ஓய் நீர் சொன்னதுக்கப்புறம் தானே சொன்னேன்.. நீர் தானே எனக்குச் சொன்னது ம்ம்
Printable View
As per the wish of Mr VR sir we can remove Mr C K from the post so that everyone will enjoy the Karnan series without
any cut.[/QUOTE]
ஹை.. அஸ்கு புஸ்கு.. போஸ்ட் நீங்களா கொடுப்பீங்களாம்.. அப்புறம் எடுத்துக்குவீங்களாம்..ம்ஹ்ஹூம் முடியாத்.. (பெரிய கத்திரியா வச்சுருக்கேன்..மொதமொத போஸ்ட் போடறதுக்கு முன்னாடி எனக்கு அனுப்பிச்சா - நான் (மட்டும்) பார்த்து அப்புறம் வெட்டுவேன் :)
nangooram padathil super paatu
aboorva paadal padangalin serppilirundhu. kathai surukkam irundhaal ittu nirappungal.
https://www.youtube.com/watch?v=3X1Lm4mz28Y
Mr C K
Thangal sitham Engal Bakkiyam. Enjoy.
ரெண்டு பேருமே வாஸ்ஸூக்குப் பிடிக்கும்.. அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.. நாராயண நாராயண :)
*
முக நூலில் படித்தது : பரிசல் காரன் என்பவரின் இடுகையிலிருந்து :
சூப்பர் சிங்கர் போட்டிக்கு சென்ற வாரம் ஒரு பிரபல பாடகி வந்திருந்தார். அவர் இனிஷியல் எல்.ஆர். என்பது உங்களுக்கான க்ளூ. அப்படியும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு அவர் பெயர் ஈ-யில் ஆரம்பித்து ரி-யில் முடியும் என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது.
(கண்டுபிடிச்சு, “அவங்க எனக்குப் பிடிச்சவங்க.. எப்படி நீ அவங்களை விமர்சிக்கலாம்”னு என்னைத் திட்டீட்டீங்கன்னா..?)
சிறப்பு விருந்தினராக வந்த அவர், பாடிய போட்டியாளர்களைப் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார். ‘நல்லாத்தான் பாடற தம்பி.. ஆனா...’ என்று அவர் ஆரம்பித்தாலே போட்டியாளர்கள் முகம் சுண்ட ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் மனோ தாங்கமுடியாமல், ‘அம்மா.. நீங்க உங்க அளவுக்கு பெர்ஃபெக்*ஷனை இவங்ககிட்ட எதிர்பார்த்தா..’ என்று நாசூக்காக சொல்ல, அவரும் சளைக்காமல், ‘என் அளவுக்கெல்லாம் எதிர்பார்க்கல..’ என்று அதற்கும் பிரசங்கம் கொடுத்தார்.
**
இந்த வாரம் சிறப்பு விருந்தினராய், வேறொரு பாடகர் வந்தார். அவரும் தவறுகளைச் சுட்டிக் காட்டத்தான் செய்தார். சிரித்துக் கொண்டே இந்திந்த தப்பு பண்ணீருக்கீங்க என்கிறார்.
சாண்ட்விச் போல, போட்டியாளர் பாடி முடித்ததும், பாராட்டில் ஆரம்பித்து - பாராட்டில் முடிக்கிறார். நடுவில் பட்டும்படாமல், ஆனால் அழுத்தமாக குறைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
அவர் என்ன சொன்னாலும், போட்டியாளர்கள் முகத்தில் அவ்வளவு ஒரு பிரகாசம். (நம் முகத்திலும்தான்)
’என்னா எக்ஸ்ப்ரஷன் தம்பி..”, ’என்னை விட பெட்டரா பாடிருக்கீங்க தம்பி’ என்றெல்லாம் சொல்கிறார். போதாதற்கு ஒரு போட்டியாளரிடம், ‘எனக்கு மட்டும் உங்க குரல் இருந்திருந்தா, நான் எங்கயோ போயிருப்பேன்’ என்றாரே பார்க்கலாம். எத்தனை எத்தனை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் மனுஷன் என்று நினைத்துக் கொண்டேன்.
பேர் ஏதோ.. எஸ். பி. பாலசுப்ரமணியம் என்று பேசிக் கொண்டார்கள்.
லவ் யூ மேன்!!!!
**
சி.க சொல்வது : நான் சூப்பர் சிஙக்ர் பார்த்தே ரொம்ப நாளாச்சு..
வர்ணணை திலகமே,
தங்களின் பாடல்களின் வர்ணணையை பற்றி என்ன வென்று சொல்வது. உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை .
பாட்டுக்கு ஒரு படகோட்டி என்று சொல்வதுண்டு . "பா" வுக்கு "ப " என்பதாலோ . என்னுடைய அப்பிப்ராயம் , பாட்டுக்கு ஒரு உ உ வா என்று தான் சொல்வேன். 40 வருடங்கள் ஆன பிறகும் , பாடல்கள் சிரஞ்சீவியாக இருக்கின்றன.
மாதமோ ஆவணி பாடலை தான் எல்லோருடைய first choice. என்னுடைய choice - "காதல் காதல் என்று"
மனம் பாரமாக, மனநிலை தெளிவாக இல்லாத பொது, இந்த படத்தில் வரும் நாகேஷ் - ரமா - தே.சி நகைசுவை காட்சிகளை , அவர்கள் பேசும் வசனங்களை, நானே பேசுவது போல் பேசி கொள்வேன் (மனதில்).
என்னுடைய மொபைலில் , இந்த படத்தில் ஒலி - ஒளி இரண்டும் உள்ளன.
திரு. ராகவேந்திரா , எழுதியது போல் ....தங்களுக்கு பாராட்ட சொல்வதற்கும் எங்களுக்கு நீங்களே பாடம் எடுத்து விடுங்கள். மொழியில் வார்த்தைகள் தெரியாமல் தவிக்கிறோம்.
உன்னை தொடுவது இனியது பாடலின் இசை , கலாட்டா கல்யாணம் பட தலைப்பில் வரும் .
பெண்ணுக்கு சுகம் என்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும் நெஞ்சுக்கு நினைவென்பதும்
நீ வழங்கிய அருளல்லவோ.. ரொம்பகஷ்டப் பட்டு மெட்டுக்குப் பாட்டு எழுதியிருக்காங்கன்னு நினைக்கேன் :)
லத்து ஓகே..ரவி..ஒல்லி.. ஏதோ ஒண்ணு இடிக்குது
https://youtu.be/U4I2yH0cQiY
From ThiruneelakaNtar(1939)
Deena karuNakarane nataraja neelakaNtane.....
http://www.youtube.com/watch?v=eZwQrnUZF8Q
பாலா சார்!
என்ன ஆச்சர்யம்! நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு நாட்களாகி விட்டது தங்களுடன் பேசி மகிழ்ந்து. மதுர கானங்களை தாங்களும் படித்து வருகிறீர்கள் என்பதை நினைக்கும் போது பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. நடிகர் திலகம் திரியில் கூட தாங்கள் தென்படுவதில்லை. அப்போதெல்லாம் எவ்வளவு அபூர்வமான தகவல்களை, சுட்டிகளை தாங்கள் தருவீர்கள்! மறக்க முடியாத காலங்கள்.
தங்களின் அன்புப் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி! 'உத்தரவின்றி உள்ளே வா' படமும், பாடல்களும் ஒவ்வொருவர் நெஞ்சிலும் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை உங்கள் பதிவின் மூலமும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
உண்மைதான். 'கலாட்டா கல்யாணம்' படத்தின் டைட்டிலில் 'உன்னை தொடுவது இனியது' பாடலின் இசை முன்னமேயே ஒலித்து விடும். (கதை கோபு-ஸ்ரீதர் என்று போடும் போது) அதுவும் ஆரம்பத்தில் விசில் ஒலியில். இதை மறக்காமல் நினைவு வைத்திருக்கும் தங்களைப் போன்ற ஜாம்பவான்களின் கீழ் பணி புரிவது நிச்சயம் பெருமைப்படத்தக்க ஒன்று.
தாங்கள் நடிகர் திலகம் திரியிலும், அதே போல மதுர கானங்கள் திரியிலும் இனி தவறாமல் பங்கு கொண்டு பெருமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காட்டுப் பூச்சி சார்,
நங்கூரம் படத்தின் 'ஒரு பார்வை பார்க்கும் போது' அபூர்வ பாடலுக்கு நன்றி! பாலா பதிவிலும் இந்தப் பாடல் வரும். நீங்கள், பாலா சார் மதுர கானங்களில் வந்து பங்கு கொள்வது அளவில்லா ஆனந்ததைத் தருகிறது. விரைவில் 'நங்கூரம்' பட கதை சுருக்கம் தர முயற்சிக்கிறேன். தொடர்ந்து மதுரகானங்களில் பங்கு கொண்டு சிறப்பித்து தர வேண்டுகிறேன்.
மதுர கானங்களில் பங்கு கொண்டு பெருமைப்படுத்தும் பாலா சார், காட்டுப் பூச்சி சார் இருவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
சின்னா!
ரொம்ப நன்றி! இன்னும் கஷ்டப்பட வேண்டும். நல்ல நல்ல பதிவுகளை கொடுக்க வேண்டும்.
என்னை ஏன் வம்பில் மாட்டி விடுகிறீர்? பாலா, ஈஸ்வரி இருவருமே என்னை மிகவும் பாதித்தவர்கள். ஈஸ்வரியின் அதீத ஈடுபாடு, பெர்பெக்ஷன் அவரை மிகவும் எதிர்பார்க்க வைக்கிறது. எனக்கு பெர்பெக்ஷன் மிகவும் பிடிக்கும் என்பதுதான் அதற்கு என்னுடைய பதில் சின்னா! ஹய்! சின்னா புரிஞ்சுண்டு சிரிப்பது தெரியுது. நாங்க வுட்டுக் கொடுத்திடுவோமா?
கல்ப்ஸ் பத்தி பத்தி பத்தியா முந்தைய பாகங்களில் போட்டாச்சே! மறந்தாச்சா!
'பெண்ணுக்கு சுகம்' என்பதும் சுகமே.
//பார்த்து அப்புறம் வெட்டுவேன்//
நாங்களும் வெட்டுவோமில்ல.:)
//நிஜ வாழ்க்கையில் சரத்பாபு வில்லனாயிட்டார் சார். ரமாவின் அத்தனை சொத்தும் சரத்திடம்//
ஜி! கொஞ்சம் டீடெயில் ப்ளீஸ். ஆர்வமாய் இருக்கு.
நிஜம்தான் மது அண்ணா!
'Stop' பண்ணவே மனமில்லாமல் 'Listen' பண்ணிக் கொண்டே proceed செய்து கொண்டிருக்கும் பாடல்.
அடடா! என்ன மாதிரி பாடல். முடிக்கும் போது 'லால்லால்லா லலலா.... லால்லலா லலலா' என்று முடிப்பாரே..ஐயோ!
'ஒருமுறை தவறினால் மறுவழி இல்லையே' முடிந்தவுடன் வரும் அந்த 'டக் டக் டக் டடூட்டு' உருட்டல் உற்சாகம்.
ரவியின் ஷர்ட் டிசைன் டாப். ஆயிரத்தில் ஒரு பாடல்.
https://youtu.be/a__fbcTyXqI
RamaPrabha face to face
https://youtu.be/PcFuVaYwArw
விமானத்தில் வித்தியாசமாக சுவாரஸ்யமான பேட்டி.
https://youtu.be/CrDuT9XlVpA
ஆர் கேவுடன் ஆம் நான் முன்பே பார்த்துள்ளேன் ந்ல்ல பேட்டி
காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.
குறுந்தொடர் 3
http://i.ytimg.com/vi/i1R9yh1s2W8/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/oU3QABINtYM/sddefault.jpg
விஜயலலிதா இடுப்பில் பாங்கோஸ் வளையங்களை வைத்துக் கட்டி , ரிப்பன் டிரெஸ் உடுத்த விட்டு, உச்சந்தலை ஜடை பின்னலில் அவரை ஜெயசங்கர் கொள்ளைத் தலைவரின் மேற்பார்வையில் சூப்பராக ஆட வைத்திருப்பார் கர்ணன். அவர் காலம் என்றைக்கும் வெல்லும்.:)
ஈஸ்வரி வழக்கம் போல வெல்லுவார்.
உதடுகளை நாக்கால் வழித்து, கண்களால் அப்படியே சொக்கி செருக வைக்கும் கலையில் கை தேர்ந்தவர் விஜி. 'அஞ்சல் பெட்டி 520' 'ஆதி மனிதன்' பாடல் போல மறுபடி இதிலும் ஆதிவாசி டிரெஸ் வரும். சகுந்தலை போல கைகளில் பூ வளையங்கள்...கழுத்தில் மல்லிகைப் பூ பிளாஸ்டிக் மாலை. கர்ணனின் கொடுத்த வைத்த தொப்பி அணிந்த அடியாள் கும்பல்கள் சண்டைக் காட்சிகள், சேஸிங்குகள் செய்த நேரம் போக மீதி நேரங்களில் அடிபணிந்து அமர்ந்து இந்த மாதிரி ஆட்டம் பார்க்கும்.:) இவர்கள் பண்ணும் சேட்டைகளை, கோமாளித்தனங்களை கர்ணனின் காமெரா நடுநடுவில் கவ்வும்.
'ஆம்பல் ஆம்பல்... வௌவல் வௌவல்' மாளிகை போன்ற பிரம்மாண்டமான அரங்கில் ஜெய் ஏன் கம்பளிப்போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஆட்டம் பார்க்கிறார் என்று தெரியவில்லை. கூட்டத் தலைவர் என்றால் பயத்தில் குளிர் நடுக்கம் வந்து விடும் போல.:)
சிலந்திக் கூடு வளையங்கள் போன்ற செட்களின் மத்தியில் எப்படியெல்லாம் காமெராவின் லென்ஸ் எப்படியெல்லாம் சுழலுகிறது! முடியை விரித்து சைடில் முடிக்கற்றைகளுக்கிடையே விஜியின் முகத்தை கர்ணன் காமெராவில் காண்பிப்பது கொள்ளை அழகு.
ஈஸ்வரியின் ஈடு இணையில்லா குரல் வளம். பாங்கோஸ்களை உருட்டி விளையாடும் சங்கர்-கணேஷ். வண்ணத்தை விட கருப்பு வெள்ளையில் அழகாகத் தெரியும் விஜயலலிதா. சுழன்று சுழன்று பல்வேறு வித்தைகள் புரியும் காமெரா என்று
காலத்தை வென்ற பாடல்.:)
பெண்ணொரு கண்ணாடி
பார் கொல்லுது முன்னாடி
பாலைப் போலே தேகம்
அந்த தேகம் காதல் ராகம்
பாடச் சொல்வேன் உன்னை
பாடிட வேண்டும் என்னை
ரம் ரம்மா... ஜின்ஜின்னா
ரம் ரம்மா... ஜின்ஜின்னா
உள்ளங்கையில் ரேகை என்ன பார்த்துவிடு பார்த்துவிடு
ஒன்றுக்கொன்று சொந்தமுண்டா சொல்லி விடு சொல்லிவிடு
எனக்கென்ன ராசி உனக்கென்ன ராசி
இருவரும் கலந்தால் கைராசி
நிஜமாகே 'ரம்'மான 'ஜின்' பாடல்தான்.
சின்னா! 'ரம்' பாடலாச்சா! குளிருக்கு இதமாதான் இருக்கு.:) அதுக்காக ஜெய் மாதிரி கம்பளி போர்த்திக்காதீங்க.
அப்புறம் இதுல என்ன சென்ஸார் பண்ணுவீங்க?:)
https://youtu.be/LSNZdo8E1i4
விஜி சூப்பர் ஜி
மதுண்ணா! சின்னா! ஜி!
subject to change:)
எம்.ஜி.ஆர் அவர்களின் பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் அவரின் ஒரு சில அதிகம் புகழ் பெறாத பாடல்களும் உண்டு. இந்தப் பாடல்களும் கொஞ்சமும் சுவை குன்றாதவை. அந்த மாதிரி பாடல்களில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.
சுறுசுறுப்பாக எம்.ஜி.ஆரை அதிகம் அங்கும் இங்கும் ஓட விடாமல் அவரை கட்டிப்போட்ட கெட்டிப் பாடல். அடக்கியே வாசிக்க வைக்கப்பட்டிருப்பார். பல்லவிக்கும், சரணங்களுக்குமான இடையிசை ஓஹோ! மாமா கெட்டி.
மேடத்தின் 'முகராசி' ஓஹோ! கொள்ளை அழகு.
டி எம்.எஸ், சுசீலாவின் கிரேட் ஜாப்.
சுசீலா அமைதியாக விட்டுவிட்டு எடுக்கும் அந்த
'என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகு...மோ'
பல்லவி வரி பலே பலே ஜோர். திரும்ப திரும்ப காதிலேயே ஒலித்துக் கொண்டிருக்கும் பலம் வாய்ந்தது.
'ஹோ'!
மறுபடி மறுபடி கேட்டாலும் தாளாத இன்பங்கள் தொடர்ந்து உண்டாகுதே!
பாடலின் முடிவில்
'சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ'
என்று கண்கள் சொக்கி மெய்மறந்த நிலையில் மேடம் பாடும்போது ஜெயாவின் தோள்பட்டையில் கண்மூடி முகம் புதைத்திருக்கும் எம்.ஜி.ஆர் அது படப்பிடிப்பு என்பதையும் சற்றே மறந்து அந்தப் பாடலின் வரிகளை, அதற்கான இசையை தன்னையறியாமல் லயித்து, ரசித்து, தலையாட்டி
'கொண்டாடுமோ' வில்
'மோ' என்ற வார்த்தையை மனம் மயங்கி மேடத்துடனேயே சத்தமில்லாமல் உச்சரிப்பது கண்கூடாகத் தெரியும். நல்ல ரசனைக்காரர். நீங்களே பாருங்கள்.
https://youtu.be/QDvz7NXSVbQ
'காலம் வெல்லும்' படப் பாடலின் கெட் -அப் போலவே 'அஞ்சல் பெட்டி 520' பட
'ஆதி மனிதன்
காதல் புரிந்தான்
ஆடை அணிந்தான்
ஜாடை புரிந்தான்'
பாடலின் கெட்-அப்பில் விஜி.
https://i.ytimg.com/vi/gq47se5z-YI/hqdefault.jpg
பாடலின் ஆரம்பத்தில், முடிவில் ஒலிக்கும் பியானோ இசை புகழ் பெற்ற வேறு ஒரு பாடலில் அப்படியே வரும்.:).சின்னா! எஸ்கேப் ஆக முடியாது.:)
https://youtu.be/fEki02P3ys4
//மறுபடி மறுபடி கேட்டாலும் தாளாத இன்பங்கள் தொடர்ந்து உண்டாகுதே!
பாடலின் முடிவில்
'சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ'
என்று கண்கள் சொக்கி மெய்மறந்த நிலையில் மேடம் பாடும்போது ஜெயாவின் தோள்பட்டையில் கண்மூடி முகம் புதைத்திருக்கும் எம்.ஜி.ஆர் அது படப்பிடிப்பு என்பதையும் சற்றே மறந்து அந்தப் பாடலின் வரிகளை, அதற்கான இசையை தன்னையறியாமல் லயித்து, ரசித்து, தலையாட்டி
'கொண்டாடுமோ' வில்
'மோ' என்ற வார்த்தையை மனம் மயங்கி மேடத்துடனேயே சத்தமில்லாமல் உச்சரிப்பது கண்கூடாகத் தெரியும். நல்ல ரசனைக்காரர். நீங்களே பாருங்கள். //
வாசு.. தூள்.. இந்தப் பாட் எனக்கும் பிடித்த ஒன்று..பட்.. இதை இங்கு போட்டாச்சா இல்லையான்னு தெரியாம லிங்க் எடுத்து வச்ச்ருந்து அப்படியே மறந்தும் விட்டேன்.. அதுவும் நன்மைக்கே.. நீங்க ரசிச்சா என்ன நான் ரசிச்சா என்ன :) நைஸ்.. இதுல பாருங்க.. இன்னொரு பாட் டும் இந்த டைப் ஃபேமஸா இல்லியான்னு தெரியாது.. நானும் அவ்வளவாக க் கேட்டிராத ஆனால் இளமை இளமை ம.தி சர்ரூ நன்னாவே ஆடவும் பாடவும் செய்றாங்க..
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உங்கள் கைகளில் வரவும் வேண்டுமா..
மெளத் ஆர்கன் ஒலி.. மிக அழகு...
https://youtu.be/l3-cs57NsRg?list=PL...JebRKB7Wyxz4i9
ஆசைகள் தொடங்கும் நெஞ்சத்திலே
ஆடி அடங்கும்… மஞ்சத்திலே..
மாந்தளிர் மேனி என்னருகே..
மன்னவன் தோள்கள் என்னருகே (
(ம்ம் இந்த மாதிரி நாசூக்கான வரிகள் தான் என் காதுல விழுது.. நான் என்ன பண்ணுவேன் :) )
எதையோ தேடித் துழாவினா இந்தப் பாட் (போட்டாச்சில்லைன்னா என்னோட லக்) கிடைச்சது..
ராசாவீட்டுப்பிள்ளை – ஜெய் – ஜெயலலிதா..
நல்லாத் தான் இருக்கு..உடனே வரிகளை டைப்பினேன்..
*
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா..
( அப்ப படத்துல ஹீரோ பேரு ராஜா ஹீரோயின் பேரு மீனா சரிதானே)
குங்குமச் சிவப்புக் கன்னத்திலே ஒரு கோலம் வரையட்டுமா (ரொம்பக் குட்டியா இருக்குமோ..எத்தனை புள்ளி)
இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்குக் கோவில் எழுப்பட்டுமா.. (இப்பத் தாங்க புரியுது.. பிற்காலத்துல ஏன் ஒரு நடிகைக்கு கோவில் வந்ததுன்னு…இந்தப் பாட்டு பார்த்து இன்ஸ்பயர் ஆகி இருக்கணும்ம்..)
அத்தை மகனுக்குப் பள்ளி கொள்ள ஒரு மெத்தை விரிக்கட்டுமா (அதுக்கெதுக்கு இவ்வளவு ராகம் இழுக்கணும்)
அவன் சந்தனமேனி சொந்தம் கொண்டாட விட்டுக்கொடுக்கட்டுமா..( ஓஹோ)
பருவத்தின் பாட்டுக்குமுதன் முதலாகப் பல்லவி சொல்லட்டுமா
அந்தப் பல்லவி சொன்ன நல்லவர்கைகளில் சரணம் ஆகட்டுமா (ஆஹா என்னா சிலேடை)
தென்றல் காற்றே தென்னங்கீற்றே
இன்னும் ஏனடி அச்சம்
அச்சம் என்பது பெண்மை மறந்தால் என்ன இருக்கும் மிச்சம் (அதுஞ்சரிதேன்)
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா(ஹச்சோ கார் பின்னாடியே போகுது..பாருங்க ப்ரதர்..):)
https://youtu.be/7EFD3fqh91w
வாசு சார்
ஆதி மனிதன் பாடலில் பியானோ மட்டுமல்ல, அக்கார்டின் அப்படியே மீண்டும் இன்னோர் பாடலில் ஒலிக்கிறது...
ஆனால் வேறு தாள கதியில்...
ஒரு க்ளூ.. அது ரயிலில் பாடும் பாட்டு...
பெண் ஒரு கண்ணாடி பாடலில், சொல்லப்போனால் சங்கர் கணேஷ் இசையமைத்த இது போன்ற பல பாடல்களில், முக்கிய இடம் பெற்ற இசைக்கருவி,
http://www.kohnmusicstore.com/trombone.jpg
TROMBONE
இந்த இசைக்கருவியை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென்றால், உயர்ந்த மனிதன் படத்தில் என் கேள்விக்கென்ன பதில் பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும்.
ஒரு ஆர்க்கெஸ்ட்ராவின் Brass Section எனப் படும் பிரிவில் இது இடம் பெறும். ட்ரம்பெட், சாக்ஸஃபோன் போன்ற இசைக்கருவிகள் இதில் அடங்கும்.
//பாடலின் ஆரம்பத்தில், முடிவில் ஒலிக்கும் பியானோ இசை புகழ் பெற்ற வேறு ஒரு பாடலில் அப்படியே வரும்..சின்னா! எஸ்கேப் ஆக முடியாது// ஹச்சோ தெரியலையே.. ராகவேந்திரர் வேற சஸ்பென்ஸ் கூட்டறாரு..நான் இந்த விஷயத்திலெல்லாம் அப்பாவிக் குட்டிக் கண்ணன்...
//என்னை ஏன் வம்பில் மாட்டி விடுகிறீர்? பாலா, ஈஸ்வரி இருவருமே என்னை மிகவும் பாதித்தவர்கள். ஈஸ்வரியின் அதீத ஈடுபாடு, பெர்பெக்ஷன் அவரை மிகவும் எதிர்பார்க்க வைக்கிறது. எனக்கு பெர்பெக்ஷன் மிகவும் பிடிக்கும் என்பதுதான் அதற்கு என்னுடைய பதில் சின்னா! ஹய்! சின்னா புரிஞ்சுண்டு சிரிப்பது தெரியுது. நாங்க வுட்டுக் கொடுத்திடுவோமா? // ஹய்..இப்படியெல்லாம்கூட எஸ்ஸ்கேப் பண்ணலாமாங்காட்டியும்.. இப்போ என்னோட ஹோம்வொர்க் ரிவர்ஸ்ல போய்க்கிட்டிருக்கு..இனிமே தான் கா.வெ பாக்கணும் :)
//சிலந்திக் கூடு வளையங்கள் போன்ற செட்களின் மத்தியில் எப்படியெல்லாம் காமெராவின் லென்ஸ் எப்படியெல்லாம் சுழலுகிறது! முடியை விரித்து சைடில் முடிக்கற்றைகளுக்கிடையே விஜியின் முகத்தை கர்ணன் காமெராவில் காண்பிப்பது கொள்ளை அழகு. // சொன்னாற்போலவே அழகு தான்..சொல்லாமலேயே பாதித்தூக்கத்தில் கூந்தலைத் தடவி..ன்னு வரிகள் நினைவுக்கு வருது..
ம்ம் வெட்டுறதுன்னா அந்தக் கண்ணாடியத் தான்வெட்டணும்.. :) படம் லோ பட்ஜெட்டா என்ன..துணில்லாம் கிழிஞ்சிருக்கு.. :) தாங்க்ஸ்ங்க்ணா..
ஜூகல் பந்தி...
முதலில் வேகம் பின் மெது மறுபடி வேகம்..
ராக் அண்ட் ரோல்
https://youtu.be/56vqU9lnxF8?list=RDa63IlNFGip8
முதலில் மெதுவாய் மெலடி பின் வேகம்..பின் மெலடி
இளமை நாட்டியச் சாலை...
https://youtu.be/z_RhVGxJheY
ரொம்ப நாளாச்சு ஈ பாட் கேட்டு..
அஹ அஹ ஹஹஹ்ஹா அஹஹ ஹஹஹா.. எல்.ஆர்.ஈ ஹம்ம்மிங்க்..
பார்வை ஒன்றே போதுமா..பல்லாயிரம் சொல் வேண்டுமா..( பாவம் பாட் முடிஞ்சதும் பொண் (ப்ரேமா தானே..புதுமுகம் தானே.. சொல்லப் போறீங்க தானே :) ) பரிதாபமாச் செத்துப்பூடும்..
ஆனாக்க அன்றும் இன்றும் ஹிட்
https://youtu.be/DQorDbcR40k
தூக்கம் வருது..என்ன பண்ணலாம்..என்னமோ ஒரு நல்ல ஸ்ரீதேவி பாட் கேட்டுட்டுத் தூங்கலாம்..
தேவராகம் மலையாளம்கரிவரி வண்டுகள் ஜெயச்சந்திரன்.. ஸ்ரீ தேவி..
https://youtu.be/51KrHvLc_Bk
Trumpet by Al Hirt
http://www.youtube.com/watch?v=advYgQC1mMw
Al Hirt is one of my favorite musicians. Unfortunately my sons did not learn any wind instruments. Just violin, piano and a few other stinged instruments!
Trombone
http://www.youtube.com/watch?v=ToIdgjI3u4Q
Have fun ! :)
சின்னா!
சூப்பர் கண்ணா! கொடுங்கள் இப்படிக் கையை. குலுக்கி நன்றி சொல்கிறேன்.
'ராஜா வீட்டுப் பிள்ளை' பாடல்கள் என்றால் எனக்கு அப்படி ஒரு கிரேஸ்.
'ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா'
அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்போது இன்னும் பெட்ரோலை ஊற்றுகிறீர்கள்.
'ஏ ...குட்டி....(டொய்ங்....):) ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும்.. ம்.... 'ஹ'...அலட்சிய குரல்களை மறக்க முடியுமா?
டி.எம்.எஸ். சொல்லும் 'தவறுதலாக... தவறுதலாக... தவறுதலாக' தவறிப் போயும் தவற விட்டு விடக் கூடாது.
இதில் பூ விற்கும் பெண்ணாக மேடம் சுட்டித்தனமாக நடித்திருப்பார். ராட்சஸி பாடும் அருமையான பூ விற்கும் பாடல். ஒரு காலத்தில் காரில் பயணிக்கும் போது இதனைப் பாடலையே திரும்பத் திரும்பப் போட்டு பயணிக்கும் மற்றவர்களின் எரிச்சலையும், கோபத்தையும் வாங்கிக் கட்டிக் கொண்டதுண்டு.
அப்புறம் திட்டியவர்களை விட்டு விடுவோமா?:) பதிலுக்கு '...தெரியுமா கற்பூர ......?' என்று காய்ந்து விடுவதும் உண்டு. ஈஸ்வரி பாட்டை யாராவது ஏதாவது சொல்லி விட்டால் 'பொசுக்'கென்று கோபம் வந்து விடும். அதுவும் பாதியில் நிறுத்திவிட்டால் ரண தாண்டவமே ஆடி விடுவேன். பாவம் எங்க சொந்தக்கார மக்கா.:)
அரும்பாய் இருந்தது நேத்து
இது அழகா சிரிக்குது பூத்து
வாசன வீசுது வாவென பேசுது
அம்மா உங்களைப் பாத்து
பிச்சிப்பூவு
மல்லிப்பூவு
அல்லிப்பூவு
அரளிப்பூவு
முல்லைப்பூவு
மகிழம்பூவு
தாழம்பூவு
தாமரப்பூவு
செவ்வந்திப் பூ
ரோஜாப்பூ
சம்பங்கிப் பூ....வு
("முப்பது பைசா மூணு முழ"த்திற்கு முன்னோடி)
எம்மாடி! ஒரே மூச்சில் இந்த ராட்சஸி பண்ணும் ரகளை தான் அவரிடம் இன்றைய தலைமுறையில் இத்தனை பெர்பெக்ஷனை எதிர்பார்க்க வைக்கிறது. எஸ்.எஸ்.எம் எஸ்ஸின் இசை சுறுசுறுப்பு மிரள வைக்கும் ஈஸ்வரியின் இன்ப அலறலுக்கு ஈடாக.
ராட்சஸி இரண்டாவது சரணம் முடித்து முடிவில் ராட்சஸி தெலுகு டப்பிங் வசன பாணியில்:) சொல்லும்
'ஒஹொ அம்மோய்' தேவாமிர்த டானிக்.
சும்மாவா பேர் வச்சோம்?:)
https://youtu.be/0LeDyRHh7LI
சின்னா!
அதே போல 'என்னைக் காதலித்தால்' பாடலும். கிரேட் ஒன். ('ஆசை முகம்' படமே நன்றாக இருக்கும். ராகவேந்திரன் சார் சொல்வது போல நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டும் என்ற ஆசையும் எழுந்ததுண்டு. கோபாலும் நானும் இது பற்றி நிறையப் பேசியதுண்டு)
அவர் வார்த்தைகளைத் தொடங்க... இவர் அதை முடிக்க வாவ்...இன்னா பாட்டு அது!
அதே போல அம்சமா இன்னொன்னு இருக்கே!
'நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா'
'பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா... இல்லை நானா'
இந்த ஒரு வரி போதுங்காணும். போதும். :)
https://youtu.be/_IaUhArhuks