''சிரித்து வாழ வேண்டும் ' 30.11.1974
மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழ வேண்டும் '' இன்று 42 ஆண்டுகள் நிறைவு தினம் .
ராஜாதேசிங்கு படத்திற்கு பிறகு மக்கள் திலகம் முஸ்லீம் வேடத்தில் நடித்த படம் .இப் படத்தில் மக்கள் திலகம் தொழுகை செய்யும் காட்சிகள் , உணவு உண்ணும் முறை , பேசும் உரையாடல்கள் அனைத்திலும் முஸ்லீமாகவே மாறியிருந்தார் . அத்தனை நேர்த்தியான இயல்பான நடிப்பு .அடகு கடையில் செட்டியாரிடம் மக்கள் திலகம் பேசும் காட்சியில் செட்டியார் எம்ஜிஆரை பார்த்து கூறும் வசனம் '' நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலே அது பல லட்சங்களுக்கு
சமம் ''- என்ன ஒரு அருமையான வரிகள் .
1973ல் இப்பட ஆரம்ப விழாவிற்கு தென்னிந்திய பட உலக பிரபலங்கள் எல்.வி .பிரசாத் , ஸ்ரீதர் , நீலகண்டன் , கி.வ .ஜெகநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் ,ஆரம்ப தினத்தில் ''கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் '' பாடல் காட்சி படமாக்கப்பட்டது .
சிரித்து வாழ வேண்டும் படத்தின் சிறப்புகள்
மக்கள் திலகத்தின் வித்தியாசமான இரட்டை வேடங்கள்
மெல்லிசை மன்னரின் அருமையான பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல்கள் .
மக்கள் திலகத்தின் புதுமையான சண்டை காட்சிகள் . குறிப்பாக ஜஸ்டின் சண்டை .
இன்ஸ்பெக்டர் ராமு வேடத்தில் தோன்றும் காட்சிகளில் சீரியாஸான நடிப்பு
நம்பியாருடன் சந்திக்கும் காட்சிகளில் அருமையான வசனங்கள்
மனோகரை புரட்டி எடுக்கும் காட்சி .
தேங்காய் ஸ்ரீனிவாஸிடம் பேசும் நகைச்சுவை காட்சிகள் .
ரெஹ்மானின் அட்டகாசமான அறிமுக பாடல் காட்சி .
ராமு - ரஹமான் இருவரின் சண்டை காட்சிகள்
பிரமாண்ட அரங்கங்கள்
மக்கள் திலகம் - லதா -பல வண்ண உடைகளில் தோன்றும் இனிமையான கனவு பட காட்சிகள்
சூரியன் தூங்கியது - இங்கு சந்திரன் தோன்றியது - பிரமாதமான பாடல் வரிகள் .
பொன்மனச்செம்மலை புண் பட செய்தது யாரோ - அருமையான பாடல் .
கிளைமாக்ஸ் காட்சி- உலகமெனும் நாடக மேடையில் பாடலை தொடர்ந்து மக்கள் திலகம் - நம்பியார் - மனோகருடன் மோதும் சண்டை காட்சிகள் .
இறுதியில் நீச்சல் குளத்தில் மக்கள் திலகம் பிரமாதமாக டைவ் அடித்து நம்பியாரை துப்பாக்கியால் சுடும் காட்சியில் அவருடைய ஸ்டைல் , வேகம் , துடிப்பு ..வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .
மொத்தத்தில் மக்கள் திலகத்தின்