பெறிய குயிலும் சிரிய குட்டியும்
உள்ளே நுழைந்த போது
இசைத் தென்றல்
தாடியுடன் வரவேற்றது..
‘வாம்மா வா..
பயிற்சி பண்ணிட்டயா..”” “
மெல்லிய நகை சிந்தி
‘பண்ணிட்டேங்க..
நீங்க செய்திருந்த
மொத இரண்டு வரி பிரமாதம்
அதுவும் சுபபந்து வராளில்ல
விளையாடியிருக்கீங்க..”
“என்ன பந்தோம்மா..
உன் வரியைப் பாடிப் பாத்தியா...
ஓ பாடட்டுமா..
சுகமான தமிழ்ப்பாடல் நீயே...ஆஆ.
“இல்லைம்மா. தப்பாப் பாடறே..
ஆங்கிலத்தில எழுதிக் கொடுத்ததைத்
தான் பாடறேன்..”
“இல்ல அத அப்படியே பாடணும்..
எங்க பாடு..
ஸ்ஸோகமான்..தமில்ப்பாடள்...நீர்ர்ர்யேஹ்..”
“.......” “
ம்.. இப்படித் தான்..
நீக்கும் யேக்கும் நடுல்ல
நெறய ஈஈ போட்டுக்குங்க..
வாங்க பதிவு செய்யும் அறைக்குப் போங்க..
“............”
இதாம்மா ஒங்ககிட்ட
எனக்கு ரொம்பப் பிடிச்சது..
பாட்ட அப்படியே ஆன்மால
உள்வாங்கிட்டு
படக்குன்னு கொடுக்கறீங்க பாருங்க” ” “
அறையில் இருந்து வெளிவந்தவுடன்
மலர்ச்சிரிப்புடன தயாரிப்பு சொல்ல
“”எல்லாம் சரிங்க..
சொன்னது நினைவிருக்கா..
கொஞ்சம் பத்து கூடச் சொன்னேனே” “
மலர் வாடி
“இருக்கும்மா..வீட்டுக்குப் போங்க
காசோலை வரும்..”
காரில் ஏறுகையில்
செயலாளினி சே..செகரட்ரி
நினைவு படுத்தினாள்..
இப்போ அந்த டிவிக்குப் போணும் மேடம்
நீங்க தலைமை..போட்டிக்கு..
ச்ரி..வண்டியத் தொலைக்காட்சி அலுவலக்த்துக்கு விடுப்பா..
ஜம்மென்று கவுனும்
முகமெல்லாம் சிரிப்புமாக
சின்னப் பெண் அரங்கில் நின்று
‘இனிய மாலை மேடம்”
“சரி பாடும்மா” “
“........” “
இதப் பாரும்மா
நன்னாப் பாடறே நல்ல குரல்
கொஞ்சம் மறுபடி அந்த வரி பாடு...
“”பலகும் தமிலே பார்த்திபன் மகனே
அழுகிய மேனி சொகமா..””
“சே..இது இப்படியா இருக்கும்..”
“இது கலந்திசை மேடம்.. நீங்க பாடினது..”
“தமிழ்ல ரீ மிக்ஸ்னு தெளிவாச் சொல்லு...
யா.. நான்பாடினது தான் இப்படி இல்லை
பளகும் டாமிலே..பார்த்திபன் மகன்ன்னே ந்னு
வரும்...
சரியா.. நல்லா பயிற்சி பண்ணும்மா..
அடுத்த முறை...”
“ நன்றி மேடம்” “
எதற்கோ வெளியில் வந்தால்
சின்னது அன்னையிடம்
சொல்லிக்கொண்டிருந்தது..
“தப்பு என் மேல தான் மம்மி..
அவங்க பாட்டு வேறயா
அப்செட் ஆகிட்டாங்க..
அடுத்த தடவை அவங்களோட
புதுப்பாட்டு பாடி தகுதி பெற்றுடுவேன்..”
“என்ன பாட்டுடீ..”
“பொன் எலிழ் போத்தது புது ஸ்கையில்..””
அருகில் சென்று
சின்னவளை
தனியாக வரச்சொல்லி..
“திரைப்பாட்டெல்லாம் வேணாம்மா..
நல்ல குரல்..
கர்னாடிக்ல கொஞ்சம் பயிற்சி பண்ணு..” “
சின்னது சென்றதும்
மனதில் படர்ந்தது நிம்மதி..
***