சிவாஜி நினைவுப்பரிசை 1.10.2012 அன்று பெறப்போகும் அந்த மூத்த 'சிகர' இயக்குனர் யார் என்பதனை எமது அடுத்த பதிவில் தெரிந்து கொண்டு விடலாமே..!
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 7
கலையுலக சக்கரவர்த்தி குறித்து இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர்
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : ராணி : 19.8.2001
http://i1110.photobucket.com/albums/...GEDC6628-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6630-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் மேன்மையான பாராட்டுக்கு எனது மென்மையான நன்றிகள்..!
கலைதெய்வத்தை வழிபடும் நடிகர் சாய்குமார் குறித்து லேட்டஸ்ட் 'ராணி' வார இதழில் வெளிவந்த அவரின் மினிபேட்டியுடன் கூடிய தகவல் மிக அருமை..! அதனை இங்கே இடுகை செய்தமைக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 6
ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்
'செவாலியே' விருது விழா
22.4.1995 [சனிக்கிழமை]
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை
தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் தொடர்கின்றன:
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : தினத்தந்தி குடும்பமலர் : 1995
http://i1110.photobucket.com/albums/...GEDC6624-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6625-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
சிங்கத்தமிழன் குறித்த சீரிய கட்டுரைகள் : 2
நடிகர் திலகத்துக்கு 'செவாலியே' விருது வழங்கப்பட்டதையொட்டி வெளியான அருமையான கட்டுரை
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : பிலிமாலயா : மே 1995
http://i1110.photobucket.com/albums/...GEDC6620-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6621-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6622-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
23.8.2012 வியாழனன்று விஜய் தொலைக்காட்சியில், Super Singer Junior 3 நிகழ்ச்சியில் ஒளிபரப்பான, பதின்மூன்று வயதே நிரம்பிய செல்வன் கௌதமின் உருகவைக்கும் குரலில் ஒலித்த, "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடல் காணொளியை பதிவிட்டு - அரங்கினுள் இருந்தவர்களைப் போலவே - என்னையும் உணர்ச்சிப்பிழம்பாக ஆக்கிவிட்டீர்கள்..! அரங்கிலிருந்த பிரபல கர்நாடக சங்கீத வித்வான்கள் மற்றும் நல்ல இசை ரசிகர்கள் அத்தனை பேரையும் செல்வன் கௌதம் தன் gifted குரலால் கட்டிப்போட்டுவிட்டான். தாங்கள் குறிப்பிட்டதுபோல் அனைவரும் இந்தப்பாடலோடு ஐக்கியமாவதற்கு மூலகாரணம் நம் இதயதெய்வமேதான்..! I am spellbound after watching this video, Vasu Sir..! இதனை இடுகை செய்த தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்..! திருநிறைச்செல்வன் கௌதம், வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று, வாழ்க வளமுடன்..! அவனது தேமதுரக்குரல் திக்கெட்டும் ஒலிக்கட்டும்..!
தலைவரின் "தச்சோளி அம்பு(1978)" ஸ்டில்களோடு திருவோணம் கொண்டாட்டம் : சூப்பர் சாய்ஸ்..!
"பந்தம்(1985)" 'கார்-ஸ்டெப்னி' காட்சியைத் தரவேற்றி எங்களையெல்லாம் இன்பப் பந்தாட்டம் ஆடவைத்துவிட்டீர்கள்..! No dialogues, Only expressions, that is possible for only our NT..! தாங்கள் இந்த அருமையான காட்சியை விவரித்திருந்த விதமும் வெகு அற்புதம்..!
நகைச்சுவை அரசர் கலைவாணர் அவர்களின் நினைவு தினப்பதிவாக, நமது கலைக்குரிசில் கலைவாணர் புகழ்பாடும் "அம்பிகாபதி(1957)" காவியக்காட்சியை அளித்தது சாலப்பொருத்தம்..!
சினிமா எக்ஸ்பிரஸ் : சித்ராலயா கோபு : கலாட்டா கல்யாணம் : அருமையான பதிவு..!
29.8.2012 தேதியிட்ட 'குமுதம்' வார இதழின் 'பேசும் படம்' பகுதியில் இடம்பெற்ற பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் அவர்களின் மினிபேட்டி மனதைக் கவர்ந்தது. இதற்குக் காரணகர்த்தாவான அந்த "சாணக்கிய சந்திரகுப்தா(1977)" அபூர்வ ஸ்டில் அசத்தல்..! உண்மையை உளப்பூர்வமாக ஒப்புக் கொள்ளும் Tollywoodன் 'நட சாம்ராட்'க்கு நமது உளங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக..!
வெள்ளித்திரை வேந்தரின் வெள்ளித்திரை நாயகியர் வரிசையில் நடிகை ஸ்ரீரஞ்சனி பற்றிய பதிவு அப்படியே 'ஸ்ரீ'த்துவமாக இருந்தது..!
"சரஸ்வதி சபதம்(1966)" - Crystal Clear ஆன வண்ண மெகா ஆல்பம் - வழங்க வாசுதேவனை விட்டால் வேறுயார்..?!
ஆசிரியர் தினத்துக்கு நமது பேராசிரியரின் ஸ்டில்ஸ் மற்றும் தங்களுக்கு மட்டுமா நம் அனைவருக்கும் பிடித்த "நூற்றுக்கு நூறு(1971)" 'உங்களில் ஒருவன் நான்' பாடல் என வழங்கி அகம் குளிரச் செய்துவிட்டீர்கள்..!
