பாராட்டுக்கள் வாசுதேவன் சார், 'ஆடைக்கேற்ற ஆணழகன்' தொடரில் அட்டகாசமாக அசத்தி வருவதற்கு.
பெரிய ஆச்சரியம், எங்கிருந்து உங்களுக்கு இப்படிப்பட்ட அரிய, அபூர்வ ஸ்டில்கள் எல்லாம் கிடைக்கின்றன என்பதுதான். இதற்கான தங்கள் உழைப்பு எத்தகையது என்பதை அறிய முடிகிறது.
இன்னொரு ஆச்சரியம் அன்றைய நாளிலேயே, 'மற்றவர்களுக்கு' பல ஆண்டுகள் முன்பே நம் தலைவர் இப்படிப்பட்ட ஸ்டைலான உடைகளை அணிந்து அசத்தி, 'ஸ்டைலுக்கென்றே பிறந்தவன் நான்தான்' என்பதை நிரூபித்திருப்பது. இதன் மூலம் சில பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்திருப்பது.
இவையனைத்தும் சாத்தியமானது தங்கள் ஆர்வம், சிரத்தை, உழைப்பு இவைகளால் மட்டுமே. அதற்காக நடிகர்திலகத்தின் அனைத்து ரசிகர்கள் சார்பிலும் நன்றிகள்....