அவரே!
Printable View
இதே pv தொளசி ராமன் தயாரிப்பில்
1977 சக்கரவர்த்தி னு ஒரு படம்
கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்
ஜெய் ஸ்ரீகாந்த் தேங்காய் 3 பேரும் நடித்து வெளி வந்தது
ஜெய் ஜோடி சாரதா வா அல்லது ஸ்ரீப்ரியா
தேங்காய் வக்கீல்,ஸ்ரீகாந்த் இன்ஸ்பெக்டர்
ஸ்ரீகாந்த் ஜெய்யை பிடிச்சு உள்ளே போடுவார்
தேங்காய் அவரை காப்பாற்றுவார்
பாட்டு நினைவு இல்லை
கிருஷ்ணா சார்,
கவர்ச்சி வில்லன் அப்படின்னு நீங்க எழுதுனதும் எனக்கு ஒன்னு ஞாபகம் வந்துடுச்சி.
'கவர்ச்சி வில்லன்' கண்ணன் இருவேடங்களில் நடித்து 'கங்கா' கர்ணன் படம் ரேஞ்சுக்கு 'திருடனுக்குத் திருடன்' அப்படின்னு ஒரு படம் வந்துச்சே. நாங்கல்லாம் மார்னிங் ஷோ போய் பார்த்தோம் சார். பாட்டெல்லாம் ஞாபகம் வெச்சுருப்பீங்களே! திருப்தியா வெளியே வந்தோம். அது நேரிடை தமிழ்ப் படம்தானே! கண்ணன் கூட மம்தா ஜோடியா நடிச்சிருக்கும்.
அப்புறம் இதே கண்ணன் ஹீரோவா நடித்து இதே மாதிரி இன்னொரு படம் வந்துச்சே! பெயர் நினைவிலில்லை.
அப்படி 'சொல்லு கண்ணா (கிருஷ்ணாஜி) சொல்லு':)
கண்ணே கனிமொழியே னு ஒரு படம் லக்ஷ்மிஸ்ரீ பேய் மாதிரி வருவாங்க
அதுவும் இந்த திருமலை சாமி நாடார் படம் தான்
சுசிலவின் பாடல் ஒன்று உண்டு "பாடல்களை பாடுகிறேன் " அப்படின்னு வரும்
பகடை பன்னிரண்டு 1982
ச்வர்ணம்பிகா production
தாமோதரன் இயக்கம்
தெலுகு இசை அமைப்பாளர் சக்ரவர்த்தி இசை
கமல் ஸ்ரீப்ரியா சுதர்சன் சத்யப்ரிய சத்யராஜ் நடித்து வெளிவந்தது
சத்யராஜ் ஒன்று இரண்டு காட்சிகளில் சுதர்சனின் அல்லக்கை ஆக வருவார். இந்த படம் அடிக்கடி மெகா டிவி யில் ஒளிபரப்பாகிறது
ஒரு நல்ல பாடல் "வர வேண்டும் மகாராஜன் "
http://www.youtube.com/watch?v=cl3ToU7HZfU
ஜஸ்ட் ரிலாக்ஸ்
http://3752ph102dgl405f3e3yvdrpili.w...ust-Relax..jpg
இயக்குனர்கள் வரிசை
http://www.nadigarthilagam.com/image10/CVRspeaks.jpg
இயக்குனர் சி.வி.ராஜேந்திரன்
தொடர்கிறது.......
'வீட்டுக்கு வீடு' (1970) மறக்க முடியாத ஒரு காமெடி. வீட்டுக்கு வீடு அனைவரும் பார்த்து ரசித்த ஒரு படம். வசூலில் பின்னலும் கூட.
ஒரு சீரியஸ் கதைக்கருவை இலவம் பஞ்சு ரேஞ்சுக்குக் கையாண்டு அதில் தலையணை தைத்து. நம்மை சுகமாய்த் தூங்க வைத்த சி.வி.ஆர்.
கரணம் தப்பினால் மரணம் நேரக்கூடிய புயல் சமாச்சாரம். ஆனால் கண நேரமும் குறையாத நகைச்சுவைத் தென்றலானது.
ப்ப்பூ... என்று ஊத்தி தள்ளும் தைரிய 'லஷ்மி'.
'தென்னக ஜேம்ஸ்பாண்ட்' அப்பாவி ஹஸ்பண்ட் ஆகி ரசித்து சிரிக்க வைத்த கதை.
துப்பாக்கியை மட்டுமே கையில் பிடித்தவருக்கு கரண்டியைக் கொடுத்து நம்மை ர(ரு)சிக்க வைத்த ருசிகரம்.
போ..போ..போ..போ.. என்று ஜெய்யை (பொண்டாட்டி தாசனாம்) எரிச்சலுடன் போடு போடென்று போட்ட முத்தான ராமன் சத்தாக வலம் வந்த அதிசயம்
'ம்ம்ம்... மாட்டிகிட்டான்' என்று கிடாரும் கையுமாக கள்ளத் தம்பதிகள் என்று நினைத்து நிஜத் தம்பதிகளை அப்பா வி.கே.ராமசாமியிடம் மாட்டி வைக்கத் துடிக்கும் நாகரீக ஜிப்பா கண்ணாடி நாகேஷ்.
சிண்டுமுடியும் நாகேஷை சிண்டை வைத்துக் கொண்டு கேஷுவலாக சமாளிக்கும் வி.கே.ஆர்.
பக்கத்து வீட்டுப் பெண் போல தன் மேல் நம்மை கரிசனம் காட்ட வைக்கும் 'வெண்ணிற ஆடை' நளின அழகி
இவர்கள் அத்தனை பேரையும் தூக்கி தம் பாக்கெட்டுக்குள் போட்டு
நான்தான் டாப் என்று நச் பாடல்கள் கொடுத்த எம்.எஸ்.வி.
'அங்கம் புதுவிதம்' எழுதி 'அந்தப் பக்கம் வாழ்ந்த ரோமியோ'வை மைக்குள் அடக்கி நம்மை ஓடிவரச் செய்த கண்ணதாசன்
விலா எலும்பை நொறுக்கும் கோபுவின் (அன்றைய கிரேஸி) கோலாகல கோல்மால் வசனங்கள்.(கதையும் அவரே) அப்படி இப்படி திரும்பி விட்டால் நல்ல காமெடி வசனங்களை இழந்து விடுவோம்.
அப்படி இப்படி குழப்பாமல் மக்(கு)களுக்கும் புரியும்படியான சி.வி.ஆரின் கட்டிப் போடும் இயக்கம்.
என்று இந்த வீட்டில் பல 'ஜம்'மென்ற சங்கதிகள் நிறைய உண்டு.
இதிலிருந்து செம ரிலாக்ஸான ஒரு பாடல்.
லஷ்மிக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைத்து ஏமாந்து தன் காதலை கிடார் பாடல் மூலம் ரூமில் கதவடைத்திருக்கும் லஷ்மிக்கு சொல்லத் துடிக்கும் நாகேஷின் மெய்மறந்த காதல் மயக்க நிலை.
அசத்தும் நாகேஷுக்கு ஈடாக, ஏ.எல்.ராகவனுக்கு மாற்றாக அட்டகாச பின்னணி கொடுத்து அசத்தும் சாய்பாபா. (நடிகர் டி.எஸ்.பாலைய்யாவின் மகன்) கண்டசாலா, பாலமுரளிகிருஷ்ணா,பாலா மூன்று குரல்களையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் எப்படி ஒரு குரல் கிடைக்குமோ அப்படி ஒரு காந்தர்வக் குரல். அதிகமாக நமக்குக் கிடைக்காமல் போனது வழக்கம் போல. ஏமாறவே பிறந்தவன்தானே தமிழன். ஏமாற்றப் பட்டவனும் அவன்தானே!
http://img.youtube.com/vi/VybvUzOAnRw/0.jpg
பாடலின் துவக்கமே படுஜோர்.
மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்
என் நிலைதனைக் கெடுத்தவள் மாலதி இந்நாளில்
சலோமி சலோமி சலோமி
ஐ.லவ் யூ
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
(இடையில் கிடாருடன் சேர்ந்த விசில் விளையாட்டு மெல்லிசை மன்னரிடம்)
(கிடாரும் சாய்பாபா தானாமே)
ஜூலையில் பிறந்தது ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம் (வி.கே.ஆர் தொல்லையாம்)
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
(வெளியே இந்த லூஸ் அடிக்கும் லூட்டிகளைத் தாங்க மாட்டாமல் ரூமின் உள்ளே இருக்கும் லஷ்மி, ஜெய் தலையில் அடித்துக் கொள்வார்கள்)
இனி உன்னை யாரும் நெருங் (கிடார்)
உன் நிலைமையைப் பார்த்தவர் உறங் (கிடார்)
(சும்மா கிடார் புகுந்து புறப்படும். நாகேஷோ உயிரைக் கொடுத்து கிடாரைக் கிண்ட( கிடார் தந்திகளை கடுமையாக முடுக்கி திருகி வேறு விட்டு வாசிப்பார் படித்தால் மட்டும் போதுமா 'படிக்காத மேதை' போல.) நம் வயிறு வலியால் கிண்டப்படும்)
ஊர்வசி வந்தாலும் மயங் (கிடார்)
உன்மேல் ஆணை மை கிடார்
மை கிடார்
(சூபரப்பு! கிடாரை வைத்தே கிளுகிளுக்க வைத்த கவிஞனே! உன் வார்த்தை விளையாட்டுக்கு அளவேது!)
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
என்னமாய் ஒரு ஜாலி பாடல்! ரிலாக்ஸுக்கு பொருத்தம்தானே! என்ஜாய்.
https://www.youtube.com/watch?v=otMjPibfioI
ஸ்ரீதேவி னு ஒரு படம் சார்
சரிதா நடித்து வெளி வந்த படம் ஜோடி விஜய்பபுவா அல்லது ராஜகுமாரா (லதாவின் தம்பி ) நினவு இல்லை
ஷ்யாம் இசை
சிலோன் ரேடியோ ஹிட் இந்த பாடல்
பாலா சுசீலாவின் குரல்களில்
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
பாலா : மை வச்ச கண்ணம்மா
வெட்கத்தைத் தள்ளம்மா
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
பாலா :மார்கழிக் குளிரம்மா
மணி மஞ்சம் போடம்மா
வயசோ இருபது இளசா இருக்குது
மனசோ மயங்குது
துடியா துடிக்குது
சுசீலா : வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
மஞ்சை குளிச்சு அள்ளி முடிச்சு
உன்னை நினைச்சே நானும் இருந்தேன்
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
பாலா : என்னம்மா சின்னப் பொண்ணு
நாணமென்ன நீயூம் சொல்லு
தேனே உன்னை பூவா அள்ளிக் கவிதை சொல்லவா
என்னம்மா சின்னப் பொண்ணு
நாணமென்ன நீயும் சொல்லு
தேனே உன்னை பூவா அள்ளிக் கவிதை சொல்லவா
தென்ன மரத் தோப்போரம் கன்னி இள மானே வா
தென்ன மரத் தோப்போரம் கன்னி இள மானே வா
நெஞ்சக அணையில் அள்ளி வச்சி தாலாட்டவா
வண்ணப் பூவே கன்னித் தேனே
நெஞ்சைத் தானே அள்ளித் தாயேன்
சுசீலா : வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வைக்க உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
சுசீலா : நீராடும் நேரத்திலே நீ வந்து பார்க்கையிலே
மச்சான் உன்னைக் கண்ணில் கண்டு தயங்கி நின்னேனே
நீராடும் நேரத்திலே நீ வந்து பார்க்கையிலே
மச்சான் உன்னைக் கண்ணில் கண்டு தயங்கி நின்னேனே
தாலி கட்டும் முன்னாலே தாண்டி வரலாமோ நான்
தாலி கட்டும் முன்னாலே தாண்டி வரலாமோ நான்
நாளும் வச்சு மேளம் கொட்டி நாமும் சேர்வோம்
மஞ்சை குளிச்சு அள்ளி முடிச்சு
உன்னை நினைச்சே நானும் இருந்தேன்
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
மஞ்ச்சைக் குளிச்சு அள்ளி முடிச்சு
உன்னை நினைச்சே நானும் இருந்தேன்
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வைக்க உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
பாலா : மை வச்ச கண்ணம்மா
வெட்கத்தைத் தள்ளம்மா
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
மார்கழிக் குளிரம்மா
மணி மஞ்சம் போடம்மா
வயசோ இருபது இளசா இருக்குது
மனசோ மயங்குது
துடியா துடிக்குது
இந்த பாட்டுடோட விடியோ லிங்க் எதுவும் கிடைக்கலை
ஆனால் நல்ல பாட்டு சார்
அதுவும் சுசீலா திருப்பி திருப்பி 'வாசமுள்ள சந்தனமே ' சொல்லும் போது ஒரு சுகம் இருக்கும்
http://www.mediafire.com/?06rxc8m3fasxki2
வாசு சார்
மன்னிக்கவும் . உங்கள் போஸ்டை கவனிக்காமல் ஸ்ரீதேவி பாடல் போஸ்ட் செய்து விட்டேன்
உங்கள் அருமையான வீட்டுக்கு வீடு பாடல் மனம் கவர்ந்த பாடல்
ஜலகண்டேஸ்வர vkr
ஜமதக்னி நாகேஷ்
ம்ம்ம் மாட்டிகிட்டான்
இதே கதையை கோல்மால் செய்து விஸ்வநாதன் ராமமூர்த்தி னு ஒரு படம் ராம்கி ரோஜா விவேக் விந்திய கோவை சரளா வெண்ணிறாடை ராமமூர்த்தி combination ராமநாராயணன் படம்
நாகேஷ் ரோல் அப்படியே கோவை சரளா
அந்த ரூம் மாத்தறது ஒரிஜினல் கலக்கல்
ஜெய் லக்ஷ்மி முத்துராமன் வெண்ணிற ஆடை நால்வரும் இணைந்து கலக்கும் காட்சி
நாகேஷ் இசை புயல் பாட்டு பாகவதர் பட்டு
ஒரு ஹிந்தி பாடல் சொல்லி கொடுப்பார்
"க்யா கரோ சஜனி"
வீட்டுக்கு வீடு
ராம்குமார் films தானே சார்
கலாட்ட கல்யாணம்,வீட்டுக்கு வீடு,சுமதி என் சுந்தரி ,திக்கு தெரியதா காட்டில்
எல்லாமே காமெடி கலாட்ட
இந்த வரிசையில் வேறு ஏதாவது உண்டா சார்
கிருஷ்ணா சார்!
நெஞ்சை அப்படியே அள்ளிட்டீங்க வாசமுள்ள சந்தானம் தடவி.
கண்ணியப் பாடகியின் கண்ணியப் பாடலை அதுவும் மிக அபூர்வ பாடலைத் தந்ததற்கு நன்றி.
பாடல் வரிகள் முழுதும் சிரமப்பட்டு டைப் செய்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
வீ.வீ ,பாபு மூவிஸ் .பின்னாடி கமலை வைத்து சி.வீ.ஆர் இயக்கத்தில் மாலை சூடவா எடுத்தார்களே?(யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா. கன்னட மஞ்சுளா)
பிடிச்சாரு பாரு கோபால் சார்
வாணி குரலில் ஒரு பாட்டு ஒன்னு உண்டு சார்
"பட்டு பூச்சிகள் வட்டம் அடித்தால் கட்டி அணைக்கும் பூச்செண்டு "
நம்ம nt இன் தாய் கூட பாபு மொவீஸ் தான நினைவு
இன்றைய பொழுது பல பாடல்களுடன் களை கட்டியுள்ளது .இது வரை கேட்காத புதிய பாடல்கள்
பற்றிய பதிவுகள் அருமை . ம.ம.ம.கானங்கள் 5 நட்சத்திரம் கிடைத்துள்ளது அறிந்து மிக்க
மகிழ்ச்சி . இத்திரியில் பதிவிடும் எல்லோருக்கும் பெருமையே.
இவையெல்லாவற்றுக்கும் மூலம், புதுமை இயக்குனரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'.
இது இன்னொரு அநியாய ரிப்போர்ட். பணத்தையும் நடிப்பையும் கொட்டிய சௌகாரை குறிப்பிடவில்லை. அருமையாக இயக்கிய கே.பி.யை குறிப்பிடவில்லை. படத்தின் வெற்றியில் இரண்டு சதவீதம் மட்டுமே காரணமான ரவிக்கு மகுடம். பிடித்தவர் என்பதற்காக இப்படிப்பட்ட ஸ்டேட்மென்ட் எல்லாம் ஓவர். ரவிச்சந்திரன் எனக்கும் பிடித்தவர்தான். இருந்தாலும் இப்படியா கண்மூடித்தனமாக....?
இது ஆச்சரியமில்லை. உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று சொன்னால்தான் அதிர்ச்சியடைய வேண்டும்.
இந்த சபதம் நிச்சயம் உடைந்து சிதறும். ""அங்கே"" எப்படியும் உங்களை திட்டவைத்து விடுவார்கள்.
பாலசந்தர் ஈயடிச்சான் காபி இந்த படம். ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை.சௌகார் ,மூலத்தின் 30% கூட தொடவில்லை.பணம் போட்டதினால்தான்,ரவி அருகே அம்மாவாக நிற்க கூட தகுதியில்லாத இவர் ,அவருடன் டூயட் பாடினார்.அந்த பெருமை ஒன்று போதாதா இவருக்கு?
விஜயம்பிகா பிளம்ஸ்
அன்னபூரணி 1978
கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்
முத்துராமன் கே ஆர் விஜயா ஸ்ரீகாந்த் சோ நடித்து வெளி வந்த
கருப்பு வெள்ளை
குமார் இசை னு நினவு
இந்த படத்தில் ஸ்ரீகாந்த் ஹேர் ஸ்டைல் கொஞ்சம் different நிறைய முடி வைத்து கொண்டு நாட் ஹிப்பி ஸ்டைல் பட் some திங் different
ஒரு சீன் சோ ஸ்ரீகாந்த் கிட்ட ரகசியம் சொல்ல காதை தேடுவார் .அப்பறும் தலை முடியை விலக்கி காதை தேடி கண்டு பிடுச்சுட்டு "அப்பாடி கண்டு பிடுசுட்டேன் " என்று சொல்லி விட்டு சொல்ல வந்த ரகசியத்தை மறந்து விடுவார்
நல்ல பாடல்கள் உண்டு
ஜேசுதாஸ் குரலில் கொஞ்சம் மலையாள ஸ்லாங்ல பாடுவார்
"உன்னை பார்க்க வேண்டும் பழக வேண்டும் எத்தனையோ ஆசை உண்டு மனசிலே அது என்ன வென்று எடுத்து சொல்ல தெரியலே
I don 't know I லவ் யு '
சுசீலா குரலில்
"ஐயிரண்டு திங்களிலே கை இரண்டில் வந்தவனே "
சுசீலா ஜேசுதாஸ் குரல்களில்
"கண்ணனுக்கு கோபமென்ன கண்ணில் ஓர் தாபமென்ன "
இதோ போக சோவோட ஒரு கதாகாலட்சேபம் ரொம்ப பேச பட்டது
படம் உட்கார முடியாது
http://tamilsongs-mp3.blogspot.in/20...song-list.html
சிரித்தாள் அந்த சிரிப்பில் ஒரு மோகம். என்று ஒரு பாடல்-ராமானுஜம் போட்டது.
உன்னை பார்க்க வேண்டும்- peppy nice song
அம்மா 1982
ராஜசேகர் இயக்கம்
சங்கர் கணேஷ் இசை
பிரதாப் சரிதா இணை
வைரமுத்துவின் வைர வரிகளில்
பாலா ஜானகி குரல்களில்
மழை காலத்து இரவு வேளையில் இளமையின் இளமயில்கள்
இளமை பசியினை வெளிபடுத்தும் தாபம்
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது
ஒரு சோதனை
பா ப பா ப்ப ப்ப ……………………..
மார்கழி மாதத்து வேதனை
நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது
ஒரு சோதனை
பா ப பா ப்ப ப்ப……………………..
மார்கழி மாதத்து வேதனை
மடி மீது சாயும் இன்னேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இன்னேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
லாலாலாலா (அஹ அஹ அஹ …) ………………
http://www.youtube.com/watch?v=nYWcpYtCJlQ
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலாக 'நிலவே நீ சாட்சி'யிலிருந்து ஒரு அதி அற்புதமான பாடல். அதை பேலன்ஸ் செய்ய (யாருக்காக) புகுந்த வீட்டிலிருந்து ரவியின் பாடல் ஒன்று. கூடவே ஒரு இணைப்பாக 72-ன் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றான 'செந்தாமரையே செந்தேனிதழே' பாடல். அத்துடன் நிற்காமல் ஜஸ்ட் ரிலாக்ஸ் பாடலாக 'அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ'
அப்பப்பா ஒரே கலக்கல் விருந்துதான் போங்க. அயராத உழைப்பு.
எங்கள் ஏரியாவிலிருந்த ஓட்டலில் ஜுக்-பாக்ஸில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் 'செந்தாமரையே'. அதிகம் வசூலித்துக்கொடுத்த பாடல். (ஒருமுறை கேட்பதற்கு 25 பைசா). 'முத்தாரமே' மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த ஏ.எம்.ராஜா இன்னொரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்தோம். அதற்கேற்றாற்போல 'சின்ன கண்ணனே', 'ராசி நல்ல ராசி' என்று நல்ல பாடல்கள் கிடைத்தன. இருந்தாலும் எஸ்.பி.பி., ஜேசுதாஸ் மத்தியில் மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை.