"கப்பலோட்டிய தமிழன்(1961)" திரைக்காவியத்தில் நமது தேசிய திலகத்தை ஒரு சில நொடித்துளிகள் கட்டபொம்மனாகக் காட்டுவார்கள்..! அதைப்போன்று செக்கிழுத்த செம்மலின் ஜெயந்தி நாளன்று சிதம்பரனார் நிழற்படங்களையும் அளித்து, "டீச்சரம்மா(1968)" மூலம் கட்டபொம்மனையும் காண்பித்துவிட்டீர்கள்..!
தங்களுக்கான இந்தப் பாராட்டுப்பதிவை தாமதமாக அளித்ததற்காக தங்களிடம் அடியேன் மன்னிப்பையும் கோருகிறேன்..!
எப்படியாயினும், நன்றி-பாராட்டு இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட சேவையல்லவா தங்களுடையது..!
தொய்வின்றித் தொடரட்டும் தங்களின் திருத்தொண்டு..!
[ஒரு சிறு இடைவெளிக்குப்பிறகு, ஒரு 'அவதார்' மாற்றத்தோடு, இங்கே 'தொபகட்டீர்' என குதிக்க இருக்கும் தங்களுக்கு, என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!]
பாசத்துடன்,
பம்மலார்.
தெரிந்து கொண்டு விட்டோமே... பம்மலார்.... சூப்பர்...
இனி நிகழ்ச்சியின் விவரங்களுக்கு வருவோம் ...
அதிகார பூர்வமாக இன்னும் சில தினங்களில் வெளியான பின் உறுதி செய்து கொள்ள வேண்டிய தகவல்கள் ...
நிகழ்ச்சி- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா
நாள் - 01.10.2012
இடம் - சங்கீத வித்வத் சபை அரங்கம், டி.டி.கே. சாலை, சென்னை 18
நேரம் மாலை 6.30 மணி
விழாவின் சிறப்பு விருந்தினர் மேதகு ஆளுநர் ரோசய்யா அவர்கள்
விழாவில் செவாலியே சிவாஜி நினைவுப் பரிசைப் பெற இருக்கும் வித்தகர்கள்
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர், கதாசிரியர்-இயக்குநர்
தவில் வித்வான் கலைமாமணி வலயப் பட்டி கே. சுப்ரமணியம்
கே.வி.ஸ்ரீநிவாசன், நடிகர்
பேராசிரியர் டி.எஸ்.நாராயணசாமி, ஊடகத்துறை வல்லநுர்
காஞ்சனா, நடிகை.
விழாவில் மேற்கூறிய திரைப்படக் கலைஞர்கள் நடிகர் திலகத்துடன் பணியாற்றிய படங்களிலிருந்து காட்சிகள் இடம் பெறும்.
அன்புடன்
ராகவேந்திரன்
பம்மலார் சார்,
மேலும் மேலும் அரிதான ஆவணங்களை அளித்து அநைவரையும் திக்குமுக்காடச் செய்து வருகிறீர்கள். பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
dear pammalar sir. throughout my life time i was with the grief that NT could not even get the national award due to political reasons though we propagate that india is one country. Indian films they always mean only hindi films. As an ardent lover of world cinema too I have enjoyed almost all foreign films and observed the acting range of actors like Brando, Heston, Chaplin,Robert de Nero,.... dilip kumar, sanjeevkumar,ANR,... but no one is ever close to the range of our NT. The variety of roles he has given life are innumerous. Karnan tops all for the last 30 min during which NT shakes and stirrs all souls of fans, whoever may be without age bar also! Even I have an illusion that when I will be in my death bed, NT's Karnan scene in the climax only will come before my eyes as the last sight! it is time we collect his brilliant movies properly edited in sequence for forwarding to Hollywood oscar award for life time achievement which no other Indian actor deserves
அன்புள்ள சந்திரசேகர் சார்,
மலைக்கோட்டை மாநகரில் நடைபெற இருக்கும் நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவை உள்ளடக்கிய முப்பெரும் விழா பற்றிய அழைப்பு இதழ் பக்கங்களும், அதையொட்டி திருச்சி மாநகரின் சுவர்களில் வரையப்பட்டு நகரின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் கண்கவர் வண்ண சுவர் விளம்ரங்களும் அருமையோ அருமை. நண்பர்கள் இங்கே குறிபிட்டதுபோல, டிஜிட்டல் பேனர் யுகமாகிவிட்ட இந்நாளில் சுவரில் வண்ண விளம்பரங்களைக் காணுவதே அரிதான வேளையில், இவை மனதுக்கு இதமளித்து, கடந்த காலங்களுக்கு இட்டுச்செல்கின்றன.
நடிகர்திலகத்தின் மீது நடிகர் சாய்குமார் கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாடாக அமைந்த கட்டுரைப்பக்கம் கணஜோர். அவர் 2010-ல் வெளியான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்திலும் ஒரு பிரதான ரோலில் (வில்லன் நாஸரின் வலது கை) நடித்திருந்தார். அவர் குறித்த ராணி இதழின் ஏட்டை அனைவரின் பார்வைக்கும் அளித்த தங்களுக்கு நன்றி.
அன்புள்ள பம்மலார் சார்,
தங்களின் அபூர்வ ஆவணப்பதிவுகள் வழக்கம்போல மிகவும் அருமை.
பாரதி நினைவு நாளையொட்டி பாரதி வேடத்தில் நம் தலைவரின் ஸ்டில், சிந்துநதியின்மிசை பாடலின் காணொளி மற்றும் நடிகர்திலகம் நடத்திய பாரதி நினைவுநாள் விழாவின் ஆனந்தவிடன் ஆவணம் அனைத்தையும் ஒரே பதிவில் தந்து அசத்தி விட்டீர்கள்.
இயக்குனர் சிகரம், நமது நடிகர்திலகத்தைப்பற்றி ஆகஸ்ட் 2001-ல் (தலைவர் மறைந்த சில தினங்களில்) அளித்திருந்த விவரங்கள் அடங்கிய 'ராணி' வார இதழ் பக்கங்கள் வெகுஜோர். இருவருக்குமிடையே கலகம் மூட்டிவிட சிலர் முயன்ற போதிலும் அவற்றை முறியடித்து இறுதிவரை சிறந்த நட்புடன் வாழ்ந்ததன் மூலம், இருவருமே நல்ல திறமையாளர்கள் மற்றும் தேர்ந்த அனுபவசாலிகள் என்பதை நிரூபித்தனர்.
செவாலியே விழா ஆவணங்களின் தொடர்ச்சியாக இன்று 'தினத்தந்தி' குடும்ப மலர் பக்க இதழ்களையும், 'பிலிமாலயா' இதழின் புகழுரையுடன் கூடிய பக்கங்களையும் ஒருசேர அளித்து மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்துள்ளீர்கள்.
இவைபோக, இதுவரை கேள்விப்பட்டிராத 'பூ முகம்' என்ற பத்திரிகையில் இருந்துகூட ஒரு பதிவைத்தந்து ஆச்சரியப்பட வைத்துள்ளீர்கள். (தங்கள் கண்ணில் படாத பத்திரிகைகள் எதுவும் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கின்றனவா?).
நாட்டில் பருவ மழை பொய்த்தாலும், நமது திரியில் ஆவண மழை பொய்க்காது என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வரும் தங்களுக்கு பாராட்டுக்கள் நன்றிகள்..
அன்புள்ள வாசுதேவன் சார்,
தாங்கள் புதுப்பொலிவுடன் மீண்டும் வந்து கலக்கப்போகிறீர்கள் என்பதை பம்மலார் அவர்களின் பதிவின்மூலம் அறிந்து மிகவும் மகிழ்ச்சி. 'சரஸ்வதி சபதம்' மெகா பதிவுக்குப்பின் தங்களின் பதிவைக்காண முடியவில்லையென்று ஏங்கியிருந்தோம். சூப்பர் பதிவுகளோடு மறுபடியும் தங்கள் அதிரடியைத் தொடருங்கள்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
இந்த ஆண்டு நடிகர்திலகம் பிறந்த நாள் விழாவில் விருது வழங்கப்படவிருக்கும் கலைஞர்களின் பட்டியலை அளித்ததற்கு நன்றி. நமது திரியைப் பார்த்து, படித்து, பரவசப்பட்டு வரும் எண்ணற்றோரின் வேண்டுகோளான, 'இந்த விழாவில் நமது பம்மலார் அவர்கள் மேடையேற்றப்பட்டு, விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதா என்பதனை அறிய விரும்புகிறோம். காரணம் நடிகர்திலகத்தின் கடந்த கால சாதனைகள் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துச்சொல்லப்பட்டிருப்பதன் மிக முக்கிய காரணம் நமது பம்மலார் அவர்களின் தொண்டு என்பது மிகையல்ல. அவர் உரிய முறையில் கௌரவிக்கப்பட இவ்விழாவே சரியான ஒன்று என்பது பலரது கருத்தாகும்.
இதைத்தங்களிடம் சொல்லக்காரணம், இங்கிருக்கும் எல்லோரையும் விட தாங்களே திரு ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களிடமும், நடிகர்திலகத்தின் குடும்பத்தாரிடமும் நெருக்கமானவர். எனவேதான் இதில் தங்கள் பங்கு அதிகமாக இருக்க வேண்டுமென்பது அனைவரின் விருப்பம். நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறோம்.
பிளாசா தியேட்டர் பேனர் பற்றிய தங்கள் பதிவைப்படித்ததும், தங்களுக்காகவே பிளாசா தியேட்டர் பற்றிய பதிவை எழுதியிருந்தேன். ஏனென்றால், நாம் இருவரும் அங்கு சற்று அதிகமாகவே உருண்டு புரண்டவர்கள். அந்த இடங்களை இப்போது அதிகமாகவே மிஸ் பண்ணுகிறேன்.
'ஜெய்-ஜாய் நைட்ஸ்' பற்றிய தங்களின் விவரமான பதிவை மக்கள் கலைஞர் ஜெய் திரியில் எதிர்பார்க்கிறேன். நண்பர் hattori_hanzo தந்துள்ள புகைப்பட இணைப்பில் பார்த்தபோது, ஜெய்யுடன் பணியாற்றிய பழைய கலைஞர்கள் நிறையப்பேர் நிகழ்ச்சிக்கு வந்திருப்பது தெரிகிறது.
தங்கள் அனைத்து பதிவுகளுக்கும் நன்றி.
டியர் கார்த்திக்,
தங்களுடைய பதிவில் உள்ள உணர்வு நம் அனைவருடைய ஒருமித்த கருத்தே என்பதில் ஐயமில்லை. பம்மலார் உரிய முறையில் கௌரவிக்கப் படுவார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அது எங்கே எப்போது எவ்வாறு என்பதெல்லாம் காலம் நிச்சயம் ஏற்கெனவே நிச்சயம் செய்திருக்கும். அத்தருணம் வரும்போது யார் தடுத்தும் அது நிற்காது. எனவே பொறுத்திருப்போம் என்பதே தற்போதைக்கு என்னுடைய நிலைப்பாடு.
ஜெய் ஜாய் நிகழ்ச்சியைப் பொறுத்த மட்டில் அது மிகச் சிறப்பாக நிறைவேறியது உள்ளபடியே மன நிறைவைத் தரும் விஷயமாகும். முடிந்த வரை அத்திரியில் விரிவாக எழுத முயல்கிறேன்.
பிளாசா திரையரங்கு ... என்ன சொல்ல .... மறக்கவொண்ணா நாட்கள்... எத்தனை படங்கள்.... எத்தனை நாட்கள் .... இதற்கெனத் தனித் திரியே துவங்கலாம். அந்த அளவிற்கு நினைவுகள் அலை மோதும் பசுமையான நிகழ்வுகள்...
தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
நேற்றிரவு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள், தனது 'திரும்பிப்பார்க்கிறேன்' நிக்ழச்சியில் தனது அனுபவி ராஜா அனுபவி மற்றும் பூவா தலையா படங்களைப்பற்றிக் குறிப்பிட்டபின், நாம் எதிர்பார்த்திருந்த, நடிகர்திலகத்தை அவர் இயக்கிய ஒரே படம் "எதிரொலி" பற்றிக் குறிப்பிட்டார். (அவரது பேச்சுக்கு நடுவே, எதிரொலி படத்திலிருந்து இரண்டு கிளிப்பிங்ஸ் காட்டப்பட்டன).
"இப்படம் துவங்கிய முதல் நாளே நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் என்னைத் தனியே அழைத்துச்சென்று, 'இதோபார் பாலு, இந்தப்படத்துக்கு நீதான் டைரக்டர், நான் நடிகன் மட்டுமே. என்னிடம் எப்படி நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ அதைத் தயங்காமல் கேள். நீ சொல்கிறபடி நடிக்க நான் தயார். சிவாஜியிடம் எப்படிக் கேட்பது என்று தயங்காதே. நீ படத்தை எப்படி வேண்டுமானாலும் எடு. அதில் நான் தலையிடவே மாட்டேன்' என்று உறுதியளித்தார். அவரது இந்த வார்த்தை எனக்கு பெரிய எனர்ஜியைக்கொடுத்தது.
நான் விருப்பப் பட்டபடியெல்லாம் தயங்காமல் நடித்துக்கொடுத்தார். ஆனால் கதைக்குத்தேவையான அளவு மட்டுமே அவரைப் பயன்படுத்திக்கொண்டு, அவரது முழுத்திறமையையும் உபயோகப் படுத்திக்கொள்ளத் தவறிவிட்டேன் என்பது பின்னர் தெரிந்தது. படம் முழுவதும் அவரை குற்ற உணர்வுள்ள ஒருவராக மட்டுமே காண்பித்தது நான் செய்த குறைபாடு. இருந்தாலும் நான் எதிர்பார்த்தபடியே மிக நன்றாக நடித்திருந்தார் என்பதில் எனக்கு பூரண திருப்தி.
நான் இயக்கிய மிகச்சிறந்த படங்களில் எதிரொலியும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை".
(இயக்குனர் சிகரம் கே.பி.அவர்களே...., இந்த ஒரு வார்த்தை போதும் எங்களுக்கு).
Dear Karthik Sir,
Thank you for your appreciation regarding Trichy function.
14-1-1969 pongal day - daily thandhi paper
nadigar thilagam in uyarndha manidhan - advt;
pic forwaded by tirupur ravichandran
http://i49.tinypic.com/4kfa60.jpg
Dear EsVee Sir,
உயர்ந்த மனிதன் விளம்பரத்தின் நிழற்படத்தை உயர்ந்த உள்ளத்தோடு வழங்கிய திருப்பூர் ரவிச்சந்திரன் சாருக்கும் அதனை இங்கே பதிவிட்ட தங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்
Excellent !
சென்னை சாந்தி திரையரங்கு கிட்டத் தட்ட அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் நிச்சயம் பரிச்சயமாகியிருக்கும் , குறிப்பாக அந்தக் காலத் தலைமுறையினர் சென்ற தலைமுறையினருக்கு அதனுடைய பழைய வடிவம் பசுமையாக நினைவிருக்கும். அந்தக் காலத்தில் அதனுடைய தோற்றத்தை இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் நீலவானம் திரைப்படத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் நம் அவர்களுக்காகவும் நமக்கு ஒரு நினைவூட்டலாகவும் நீலவானம் திரைப்படத்தில் இடம் பெற்ற சாந்தி திரையரங்கின் தோற்றங்களை நிழற்படங்களாக இங்கே நாம் காண்போம்.
நுழைவாயிலில் ஒரு அருமையான நீரூற்று அமைக்கப் பெற்றிருந்தது. மாலை வேளைகளில் அதனுடைய நீர் வீழ்ச்சி ரம்மியமாக இருக்கும்.
http://i872.photobucket.com/albums/a...KYSHANTI01.jpg
நடிகர் திலகம் காட்சியளிக்கும் இந்த நிழற்படத்தில் அவருக்குப் பின்னால் தெரிவது உயர் வகுப்பு மற்றும் பால்கனிக்கு செல்லும் நுழைவாயில்
http://i872.photobucket.com/albums/a...KYSHANTI02.jpg
கார் பார்க்கிங் - இது இன்றும் அப்படியே உள்ளது. மேலே உள்ள அழகிய செடிகளின் தோற்றம் மட்டும் மிஸ்ஸிங்
http://i872.photobucket.com/albums/a...KYSHANTI03.jpg
நடிகர் திலகத்திற்கும் ராஜஸ்ரீக்கும் நடுவில் தென்படும் அந்தக் கதவு உள்ளே லாபிக்கு செல்லும் வழி. அந்த லாபியில் தான் அந்தக் காலத்தில் பிரபலமான தமிழ் நடிகர் நடிகைகளின் படங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கும்.
