Page 117 of 400 FirstFirst ... 1767107115116117118119127167217 ... LastLast
Results 1,161 to 1,170 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1161
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    முத்துராமன் காமராஜர் படம் போட்டு சுவற்றில் மாட்டி இருக்கும்
    ரொம்ப கரெக்ட் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1162
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Thanks Russellmai thanked for this post
  5. #1163
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஒரே தந்தை'

    ஒரே திருவிழாக் கூட்டம். கடலூர் முத்தையாவில்.

    குதிரையில் அசோகன்

    கீழே அலங்கோல உடையில் ஓடிவரும் கர்ணனின் அன்றைய ஆஸ்தான நாயகி ராஜ்கோகிலா.

    அப்புறம் ஏன் கூட்டம் இருக்காது?
    Last edited by vasudevan31355; 30th June 2014 at 06:33 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1164
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    முக்தா டிரஸ்ட் தயாரித்த 'தம்பதிகள்' படத்தில் மெல்லிசை மன்னர் இசை அமைத்திருந்தார். என்.எஸ். ராஜேந்திரன் இயக்கி இருந்தார்.

    அதில் சில்க் ஸ்மிதா பாடுவது போல ஒரு பாட்டு.

    'நெஞ்சைக் கிளப்பி கிளப்பி விடும் ஆச'

    'அத்திமரப் பூவிது' ஸ்டைலில் இருக்கும்.

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1165
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    நடிகர் திலகம் நடித்த 'அருணோதயம்' (1971) படத்தில் அவர் சம்பந்தப்படாத ஒரு காதல் பாடல்.

    ஆனால் செம ஹிட்டடித்த பாடல்.

    இசை நம் 'திரை இசைத் திலகம்' மாமாதான்.

    'ஆராதனா' புகழ் பெற்ற இந்திப் படத்தில் ஒலிக்குமே "Gunguna Rahe Hain Bhavre" ஒரு பாட்டு அதைத் தழுவி.

    பாலாவும், சுசீலாவும் மனதில் கில்லி அடிப்பார்கள். முத்துராமனுக்கும், லஷ்மிக்கும் டூயட்டாக வரும் இந்தப் பாடல்.

    எல்லோருக்கும் தெரிந்த பாடல். எப்போதும் விரும்பும் பாடல்.



    SPB: எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
    PS: திருவிழா
    SPB: திருவிழா

    PS: இன்று நாளை எந்த நாளும் இன்பதேவன் திருவிழா
    SPB: திருவிழா
    PS: திருவிழா

    SPB: சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல உன்னை மெல்ல அழைப்பதென்பது
    PS:அழைப்பு வந்தது அது அழைப்பதல்ல பெண்ணை மெல்ல அணைப்பதென்பது
    SPB: கோபம் வந்தது அது கோபமல்ல காலம் பார்க்கும் ஊடல் என்பது
    கோபம் வந்தது அது கோபமல்ல காலம் பார்க்கும் ஊடல் என்பது
    PS: கொஞ்ச வந்தது வெட்கம் கொஞ்சம் வந்தது அஹஹ ஹா
    SPB: ஒஹொஹொ ஹோ

    SPB: எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
    PS: திருவிழா
    SPB: திருவிழா

    SPB: போக சொன்னது கால் போகும்போது கண்ணும் நெஞ்சும் பார்க்க சொன்னது
    PS: பேச சொன்னது வாய் பேசும்போது நாணம் வந்து மூட சொன்னது
    SPB: தழுவ சொன்னது கை தழுவும்போது என்ன வந்து நழுவ சொன்னது
    தழுவ சொன்னது கை தழுவும்போது என்ன வந்து நழுவ சொன்னது
    PS: தயக்கம் வந்தது பெண்ணின் பழக்கம் வந்தது
    SPB: அஹஹ ஹா
    PS: ஒஹொஹொ ஹோ

    PS: இன்று நாளை எந்த நாளும் இன்பதேவன் திருவிழா
    SPB: திருவிழா
    PS: திருவிழா

    SPB: அன்னவாகனம் போல ஆடி ஆடி வருவதுதான் பெண்ணின் சீதனம்
    PS: தர்மதரிசனம் அதை தலைவன் மட்டும் பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்
    SPB: கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி இழுப்பதற்கு என்ன காரணம்
    கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி இழுப்பதற்கு என்ன காரணம்
    PS: என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம் அஹஹ ஹா
    SPB: ஒஹொஹொ ஹோ

    SPB: எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
    PS: திருவிழா
    SPB: திருவிழா

    PS: இன்று நாளை எந்த நாளும் இன்பதேவன் திருவிழா
    SPB: திருவிழா
    PS: திருவிழா

    SPB, PS: அஹஹ ஹா, ஒஹொஹொ ஹோ, ம்ஹுஹுஹும்

    Last edited by vasudevan31355; 30th June 2014 at 06:50 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1166
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆபோகி.

    உலகத்தில் எங்குமே துன்பமில்லை, ஆனந்தம் மட்டுமே எஞ்சியுள்ளது என்று நம்ப ஆசை படுகிறீர்களா?கண்களின் வார்த்தைகள் புரிந்து,காலை நேர பூங்குயிலை தரிசித்து,ரதத்தில் வந்த விருந்தாளிக்கு ,வணக்கம் பல முறை சொல்லி , வசந்த காலம் வந்ததை எண்ணுங்கள் புரியும்.

    அந்த அபூர்வ இரட்டையர்கள் பிரிந்ததாய் வந்த செய்தி இசை வெறியர்களை குலுக்கி போட்டது.விஸ்வநாதனோ கற்பனை சுரங்கம்.(விஸ்வ நாதம் என்று பிரியத்தோடு குறிப்பார் என் நண்பர் விஸ்வேஸ்வரன்).public relation விஷயத்தில் கரை கண்டவர். ராமமூர்த்தி ஞான கடல். அத்தனை மேளகர்த்தாவும் அத்துபடி. விஸ்வநாதனின் குரு. balancing of archestra ,இணைப்பு ராகங்கள் என்று கரை கண்டவர்.இந்த மேதைகளின் இணைப்பு தமிழ் திரை இசையுலகின் பொற்காலம். அங்கங்கே பாக பிரிவினை போன்று தந்திருந்தாலும் ,விஸ்வரூபம் எடுத்தது 1960 இல் மன்னாதி மன்னனில் இருந்து,பாவ மன்னிப்பில் உச்சம் தொட்டு ஆயிரத்தில் ஒருவன்(1965) வரை தொடர்ந்தது.முதலில் இணைந்தது பணம் படத்தில்(1952).பிரிவிற்கு பல காரணங்கள். விஸ்வநாதன் ,தன் குருநாதரின் குடி பழக்கமே என்றார்.கலை கோவில் தோல்வி எதிரொலிப்பு என்று ஒரு புறம்.ராமமூர்த்தி திட்டமிட்டு ஒதுக்க படுகிறார் என்று ஒரு சாரார்.(சர்வர் சுந்தரம் அவளுக்கென்ன ஒரு sample ).இன்னொரு சாரார் ராக்ஷசியை காரணம் காட்டினர்.எது எப்படி இருந்த போதும் பிரிய கூடாத ஜோடியின் பிரிவு.நான் இருவரின் இணைப்பும் மீண்டும் நேராதா என்று ஏங்கிய கோஷ்டி.(சத்யராஜ் படமொன்றில் தள்ளாத வயதில் இணைந்த போது வருந்திய கோஷ்டியும்)இருவருமே பாதிக்க பட்டார்கள். ராமமூர்த்தி ரொம்பவே .ஆனாலும், நான்,காதல் ஜோதி,மறக்க முடியுமா,மூன்றெழுத்து,தங்க சுரங்கம்,சாது மிரண்டால் ,தேன்மழை போன்ற படங்களில் மேதைமை பளிச்சிட்டது.(தனி பெயரில் வெளியானாலும் இணைப்பிசை கொண்ட நீ,கலங்கரை விளக்கம்,நீலவானம் போன்றவற்றிலும்). ஒரு பாடல் போதும் ராமமூர்த்தி யார் என்று உலகிற்கு புரிய வைக்க. ஷெனாய் ஓலத்தோடு "வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ" என்று ஏங்க வைத்த பாடல். இசை ரசிகர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பு.

    இந்நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை எழுத்து மன்னன் கோபுவிற்கு சங்கீதம் என்றால் உயிர். ஸ்ரீதரை இழுத்து விட்டார். இரட்டையர்கள் தயாரிப்பில்,இசையில் கலைக்கோவில். ஸ்ரீதரிடம் ஒரு பிரச்சினை .எடுத்தால் ஓஹோ என்று.இல்லை தரை மட்டம்.(பாலச்சந்தர் போல consistency இருக்காது).கலைக்கோவில் படு போர். ஆனால் பாடல்கள்? இந்த படத்தின் "தங்க ரதம் வந்தது வீதியிலே".

    ஜனநாயக நாட்டில் ,சர்வாதிகார தர்பார். அன்னையும் மைந்தனும்.ஏதேதோ அம்ச திட்டங்கள். தன்னை காத்து கொள்ள.(மக்களிடம் காத்து கொள்ள இயலாதது வேறு விஷயம்) இதற்கு ஜால்ரா போட்டு ஒரு boring பிரச்சார படம்.(சூட்டோடு சூடாக வரி விலக்கு வேறு).ஆனால் இந்த படம் வரும் முன்னே ,எல்லா மேடையிலும் ஆரம்ப வரவேற்பு பாடலாக அலங்கரிக்க தொடங்கி பட்டி தொட்டியெங்கும் popular . படத்திற்கு பலரை ஈர்க்க காரணமானது.
    "வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே".

    இந்த ராகத்தின் மற்ற பாடல்கள்.

    கண்களின் வார்த்தைகள் பு ரியாதோ- களத்தூர் கண்ணம்மா.
    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே- வைதேகி காத்திருந்தாள் .
    காலை நேர பூங்குயில் - அம்மன் கோவில் கிழக்காலே.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #1167
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இன்னொரு சாரார் ராக்ஷசியை காரணம் காட்டினர்.
    படையுடன் திரும்ப வரும் சர்வாதிகாரி இழந்த நாட்டைப் பிடிக்க வேண்டியதுதானே! அப்படியே வரும் வழியில் ஒரு பாவமும் அறியாத 'மதுரா' சிற்றரசை சின்னபின்னப் படுத்தணுமா!

    அதுவும் ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி கடைசியில் அதையே பாடின என் ராட்சஸியைக் குறி வைத்து தாக்கிய கொடூரம்.

    இன்று முழுதும் பட்டினிதான்.

    இப்படியே போனால் சர்வாதிகாரி மீது மறைந்திருந்து கொரில்லா தாக்குதல்தான். சிவாஜி பாணியில் ஐ மீன் 'சத்ரபதி' சிவாஜி பாணியில்.

    ம்..என்ன செய்ய! இங்கு ஒரு 'பக்த ராமதாஸ்' இல்லையே!
    Last edited by vasudevan31355; 1st July 2014 at 07:56 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1168
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    ஆபோகி ஆனந்தம்.

    "வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ"

    "தங்க ரதம் வந்தது வீதியிலே".

    இரண்டும் எனக்கு இரண்டு நுரையீரல்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1169
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    காலை களிப்போடு இனம் புரியா இனிமையுடன் தொடங்குகிறது இந்த அதிசய ஆபோகியால். (நன்றி கோ)

    நடிகர் திலகமே தெய்வம்

  12. #1170
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆபோகி என்பதனால் தங்க ரதத்தோடு நிறுத்தி விட்டீர்கள். புரிகிறது.

    இதையெல்லாம் மீறிய அற்புதங்கள் 'வரவேண்டும் ஒரு பொழுதி'ல் நடந்ததே! (என் ராட்சஸி யின் டாப் 10-இல் ஒன்று)

    இன்றைய ரகுமான்கள் கேட்டு தெரிந்து கொள்ளக் கூடிய சங்கதிகளை அன்றே கொடுத்துவிட்டார்களே மன்னர்களும், மகாராணியும்.

    நண்பர்களே!

    நீங்கள் இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் 'கலைக்கோயில்' பாடலில் நம் எல்லோருடைய ஈஸ்வரி அவர்கள் பாடும் அழகையும், ஸ்டைலையும் பாருங்கள். அநேகம் பேர் இந்தப் பாடலைக் கேட்டிருக்க முடியாது.

    பாட்டில் பின்னியெடுக்கும் பியோனோ, கூடவே சாக்ஸும் இழையும் சுகம், (அதுவும் பாடலின் அந்த இடையிசை) இந்த மாதிரி சாக்ஸ் அற்புதங்கள் வேறு பாடலில் உண்டா?

    இந்த அரக்கி அந்த உபகரணங்களுடன் இணைந்து, இழைத்து ஏற்ற இறக்கங்களை மிக அற்புதமாக அளவோடு தந்து

    இப்படி ஒரு காக்டெயில் விருந்து அளித்துள்ளதை

    எவரால் மறக்க முடியும்?

    என் சதைகளில் ரத்தமாய்க் கலந்த பாடல்.

    இப்படி வேறொரு பாடலை இப்படி ஒரு பாடகியை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

    பார்த்து, கேட்டு அனுபவித்து விட்டு எழுதுங்கள்.

    Last edited by vasudevan31355; 1st July 2014 at 08:17 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •