தலைவரே,
இப்போது சென்னை வந்தாலும் ,மெல்லிசை மன்னர் வீட்டுக்கு கூட்டி செல்வேன்.குடும்ப நண்பர். எங்கள் குடியிருப்பில் அவர், அவரது பெண்ணுடன் 6 மாதம் தங்கியிருந்த போது (இதய சிகிச்சை முடிந்து),தினமும் மொட்டை மாடியில் அரட்டை அடிப்பேன். ராமமூர்த்தி உடனும் பழக்கம் உண்டு.
எனக்கு யாரும் உயர்வு தாழ்வு இல்லை பாஸ். வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு.எம்.எஸ்.வீ இடமே சொல்லியுள்ளேன். டி.கே.ஆருடன் பிரிந்து இசையுலகுக்கே துரோகம் இழைத்து விட்டீர்கள் என்று.
தாரை,தம்பட்டை நம் ஆதிதமிழர்களின் பெருமை.அவைகளை வைத்து ஒருவர் சிறந்த பாடல்களை கொடுத்து வெற்றி பெற்றது பெரும் குற்றமா என்ன?அது சரி ,இரண்டே வாத்தியங்களை வைத்து இனிய கானத்தை பற்றி சிலாகித்து இரு நாட்களும் தாண்டாத நிலையில் .......ஹூம்... ட்ரம்ஸ்,கிடார் வந்தால்தான் பாட்டா?ஹென்றி டானியல் ,ஜோசப் கிருஷ்ணாவிற்கு இப்படி ஒரு ரசிகர்.
பக்கம் 6 இல் பதிவு 53 இல் கனவில் நடந்ததோ குறித்துள்ளேன்.
குயிலாக,வெண்ணிலா- என் கூற்றை மெய்ப்பிப்பது போல, எஸ்.வீ (Vinodh),வாலியின் பழைய பதிவை(#1305) போட்டுமா சந்தேகம்?நான் ஆதாரமில்லாமல் எழுதுவதே இல்லை .