அதே படத்தில் இடம் பெற்ற "ஆடி வெள்ளி தேடி உன்னை" பாடலும் அந்தாதி தானே ?
Printable View
முத்துக்கு முத்தான எங்க வாசு ஜிக்கு அர்ப்பணம்... மல்லிகைப்பூ வாசனையில் நவரசத்திலகம்
பா ப ம க பா நி நி... பாட்டை ரசிப்பா பா பா
https://www.youtube.com/watch?v=sBlF7X1e2C0
அமர்க்களம் மதுண்ணா!
என்ன ஒரு ஆச்சர்யம்! நேற்று இரவு 'மல்லிகைப்பூ' என்று கூகுளிக்கும் போதே கண் அயர்ந்து விட்டேன். இப்போது பார்த்தால் 'பாட்ட ரசிக்க' நீங்கள் அழகாகத் தந்து விட்டீர்கள். சரசமுள்ள சரசாவை விமர்சிக்க ஒருவர் வருவார் பாருங்கள். என்ன அழகான பாடல்! பாடகர் திலகத்தின் குரலும், கோரஸும் நெஞ்சை அள்ளுகிறது. முத்துவே சில ஸ்டெப்ஸ்களை அநாயாசமாக ஆடுவார். கூட ஹலம் வேறு. எனக்கு மிக மிக பிடித்த பாடல். நன்றி அண்ணா!
'இதயக்கனி' படத்தில் 'தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும்' பாடலில் சரணத்தில் வரும் வரிகளில் முடியும் வார்த்தைகள் அடுத்த வரிகளில் தொடங்கும்.
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்க்காவியம்
மலர்க்காவியம் எழில் ராணியின் இதழ் நாடகம்
இதழ் நாடகம் தமிழ்க் காதலின் புகழ்க் கோபுரம்
புகழ்க் கோபுரம் அகப்பாடலின் சுமை தாங்குமே
சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்.
தளிர் மேனியில் விரல் பட்டதும் குளிர் போனதே
குளிர் போனதும் மழைக் கூந்தலின் புகழ் பாடினேன்
புகழ் பாடியே தினந்தோறுமே முகம் தேடினேன்
முகம் கண்டதும் புதுக் காதலில் நடம் ஆடினேன்
மிக மிக அம்சமான பாடல். வரிகளும்...இசையும்...இவை எல்லாவற்றையும் விட அந்த அற்புத பாடகர் திலகத்தின் அருமையான குரலும், பாவமும்.... சான்ஸே இல்லை.
https://youtu.be/X2YdnVtiUOY
வணக்கம் ஜி, மதுண்ணா
வணக்கம் ராஜேஷ்... சுஸ்வாகதம்
வாசு ஜி ,
பாலா தொடர் அருமையாக செல்கிறது. வாழ்த்துக்கள்
இதோ 'தெய்வாம்சம்' படத்தில் அருமையான ஒரு பட்டு. சந்திரகலாவிடம் பிள்ளைப் பாட்டுப் பாடி நலங்கு வைக்கும் வரலஷ்மி. (ஈஸ்வரி, ஜானகி கலக்கலில்) தேசியத் தலைவர்களை ஞாபகப்படுத்தும் இது போன்ற பாடல்கள் இப்போதெல்லாம் ஏது? இசை யார்? குன்னக்குடியா?
அந்தப்புர மந்திரத்தின் ஆனந்தத் தாண்டவம்
அள்ளி வந்து கொடுத்தது பிள்ளைப்பாட்டு
https://youtu.be/oSiangHfLcM
இப்பாடலைக் கேட்டால்
மஞ்சள் இட்ட நிலவாக
மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக
ஆரம்பம்
சுசீலாவின் பாடல் நினைவுக்கு வருகிறேதே. ஏன்?
எது முன்னால் வந்தது? 'தெய்வாம்சம்'தானே?
https://youtu.be/jVp03BLrLoY
இசையரசி இசைத்த கீதங்கள் – 3
ஷீலா நடித்த அஸ்வமேதம் மிகவும் அருமையான படம். தொழு நோயாளாளியாக பிரமாதமாய் நடித்திருப்பார்
சத்யன் பற்றி சொல்லவேண்டியதே இல்லை.
தேவராஜன் வயலார் இசையரசி கூட்டணி மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிக்கூட்டணி
அப்படி அமைந்த இந்த படத்தில் பிரபலமான பாடல் ஏழு சுந்தர ராத்ரிகள் ..
ஆனால் மிகவும் அர்த்தமுள்ள இந்த பாடல் நம்மை உலுக்கிவிடும்.
பூமியை ஒரு காராக்கிரகமாக சொல்கிறார் வயலார். எவ்வளவு கடினம். எவ்வளவு வேதனை இருந்தால் இந்த நாயகி இப்படி பாடுவாள்
இசையரசி குரலில் இந்த பாடல் நம்மை என்னவோ செய்யும் எங்கோ கொண்டு போகும் ..
ஷீலாவின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
https://www.youtube.com/watch?v=dtzw7X3m_EY
hi good morning all..
கூத்தாடும் முத்து பாடல்களுக்கு நன்றி வாசு, மதுண்ணா.. டபக்னு நினைவுக்கு வருவது..அனுபவி ராஜா அனுபவியில் அழகிருக்குது உலகிலே பாட் தான்..
வாஸ்ஸு.. தொட்ட இடமெல்லாம் பாட் எனக்கு மிகப் பிடித்த ஒன்று..அதிலும் அந்தாதி பாட் கண்டு பிடிச்சுட்டீங்களே..
செந்தில்.. இந்தக் காலத்திலொரு அந்தாதி பாட் இருக்கே.. முழுக்க முழுக்க இல்லாட்டாலும்..
கரிகாலன் காலப் போல கருத்திருக்குது குழலு
குழலில்லை குழலில்லை தாஜ்மகால் நிழலு..
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடில்லை உதடில்லை மந்திரித்த தகடு..
அனுஷ்கா ஹைட் என்பதால் விஜய்யையும் அனுஷ்ஷையும் தள்ளித் தள்ளி பாட வைத்திருப்பார்கள்..
பட் இந்த தாஜ்மகாலுக்குப் பதிலா கார்கால இரவுன்னு போட்டிருந்தா இன்னும்பொருத்தமா இருந்திருக்கும்..
பின்ன வாரேன்..