http://i872.photobucket.com/albums/a...KYSHANTI04.jpg
நடிகர் திலகத்தின் பின்னால் தெரிவது பார்வையாளர் கேலரி
http://i872.photobucket.com/albums/a...KYSHANTI05.jpg
இந்தப் படத்தில் நடிகர் திலகத்தின் பின்னால் தெரியும் டிஸ்ப்ளே கூண்டுக்குள் தான் ரசிகர்களின் அட்டை பதாகைகள் அல்லது படத்தின் ஸ்டில்கள் இடம் பெறும்.
http://i872.photobucket.com/albums/a...KYSHANTI06.jpg
திரையின் முழுப் பாதுகாப்பிற்காக இரு மட்ட திரைச் சீலை அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
http://i872.photobucket.com/albums/a...KYSHANTI07.jpg
லேட்டஸ்ட்
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 8
தேசிய திலகம் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
துக்ளக் : 19.9.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC6631-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6632-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் சுவாமி,
இந்த வார துக்ளக் இதழ் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். இதில் இளங்கோவன் அவர்கள் கூறியுள்ளது நடிகர் திலகத்தின் தூய்மையான அரசியலுக்கு ஒரு சிறந்த உதாரணம். இன்னும் வர இருக்கும் வாரத்தில் இடம் பெறக் கூடிய செய்திகள் இதனை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்ப்போம். ஏற்கெனவே நடிகர் திலகத்தின் அரசியலைப் பற்றி அடியேனுடைய பதிவுகளை இந்த துக்ளக் இதழில் வெளிவந்துள்ள இளங்கோவனின் கட்டுரை அங்கீகரிப்பதாக உள்ளது. அப்போது நாம் நடிகர் திலகம் என்கிற பரிமாணத்தையும் தாண்டி அவர் எவ்வளவு சிறந்த தலைவராக இருந்தார் என்பதையும் உண்மைக்கும் நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் மிகச் சிறந்த உதாரணமாக அவர் எப்படி வாழ்ந்து காட்டினார் என்பதையும் புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் சிவாஜி ரசிகர்களை நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைத்த சிறந்த தலைவர் என்பதையும் அனைத்து சிவாஜி ரசிகர்களும் உணர்ந்து கொள்ளவும் முடியும்.
தங்களுக்கு என் உள்ளத்தின் அடித்தளத்திருந்து எழும் நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.
அன்புடனும்
சிவாஜி கணேசன் என்கிற சிறந்த தலைவரின் தொண்டர் என்கிற இறுமாப்புடனும்
ராகவேந்திரன்
இன்று 15.9.2012 முன்னாள் தமிழக முதல்வர்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 104வது பிறந்ததினம்
http://i1110.photobucket.com/albums/...r1/Anna1-1.jpg
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 9
உலகப் பெருநடிகர் பற்றி பேரறிஞர் அண்ணா
பொக்கிஷாதி பொக்கிஷம்
அண்ணா அவர்கள் தலைமை தாங்கும் "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடக விளம்பரம்
வரலாற்று ஆவணம் : நம் நாடு : 23.9.1957
http://i1110.photobucket.com/albums/...GEDC6635-1.jpg
'கட்டபொம்மன்' கணேசன் குறித்து அறிஞர் அண்ணா புகழுரை
வரலாற்று ஆவணம் : நம் நாடு : 25.9.1957
[அன்புகூர்ந்து பதிவிறக்கம் செய்து படிக்கவும்]
http://i1110.photobucket.com/albums/...GEDC6636-1.jpg
15.9.2012 : முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களது 104வது பிறந்ததினம்.
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தாங்கள் என்மீது கொண்டுள்ள அபரிமிதமான அன்புக்கும், அளித்துவரும் எல்லையில்லா ஆதரவுக்கும், தொடர்ந்து வழங்கி வரும் இதயம் நிறைந்த உச்சமான பாராட்டுதல்களுக்கும், எனது இருகரம் கூப்பிய சிரந்தாழ்த்திய ஆத்மார்த்தமான நன்றிகளை தங்களுக்கு காணிக்கையாக்குகின்றேன்..!
ஜெயா தொலைக்காட்சியில், 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில், வியாழனன்று [13.9.2012] வந்த எபிஸோடின் இறுதியில், நடிகர் திலகம் குறித்தும், "எதிரொலி(1970)" காவியம் குறித்தும் இயக்குனர் சிகரம் கே.பி. அவர்கள் தெரிவித்த கருத்துக்களை அப்படியே 'அச்சுஅசல்' பதிவுசெய்திருந்த தங்களுக்கு பாராட்டுக்கள்..!
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் அப்பழுக்கில்லா அன்புக்கும், பாசமான பாராட்டுதல்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்..!
சிவாஜி-பிரபு சாரிடீஸ் டிரஸ்ட் சார்பில், 1.10.2012 திங்களன்று சென்னையில் நடைபெறும், நடிகர் திலகத்தின் 85வது ஜெயந்தித் திருவிழா பற்றிய விவரங்கள் வெகு அருமை..! மேதகு தமிழக ஆளுநரின் முன்னிலையில், சிவாஜி நினைவுப் பரிசுகளைப் பெறும் இந்த ஐந்து பிரபலங்களுமே அவரவர்களது துறையில் Stalwarts..! விழா சிறக்க வாழ்த்துக்கள்..!
"நீலவான" 'சாந்தி' அரங்க நிழற்படங்களைத் தரவேற்றி, காண்போர் தம் உள்ளங்களை அந்த நீலவானத்தில் சிறகடித்து பறக்கச் செய்து விட்டீர்கள்..!
லேட்டஸ்ட் 'துக்ளக்' இதழில், திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் நமது தலைவரைப் பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்களை இடுகை செய்யும்போதே, இப்பதிவுக்கு தங்களிடமிருந்து உடனடி ஹாட் ரெஸ்பான்ஸ் வரும் என்றே எண்ணியிருந்தேன்..! அதுபோலவே நடந்துவிட்டது. Internet connectionஐ எல்லாம் தாண்டிய Terrific telepathy connection சார் நம்முடையது..!
