ஹச்சோ.. நான் அங்கிட்டு உள் நுழைய முடியலைன்னு ஹெல்ப்கேட்டு நுழைஞ்சு டெஸ்ட் மெஸேஜ் அடிச்சனா..அதான் :)
அல்லாருக்கும் சி.பெள நல்வாழ்த்துக்கள்..
Printable View
ஹச்சோ.. நான் அங்கிட்டு உள் நுழைய முடியலைன்னு ஹெல்ப்கேட்டு நுழைஞ்சு டெஸ்ட் மெஸேஜ் அடிச்சனா..அதான் :)
அல்லாருக்கும் சி.பெள நல்வாழ்த்துக்கள்..
என்ன பண்ணப் போறீக? // முடிஞ்சா வீக் எண்ட்ல நெம்ப எழுதலாம்னு இருக்கேன்.. எதுவும் வேலை வராம இருக்கணும்..
தங்கள் அன்பான வரவேற்பிற்கு என் இதயம் மகிழ்ந்த நன்றி கல்நாயக்.
http://www.inbaminge.com/t/p/Pookal%...thu/folder.jpg
நீங்கள் குறிப்பிடும் படம் 'பூக்கள் விடும் தூது'. மோனிஷாதான் நாயகி. ஹரீஷ் நாயகன். இதே ஹரிஷ் பின்னால் 'ஞானப்பறவை' படத்தில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்திருந்தார்.
படத்தின் பாடல்கள் இனிமை.
குறிப்பாக,
'கதிரவனைப் பார்த்து காலை விடும் தூது
வண்டுகளைப் பார்த்து பூக்கள் விடும் தூது'
'மூங்கில் காட்டோரம்....குழலின் நாதம் நான் கேட்கிறேன்'. (பாடல் ஆரம்பிக்கும் போதே ராஜேந்தரின் இசையை பரிபூரணமாக உணர ஆரம்பிக்கலாம்.பாலா மிக அருமையாகப் பாடிய பாடல் இது.)
பாடல்கள்.
கதை,வசனம், பாடல்கள், இசை ராஜேந்தர். இயக்கம் ஸ்ரீதர் ராஜன்.
https://youtu.be/y4kTkpKjrxg
வாசு சார்
மதுர கானம் மனதை மயக்க மட்டுமல்ல, இணைக்கவும் உதவும் இனிய பாலம் என்பதை தங்களுடைய இந்தத் திரியின் வெற்றி மிகவும் ஆழமாய் ருசுப்படுச்சியுள்ளது. தங்களுடைய எழுத்துக்கள் இல்லாமல் ஒரு vaccum இருந்தது அது இப்போது நிறைந்து விட்டது.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தாருங்கள்..
ஆஹா ... வந்தாரய்யா வந்தாரய்யா எங்கள் வாசுதேவர் ஐயா வந்தாரய்யா
தந்தாரய்யா அள்ளித்தந்தாரய்யா தமிழை அள்ளி அள்ளி தந்தாரய்யா
வாங்க ஜி, அப்பாட நடிகர் திலகம் பற்றிய ஒரு பாடல் தான் உம்மை இங்கே இழுத்து வந்துள்ளது. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எவ்வளவு அழைத்தும் வாராதிருப்பாரோ வண்ண மலர் வாசு அவர் என்ற எண்ணம் நிறைவேறியது..
வாழ்த்துக்கள் கல்நாயக்
ragahav ji, vanakkam
neenga kooda Vasu ji vandhathan vaareenga .... hmmmmmmm enna seyya ellathukkum oru kaLai venum :)
//கதை,வசனம், பாடல்கள், இசை ராஜேந்தர். இயக்கம் ஸ்ரீதர் ராஜன். // இந்த ஸ்ரீதர் ராஜன் தானே டாக்டர் ஜிஜியைக்கல்யாணம் கட்டிக்கினார்..பாருங்க வாசு..இப்படி வம்பெல்லாம் பேசி நாளாச்சு :)
ராகவேந்தர் வாங்க வாங்க..:) ந.திடாட்காம் எப்படி இருக்கு..//தங்களுடைய எழுத்துக்கள் இல்லாமல் ஒரு vaccum இருந்தது அது இப்போது நிறைந்து விட்டது.// வாசுவைப் பாராட்டியது ஓ.கே..அதுக்காக இந்த 102 கிலோவை (ஹி ஹி நான் தான்) வேக்கம் சொல்லி நோகடிச்சுட்டீங்களே..!
//oru kaLai venum // ஆங்கிலத்துல கலைன்னு டைப் பண்ணனும்னா kalai ந்னு பண்ணனும்..kaLai அப்படின்னா களைஆகிடும்..:)
//முகக்களை// ஆகா எங்கிட்டோ போய்ட்டீங்க ராஜேஷ்..ஆனா நம்மூர் வழக்கம் முகராசின்னு சொல்வாங்க....:)
டியர் சி.கே., ராஜேஷ்,
அதெல்லாம் ஒண்ணுமில்லே... ந.தி.யைப் பற்றியே முழுக்க முழுக்க மைண்ட்லே ஓடிட்டிருக்கு... வேறெ ஏதாவது பக்கம் போனால் கூட சுத்தி சுத்தி அங்கே தான் செக்கு மாடாய் வந்து நிக்குது.. என்ன செய்ய... ந.தி.டாட் காம்... பேஷா போய்க்கொண்டிருக்கு...
ஒரு பார்ட்டி நடக்குது... சுமார் 20 அல்லது 25 பேர் காபி சாப்பிடணும்....இருக்கிறது 4 அல்லது 5 ஃப்ளாஸ்க் தான்.. அதில் ஒரு சிலர் ஓவல் அல்லது போர்ன்வீடா கேட்பார்கள் என எதிர்பார்த்து அதற்காக ஒரு ஃப்ளாஸ்கை ஒதுக்கி வைத்து மத்த ஃப்ளாஸ்கில் காபி ஊற்றி வைக்கிறார்கள். ஆனால் யாருமே வேறு பானம் கேட்கவில்லை.. எல்லோருமே காபியைத்தான் லைக் பண்ணுகிறார்கள்... காபி ... போதவில்லை... ஆனால் ஃப்ளாஸ்க் காலியாக உள்ளது... அந்த நேரத்தில் காபியைக் கொண்டு வர எல்லோரும் பறக்கும் போது ஆபத்பாந்தவனாய் அந்த ஃப்ளாஸ்க் பயன்படுகிறது... இதனால் அந்த vaccum நிரப்பப் படுகிறது.
ஆனால்... உண்மையில் அந்த முக்கியமான ஃப்ளாஸ்க் நிரம்பிய பிறகு தான் எல்லோரும் காபி குடித்த பிறகுதான் அந்த பார்ட்டி முழுமையடைகிறது.
ஸ்....ஹப்பாடா... ஒரு VACCUM சொல்லி விட்டு எவ்வளோ பெரிய சமாதானம் சொல்ல வேண்டியிருக்கு...
சி.க. சார்... உங்க கூட சேர்ந்து நானும் எழுத்தாளனாயிட்டேனாக்கும்...