ரொம்ப கரெக்ட் சார்.
Printable View
ஒரே தந்தை'
ஒரே திருவிழாக் கூட்டம். கடலூர் முத்தையாவில்.
குதிரையில் அசோகன்
கீழே அலங்கோல உடையில் ஓடிவரும் கர்ணனின் அன்றைய ஆஸ்தான நாயகி ராஜ்கோகிலா.
அப்புறம் ஏன் கூட்டம் இருக்காது?
http://4.bp.blogspot.com/-oV1O9B0iVv...ambathigal.jpg
முக்தா டிரஸ்ட் தயாரித்த 'தம்பதிகள்' படத்தில் மெல்லிசை மன்னர் இசை அமைத்திருந்தார். என்.எஸ். ராஜேந்திரன் இயக்கி இருந்தார்.
அதில் சில்க் ஸ்மிதா பாடுவது போல ஒரு பாட்டு.
'நெஞ்சைக் கிளப்பி கிளப்பி விடும் ஆச'
'அத்திமரப் பூவிது' ஸ்டைலில் இருக்கும்.
http://www.youtube.com/watch?v=odF7K...yer_detailpage
http://i1.ytimg.com/vi/Llnb9yxUzJk/maxresdefault.jpg
நடிகர் திலகம் நடித்த 'அருணோதயம்' (1971) படத்தில் அவர் சம்பந்தப்படாத ஒரு காதல் பாடல்.
ஆனால் செம ஹிட்டடித்த பாடல்.
இசை நம் 'திரை இசைத் திலகம்' மாமாதான்.
'ஆராதனா' புகழ் பெற்ற இந்திப் படத்தில் ஒலிக்குமே "Gunguna Rahe Hain Bhavre" ஒரு பாட்டு அதைத் தழுவி.
பாலாவும், சுசீலாவும் மனதில் கில்லி அடிப்பார்கள். முத்துராமனுக்கும், லஷ்மிக்கும் டூயட்டாக வரும் இந்தப் பாடல்.
எல்லோருக்கும் தெரிந்த பாடல். எப்போதும் விரும்பும் பாடல்.
http://i1.ytimg.com/vi/d2Xr-H61qmk/hqdefault.jpg
SPB: எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
PS: திருவிழா
SPB: திருவிழா
PS: இன்று நாளை எந்த நாளும் இன்பதேவன் திருவிழா
SPB: திருவிழா
PS: திருவிழா
SPB: சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல உன்னை மெல்ல அழைப்பதென்பது
PS:அழைப்பு வந்தது அது அழைப்பதல்ல பெண்ணை மெல்ல அணைப்பதென்பது
SPB: கோபம் வந்தது அது கோபமல்ல காலம் பார்க்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல காலம் பார்க்கும் ஊடல் என்பது
PS: கொஞ்ச வந்தது வெட்கம் கொஞ்சம் வந்தது அஹஹ ஹா
SPB: ஒஹொஹொ ஹோ
SPB: எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
PS: திருவிழா
SPB: திருவிழா
SPB: போக சொன்னது கால் போகும்போது கண்ணும் நெஞ்சும் பார்க்க சொன்னது
PS: பேச சொன்னது வாய் பேசும்போது நாணம் வந்து மூட சொன்னது
SPB: தழுவ சொன்னது கை தழுவும்போது என்ன வந்து நழுவ சொன்னது
தழுவ சொன்னது கை தழுவும்போது என்ன வந்து நழுவ சொன்னது
PS: தயக்கம் வந்தது பெண்ணின் பழக்கம் வந்தது
SPB: அஹஹ ஹா
PS: ஒஹொஹொ ஹோ
PS: இன்று நாளை எந்த நாளும் இன்பதேவன் திருவிழா
SPB: திருவிழா
PS: திருவிழா
SPB: அன்னவாகனம் போல ஆடி ஆடி வருவதுதான் பெண்ணின் சீதனம்
PS: தர்மதரிசனம் அதை தலைவன் மட்டும் பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்
SPB: கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி இழுப்பதற்கு என்ன காரணம்
PS: என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம் அஹஹ ஹா
SPB: ஒஹொஹொ ஹோ
SPB: எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
PS: திருவிழா
SPB: திருவிழா
PS: இன்று நாளை எந்த நாளும் இன்பதேவன் திருவிழா
SPB: திருவிழா
PS: திருவிழா
SPB, PS: அஹஹ ஹா, ஒஹொஹொ ஹோ, ம்ஹுஹுஹும்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oWh7jGp4AmM
ஆபோகி.
உலகத்தில் எங்குமே துன்பமில்லை, ஆனந்தம் மட்டுமே எஞ்சியுள்ளது என்று நம்ப ஆசை படுகிறீர்களா?கண்களின் வார்த்தைகள் புரிந்து,காலை நேர பூங்குயிலை தரிசித்து,ரதத்தில் வந்த விருந்தாளிக்கு ,வணக்கம் பல முறை சொல்லி , வசந்த காலம் வந்ததை எண்ணுங்கள் புரியும்.
அந்த அபூர்வ இரட்டையர்கள் பிரிந்ததாய் வந்த செய்தி இசை வெறியர்களை குலுக்கி போட்டது.விஸ்வநாதனோ கற்பனை சுரங்கம்.(விஸ்வ நாதம் என்று பிரியத்தோடு குறிப்பார் என் நண்பர் விஸ்வேஸ்வரன்).public relation விஷயத்தில் கரை கண்டவர். ராமமூர்த்தி ஞான கடல். அத்தனை மேளகர்த்தாவும் அத்துபடி. விஸ்வநாதனின் குரு. balancing of archestra ,இணைப்பு ராகங்கள் என்று கரை கண்டவர்.இந்த மேதைகளின் இணைப்பு தமிழ் திரை இசையுலகின் பொற்காலம். அங்கங்கே பாக பிரிவினை போன்று தந்திருந்தாலும் ,விஸ்வரூபம் எடுத்தது 1960 இல் மன்னாதி மன்னனில் இருந்து,பாவ மன்னிப்பில் உச்சம் தொட்டு ஆயிரத்தில் ஒருவன்(1965) வரை தொடர்ந்தது.முதலில் இணைந்தது பணம் படத்தில்(1952).பிரிவிற்கு பல காரணங்கள். விஸ்வநாதன் ,தன் குருநாதரின் குடி பழக்கமே என்றார்.கலை கோவில் தோல்வி எதிரொலிப்பு என்று ஒரு புறம்.ராமமூர்த்தி திட்டமிட்டு ஒதுக்க படுகிறார் என்று ஒரு சாரார்.(சர்வர் சுந்தரம் அவளுக்கென்ன ஒரு sample ).இன்னொரு சாரார் ராக்ஷசியை காரணம் காட்டினர்.எது எப்படி இருந்த போதும் பிரிய கூடாத ஜோடியின் பிரிவு.நான் இருவரின் இணைப்பும் மீண்டும் நேராதா என்று ஏங்கிய கோஷ்டி.(சத்யராஜ் படமொன்றில் தள்ளாத வயதில் இணைந்த போது வருந்திய கோஷ்டியும்)இருவருமே பாதிக்க பட்டார்கள். ராமமூர்த்தி ரொம்பவே .ஆனாலும், நான்,காதல் ஜோதி,மறக்க முடியுமா,மூன்றெழுத்து,தங்க சுரங்கம்,சாது மிரண்டால் ,தேன்மழை போன்ற படங்களில் மேதைமை பளிச்சிட்டது.(தனி பெயரில் வெளியானாலும் இணைப்பிசை கொண்ட நீ,கலங்கரை விளக்கம்,நீலவானம் போன்றவற்றிலும்). ஒரு பாடல் போதும் ராமமூர்த்தி யார் என்று உலகிற்கு புரிய வைக்க. ஷெனாய் ஓலத்தோடு "வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ" என்று ஏங்க வைத்த பாடல். இசை ரசிகர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பு.
இந்நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை எழுத்து மன்னன் கோபுவிற்கு சங்கீதம் என்றால் உயிர். ஸ்ரீதரை இழுத்து விட்டார். இரட்டையர்கள் தயாரிப்பில்,இசையில் கலைக்கோவில். ஸ்ரீதரிடம் ஒரு பிரச்சினை .எடுத்தால் ஓஹோ என்று.இல்லை தரை மட்டம்.(பாலச்சந்தர் போல consistency இருக்காது).கலைக்கோவில் படு போர். ஆனால் பாடல்கள்? இந்த படத்தின் "தங்க ரதம் வந்தது வீதியிலே".
ஜனநாயக நாட்டில் ,சர்வாதிகார தர்பார். அன்னையும் மைந்தனும்.ஏதேதோ அம்ச திட்டங்கள். தன்னை காத்து கொள்ள.(மக்களிடம் காத்து கொள்ள இயலாதது வேறு விஷயம்) இதற்கு ஜால்ரா போட்டு ஒரு boring பிரச்சார படம்.(சூட்டோடு சூடாக வரி விலக்கு வேறு).ஆனால் இந்த படம் வரும் முன்னே ,எல்லா மேடையிலும் ஆரம்ப வரவேற்பு பாடலாக அலங்கரிக்க தொடங்கி பட்டி தொட்டியெங்கும் popular . படத்திற்கு பலரை ஈர்க்க காரணமானது.
"வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே".
இந்த ராகத்தின் மற்ற பாடல்கள்.
கண்களின் வார்த்தைகள் பு ரியாதோ- களத்தூர் கண்ணம்மா.
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே- வைதேகி காத்திருந்தாள் .
காலை நேர பூங்குயில் - அம்மன் கோவில் கிழக்காலே.
படையுடன் திரும்ப வரும் சர்வாதிகாரி இழந்த நாட்டைப் பிடிக்க வேண்டியதுதானே! அப்படியே வரும் வழியில் ஒரு பாவமும் அறியாத 'மதுரா' சிற்றரசை சின்னபின்னப் படுத்தணுமா!:)
அதுவும் ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி கடைசியில் அதையே பாடின என் ராட்சஸியைக் குறி வைத்து தாக்கிய கொடூரம்.
இன்று முழுதும் பட்டினிதான்.
இப்படியே போனால் சர்வாதிகாரி மீது மறைந்திருந்து கொரில்லா தாக்குதல்தான். சிவாஜி பாணியில் ஐ மீன் 'சத்ரபதி' சிவாஜி பாணியில்.:)
ம்..என்ன செய்ய! இங்கு ஒரு 'பக்த ராமதாஸ்' இல்லையே!:)
கோ,
ஆபோகி ஆனந்தம்.
"வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ"
"தங்க ரதம் வந்தது வீதியிலே".
இரண்டும் எனக்கு இரண்டு நுரையீரல்கள்.
காலை களிப்போடு இனம் புரியா இனிமையுடன் தொடங்குகிறது இந்த அதிசய ஆபோகியால். (நன்றி கோ)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hZy4UgL7mi8
ஆபோகி என்பதனால் தங்க ரதத்தோடு நிறுத்தி விட்டீர்கள். புரிகிறது.
இதையெல்லாம் மீறிய அற்புதங்கள் 'வரவேண்டும் ஒரு பொழுதி'ல் நடந்ததே! (என் ராட்சஸி யின் டாப் 10-இல் ஒன்று)
இன்றைய ரகுமான்கள் கேட்டு தெரிந்து கொள்ளக் கூடிய சங்கதிகளை அன்றே கொடுத்துவிட்டார்களே மன்னர்களும், மகாராணியும்.
நண்பர்களே!
நீங்கள் இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் 'கலைக்கோயில்' பாடலில் நம் எல்லோருடைய ஈஸ்வரி அவர்கள் பாடும் அழகையும், ஸ்டைலையும் பாருங்கள். அநேகம் பேர் இந்தப் பாடலைக் கேட்டிருக்க முடியாது.
பாட்டில் பின்னியெடுக்கும் பியோனோ, கூடவே சாக்ஸும் இழையும் சுகம், (அதுவும் பாடலின் அந்த இடையிசை) இந்த மாதிரி சாக்ஸ் அற்புதங்கள் வேறு பாடலில் உண்டா?