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் esvee சார்,
29.11.1968 அன்று வெளியாகி, பொங்கலன்று வெற்றிகரமான 47வது நாளில் பீடுநடை போட்டுக் கொண்டிருந்த சிங்கத்தமிழனின் "உயர்ந்த மனிதன்" திரைக்காவியத்தினுடைய, அந்த 14.1.1969 தமிழர் திருநாள் இதழ் 'தினத்தந்தி'யில் வந்த அரிய ஆவணப் பொக்கிஷத்தை வெளியிட்டு அதகளப்படுத்திவிட்டீர்கள்..! தங்களுக்கும், ரவிச்சந்திரன் சாருக்கும் எங்களது இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
நமது பத்தாவது பாக நடிகர் திலகம் திரியில், "உயர்ந்த மனிதன்(1968)" காவியம் பற்றி உயர்ந்த ஆய்வுப்பதிவுகளை தொடர்ந்து வழங்கிவரும், நடிகர் திலகத்தின் மிக உயர்ந்த ரசிக-பக்த-வெறியரான கோபாலகிருஷ்ண அடிகளாருக்கு இதயம் நிறைந்த அன்பான பாராட்டுக்கள்..!
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :25
நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்
பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 31.3.1961
http://i1110.photobucket.com/albums/...GEDC6634-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 15
நடிகர் திலகத்தின் 74வது காவியம்
கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]
பொக்கிஷாதி பொக்கிஷம்
மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 11.3.1977
http://i1110.photobucket.com/albums/...GEDC6633-1.jpg
சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் சுவாமி,
தங்களுடைய பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றிகள். நடிகர் திலகத்தின் மீது மேம்போக்கான அன்பாய் அல்லாமல் ஆழமாய் பற்று வைத்திருக்கும் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்பதற்கு தாங்கள் கூறிய கருத்தே சான்று.
அன்புடன்
ராகவேந்திரன்
தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் வாரத்தில் பழைய திரைப்படங்கள் -
Zee Tamil 17.09.12 3 pm – AVAN THAN MANIDHAN
18.09.2012 3 pm – PESUM DEIVAM
20.09.2012 3 pm – RASAVE UNNAI NAMBI
21.09.2012 3 pm – KANDHAN KARUNAI
Raj TV 17.09.2012 1.30 pm – BALE PANDIYA
18.09.2012 1.30 PM – AVAN ORU CHARITHIRAM
19.-09.2012 1.30 PM - PONNUNJAL
20.09.2012 1.30 PM – ENNAI POL ORUVAN
21.09.2012 1.30 PM - ENGA MAMA
22.09.2012 1.30 PM - MIRUDANGA CHAKKARA VARTHY
Raj Digital Plus 17.09.2012 10 am – PANNEER NADHIGAL 1 PM – ORU VASANTHA GEETHAM 4 PM – PASATHAI THIRUDATHE 8 PM – PARISAM POTTACHU
18.09.2012 SANGU PUSHPANGAL 1 PM - NAAN UNGAL RASIGAN 4 PM – KADHAL VENNILA 8 PM – JULIE GANA PATHY
19.09.2012 9 AM – KALLAZHAGAR 1 PM - ULAGAM SUTRUM VALIBAN 5 PM = UNNAL MUDIYUM THAMBI 8.30 PM – RAGASIYA POLICE 115
20.09.2012 10 AM – IRU NILAVUGAL 1 PM - OYILATTAM 4 PM – MINNAL 8 PM – ULLATHAI KILLADHE
21.09.2012 10 AM – ANANDA JOTHI 1 PM – KIZHAKKU VEEDHI 4 PM – MURATTU KARANGAL 8 PM – PATTIK KAATTAN
22.09.2012 10 AM – SUGAMANA RAGANGAL 1 PM – BAGAVATHI PURAM RAILWAY GATE 4 PM - RANUVAM 8 PM – RAMAN ABDULLA
POLIMER TV 17.09.2012 2 PM – AVAL
18.09.2012 2 PM – AIRPORT
20.09.2012 2 PM – GEETHANJALI
21.09.2012 2 PM – NAYAK KARIN MAGAL
22.09.2012 2 PM – RASAVE UNNAI NAMBI
MURASU TV 17.09.2012 7 PM – MEENDUM VAZHVEN
18.09.2012 7 PM – KODI MALAR
19.09.2012 7 PM – DEIVAM
20.09.2012 7 PM – BAIRAVI
21.09.2012 7 PM – ATTUK KARA ALAMELU
22.09.2012 7 PM - GNANA OLI
MEGA TV 17.09.2012 12 PM – PATTANATHIL BUDHAM
18.09.2012 12 PM – BAMA RUKMINI
19.09.2012 12 PM – YARUKKAGA AZUDHAN
20.09.2012 12 PM – MUGA RASI
21.09.2012 12 PM – VAIDEHI KALYANAM
22.09.2012 1.30 PM – AMBIGAI NERIL VANDHAL
MEGA 24 17.09.2012 10 AM – KOLLI MALAI MAVEERAN 2.30 PM - SAKUNTALAI 6.30 PM – POOVIL RAGAM
18.09.2012 10 AM - URIMAI THEDUM URAVU 2.30 PM – MARAGA THAM 6.30 PM – RAJAVIN PARVAI
19.09.2012 10 AM – POLICE POLICE POLICE 2.30 PM – VIDI VELLI 6.30 PM – OH MANJU
20.09.2012 2.30 PM – AARA VALLI 6.30 PM – VASANTAME VARUGA
21.09.2012 2.30 PM – THEROTTAM 6.30 PM – THISAI MARIYA PARAVAIGAL
22.09.2012 2.30 PM – HELLO MR JAMINDAR 6.30 PM – VIRUNTHALI
J MOVIES 17.09.2012 9 AM – ENGAL THANGA RAJA 1 PM – EZHAI PADUM PADU 5 PM – ARADHANAI 9 PM – VETTAIK KARAN
18.09.2012 9 AM – PADHA PUJAI 1 PM – ILLARAME NALLARAM 5 PM – KARAI YELLAM SENBAGA POO 9 PM – ANNAI ILLAM
19.09.2012 8 AM – SRI VINAYAGAR VIJAYAM 11 AM – DEIVA CHEYAL 5 PM – THIRUVARUL 8 PM – THIRU MALAI DEIVAM
20.09.2012 9 AM – ULAGAM IVVALAVU THAN 1 PM – PANGALIGAL 5 PM – THUNAI 9 PM – KULA MAGAL RADHAI
21.09.2012 9 AM - ANNAI ABIRAMI 1 PM – THEDI VANDHA THIRUMAGAL 5 PM – KANNODU KAN 9 PM – KARUPPU PANAM
22.09.2012 9 AM – VARA PRASADAM 1 PM – KANNADI MALIGAI 5 PM - SHANKARLAL 9 PM - NEELA VANAM
அன்புள்ள ராகவேந்தர் சார்,
இந்த வாரம் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல் மலைக்க வைக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு தொகுத்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.
