Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    1982ம் ஆண்டு புரட்சித் தலைவர் முதல்வராக இருந்த நேரம். சென்னையில் ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகர் ஏவி. ரமணன் பாடிக் கொண்டிருந்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு புரட்சித் தலைவர் சென்றார். ரமணனும் மக்கள் திலகத்தின் ரசிகர்தான். ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்து கச்சேரியை தலைவர் ரசித்துக் கேட்டார்.

    அன்று இம்பீரியல் ஓட்டலில் நடிகர் தங்கவேலுவின் மகனுக்கும் திருமண வரவேற்பு.. அதற்காக புரட்சித் தலைவர் கச்சேரி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டார். இருந்தாலும் ரமணன் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவரை அழைத்து கையில் ஒரு காகிதத்தை திணித்தார்.




    அதில் புரட்சித் தலைவர் இவ்வாறு எழுதியிருந்தார்:

    அன்புத் தம்பிக்கு ஆசிகள் பல.
    திரு தங்கவேலு அவர்களின் மகனுக்கு பெங்களூரில் திருமணம் நடந்து இன்று மாலை 8 மணி வரை இம்பீரியல் ஓட்டலில் வரவேற்பு நடைபெறுகிறது. எனது நிலையை புரிந்து கொள்வீர்கள் . புறப்பட வேண்டிய நிர்பந்தம். தவறாகக் கருதமாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. அன்புடன் எம்.ஜி.ராமச்சந்திரன் .29.10.1982

    என்று எழுதப்பட்டுள்ளது,

    ரமணன் சிலிர்த்துப் போய்விட்டார். இந்த தகவலும் புரட்சித் தலைவரின் கடிதமும் 6-8-2000 ஆண்டு இதயம் பேசுகிறது இதழில் வெளியானது.

    புரட்சித் தலைவர் தங்களது நிகழ்ச்சி்க்கு வந்தாலே பாடகர்கள் பெரிய புண்ணியமாக கருதுவார்கள். அவர் வந்து கச்சேரியை ரசித்துக் கேட்டதோடு பாதியில் கிளம்புவதற்காக ரமணனுக்கு அவர் வருத்தப்படக் கூடாதே என்பதற்காக கடிதம் கொடுக்கிறார் என்றால் பொன்மனச் செம்மலின் பொன்மனம் வியப்பை தருகிறது.

    ரமணனால் புரட்சித் தலைவருக்கு எந்தக் காரியமும் ஆக வேண்டியதில்லை. அதிலும் தமிழகத்தின் புகழ்பெற்ற நம்பர் ஒன் நடிகர் என்பதையும் தாண்டி புரட்சித் தலைவர் அப்போது தமிழகத்தின் முதல்வராக கோலோச்சி வருகிறார். உயர்ந்த நிலையில் இருக்கும் அவர், ரமணனுக்கு கடிதம் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. இருந்தாலும் ரமணனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடிதம் கொடுக்கிறார் என்றால், அந்தப் பொன்மனம் யாருக்கு வரும்?

    நாட்டில் இப்போது தலைவர்களுக்கா பஞ்சம்.? லெட்டர் பேட் வைத்திருக்கும் எல்லாரும் தலைவர்கள்தான். ஆனால், புரட்சித் தலைவர் தமிழகத்தையும் மக்கள் மனதையும் ஆட்சி செய்த உண்மையான தலைவர் மட்டுமல்ல, தொண்டருக்கும் தொண்டர்.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •