பாடல்களுக்கான இணைப்பு
http://www.raaga.com/channels/tamil/album/T0001269.html
பாடல்களுக்கான இணைப்பு
http://www.raaga.com/channels/tamil/album/T0001269.html
பாடல் காணொளிகள்
1. காளை வயசு
http://youtu.be/vfXy8i_7hvY
2. அன்பாலே தேடிய
http://www.youtube.com/watch?v=rO0uD...3F5CC29BBF9CF5
3. தன்னைத் தானே
http://youtu.be/nDdif7Tqyug
4. வயசுப் பெண்ணை
http://youtu.be/qKJbA-fztdY
5. கட்டடத்துக்கு மனைப் பொருத்தம்
http://youtu.be/wxt4iEdakxA
6. ivar khana
http://youtu.be/1IZDOznuhEk
7. thara thara vanthara
http://youtu.be/OJOgw-z4HtY
பத்மினியை சந்தேகப் படும் காட்சி
http://youtu.be/GwIwZbwhmoI
sivaji blames padmini
http://youtu.be/eKTKSB5CTQs
sivaji ganesan wants to marry Padmini
http://youtu.be/xI5EtC_hq6A
தெய்வப் பிறவி திரைப்படத்திலிருந்து சில நிழற்படங்கள்
http://i1146.photobucket.com/albums/...ps95748ca6.jpg
http://i1146.photobucket.com/albums/...ps451eb740.jpg
தெய்வப் பிறவி திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து ... நிழற்படத்திற்கு நன்றி, ஏவி.எம்.மின் முகநூல் பக்கம்.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...03935122_n.jpg
இணைப்பு - https://www.facebook.com/photo.php?f...levant_count=1
மேற்கண்ட இணைய தளத்திலிருந்து இன்னொரு நிழற்படம்
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...17485912_n.jpg
அபூர்வ நிழற்படம்
தெய்வப் பிறவி திரைப்படத்தின் நூறாவது நாள் விழா புகைப்படம், பேசும் படம் செப்டம்பர் 1960 இதழிலிருந்து.
http://i1146.photobucket.com/albums/...ps4b69206a.jpg
தெய்வப் பிறவி திரைப்படத்தின் தகவல் பரிமாற்றங்களை இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த திரைப்படத்திற்குப் போகலாமா...
ராஜ பக்தி 27.05.1960
சிவாஜி ,வைஜயந்திமாலா கைகளை ஏந்தியபடி ஒரு காட்சி. கீழே நடிகர்திலகத்தின் கமெண்ட் .....
நட்சத்திர குவியல் ,ஆனால் ஒளி இல்லையே என்று.
நான் கொட்டகை போன போது மூன்று போஸ்டர்களில் (1971) பத்மினி,பண்டரிபாய்,பானுமதி,வைஜயந்தி என்று நாலு நட்சத்திரங்கள். படத்தில் நடிகர்திலகம் தாய் நாட்டை வில்லி பானுமதியிடம் இருந்து காக்க பாடு படுவார். பண்டரி முதல் ஜோடி.சித்திரவதையில் சாகடிக்க படுவார். வைஜயந்தி அடுத்த ஜோடி. பத்மினி பாலையா ஜோடியாக கணவனை எதிர்க்கும் வீராங்கனையாக.சிவாஜி பெயர் விக்ராந்தகன் என்று ஞாபகம். இந்த மாதிரி படங்களிலும் அவர் நடிப்பு ஒளி வீசும். ஒரு வீரனுக்குரிய அடக்கமான வீர நடிப்பு. அமைதியுடன் அமெரிக்கை கலந்திருக்கும்.
இதுவும் ,குறவஞ்சியும் குடும்ப பட trend நிலவிய போது மாட்டி எதிர்பார்த்த வெற்றி வாய்ப்பை இழந்தவை.
Sivaji Ganesan Filmography Series
62. ராஜ பக்தி Raja Bhakthi
http://i1146.photobucket.com/albums/...ps5fab12bb.jpg
தணிக்கை – 10.05.1960
வெளியீடு – 27.05.1960
தயாரிப்பு – பி. ராஜமாணிக்கம்
மூலக்கதை – வி.ஸி.கோபால ரத்தினம்
திரைக்கதை வசனம் – கு.ராஜவேலு, எம்,எஸ். முத்து கிருஷ்ண வாத்தியார்
பாடல்கள் – மருதகாசி, ராஜவேலு, பொன்முடி, தமிழ்ழகன்
சங்கீதம் – கோவிந்தராஜுலு நாயுடு
பின்னணி பாடியோர் – பி.சுசீலா, எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஜிக்கி, ராதா ஜெயலட்சுமி, ஏ.பி.கோமளா
நடிகைகள் – பானுமதி, பத்மினி, வைஜெயந்திமாலா, பண்டரிபாய், ஈ.வி.சரோஜா
நடிகர்கள் – சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், ஸ்டண்ட் சோமு மற்றும் பலர்
ஒளிப்பதிவு – என்.சி.பாலகிருஷ்ணன்
ஸ்டூடியோ – கோல்டன் சினி ஸ்டூடியோஸ்
ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்
டைரக்ஷன் – கே. வேம்பு
அசோசியேட் டைரக்ஷன் – டி.ஜி.ரத்தினம்
தயாரிப்பு – பி.ராஜமாணிக்கம்
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
Quote:
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : தினமணி : 27.5.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC5815-1.jpg
ராஜ பக்தியின் இனிமையான பாடல் காட்சி
http://youtu.be/YCbo6Ewmo6U
ராஜ பக்தி திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்காக நெடுந்தகட்டின் முகப்பு
http://upload.wikimedia.org/wikipedi...aja_bakthi.jpg
ராஜ பக்தி திரைப்படத்தைப் பற்றி விக்கிபீடியா பக்கத்தில் படிக்க
http://en.wikipedia.org/wiki/Raja_Bakthi
நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பிற்கு மற்றொரு படம். அவலை நினைத்து உரலை இடித்த கதை, அல்ல்து இது போன்ற ஏதாவதொரு பழமொழியை நினைவூட்டிக் கொள்ள வாய்ப்பளித்த படம். பானுமதி மதாலஸா என்ற ராணியாக நடித்திருந்தார். பத்மினி வைஜயந்திமாலா பண்டரிபாய் என பெண்கள் முக்கியமான பாத்திரங்களில் அமைக்கப் பட்டிருந்தாலும் சுவாரஸ்யமற்ற திரைக்கதை படத்தை மிகவும் மெதுவாக நகர்த்தி வேகத்தைக் குறைத்து விட்டது. நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பு அழகான தோற்றம் இவையனைத்தும் விழலுக்கு இரைத்த நீராக்கி விட்டன. நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை மேலும் மெருகூற்றி திரைக்கதையை அமைத்து அவர் இன்னும் அதிக காட்சிகளில் நடிக்க வாய்ப்பளித்திருந்தால் மிகச் சிறந்த படமாக வந்திருக்கும். வலுவான கதை, பலவீனமான திரைக்கதை அமைப்பு படத்தை மக்களிடம் சரியான முறையில் சென்றடைய விடாமல் செய்து விட்டன. நடிகர் திலகத்தைத் தவிர இப்படத்திற்கு ஆறுதல் சேர்த்தவை, பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் கோவிந்தராஜுலு நாயுடு அவர்களின் இசையமைப்பும்.