வீட்டில் இருந்தபடியே இத்தனை திரைப்படங்களையும் (போதாக்குறைக்கு ஏகப்பட்ட சீரியல்கள், வாடகைக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் சி.டி.க்கள்) பார்க்க முடிகிறது எனும்போது, திரையரங்குகள் அனைத்தும் வணிக வளாகங்களாகவும், குடியிருப்பு ஃப்ளாட்டுகளாகவும் விரைந்து மாறி வருவதில் வியப்பில்லை.
தற்போது 'உமாபதி திருமண மண்டபமாக' மாறிவிட்ட பழைய 'ஆனந்த் (70 mm)' தியேட்டர் உரிமையாளர் (மறைந்த ஜி.உமாபதியின் மகன்) சொன்ன தகவல் : "தியேட்டரில் வெறும் 50 பேர் மட்டுமே படம் பார்க்க வந்தாலும் தியேட்டர் முழுக்க நாங்கள் ஏ.சி.போடவேண்டியுள்ளது. ஏ.சி.க்கு ஆகும் செலவுக்குக்கூட வசூலாவதில்லை. மற்ற செலவுகளுக்கு நாங்கள் எங்கே போவது?. ஆகவேதான் திருமண மண்டபமாக மாற்றிவிட்டோம்". (அவர் சொல்வது உண்மைதானே)
அன்புள்ள ராகவேந்தர் சார்,
நீலவானம் திரைப்படத்தில் இடம்பெற்ற, சாந்தி திரையரங்கின் முந்தைய தோற்றத்தை பதிவுகளாக அளித்து பழைய இனிய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள். மரணம் வரை மறக்க முடியாத நினைவுகள் அவை. அந்த வளாகம் முழுக்க நம் கால்கள் படாத இடமேயில்லை. நம் சாயங்காலப்பொழுதுகளை சந்தோஷமாக்கிய நாட்கள் அவை. உள்ளே சென்று படம் பார்ப்பதைவிடவும், வெளியே நின்று அவற்றை நண்பர்கள் வட்டத்தில் அலசித்தீர்ப்பது பலமடங்கு இனிமையைத்தருபவை என்பதை பூரணமாக உணர்ந்த நாட்கள்.
எத்தனை எத்தனை புதிய நண்பர்கள் அங்கு அறிமுகமானார்கள். எவ்வளவு கருத்துப் பறிமாற்றங்கள், விவாதங்கள், சிலசமயம் விவாதம் முற்றி வாய்ச்சண்டைகள். (மாற்றுக்கருத்துடையோர்களுடன் பெரும்பாலும் வாய்ச்சண்டையிடுவோர் நண்பர் சீதக்காதி மற்றும் குமார்). வெளியூர் மன்றத்தினர் அவ்வப்போது அனுப்பிய அந்தப்பகுதியில் வெளிவரும் தினத்தந்தி செய்தித்தாள்கள், அவற்றில் வந்திருக்கும் பட வெளியீடுகள் பற்றிய அலசல்கள்.
நடுவில் நீரூற்றைக்கொண்ட தண்ணீர்த்தொட்டியின் சுற்றுச்சுவர்களில் (கம்பித்தடுப்பைத்தாண்டி) அமர்ந்துகொண்டு நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்த சுகமான நினைவுகள். சுற்றிலும் உட்காருவோர் எண்ணிக்கை அதிகமானதால், ரசிகர்களின் அன்புத்தொல்லையைக் கட்டுப்படுத்த கம்பித்தடுப்பின் உயரம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டபின், பக்கத்திலிருந்த 'பால்ஸ் ரெஸ்டாரண்ட்டின்' ஜன்னல் தடுப்புகளில் அமர்ந்து பேசிய நாட்கள் (அந்த இடத்தில்தான் தற்போது நடிகர்திலகத்தின் படப்பட்டியல் கொண்ட கல்வெட்டு இடம்பெற்றுள்ளது).