நிலவே நீ சாட்சி படப்பாடலில் பாடகரைக் கண்டுபிடிக்க முடியாமல் நானும் ஏமாந்திருக்கிறேன். (அப்போது எம்.எஸ்.வி பாடுவது அபூர்வம் வேறு)
ரிலாக்ஸ் பாடல் நிஜமாகவே நல்ல ரிலாக்ஸ் தந்தது. சாய்பாபா இசையமைப்பாளர்களோடு ஒத்துப்போகாததும் அவர் நிற்க முடியாததற்கு ஒரு காரணம். அக்கார்டியன் பிளேயர் ராஜாமணியுடன் ஓயாத சச்சரவு. சங்கர் கணேஷுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு நல்ல பாடல் கோவை சௌந்தர்ராஜனுக்கு போனது. சண்டைக்காரர் என்று பெயரெடுத்து ஒதுக்கப்பட்டார்.
டியர் கிருஷ்ணாஜி,
ஒரு பாடலின் வரிகள் அனைத்தையும் பதிவிடும் உங்கள் திறமை அபாரம். ரொம்ப பொறுமை வேண்டும். அதுவும் ஹம்மிங் எல்லாம் சேர்த்து.
அட்டகாசம்..., கலக்குங்கள்....
உயர்ந்தவர்கள் 1977 பொங்கல் ரிலீஸ்
நெல்லை நியூ ராயல்
TN பாலுவின் இயக்கம்
ஷங்கர் கணேஷ் இசை
கமல் சுஜாதா தேங்காய் ஸ்ரீகாந்த் நடித்து வெளிவந்த கருப்பு வெள்ளை
சஞ்சீவ் குமார் ஜெயபாதுரி நடித்து ஹிந்தியில் வெளிவந்த கோஷிஷ் திரை படத்தின் தமிழ் ஆக்கம் .யதார்த்தமான நடிப்பு,குல்சாரின் கதை
இரண்டும் இருந்தும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை தழுவிய படம்
கமல் சுஜாதா இருவருமே காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள் .அவர்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை ஸ்ரீகாந்த் செய்யும் தவறால் விபத்தில் இறக்க நேருடுகிறது.
அவர்களுக்கு பிறக்கும் இரண்டாவது குழந்தை (இந்த குழந்தையின்
பாதுகாவலர் கண் தெரியாத தேங்காய்) எந்த குறையும் இல்லாமல் பிறந்து நன்றாக படித்து இறுதியில் தன பெற்றோரின் முதலாளியின் காது கேளாத வாய் பேசாத பெண்ணை திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கபடுகிறான். முடிவு என்ன
கௌரவ வேடத்தில் சஞ்சீவ்குமார்,ஜெய்ஷங்கர்,பிரேம் நசிர்,மனோரமா
ஜேசுதாஸ் வாணி குரல்களில் மிக அருமையான பாடல்
flute வீணை தபேலா மூன்றும் இணைந்து பாடல் வரிகளோடு
அணைத்து வெளிப்படும்
"இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்துஒரு பொம்மையை செய்தன தான் விளையாட அதன் வாய் மொழி முல்லை எனில் தாய மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
தென்றல் காற்றும் ஊமைக்காற்று
தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு
அவன் தானே நம்மை செய்தான் துன்பங்கள் ஏனடா
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
உள்ளத்தில் நல்லோர்தானே உயர்ந்தவர் இல்லையா
என் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
கந்தன் அன்று மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதை சொன்னான்
மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
http://www.youtube.com/watch?v=jVorjjMaLPA
நன்றி கார்த்திக் சார்
சாயபாபா பற்றி நீங்கள் சொன்னது ஒரு நல்ல தகவல்
நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜா இசையில்
1987 காலகட்டத்தில் வேலைக்காரன் படத்தில் "தோட்டத்திலே பாத்தி கட்டி " பாடலின் ஆரம்பம் இவரின் மீள் ஆரம்பம் என பேசப்பட்டது .
ஆனால் அதற்கு பிறகும் இவர் பாடல்கள் எதுவும் பெரிதாக வரவில்லை
Rajesh,
I thank you for your views on T.K.R.I request you to remove the post no 1396 in page 140 as it contains the quote of Ramesh which was removed by him .Thanks.
டியர் கிருஷ்ணாஜி,
'உயர்ந்தவர்கள்' படத்தைப்பற்றி பதிவிட்டு என் எண்ணங்களை கடந்த காலத்தை நோக்கி திருப்பி விட்டீர்கள்.
உயர்ந்தவர்கள் நான் நடித்த படம்..... அதிர்ச்சி வேண்டாம்.
அந்தப்படத்தில் கமலின் குழந்தை ஒரு கடையின் முன்னாள் காணாமல் போகும் அல்லவா?. அந்தக்காட்சி சென்னை எட்வர்ட் எலியட்ஸ் ரோட்டிலுள்ள 'டாய் செண்டர்' என்ற கடையில் படமாக்கப்பட்டது. கடையின் வாசலில் தள்ளுவண்டியில் உட்கார வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் காணோம் என்று அந்தப்பெண் கடையின் உள்ளே வந்து கடையின் உரிமையாளர் அபுல்கலாம் என்பவரிடம் விசாரிக்கும்போது, கடையிலிருந்து ஒரு பையன் (கொஞ்சம் இளைஞன் என்றும் சொல்லலாம்) கடையில் பொம்மை வாங்கிக்கொண்டு வெளியே செல்வதுபோல ஒரு காட்சி வரும். அந்த இளைஞன் பக்கத்தில் நிற்கும் இன்னொரு பையன் நான்தான்.
கடையில் நின்றுகொண்டிருக்கும்போது யதார்த்தமாக வந்து படமெடுத்தார்கள் (உரிமையாளரிடம் முன்கூட்டியே சொல்லியிருப்பார்கள் போலும்). இயக்குனர் டி.என்.பாலு வரவில்லை. சிறிய காட்சியென்பதால் அவரது உதவியாளர்தான் வந்து எடுத்தார். இனி அந்த படம் பார்க்க வாய்ப்புக்கிடைத்தால் அந்தக்காட்சியில் உற்றுப்பாருங்கள். அதில் நான் ஒரு செகண்ட் ஹீரோ. அதாவது ஒரே ஒரு செகண்ட் மட்டுமே வருவேன்.
வாசு சார்
சூப்பர்... 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற திரியின் நாயகருக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மற்றும் பங்கு கொண்டு இச்சிறப்பிற்கு வழிவகுத்த ஒவ்வொரு நண்பருக்கும் பாராட்டுக்கள்.
தொடருங்கள்
கார்த்திக் சார்
உயர்ந்தவர்கள் படம் காணக் கிடைக்கும் போது கண்டிப்பாக உங்கள் நினைவோடு தான் பார்ப்பேன். சும்மாவா செகண்ட் ஹீரோவாச்சே...
வாசு சார்
எந்தப் பதிவைப் பாராட்டுவதெனத் தெரியவில்லை... நிலவே நீ சாட்சி... அந்தக் காலத்தில் அந்த லிஃப்ட் ஒலி பரபரப்பாக பேசப்பட்டது. வானொலியில் முதன் முறை ஒலிபரப்ப முயன்ற போது இந்த ஒலியைக் கேட்டு விட்டு ரிகார்டு சரியில்லை எனத் திருப்பி அனுப்பியதாக சில நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களையே ஏமாற்றிய அந்த சிறப்பொலி இன்றைக்கும் நம்முள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்போது சொல்லும் ஹஸ்கி வாய்ஸையெல்லாம் அப்போதே அவர் பாடிக் காண்பித்து விட்டார்.
புகுந்த வீடு பாடலைப் பற்றி ஒரு அந்தக் காலத்தில் காற்று வாக்கில் பரவிய தகவல் ஒன்று உண்டு. அது வேறொருவருக்காக வேறொரு படத்திற்காகப் பதியப் பட்டதாகவும் என்ன காரணத்தாலோ அந்தப் படத்திற்குப் பயன்படுத்தப் படாமல் இந்தப் படத்தில் பயன்படுத்தப் பட்டதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
தங்க நிலவே நீயில்லாமல்....
இசை என்பது சுத்தமான முழுமை மட்டும் அல்ல ,சிறிதே பிசிறும் கலக்க வேண்டிய, செம்பு கலந்த தங்கமாகவும் வேண்டும் என்று
எனக்கு உணர்த்தியவர் என் சிறு வயது வகுப்பாசிரியர் ஆர்.பீ மாஸ்டர்.(என்னை விட சிவாஜி பக்தர்)டி.எம்.எஸ் பாடும் போது கவனிச்சிருக்கியா ,கொஞ்சம் பிசிரடிக்கும்.அதுவே பாட்டை தூக்கும். என்பார்.(பின்னால் இதே கருத்து வாமனன் புத்தகத்திலும் வந்தது). நான் சிறு வயதில் டி.எம்.எஸ்.ரசிகனாக எல்லா மேடையிலும் அவர் பாணியில் ,அதே குரலில் பாடுவேன்.(இன்றும்)ஆனால் பாடும் போது அவர் போலவே கன்னியை கல்னி என்றும் ,கன்னலை கல்னல் என்றுமே பாடுவேன்.மற்றோர் சுட்டி காட்டிய போது ,என் சார்பில் நின்றவர் ஆர்.பீ. அவர் கருத்து எனக்கு போக போக இன்னும் புரிந்தது.
ஜனனி ஜனனி பாட்டில் இளைய ராஜாவிற்கு சுருதியே நிற்காது. அதே மெட்டில் அம்மா என்றழைக்காத பாடலை அவ்வளவு சுத்தமாக ஜேசுதாஸ்.ஆனால் எனக்கென்னவோ ஜனனி ஜனனியின் திருப்தி அம்மாவில் கிடைக்கவில்லை.
என்னுடைய கனவு நாயகி நடித்தாலே குதூகலம்.பாட வேறு பாடினால்?(பழம் நழுவி பாலில்)எஸ்.எம்.எஸ் இசையில் சிநேகிதி படத்தில்.ஏற்கெனெவே தினத்தந்தி வெள்ளி திரையில் படித்ததனால் ,ரேடியோ கேட்கும் போது வியக்கவில்லை.என் பெற்றோர் இவளெல்லாம் ஏன் பாடணும் .ஒத்தையும் ரெட்டை குரலுமாய் அபஸ்வரம் என்றதை,நான் மிக மிக ரசித்தேன்.சிறிதே hoarse ஆனாலும் ஓபன் வாய்ஸ் இல் மிக மிக innocense தெரியும்.முடியுமா என்று இழுக்கும் போது ,முடியுமடி செல்லம் என கட்டி கொள்ள தோன்றும்.
ஒரு imperfection என்னை இந்தளவு ஆட்கொள்ள முடியுமா?எத்தனை முறை கேட்டு ரசித்திருப்பேன்?
பாட்டின் ஆரம்பத்திலேயே பாரதியின் பின்னழகை காட்டுவதால்,இந்த படத்தை 1971 வாக்கில் கீத்து கொட்டகை ஒன்றில் repeat audience ஆக பார்த்தேன்.முதலில் மெல்லிய டிசைன் போட்ட ஷிபான் புடவை ,கொண்டை போல நிமிர்ந்து ஒற்றை கூந்தலாகும் ஹேர் ஸ்டைல்.இரண்டாவது சரணத்தில் பூப்போட்ட புடவை ,கொண்டை .மூன்றாவது முடிவில்,கருப்பு பூ போட்ட புடவை,முக்கால் கை ஜாக்கெட்.முதல் ஹேர் ஸ்டைல்.அப்படியே 8 எண்ணை எழுதினார் போல உடல்.
கூட இருக்கும் ஆள்தான் கொஞ்சம் ஒரு மாதிரி.பொருந்தா கிராப்.கையை உபயோகமே படுத்த தெரியாமல் ஒரு வினோத ஸ்டைல்.ரவியை கற்பனை செய்து ரசிக்க வேண்டியதுதான்.(எங்கே எங்கே என் மனது)
டி.எம்.எஸ் ,பாரதிக்கு இணைவாக adjust செய்து சமாளிப்பார்.பாரதியை கண்டு கேட்டு மகிழுங்கள்.அவர் என் கனவில் (reserved)வர போவதால்,உங்கள் கனவை தவிர்க்கவும்.
https://www.youtube.com/watch?v=mvbHE-yuhR0
வீட்டுக்கு வீடு, முத்துராமன் நாகேஷ் நடித்த திக்குத் தெரியாத வீட்டில் என்ற மேடை நாடகத்தின் திரைப்படமாக்கம்.
Krishnnaji,
I will do the computer Graphic of that face and publish the Photograph of todays Karthik.(38 varuda koottal)