பாலசரஸ்வதி தேவியின் பெயர் பின்னணி பாடகர்கள் பட்டியலில் இல்லை. ஆனால் இசைத் தட்டில் பார் முழுதும் பாடலைப் பாடியவர் பெயராக அவர் பெயர்தான் இடம் பெற்றது என கேள்விப் பட்டுள்ளேன்.
RAJABAKTHI
MUCH PUBLICISED AND EXPECTED MOVIE WHICH ATTRACTED HUGE CROWDS FOR RESERVATIONS AND OPENING DAY. Unfortunately NT was not utilised properly and the cofused story and poor dirction made it a flop. that was the talk on those days in our colony and film circles.
படிக்காத மேதை ரங்கன் மூடனுமல்ல ,உலகம் தெரியாதவனும் அல்ல. படத்தின் தலைப்பே சொல்வது போல formal education தர படாத ,transparency கொண்ட, நேரிடை சிந்தனை கொண்ட (no crookedness ), utility man என்று சொல்ல படும் நல்லவன் .(வெகுளி என்ற சொல்ல விரும்பினால் அது உங்கள் விருப்பம்)
பின்னாளில் பிரபலமான Emotional Intelligence (intelligence Quotient என்ற பிரபல மனித வள மதிப்பீட்டு முறைக்கு மாற்றானது) என்பதை ஒட்டி Forest Gump போன்ற படங்கள் 1990 களில் பிரபலம் அடைந்தது. ஆனால் 1960 இல் இதை நம் கே.எஸ்.ஜி, பீம்சிங் ,சிவாஜி இணைவு கொடுத்ததை நாம் அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.
இதில் முக்கிய அம்சங்கள் -
Emotional Intelligence, or EI, describes an ability or capacity to perceive, assess, and manage the emotions of one's self, and of others.* EQ, or Emotional Quotient, is how one measures Emotional Intelligence.*
Impulse Control- Delay his own gratification by allowing others ahead on priority.
Self Awareness-Understand his own moods and Emotions .
Self Management-More Action and utility oriented.
Social Awareness- Ability to connect and develop Rapport with new people.
Relationship Management-Understand other's emotions and treat them as they wish to be treated.(Empathy)
பல ஆய்வுகள் நடத்தி ,மனிதர்களின் திறனை,வாழ்க்கையில் அடைய போகும் உயரங்களை வெற்றிகளை நிர்ணயிக்க IQ போதுமானதல்ல என்று கண்டு பின்னாளில் develop ஆனா ஒரு concept EQ . ஆனால் நமக்கு சிவாஜியின் வழி 1960 இலேயே கிடைத்தது. நம் இனம் அதை புரிந்து ஆதரித்ததா என்பது வேறு. ஆனால் 1960 யின் அதிக பட்ச வசூலை கொடுத்தது தமிழகம்.
நடிகர்திலகத்தின் நடிப்பிலேயே மிக மிக சிறந்த படங்களில் ஒன்று. பாத்திரத்தை மிக மிக துல்லியமாக புரிந்து கொண்டு நூல் பிடித்து accurate ஆக ரசிக்கும் படி கலை நுட்பத்துடன் பின்னியிருப்பார்.(What a Spontaneity???)
360- இது நானே ராஜா பட பாடல். திடீரென்று 420 ஆகி விட்டாயே?
கா...கா ஏன் இல்லை...இருக்கிறதே :-)
http://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்களும்,பாத்திர படைப்பும், சிவாஜி அதை கையாண்ட விதம் எல்லாமே ஒரு magic . படிக்காத மேதை சிவாஜியின் நடிப்பு ஆபரணங்களில் ஒரு கோஹினூர் வைரமாய் மின்னும்.
1)ஆரம்ப அறிமுக காட்சி.
2)சௌகாரை கல்யாணம் செய்ய ஒப்பும் காட்சி.
3)சௌகாரின் முதலிரவு அறைக்குள் தள்ளப்பட்டு அவர் மாமாவுடன் ஜீப்பில் சென்ற அனுபவம்.
4)மற்றவர்களின் உதாசீனத்தை பொருட்படுத்தாமல் ,நல்லது என்ற பட்டதை சொல்லி மற்றவர்களை அடக்க முயலும் காட்சிகள்.
5)சௌகார் மனமறியாமல் அவரை கண்டித்து அடக்கும் காட்சி.
6)மாமா வெளியேற சொல்லும் சொல்ல அவர் முறைக்கும் காட்சி. பிறகு வண்டியில் செல்லும் காட்சி.
7)சிகரெட்டுடன் மாமாவை சந்திக்க வரும் காட்சி.
8)மாமாவின் மரண காட்சி.பிறகு தொடரும் இறுதி சடங்கு காட்சிகள்.
அப்பப்பா ,இதற்கு மேலும் Stanislavsky நினைத்தும் பார்க்க முடியுமா?
இந்த படம் 200 முறையாவது பார்த்திருப்பேன். இன்றும் நண்பர்கள் வந்தால் இந்த படத்தை போட்டு பார்ப்பது என் மகிழ்ச்சிகளுள் தலையானது.
கோபால் வாசு முரளி கார்த்திக் சுப்ரமணியன் ராகவேந்திரன் சார் அவர்களின் எண்ணங்களை எழுத்துகளை படிக்கும் போது தோன்றிய ஒரு சிறிய பொறி
சுந்தர காண்டம் என்பது இராமாயணத்தில் ஒரு பகுதி ஹனுமார் ராமரின் கணையாழியை சீதாவிடம் கொடுபதற்காக ஸ்ரீலங்கா சென்று கணையாழியை சீதாவிடம் கொடுத்து பின்பு சிறிலங்காவை எரித்து ராமரிடம் வந்து கண்டேன் சீதையை என்று சொல்லும்வரை.
பல பெரியவர்கள் ராமாயணம் படித்தால் மிக பெரிய புண்ணியம் அதை விட சுந்தர கண்டம் படித்தால் அதை விட புண்ணியம் என்பார்கள் . அதே போல்தான் நமது திரியும்
சுந்தர காண்டத்தில் ஹனுமார் சீதையை யார் என்று தெரியாமல் தேடி கண்டு பிடித்து கணையாழியை ஒப்படைக்க வேண்டும் தவறான இடத்தில சேர்பிதுவிடகூடாது அப்போது வால்மீகி ஹனுமார் சீதை யார் என்று கண்டு கொளவர்துகு சில டெக்னிக்கலை கடை பிடிப்பார் ஒரு சிறிய உதாரணம் ஹம்சதுலிக மஞ்சத்தில் மண்டோதரி உறங்கி கொண்டு இருக்கும் போது இது சீதை ஆக இருக்குமோ என்று தவறாக நினைத்து பிறகு சீதையோ கணவனை பிரிந்தவல் எப்படி இப்படி நிம்மதியாக உறங்கி கொண்டு இருப்பாள் என்று மேனஜ்மெண்ட்
கான்செப்டில் elimination process என்ற ஒன்றை கடைபிடிப்பர் பிறகு identification process மூலமாக சீதையை அசோகா வனத்தில் கண்டுபிடிப்பார் ராமாயணத்தை கதையாகவும் படிக்கலாம்
மேனஜ்மெண்ட் கான்செப்டில் அனலிசிஸ் செய்யவும் செய்யலாம ்
அதே போல் நம்மவரின் திரைப்படங்களை திரைப்படமாகவும்
பார்கலாம் கோபால் சார்/வாசு சார் போல் மனோதத்துவ ரீதியாக அலசுவும் செய்யலாம்
Sivaji Ganesan Filmography Series
63. படிக்காத மேதை Padikkadha Medhai
http://www.freewebs.com/pammalar/Krishna1.jpg
தணிக்கை – 21.06.1960
வெளியீடு – 25.06.1960
தயாரிப்பு – பாலா மூவீஸ் என்.கிருஷ்ணசாமி
மூலக்கதை – ஆஷா பூர்ண தேவி
வசனம் – கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
இசை – கே.வி.மகாதேவன்
பாடல்கள் – அமரகவி சுப்ரமணிய பாரதியார், மருதகாசி, கண்ணதாசன்
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன், பி.சுசீலா, பி.லீலா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, கே.ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
ஒளிப்பதிவு – நிமாய் கோஷ் மற்றும் விட்டல் ராவ்
திரைக்கதை, எடிட்டிங், டைரக்ஷன் – ஏ.பீம்சிங்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், பி.கண்ணாம்பா, சௌகார் ஜானகி, டி.ஆர்.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, டி.எஸ்.துரைராஜ், முத்துராமன், சந்தியா, டி.பி.முத்துலட்சுமி, எஸ்..ஏ.அசோகன், சிவகாமி, எம்.ஆர்.சந்தானம் மற்றும் பலர்
சென்னையில் வெளியான திரையரங்குகள்
சித்ரா, கிரௌன், சயானி
100 நாட்களும் அதற்கு மேலும் வெற்றி நடை போட்ட திரையரங்குகள்
1. சென்னை சித்ரா – 24 வாரங்கள்
2. சென்னை கிரௌன் – 116 நாட்கள்
3. சென்னை சயானி – 116 நாட்கள்
4. மதுரை தங்கம் – 116 நாட்கள்
5. கோவை டிலைட் – 116 நாட்கள்
6. கொழும்பு கெயிட்டி – 117 நாட்கள்
7. திருச்சி ஜூபிடர் – 116 நாட்கள்
8. சேலம் பேலஸ் – 116 நாட்கள்
வேலூர் தாஜ் திரையரங்கில் 90 நாட்களும், மற்றும் 26 அரங்குகளில் 50 நாட்களைக் கடந்தும் வெற்றி நடை போட்டது.
விளம்பரம் மற்றும் திரை நிழற்படங்கள் – உபயம் இதயவேந்தன் சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம் மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்.
Quote:
பாடல்களின் விவரங்கள்
1. விந்தையிலும் பெரிய விந்தையடி - பி.லீலா
2. உள்ளதைச் சொல்வேன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
3. இன்ப மலர்கல் பூத்துக் குலுங்கும் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
4. பக்கத்திலே கன்னிப் பெண் இருக்கு - ஏ.எல்.ராகவன், கே.ஜமுனா ராணி
5. சீவி முடிச்சு - டி.எம்.சௌந்தர்ராஜன்
6. படித்ததினால் அறிவு பெற்றோர் - எம்.எஸ்.ராஜேஸ்வரி
7. ஒரே ஒரு ஊரிலே - டி.எம்.சௌந்தர்ராஜன், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
8. எங்கிருந்தோ வந்தான்- சீர்காழி கோவிந்தராஜன்
9. ஆடிப் பிழைத்தாலும் - பி.லீலா
10. ஒரே ஒரு ஊரிலே - டி.எம்.சௌந்தர்ராஜன்
பாடல் காட்சிகளின் காணொளிகள்
1. விந்தையிலும் பெரிய விந்தையடி
http://www.youtube.com/watch?v=uAR7wYw90BE
2. உள்ளதைச் சொல்வேன்
http://www.youtube.com/watch?v=K1I3c64ieBs
3. இன்ப மலர்கள் பூத்துக் குலுங்கும்
http://www.youtube.com/watch?v=PUPgvp8FBlc
4. பக்கத்திலே கன்னிப் பெண் இருக்கு
http://www.youtube.com/watch?v=yZ3Y2HCj2zs
5. சீவி முடிச்சு சிங்காரிச்சு
http://www.youtube.com/watch?v=UFD_RsdulWw
6. படித்ததினால் அறிவு பெற்றோர்
http://www.youtube.com/watch?v=YD5JQ49vN4M
எங்கிருந்தோ வந்தான் பாடல் காட்சி
http://youtu.be/rV8yRtU8jmo
ஒரே ஒரு ஊரிலே
http://youtu.be/Uh3980VY49Y
ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்
http://youtu.be/EiVoDQBzsko
Even today If I watched the movie, NT makes me to cry in certain scene particularly
when he meets Kannamba after Ranga Rao Death.Not only me every one will cry while
watching that scene. That is the greatness of NT.
படிக்காத மேதை ... திரைப்படத்தைப் பற்றிய முரளி சாரின் பதிவு மீண்டும் இங்கே நமக்காக
பதிவிட்ட நாள் - 01.01.2008
மேற்காணும் பதிவுகளுக்கான இணைப்புQuote:
படிக்காத மேதை
திரைக்கதை இயக்கம்: பீம்சிங்
வசனம்: கே.எஸ்.ஜி
தயாரிப்பு: பாலா மூவிஸ்
இசை : கே.வி.மஹாதேவன்
வெளியான நாள்: 25.06.1960
மறக்க முடியாத ப வரிசை படங்களில் ஒன்று.
ஊரில் பெரிய செல்வந்தர் ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். மூத்த மகள் ராஜம்மா ஒரு விதவை. அவளின் மகன் சந்துரு. மூத்த மகன் தியாகு அவன் மனைவி கமலா. இரண்டாவது மகன் ஸ்ரீதர், அவன் மனைவி மங்களா. மூன்றாவது மகன் சேகர், கடைக்குட்டி கீதா. இவர்கள் அனைவரும் (சந்திரசேகரின் மனைவியையும் சேர்த்து) ஒன்றாக வசிக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருக்கும் இன்னொரு முக்கியமான நபர் ரங்கன். ஒரு தூரத்து உறவினர் மகன். ஆனால் சிறு வயது முதல் இங்கே வாழ்ந்து வருபவன். ரங்கன் படிக்கவில்லை. ஆனால் வீட்டில் உள்ள எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்பவன். சந்திரசேகருக்கு மணி விழா (60th Birthday) கொண்டாட்டத்துடன் படம் ஆரம்பம்.
அந்த மணி விழாவிலே சந்திரசேகரின் நண்பரான ஒரு தொழில் அதிபருக்கு கீதாவை பிடித்து போய் விடுகிறது. அவரது மகனுக்கு இந்த பெண்ணை மனமுடிக்கலாம் என்று நினைக்கிறார். சந்திரசேகரின் மூன்றாவது மகன் சேகர் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு சாதரண குடும்பத்தை சேர்த்த பெண். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் வேலை பார்க்கும் அவளை அந்த வீட்டு பெண்ணாக நினைத்துக்கொண்டு கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் தன் அக்கா வீட்டில் இருக்கிறாள். அக்காள் கணவன் ரிக்க்ஷா ஓட்டுகிறான். இதற்கிடையில் சந்திரசேகரின் மனைவி கோவிலில் வைத்து தன் பழைய Friend-ai பார்க்கிறாள். அவளின் பெண்ணையே தன் மருமகளாக்கி கொள்ள முடிவெடுக்கிறாள். ஆனால் மகன் ஒப்பு கொள்ள மறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். கொடுத்த வாக்கை காபாற்றுவதற்க்காக ரங்கன் அந்த பெண் லக்ஷ்மியை கல்யாணம் செய்துகொள்கிறான். கல்யாணத்தன்று சந்திரசேகரின் மூன்றாவது மகனுக்கு தான் காதலித்த பெண் பணக்கார வீட்டு பெண் இல்லை என்று தெரிகிறது. வீட்டுக்கு சென்று சொத்தில் பங்கு கேட்கும் மகனை சந்திரசேகர் துரத்தி விடுகிறார்.
கீதாவிற்கு கல்யாணம் நிச்சயமாகிறது. தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்திருந்த 20 லட்சம் நஷ்டமாகிறது. இதனால் கல்யாணம் நின்று போகிறது. ராஜம்மாளும் அவளது மகனும் சேர்ந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்கிறார்கள். பழி லக்ஷ்மியின் மேல் விழுகிறது. சந்திரசேகருக்கு வீட்டில் மரியாதை குறைகிறது. மகன்களும் மருமகள்களும் அவரை உதாசினப்படுத்துகின்றனர். காரை விற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இந்த சூழ்நிலையில் தன் மாமாவிற்கும் அத்தைக்கும் விசுவாசமாக இருக்கும் ரங்கனுக்கும் மகன்கள்- மருமகள்கள் இடையே சண்டை வருகிறது. ரங்கனின் மனைவி லக்ஷ்மி நாம் தனி குடித்தனம் போய்விடலாம் என்று சொல்ல ரங்கனுக்கு பயங்கர கோபம் வருகிறது.
இதையெல்லாம் பார்க்கும் சந்திரசேகர் ரங்கனை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முதலில் வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைக்கும் ரங்கனுக்கு அவர் சீரியசாக சொல்கிறார் என்று தெரிந்ததும் திகைத்து போய் சண்டை போட்டும் அவர் மனசு மாறவில்லை. மனைவியுடன் வெளியே போகும் அவனுக்கு சேகரின் சகலையின் நட்பு கிடைக்கிறது. தன் வீட்டிலேயே அவர்களை தங்க வைத்து ஒரு மில்லில் வேலையும் வாங்கி கொடுக்கிறான். சம்பளம் வாங்கின பணத்திலிருந்து மாமாவிற்கு பிடித்தமான சிகரெட்டை வாங்கி போக, அவர் சத்தம் போட்டு அவனை அனுப்பி விடுகிறார். மகன்களின் உதாசினம் மற்றும் ரங்கனின் பிரிவு அவரை அதிகமாக பாதித்து அவர் உயிரை பறித்து விடுகிறது. ஆனால் அவரின் மரணம் பற்றி ரங்கனுக்கு தகவல் தெரிவிக்காமலே எல்லாம் முடிந்து விடுகிறது.
இது தெரியாமல் வீட்டிற்க்கு வரும் ரங்கன் உடைந்து போய் விடுகிறான். தகப்பனாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பணம் செலவாகி விடும் என்று செய்யாமல் தவிர்க்கும் மகன்களை பார்க்கும் போது அவனுக்கு கோபம் வருகிறது. தன் அத்தை கல்யாணத்தின் போது போட்ட நகைகளை விற்று பொருட்கள் வாங்கி வரும் ரங்கனை " பெற்ற மகன்களுக்கே இல்லாத அக்கறை உனக்கு ஏன்" என்று சொல்லி சத்தம் போடும் அத்தையிடம் ரங்கன் வாக்கு வாதம் செய்ய, அத்தை கோவத்தில் நீ வீட்டு வாசல்படி மிதிக்க கூடாது என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். அந்த வீட்டிற்க்கு மேலும் பல கஷ்டங்கள். வெளியிலிருந்து கேள்விப்படும் ரங்கன் தன்னால் ஆன உதவிகளை செய்ய முற்படுகிறான்.
மில்லில் ஒரு பெரிய விபத்திலிருந்து முதலாளி மகனை காப்பாற்றும் ரங்கன் அவன்தான் கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்தவன் என்பது தெரிந்ததும் அவனையும் அவனது தந்தையையும் கடுமையாக பேசி விடுகிறான். ராஜம்மாளின் மகன் சந்துருவை கடன்காரார்களிடமிருந்து காப்பாற்றும் ரங்கன் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கி கொடுக்கிறான். சந்திரசேகரின் மகன் சேகர் மனைவியோடு திரும்பி வர அவனையும் வாழ வைக்கிறான்
சோதனைகளின் உச்சக்கட்டமாக சந்திரசேகரின் வீடு ஏலத்திற்கு வர, அவரது மனைவியை அது கடுமையாக பாதிக்கிறது.. மகன்கள் இருவரும் கை விரித்து விட அவள் நோய்வாய்ப்படுகிறாள்
அத்தையின் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்ததும் ஒரு ஆன்மிகவாதியிடமிருந்து ஒரு மந்திர தாயத்து வாங்கி கொண்டு வீட்டிற்க்குள் சுவரேறி குதிக்கும் ரங்கனை (அத்தை வீட்டு வாசல் படி மிதிக்க கூடாது என்று சொன்னதால்) இரு மகன்களும் தாக்க அப்போது உண்மையை சொல்கிறான்.
சந்திரசேகரின் தொழில் அதிபர் நண்பர் அந்நேரம் ஏலம் போன வீட்டை மீட்டு அதை ரங்கன் பெயருக்கே பதிவு செய்து கொண்டு வருகிறார். மேலும் கீதாவை தன் மகனுக்கு கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். ரங்கனின் பெயரில் வீடு வந்து விட்டது என்று தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் தியாகுவையும் ஸ்ரீதரையும் ரங்கன் நீங்க ரெண்டு பேரும் இல்லேன்னா நானும் இந்த வீட்டிலே இருக்கபோறதிலே என்று சத்தம் போட, அவர்களுக்கு ரங்கனின் பாசமும் பண்பும் புரிகிறது. எல்லோரும் மீண்டும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ தொடங்குகிறார்கள்.
அன்புடன்
பாகம் 2
நடிகர் திலகத்தின் ஒரு சில படங்களை பற்றி விமர்சிக்கும் போது சில காட்சிகள் நம்மை வெகுவாக கவரும். அதைப்பற்றி எழத தூண்டும். வேறு சில படங்களை எடுத்துகொண்டோமானால் எதை எழுதுவது எதை விடுவது என்று திகைத்து போய் நிற்போம். அந்த இரண்டாவது ரகத்தை சேர்ந்தது படிக்காத மேதை. நண்பர் சிவன் சொன்னது போல இப்படியும் நடிக்க முடியுமா என்ற மலைப்பு பார்ப்பவர் மனதினில் அலையடிக்கும்.
NT அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து A Film from Krishnaswamy Bala Movies என்று படம் முடியும் வரையிலும் பின்னியிருப்பார். எப்போதுமே வெகுளி,அப்பாவி வேடங்கள் என்றால் வெளுத்து வாங்கும் NT இதில் முரட்டுத்தனமான விசுவாசமிக்க ரங்கன் கதாபாத்திரத்தை மெருகேற்றி ஜொலிக்க வைத்திருப்பார். சில உதாரணங்கள். மணி விழாவில் குடும்பத்தினரை எல்லாம் நண்பருக்கு அறிமுகப்படுத்தும் காட்சி. எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் NT-யை யார் என்று கேட்க, தூரத்து சொந்தக்கார பையன் என்று ரங்கராவ் சொல்ல அதற்கு " அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அருமையாக இருக்கும்.
கீதாவை பெண் பார்க்க வரும் மாப்பிளையின் கையை பிடித்து பலம் பார்த்துவிட்டு ஆள் நல்ல பலசாலிதான் என்று முகபாவத்திலேயே வெளிப்படுத்துவது, தன்னை மட்டம் தட்டும் மருமகள்களையும் மகன்களையும் அழகாக பதில் சொல்லி மடக்குவது, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"), வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் மாமாவிடம் பேசும் பேச்சு (இதை நண்பர் பிரபுராம் ஏற்கனவே எழுதிவிட்டார்), வேலை கொடுக்க லஞ்சம் (1960 லியே அன்பளிப்பு என்ற வார்த்தை வந்து விட்டது) கேட்கும் கிளார்க்கை மானேஜரிடம் மாட்டி விடுவது, முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ் ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casuala-ga சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது, மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது, அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த Road-ile நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?")
ஒரே வரியில் சொன்னால் அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை எல்லா காட்சிகளையுமே குறிப்பிட வேண்டும்.
இந்த படத்தின் மற்றொரு தூண் ரங்காராவ். அவரது மிக சிறந்த படங்களை எடுத்தால் அதில் படிக்காத மேதைக்கும் கண்டிப்பாக இடம் உண்டு. அவருக்கே உரித்தான அந்த casualness இதிலும் வெளிப்படும். எல்லாவற்றையும் easy-aga எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ( "அவன் Point of View-vile அவன் சொல்லறது கரெக்ட்,இவன் Point of View-vile இவன் சொல்றதும் கரெக்ட்."). NT-யை வெளியே போக சொல்லிவிட்டு அவர் படும் வேதனை, செலவை குறைக்க சொன்னவுடன் மருமகள்கள் தான் சிகரெட் குடிப்பதை குத்தி காட்ட, சிகரெட் பாக்ஸ்-ஐ தூக்கி எரிந்துவிட்டு,கையில் புகையும் சிகரெட்டை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தூக்கி போடுவது கிளாஸ். எங்கிருந்தோ வந்தான் பாடல் காட்சி அவரது மற்றொரு சிறப்பு.
கணவனுக்காக வாழும் மனைவியாக சௌகார் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். கண்ணாம்பா என்றாலே சோகம் என்பதற்கு இதுவும் விதி விலக்கல்ல. அசோகனும் முத்துராமனும் மகன்கள். சந்தியாவும் வசந்தாவும் மருமகள்கள். வீட்டை விட்டு ஓடி போகும் மகனாக T.R. ராமசந்திரன், TRR காதலிக்கும் பெண்ணாக ஏ.சகுந்தலா,விதவை மகளாக சுந்தரிபாய். கடைக்குட்டி கீதாவாக E.V.சரோஜா, NT-kku உதவும் தம்பதிகளாய் T.S..துரைராஜ், T.P.முத்துலக்ஷ்மி எல்லோரும் குறைவற செய்திருப்பார்கள்.
கே எஸ் ஜியின் Down to Earth வசனம் படத்திற்கு மிக பெரிய பலம். “மாமா” இசை அமைப்பில் பீம்சிங் இயக்கிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று (மற்றொன்று பாலாடை). பாடல்கள் எல்லாமே தேனிசை பாடல்கள்.
சிந்தையிலும் பெரிய - E.V.சரோஜா டான்ஸ் பாடல்
பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு - TRR, ஏ.சகுந்தலா பாடுவது
சீவி முடிச்சு சிங்காரிச்சு - E.V. சரோஜவை கிண்டல் செய்து NT பாடுவது
இன்ப மலர்கள் - இந்த பாடலை விட பாடலின் ஆரம்பத்தில் வரும் Prelude ரொம்ப பிரபலம். இலங்கை தமிழ் சேவை வானொலியில் மாலை 4 மணிக்கு தினமும் இது ஒலிபரப்பாகும்.
ஒரே ஒரு ஊரிலே - இதை பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை
உள்ளதை சொல்வேன் - NT பாடுவது.
எங்கிருந்தோ வந்தான்- சீர்காழியின் டாப் 10 பாடல்களில் ஒன்று. கிருஷ்ண பரமாத்மாவாக தோற்றமளிக்கும் NT எந்த வேஷவும் தனக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதை நிருபித்திருப்பார்.
படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - சௌகார் பாடும் பாடல்.
இது தவிர குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளிக்கும் E,V.சரோஜா பாடும் ஒரு பாடலும் உண்டு.
இந்த படம் வியாபார ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்பதற்கு ஒரு சான்று, ஆசியாவிலேயே மிக பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டரில் 112 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
ஒரே வரியில் சொல்வதென்றால் நடிகர் திலகத்தின் மணி முடியில் ஒரு வைரம்.
அன்புடன்.
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post265378
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post265379
தொடர்ந்து வருகிறது...
http://img707.imageshack.us/img707/5...0301201303.jpg
Prabhu Ram's analysis on Padikkadha Medhai
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post752019
Quote:
17th October 2011, 11:37 AM
Yes. The thing is, he works us to such an emotion high with his demeanor that after a point every single moment is touching.
I guess it is pretty much like what they say about stand up comedy. It is the ice-breaking and getting the first laughs that is the problem. But once you've got the audience going you every joke is going to get a laugh.
Similarly here, Sivaji pierces through my cynicism and thereafter I am totally captivated. Every line, every scene works. The scene where he learns Sundari Bai's son has worked overtime to redeem the jewel he stole and pawned, all he says is: "என் மாமா வீட்டு பிள்ளைங்க, யாருமே கெட்டவங்க இல்லை". Regard for the family dominates every fibre of his being. Extremely moving. Look at the time when he says that, it is when Asokan and Muthuraman are still at their worst behaviour.
When asked about the money for spending on the tenth day ceremony: உன் பணம் தானே அத்த...நீ தானே நகை பண்ணி கொடுத்தே, அதைத் தான் வித்தேன்....மாமாவுக்கு இல்லாம பின்ன இந்த அம்மா போட்டு மினுக்குறதுக்கா?. It is uncharitable of him to talk about his wife - who is the most undemanding person - in such a manner. But even she knows that he is saying that out of love for RangaRao. That it seems obvious to him, that that is the course of action, is moving in itself. And his expression heightens the emotions. It is not even selflessness, in the normal meaning of putting others before oneself. But truly breathing meaning to the word selflessness in not even being aware of oneself as a separate entity, and relegating one's interest being a natural, unconscious response.
The scene where he meets SundariBai gathering wood when he running to meet the sAmiyAr is just fantastic. "உனக்கு அறிவு இருக்கா" he rails at her for not coming to his home directly. Her wrongs do not even register with him. This is not even a நன்னயம் செய்து விடல் or a "they know not what they are doing", this is just being a much larger person than anyone around him. In the end also, when Sowcar Janaki asking him about his bleeding head, he says dismissively: "இந்தப்பய அடிச்சுட்டாம்....போறான் விடு"
His posture with when he talks to the piLLaiyAr, is just earnestness personified. When the sAmiyAr asks him to bathe, in one shot he plunges into the pond and hastily crawls back out to her.
.....
SVR is terrific. Their scenes together are simply on a different level. Such ease of performance.
அடிக்கடி தான் நினைச்சிக்கிறீங்களா...எனக்கு சதா உங்க நினைப்பு தான்.
He describes his work as 'nothing too difficult' and elaborates on his salary: எட்டு மணிநேரம் வேலை பார்த்தா த்ரீ ருபீஸ்...ஓவர்டைம் பார்த்தா ட்டூ ருபீஸ்...அகமொத்தம் ஃபைவ் ருபீஸ்.The way he pronounces the 'rubees' has a childishness that cannot be explained, nor can one imagine it being taught. Only experienced. So much so that the 'உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது' is rendered an unnecesaary elaboration - when after all he exudes that in every action, every word, intonation.
....
When he asks him why he bought him cigarettes and didn't buy his wife anything, he says
"ஓ..இப்படி (தலையை சுத்தி மூக்கைத் தொடுவார்)...இப்படி கேக்குறீங்களாக்கும். ஏண்டா வந்தேங்கறதை....ஏண்டா சிகரெட் வாங்கிட்டு வந்தேன்னு"
In their whole exchange, their are parts where his mumbling is even unintelligible, still they are communicating. Their is a free flow of emotions on the surface and simultaneously a torrent of emotional running deeper - which these two fantastic actors make it so evident to us, the audience. We think we have perceived a miscommunication. That we 'understand' SVR's concerns, but the simple Rangan is not getting it. But at the same time we are conscious that they share a communication whose depth is just beyond what we can perceive. A bond so strong, that while we are moved, we perhaps cannot entirely dismiss a jealousy we feel for their bond.
.....
In the end he says, with a bleeding head: ஏண்டா நான் திருடன்னு நினைச்சு தானேடா அடிச்சீங்க....இப்பொ நான் நல்லவன்னு தெரிஞ்சதும் ஏண்டா வீட்டை விட்டு போறேன்றீங்க?
The logic is astounding, isn't it? Sounds like wise words that tumble out of a child's mouth and stun us adults, who considered ourselves the child's intellectual superiors all along.
Of course they will leave. That is their natural reaction (and so too goads Sundaribai). But the way Rangan puts it, he points out that what they are abandoning is 'goodness itself'. That is what he regards the house to be. An embodiment of goodness. Why on earth, will people who seek good, leave it? Even in their misconception of taking him to be a thief, he can see the goodness of their thinking that ' a thief deserves to be beaten'. Jaw dropping how he is able to see goodness every-bloody-where!
And he is just incapable of taking offence. When Kannamba thoughtlessly asks him if he has indeed stolen like those around accuse him (and we the audience are annoyed with her for asking Rangan such a question), Rangan says: என்ன அத்த நீயும் வரவர என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. The way he says it, it is abundantly clear he has not taken it to heart. Merely pointing out the silliness in her supposition.
And the cherry is of course his response to Kannamba when she asks him why he didn't come by the door. I can't recall a moment which matches this in stature in being simultaneously hilarious and poignant.
திருவாசகத்துக்கு உருகாரும் இப்படத்துக்கு உருகுவார்.
Prabu Ram and Murali's posts are like Rangarao and Sivaji dual in Padikkatha medhai. This thread is badly missing these two.
Thanks for your great Effort in re-producing them Ragavendhar Sir. We are grateful to you. Thanks to Pammalar.
பாவை விளக்கு
இது அகிலன் என்ற ஞான பீட பரிசு பெற்ற எழுத்தாளரின் கதை.(குலமகள் ராதையும் ). சொந்த கதை என்று கேள்வி. கதை படி எழுத்தாளன் தன் வாழ்வில் சந்திக்கும் நான்கு பெண்களுடன் ஏற்பாடும் ஈர்ப்பு ,அதனால் விளையும் உணர்ச்சி போராட்டங்கள். ஆடோக்ராப் படத்திற்கு மூலம்.
படம் எடுக்க பட்ட விதம் சற்றே கேள்விக்குரியது. ரொம்ப தொய்வு கொண்ட திரைகதை.
படத்தின் highlights என்று சொல்ல போனால் நடிகர்திலகம் எழுத்தாளர் தணிகாசலம் என்ற பாத்திரத்தை பிரமாதமாக அசத்தியிருப்பார். இவருடைய நடிப்பு ஒன்றிற்காகவே நான் இப்படத்தை நிறைய முறை கண்டு களித்திருக்கிறேன்.
இரண்டாவது கே.வீ.மகாதேவன் (மாமா) இசை. அடடா என்ன பாடல்கள் !!!!! வண்ண தமிழ் பெண்ணொருத்தி,ஆயிரம் கண் போதாது,காவியமா ...... 1960 இல் சி.எஸ்.ஜெயராமன் நடிகர்திலகத்திற்கு நிறைய பாடினார். 1961 முதல் ஒரு பாடல் கூட பாடியதாக நினைவில்லை.
1952-1960- சி.எஸ்.ஜெயராமன், கண்டசாலா,டி.எம்.சௌந்தரராஜன்,ஏ.எம்.ராஜா,
சீர்காழி கோவிந்தராஜன், மோத்தி,பீ.பீ.ஸ்ரீநிவாஸ்,சுந்தரம் போன்ற பலர் குரல் கொடுத்தாலும் , 1960-1975 -95% பாடல்கள் டி.எம்.எஸ் பாடியவையே.
Sivaji Ganesan Filmography Series
64.பாவை விளக்கு Paavai Vilakku
http://i1110.photobucket.com/albums/...laar/PV1-1.jpg
தணிக்கை – 15.10.1960
வெளியீடு – 19.10.1960
தயாரிப்பு – ஸ்ரீ விஜய கோபால் பிக்சர்ஸ்
கதை அகிலன்
படத் தொகுப்பு - கே. துரைராஜ்
கலை - சிஹெச்.ஈ.பிரசாத ராவ்
நடனம் - கே.என். தண்டாயுத பாணி பிள்ளை
ஒளிப்பதிவு - விந்தன்
திரைக்கதை வசனம் – ஏ.பி.நாகராஜன்
இயக்கம் – கே. ஸோமு
இசை – கே.வி.மகாதேவன்
பாடல்கள் – மருதகாசி
தயாரிப்பாளர்கள் – கோபண்ணா, விஜயரங்கம்
நடிக நடிகையர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எம்.என்.ராஜம், குமாரி கமலா, சௌகார் ஜானகி, எஸ்.வி.ரங்கா ராவ், சந்தியா,
ஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள்
Quote:
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
The Hindu : 14.1.1960
http://i1110.photobucket.com/albums/...ar/PVAd1-1.jpg
The Hindu : 9.9.1960
http://i1110.photobucket.com/albums/...ar/PVAd2-1.jpg
சுதேசமித்ரன் : 14.10.1960
http://i1110.photobucket.com/albums/...ar/PVAd3-1.jpg
கலைமகள் : தீபாவளி மலர் : 1960
http://i1110.photobucket.com/albums/...ar/PVAd4-1.jpg
பொக்கிஷப் புதையல் : கிடைத்தற்கரிய முதல் வெளியீட்டு விளம்பரம்
Full Prints : சுதேசமித்ரன் : 26.10.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC4799-2.jpg
பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்
நடிகன் குரல் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர் : ஆகஸ்ட் 1962
நடிகர் திலகம் பற்றி சாகித்ய அகாடெமி விருது பெற்ற பெரும் எழுத்தாளர் திரு.அகிலன்
http://i1110.photobucket.com/albums/...GEDC4801-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4802-1.jpg
பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்
மதி ஒளி : 1.11.1962
[நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்தாண்டு நிறைவு [1952-1962] மலர்
நடிகர் திலகம் பற்றி ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி
http://i1110.photobucket.com/albums/...GEDC4800-1.jpg
பாடல்கள்
1. மங்கியதோர் நிலவினிலே – பாரதியார் – சி.எஸ்.ஜெயராமன்
2. நீ சிரித்தால் நான் சிரிப்பேன் – மருதகாசி – சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
3. காவியமா நெஞ்சின் ஓவியமா – மருதகாசி – சி.எஸ்.ஜெயராமன், பி.சுசீலா
4. வெட்கமாக இருக்குது – மருதகாசி – சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
5. ஆயிரம் கண் போதாது – மருதகாசி – சி.எஸ்.ஜெயராமன்
6. நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ – மருதகாசி –பி. சுசீலா
7. வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி – மருதகாசி – சி.எஸ்.ஜெயராமன், சிவாஜி கணேசன், எல்.ஆர்.ஈஸ்வரி
8. சிதறிய சதங்கைகள் போலே – மருதகாசி – பி.சுசீலா
பாடல் காட்சிகள்
நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ
http://www.metacafe.com/watch/657846..._tandav_dance/
வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி
http://youtu.be/Vd_RC89xYeg
காவியமா நெஞ்சின் ஓவியமா
http://youtu.be/RuXW83PLumE
Sivaji Ganesan Filmography Series
65. பெற்ற மனம் Petra Manam
தணிக்கை 17.10.1960
வெளியீடு 19.10.1960
http://i872.photobucket.com/albums/a...namimg02fw.jpg
http://i872.photobucket.com/albums/a...namimg01fw.jpg
http://i872.photobucket.com/albums/a...amanamadfw.jpg
தயாரிப்பு – நேஷனல் பிக்சர்ஸ்
1953ல் வெளியான, நடிகர் திலகத்தின் பெம்புடு கொடுகு தெலுங்குப் படத்தின் தமிழ் வடிவம்
தயாரிப்பு – நேஷனல் பிக்சர்ஸ், பி.ஏ. பெருமாள் முதலியார்
கதை – மு. வரதராசனார் அவர்களின் நாவல்
வசனம் – திருவாரூர் தியாகராஜன்
இசை – எஸ். ராஜேஸ்வர ராவ்
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
ஒலிப்பதிவு – பாடல்கள் மற்றும் ரீரிகார்டிங் – ஈ.ஐ. ஜீவா
ஒலிப்பதிவு வசனம் – விசுவநாதன், நெப்டியூன் ஸ்டூடியோ மற்றும் ராஜூ, பரணி ஸ்டூடியோ
பாடலாசிரியர்கள் – அண்ணல் தங்கோ, ஆத்மநாதன், பாரதிதாசன்,.கே.பி.காமாட்சி, கண்ணதாசன்
நடனம் – கே.என். தண்டாயுத பாணி, தங்கப்பன், முத்துசாமி பிள்ளை
ஸ்டில்ஸ் – விஷ்ணுஜித்தன்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புஷ்பவல்லி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பத்மினி பிரியதர்ஷினி, சந்திரபாபு, எல்.விஜயலக்ஷ்மி, எஸ்.வி.சுப்பையா, எம்.என்.ராஜம், டி.வி.நாராயணசாமி, குமாரி
ஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள்
Quote:
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
தென்றல் : 20.12.1955
http://i1110.photobucket.com/albums/...GEDC4829-1.jpg
The Hindu : 19.2.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC4830-1.jpg
சுதேசமித்ரன் : 15.10.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC4831-1.jpg
[img]சுதேசமித்ரன் : 19.10.1960[/img]
http://i1110.photobucket.com/albums/...GEDC4833-1.jpg
மீண்டும் ஒரே நாளில் இரு படங்கள். பாவை விளக்கு பெற்ற மனம் இரண்டும் ஒரே நாளில் அதாவது 19.10.1960 அன்று வெளியாகின. இதற்கு முன் கூண்டுக் கிளி, தூக்குத்தூக்கி, இரண்டும் ஒரே நாளில். பின்னர் ஒரு நாள் இடைவெளியில் அவள் யார், பாகப் பிரிவினை இரண்டும். இதைத் தொடர்ந்து பாவை விளக்கு பெற்ற மனம் இரண்டும்.
பாவை விளக்கு அகிலனின் நாவல் என்றால் பெற்ற மனம் மு.வ. அவர்களின் நாவல். இரு படங்களுமே தமிழிலக்கியத்தில் தனிப் புகழ் பெற்றவை. இரண்டிலுமே மேதைகளின் பாடல்கள் இடம் பெற்றன. பாவை விளக்கில் பாரதியார் பாடல் என்றால் பெற்ற மனத்தில் பாரதி தாசன் அவர்களின் பாடல். இரண்டிலுமே நடிகர் திலகத்தின் நடிப்பும் தோற்றமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். பெற்ற மனம் திரைப்படத்தின் கூடுதல் விசேஷம், பெரியாரை மனதில் வரித்து நடிகர் திலகம் நடித்திருந்தது தான். இதைப் பற்றி அ்வரே தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
இரண்டிலும் உள்ள ஒற்றுமைகளில் இன்னொன்று, இரண்டிலுமே நடிகர் திலகத்தின் குரலுடன் பாடல்கள் ஒலித்தன. வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடல் இன்றளவும் உலகளாவிய பிரசித்தி பெற்றது என்றால் அதற்கு சற்றும் சளைக்காத பாடல் எம்.எல்.வசந்த குமாரி அவர்கள் பாடிய சிந்தனை செய்யடா பாடல். வாழ்ந்து கெட்டவனின் வேதனையை பிரதிபலிக்கும் பாடல். எம்.எல்.வி. அவர்களின் பாட்டும் பாடலின் நடுவே நடிகர் திலகத்தின் குரலும் பாடலின் சூழலை மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கும்.
பெற்ற மனம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய படம். துரதிருஷ்டவசமாக அதன் பிரதி கிடைக்கவில்லை. இறைவனை வேண்டுவோம்.
பெற்ற மனம் பாடல்களைக் கேட்பதற்கான இணைப்பு
audio link
1. சினிமா சினிமா டிராமா
2. காதல் கரும்பு கண்டேன்
3. ஒரே ஒரு பைசா
4. சிந்தனை செய்யடா
http://www.inbaminge.com/t/p/Petra%20Manam/
பெற்ற மனம் பாடல்களின் விவரங்கள்
http://i1146.photobucket.com/albums/...psa0f18073.jpg
http://i1146.photobucket.com/albums/...psdbcd5af3.jpg
முழுப் பாடல் விவரங்களும் முதல் முறையாக இணையத்தில்
1. அன்.புத் தோழா ஓடிவா – கு.மு. அண்ணல் தங்கோ – சீர்காழி கோவிந்தராஜன்
2. கண்ணே நீ சென்று வாடா – ஆத்மநாதன் – ஏ.பி.கோமளா
3. ஒரே ஒரு பைசா – பாரதி தாசன்- சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
4. பாடிப் பாடிப் பாடி – பாரதிதாசன் – சந்திரபாபு
5. காதற் கரும்பு கண்டேன் – கண்ணதாசன் – சி.எஸ்.ஜெயராமன், ஜிக்கி
6. மனதிற்குகந்த மயிலே – பாரதி தாசன் – சந்திரபாபு
7. துள்ளித் துள்ளி ஓடும் – கே.பி.காமாட்சி சுந்தரன் – ஜிக்கி
8. தெற்குப் பொதிகை மலை – பாரதி தாசன் டி.எம்.சௌந்தர்ராஜன், ஜமுனா ராணி
9. வேண்டாமையன்ன விழுச்செல்வம் – எம்.எல்.வசந்தகுமாரி, சிவாஜி கணேசன்