சாந்தியில் வழக்கமாக கூடும் ரசிகர்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அவர்கள் எப்போது கேட்டாலும், எவ்வளவு கூட்டம் இருந்தபோதிலும் காட்சி நேரத்துக்கு முன்பாக 2 ரூபாய் டிக்கட்டுகளை குறிப்பிட்ட அளவு தனியாக வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தும் மாப்பிள்ளை வேணுகோபால், திரிசூலம் வெளியாகும் முன்பு, நடிகர்திலகத்தைப்பற்றியும் சிவாஜி பிலிம்ஸைப்பற்றியும் சற்று தவறாக செய்தி வெளியிட்ட 'பிலிமாலயா' பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கப்புறப்பட்ட மன்றத்தினராகிய நம்மை, ஒவ்வொருவர் தோள்மீதும் கைபோட்டு சமாதானப்படுத்திய 'நடிகர்திலகத்தின் புதல்வர்' பிரபு. (அப்போது அவர் நடிகராகவில்லை). அண்ணன் ஒரு கோயில் வெள்ளிவிழாவைக்காண இடைஞ்சலாக வந்த தியாகம் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று உரிமையுடன் ஆர்ப்பாட்டம் செய்தபோது, சிவாஜி பிலிம்ஸ் சார்பில் சமாதானம் செய்ய வந்து, அண்ணன் ஒரு கோயில் பக்கத்திலுள்ள அண்ணா தியேட்டரில் நிச்சயம் ஷிஃப்ட் செய்யப்படும் என்று (பொய்யான) வாக்குறுதியைத் தந்து நிலைமையை சமாளித்த சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு நிர்வாகி மோகன்தாஸ்..... இப்படி சொல்லிக்கொண்டே போக எத்தனை இனிய நினைவுகள்.
சுருக்கமாகச்சொன்னால், ஏதாவது சொந்த வேலையின் காரணமாக ஒருநாள் மாலை 'சாந்தி'க்கு வராமல் போனாலும், அன்று எதுவோ குறைந்தது போன்ற உணர்வு மனதில் அலைமோதும்.
இன்றைக்கு சாந்தி திரையரங்கம் தோற்றத்தில் எவ்வளவோ மாறிப்போய்விட்டது. ஆனால் நம் மனதில் பசுமையாக நிலைத்து நிற்கும் அந்த பழைய 'சாந்தி'யும் அதோடு ஒன்றிப்போன இனிய நினைவுகளும் என்றும் நம் மனதை விட்டு அகலாது.
அன்புள்ள பம்மலார் சார்,
இன்றைக்கும் எந்த ஒரு காங்கிரஸ் மேடையிலும் அண்ணன் நடிகர்திலகத்தின் பெயரை ஒருமுறையேனும் குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் துக்ளக் இதழ் கட்டுரையைப்பிரசுரித்தமைக்கு மிக்க நன்றி.
அதைப்படிக்கும்போதே, அண்ணன் தலைமையில் தமிழக முன்னேற்ற முன்னணியில் இணைந்து பணியாற்றிய அந்த இனிய நினைவுகள் மனதில் அலைமோதுகின்றன. இன்றைக்கும் அந்த இய்க்கம் இருந்திருக்குமானால் இன்னும் அதில்தான் இணைந்திருப்போம். இப்போதுபோல, இருக்கின்ற இரண்டு கொள்ளிகளில் எது நல்ல கொள்ளி என்று பார்த்துக்கொண்டிருக்கின்ற அவசியம் வந்திருக்காது.
அவர் அடுத்த வாரம் சொல்லப்போகும் அந்த ஆஃபர் என்ன என்பது த.மு.மு.வில் இணைந்திருந்த நமக்குத் தெரிந்ததுதான். இதைப்பற்றி ஏற்கெனவே சாரதா தன்னுடைய வலைப்பூ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எப்படியாவது கட்சியை வளர்த்தால் போதும் என்று நினைத்திருந்தால், தி.மு.க.தலைவர் சொன்ன அந்த 25 சீட் ஆஃபரை அண்ணன் ஏற்றுக்கொண்டிருப்பார். தி.மு.க.வுக்கு போதிய எதிர்ப்பில்லாமல் இரண்டாகப்பிரிந்து கிடந்து அவர்களுக்குள்ளேயே தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த அ.இ.அ.தி.மு.க. வை எதிர்த்து, தி.மு.க. கூட்டணியில் அட்லீஸ்ட் ஒரு 15 எம்.எல்.ஏ.க்களாவது த.மு.மு. பெற்றிருக்கக்கூடிய நல்ல வாய்ப்பு வந்தது. ஆனால் அண்ணன் நாணயம், வாக்குறுதி, நம்பிக்கை என்றெல்லாம் அரசியலுக்கு ஒவ்வாத வாதங்களை வைத்து, அந்த வாய்ப்பை கைநழுவவிட்டார். தூய்மையான, நேர்மையான அரசியல்வாதி என்ற பெயர்மட்டுமே மிஞ்சியது.
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி கட்டபொம்மன் நாடகத்துக்கு அண்ணா தலைமை தாங்கிய 1957 விளம்பரத்தை வெளியிட்டமைக்கு நன்றி. அண்ணா ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தது 57 - 62 காலகட்டம் மட்டுமே. அதை அந்த விளம்பரத்தில் காண முடிகிறது. (62 - 67 ராஜ்யசபா எம்.பி., 67 - 69 எம்.எல்.சி. மற்றும் முதலமைச்சர்).
அரிய ஆவணங்களுக்கு அளவில்லாத நன்றிகள்.
அதிர்ச்சி விளம்பரம் !!!!!!!???????
http://i1087.photobucket.com/albums/...g?t=1347787497
அன்புள்ள வாசுதேவன் சார்,
நிஜமாகவே அதிர்ச்சி விளம்பரம்தான்.
இது எப்போது...??. எப்படி...??.
விளம்பரத்தில் கண்டது உண்மையா, அல்லது எதாவது விஷமிகளின் வேலையா...??.