இந்த அரக்கி அந்த உபகரணங்களுடன் இணைந்து, இழைத்து ஏற்ற இறக்கங்களை மிக அற்புதமாக அளவோடு தந்து
இப்படி ஒரு காக்டெயில் விருந்து அளித்துள்ளதை
எவரால் மறக்க முடியும்?
என் சதைகளில் ரத்தமாய்க் கலந்த பாடல்.
இப்படி வேறொரு பாடலை இப்படி ஒரு பாடகியை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
பார்த்து, கேட்டு அனுபவித்து விட்டு எழுதுங்கள்.
http://www.youtube.com/watch?v=am3b--fXZUw&feature=player_detailpage
வசந்த காலம் வருமோ பாடல் ,வகதீஸ்வரி என்ற மேளகர்த்தா ராகத்தின் சாயலும் இருக்கும்.உள்ளத்தின் நல்ல உள்ளத்தில் சக்ரவாகம்,சரசாங்கி கலப்பது போல.அதுதான் ராமமூர்த்தி ஸ்பெஷல்.ராகத்தின் ரகத்தை இனம் காணுவது கஷ்டம்.
இன்றைய ஸ்பெஷல் (18)
இன்றைய ஸ்பெஷலாக மிக மிக ஸ்பெஷலான ஒரு பாடல்
http://www.inbaminge.com/t/t/Thani%2...nam/folder.jpg
1977-ல் வெளியான 'தனிக்குடித்தனம்' படத்தில் இருந்து.
சோ, கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த இப்படத்திற்கு இசை 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்.
நம் பாலாவும், இசை அரக்கியும் போட்டுத் தாக்கும் ஒரு உற்சாக இளமைத் துள்ளல் பாடல். இரண்டு பேரும் நீயா நானா என்று போட்டியிட்டு பாடுவது நன்றாகத் தெரியும். அவர் குரல் காந்தம் என்றால் அரக்கியின் அலட்சியம் அட்டகாசம்.
இருவருக்குமே இப்பாடலில் தோல்வியே இல்லை.
ஆனால் அற்புதமான பாடல் ஒய்.ஜி. மகேந்திரனுக்கும், ஆண்பிள்ளை சங்கீதாவுக்கும் போய் சேர்ந்துவிட்ட கொடுமையைத்தான் தாங்க முடியவில்லை.
என்ன மாதிரி பாடல்! எப்படிப்பட்ட நடிகர்களுக்கு போய் இருக்க வேண்டும்?
அதுவும் ஒய்.ஜி. உள்ளாடைகளுடன் வேறு. சங்கீதா சுத்த வேஸ்ட்.
(கோபால், உங்க நண்பர்கிட்ட இதையெல்லாம் சொல்லப் படாதோ!)
அருமையாக எழுதப்பட்ட பாடல்.
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம் நீ ஆடும் கோலங்கள்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம் நீ ஆடும் கோலங்கள்
காமரூபன்
பத்மநாபன்
தேவதேவன்
ராஜராஜன்
காளிதாசன்
இன்பநேசன்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
நம் கல்யாணம் முடிந்தது ஆவணியில்
என் கைகூடப் படவில்லை தாவணியில்
நம் கல்யாணம் முடிந்தது ஆவணியில்
என் கைகூடப் படவில்லை தாவணியில்
கட்டுப்பாடோ
சுகம் தட்டுப்பாடோ
நாம் ஒட்டிக்கொள்ள
அம்மம்மாடி இந்தப் பாடோ
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம் நீ ஆடும் கோலங்கள்
உன் சிங்கார ஸ்வரங்களை நீ படிக்க
அந்த சங்கீத ரசனையில் நான் துடிக்க
உன் சிங்கார ஸ்வரங்களை நீ படிக்க
அந்த சங்கீத ரசனையில் நான் துடிக்க
பட்டுப்பாடல் இதழ் முத்துப் போலே
நான் சொல்ல சொல்ல
இன்னும் வரும் இந்த நாளே
காமரூபன்
பத்மநாபன்
தேவதூதன்
ராஜராஜன்
காளிதாசன்
இன்பநேசன்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
http://www.youtube.com/watch?v=OMwdvIzMuT8&feature=player_detailpage
கோபால் சார்
ஆபோகியின் கலைக்கோயில் ,
வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ - மறக்கமுடியுமா
அருமையான காலை பொழுது
செல்லமா கௌரவத்தில் "கோபாலா கோபாலா " என்று நாகேஷ்ஐ
நீலு கூப்பிடுவது நினைவிற்கு வருகிறது
ராமமூர்த்தி பற்றிய உங்கள் ஆதங்கம் புரிகிறது
வாசு சார்
தனி குடித்தனம் பாடல் அருமை மரினாவின் நாடகத்தை தழுவி எடுக்கப்பட திரைப்படம். நம்ம S .A .கண்ணன் இயக்கம் என்று நினவு
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
ஈஸ்வரியின் குரலில் உள்ள எக்காளத்தை கவனிக்கணும் சார்
இந்த பாட்டை கேட்கும் போது "எங்கள் வாத்யார் " னு ஒரு படம் நினைவிற்கு வந்தது .துரை இயக்கம் விஸ்வநாதன் இசை
நாகேஷ் elementary ஸ்கூல் டீச்சர் வேஷம் குடை எல்லாம் வைத்து கொண்டு வருவார் . அவருக்கு கூட விஸ்வநாதன் குரலில்
"நாராய் நாராய் செங்கால் நாராய் " பாடல் ஒன்று உண்டு
பாலா வாணி குரல்களில்
"சமுத்திர ராஜா குமரி சுக போக சுக வாணி நமோ நமோ நமஹ "
விஜய் பாபு ஜோடி மறந்து விட்டது (கவிதாவா )
எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
பாலாவின் குரலில் உள்ள மெலிதான "திருவிழா"
அருணோதயம் ஸ்டில் சூப்பர்
"கரும்பில் இனிப்பது அடிப்பக்கம் என்றால் காதலில் எந்த பக்கமோ
அம்மம்மா அம்மம்மா "
வாங்க கிருஷ்ணா சார்!
காலை வணக்கங்கள். ரொம்ப நாளா ஆனா மாதிரி இருக்கு உங்களைப்பார்த்து.
எங்கள் வாத்தியார்' 1980 இல் வந்தது என்று நினைவு. விஜய்பாபுக்கு கவிதாதான் ஜோடி.
'
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Fu3xfmKFUSE
கலை கோயில்
சுசீலா ஸ்ரீநிவாஸ் குரல்களில்
"நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழ வேண்டும் "
உன் விரல்கள் என் அழகை மீட்டும்
உன் விழிகள் என் உயிரை வாட்டும்
உன் குரலும் என் பெயரை கூட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
உன் அச்சம் நாணம் என்ற நாளும்
என் அருகில் வந்தவுடன் அஞ்சும்
இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
மேலே சொன்ன இரண்டு ஸ்டான்சா என்ன அருமை சார்
அதே போல் சுசீலாவின் அமுத குரலில்
"தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் மருகன் அழகனுக்கு ஏனடி தோழி அறிவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ"
இந்த படம் தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் சார்
கிருஷ்ணா சார்,
எம்.எஸ்.வியின் 'நாராய் நாராய்'
'என்றோர் புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன்' நாகேஷ் பரிதாபம்.
கட்டழகுக் கன்னி காத்திருக்கேனே ரோஜாபூப் போலே ஜானகி குரலில் எங்கள் வாத்தியாரில்.
கடலூர் முத்தையாவை அதுக்குள்ளே மறந்துடிங்களா
சவ சவ இழுவை காட்சிகள், நடிகர் தேர்வில் அதலபாதாள சரிவு. சந்திரகாந்தா, ராஜஸ்ரீ கொடூரங்கள், சாமியார் ஒருவரின் பொறுமை சோதிப்பு, கதை என்ற ஒன்றே சரியாக இல்லாதது, முத்துராமனின் மந்தம்.
கடற்கரையில் காற்று வாங்க ஆசைப்பட்டுப் போய் அனல் பட்டு திரும்பியதைப் போன்று எரிச்சலும் கோபமும்தான் வந்தது கலைக் கோவிலைப் பார்க்கும் போது. பாடல்கள் மட்டுமே தென்றல்.
கொலைக்கோவில்.
கிருஷ்ணா சார்.
மறக்க முடியுமா?
ஜக்கம்மா, ஆண்டவன் சொத்து, மறு வெளியீட்டில் எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, சட்டத்துக்கு ஒரு சவால். சுமன் நடித்த அவனுக்கு நிகர் அவனே, இரட்டைக்குழல் துப்பாக்கி, இது எங்க பூமி, ஜான்சிராணி, இன்னொன்னு என்ன வேட்டைப்புலியா அது, அப்புறம் கமர் டாக்கீஸிலே கங்கா, பாடலி தியேட்டரிலே காலம் வெல்லும், இன்னும் நிறைய....
அப்படியெல்லாம் விட்டுடுவோமா கிருஷ்ணா சார்.
ஆமாம்! நெல்லை கதை என்ன?
சரிகமப ஒரு படம் சார்
சுசில ஜெயச்சந்திரன் குரல்களில்
"ஓடும் நதிகளில் ஆடும் கலைகளில் உனது முகம் "
இந்த படம் பற்றி எதாவது தகவல் கிடைக்குமா சார்
சார்,
நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று என்று ஒரு அற்புதமான பாடல் பாலா பாடியிருப்பாரே!
அது சரிகமப படமா சார்? படத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. 1983-ம் ஆண்டு வந்தது என்று நினைக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=Z3ki6iBZYKs&feature=player_detailpage
காலம் வெல்லும் நெல்லை பார்வதி
கங்கா நெல்லை ரத்னா
ஜக்கம்மா நெல்லை சென்ட்ரல்
ஜம்பு நெல்லை பூர்ணகல
எங்க பாட்டன் சொத்து நெல்லை ரத்னா
எதற்கும் துணிந்தவன் - நெல்லை ராயல்
சிவகுமார் ஹீரோ ஜோடி கே.எஸ் ஜெயலக்ஷ்மி
(பின்னாட்களில் பாலச்சந்தரின் எல்லா திரைப்படங்களிலும் இவருக்கு ஒரு ரோல் உண்டு - நடிகை மோகனப்ரியாவின் அக்கா )
ஒரே தந்தை - நெல்லை லக்ஷ்மி
புதிய தோரணங்கள் - நெல்லை சென்ட்ரல் மாதவி தமிழில் அறிமுகம்
இரட்டை குழல் துப்பாக்கி - நெல்லை சிவசக்தி
இது எங்க பூமி - நெல்லை சிவசக்தி
கருப்பு சட்டை காரன் - நெல்லை சென்ட்ரல் (தியாகராஜன் அம்பிகா ஜோடி - குமுதம் விமர்சனம் - அனுராதா டான்ஸ் ஒன்று சூப்பர்
பாட்டு வாணி குரல் - "பச்சை மிளகாய் அது காரம் இல்லை "
ஆண்டவன் சொத்து - நெல்லை ரத்னா
அடேங்கப்பா!:)
ithu eppadi irukku ?
http://i58.tinypic.com/efp93c.jpg
நீரோடை கண்டு நீராட வந்தான்
ஜெயச்சந்திரன் ஷைலஜா பாடும் பாடல் கறுப்புச் சட்டைக்காரன் படத்திலா சார்?
exactly வாசு சார் பிடிச்சீங்க பாருங்க
ஆனால் அது ஜெயச்சந்திரன் வாணி னு நினவு
ராஜஸ்ரீ பொம்மை பத்திரிகை ஸ்டில் ஆ சூப்பர்
கிருஷ்ணா சார்,
அழைத்தால் வருவேன்
http://www.inbaminge.com/t/a/Azhaith...ven/folder.jpg
மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று
மாலை என்னும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு
இந்திரனின் மோகம் உண்டு
இருவருக்கும் தாகம் உண்டு
ஜெயச்சந்திரன், வாணியின் குரல்களில் அழகான பாடல்.
ஆஹா எஸ்வி சார்,
இவ்வளவு சுவாரஸ்ய matter கை வசம் (வாய்வசம்?) இருக்க எதையதையோ பேசி சண்டை போட்டோமே?
கைக்கும் அடங்காமே,வாய்க்கும் அடங்காமே இருந்தாலும் ஊரையெல்லாம் இசு இசுன்னு இசுக்குது.
என்னுடைய கல்லூரி ராக்கிங் போது எஞ்சினீரிங் ஆடிடோரியம் தியேட்டர் இல் காதலிக்க நேரமில்லை போட்ட பொது,அனுபவம் புதுமை பாட்டில் அளந்து கொண்டு வாடா என்று இன்ச் tape கொடுத்து அனுப்பினார்கள் seniors .இப்படி ஒரு நண்பர் இருந்திருந்தால் ,இருந்த இடத்திலேயே அளந்திருப்பேனே????
அவுங்கவுங்களும் ரெண்டு மணி நேரம் மூணுமணி நேரம் டைப்படிச்சி வெளிச்சத்துக்கு வராத பாட்டுங்களப் போட்டா அதுக்கு எந்த பதிலும் இல்ல.
ஆனா இதுக்கு மட்டும் எப்பிடி ஓடியாந்து?!:banghead:
அதுவும் எதிரணி நண்பர்னுகூட பாக்காம ஆகாய அளவிற்கு பாராட்டா!
என்னமோ போடா மாதவா!
ஒரே ஒரு பதிவைப் போட்டு ஜம்பர் அடிச்சுட்டாரே வினோத் சார்!:)
ராஜஸ்ரீ பாடல்களில் எனக்கு ரொமபப் பிடித்தது நீலவானம் படத்தில் நடிகர் திலகம் அவருடன் சேர்ந்து ஆடிப் பாடும்
ஒ லிட்டில் பிளவர்
ஸீ யுவர் லவர்
பாடல்தான். மேலை நாட்டு நடன அசைவுகளை நடிகர் திலகம் ஊதித் தள்ள அவருக்கு அழகான கம்பெனி கொடுப்பார் ராஜஸ்ரீ.
http://www.youtube.com/watch?v=PMz2BQRTrvY&feature=player_detailpage
வாசு சார்
எஸ்வி யின் ஆக்கர் (பம்பரம் எதுன்னு தெரியலை )
சரி நம்ம கதையை தொடர்வோம்
சுசில பாலா ஜோடி குரல்களில்
மேகத்துக்கும் தாகம் உண்டு - psv pictures
சரத் பாபு ரஜினி சர்மா
மரகத மேகம் சிந்தும் மழை விழும் நேரம் இது
திருமகள் வேதம் இங்கே திருமால் படிததாரே
இன்னொரு பாட்டு ஒன்னு உண்டு
பாலா வாணி குரல்களில் cute மெலடி சார் . இதுக்கு விடியோ கிடைக்கவில்லை
"யாரது மன்மதன் ஏன் இது மந்திரம் "
http://www.youtube.com/watch?v=nTJxAq_ஏஂண்ச்
திசை மாறிய பறவைகளுக்கு பின் திசை மாறிய psv
மரகத மேகம் சிந்தும் மழை விழும் நேரம் இது
திருமகள் வேதம் இங்கே திருமால் படிததாரே
கிருஷ்ணா சார்,
சுசீலா கலக்கல்.
இளமை ரதங்கள் ஓட (பாலா இந்த இடத்தில் அமர்க்களம் செய்வார்.)
இரண்டும் மெதுவாய்ப் பாட
இரவும் பகலும் உறவும் கனவும்
சுகமல்லவோ
"யாரது மன்மதன் ஏன் இது மந்திரம் "
பாடலில்
அர்த்த ராத்திரியில் சரசமோ
ஆசை கொள்வதென்ன விரசமோ
வரிகளை
பாலா, வாணி பாடும் அழகு ரொம்பப் பிடிக்கும் கிருஷ்ணா சார்.
திசை மாறிய பறவைகளில்
ஜானகி ஜெயச்சந்திரன் குரல்களில்
"ராஜா வாட சிங்க குட்டி ராணி வாடி தங்கக்குட்டி "
பாடகர் திலகம் குரலில் ஒரு பாட்டு கூட உண்டு
"கிழக்கு பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறக்க பார்க்குது
காரிருள் தேடிடும் நிலவை அது திசை மாறிய பறவை "
படம் கொஞ்சம் வித்தியாசமான ட்ரீட்மென்ட்
எப்படி வாசு சார்