Page 105 of 305 FirstFirst ... 55595103104105106107115155205 ... LastLast
Results 1,041 to 1,050 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1041
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரு.வாசுதேவன் சார்,

    திருச்சி மாவட்ட நிகழ்சிக்கு தாங்கள் அளித்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

    சொர்க்கம் சண்டைக் காட்சி, ஓணம் பண்டிகைக்கு- தச்சோளி அம்பு தலைவர்மூலம் வாழ்த்து - அருமை.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1042
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    அற்புதமான விவரங்கள், நிகழ்ச்சிகள் என்று எல்லோரும் தந்து கொண்டே இருக்கிறீர்கள். என்னால் அலுவலகப்பணியில், இடையிடையே எப்போதாவது வந்து படித்து செல்ல முடிகிறதேயன்றி பங்களிக்க முடியவில்லை. மன்னிக்கவும். KCSekhar சார் என்னுடைய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் தங்களுக்கு. பல நாட்கள் கழித்து நீண்ட நேரம் செலவழித்து ....

    ஞாயிறு (26/08/12) இரவுக்காட்சியாக 'சன் லைப்' - ல் 'பலே பாண்டியா' பார்க்க நேர்ந்தது. இந்த படத்தைப் பற்றி பலர் அங்குலம் அங்குலமாக பல விதத்தில் அலசிவிட்டார்கள் இங்கே. எண்ணற்ற முறை நான் பார்த்து இருந்தாலும் இம்முறை பார்த்தபின் என் எண்ணத்தில் எழுந்தவைகள் இதோ...

    திரு B. R. பந்துலு இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். குறிப்பாக கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனது அழுத்தமான முத்திரைப் படங்களை கொடுத்தவர். நடிகர் திலகத்துடன் இணைந்து பிரமாண்டமான, வித்தியாசமான, அற்புதமான பல படங்களை கொடுத்தவர். நடிகர் திலத்தின் முத்திரைப் படங்களாகவும் அவை அமைந்திருந்தன. இருவரும் பிரிந்து சென்றது தமிழ் திரையுலகிற்கே பேரிழப்பு.

    பதினோரு நாட்களில் இப்படியொரு உயர்தரமான படத்தை கொடுக்க இப்படியொரு குழுவால் மட்டுமே சாத்தியம். (நடிகர் திலகம், நடிக வேள், தேவிகா, மெல்லிசை மன்னர்கள், கவியரசர், B. R. பந்துலு). நடிகர் திலகத்தின் நடிப்பை இந்த படத்தில் என்று இல்லை, எந்தப் படத்திலும் அற்புதம், அட்டகாசம், பிரமாதம், ஆஹா, ஓஹோ என்று நான் காட்சிவாரியாக சிலாகித்து சொல்வதில்லை. ஏனென்றால் 'சூரியன் கிழக்கில் தோன்றுகிறது. மேற்கில் மறைகிறது' என்ற கூற்றுகளில் எந்த தகவலும் (Information) இல்லையோ அது போல அந்த கூற்றுகளிலும் எந்த தகவலும் இருக்காது. இருந்தாலும் பலரைப்போல் என் மனதை மிகவும் கவர்ந்த சில காட்சிகள்... குறும்பு கொப்பளிக்கும் காதல் காட்சிகள் (தேவிகா அண்ணி ரசிகர் மன்றம் சாட்சி), 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சிகள், அதுமுடிந்து மாமனாரை கண்டு அஞ்சுவது, அவரும் கபாலியும் வேறு வேறு ஆட்கள் என காணுவது, மற்றும் படத்தின் இறுதி காட்சிகளில் ரவுடி மருதுவும், விஞ்ஞானி சங்கரும் பாண்டியன் போல வேடம் போடுவதும் நகைச்சுவைக்கு உச்சக்கட்டங்கள். ரவுடி மருது, கபாலியிடம் 'பாஸ்', 'பாஸ்' என்றே அழைப்பதுவும், மதராஸ் தமிழிலேயே உரையாட வந்து தவிப்பதுவும், விஞ்ஞானி சங்கர் ஆங்கிலம் கலந்த கீச்சுத்தமிழில் உரையாட வருவதை தவிர்த்து பாண்டியன் போல இயல்பான தமிழ் பேச முயற்சி எடுப்பதையும் பின்னி எடுத்திருப்பார். படம் பார்ப்பவர்களுக்கு எந்த கதாபாத்திரம் எப்படி மாற முயற்சிக்கிறது என்பது தெளிவாக இருக்கும் என்பதால் நகைச்சுவை உற்சாகம் கரைபுரண்டோடும். இதற்கு பின்னர் வந்த பல படங்களில் கூட பலர் செந்தமிழில் உரையாடி இருப்பார்கள். ஆனால் 1962-ல் வந்த இந்தப்படத்தில் எல்லோரும் (ரவுடி மருது - மதராஸ் தமிழிலும், சங்கர் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழிலும்) இயல்பான தமிழில் பேசி இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்கள். உடன் வந்து கலக்கிய நடிகவேளை நான் குறிப்பிடாவிட்டால் எனது எண்ணவோட்டங்கள் முடிவு பெறாது. ஆனால் இவரை சிலாகித்து பேசுவதிலும் தகவல் இராது. ஆமாம் நடிகர் திலகமும், நடிக வேளும் மற்ற சிலரும் தங்கள் திரைப்படங்களில் சரியாக நடிக்கவில்லை என்று சொன்னால்தான் பிரமாண்டமான தகவல் இருக்கும். நகைச்சுவைக்கேற்ற நல்ல கதைதான். Logic-உம் சரியாகவே இருந்தது ஆனால்... பாலாஜி, தேவிகாவிற்கு முறை மாமன்/மாப்பிள்ளை. எனவே பாண்டியனுக்கு அண்ணன்/தம்பி முறை. அவரே பாண்டியனின் தங்கை வசந்தாவை மணப்பது சற்று சிரமமாய் இருந்தது. யாரோ அங்கே என்னை முறைப்பது தெரிகிறது. நிறுத்திகொள்கிறேன்.

    இந்த படத்தின் பாடல்கள் தொலைக்காட்சி மற்றும் FM ரேடியோ நிகழ்ச்சிகளில் எங்கேயாவது ஒளிபரப்பாகிகொண்டேதான் இருக்கின்றன. பார்த்தால் அல்லது கேட்டால் சற்றே நிறுத்தி கண்டு அல்லது கேட்டு விட்டுத்தான் செல்ல முடியும் 'வாழ நினைத்தால்', 'அத்திக்காய் காய்', 'ஆதிமனிதன் காதலுக்குப்பின்', 'நான் என்ன சொல்லிவிட்டேன்', 'நியே உனக்கு என்றும்', 'யாரை எங்கே வைப்பது' போன்ற சாகா வரம் பெற்ற பாடல்களைப் பற்றி சொல்ல நான் இன்னும் பல கற்றுக்கொள்ளவேண்டும்.

    'பலே பாண்டியா' என்ற சொற்றொடர் மஹாகவி பாரதி பிரயோகித்ததாக புதிய 'பலே பாண்டியா' (2010) திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த் சந்திரசேகர் சொல்லி இருந்தார். இந்த புதிய படத்திலும் பாண்டியன் என்ற கதாநாயகன் படத்தின் துவக்கத்தில் தற்கொலை செய்ய முயற்சி செய்வது போன்ற காட்சி இருக்கும். அது மட்டுமே இரு படங்களுக்கும் தொடர்பு. மற்றபடி இது மறுவாக்கம் (ரீமேக்) அல்ல. பழைய புகழ் பெற்ற படங்களின் பெயர்களை வைக்காதீர்கள் என்று என்ன சொன்னாலும் தற்போதைய திரைப்படத்துறையினர் கேட்பதாகவே இல்லை. படத்தின் பெயரிலுருந்தே copy துவங்குகிறது. 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சியை 'உள்ளதை தா' என்று அள்ளி கபளீகரம் செய்திருந்தார்கள். தனது திரைப்படங்களை (தங்கமலை ரகசியம், ஸ்கூல் மாஸ்டர் (கன்னட) ) மாற்று மொழிகளில் அந்த மொழிகளின் பிரதான நடிகர்களை வைத்து இயக்கிய திரு. B. R. பந்துலு இந்த படத்தை மற்ற மொழிகளில் எடுத்தாரா என தெரிந்தவர்கள் யாரேனும் கூறினால் நல்லது.

    சமீபத்தில் கூட யாரோ ஒருவர் நடிகர் திலகத்தின் படங்களை அறிமுகம் செய்யுங்கள். அவருடைய 'கனத்த' கதையம்சம் நிரம்பிய படங்களை பின்பு பார்க்கிறேன். அதற்கு முன் 'light-hearted' படங்களை அறிமுகம் செய்யுங்கள் என்றபோது மற்றொருவர் இந்த படத்தைப் பாருங்கள் என்று கூறியது மிகவும் பொருத்தமானது. நடிப்பின் பாடங்களைக் கற்றுகொள்ள நல்லதோர் நகைச்சுவைப் படம்.

    அன்புடன்.
    Last edited by kalnayak; 29th August 2012 at 05:06 PM.

  4. #1043
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Dear Kalnayak sir,

    A very wonderful nerration about the great movie 'Bale Pandiya'.

    For many people it will be kook like a very light movie, but it is very very tough one to differenciate each and every three rolls by NT, and in fact the two different rolls of M.R.Radha too. In between Balaji also done a very nice roll of comedy mixed. I think Balaji didnt do any such rolls in any other movies.

    And no need to say about the freshness of "Anni" in all scenes, and the hard work of MSV-TKR.

    innum eththanai pEr ezuthinaalum indha padaththaip patri ezuthi mudikka mudiyAdhu.

    Thanks a lot Kalnayakji...

  5. #1044
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    HAPPY ONAM TO ALL !!!

    pammalar

  6. #1045
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்நாயக் சார்,

    'பலே பாண்டியா' பற்றிய தங்களின் குறுஆய்வு 'பலே' கல்நாயக் என்று சபாஷ் போட வைக்கிறது. முன்பொருமுறை நான் தங்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தாங்கள் முடிந்தவரை பதிவுகள் அளிப்பதாகக் கூறியிருந்தீர்கள். அதேபோல் இப்போது சொன்னபடி நல்ல பதிவளித்துள்ளீர்கள். தொடரட்டும் தங்கள் பணி.
    Last edited by vasudevan31355; 30th August 2012 at 02:43 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1046
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கார் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. மேடான பகுதியில் இருந்து சற்று சரிவான பாதையில். எதிர்பாராதவிதமாக காரின் டயர் பஞ்சராகி கார் மெதுவாக நிற்கிறது. உள்ளே அமர்ந்திருக்கும் ஜெனரல் ஆப்ரஹாமிடம் கார் டிரைவர் வண்டியை விட்டு கீழே இறங்கி வந்து நிலைமையைச் சொல்கிறார். உடனே ஸ்டெப்னி மாற்றி விடுவதாகவும் கூறுகிறார். நிலைமை தெளிவாகப் புரிகிறது. 'சரி' என்று தலையசைவில் ஒரு சம்மதம். அந்த இடைப்பட்ட ஒரு சில வினாடியில் அழகாக இடது கைவிரல்களை மடக்கி வாயருகே கொண்டு சென்று சற்றே வாயைப் பிளந்து (கோட்டுவாய் விடுதல் என்பார்களே!.. அது போல) சிறு ரிலாக்ஸ். வலது கை விரல்கள் தன்னையுமறியாமல் சிறு அசைவுகளில் கணநேர களிநடம் புரிகின்றன. நேரான நேர்கொண்ட பார்வை. டிரைவரின் போதாத காலம் ஸ்டெப்னியிலும் காற்றில்லை. பயந்து போய் மிரட்சியுடன் மெதுவாக ஆப்ரஹாமிடம், "அய்யா... ஸ்டெப்னியிலும் காற்று இல்லீங்க...என்று நடுக்கத்துடன் டிரைவர் கூற, அதுவரை நேர்க்கொண்டிருந்த பார்வை வன்மத்துடன் டிரைவரின் மேல் திரும்புகிறது. டிரைவரை மேலும் கீழுமாக நோக்கும் சுட்டெரிக்கும் சூர்யப் பார்வை. ("ஏதோ டயர் பஞ்சராவது சகஜம்... இயற்கை... பொறுத்துக் கொண்டேன். 'ஸ்டெப்னி மாற்றுகிறேன்' பேர்வழி என்றாய்... சரி... செய்ய வேண்டியதுதான்...ஆனால் ஸ்டெப்னியிலும் காற்று இல்லை என்று வந்து என்னிடம் தைரிமாகச் சொல்கிறாய்...உன் பொறுப்பற்ற தன்மைக்காக நான் காரில் அனாவசியமாக தேவையிலாமல் உட்கார்ந்திருக்கவா?... நான் யார்! என் ஸ்டேட்டஸ் என்ன! ஸ்டெப்னியைக் கூட கவனியாமல் இந்த ஆர்மி ஜெனரலிடம் கார் டிரைவராக வேலை பார்க்க உனக்கு இனியும் யோக்கியதை இருக்கிறதா?") இவ்வளவு விஷயங்களும் அந்த ஒரு பார்வையில், அந்த ஒரு வினாடியில் டிரைவருக்கு உணர்த்தப்பட்டு விடும். இதுவரை பின்னணி இசை இல்லாமல் சென்று கொண்டிருக்கும் காட்சி, இப்போது டிரைவருக்கு ஏற்படப் போகும் ஆபத்துப் பின்னணியை இசைப் பின்னணி மூலம் அற்புதமாக எடுத்துக் காட்ட ஆரம்பிக்கிறது. (நன்றி சங்கர் கணேஷ்) கார் கதவைத் தானே திறந்து அந்த ரோட்டின் சரிவில், உச்சி வெயிலில், கோபத்தின் உச்சத்தில் பேன்ட் பாக்கெட்டுக்களில் தன் இரு கைகளையும் நுழைத்த வண்ணம் அமைதியான கொந்தளிப்புடன் ஆர்ப்பாட்டமாக, கனகம்பீரமாக ஜெனரல் ஆப்ரஹாம் நடந்து வரும் அந்த ஒரு நடையிலேயே நமக்குப் புரிந்து விடுகிறது அந்த டிரைவரின் கதி அதோகதிதான் என்று.

    ஜெனரல் ஆப்ரஹாம்- நடிப்புலகச் சக்கரவர்த்தி.

    ராஜாங்கம் நடத்திய காவியம்- 'பந்தம்'

    அண்மையில் தொலைக்காட்சியில் பார்த்து செயல் இழந்து போய் நான் உறைந்து நின்ற காவியக் காட்சி.

    மேற்கண்ட குறிப்பிட்ட அந்த அருமையான காட்சியை நீங்களே பாருங்களேன். நம் அனைவருக்காகவும் தரவேற்றி இதோ அந்த ஒரு சில வினாடி காவிய சீன்.

    Last edited by vasudevan31355; 30th August 2012 at 07:55 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1047
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    still from net.

  9. #1048
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் பிறந்த நாளை யொட்டி சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கௌரவிக்கப் படும் சாதனையாளர்கள் பட்டியலில் இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். விவரம் விரைவில்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1049
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear Kalnayak sir,

    Thanks for your wishes.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #1050
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear Vasudevan sir,

    Thanks for your post with very good scene in PANDHAM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •