ஆஹா! ரெண்டு பெரும் ஒரே நேரத்தில் பரிமாற்றம். இதுதான் ஆத்மார்த்தம் என்பது.:p
Printable View
ஆஹா! ரெண்டு பெரும் ஒரே நேரத்தில் பரிமாற்றம். இதுதான் ஆத்மார்த்தம் என்பது.:p
'மங்கம்மா சபதம்'
https://upload.wikimedia.org/wikiped..._1943_film.jpg
https://i.ytimg.com/vi/smLTyd2cuLo/sddefault.jpg
வசுந்தராதேவியின் இந்தப் பாடலை என்னால் மறக்கவே இயலாது. அப்போதே அட்டகாசம். கிராமத்து மங்கம்மாவாக சபதம் இட்டு ரஞ்சனிடம் நாகரீக மங்கையாக ஆடிப் பாடும் இன்றைய ஆட்டங்களுக்கு சவால் விடக்கூடிய பாடல். ஆடலில் மேற்கத்திய இசையின் ஆதிக்கம் கொடி கட்டுகிறது. இன்றுவரை ஆச்சர்யப்பட வைக்கும் புதுமைதான்.
'லாலலாலலல்லா..தனன தானனன்னா தனனனானா' அம்மோவ்! எத்தனை 'தனனனானா' சுகமாக.
ஆரம்பமே அசத்திவிடும். வசுந்தராதேவியின் உடையலங்காரம் அப்போது மிகவும் புதுமையான ஒன்று.
'அய்யய்யய சொல்ல வெட்கமாகுதே
அய்யா மேலே ஆசையாகுதே'
என்று நின்றபடி இடையொடித்து அவர் ஆடும்போது எத்தனை சின்னாக்கள் சின்னாபின்னம் ஆனார்களோ தெரியவில்லை.:p
அதுவும் 'அய்யய்யா... ஹஹ்ஹஹஹா' என்று மாறி மாறி வயிற்றுப் பகுதியில் அவர் கை வைத்து ஆடுகையில் அற்புதம்.
தன் வாழ்வை சூறையாடிய ரஞ்சனை சவாலுடன் எதிர் கொள்வது, அவரை அடிமையாக்கியே தீருவது என்ற வெறி பாடலில் தொனிக்கும்.
'கைவளைக்குள் மெய் வளைத்து காட்டுவேன் (சின்னா பாணியில் சொன்னால் சர்க்கஸ்காரியோ)
கண்ணுக்குள்ளே உன்னைப் பூட்டுவேன்' ('பூட்டுவேன்' உச்சரிக்கப்படும்போது உறுதியும், தீர்க்கமும், நிச்சயமும் மனத்திடமும் புலப்படும்)
'பையப் பைய ஆடி உன்னை வாட்டுவேன்'
பழி உணர்ச்சி பக்காவாய் வெளிப்படும்.
ரஞ்சன் விவரம் புரியாமல் ஆனந்தமாய் சிரித்தபடி நடனத்தையும், பாடலையும் ரசித்து ஜொள் விடுவார்.
'என் நடையைப் பார்... நடை அழகைப் பார்
என் இடையைப் பார்... இடை அழகைப் பார்
என் விழியைப் பார்... விழி வெட்டுப் பார்
முகத்தை உற்றுப் பார்
ஆடுது பார்... தேடுது பார்... கூடுது பார்...
நாடுது பார்
அலுக்கு மினுக்கி குலுக்கி நலுக்கி'.....
என்று வசன நடையில் வதன அழகு பேசி, அப்படியே
'அய்யய்யய சொல்ல வெட்கமாகுதே'
அழகாக எடுத்து, அதே வரியை நாணம் கலந்த வெட்டுச் சிரிப்புடன் திரும்ப உதிர்க்கும்போது,
முனிவன் கூட முறிந்து போவான். இந்தக் காலத் தாத்தாக்களை அப்போது தவிக்க வைத்துவிட்ட தங்கப் பாடல்.:-P இந்தப் பாடலுக்காகவே படம் பிய்த்துக் கொண்டு ஓடியதாம்.
'Ranjan and Vasundhara became stars with this film and the heroine’s exotic dances are still recalled by old –timers' என்று சும்மாவா 'ஹிந்து'வில் எழுதினர் ராண்டார்கை.
https://youtu.be/guNcA4P_7zI
Iva thattina ava varuva .. famous dialouge by Ranjan in Mangamma sapatham
1951ல் வெளிவந்த 'மல்லீஸ்வரி' தெலுங்குப் படத்தின் அபூர்வ நிழற்படங்கள்.
http://3.bp.blogspot.com/-bRVc4S6_vR...malliswari.jpg
http://2.bp.blogspot.com/_BbJAArGDIE...Malliswari.jpg
http://4.bp.blogspot.com/_BbJAArGDIE...wari1-copy.jpg
திரைப்படம்: புல்லானாலும் பொஞ்சாதி (January 1993)
இடை: சந்திரபோஸ்
பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ் & சுனந்தா
http://www.youtube.com/watch?v=BGZJrChFosU
தேவலோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிஜாத பூவைப் போல்
பாவை உந்தன் பார்வையோ
மலர் தூவும் இளம் மாலை
மது போதை தரும் வேளை
என் இதழ்கள் ஏந்தும் தாகமோ
தேவலோக ராஜனோ
தேவி தேடும் தாசனோ
பாரிராஜன் தேரில் ஏறி
பார்க்க வந்த ஆசையோ
இதழ் ஓரம் இதம் தேட
இது தானே சுக நேரம்
உன் விரல்கள் நீந்தும் தேகமோ
தேவலோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
கோவில் சிலையின் அழகோ
நீ கொஞ்சும் தஞ்சை கலையோ
ஓ மலையில் சிந்தும் மழையோ
என் வலையில் விழுந்த சிலையோ
மணமேடை மனம் போல
மடி மீது என் மஹராணி
உன்னை மார்கழி பனியாய்
தாகம் தீர்ப்பேன்
தேவலோக ராஜனோ
தேவி தேடும் தாசனோ
பாரிஜாத பூவைப்போல்
பாவை உந்தன் பார்வையோ
மதுவின் குடத்தை மடியில் நீ
மறைத்து வைத்த மலரோ
ஓ நிலவு கொடுத்த ஒளியில் எனை
களவு கொண்ட உறவோ
இந்த நேசன் உந்தன் தாசன்
கொஞ்சிப் பேசும் காளிதாசன்
உனை காற்றில் அணைத்து
கவிதைகள் வடிப்பேன்
தேவலோக ராஜனோ
தேவி தேடும் தாசனோ
பாரிராஜன் தேரில் ஏறி
பார்க்க வந்த ஆசையோ
இதழ் ஓரம் இதம் தேட
இது தானே சுக நேரம்
உன் விரல்கள் நீந்தும் தேகமோ
தேவலோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிராஜன் தேரில் ஏறி
பார்க்க வந்த ஆசையோ...
RD
here is my recent article on Sunandha
https://www.facebook.com/photo.php?f...type=3&theater
Thank you Rajesh: This is the message I got when I clicked on your link...
Sorry, this content isn't available right now...
I will try again (and again :))
ok here is the article
Soulful Sunandha
Chitralaya Sriram anna, not sure if this will be in your request or not but wanted to bring to light another koel from Raja sir’s nest.
She is more sweeter and more soft and more melodious than the previous 2 koels for sure . yes none other than Sunandha.
Sunandha was introduced by Raja sir in the Bharathiraja film “Puthumai pen” .Who can forget the duet with P.Jayachandran . “Kadhal Mayakkam azhagiya kangal thudikkum(lyrics:vairamuthu)” definitely both Jayachandran and Sunandha brought mayakkam to many music lovers with their voices .. Sunandha could not have asked for more.. A grand entry with a grand song .. quickly she was part of Raja’s gang.. yes “Poove sempoove un vasam varum”(lyrics:vaali) , many would have heard this song in Dasettan’s voice but the female version is equally good rendered by Sunandha. The Ever Famous “SEnbagame senbagame “ duet with mano and a short solo version even now makes us bright . Vella manam ulla machan velaiyadi onju vandhan from Chinna veedu with Malaysia vasudevan. She had a great number in Sirai paravai .. yes “aandham pongida pongida” both the duet and solo version (one of my fav). She sang along side SPB & Chitra in Enna samayalo(lent her voice for Aachi manorama ) yes “adiye mohana aduppadi enakkenna sondhama” yet another brilliant duet with Jayachandran in “en purushan thaan enakku mattumthan” – “poo mudithu pottu veitha vatta nila punnagayil paatezhuthum vannapura” .
She along with SP shailaja sang a song with Raja sir himself “siruvani thanni kudichu “. Then came the ever famous lullaby one of Sunandha’s best “Mannava mannava mannadhi mannal allava” Vaali ayya’s lyrics, Raja sir’s tune and Sunandha’s voice for Sukanya made this song a classic. She also sang poonkatre inge vandhu vaazhthu with mano & uma ramanan from the same film. In the same year the sad version of Solli solli vandhadhinge from Senthamizh paatu with SPB was another great number. She sang for veteran actress sujatha.
She sang another soulful pathos with Raja sir for Thaalatu – enakkena oruvarum illamal ponalum unakkena naan iruppen. Her singing continued in films like Dharma seelan, Sethupathi IPS.
Pon vilangu had 3 songs for her .. 2 duets with Jayachandran. Oru kola kili vandhathe inbama(happy version), oru kola kili sonnadhe poimaya (sad version), ooty mala rotinile . all hit numbers.
She also sang with SPB in the oru kola kili Jodi thanna theduthu theduthu mane (in the solo version
Where she just sings few words like marvelous, wonderful etc ) . yet another duet with Jayachandran in the movie sevvandhi “semmene semmene un kitta sonnene” beautiful song .
Nattukkota settiyaru with mano from Seeman
She sang Indhariyo sundhariyo in Kadhalan for Rahman. He called her to be part of edhukku pondatti in Kizhakku seemayile.
S.A.Rajkumar also has used Sunandha in his compositions.
Manasum manasum serndhachu poomala thaan from Perumpulli was regular feature in radios at that time.
She sang Nathcathira jannalil vanam etti paakkudhu with mano for Surya vamsam.
She also sang in 3 hindi films for NAdeem shravan.
Deva also gave her few chances(Sollava sollava oru kadhal kathai from mahaprabu)but after 1994-1995 she disappeared. According to an article in hindu she shifted from film music to Classical.. Anyone who knows her please request her to sing again.
Unbearable voices torturing the music industry these days
One of very few female singers who really impressed me and sunandha is one amongst them.
@Chitralaya sriram anna – another koel from raja’s nest though not your request but mine . (Rajesh Venkatasubramanian
https://scontent-atl3-1.xx.fbcdn.net...f5&oe=56BA22AD
Thanks (again) Rajesh! Informative article about Sunanda; I am saving it in my collection! :)
ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்
அத்தனையும் தழைத்து வரும்
அவள் ஆடி வரப் பார்த்திருந்தேன்
ஆடி வந்து சேர்ந்தம்மா
ஐப்பசிக்கு காத்திருந்தேன்
எப்பசியும் தீரவில்லை
"மாசமும் ஐப்பசி
மழையும் பெய்யுது
அதற்கு தோதா ஒரு பாட்டு"
ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்// லைக் போட்டுட்டேனகண்டி என்ன பாட்னு நினைவுக்கு வர மறுக்குது..செந்தில்வேல்..
ஆவணி மலரே ஐப்பசி மழையே பாட் தான் நினைவுக்கு வருது
சாமீஸ்..எனக்கொரு சந்தேகம்.. இந்த என் காதல் கண்மணி பாட் போட்டாச்சா. தெரிலை. முன்ன பார்த்தேனான்னும் நினைவில்லை..பட்
இப்பப் பாக்கறச்சே அவர் உற்சாகமா தாவி த் தாவி ப் பாட சோர்ந்து சோர்ந்து ஷீலா மயங்கி மயங்கி விழப்பார்க்க அதைத் தடுத்துரவி பாடிக்கிட்டே இருக்கறது இடிக்குதே.. மஞ்ச் குங்க்கும் பார்த்ததில்லியே..என்னவாக்கும் காரணம்..
காலம் பாருங்க செந்தில்வேல் மழையை நினைவுபடுத்திட்டார்..மயில் இப்பத் தான் வ்ருது..
மயிலே மயிலே உன் தோகை எங்கே...சூப்பர் டூப்பர் ஹிட்டோன்னோ பாட்டு அந்தக்காலத்தில..படம் பார்த்ததில்லை
https://youtu.be/-kEVLQQNffE?list=RDyJwgsxMWn1Q
ஜென்சியோட கீச் குரல் நன்கு இந்தப் பாட்டில் தெரியும்..
From Malaiyitta Mangai
mazhai kooda oru naaLil then aagalaam
maNal kooda sila naaLil pon aagalaam........
http://www.youtube.com/watch?v=87pHmrrnrcs
M.S.Rajeswari is the singer !
மீள் பதிவு
இன்றைய ஸ்பெஷல் (63)
'இன்றைய ஸ்பெஷலி' ல்
http://i.ytimg.com/vi/iGDLklzLT_Y/hqdefault.jpg
அன்று திரும்பிய இடங்களிலெல்லாம் எதிரொலித்த சூப்பர் ஹிட் பாடல். அனைத்து வானொலிகளிலும் தினம் தினம் ஒலித்த உற்சாகப் பாடல். பாகுபாடின்றி அனைவரும் ரசித்த ஒரு பாடல். பாலாவின் மணிமகுடத்தில் வைரமாய் பதிந்த பாடல். நம் நெஞ்சங்களில் நிறைந்த பாடல்.)
படம்: மஞ்சள் குங்குமம் (1973)
பாடல்: 'வாலிப கவிஞர்' வாலி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர் : பாலா )
கொள்ளை அழகு கொஞ்சும் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் ரொம்ப ரொம்ப சுந்தரனாகத் தெரிவார். உடம்பும் படு ஸ்லிம். சொந்த மனைவி ஷீலாவுடனான பாடல். ரவியைப் பொருத்தவரையில் இது டூயட். ஷீலாவைப் பொருத்தவரை இது சோகம்.
நர்ஸ் ஷீலாவை விரட்டி விரட்டிக் காதலிக்கும் ரவி. பிடி கொடுக்காத ஷீலா. ஆனால் தனக்கு ஏற்பட்ட நோயினால் மரண வாசலை எதிர் நோக்கும் ஷீலா. ஆனால் ரவியிடம் காதலை சூழ்நிலை காரணமாக சொல்லிவிட, ரவி மகிழ்ச்சித் தாண்டவம் ஆடி 'இதுவரை உன் காதலை என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாயே' என்ற அர்த்தத்தில் பாட, ஆனால் அது ஷீலாவைத் தாக்கியுள்ள நோயை அவர் ரவியிடம் சொல்லாமல் மறைக்கும் அர்த்தத்தை நமக்கு உணர்த்தும் அருமையான வரிகள். ' என்னடா இது இப்படியா கதை'?! என்று படம் பார்த்தவர்கள் என்னை ஒரு பிடிபிடித்துவிடப் போகிறீர்கள்?
நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்தப் பாடலுக்கான காட்சியையும், பாடல் வரிகளையும் வைத்து என் மனதில் இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தது. அது ஓரளவிற்கு சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். (கார்த்திக் சார் இருக்கும் போது எனக்கென்ன பயம்?))
நோயின் கொடுமை தாளாமல் தள்ளாடித் தள்ளாடி மயங்கி விழப் பார்க்கும் ஷீலா. ரவி தன்னிடம் நெருங்கி வரும்போது அதை மறைக்குமிடம் பரிதாபம். அது தெரியாமல் காதல் வெற்றி பெற்றதே என்று ரவியின் அளவு கடந்த உற்சாக வெள்ளம். 'பிளாக் அண்ட் பிளாக்' பேண்ட் ஷர்ட்டில் ரவி கண் கவருவார். அந்த நடையும், ஓட்டமும், துள்ளலும், சுறுசுறுப்பும் நம்மை 'ரவி ரவிதான்' என்று சந்தோஷக் கூப்பாடு போட வைக்கின்றன. முகம் வசீகரம். (ஷீலா ஏன் மயங்க மாட்டார்?)
https://i.ytimg.com/vi/0D2MkQnXEZw/mqdefault.jpg
நடிகர் திலகத்தை பாலோ பண்ணி அதே போல் விக், உடை வகையறாக்கள் என்றாலும் அது இவர் ஒருவருக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்த வில்லையே! அழகான நடிகர் திலக ஜெராக்ஸ். (திருப்பதி லட்டு கிடைக்காத பட்சத்தில் தி.நகர் லட்டு கிடைத்ததைப் போல)
பூங்காக்களிலும், மெரினாவிலும் படமாக்கப்பட்ட பாடல். உச்சி வெயிலில் படமாக்கியிருப்பார்கள். ரவி நிழலுருவம் மிகச் சிறியதாக விழும்.
http://s1.dmcdn.net/CjdYw.jpg
பொலிவிழந்த ஷீலா பாடலுக்கு ஒரு மைனஸ் பாயிண்ட். கதை அப்படி இருக்கையில் ஒன்றும் செய்வதற்கில்லை.
வாலி கதை புரிந்து அதற்கேற்றவாறு பிளந்துகட்டியிருப்பார்.)
சங்கர் கணேஷின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் இப்பாடலும் இடம் பெறலாம். அற்புதமான இசைக்கருவிகளை ஆர்ப்பாட்டமாக உபயோகித்து காலத்தால் அழியாத காவியப் பாடலாக இரட்டையர்கள் இதைத் தந்து விட்டார்கள். இசைக்கருவிகளின் உன்னத ஆர்ப்பாட்டம். முக்கியமாக பாடலினூடே நிறைந்து வரும் அந்த புல்லாங்குழல் ஓசை. பாடல் முடிவடைந்தவுடன் நிறைவு தரும் அந்த இனிய ஓசை.
(எப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் தந்த திறமைசாலிகள்! கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பெருமை தேவருக்கே உண்டு. சும்மா ஆட்டுக்கும், மாட்டுக்கும் 'டொன் டொன் டொய்ங்' பின்னணி போட வைத்து உருப்பட விடாமல் செய்த புண்ணியம். அப்புறம் இளையராஜாவின் போட்டியை சமாளிக்க 'கன்னிப் பருவத்திலே' கொடுத்து அது ஹிட்டாகித் தொலைக்க, டிராக் மாறியதால் நமக்குத்தான் நஷ்டம் நிறைய.)
சரி! எல்லோரையும் சொல்லியாயிற்று. இப்பாடலின் ஹீரோ யார்? ரவியா? ரவி இரண்டாவதுதான்.)
'பாடும் நிலா' பாலுதான் இப்பாடலின் ஹீரோ. மனிதர் மனதை அப்படியே கொள்ளை கொண்டு விட்டார். வேகம், தெளிவு, வைப்ரேஷன்ஸ், கம்பீரம், உற்சாகம், சந்தோஷம், ஹைபிட்ச், குழைவு, நெளிவு, சுளிவு என்று அமர்க்களமோ அமர்க்களம். அதுவும் 'ராதா' என்று முடிக்கும் போது தரும் அதிர்வுகள் அருமை. 'சொல்ல நா... ணம் வந்ததோ' அந்த 'நா' வுக்குப் பிறகு சின்ன இடைவெளிவிட்டு 'ணம்' தொடருவது பிரமாதம். இது ரவியின் சொந்தப்படம் என்று சொல்வார்கள்.)
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
(இடையிசை அமர்க்களம்)
என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
வாடாத மலரே தேயாத நிலவே
வாடாத மலரே தேயாத நிலவே
நாள்தோறும் என்னோடு உறவாட வா
ராதா ஆஆ.......... ஆ
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
(ஷீலாவுக்கு வரப் போகும் ஆபத்தை முன்னமேயே அருமையாக உணர்த்தும் இசை)
கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே
காலத்தில் அழியாத எழில் வண்ணமே
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
மாறாத நிலை கொண்ட மனம் உண்டு வா
ராதா ஆஆ.......... ஆ
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
உன் நெஞ்சம் பொன் நெஞ்சம் அறியாததோ
உனதெல்லாம் எனதென்று தெரியாததோ
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
வருங்காலம் நமதென்ற முடிவோடு வா
ராதா ஆஆ.......... ஆ
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
https://youtu.be/iGDLklzLT_Y
என் நட்பான கண்மணீஈஈ..வாஸ்ஸு.. தாங்க்ஸ்..எஸ்.. நீங்கள் போட்டிருந்தது நினைவு வந்துவிட்டது..பட் என ஆரம்பித்து வாக்கியம் தொடங்கு முன்..எஸ்வி.சேகரின் வண்ணக்கோலங்களில் ஒரு காட்சி..
எஸ்வி.சேகர்.: எங்க மேனேஜர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்..எங்க ஆஃபீஸ் அக்கெளண்டண்ட்டுக்கு ஏற்பட்ட நிலைமையை க் கேட்டீன்னா உனக்குத் தெரியும்
ஃப்ளாஷ் பேக்..
என்ன ராமசாமி இப்படி ஆகிட்டீங்க.இப்படி கசங்கி இருக்கீங்களே
என்ன செய்றதுவாசு ( எதேச்சையாக சீரியலில் சேகர் பெயரும் வாசு தான்!) நான் இந்த நிலைமைக்கு வரக்காரணம் நம்ம மானே..ஜர் தான்...ர்ர்ர்
சரி சரி என்ன ஆச்சு
ரெண்டு நாள் குளிக்காம வந்தேன்னு என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாம்ப்பா அந்த மேனேஜர்..
சேகர் மூக்கைப் பொத்தியவாறே... அதற்கப்புறமாவது குளிச்சுருக்கலாம்ல..
*
எனில் மீள் பதிவுல்லாம் சரி.. ம. கு பார்த்தீர்களா என்ன அதன் பிறகு..?
சின்னக்கண்ணன் சார்
Uthaman│Kanavukaley Kanavukaley│Sivaji Ganesan, P…: http://youtu.be/bEJv4FP3m7U
நம்ம நட்பு என்னா நட்பு வாசு..வர்ணிக்க வார்த்தையே இல்லை..:) நான் கேட்டா தேடி எடுத்துச் சமர்த்தாக் கொடுத்துட்டீஙக்..
உமக்காக இரு தோழிகள் பாடும் பாடல் (ஆம்பள பாடற பாட் கிடைக்கலையான்னு கேக்கப் படாத் :) )
தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ(ர்)
காற்றில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி..
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்..
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
https://youtu.be/YlnBv7EDaXw?list=PL...RQ2VG3fmJyT5uZ
வட்டத்துக்குள் சதுரம் மகரிஷி நாவலாய் மாலைமதியில் வந்த நினைவு..கதை இரு தோழிகள் கதை என்பது மட்டும் நினைவில் கொஞ்சூண்டு மிகத் தெளிவின்றீருக்கிறது..
லத்து சுமி..ம்ம் பார்க்கணும் படம்..
ஊப்ஸ்... ஓஹ்..கனவுகளே கனவுகளே யா. தாங்க்ஸ் செந்தில்வேல்..இருந்தாலும் தேவன் வந்தாண்டி எனக்குப் பிடிக்கும்..
அட அட அட...
தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்குறப்பவே இத்தனை தித்திக்கும் பாடல்களா ?
( வாசுஜி... சின்னாவை சின்னாபின்னமாக்கும் வசு(ந்தரா) இருக்க வாசுவுக்கு என்ன கவலை ? இன்னும் இது மாதிரி ரெண்டு பாட் போட்டா சிக்கா.. சிக்க்க்க்கிடுவார்.. என் பங்குக்கு இரும்புத்திரை பாட்டைப் போட்டு எழுப்பி விடலாம்னு நினைச்சேன்..அப்புறம் விட்டுட்டேன் )
மஞ்சள் குங்குமம் அப்போ பிரபலமாக இருந்த லவ் ஸ்டோரி ஆங்கிலப் படத்தின் கதையைத் தழுவியதுதான். ஏழைப் பெண்ணை காதலிக்கும் பணக்கார வாலிபன். பெற்றோர் எதிர்ப்பு. வீட்டை விட்டு வெளியேறி திருமணம். தீராத வியாதியை மறைத்து செங்கல் சுமந்து அவனைப் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கியதும் பொட்டென்று போய்விடும் கதா நாயகி... ( படம் கொஞ்சம் அழுவாச்சிதான் ) ... நீங்கள் சொல்வது போல காட்சியைப் பார்க்கும்போது கதை புரியலாம். ஆனால் பார்க்காமல் கேட்ட காலத்தில் துள்ளிக் குதிக்க வைத்தது ...
இதே படத்தில் தேங்காய், மனோரமாவுக்காக எஸ்.பி.பி, மனோரமா பாடும் ரா ரா நா பாவா என்ற சிக்காவுக்கு பிரியமான பாட்டு ஒண்ணும் இருக்கே !!
//இதே படத்தில் தேங்காய், மனோரமாவுக்காக எஸ்.பி.பி, மனோரமா பாடும் ரா ரா நா பாவா என்ற சிக்காவுக்கு பிரியமான பாட்டு ஒண்ணும் இருக்கே !! //
ரொம்ப ராங்கான பாதையிலே போஸ்தாவா
அட மூஸ்க்கோய்யா
நோர் மூஸ்க்கோய்யா
ஆச்சி சூப்பர். கூலிங் க்ளாஸ் ஆச்சி. புடவை கட்டிய தேங்காய்.
http://www.dailymotion.com/video/x15...973_shortfilms
//அவனைப் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கியதும் பொட்டென்று போய்விடும் கதா நாயகி//
இதைப் பார்த்தா படம் பார்த்த மாதிரி:)
http://www.dailymotion.com/video/x15k1yx_kannukul-manjal-kungumam-1973_shortfilms
//என் பங்குக்கு இரும்புத்திரை பாட்டைப் போட்டு எழுப்பி விடலாம்னு நினைச்சேன்..அப்புறம் விட்டுட்டேன் )//
பழைய பக்கெட் போட்டுட்டீங்கன்னு சின்னா வருத்தப்படுவார்.:) ஏன்னா வசுந்துரா அதுல தன் மகளுக்கு அம்மாவா வயசானவங்களா நடிச்சிருப்பாங்க இல்லியா?
மதுண்ணா!
மார்னிங் ஷிப்ட் கிளம்பறேன். ஈவ்னிங் சந்திப்போம்.
இசையரசியின் இனிய கீதங்கள்
கொலுசு என்ற திரைப்படம். மலேசியா வாசுதேவன் அவர்களின் இசை
ராஜேஷ் மற்றும் சரிதா நடித்த படம்
கோபம் என்ன ராசாவுக்கு
https://www.youtube.com/watch?v=HVzOiLPnH4s
Courtesy: Tamil Hindu
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை மறந்த திரையுலகம்?
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவத ரின் நினைவுநாளில், அவருக்கு அஞ்சலி செலுத்த நாடக நடிகர் கள், திரையுலகினர் ஆர்வம் காட்ட வில்லை என்று அவரது உறவினர் கள் வேதனை தெரிவித்தனர்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை தக்க வைத்திருப்பது “ஹரிதாஸ்”. 1944-ல் வெளியான இப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர் தியாகராஜ பாகவதர்.
1910 மார்ச் 1-ம் தேதி மயிலாடு துறையில் கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்த இவர், சிறுவயதி லேயே குடும்பத்துடன் திருச்சி சங்கிலியாண்டபுரம் கல்லுக்காரத் தெருவில் குடிபெயர்ந்தார். 1926-ல் பொன்மலையில் நடைபெற்ற ‘பவளக்கொடி’ நாடகத்தில் அர்ஜுனன் வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
பொன்னிற மேனி, கந்தர்வக் குரலால் நாடக மேடைகளை வசப்படுத்திய அவருக்கு திரை வாய்ப்பு தேடிவந்தது. 1934-ல் பவளக்கொடி நாடகத்தை திரைப் படமாக தயாரித்தபோது, அதில் இவர் கதாநாயகனாக நடித்தார். தமிழகத்தின் இசை மாமேதையாக கருதப்படும் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை இவருக்கு பாகவதர் என்னும் பட்டத்தை வழங்கினார்.
தொடர்ந்து 1936 முதல் 1943 வரை இவர் நடித்த நவீன சாரங்க தாரா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி உள்ளிட்ட படங்கள் வசூலை அள்ளிக் குவித்தன. தமிழ்த் திரையுல கின் முதல் சூப்பர் ஸ்டாரான இவருக்கு, 1944-ல் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பெரும் பின்ன டவை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 30 மாதங்கள் சிறையிலிருந்த தியாக ராஜ பாகவதர், பின்னர் விடுதலை யானார். அதற்குப் பின் அவர் நடித்த படங்கள் வெற்றி பெற வில்லை.
இதையடுத்து திருச்சி திரும்பிய அவர் வறுமையில் வாடினார். 1959 நவம்பர் 1-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை பொது மருத்துவமனையில் தியாகராஜ பாகவதர் உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அங்கு அவரது 56-வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப் பட்டது. திரைப்பட, நாடக நடிகர்கள் சார்பில் நேற்று மதியம் வரை ஒருவர்கூட அஞ்சலி செலுத்த வரவில்லை. உறவினர்கள் சிலரும், அவர் சார்ந்த சமூகத்தினர் சிலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் இசைத் துறை தலைவர் எஸ்.டி.மூர்த்தி கூறும்போது, “திருச்சிக்கு பெருமை சேர்த்த தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் அமைத்து, இசை, நாடக விழாக்கள் நடத்த வேண்டும்” என்றார்.
விஸ்வகர்மா மகாஜன சபை துணைத் தலைவர் சுப்பண்ணா கூறும்போது, “பணமிருந்தபோது அள்ளிக் கொடுத்த தியாகராஜ பாகவதர், கடைசிக் காலத்தில் வறுமையில் சிக்கி, நோயால் இறந்தார். எம்.ஆர்.ராதா முயற்சி யால்தான் அவரது உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை அடக்கம் செய்த இடத்தை நாங்கள் பராமரித்து வருகிறோம். நடிகர்கள் சார்பில் சென்னையிலாவது அஞ்சலி செலுத்தியிருக்கலாம். தமிழகமே போற்றிப் புகழ்ந்த கலைஞனுக்கு உரிய மரியாதையை அரசும், கலை உலகத்தினரும் அளிக்க வேண்டும்” என்றார்.
கருணாஸ் அஞ்சலி
தேர்தலில் வாக்களித்த நாடக நடிகர்களுக்கு நன்றி தெரி விப்பதற்காக நடிகர்கள் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் மணப் பாறைக்கு நேற்று வந்திருந்தனர். அவர்களிடம், தியாகராஜ பாகதவர் நினைவு நாள் குறித்து திருச்சி நடிகர் ஜெரால்டு மில்டன் நினைவுபடுத்தியுள்ளார். இதை யடுத்து இருவரும் மாலையில் சங்கிலியாண்டபுரம் வந்து, அஞ்சலி செலுத்தினர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
48
'உத்தரவின்றி உள்ளே வா'
http://padamhosting.me/out.php/i84193_uiuv1.png
http://shakthi.fm/album-covers/ta/80e00366/cover_m.jpg
'உத்தரவின்றி உள்ளே வா'
பாடல்களுக்கென்றே நம்மை சில படங்கள் வசியப்படுத்துவதுண்டு. பாலா தொடரில் வரும் சூப்பர் பாடல்கள் இடம் பெற்ற இந்தப் படமும் கூட சேர்ந்து நம்மை கலகலப்பில் கலக்க வைக்கும். 1971 ல் பொங்கலுக்கு வெளிவந்து வெற்றி வாகை சூடிய படம்.
அப்படிப்பட்ட தேன் சுவை நிறைந்த பாடல்களோடு நம் விலா நோக சிரிக்க வைத்து இன்றும் நம்மை ரசிக்க வைக்கும் படம்தான் 'உத்தரவின்றி உள்ளே வா'.
'சித்ராலயா' தயாரிப்பு. வண்ணத்தில் நம் எண்ணம் போல. என்.சி.சக்கரவர்த்தி என்ற ஸ்ரீதரின் உதவி இயக்குனர்தான். இசைச் சஞ்சீவி 'மெல்லிசை மன்னர்'தான் படத்தின் பிரதான தூண். அடுத்த தூண்களாக பாலாவும், சுசீலா அம்மாவும். மற்றதெல்லாம் பிறகுதான்.
ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், தேங்காய், மாலி, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, ரமாபிரபா, சச்சு என்று ஏகத்துக்கும் நகைச்சுவை. ரவி, காஞ்சனாவின் இளமை துள்ளும் காதல் பாடல்கள், 'நகைச்சுவையின் நாயகன்' நாகேஷின் அமர்க்களம், தேங்காயின் டாக்டர் ரோல், யார் பெற்ற குழந்தையோ தன்னை 'அப்பா' என்று அழைக்க அதனுடன் அவஸ்தைப் படும் மாலி, (இறுதியில் குழந்தையை உரியவர்களிடம் சேர்த்துவிட்டு அதைப் பிரிய மனமில்லாமல் மாலி திரும்பிப் பார்த்தபடியே வருவது நெகிழ்ச்சி) பூர்வஜென்ம 'நாதா' நாகேஷ் பைத்தியம் ரமாபிரபா, கலக்கலான 'வெண்ணிற ஆடை' மூர்த்தி என்று படம் பக்கா.
இப்படத்தின் கதையெல்லாம் தேவையே இல்லை. எல்லோரும் அறிந்த இரு வரிக் கதைதான். நான்கு பிரம்மச்சாரி இளைஞர்கள். அவர்களில் நாயகன் ரவி பணக்காரர். இவர்கள் வாழ்வில் குறுக்கிடும் அழகான இளம் பெண். அவளைக் காதலிக்கும் நால்வரில் நாயகனுக்கே நாயகி. இறுதியின் நாயகி மேல் களங்கப் பழி, துடைத்தெறிய ஹீரோ, வில்லன், அப்புறம் சின்ன பைட். முடிவு எல்லோருக்கும் சுபம் என்று முழுக்க ஜாலிதான்.
என்.சி.சக்கரவர்த்தி இயக்கமே தவிர அப்படியே ஸ்ரீதர் படமேதான். இன்னொரு 'காதலிக்க நேரமில்லை', 'ஊட்டிவரை உறவு' போல.
பாடல்கள் ஒவ்வொன்றும் அனைவர் மனதிலும் பசுமரத்தாணி போல் பதிந்தவை. ஒன்றுக்கொன்று சளைக்காமல் பெரிய ஹிட் அடித்தவை. இப்படத்தின் பாடல்களில் மயங்காத மனமே இல்லை என்று சொல்லலாம் நிச்சயமாக.
காஞ்சனா இளைஞர்கள் கனவில் வந்து இன்பத் துன்புறுத்த, அதில் மூர்த்தி, நாகேஷ், ரவி மூவரும் தனித்தனியே காஞ்சனாவுடன் காதல் டூயட் பாடி சல்லாப சொப்பனம் காணுகின்றனர். இதில் மாலியை டூயட் பாட வைக்காமல் மாபெரும் ஏமாற்றத்தை அவருக்குத் தந்து நம்மைக் காப்பாற்றி விட்டனர். அப்படியே இருந்தாலும் 'கவர்ச்சி' வில்லன் கண்ணன் 'சுபதின' டூயட்டை விட ஓரளவிற்கு நன்றாகவே இருந்திருக்கும்.
இந்தத் தொடரில் மேலே சொன்ன பாடலை இப்போது தொடரின் பாடலாகப் பார்க்கலாம். தொடர்ந்து தொடரின் அடுத்தடுத்த பகுதிகளில் பாலா சம்பந்தப்பட்ட பாடல்களை தொடர்ச்சியாகப் பார்க்கலாம். என்ன? சரிதானே!
அதற்கு முன் பாலா சம்பந்தப்படாத இப்படத்தின் பாடல்களை கொஞ்சம் ஊறுகாயாகத் தொட்டு ரு(ர)சிக்கலாம்.
http://padamhosting.me/out.php/i7062...2h22m26s63.png
'பூர்வ ஜென்மப் பைத்தியம்' பிடித்து நாதா நாதா என்று நாகேஷ் பின்னால் அலைந்து அவரைப் படாத இம்சைப்படுத்தும் ரமாபிரபாவை குணப்படுத்த டாக்டராக 'தேங்காய்' வயது முதிர்ந்த நரை டாக்டராக வர அப்போது நடக்கும் ஒரு சின்ன சீனை சொல்லியே ஆகவேண்டும்.
https://i.ytimg.com/vi/FKQY2eZQsGs/hqdefault.jpg
தேங்காய் நர்ஸ் சச்சுவுடன் உள்ளே நுழையும் போது ரமாபிரபா சோபாவில் அமர்ந்து பொம்மைக்குக் கீ கொடுப்பார். பக்கத்தில் அவர் தாயார் சுந்தரிபாய் 7 கல் பொறுக்கி விளையாடிக் கொண்டிருப்பார். கீழே மாலி, நாகேஷ், மூர்த்தி மூவரும் குழந்தை பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதையெல்லாம் விளையாட வேண்டிய மாலியின் குழந்தையோ (ஆக்சுவலாக அது ஒரு அனாதைகுழந்தை... மாலிக்கு தகப்பன் ஸ்தானம் கட்டி விடுவார்கள்) அங்கிருந்து தள்ளி போய் எதையும் கண்டு கொள்ளாமல் புத்திசாலித்தனமாக புத்தகம் புரட்டிக் கொண்டு இருக்கும். எவ்வளவு சமயோசிதமான சீன்!
உள்ளே நுழையும் தேங்காய் 'அத்தனையும் லூஸுங்களாய் இருக்கே... இதில் எதுக்கு வைத்தியம் பார்க்கிறது?' என்று குழம்புவார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப் போய் விடும். இது போல ஏகப்பட்ட காட்சிகள். இன்னொன்று காஞ்சனாவின் ரவிக்கை உடை சோபாவில் இருக்க, ரவியின் அப்பா வீரராகவன் அங்கு வந்து அதன் மீது தெரியாமல் சாய்ந்து உட்கார்ந்து விட, அவருக்குத் தெரியாமல் அதை எடுக்க, இழுக்க நாகேஷ் செய்யும் கூத்து இருக்கிறதே... அடடா!
நட்டநடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு தேங்காய் மற்றவர்களுக்கு பேய் கதை சொல்ல, டைமிங்காக ரமாபிரபா பூர்வ ஜென்ம நினைவில் கரெக்ட்டாக 'தேனாற்றங்கரையினிலே... தேய்பிறையின் இரவினிலே' பாடலை மோகினி போல் பாட, அத்தனை பேரும் குறிப்பாக தேங்காய் தொடை நடுங்குவது நமது உடல் நடுங்க சிரிக்க வைக்கும். (இந்த மாதிரி காட்சிகளில் தேங்காயை அடித்துக் கொள்ள வேறு யார்?)
ராட்சஸியின் பேய்ப் பாடல்களில் முதன்மையானது. பின்னணி இசை பலவிதங்களில் பயமுறுத்தி படத்தின் பாத்திரங்களைக் குலை நடுங்க வைக்கும். நம்மைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும்.
'கலிங்கத்துப் போரில் வெற்றி கொண்டாயே' என்று ஈஸ்வரி பாடியவுடன் போரின் வெற்றி ஒலியை மெல்லிசை மன்னர் பீறிட்டுத் தரும் அழகே அழகு.
சரி! சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது பாடலுக்கு வந்து விடுவோம்.
http://i1087.photobucket.com/albums/..._000069651.jpg
முதலில் மூர்த்தி 'ஃபெமினா' புக் கையில் வைத்துக் கொண்டு கனவு காணுவார்.:)
மஞ்சள் மேலாடை ஜிப்பாவும், கீழே பூப்போட்ட சிகப்பு கலர் கைலியுமாக ஜப்பான் பொம்மை போல கிராப் அலங்காரத்துடன் கலியுக கட்டழகி காஞ்சனா அட்டகாசமான பார்க்கில் மூர்த்தியை,
'உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா'
என்று காதலாகி அழைக்க, 'ஜேம்ஸ்பாண்ட்' சான் கானரி போல முழுக்கை பனியன் அணிந்து, தத்தி தத்தி காஞ்சனாவின் கைபிடித்து நடந்து 'வெண்ணிற ஆடை' மூர்த்தி கலக்கி விடுவார். காஞ்சனா வேறு கனவு ஜோடி. முகத்தில் சந்தோஷப் பூரிப்புதான் மணிமாலா கணவருக்கு. பெல்ட்டிலோ வட்ட வட்டங்களாக மெல்லிய மெட்டலில் டிசைன்கள்.
சும்மா நடனத்தில் பிய்த்து உதறுவார் மூர்த்தி. பல்லவி முடிந்து முதல் சரணத்திற்கு முன் வரும் டிரம்பெட் ஒலிக்கு அவர் கைகொட்டியபடி இடையை படா ஷேக் செய்து ஆடுவது பலே காமெடி ஜோர்.
'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்கப்படாமல் கா....தலி'
என்று ஈஸ்வரி நீட்டி முழக்கி அனுமதி வழங்க, உடன் வரும் டிரம்பெட்டின் அதே 'காதலி' இசை ஒலிக்கு ஏற்ப உடலை பின்னுக்கு இழுத்து மூர்த்தி கைவிரல்களால் டிரம்பெட் வாசிப்பது போல பாவனை செய்து காட்டுவது எப்படிப்பட்ட உம்மணாம் மூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும்.
'அந்தப்புரத்தில் நண்பன் இருக்க
இந்தப் புறத்தில் வா... வா வா... நீ வா'
என்றபடி காஞ்சனா மூர்த்தியை இறுக்க அணைத்து (இந்த இடத்தில் பொறமை மூச்சை விடாமல் நம்மால் அடக்க முடியவில்லை...ம்..நல்லா இருங்க மூர்த்தி...புர்ர்....) அங்கிருக்கும் பூச்செடியின் பின்னால் இழுத்து மறைத்து வைத்து என்னவோ செய்ய, அந்த செடி ஆடும் ஆட்டம்....இந்த இடத்தில் 'மெல்லிசை மன்னர்' குழுசின் கிடார் வாசிப்பு 'டங் டங் டங் டங் டங் டங் டங் டங்'அவ்வளவு பொருத்தமாக அந்த இடத்தில் இனிமையாக மேட்ச் ஆகும். அந்தி மாலை நேரத்தில் இந்தப் பாடலை எடுத்திருப்பார்களோ! செடி, கொடி , மரங்களின் நிழல்களும் அழகாய்த் தெரிகின்றன.
முதல் சரணம் மூர்த்திக்கு முடிந்தது.
http://i1087.photobucket.com/albums/..._000136096.jpg
அடுத்து நாகேஷ் டர்ன். அந்த மீசையில்லாத, அம்மை வடுக்கள் நிறைந்த, கண்கள் இமைக்காத, கனவு காணும் முகம் பார்க்கும் போதே 'முணுக்' கென்று சிரிப்பு வந்து விடும்.
கனவிலோ பாகவதர். கழுத்தில் நீள வெண் பட்டு அங்கவஸ்த்திரத்துடன் பாகவதர் கிராப் வைத்து கந்தர்வக் காரிகையுடன்
'பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனைக் காண'
என்று 'பாடகர் திலக'த்தின் 'கணீர்'க் குரலில் ஆலாபனை டூயட். காஞ்சனா தேவலோக ரம்பை போல சந்தனக் கலர் சேலையணிந்து 'சுபாஷணி... மதாங்கினி' களுக்கு அற்புத அபிநயங்கள் பிடிப்பார்.
நாகேஷ் இரண்டாவது முறை 'சுபாஷினி... மதாங்கினி' பாடும்போது கம்பீரமாக பார்க்கில் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கவஸ்திரத்தின் ஒரு பகுதியின் நுனியை பிடித்து இடது கை அக்குளில் தள்ளி செருகி, 'டபக்'கென்று காஞ்சனாவிடம் கால் மடக்கி குனிந்து காமம் கண்ணை மறைக்க ஒரே ஒரு செகண்டில் போடுவாரே ஒரு அவசரக் கும்பிடு! அப்பாடி! சிரிப்பில் கண்களில் தண்ணீரே வந்துவிடும். மோகத்தின் வேகத்தில் காஞ்சனாவின் கால்களில் கூட விழுவது... அது கூட யாருக்கும் தெரியாமல் கௌரவமாக விழுவது செம காமெடி. அதே போல சரணம் முடிந்து,
'உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா'
என்று கைகளில் தாளம் போட்டு (அதுவும் திமிராக, தெனாவட்டாக ஒரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு இன்னொரு கையை உயர்த்தி விரல்களால் தாளம் போட்டபடி நடந்து செல்வார்.) நல்ல மதிய வெயிலிலும், பிறகு மாலையிலும் இந்தக் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
மூன்றாவது சரணம் முத்தான ரவிக்கு.
சிம்பிள் சுடிதாரில் காஞ்சனா ரொம்ப ஜோராக இருப்பார். கடைந்தெடுத்தது போல உடலின் அங்க அமைப்புகள். அதில் நச்சென்று பொருந்தும் சுடி. வெளிர் நீல பேன்ட், ஷர்ட்டில் ரவி. (என்ன... சிகையலங்காரம்தான் கொஞ்சம் சிரமம் செய்யும். வேறு மாதிரி 'விக்' வைத்திருக்கலாம். (மேலே தூக்கி வைத்து படிய வாரி விட்ட கிராப்... ஆதலால் இளமை கொஞ்சம் மிஸ் ஆவது போல தெரியும்) மன்மதன் ரதிதேவி இணைந்து நிற்கும் சிலை பின்னால் இருக்க அதன் முன்னால் ரவி, காஞ்சனா ஆடுவார்கள்.
ரவிக்கு நம் 'தொடரின் நாயகர்' குரல். மூன்றாவது சரணத்தில் இரண்டு வரிகளுக்கு மட்டுமே வாய்ப்பு.
'கள்ளம் இலாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ
கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ'
இருந்தால் என்ன! அந்த இரண்டு வரிகளும், பின்னால் வரும் பல்லவியின் நான்கு வரிகளும் பாலாவின் குரலில் பகட்டாய் மின்னுகின்றன. அதுவும் சரண இரண்டு வரிகளை கேட்க கேட்க பரமசுகம். திரும்ப ஒரு முறை பாடுவார். சும்மா குரலில் வழக்கத்தைவிட குழைவும், இளமையும் அதிகமாகக் கொஞ்சும். அந்த 'னோ' க்களின் எண்ட் எக்ஸலென்ட். 'தன்னை' எனும் போது அவரின் தனித்தன்மை அப்பட்டமாகத் தெரியும்.
அது போல'கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ' என்று பாலா முதல் தடவி பாடி முடித்து இரண்டாவது தரம் பாடும் போது அந்த இடைப்பட்ட இரத்தில் மிக அழகான ம்யூசிக் பிட் ஒன்றை 'மன்னர்' மனம் மயக்கத் தருவார். அதே போல ஈஸ்வரி 'மஞ்சள் முகத்தை'ப் பாடும் போதும் இடையில் அற்புதமான இசை. பல்லவி வரிகளான 'உத்தரவின்றி உள்ளே வா' வரிகளின் பின்னணியில் 'டங்டடங்டங்... டங்டடங்டங்' பேஸ் கிடார் ஒலி இந்தப் பாடலை எங்கோ தூக்கிச் சென்று விடும்.
http://i1087.photobucket.com/albums/..._000211175.jpg
அந்த வரிகளின் போது பார்க்கின் அந்த க்ரில் கம்பிகளின் சிறிய பாலத்தில் காஞ்சனா ஓடி வந்து நின்று சேனலைப் பிடித்தபடி ஒரு காலை அகற்றி வைத்து இடுப்பை அழகாக அசைத்து மூவ்ஸ் தருவார். அள்ளிக் கொண்டு போகும். அதற்கு முன் ஓடி வரும் ரவியின் வழக்கமான ஒரு ரவுண்ட் டர்னும் உண்டு.
பின்னால் ஈஸ்வரி 'மஞ்சள் முகத்தை'த் தொடர்வார்.
பாடகர் திலகம், குழைவுத் திலகம், ராட்சஸி, எம்.எஸ்.வி கூட்டணி. இனிமைக்குக் கேட்கணுமா? காமெடி நடிகர் தானே என்றெல்லாம் எண்ணாமல் அப்போதய 'சூப்பர் ஸ்டாரினி' காஞ்சனா 'வெண்ணிற ஆடை' மூர்த்தியுடன் டூயட் செய்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. (இப்போதும் சில முன்னணி நடிகைகள் சந்தானம், வடிவேலு, கவுண்டமணியுடன் காமடிக்காக சில டூயட்கள் சேர்ந்து பண்ணியிருக்கிறார்கள்).
காஞ்சனாவுடன் ஆடும் நாகேஷ், ரவி இருவருமே பாடுவார்கள்.
மூர்த்திக்குப் பாடல் கிடையாது. அப்போது பெண் குரல் ஈஸ்வரி மட்டுமே.
நாகேஷ் பாடும் போது காஞ்சனவிற்குப் பாடல் கிடையாது. டி.எம்.எஸ்.மட்டுமே.
ரவி பாடும் போது காஞ்சனாவும் பாடுவார் இணைந்து. ஏனென்றால் படத்தில் உண்மையான ஹீரோ ரவி அல்லவா! அதனால் நாயகன் நாயகி இருவருக்கும் சமமாக பாடல் வரிகள். பாலா, ஈஸ்வரி இருவர் குரலும்.
ஈவ்னிங்கில் படம் பிடித்திருப்பது தெரியும்.
எப்படி பார்த்துப் பார்த்து யோசித்து யோசித்துப் பண்ணியிருக்கிறார்கள் பாருங்கள்!
அந்தக் காலத்தில் டூயட் எல்லாம் பார்க்குகளில்தான் பெரும்பாலும். அந்தப் பார்க்குகளை இப்போது பாடல் காட்சிகளில் பார்க்கும் போது என்னவோ ஒரு இனம் புரியா சந்தோஷம் கிட்டுகிறது. இந்தப் பாடலில் கூட பாருங்கள். காட்சிகளுக்குப் பின்னால் எவ்வளவு அழகான பச்சைப் பசேல் தென்னை மரங்கள்... அடர்த்தியாய் வளர்ந்து உயர்ந்த வாழை மரங்கள்...ச வுக்கு கன்றுகள்... குரோட்டன்ஸ்கள். இப்போதிருக்கும் தென்னை மரங்களை, வாழை மரங்களைப் பார்த்தால் அந்த சந்தோஷம் கிடைப்பதில்லையே.
ஒரே பாடலில் மூன்று ஆண்கள்...ஒரு பெண். பாடக பாடகியோ மூவர். பாடலோ மூன்றரை நிமிடங்களே. அதில்தான் எத்தனை மனநிறைவு! மகிழ்ச்சி! ஈகோ இல்லாமல் நடிக நடிகையர் பங்களிப்பு. முழுத் திருப்தி அளிக்கும் பாடல்.
http://i1087.photobucket.com/albums/..._000248522.jpg
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுத்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்கப்படாமல் கா....தலி
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்கப்படாமல் கா....தலி
அந்தப்புரத்தில் நண்பன் இருக்க
இந்தப் புறத்தில் வா... வா வா... நீ வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
ஆ..............ஆ
பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனைக் காண
அ ஆஆ.....
பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனைக் காண
புடவையின் அழகென்ன! கூந்தலின் அளவென்ன!
புடவையின் அழகென்ன! கூந்தலின் அளவென்ன!
ஏழையைக் கண் பாரம்மா!
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே! பாராதே!
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே!
சுபாஷினி!... மதாங்கினி!
சுபாஷினி!... மதாங்கினி!
தோழர்கள் பார்வையில் கேலிகள் ஆகுமுன்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுத்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
கள்ளம் இலாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ
கள்ளம் இலாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ
கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ
கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ
மஞ்சள் முகத்தை மெல்லப் பிடித்து என்னை ரசிக்கக் கூடாதோ
மஞ்சள் முகத்தை மெல்லப் பிடித்து என்னை ரசிக்கக் கூடாதோ
வண்ணம் மலர்ந்து எண்ணம் கலந்து மின்னல் மயக்கம் கொள்ளாதோ
மின்னல் மயக்கம் கொள்ளாதோ
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுத்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
sema paattu vaasu.. enakku..woodlands la utkaarnthukkittu rama prabha.."enakku oru thEnum thiNai maavum koNarka.." enach cholvathu eppOthum ninaivu vanthu smile thaanagavE varum.. mm
veet pOi type paNRen..
hayyo.. உ.இ.உ.வா என்க்ம் ரொம்ப் பிட்ச் பட்ம்....
இதே பாட்டுதானே சின்ன பார்ட் மட்டும் கடேசியில் சுபம் போடும்போதும் வரும்... ? ( அப்போ ரமாபிரபாவும் பாடுவதாக நினைவு... சரிதானா வாசுஜி ? )
தேனாறு தவிர பாலு ஆறு இல்லாமல்..இன்னொரு தர்மாவதி பாட்டு இருக்கே...
சுகமான சுமைதாங்கி சாங்க்ஸ் !!
Quote:
கதாநாயகியை முதுகில் உப்புமூட்டை சுமந்து நடப்பதற்கும் கைகளில் அள்ளியெடுத்து தட்டாமாலை சுற்றுவதற்கும் அவள் நினைவுகளை மனதில் தாங்கி சுமப்பதற்கும் முதுகெலும்பும் இடுப்பு டிஸ்கும் கைகளும் கால்களும் நமது சுமைதாங்கி நாயகர்கள்க்கு எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் ..!!
https://www.youtube.com/watch?v=wswafBU5kNc
https://www.youtube.com/watch?v=nN1qWkvy-DQ
ஜி
அடி தூள்
உத்தரவின்றி உள்ளே வா படமும் சரி பாடல்களும் சரி அமர்க்களம்
ரவி காஞ்சனா ஜோடி கன கச்சிதம்
மெல்லிசை மன்னரோ இசை ராஜ்ஜியம்
ரமா பிரபா தான் நாயகி என்னைக்கேட்டால். சிறு வேடமென்றாலும் அப்படியே நம்மை பார்த்துக்கொண்டிருக்க செய்பவர் (இருளும் ஒளியும் குட்மார்ணிங் சிஸ்டர் உட்பட)
உத்தரவின்றி உள்ளே வா, மாதமோ ஆவணி, காதல் காதல் என்று பேச, தேனாற்றம் கரையினிலே என எல்லாம் இருந்தாலும்
உன்னைத்தொடுவது இனியது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
மாலிக்கு நல்ல ரோல். நன்றாக செய்திருப்பார். நாகேஷ், வெ.ஆ.மூர்த்தி எல்லாம் பற்றி சொல்லனுமா என்ன .. எப்பவுமே டாப் தான்
தேங்காயும் தான். காஞ்சனாவை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று அவர் படுத்துவது ... அடேயப்பா
படம் செம ரகளை உங்கள் எழுத்து அதைவிட ரகளை என்னமோ போங்க அட நம்ம சிக சாயல் தொற்றிக்கொண்டுவிட்டதே . அச்சச்சோ :)
ஹச்சோ இப்படி மூட்டை சுமக்க விட்டுட்டீஙக்ளே சி.செ..
லிரிக்னா டைப் பண்ணிடலாம்.. சுமக்கறதுன்னா.. கொஞ்சம் கஷ்டமாச்சே
முதலில் ந.தி பாடல்களில் மனதில் தேடி...
இதுவரை பார்த்த பாடல்கள்
பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை
ராஜ வீதி பவனி வந்தது..
பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு
லட்சணமா அமைஞ்சுருக்கு லவ் பண்ணடி கண்ணு
இதுலயும் வருதே... கொஞ்சம் மாறி..
.
https://youtu.be/a5hvybCycNA
சரி ஈ ஈ.. இந்தப் பாட்ல முதல்லயே இருக்குன்னு சம்சயம்..அப்புறம் ஏன் முதல்லையே போடலைன்னா கேக்கப் படாத்..(மத் பாட் பார்த் ரெப்ரெஷ் பண்ணிக்கிட்டேன் :) மெமரியைன்னா)
முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப்பொண்ணுக்கு நான்மோகனமாப் பாட்டெடுப்பேன் செல்லக் கண்ணுக்கு
https://youtu.be/maX9RR9PHWg
ம்ம் இன்னும் பார்த்துச் சுமக்கணும் :)
ஆனா கமல் பாட்டுல ஏற்கெனவே ராகவேந்தர் சார் கொடுத்த சும்மா நிக்காதீங்க மனசுல நினைவு வந்துடுச்சு :)
ஜி வணக்கம்
சர்ரூ, ரமாப்ரபா ஹப்புறம் யார்னு தெரியப்படுத்தினா தன்யனாவேன் :)
உ.இ.உ வா வுக்கு ஃபுல் பாட் வாசு முழுக்க அனலைஸ் பண்ணதுக்கப்புறம் தான்வருவேன்.. நான் ஆர்வக் கோளாறுல்ல எதையாவது சொல்லிடப்படாதுல்லா..
*
ம.தி பாடல்களில் தேடினேன்..
பார்த்த பாடல்கள்
கடலோரம் வாங்கிய காத்து
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவுவந்தது..
இதுவரை சிக்கவில்லை..இன்னும் பார்க்கணும் (எஸ்வி சாரை வரவழைக்க வழி..:) )
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலாவில் கமல் உப்பு மூட்டை தூக்கறாரான்னு முழுக்கப் பார்த்தேனா.. ம்ஹூம் இல்லை.. பாட் டும் போட முடியாது..எஸ்பிபி..நெய்வேலி திட்டும்..:)
தூங்கறதுக்குமுன்னாடி நல்ல மெலடி பாட் நானும் பாக்கறேன் நீங்களும் பாருங்க..
தேன் சிந்துதே வானம் - படம் எப்படி இருக்கும்
உன்னிடம் மயங்குகிறேன்..ஜேசுதாஸ்..
https://youtu.be/pl6AQ0C6mOE?list=PL...JebRKB7Wyxz4i9
From Mooga Manasulu(1964)
naa paata nee nota palakali chelaka.......
http://www.youtube.com/watch?v=c-q9OihUQYI
From Hindi remake Milan(1967)
Sawan ka mahina paawan kare shor........
http://www.youtube.com/watch?v=rFwNA79OViw
From the Tamil remake Praptham(1971)
santhanathil nalla vaasam eduthu....
http://www.youtube.com/watch?v=aIxwObKYgug
The tunes seem to be different. But, the context is the same ! :)
vathiyarayya...
tamil remake film name Praptham illaiyo ? engal kudumbam perusu... innum kooda pazhasu.. ( adhuve kannada school master-in dubbing enru ninaikiren )