனவில் நடந்ததோ படமாக்கம்,உறவினில் fifty fifty பாடலில் அபூர்வ காமிரா கோணங்கள்,under water photography முயற்சி நில் கவனி காதலியில்,
    புதிய திரைகதை உத்தி புதிய வாழ்க்கையில், புதிய இளமை காதல் முயற்சி உடைகளில் இளமை,colour psychology ,டைட்டில் உத்தி என்று சுமதி என் சுந்தரி .

    பாவம் சில இயக்குனர்கள் பிழைப்பு நடத்தினாலும்,அங்கீகாரம் பெறுவதே இல்லை.

    நன்றி வாசு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #2813
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நல்ல பாடல்களுக்கு நன்றி கோ.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2814
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி வாசுதேவன் சார். மதுர கானத்தில் அதிகமாகப் பங்கு கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி எழுதுங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2815
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,



    'வீரத் திருமகன்' படத்தில் என்னுடைய பிடித்தம்

    'நீலப் பட்டாடை கட்டி
    நிலவென்னும் பொட்டும் வைத்து
    பால் போல சிரிக்கும் பெண்ணே
    பருவப் பெண்ணே'



    இப்பாடலைப் படமாக்கியிருக்கும் பிரம்மாண்டமும், பின்னணிகளும் அற்புதம். இப்பாடலுக்காக நதியிலே பிரம்மாண்ட தாமரைப்பூ, மற்றும் அதைச் சுற்றி தாமரை இலைகள் செட்டிங்ஸ் அமைத்துத் தர வேண்டும் என்று ஏ.வி. எம்மிடம் சொல்லி விட்டாராம் கறாராக திருலோகச்சந்தர். முதலில் 'அது ரொம்பக் கஷ்டம்' என்று மறுத்த தயாரிப்பாளர் பின் டைரெக்டரின் விடாப்பிடியின் காரணமாக அவர் விருப்பப்படி செட் போட்டுக் கொடுத்தாராம்.

    அமர்க்களமாக இருக்கும். ஆனால் மிகுந்த மெனக்கெடல். ஏ.வி.எம்.ஆயிற்றே.

    நடுவில் பெரிய தாமரைப்பூ செட்டில் நாயகி சச்சு ஆட, சுற்றி தாமரை இலைகள் போல அமைக்கப்பட்ட செட்களில் (நடன நடிகைகள் நின்று ஆட) எக்ஸ்ட்ரா நடன நடிகைகள் ஆடுவது பிரம்மாண்டம். (அதுவும் சுற்றிலும் அமைக்கப்பட்ட இலை வடிவ செட்கள் நடுவில் உள்ள தாமரைப்பூவை சுற்றி வேறு வரும்படி பின்னி எடுத்திருப்பார்கள்). இலைகள் வடிவ செட்டின் மேல் நின்று ஆட துணை நடன நடிகைகள் மிகவும் பயந்தனராம். (கிட்டத்தட்ட மொத்தம் 24 துணை நடிகைகள். சச்சுவை சேர்த்து 25) 'தண்ணீரில் விழுந்தால் என்னாவது' என்று வாக்குவாதமே ஏற்பட்டதாம். பின் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இப்பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்டதாம்.

    வழக்கம் போல சிரமமில்லாமல் எடுத்த

    'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்'

    சூப்பர் டூப்பர் ஹிட்டாகிப் போய்விட, கடின உழைப்பு தந்து எடுக்கப்பட்ட பாடல் பின்னுக்குப் போனது.

    நான் மேலே கூறியுள்ள விஷயங்கள் சச்சு 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கூறியது என்று நினைவு. ரொம்ப நாளாகி விட்டது. நீங்கள் 'வீரத் திருமகனை' பிடிக்கப் போக இப்போது ஞாபகம் வந்தது. காலையில் பெண்ட் எடுக்கிறீர்கள்.

    அது போல பாடலும் மிக மிக இனிமை.

    அது போல இந்தப் பாடலில் பின்னணி பாடும் கோரஸ் பணியை பாராட்டியே தீர வேண்டும். அற்புதமான கோரஸ்.

    சச்சுவும் உடம்பை வில்லாக வளைத்து ஆடுவார்.

    கண்ணதாசனின் அருமையான இயற்கை வர்ணிப்பு எளிமை வரிகள். மெல்லிசை மன்னர்களின் வெகு அசத்தலான டியூன் மற்றும் மதுர மயக்கும் இசை.

    'சுகக்குரல்' சுசீலாவும், 'ஈடு இணையற்ற' ஈஸ்வரியும் இணைந்து இன்ப ஊற்றை அள்ளி செவிகளில் பாய்ச்சுகிறார்கள்.

    ஆனால் பாடலுக்குக் கிடைத்த பலன் ரொம்பக் கம்மி.

    Last edited by vasudevan31355; 3rd August 2014 at 08:05 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes Russellmai liked this post
  9. #2816
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் வாசு சார்
    வீரத்திருமகன் - பாடல் பற்றிய விரிவான பதிவு அருமை . மிகவும் இனிமையான பாடல்கள் . அதே போல் கலாட்டா
    கல்யாணம் பாடலும் சூப்பர். நேற்று மன்னவன் வந்தானடி - வெளியான நாள் . இந்த படத்திலிருந்து எனக்கு பிடித்த பாடல் .
    Last edited by esvee; 3rd August 2014 at 08:27 AM.

  10. Likes Russellmai liked this post
  11. #2817
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    வீரத்திருமகன் - பாடல் பற்றிய விரிவான பதிவு அருமை . மிகவும் இனிமையான பாடல்கள் . அதே போல் கலாட்டா
    கல்யாணம் பாடலும் சூப்பர். நேற்று மன்னவன் வந்தானடி - வெளியான நாள் . இந்த படத்திலிருந்து எனக்கு பிடித்த பாடல் .
    நன்றி எஸ்வி.மன்னவன் வந்தானடி வித்யாசமான,கலகலப்பான ,ஜனரஞ்சக படம்.நினைவு படுத்தியதற்கு நன்றி.குறிப்பாக இந்த பாடல்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #2818
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    rhythm arrangement என்பது ஒரு பாடலையே நிறம் மாற்றும் ரசாயனம். பாடலின் meter விட்டு தாண்டி குதிக்கலாம். Harmony ,Contrast ,Absurd &weird combinations என்று விளையாடலாம். ஆனால் பரிசோதனையாய் மட்டும்
    முடியாமல் இசையாக ,விரும்பும் படி இருக்க வேண்டும்.

    அப்படி தாளத்தால் வேறு படுத்தி காட்ட பட்ட இரண்டு வசீகர பாடல்கள்.
    ஒன்று 70இன் மெல்லிசை மன்னர். இன்னொன்று 85களின் இசைஞானி.
    இரண்டுமே இசையமைப்பாளர்களை பிழிந்தெடுக்கும் ஆட்கள்.ஒன்று ஏ.வீ.எம். மற்றது சி.வீ.ஸ்ரீதர்.

    பம்மலாரின் பிடித்தம் என்று கேள்வி. திராவிட மன்மதனின் ,இளமை,அழகு துள்ளும் அழகாக கோரியோகிராப் செய்ய பட்டு ,அழகான உடையமைப்பு ,ஜோடி ரசாயனம் அமைந்த எங்க மாமாவின்,என்னங்க?
    தாள வித்தையை ரசியுங்கள்.




    ஸ்ரீதரின் ,இளைய ராஜா இணைவில் மிக மிக சிறந்த படம் "தென்றலே என்னை தொடு "(நினைவெல்லாம் நித்யா,ஒரு ஓடை நதியாகிறது மற்றவை).பாடல்கள் அப்பப்பா.hats off இளையராஜா.வழக்கம் போல ஸ்ரீதர் சொதப்பியிருப்பார் என்று சொல்லவும் வேண்டுமோ?

    ஆனால் அந்த படத்தில் ரொம்ப கவனிக்க படாத இந்த தாள அதிசயம்.
    புதிய பூவிது.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. Likes Russellmai liked this post
  14. #2819
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற 'நீலப்பட்டாடை கட்டி நிலவென்னும் போட்டும் வைத்து' பாடலும் சரி அது படமாக்கப்பட்ட விதமும் சரி மிக மிக அருமை மட்டுமல்ல, புதுமை மட்டுமல்ல சாதனையும் கூட, குறிப்பாக மிகமிகக் குறைவான டெக்னிக்கல் உத்திகள் கொண்ட அன்றைய காலகட்டத்தில். கம்ப்யூடர் கிராபிக்ஸ் என்ற ஒன்று வந்ததால் இன்று நிஜமான உழைப்பின் மகத்துவங்கள் மங்கிப்போய் விட்டன.

    அதே திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இப்பாடல் படமாக்கப்பட்ட விதத்தை இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் விளக்கினார். அதாவது தாமரைப்பூவும் அதைச்சுற்றி தாமரை இலைகளும் தண்ணீரில் மிதக்க வேண்டும். இதொன்றும் பிரமாதம் இல்லை. மிதவைக்கட்டி மிதக்க விட்டுவிடலாம். ஆனால் பூவின்மேலும் ஒவ்வொரு இலையின்மேலும் நடனமாதர் நின்று ஆட வேண்டும் என்றபோதுதான் பிரச்சினை வந்தது. மிதக்கும் இலையின்மீது நின்று எப்படி ஆடுவது?. எப்படி தாங்கும்?. எப்படி பேலன்ஸ் கிடைக்கும்?. என்று குழம்பியபோது ஆர்ட் டைரக்டரும், ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் சேர்ந்து உட்கார்ந்து மண்டையை உடைத்துக்கொண்டபோது ஒரு ஐடியா பிறந்தது.

    அதாவது தாமரைப்பூவையும் ஒவ்வொரு தாமரை இலையையும் ஒவ்வொரு மர பீப்பாயின்மேல் பொருத்தி அதை மிதக்க விடுவது, பூவும் இலையும் மட்டுமே தண்ணீருக்கு வெளியே தெரியும். மர பீப்பாய் (டிரம்) முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும். அதன்மீது நடன மங்கையர் நின்று ஆடும்போது பேலன்ஸ் கிடைக்கும் என்று முடிவாகி அதன்படியே செய்தனர். ஒவ்வொரு இலையின்கீழும் ஒவ்வொரு மர பீப்பாய் மறைந்திருக்கும். அப்படியும் சில நடன மாதர்கள் பேலன்ஸ் தவறி தண்ணீரில் விழுந்து எழ, அவர்கள் காஸ்ட்யூம் காயும்வரை காத்திருந்து படம் பிடித்தனராம்.

    ஆனால் மக்கள் இந்தப்பாடலை அவ்வளவாகக் கொண்டாடவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். ரோஜா மலரே ராஜகுமாரியும், பாடாத பாட்டெல்லாம் கொண்டாடப்பட்டதில் பாதியளவு கூட இப்பாடலுக்கு கிடைத்ததில்லை.

    இப்பாடல் இலங்கை வானொலியின் பயங்கர ஹிட். நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் இரண்டு இஸ்லாமிய சகோதரிகள் இந்த 'நீலப்பட்டாடை கட்டி' பாடலையும் வானபாடியில் இடம்பெற்ற 'கங்கைகரைத் தோட்டம்' பாடலையும் தினமும் விரும்பிக் கேட்பார்கள்...

  15. Likes Russellmai liked this post
  16. #2820
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ம்ம் ஈத் ஹாலிடேஸ் வந்தாலும் வந்தது வெளியூர் எல்லாம் சென்று வீட்டில் வந்து கொஞ்சம் ஜூரம் உடல் நிலை க் குறைவு என அவதிப் பட்டு..இதோ லீவ் முடிஞ்சு..கொலம்பஸ் கொலம்பஸ் வந்துட்டோம் ஆஃபீஸ்..

    சைல ஸ்ரீ வரை படித்திருக்கிறேன்..வழக்கம் போல் அவரவர்கள் களத்தில் புகுந்து சிக்ஸ் சிக்ஸ் ஆக அடித்து த் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்..படிக்க சந்தோஷமாக இருக்க்க்கிறது..

    வீரத்திருமகனில் தான் பாடாத பாட்டெலாம்பாட வந்தாள் இல்லியோ..அந்தப் பெண் எஸ் ..சர் பட்டம் வாங்காத ரோசா எஸ்.சரோஜா என நினைவு..முகத்தில் ரஸ்ட் ஜாஸ்தி இருக்கும்..குறும்பு புன்னகைவேறு..ராமண்ணாவைக் கல்யாணம் செய்து நடிப்பதை நிறுத்தி போன வருடமோ என்னவோ காலமானதாகப் படித்த நினைவு..

    ம்ம்..வருகிறேன்..மீண்டும்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •